கடையநல்லூர் விவாதம்

கடையநல்லூரில் நிகழ்ந்தவை குறித்து விவாதிக்க கடையநல்லூரோடு தொடர்பில்லாத ஒருவர் முன்வந்திருக்கிறார்.  இவருடன் ஏற்கனவே விவாதித்த அனுபவம் உண்டு. இனி இவருடன் விவாதிப்பதில் பலனில்லை என எண்ணும் அளவுக்கு தலைப்பிற்கு அப்பாற்பட்டதை பேசுவது, என்ன கேட்கப்பட்டதோ அதைவிடுத்து வேறொன்றை பதிலாக கூறுவது, பிடிவாதமாக பதில் கூற மறுப்பது என நேர்மையற்ற முறையில் விவாதத்தை பிடிவாதமாக மாற்றுபவர். அவருடன் நடத்திய முந்திய  விவாதத்தை இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளலாம். இவர் வேறு யாருமல்ல, பாலியல் பிரச்சனைக்கு எதுசரியான தீர்வைக் கொண்டிருக்கிறது? எனும் தலைப்பில் என்னுடன் விவாதித்த இப்ராஹிம் என்பவர் தான். இவருடன் விவாதிப்பது பயனற்றது எனும் என் முடிவில் மாற்றம் ஒன்றுமில்லை. ஆனால், கடையநல்லூர் விவகாரம் குறித்து யார் முன்வந்தாலும் அவர்களுடன் மறுக்காமல் விவாதிப்பது என்றும் நான் முடிவு செய்திருந்தேன். அந்த வகையில் இப்ராஹிமுடன் விவாதிக்க ஆயத்தமாகிறேன்.

 

ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் வாயிலாக எந்த வடிவில் விவாதிப்பது என்பதை தீர்மானித்துக் கொள்வது சிறந்தது. கேள்வி பதில் கேள்வி என்ற வடிவமே சரியானது எனக் கருதுகிறேன். அதாவது ஒரு கேள்வியில் தொடங்கி எதிராளி அதற்கான பதிலைக் கூறி அவர் தரப்பிலிருந்து ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு கேள்வி மட்டுமே கேட்க வேண்டும், ஒன்றுக்கான பதிலை மட்டுமே கூற வேண்டும். கேள்வி அளித்த பதிலின் எதிர்முனையாகவோ, விரிவாகவோ, புதிதாகவோ இருக்கலாம்.

 

மீண்டும் கூறிக் கொள்கிறேன், கேள்விக்கு, கேள்வியின் நோக்கத்திற்கு அளிக்கப்படும் பதில் உட்பட்டிருக்க வேண்டும். திசை திருப்பல் கூடாது. தலைப்புக்கு வெளியிலிருந்து எதையும் பேசக் கூடாது.

 

வழக்கம் போல விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எதிர்தரப்பிலிருந்து எதிர்பார்க்கிறேன். அதிகபட்சம் நான்கு நாட்களுக்குள் பதிலை பதிந்துவிடுவேன். தவிர்க்க முடியாத அலுவலிருப்பின் அதை முறைப்படி நான்கு நாட்களுக்குள் தெரிவித்து விடுவேன்.

 

தலைப்பு: கடையநல்லூர் கம்யூனிஸ்டுகள் மொள்ளமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாத்தார்கள் மொள்ளமாரித்தனம் செய்தார்களா?

58 பதில்கள் to “கடையநல்லூர் விவாதம்”

  1. nallurmuzhakkam மார்ச் 29, 2012 இல் 6:13 முப #

    இப்ராஹிம்,

    விவாதத்தை நீங்கள் தொடங்குகிறீர்களா? நான் தொடங்க வேண்டுமா? நான் தொடங்க வேண்டும் என்றால் தெரிவிக்கவும்.

    • S.Ibrahim ஏப்ரல் 2, 2012 இல் 4:54 முப #

      செங்கொடியுடன் கடையநல்லூர் மக்கள் யாரும் விவாதிக்க முன் வராததற்கு காரணம் இவருடன் விவாதித்து எவ்வித பலனுமில்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்,ஏனெனில் விவாதத்தில் எதிர் கேள்விகள் கூர்மையாகும் பொழுது இவர் தட்டையாக இருக்கிறது என்பார்.பதில் சொல்ல இயலாத நிலையில் தலைப்புக்கு அப்பாற்பட்ட கேள்வி என்பார்.
      இவர் தலைப்புக்கு வெளியே என்று எதை கூறுகிறார் என்பது புரியவில்லை.கம்யுனிஸ்ட்கள் என்று வரும் பொழுது அதன் கொள்கைகளும் அதன் தலைவர்களும் பற்றிய விமர்சனங்கள் இருக்கவே செய்யும்.
      கடையநல்லூர் சம்பவம் பற்றி செங்கொடி மற்றும் அவரது ஆதரவு இணையதளங்களிலிருந்து அறிந்தவற்றைக் கொண்டே இங்கே விவாதிக்க உள்ளேன் .மற்றபடி குறிப்பிட்ட ஜமாத்தினருக்கும் எனக்கும் எவ்வித நேரடி தொடர்பும் கிடையாது ,
      நான்கு நாட்களுக்குள் பதில் தருகிறேன் .விவாதத்தை நீங்களே தொடங்குங்கள் .

  2. nallurmuzhakkam ஏப்ரல் 2, 2012 இல் 1:49 பிப #

    இப்ராஹிம்

    தட்டையான சிந்தனை என்று எதற்கும் நான் பதிலளிக்காமல் இருந்ததில்லை. ஆனால் நீங்களோ…….

    உங்கள் தலைப்புக்கும் என்னுடைய தலைப்புக்கும் உள்ள வித்தியாசமே உங்கள் நோக்கத்தை போட்டுடைக்கும். கடையநல்லூர் மட்டும் என்றால் கடையநல்லூர் மட்டும். பொதுவாக என்றால் பொதுவாக. முடிவு செய்து கூறுங்கள். இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கி விடுகிறேன்.

    • S.Ibrahim ஏப்ரல் 4, 2012 இல் 6:24 முப #

      செங்கொடி என்னுடைய கருத்துக்களை நீக்கியது சரியா?என்னுடைய கருத்தை நீக்கியது உங்களது மொள்ளமாறித்தனமா இல்லையா?

      • nallurmuzhakkam ஏப்ரல் 4, 2012 இல் 3:59 பிப #

        உங்களின் எந்தக் கருத்து நீக்கப்பட்டது? விவாதம் தொடங்கியபின் அவதூறுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  3. S.Ibrahim ஏப்ரல் 3, 2012 இல் 5:26 முப #

    /நீங்களோ ? ////நான் என்ன கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை?ஆனால் நீங்கள் பதில் சொல்லாத கேள்விகள் பல உண்டென்றாலும் ஒன்று சொல்லுகிறேன்.நாங்கள் எங்கள் குடும்பங்களில் செய்யும் எந்த ஆணாதிக்கம் உங்கள் குடும்பங்களில் இல்லை?உங்களிடம் உள்ள எந்த சமம் எங்களிடம் இல்லை?இந்த கேள்விக்கு தாங்கள் எப்போது பதில் சொன்னீர்கள்?

    அப்படியெனில் ,செங்கொடியின் சகாக்கள் மற்றும் செங்கொடி செய்தது மொள்ளமாரித்தனமா?கடையநல்லூர் ஜமாஅத் செய்தது மொள்ளமாரித்தனமா?என்பதை தலைப்பாக வைத்துக் கொள்வோம்

  4. S.Ibrahim ஏப்ரல் 3, 2012 இல் 5:57 முப #

    உங்கள் வாதத்தை துவங்கலாம்,

  5. nallurmuzhakkam ஏப்ரல் 4, 2012 இல் 3:54 பிப #

    இந்த விவாதத்தை சீரிய முறையில் நடத்திச் செல்ல வேண்டிய முனைப்பில் இருப்பதால் சிலவற்றை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.

    1) பழையவை குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பதை நிறுத்தியாக வேண்டும். நீங்கள் கூறியுள்ளவைகளுக்கு இப்போது நான் விளக்கமளிக்கிறேன், அதன் பிறகு நான் அது குறித்து எதையும் பேச மாட்டேன். அதேபோல் நீங்களும் வேண்டுமானால் ஒரு முறை விளக்கமளித்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு அதை தொடரக் கூடாது.

    2) விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என உறுதி கூறி நீங்களும் உறுதி கூற வேண்டும் என கேட்டிருந்தேன், அதை உறுதிப்படுத்துங்கள்.

    3) நீங்கள் எதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதே விதத்திலே நானும் எடுத்துக் கொள்வேன். செங்கொடி எனும் தனி மனிதனை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் எதிர்முனையில் நானும் தனி மனிதர்களைத்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்; ஊர் என்றால் ஊர்; பொதுவாக என்றால் பொதுவாக. அதாவது, கடையநல்லூர் பிரச்சனை குறித்த இந்த விவாதத்தில் தனி மனிதர்களை எடுத்துக் கொண்டால் இருமுனைகளிலும் தனி மனிதர்கள், ஊர் நடவடிக்கை என்றால் இருமருங்கிலும் ஊர் நடவடிக்கை, உலகளாவிய முறையில் என்றால் இரண்டு பக்கமும் உலகளாவிய முறையில். எதற்கும் நான் தயார், ஆனால் அது தொடங்குமுன்பே உறுதிப்படுத்தப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தடம் மாறக் கூடாது.

    4) தளங்களில் எழுதப்பட்டதை கொண்டு விவாதிப்பீர்களோ, ஊரில் யாரிடமேனும் தொடர்பு வைத்துக் கொண்டு விவாதிப்பீர்களோ அது உங்களைச் சார்ந்தது. ஆனால் எந்த விதத்திலும் ஊருக்கு தொடர்பில்லாதவன் என்று கூறி நீங்கள் விலக்கம் எதுவும் பெற முயலக் கூடாது. ஏனென்றால் உங்கள் தரப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் கடமை உங்களுக்கே உண்டு.

    இனி என்னுடைய விளக்கம்: உங்களுடைய வாதம் புரிதலற்று தட்டையாக இருப்பதாக நான் கருதினால் அப்படியே நான் கூற முடியும், அப்படித்தான் அந்த விவாதத்தில் கூறப்பட்டது. ஆனால் தட்டையான விளக்கம் என்று கூறி பதிலில்லாமல் நிறுத்தப்பட்டு விடவில்லை, தகுந்த பதிலையும் முன் வைத்திருக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விக்கு, கேள்வியின் நோக்கத்திற்கு சரியாக பதிலளிப்பதே என்னுடைய வழக்கம். அதேநேரம் விவாதத்தலைப்புக்கு வெளியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதும் என் வழக்கமே. அந்த வகையில் உங்களின் ஆணாதிக்கம் குறித்த கேள்விக்கும் தகுந்த பதிலளித்திருக்கிறேன். அதையே கிண்டலாக நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டும் இருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ பதில் கூறவில்லை என்கிறீர்கள். பதில் கூறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அந்த விவாதத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்களால் பதிலளிக்கப்படாத கேள்விகள் குறித்து பக்கம் பக்கமாக எழுத முடியும் என்றாலும் வகை மாதிரிக்கு சில.

    சௌதியில் அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சட்டங்களே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது என்றபோதிலும் கூட பாலியல் குற்றங்களை நீக்கிவிட முடியவில்லை ஏனென்றால் சட்டங்கள் ஒரு எல்லைக்கு அப்பால்செயல்பட முடியாது. சட்டங்கள் தற்காலிக தீர்வைத்தான் தரும். இஸ்லாம் தீர்வாக சட்டங்களை மட்டுமே முன்வைக்கிறது. ஆகவே அதால் தற்காலிகமாக தீர்வு கூறுமேயன்றி நிரந்தரமாக நீக்க இஸ்லாம் உதவாது எனும் கேள்விக்கு சுற்றி வளைத்தீர்களே தவிர பதில் கூறவில்லை.

    பலம்மிக்கவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது இயல்பு என்றால் பலத்தைக் காட்டி கொள்ளையடிப்பதை இயல்பானது என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை என்று கேட்கப்பட்டதற்கு சுற்றி வளைத்தீர்களா? பதில் கூறினீர்களா?

    துல்கர்னைன் விவகாரத்தில் பீஜே கூறியது தவறு என்று நிரூபித்ததும் அதற்கு பதில் என்ற பெயரில் நீங்கள் எழுதியவைகள் எந்த விதத்திலாவது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக அமைந்ததா?

    அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பதே அவை உண்மை என்பதற்கான சான்று என்று கூறிய நீங்கள் குரானுக்கு மாற்றமான கருத்தை கொண்டிருந்தால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் தவறாதே என்றீர்கள். ஒரு தவறான ஹதீஸுக்கு அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்க முடியும் என்றால், அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பது எப்படி சரியான ஹதீஸ் என்பதற்கு ஆதாரமாக முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நீங்கள் எழுதியிருந்ததை நீங்களே படித்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.

    இனி விவாதத்தில் என்னுடைய முதல் வாதம்: கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன். எப்படியென்றால் செய்யாத ஒரு தவறுக்கு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை எதுவும் செய்யாமல் குற்றத்தை நிரூபிக்காமல் அல்லது விளக்கமளிக்க அனுமதிக்காமல் ஒருதலைப் பட்சமாக போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கியது, தாக்கியது காட்டுமிரண்டித்தனமான நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். இதை எந்த விதத்தில் நீங்கள் சரி காண்கிறீர்கள்?

    • S.Ibrahim ஏப்ரல் 7, 2012 இல் 5:00 முப #

      வழக்கம் போல விதிமுறைகள் என்பது புரியவில்லை .இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஒரு கேள்வியும் பதிலும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.விவாதத்திற்கு காரணமான பதிவர்கள் முதல் செங்கோடிவரை ஒரு தரப்பும் கடையநல்லூர் ஜமாத்து ஒருதரப்பும் என்ற அடிப்படையில் விவாதம் இருக்க வேண்டும்.நீங்கள் இஸ்லாத்தையும் அதன் தூதர் முஹம்மது நபி[ஸல்]அவர்களையும் மற்ற முன்னோடிகளையும் விமர்சித்தால் கம்யுனிசத்தையும் அதன் தலைவர்களையும் விவாதத்திற்குள் கொண்டுவருவேன்.
      பழைய வற்றுக்கு பதில் சொல்ல உங்களுக்கு ஒருமுறை போதும் எனக்கு பலமுறைகள் தேவை .என்ன செய்வது ?என்னுடைய ஒப்புதல் கேட்டல்லவா அந்த ஒருமுறையை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.உங்களுக்கு தேவை ஏற்படுகையில் தலைப்புக்கு பொறுத்த மில்லாத வற்றை எழுதுவீர்கள்.தேவை இல்லைஎன்றால் தாளிப்புக்கு வெளியே உள்ளவற்றுக்கு பதில் சொல்லும் வழக்கம் இல்லை என்பீர்களா?எதை தலைப்பாக எடுத்துக் கொண்டோமோ அந்த தலைப்பை உங்கள் சுய நடத்தையுடன் ஒத்துபார்ப்பது தலைப்புக்கு சம்பந்தம் இல்லை அதனால் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பீர்களா?சரி போகட்டும் நீங்கள் நான் பதில் சொல்லவில்லை என்று இங்கே கூரியுள்ளவற்றுக்கும் நான் அந்த பழைய விவாதத்தில் பதில் சொல்லியுள்ளேன்.பார்த்துக் கொள்ளுங்கள்./////விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என உறுதி கூறி நீங்களும் உறுதி கூற வேண்டும் என கேட்டிருந்தேன், அதை உறுதிப்படுத்துங்கள்./////உறுதிபடுத்துகிறேன்.அதே சமயத்தில் நேர்மை எது என்பதை நீங்கள் தீர்ப்பளிக்க கூடாது.
      இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
      ////எப்படியென்றால் செய்யாத ஒரு தவறுக்கு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை எதுவும் செய்யாமல் குற்றத்தை நிரூபிக்காமல் அல்லது விளக்கமளிக்க அனுமதிக்காமல் ஒருதலைப் பட்சமாக போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கியது, தாக்கியது ///நான் தவறு செய்யவில்லை என்றோ விசாரணை எதுவும் செய்யவில்லை என்றோ விளக்கமளிக்க அனுமதிக்க வில்லை என்றோ ஒருதலை பட்சமாக போலியாக எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கைஎளுத்திட்டதாக துராப்சா யாரிடம் கூறினார்?.நீங்கள் கூறுவதை அப்படியே நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் என்ன ரீதியில் எதிர்பாக்கிறீர்கள்? துராப்சா உண்மையை சொல்லும் நிலையில் இப்போது இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுதான் உண்மை என்று நான் ஏற்றுக்கொள்ள எனக்கு எனக்கு உள்ள வாய்ப்புகளை அறியத்தாருங்கள்..
      அடுத்து எனது கேள்வி.துராப்சா இஸ்லாத்தை மறுப்பவர்.அவ்வாறு எனில் இஸ்லாமிய கொள்கைபடி கோழியை இஸ்லாமியர்கள் பிஸ்மி சொல்லி அறுக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ளாதவர்.இன்னும் சொல்லப்ப்போனால் அதை கேலி செயபவரும் கூட .தனது வியாபரத்திற்காக இரண்டு முஸ்லிம்களை நியமித்து அவர்கள் மூலம் கோழியை இஸ்லாமிய கொள்கைப்படி அறுத்துள்ளார்.உதாரணமாக நான் மளிகைகடை வைத்திருக்கிறேன் என்றால் மக்கள் கணேஷ் கோதுமை மாவு தான் வாங்குவார்கள் என்பதால் கணேசர் படம் போட்ட கோதுமை மாவு பாக்கெட்களை வாங்கி விற்பேன்..அதே சமயத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் நாங்கள் வணங்கும் கணேசரை பூஜை செய்து வியாபாரம் ஆரம்பித்தால்தான் நாங்கள் உங்களிடம் பொருட்கள் வாங்குவோம் என்று சொன்னால் ,நான் அவர்களை ஏமாற்ற இரண்டு இந்துக்களை கடை ஊழியராக நியமித்து அவர்களை வைத்து கணேசரை பூஜை செய்து வியாபாரம் பண்ணினேன் என்றால் என்னை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.அதேப்போல் ஒரு பக்கம் முஸ்லிம் மதத்தை கிண்டல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் முஸ்லிம் முறைப்படி நடந்து கொள்ள ஏற்பாடு செய்து கல்லாவை நிரப்புவது மொள்ளமாறித்தனமா இல்லையா?

  6. nallurmuzhakkam ஏப்ரல் 8, 2012 இல் 4:52 பிப #

    இப்ராஹிம்,

    விதிமுறைகளில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் எந்த இடத்தில் என்ன விதமான குழப்பம் என்பதைக் கூறுங்கள் தெளிவுபடுத்தி விடலாம்.

    இது கடையநல்லூர் நிகழ்வை மையப்படுத்தி நடக்கும் விவாதம். இதில் கடையநல்லூர் ஜமாத்தார்கள், உலமாக்கள், குடும்பத்தார்கள் குறித்துபேசுவதே முதன்மையானது. அதேநேரம் இதன் தொடக்கப்புள்ளி இறையில்லா இஸ்லாம் தளத்தில் நண்பர் தஜ்ஜாலுடைய கட்டுரை என்பதால் அதுவும் தகுந்த இடம் வகிப்பதே சரியாக இருக்கும். ஆனால் அது இணையத்தில் இன்றும் காணக்கிடைக்கும் ஒரு கட்டுரை எனும் அளவில் ஒரு பார்வையாளனாக மட்டுமே என் கருத்தை பதிவு செய்ய முடியுமே அன்றி கட்டுரையாளனாக அல்ல. தஜ்ஜாலுடைய கருத்து வேண்டுமென்றால்,அவருக்கென்று ஒரு தளம் இருக்கிறது, அங்கு அழைப்பு விடுங்கள். இது குறித்து ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    அடுத்து என்னுடைய கேள்விக்கான உங்கள் விளக்கத்திற்கு வருவோம், கடையநல்லூரில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது அது சரியா? என்பது என் கேள்வி? நீங்கள் கூறியபடி தான் அங்கு நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது? என்பது அதற்கான உங்கள் விளக்கம். இது விவாதக் களம். எதிரெதிர் நிலையெடுத்து நாம் விவாதிக்க வந்திருக்கிறோம். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் உங்களால் விவாதிக்க முடியாது. நீங்கள் விவாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதால் அங்கு என்ன நடந்தது என்பதற்கு உங்களுடைய தனிப்பட்ட பார்வை ஒன்று இருக்கும். அந்த அடிப்படையில் தான் நீங்கள் விவாதிக்க வந்திருக்கிறீர்கள் அப்படித்தானே. நான் என்னுடைய பார்வையில் அங்கு என்ன நடந்தது என்பதை கூறியிருக்கிறேன் என்றால் (ஏற்கனவே என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன் என்பதால் என்னுடைய நிலைபாட்டை கூறியிருக்கிறேன்) அங்கு நடந்தது நீங்கள் கூறியது போலல்ல என்று உங்களுடைய பார்வையை கூறியிருக்க வேண்டும். அல்லது, நீங்கள் கூறியது போல் தான் அங்கு நடந்தது ஆனால் அதற்கான உங்கள் நிலைப்பாடு தவறானது என்று அங்கு நடந்தது எந்த விதத்தில் சரி என்பதை விளக்கியிருக்க வேண்டும். இரண்டையுமே செய்யாத நீங்கள் நீங்கள் கூறியபடிதான் நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது என்று எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். இது உங்கள் நிலைப்பாட்டை மறைக்கும் தந்திரமாகவே நான் கருதுகிறேன். எனவே முதலில் உங்களுடைய நிலைப்பாட்டை கூறுங்கள். அதன் பிறகு நான் கூறியபடி தான் அங்கு நடந்தது என்பதை நான் நிரூபிக்கிறேன். அல்லது அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாது என்று நீங்கள் கூற வேண்டியதிருக்கும். அப்படி கூறினால் அது குறித்து உங்களால் விவாதிக்க முடியாது. எனவே அங்கு நடந்தது குறித்த உங்கள் நிலைப்பாட்டை கூறுங்கள். நான் கூறியதை நிரூபிக்கும் கடமை எனக்கு உண்டு.

    அடுத்து நீங்கள் எழுப்பிய கேள்விக்கு வருவோம். தோழர் துராப்ஷா தன்னுடைய கடையில் இஸ்லாமிய முறைப்படி கோழியை அறுத்துக் கொடுத்தது மொள்ளமாரித்தனம் இல்லை. எப்படி? வியாபாரம் என்றால் அதன் அடிப்படையே நுகர்வோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, நுகர்வோரின் தேவையை தீர்ப்பது. இங்கு நுகர்வோரின் தேவை கோழி இறைச்சி, அதை அவர்களின் நம்பிக்கைப்படி கொடுத்தால் தான் அவர்கள் வாங்குவார்கள். ஆனால் விற்பனை செய்பவர் அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு எடுத்துக் காட்டு நீங்கள் கூறிய கணேசன் படம். கணேசனை தான் ஏற்பதில்லை அதனால் அந்த படம் போட்ட பையை பிய்த்துவிட்டு வேறு பையில் தான் போட்டுக் கொடுப்பேன் என்று யாரும் கூறுவதில்லை. அதே நேரம் கணேசனை அவர் ஏற்றிருக்க வேண்டும் எனும் அவசியமும் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தோழர் துராப்ஷாவின் கோழிக்கடை கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தோழரின் தந்தை இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தோழர்தான் கடையை நடத்தி வருகிறார். தோழர் நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தோழரின் கடையில் வழக்கம்போல் வியாபரம் நடந்து கொண்டு தானே இருந்தது. தோழரின் தந்தை எப்படி உதவிக்கு ஒரு ஆள் வைத்திருந்தாரோ அதேபோல தோழரும் உதவிக்கு ஒரு ஆள் வைத்திருக்கிறார். (இரண்டு வேலையாட்கள் என்பது தவறான தகவல். பிற மத நம்பிக்கைகளை நாங்கள் கேலிசெய்வோம் என்பதும் ஏற்புடையதல்ல. தேவைப்படும் இடங்களில் விமர்சனம் செய்வோமேயன்றி கேலிசெய்வது எங்கள் வழக்கமல்ல.) அங்குள்ள நுகர்வோரில் 95 நூற்றுமேனி இஸ்லாமியர்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக நுகரும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. தோழர் எதையும் மறைக்கவும் இல்லை. அவரின் நாத்திகச் செயல்பாடுகள் சமூக அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. வழக்கம் போல வெளிப்படையான தோழரின் செயல்பாட்டில் திடீரென எப்படி மொள்ளமாரித்தனம் வந்து விட முடியும்? அவரின் தொடர்ச்சியான செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாத போது திடீரென மொள்ளமாரித்தனம் எப்படி வரும்? அவரின் நடவடிக்கைகள் ஒளிவுமறைவின்றி அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இரண்டு ஆண்டுகளாக இல்லாத மொள்ளமரித்தனம் திடீரென வரமுடியுமா? எனவே தோழரின் நடவடிக்கையில் மொள்ளமாரித்தனம் எதுவும் இல்லை. ஆனால் தோழரின் நடவடிக்கைகள் சமூகத்தளத்தில் தனக்கு எதிராக வருகிறது என்று தெரிந்ததும் அதுவரையில் இல்லாத ஹலால் பிரச்சனை திடீரென முளைத்ததே அது தான் மொள்ளமாரித்தனம்.

    நான் இப்போது புதுக் கேள்வி எதையும் கேட்கவில்லை என்பதால், என்னுடைய பழைய கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதால், அதே கேள்வியே இப்போதும் தொடர்கிறது.

    • S.Ibrahim ஏப்ரல் 13, 2012 இல் 5:40 முப #

      செங்கொடி ,கடையநல்லூரில் உங்கள் தளத்தில் வெளியானதற்கு எந்த ஒரு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை .ஆகவே நீங்கள் கூறியவாறு நடந்தற்கு ஆதாரம் இல்லை என்று நிருபித்துவிட்டாலே அங்கு மொள்ளமாரித்தனம் இல்லை என்றாகிவிடும் என்பதாலே நான் உங்கள்தரப்பு செய்தி பற்றி விளக்கம் கேட்டுள்ளேன்.ஆனால் நீங்களோ உங்கள் தரப்பு செய்தியை நிருபிப்பேன் என்று கூறியுள்ளதால் நான் கடையநல்லூரில் நடந்தவற்றை பற்றி நான் அறிந்துள்ளதை தருகிறேன்.
      துராப்சாவின் முகநூலில் லூத் லூசு என்ற தச்சஆளின் கட்டுரை வெளியானதும் அது பலரின் கவனத்திற்கு வந்துள்ளது.அந்த வட்டார ஜமாஅத் இவரை கம்யுனிஸ்ட் என்றால் நீங்கள் கூறும் போலி கம்யுநிச்ட்டில் ஒருவராகவே பாவித்து வந்துள்ளது.இவரது இணையதள நடவடிக்கை அவர்கள் அறியவில்லை.செந்தோழன் என்ற பெயரில் எழுதும் அவரை யாரென்று தெரியாத எனக்கு தெரிந்திருக்கிறது.ஆனால் அவர் தெரு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.ஆகவே இஸ்லாத்திற்கு எதிரான இவரது நடவடிக்கைகளை இணையதளம் மூலம் அறிந்த மற்றொரு ஜமாஅத் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டார ஜமாத்க்கு தகவல் கொடுத்துள்ளது.இவரது உண்மை கம்யுனிஸ்ட்?பற்றியும் அதில் துராப்சாவின் ஈடுபாட்டையும் அறிந்த வட்டார்ஜமாத் அவரின் சொக்கார்கள் மூலம் அவருக்கு தகவல் கொடுத்து விசாரணைக்கு அழைப்பு கொடுத்துள்ளது.அவர் தனது சகாக்களுக்கு தகவல்கொடுத்துவிட்டு விசாரணைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.அந்த சமயத்தில் உண்மை கம்யுனிஸ்ட்கள்? அலறி ,தங்களது சகா துராப்சா முஸ்லிம்களால் இழுத்து செல்லப்பட்டு பள்ளிவாசலில் வைத்து தாக்கப்பட்டு வருகிறார் என்று வழக்கம் போலவே ,இயல்பாக அமைப்புகள் தனது உறுப்பினர்களை பாதுகாக்க சொல்லவேண்டிய பொய்களை போலிசுக்கு தகவல் கூறியுள்ளது.வட்டார ஜமாஅத் விசாரணையில் அவர் தனது கொள்கையை ஒப்புக் கொண்டார்.அதை எழுத்து மூலமாக பெற்றுள்ளனர்.அவர் முஸ்லிம் என்று அவரது முந்தைய உறுதிப்பாட்டை,நம்பியே அவரது திருமணத்தை வட்டார ஜமாஅத் தனது திருமண பதிவேட்டில் பதிவு செய்தது.அவரை முஸ்லிம் என்று நம்பியே அவரது மனைவி வீட்டார் அவருக்கு தங்களது மகளை மனம் செய்து வைத்தனர்.ஆகவே அவர் முஸ்லிமிலிருந்து விலகையில் அவரது திருமணத்தை ரத்து செய்ய வட்டார ஜமாத்துக்கு உரிமை உள்ளது .அதைத்தான் செய்தது.பின்னர் மனைவியின் கொள்கை உறுதிப்பாடு துராப்சாவின் உறுதிப்பாட்டை தகர்த்தது .அவர் மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.அதனால் வட்டார ஜமாது அவர்மீதான தனது நடவடிக்கையை ரத்து செய்தது.இதுதான் நடந்தது.இதை உண்மை கம்யுனிஸ்ட்கள் போலியான செய்தியை கடயநல்லூர் குறிப்பிடட்ட வட்டார ஜமாஅத் மீது அவதூறு பரப்பி வருகிறது .செங்கொடியை அவரது சொக்கார்களும் சொந்தங்களும் பாதுகாத்தது போல துராப்சாவையும் அவரை அழைத்து வந்த சொக்கார்கள் மற்றும் சொந்தங்கள் இருக்கையில் வட்டார ஜமாத்தினர் யாரும் கைவைக்க முடியாது.தாக்கியிருக்கவும் முடியாது.இது சாபி ஜமாத்கள் இருக்கும் உள்ள ஊர்களில் தொன்றுதொட்டு நடந்துவரும் வழக்கம் .இதில் என்ன காட்டுமிராண்டித்தனம் இருக்கிறது ?நாட்டு நடப்பே உள்ளது.
      அடுத்து துராப்சாவின் மொள்ளமாரித்தனம் //வியாபாரம் என்றால் அதன் அடிப்படையே நுகர்வோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, நுகர்வோரின் தேவையை தீர்ப்பது. இங்கு நுகர்வோரின் தேவை கோழி இறைச்சி, அதை அவர்களின் நம்பிக்கைப்படி கொடுத்தால் தான் அவர்கள் வாங்குவார்கள். ஆனால் விற்பனை செய்பவர் அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ///
      வியாபாரம் என்றால் நுகர்வோரிடம் தனது கடை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது கடையில் விற்கப்படும் கோழிக்கறி சுத்தமானது ,நோய்பிடித்த கோழி அறுக்கப் படவில்லை ,நியாமான விலை என்பதில் மட்டுமே .இதையும் மீறி ஒரு முஸ்லிம் அல்லாதவர் கோழி கடை நடத்தினால் முஸ்லிம்களது மத நம்பிக்கையில் எவ்வித கருத்தும் இல்லாத ,அதை மதிக்கக் கூடிய வகையில் முஸ்லிம்களை வைத்து தங்களது பிழைப்புகளை நடத்திக் கொள்வார்கள் .அவர்களது மதத்திலோ அதற்கான எந்த தடைகளும் கிடையாது.ஆனால் ஏகத்துவத்தை சொல்லக் கூடிய நான் கணேசர்க்கு பூஜை செய்தால்தான் வியாபாரம் செய்வோம் என்பதற்காக ஒரு ஹிந்துவை வைத்து கோதுமை மாவு பாக்கெட்டில் உள்ள கணேசர் படத்துக்கு பூஜை செய்தால் நான் ஹிந்துக்களை கேலி செய்கிறேன் என்றே பொருள்.அவர்களிடம் எங்கள் கடையில் அசல் கணேசர் கோதுமை மாவு ,நடப்பு தேதியில்தயார் செய்யப்படது.மேலும் பிற கடைகளை விட குறைந்த விலையில் கிடைக்கும் .என்று சொல்லி வியாபாரம் செய்ய வேண்டும் .
      ////செந்தோழன்
      நவம்பர் 30, 2011 இல் 9:37 பிற்பகல் #
      ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
      ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?///

      இவ்வாறாக கருத்துரை எழுதியவர் ,தனது வயிற்ருப் பிழைப்புக்காக அதே அல்லாவின் பெயரை சொல்லி கோழி அறுக்க ஒருவரை நியமித்து முஸ்லிம்களை ஏமாற்றுவது மொள்ளமாரித்தனமே .

  7. nallurmuzhakkam ஏப்ரல் 16, 2012 இல் 12:18 பிப #

    இப்ராஹிம்,

    கடையநல்லூரில் நடந்தது மொள்ளமாரித்தனம் இல்லை நாட்டு நடப்பே என்று உங்கள் பார்வையைக் கூறியுள்ளீர்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் எழுப்பிய கேள்வி சரியா? தப்பா?என்பதை அடிப்படியாகக் கொண்டது. ஆனால் இப்போது நீங்கள் உங்கள் பார்வையைக் கூறி அது நாட்டு நடப்பு என்றிருக்கிறீர்கள். காட்டுமிராண்டித்தனத்தையே கூட இது தான் எங்கள் ஊரின் (நாட்டு)நடப்பு என்று கூற முடியும். எனவே மொழுகல்களைத் தள்ளிவிட்டு அங்கு நடந்ததை சரிதான் தவறு அல்ல என்று நீங்கள் கூறியிருப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

    \\\செய்யாத ஒரு தவறுக்கு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை எதுவும் செய்யாமல் குற்றத்தை நிரூபிக்காமல் அல்லது விளக்கமளிக்க அனுமதிக்காமல் ஒருதலைப் பட்சமாக போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கியது, தாக்கியது/// கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனம் என்பதற்கு நான் எடுத்து வைத்த காரணங்கள். முதலில் இவற்றை நிரூபித்து விடுகிறேன்.

    1. செய்யாத தவறு: செந்தோழன்ஷா என்ற பெயரில் கோழிக்கடை நடத்தும் துராப்ஷா என்பவர் முகநூலில் லூத் ஒரு லூஸ் என்ற தலைப்பில் நபியை கேவலப்படுத்தி எழுதிவிட்டார் என்பது தான் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு தோழர் துராப்ஷா தான் அந்த கட்டுரையை எழுதினார் என்று இன்றுவரை யாரும் நிரூபிக்கவில்லை. மாறாக தஜ்ஜால் என்பவர் தானே அந்தக் கட்டுரையை எழுதியதாக அவருடைய தளத்தில் (லூத் ஒரு லூஸ் என்ற கட்டுரை இன்றும் இருக்கும் இறையில்லா இஸ்லாம் எனும் அவருடைய தளத்தில்) வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
    1. விசாரணை எதுவும் செய்யாமல்: முதலில் பொய்க் குற்றச்சாட்டைக் கூறி தீர்ப்பை (பள்ளிவாசலில் அவர் கடையில் யாரும் வாங்காதீர்கள் என அறிவித்தது) கூறியவர்கள் தோழரிடம் எந்த விசாரனையையும் நடத்தவில்லை. அடுத்து, குடும்பத்தார்கள், அவர்களும் விசாரணை எதுவும் நடத்தவில்லை. எந்த விளக்கமும் நீ கூறக்கூடாது மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் என்று தோழர் மீது நிர்ப்பந்தம் செய்வதற்கு கூட்டபட்ட கூட்டமே குடும்பத்தார்களின் கூட்டம். அதற்கு ஆதாரம் இதோ இந்த கேட்பொலி துணுக்கை கேளுங்கள். கடைசியில் ஃபத்வா கொடுத்த கூட்டமும் தோழரிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. அதற்கு ஆதாரம் இதோ இந்த கேட்பொலி துணுக்கை கேளுங்கள். விசாரணை நடந்த ஒரே இடம் காவல் நிலையம் மட்டுமே. அதில் தோழர் மீது எந்த குற்றமும் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து கடையை திறந்து கொள்ளலாம் வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது, என்றே முடிவு செய்யப்பட்டது. அங்கு தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூறமுடியாமல் கும்பமௌனிகளாக உட்கார்ந்திருந்தார்கள் தோழர் மீது பொய்க்குற்றச்சாட்டை புனைந்தவர்கள்.
    1. ஒருதலைப் பட்சமாக: தோழரிடம் விசாரணை எதுவும் செய்யவில்ல என்பதை மேலே நிரூபித்திருக்கிறேன். எந்த விசாரணையும் செய்யாமல் யார் பொய்க் குற்றம் சுமத்தினார்களோ அவர்கள் தரப்பே தீர்ப்பையும் கூறியிருக்கிறது என்றால் அது ஒருதலைப் பட்சம் தானே.
    2. போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பு: எந்த ஒரு தீர்ப்பையும் எழுத வேண்டுமென்றல் அப்படி தீர்ப்பெழுதுவதற்கு அங்கீகாரம் பெற்றவர் மட்டுமே எழுத முடியும் எழுத வேண்டும். ஒருவரை காஃபிர் என்று அறிவிப்பதற்கு தகுதியானவர் அரசால் நியமிக்கப்பட்ட காஜி. கடையநல்லூர் மண்டலப் பகுதிக்கு அரசால் நியமிக்கப்பட்ட காஜியே என்னிடம் கேட்காமல் அவர்களாகவே ஒரு தீர்ப்பைக் கூற்விட்டார்கள் என்று கூறுவதை இதோ இந்த காணொளியில் பார்க்கலாம். அதிலும் அவர் வாய்மொழியாக கூறிவிட்டதாக கூறுகிறார். அது சமுதாயத்தார்களை காப்பதற்காக கூறப்படும் பொய். காஃபிர் என்று வாய்மொழியாக கூறவில்லை எழுத்து பூர்வமாகவே கூறியிருக்கிறார்கள். என்றால் அந்தத் தீர்ப்பு போலியான தீர்ப்பல்லவா?
    3. தாக்கியது: மன்னிப்பை மட்டுமே கேட்க வேண்டும் வேறு எதையும் பேசக் கூடாது என்று வற்புறுத்தி அழைத்துச் சென்ற பிறகும் மன்னிப்பை கூட கேட்க விடாமல் தாக்கியருக்கிறது அந்த காட்டுமிராண்டிக் கும்பல் என்பதற்கு இதோ இந்த கேட்பொலி குறிப்பை கேளுங்கள்.

    இப்போது கூறுங்கள், இது மனித நாகரீகமற்ற, மதவெறி பிடித்த காட்டுமிராண்டிக் கூட்டமா இல்லையா?

    இனி, நீங்கள் கூறியதற்கு வருவோம். உங்களின் கூற்றில் பல பொய்கள் நிறைந்துள்ளன.

    \\\இவரது இணையதள நடவடிக்கை அவர்கள் அறியவில்லை/// செந்தோழன்ஷா என்ற பெயரில் முகநூல் கணக்கு தொடங்கியது அண்மையில் தான். தெளிவாகச் சொன்னால் இணையம் குறித்து அவர் கற்றுக் கொண்டதே 2011ஜூனில் தான் அதன் பிறகிலிருந்து அவர் தன்னுடைய முகநூல் கணக்கில் பல கட்டுரைகளை குறிப்பாக வினவு, செங்கொடி, தமிழச்சி போன்ற பல தளங்களிலிருந்து சமுக அரசியல் கட்டுரைகள் பலவற்றை சுட்டி கொடுத்து, அவற்றை ஊர்காரர்கள் நண்பர்கள் பலரிடம் படித்துப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். அந்த வகையில் முல்லைப்பெரியாறு, கூடங்குளம் பிரச்சனைகள் பற்றிய பல கட்டுரைகளுக்கு சுட்டி கொடுத்து பலரை படித்துப் பார்க்க தூண்டியிருக்கிறார். ஆனால் லூத் லூஸான கட்டுரைக்கு சுட்டி மட்டும் கொடுத்திருந்தாரேயன்றி யாரிடமும் படித்துப் பார்க்குமாறு கூறவில்லை. ஏற்கனவே சமூக அரசியல் தொடர்பான கட்டுரையை படித்திருந்தவர்கள் அதன் தொடர்ச்சியாக லூத் கட்டுரையையும் படித்தார்கள். எனவே தோழரின் முகநூல் கணக்கை தோழரே அறிமுகம் செய்திருக்கிறபடியால் தோழரின் இணைய நடவடிக்கைகளை இணையம் அறிந்தவர்கள் அறிந்தே இருந்தார்கள். அதேநேரத்தில் இணையப் பயன்பாடு அறியாதவர்களுக்கும் தோழரின் சமூக அரசியல் செயல்பாடுகள் தெரிந்தேதான் இருந்தன. இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தோழர் நண்பர்களிடம் நாத்திகப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதும் எல்லோரும் அறிந்தது தான். எனவே தோழரின் இணைய நடவடிக்கைகளை யாரும் அறிந்திருக்கவில்லை என்றோ, சமூக செயல்பாடுகளை யாரும் அறிந்திருக்கவில்லை என்றோ யாரும் கூறிவிட முடியாது. அப்படிக் கூறினால் அது பொய்.

    \\\இஸ்லாத்திற்கு எதிரான இவரது நடவடிக்கைகளை இணையதளம் மூலம் அறிந்த மற்றொரு ஜமாஅத் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டார ஜமாத்க்கு தகவல் கொடுத்துள்ளது/// இதுவும் பொய்யான தகவல். இஸ்லாத்திற்கு எதிரான தோழரின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தொடந்து கொண்டிருக்கின்றன. இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம் என்னவென்றால், இணையத்தில் என்றாலும் பொதுவெளியில் என்றாலும் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கவில்லை. அவர் செய்து கொண்டிருக்கும் பல செயல்களில் மதவிமர்சனமும், ஒன்று மதவிமர்சனங்களிலும் கூட பிற மதங்களோடு இஸ்லாமும் உண்டு. எனவே தோழர், லூத் கட்டுரையை முகநூலில் பகிர்ந்து கொண்டது புதிதும் அல்ல, புதிரும் அல்ல. இந்த கட்டுரையை அறிந்த ஒரு ஜமாத் நடவடிக்கை எடுக்குமாறு வட்டார ஜமாத்துக்கு பரிந்துரை செய்ததா? அப்பட்டமான பொய். எந்த ஜமாத் அறிந்ததோ அந்த ஜமாத் தான் முதலில் அவர் கடையில் வாங்குவது ஹராம் என்று அறிவித்தது, கடையின் முன் நின்று கூச்சல் போட்டது, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது. இத்தனைக்கு பிறகும் தான் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை என்பதால் அதன்பிறகு வட்டார ஜமாத்துக்கும், குடும்பத்துக்கும்,வட்டார ஜமாத்துக்கும் அதன் மூலம் உலமாக்கள் சபைக்கும் தகவல் கொடுத்து தூண்டியது. இவைகளை மூடி மறைத்து ஏதோ தகவல் கொடுத்தது விட்டு ஒதுங்கிக் கொண்டது போல் சித்தரிப்பது அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாகும்.

    \\\வட்டார்ஜமாத் அவரின் சொக்கார்கள் மூலம் அவருக்கு தகவல் கொடுத்து விசாரணைக்கு அழைப்பு கொடுத்துள்ளது.அவர் தனது சகாக்களுக்கு தகவல்கொடுத்துவிட்டு விசாரணைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்/// இதில் சொக்காரர்கள் எனும் பதம் குடும்பத்தார்களை குறிப்பது. இதில் குடும்பத்தார்களின் பங்களிப்பு வெறுமனே தகவல் கூறி விசாரணைக்கு அழைப்பது மட்டும் தானா? பொய். மிரட்டி உருட்டி மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு ஒரு வார்த்தை கூட உன்னிடமிருந்து வரக்கூடாது என்று அடாத வார்த்தைகளால் குதறிக் கிழித்து தயார் செய்வதற்காகவே குடும்பத்தார்கள் கூட்டம் நடந்திருக்கிறது. இதை தகவல் கொடுப்பது என்று யாரும் குறுக்கினால் அவர்களைவிட பொய்யர்கள் வேறு இருக்க முடியாது.

    \\\தங்களது சகா துராப்சா முஸ்லிம்களால் இழுத்து செல்லப்பட்டு பள்ளிவாசலில் வைத்து தாக்கப்பட்டு வருகிறார் என்று வழக்கம் போலவே ,இயல்பாக அமைப்புகள் தனது உறுப்பினர்களை பாதுகாக்க சொல்லவேண்டிய பொய்களை போலிசுக்கு தகவல் கூறியுள்ளது/// முஸ்லீம்களால் தோழர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று யாரும் எங்கும் கூறவில்லை. இது இப்ராஹிமே சேர்த்துக் கொண்ட பில்ட்அப் பொய். பள்ளிவாசலில் விசாரணை என்று எதுவும் நடைபெறாமல் தோழர் தாக்கப்பட்டார் என்பதற்கு மேலே ஆதாரங்களை கொடுத்துள்ளேன். அவர் தாக்கப்பாட்டர் என்பதை மழுப்பலாக கூறி அதை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளும் காணொளி இதோ. கண்டு கொள்ளுங்கள். வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? தாக்கப்படவில்லை விசாரிக்கப்பட்டார் என்று நீங்கள் கூறும் பச்சைப் பொய்யை நிரூபிக்க முடியுமா உங்களால்?

    \\\உண்மை கம்யுனிஸ்ட்கள் போலியான செய்தியை கடயநல்லூர் குறிப்பிடட்ட வட்டார ஜமாஅத் மீது அவதூறு பரப்பி வருகிறது/// கடைந்தெடுத்த பொய். கேவலமான அவதூறு. இன்னதான் நடந்தது, அது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்று வெளிப்படையாக எழுதிவருகிறேன். நெஞ்சில் தில் உள்ள யாரும் கடையநல்லூரில் அப்படி நடக்கவில்லை என்று கூறுவதற்கு முன்வர முடியவில்லையே. இது ஒன்றே, நான் கூறுவது தான் உண்மை என்பதற்கும் இப்ராஹிம் கூறுவது அடாவடியான அவதூறு என்பதற்கும் போதுமான சான்று. இப்போதும் சவால் விட்டுக் கூறுகிறேன். நேர்மை உணர்ச்சி கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் யாரும் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து பேச முன்வரட்டும். பார்த்து விடுவோம் எது உண்மை என்பதை. முடியாதவர்கள் ஓடி ஒழிந்து கொள்ளட்டும்.

    திருமணம் குறித்தெல்லாம் இப்ராஹிம் கூறியிருக்கிறார், அதை நான் கேட்கவே இல்லை. இந்த விவாதத்தின் தொடர்ச்சியில் திருமணம் குறித்த விசயங்களை எடுத்துக் கொள்ளும் போது அது குறித்து விளக்குகிறேன்.

    இங்கு நான் கூறியது தான் உண்மை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறேன். இப்ராஹிம் கூறியது அப்பட்டமான பொய் என்றும் வாதிட்டிருக்கிறேன். தனக்கு சாதகமாக ஏதேதோ கூறி சப்பைக் கட்டு செய்யும் இப்ராஹிம், தான் கூறியது உண்மை என்பதை நிரூபித்துக் காட்டட்டும்.

    அடுத்து, பிஸ்மி சொல்லி கோழி அறுப்பதும், கணேச பூஜை செய்வதும் ஒன்று என்று அடம்பிடிக்கிறார் இப்ராஹிம். பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கறிக்கோழியில் இது ஹலால் செய்யப்பட்டது என்று பொறிக்கப்பட்டிருக்கும். இது போன்று உண்ணும் பொருட்கள் அனைத்திலும் அது முஸ்லீமல்லாத நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இருந்தால் ஹலால் செய்யப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கும். இதன் பொருள் முஸ்லீமல்லாத அந்த நிறுவன முதலாளி இஸ்லாமிய வணக்கச் சடங்குகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறமுடியுமா? அல்லது அதை வாங்கி உண்ணும் மக்களுக்கு அது பிஸ்மி சொல்லி அறுக்கப்பட்டது தான் என உறுதிப்படுத்த முடியுமா? ஒரு சடங்கு அவ்வளவு தான். அதை நம்புபவர்களுக்கு வேண்டுமானால் அது ஹலால் ஹராம் பிரச்சனையாக இருக்கலாம் நம்பாதவர்களுக்கு அது ஒரு சடங்கு. இதை இன்னொரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். ஒரு முஸ்லீம் பலசரக்கு கடை வைத்திருக்கிறார், உதவிக்கு இந்து ஒருவரை வேலைக்கு வைத்திருக்கிறார். கணேசர் படம் போட்ட ஒரு பொருள் கீழே விழுந்து அதை அவர் தொட்டு முத்தினால் அதை முதலாளியான முஸ்லீம் மறுக்க முடியுமா? என்றால் படத்தை முத்திய இந்துவுக்குக்கும் அதை அனுமதித்த முஸ்லீமுக்கும் இடையில் ஏற்பு இருக்கிறது என்று கூற முடியுமா?

    இதே போல் தான் தோழரும் உதவிக்கு ஒரு ஆளை வைத்திருக்கிறார். முன்னர் தோழரின் தந்தை உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டது போலவே. அன்றிலிருந்து இன்றுவரைகடையில் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் அனைவரின் வேலையும் அறுத்து, உறித்துக் கொடுப்பது தான். 95 நூற்றுமேனி முஸ்லீம்களே வாங்கும் ஒரு கடையில் முஸ்லீம்களின் சடங்கு ஒன்றை செய்ய அனுமதிப்பது மொள்ளமாறித்தனம் இல்லை. முஸ்லீம் அல்லாதவர்களே நுகர்வோராக இருக்கும் ஒரு இடத்தில் முஸ்லீம் கடை வைத்தாலும் அங்கு பிஸ்மிக்கு அவசியமில்லை. முஸ்லீம்கள் நுகர்வோராக இருக்கும் ஒரு இடத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவர் கடை வைத்தாலும் பிஸ்மி அவருக்கு ஒரு பொருட்டு இல்லை. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தோழர் உதவிக்குத் தான் ஒரு ஆளை வைத்திருக்கிறாரேயன்றி பிஸ்மி சொல்வதற்காக வைக்கவில்லை. முஸ்லீம்களே நுகர்வோராக இருப்பதால் அது அவருக்கு ஒரு பொருட்டில்லை. மாற்றுத்திறனாளிகளே நுகர்வோராக இருக்கும் ஒரு கடையில் படிகள் வைக்காமல் சாய்தளம் வைப்பது எப்படி கடை முதலாளியின் கடமையோ அது போலத்தான் இதுவும். இதில் மொள்ளமாறித்தனம் எங்கிருந்து வந்தது? இதை தோழர் மட்டுமல்ல வியாபாரம் செய்யும் நிலையில் இருக்கும் அனைவரும் செய்வது தான் இது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ”எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எங்கள் பகுதியில் கடை வைக்காதே” என்பது தான் இப்ராஹிம் சுற்றி வளைத்து கூறவரும் பொருள். இதைத்தான் நான் முன்பே கூறியிருந்தேன். சமூகம் என்பதையும் மதம் என்பதையும் தேவைக்கு ஏற்ப இடம்மாற்றி விடுகிறார்கள் என்று.

    இந்த விசயத்தில் இப்ராஹிம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட ஒரு கேள்வியும் இருக்கிறது. \\\அவரின் நடவடிக்கைகள் ஒளிவுமறைவின்றி அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இரண்டு ஆண்டுகளாக இல்லாத மொள்ளமரித்தனம் திடீரென வரமுடியுமா? எனவே தோழரின் நடவடிக்கையில் மொள்ளமாரித்தனம் எதுவும் இல்லை. ஆனால் தோழரின் நடவடிக்கைகள் சமூகத்தளத்தில் தனக்கு எதிராக வருகிறது என்று தெரிந்ததும் அதுவரையில் இல்லாத ஹலால் பிரச்சனை திடீரென முளைத்ததே அது தான் மொள்ளமாரித்தனம்/// அதாவது பள்ளிவாசலில் அறிவிப்பதற்கு முந்திய நொடி வரை ஹலால் பிரச்சனையில் மொள்ளமாறித்தனம் வராத நிலையில் திடீரென மொள்ளமாறித்தனம் குதித்தது எப்படி? இதற்கு ஏன் இப்ராஹிம் விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால் தோழின் மொள்ளமாறித்தனம் என்று கூறுவதற்கு அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. அதற்கு எதிரானவைகளையெல்லாம் கண்டு கொண்டால் மொள்ளமாறித்தனம் என்று கூறுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமே.

    • mathiyur mainthan ஏப்ரல் 17, 2012 இல் 12:45 பிப #

      தோழரே
      அணுகுமுறையில் அறிவுப் பூர்வமான அணுகுமுறை மற்றொன்று உணர்வுப் பூர்வ அணுகுமுறை. கடையநல்லூர் மக்கள் செய்திருப்பது
      இரண்டாம் வகையை சார்ந்தது என்றாலும் உங்கள் தரப்பை ஒருபோதும் நீங்கள் நியாயப் படுத்த முடியாது. ஒருவனின் உயிராக மதிக்கக் கூடிய பெற்றோர்களை மற்றொருவன் அவதூறாக ஏசுகிறான் என்பதற்காக அவனிடத்தில் விவாதம் செய்து நிரூபிக்கக் கூடிய நெறிகள் இதில் அடங்குவதில்லை.உயிருக்கும் மேலாக மதிக்க கூடிய நபரைப் பற்றி பேசினால்அது எப்படி? மாறாக இந்த இடத்தில் உணர்சிகள் மேலோங்குவதை தவிர்க்க இயலாது. இஸ்லாம் பற்றிய முறையான தேடல்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசை படுவது தெரிகிறது. அதற்காக அதனை விமர்சனம் செய்துவிட்டு ஏதோ மேலோட்டமாக சில விசயங்களை பார்த்து விட்டு விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படாது

      நான் பிடித்த(கம்யூனிஸ்ட்) முயலுக்கு மூன்று கால்தான் என்று சொன்னால் ஒருவேளை அது (கம்யூனிஸ்ட்)பிறவியிலேயே ஊனமான முயலாக வேண்டுமானால் இருக்கலாம்

      அனால் எல்ல முயலுக்கும் நான்கு கால்கள் என்பதுதான் நிதர்சனம்.

      துரப்ஷா செய்யாத தவறென்று எதை சொல்கிறீர்கள். எதை அவர் செய்யவில்லை என்று சொல்கிறீர்களோ அதற்க்கு வக்காலத்து வாங்கித்தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்

      உங்களது “காட்டு மிரண்டி” குற்றச்சாட்டுகளில் துளியளவும் நியாயம் இல்லை நீங்கள் கொண்டிருக்கும் கொள்கையைப் போல்.

      உங்களை மாற்றவது என்பது எளிது; நீங்கள் கொண்டிருக்கும் பாதை தவறானது என்பது விவாதம் செய்து நிருபிக்க வேண்டிய விசயமே இல்லை என்பது உங்களுக்கே தெறித்த விசயமாயிற்றே

      • nallurmuzhakkam ஏப்ரல் 19, 2012 இல் 12:22 பிப #

        நண்பர் மதியூர் மைந்தன்,

        விவாதத்தில் நான் பிறருக்கு பதிலளிப்பதில்லை என்றாலும் உங்கள் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுவதால் பதிலளித்திருக்கிறேன். பதிலைக் காண இங்கு வருமாறு அழைக்கிறேன்.

    • S.Ibrahim ஏப்ரல் 21, 2012 இல் 5:08 முப #

      இறையருளால் நாளை பதில் அளிக்கிறேன்

    • S.Ibrahim ஏப்ரல் 22, 2012 இல் 5:59 முப #

      செங்கொடி,கடையநல்லூரின் நாட்டு நடப்பாக காட்டுமிராண்டித்தனம் இருந்ததாக நீங்கள் ஓரிரு எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருக்க வேண்டும் .உங்களது கானொளியில் துராப்சாவை சிலர் அடிக்கவேண்டும் ,உதைக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள் என்றுதான் சொல்லுகிறார்.ஆனாலும் பலர் இப்படி ஒரு நடவடிக்கைக்கு ஆளாகிவிட்டாரே என்று வருந்தியதாக கூறுகிறார்.ஆக அவர் தாக்கப்படவில்லை .தாக்கப்படவேண்டும் என்று சிலர் கூறியதற்கே பலர் வருந்தியதாக சொல்லபடுகிறது என்றால் அது காட்டுமிராண்டித்தனமா?முஹம்மது நபி [ஸல்]அவர்களது உருவ படத்தை வெளியிட்டதற்காக எத்தனை கலவரங்கள் நடந்துள்ளதை துராப்சா அறியமாட்டாரா? அவ்வாறு இருக்க ,முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் அதாவது 95சதவீத மக்கள் முஸ்லிம்களாக வாடிக்கையாளராக இருக்கையில் தனது முகநூலில் லூது ஒரு லூசு என்ற கட்டுரைக்கு லிங்க் கொடுப்பது மொள்ளமாரித்தனமே என்பதை நடுநிலையாளர்கள் மறுக்கமாட்டார்கள்.அவர்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவர் லிங்குதான் கொடுத்தார் ,படிக்கவா சொன்னார் என்று நீங்களும் அந்த மொள்ளமாறித்தனமாகவே பேசுகிறீர்கள்.கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் குற்றமே ,அதை ஒருவர் தனது கடையில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்திருப்பதும் குற்றமே . நான் கள்ளச்சாராயம் தயார் செய்யவில்லை .தயார் பண்ணியவர் எனது நண்பர் என்பதால் நானும் கள்ளசாராய விரும்பி என்பதாலும் என் கடையில் வைத்துவிட்டு சென்றார் .நானும் அதை மக்கள் பார்வைக்கு வைத்தேனே தவிர யாரையும் குடிக்க சொல்லவில்லை.அதைப் பார்த்து மக்கள் வாங்கிக் குடித்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று உங்களை கைது செய்த காவல்துறையிடம் கூறுங்கள்.காவல்துறை உங்களை அடித்தது காட்டுமிராண்டித்தனமா?அல்லது நீங்கள் சொன்ன காரணம் மொள்ளமாரித்தனாமா? என்பது நன் மக்களுக்கு தெரியும்.
      இஸ்லாத்தையும் இஸ்லாமியர்கள் உயிரைவிட உயர்வாக மதிக்கும் முகம்மதுநபி[ஸல்]அவர்களை மிக கேவலமாக ,அதாவது //ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
      ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?///முஸ்லிம்களோடு தன்னையும் ஒரு முஸ்லிமாக காட்டிக் கொண்டு வயிற்று பிழைப்புக்காக அவர்களின் கொள்கைப்படி கோழி அறுத்து வியாபாரம் செய்யவும் வேண்டும் ஆண்டவன் பெயரை சொல்லி குழந்தையை கற்பழிக்கிறார் ,ஆண்டவன் பெயரை சொல்லி கோழியை அறுக்கிறார் என்று என்று கேலி செய்பவர் ,வயிற்று பிழைப்புக்காக ஆண்டவன் பெயரை சொல்லி கோழியை அறுக்க ஆள் நியமித்தது போல குழந்தையை கற்பழிக்க ஒரு முஸ்லிமை நியமிக்க மாட்டாரா? இப்போது சொல்லுங்கள் அவர் செய்த தவறா?செய்யாத தவறா?
      நீங்கள் சொல்லுவது போல இல்லாமல் நீங்கள் கொடுத்த கானொளியில் துராப்சாவை கண்ணியமாகவே நடத்தியுள்ளார்கள் என்பதை தெளிவாக தெரிய முடிகிறது.அவர் மீது பெரும்பான்மையான மக்கள் அவரது வழிகேட்டுக்கு வருந்தியுள்ளதையும் அவரின் நேர்வழிக்காக இறைவனிடம் வேண்டியதாக கூறுவதையும் அழகுற காணமுடிகிறது.ஆக கடையநல்லூர் ஜமாஅத் நல்லமாதிரியாகவே நடந்துள்ளது.மொள்ளமாறித்தனமாக அல்ல. உங்களது அபிமான் மகஇக கூட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அங்கு ஒருவர் வந்து ,மாவோ இன்னாரை கற்பழித்தார் ஸ்டாலின் மக்களை கொன்றார் அவர் ஒரு கொடுங்கோலன் என்று நோட்டிஸ் வெளியிட்டால் அங்கு என்ன நடக்கும்? அவர் அங்கிருந்து தப்பிக்க முடியுமா? இல்லை எங்களது தோழர்கள் அவரை அன்பு சொரிந்து அழைத்து கண்ணியமான முறையில் விசாரித்து அவரது கருத்துக்கு மதிப்பளித்து அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்தியதாக ,அவ்வாறு எங்காவது நடந்ததை ஆதாரம் காட்டுங்கள்.
      ////அதாவது பள்ளிவாசலில் அறிவிப்பதற்கு முந்திய நொடி வரை ஹலால் பிரச்சனையில் மொள்ளமாறித்தனம் வராத நிலையில் திடீரென மொள்ளமாறித்தனம் குதித்தது எப்படி? இதற்கு ஏன் இப்ராஹிம் விளக்கமளிக்கவில்லை.//
      ஒரு முஸ்லிம் கடை என்பதால் துராப்சாவின் முழுமையான கொள்கைகளை அறியாததால் ,அவரது இணையதள நடவடிக்கை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்ததால் அவர்கள் அறிவிக்கவில்லை.அவரைப் பற்றிய உண்மைகள் ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை.நண்பர் உறவினர் என்ற காரணமாக இருக்க வேண்டும். அல்லது நமக்கு ஏன் இந்த ஊர் வம்பு என்று பொது நலனில் அக்கறை கொள்ளாதவர்களாக இருந்திருக்க வேண்டும்.

      அதுவரை கோழி வியாபாரத்தில் ஹலாலா பிரச்னை வராமல் இருந்கணேசர் படம் போட்ட ஒரு பொருள் கீழே விழுந்து அதை அவர் தொட்டு முத்தினால் அதை முதலாளியான முஸ்லீம் மறுக்க முடியுமா? ////மறுக்க முடியாது
      ///என்றால் படத்தை முத்திய இந்துவுக்குக்கும் அதை அனுமதித்த முஸ்லீமுக்கும் இடையில் ஏற்பு இருக்கிறது என்று கூற முடியுமா?//// கூறமுடியாது.இதற்கும் பிரச்னைக்கும் என்ன உதாரண பொருத்தம்? கணேசர் படம் போட்ட கோதுமை மாவுவை அந்த கணேசரை யாராவது பூஜை செய்து கொடுத்தாலே வாங்குவேன் என்று ஒருவர் கூற அதை அந்த முஸ்லிம் வியாபாரி ஒரு ஹிந்து மூலம் பூஜை செய்து விற்றாலே பொல்லாங்கு செய்துவிட்டார் என்று பொருள்.மாற்றுத்திறனாளிக்கு சாய்தளம் அமைப்பதும் ,தனது கொள்கைக்கு மாறாக ,தனது சொல்லுக்கு மாற்றமாக் ,அதாவது ‘ஆண்டவன் பெயரை சொல்லி குழந்தையை கூட ,,,,,,,,,’என்று விமர்சனம் செய்துவிட்டு அதே ஆணடவன் பெயரை சொல்லி கோழி அறுக்க ஆள் வைத்துக் கொள்வதும் எங்ஙனம் ஒன்றாகும்?
      சட்ட ரீதியாக காபீர் என்று காஜித்தான் அறிவிக்க வேண்டும் என்றால் ,நீங்கள் ஏன் ஜமாத்தின் பத்வாவை பொருட்படுத்த வேண்டும்.நான் அந்த பெண் விபச்சாரம் செய்தார் என்று ஆதரர்த்தை கூறினேன் என்றால் ம ஹ்ஹூம் நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் சட்டரீதியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ,அது முடிந்து நீதிபதி தீர்ப்பு கூறினால் தான் நான் அவளை விபச்சாரியாக கொள்வேன்,என்று இருந்துவிட வேண்ட்டியதுதானே ! இது யார் மீது குற்றம்?

      ///வினவு, செங்கொடி, தமிழச்சி போன்ற பல தளங்களிலிருந்து சமுக அரசியல் கட்டுரைகள் பலவற்றை சுட்டி கொடுத்து, அவற்றை ஊர்காரர்கள் நண்பர்கள் பலரிடம் படித்துப் பார்க்குமாறு கூறியிருக்கிறார்அந்த வகையில் முல்லைப்பெரியாறு, கூடங்குளம் பிரச்சனைகள் பற்றிய பல கட்டுரைகளுக்கு சுட்டி கொடுத்து பலரை படித்துப் பார்க்க தூண்டியிருக்கிறார். . ////அருமை . தங்க செயினைத்திருட சிறுமிகளுக்கு சாக்லட் கொடுப்பது போன்றுவா?
      ///தோழரின் இணைய நடவடிக்கைகளை யாரும் அறிந்திருக்கவில்லை என்றோ, சமூக செயல்பாடுகளை யாரும் அறிந்திருக்கவில்லை என்றோ யாரும் கூறிவிட முடியாது. அப்படிக் கூறினால் அது பொய்.////
      செங்கொடி ,
      ////செந்தோழன்
      நவம்பர் 30, 2011 இல் 9:37 பிற்பகல் #
      ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
      ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?///
      உங்கள் தோழரின் நடவடிக்கை இங்ஙனம் இருந்தது என்பதையும் கடையநல்லூர் துராப்சா கோழி கடை வாடிக்கையாளர்கள் அறிந்திருந்தார்களா?
      ஆயின் துராப்சாவின் மொள்ளமாரித்தனமே மிகைத்திருக்கிறதே தவிர ,உங்களது காணொளி ஆதாரங்கள் அங்கு காட்டுமிராண்டித்தனம் நடக்க வில்லை என்பதற்கு சாட்சிகளாக் இருக்கின்றன.

  8. nallurmuzhakkam ஏப்ரல் 24, 2012 இல் 11:15 முப #

     

    இப்ராஹிம்,

    கட்டுச் சோற்றுக்குள் பூசணியை மறைப்பது என்றொரு பழமொழி கூறுவார்கள். ஆனால் ஒற்றைப் பருக்கையில் முழுப் பூசணியை மறைக்க முடியுமா? என்று யாரேனும் கேட்டால் இப்ராஹிமின் பதிவை சுட்டிக் காட்டலாம். என்னே ஒரு அயோக்கியத்தனம். இதற்காகத்தான் நேர்மையாக பதிலளிப்பேன் என்று உறுதி கூறுமாறு இப்ராஹிமை கேட்டேன்.முதலில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டவர், மீண்டும் வலியுறுத்திக் கேட்டதும் தான் உறுதியளிக்கிறேன் என்றார். ஆனால் இப்போது நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு தன் பதிவை பதிந்துள்ளார்.

    சற்றேறக்குறைய 20 நிமிடங்கள் ஓடும் கேட்பொலியில், “அவனை வெளியில் இழுங்கள்” என்று கூச்சலிடுவதையும்; உறவினர்கள் “எதற்க்கு அழைத்து வரச்சொன்னீர்கள் அடிக்கவா?” என்று கேட்பதும்; சிலர் “அடிக்காதீர்கள்” என்பதும்; ”அப்படித்தான் அடிப்போம்” என்று சிலர் வெறிக் கூச்சலிடுவதும் காதுள்ளவர்களுக்கு கேட்கும். ஆனால் இப்ராஹிமுக்கு கேட்கவில்லை. ஆனால் கண்ணியமாக நடந்துள்ளதாக கூறுகிறார் இப்ராஹிம். அவருடைய அகராதியில் கண்ணியம் என்பதன் பொருள் இது தான் போலும்.

    மேலே குறிப்பிட்ட கேட்பொலியை பற்றி மூச்சு விடாத இப்ராஹிம் பசப்பலாக பொய்யாக தாக்கவேண்டும் எனும் சிந்தனையில் வந்தார்கள் என்று கூறுவதை மட்டும் எடுத்துக் கொண்டு, அடிக்க வேண்டும் எனும் சிந்தனையில் வந்து விட்டு அடிக்காமல் முகர்ந்து பார்த்தார்கள் என்று கூறியிருக்கிறார் இப்ராஹிம். அந்த காணொளியை நான் அறிமுகப்படுத்தும் போதே \\\தாக்கப்பாட்டர் என்பதை மழுப்பலாக கூறி/// இப்படித்தான் கூறியிருக்கிறேன், ஆம். அவர்கள் மழுப்பலாகத்தான் கூறியிருக்கிறார்கள். நேரடியாக ஆதாரங்களைத் தந்திருக்கும் நிலையிலேயே இப்ராஹிம் அடிக்கவில்லை மயிலிரகால் வருடிக் கொடுக்கத்தான் செய்தார்கள் என்று கூற முடியும் போது, வீடியோ எடுக்கப்படுகிறது என்பது தெரிந்த பிறகும் அடித்தார்கள் என்றா கூறுவார்கள். அவர்கள் கூறுவது பொய் தான் என்பதற்கு வேறொரு ஆதாரமும் கொடுத்திருந்தேன். போலியான பத்வா கொடுத்து கையொப்பம் வாங்கி வைத்துக் கொண்டதை வாய் மொழியாக பத்வா கூறிவிட்டார்கள் என்று காஜி கூறுகிறார். இது பொய் அல்லவா? தங்களுக்கான ஆவணத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவில் தேவைப்படும் இடங்களில் பொய்களைக் கூறி ஆவணப்படுத்தி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்ராஹிமோ நேரடியாக இருப்பதை கடாசிவிட்டு மழுப்பலாக இருப்பதை பிடித்துக் கொண்டு கதைத்திருக்கிறார். அடிப்பதை வீடியோவாக எடுத்துப் போட்டிருந்தால் கூட “அடிக்கவில்லை. அவர் ஆடையில் கொஞ்சம் அழுக்கு இருந்தது அதைத்தான் தட்டி விட்டார்கள்” என்று கூட இப்ராஹிம் கூறக் கூடும். ஏனென்றால் அக்மார்க் முஸ்லீம் அல்லவா?

    கடையநல்லூர் மொள்ளமாரித்தனம் என்பதை பல விதங்களில் நான் கூறியிருந்தேன். போலியான பத்வா தயாரித்தார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக காட்டியிருக்கிறேன். அதற்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு அதை ஏன் நீங்கள் பொருட்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார். ஐயா நாங்கள் பொருட்படுத்த வேண்டுமா? நிராகரிக்க வேண்டுமா என்பது இங்கு கேட்கப்படவே இல்லை. போலித்தனமாக பத்வா தயாரித்தது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இதற்கு என்ன பதில். அதைத்தான் கூறவேண்டும். தப்பித்து ஓடக் கூடாது.

    குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? விசாரிக்காமல் தீர்ப்புக் கூறியது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இதற்கு எங்கே பதில்.

    தோழர் மீது கூறிய குற்றச்சாட்டு பொய்க் குற்றச்சாட்டு என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. தான் எழுதியதாக ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்தான் எழுதினார் என்பதை நிரூபிக்காமல் தண்டனை வழங்கியது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இதற்கு எங்கே பதில்.

    இப்ராஹிமுக்கு இது வழக்கமானது தான், இதை ஏற்கனவே நான் விவாதத்திற்கு முன்பு சுட்டிக் காட்டவும் செய்திருக்கிறேன். கேள்விகளை கண்டு கொள்ளாமல் விடுவது, கேட்டதை விடுத்து தொடர்பில்லாமல் வேறேதோ ஒன்றுக்கு பதில் கூறுவது இந்த வழக்கமெல்லாம் இங்கு வேண்டாம். முடிந்தால் நேர்மையாக பதிலளிக்கட்டும், அல்லாவிட்டால் ஓடிப் போய் விடட்டும். ஜல்லியடிப்பதற்கு இது இடமில்லை.

    அடுத்து, இப்ராஹிம் சில எடுத்துக்காட்டுகளை கூறியிருக்கிறார் அதற்கு அதே பாணியில் இங்கு பதில் கூறப்படுகிறது. \\\உங்களது அபிமான் மகஇக கூட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அங்கு ஒருவர் வந்து ,மாவோ இன்னாரை கற்பழித்தார் ஸ்டாலின் மக்களை கொன்றார் அவர் ஒரு கொடுங்கோலன் என்று நோட்டிஸ் வெளியிட்டால் அங்கு என்ன நடக்கும்? அவர் அங்கிருந்து தப்பிக்க முடியுமா? இல்லை எங்களது தோழர்கள் அவரை அன்பு சொரிந்து அழைத்து கண்ணியமான முறையில் விசாரித்து அவரது கருத்துக்கு மதிப்பளித்து அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்தியதாக ,அவ்வாறு எங்காவது நடந்ததை ஆதாரம் காட்டுங்கள்/// நாங்கள் நடத்தும் கூட்டங்களில் எங்களை விமர்சித்து வெளியீட்டை கொண்டு வந்து எங்களிடமே விற்றுச் செல்வதற்கு எங்கள் ஸ்டால்களில் நாங்கள் அனுமதி அளித்திருக்கிறோம். எங்கள் ஆசான்களின் மீது செய்யப்பட்ட அவதூறுகளுக்கு ஆதாரப்பூர்வமாக நாங்கள் பதிலளித்துள்ளோமேயன்றி, எங்கள் பலத்தைக் காட்டி ஒருபோதும் நாங்கள் காட்டுமிராண்டித் தாக்குதல் கொடுத்ததில்லை. எங்காவது அப்படி நடந்ததாக இப்ராஹிமால் நிரூபிக்க முடியுமா? ஆனால் பீஜே நடத்தும் ஒரு கூட்டத்தில் முகம்மது தன்னை எதிர்த்து கருத்து கூறியவர்களை கொலை செய்தார், கொலை செய்யத் தூண்டினார், கொலை செய்ய அனுமதி அளித்தார் என்று பிரசுரம் கொடுத்தால், எங்களை அன்பு சொரிந்து அனுப்ப முடியுமா?

    \\\கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் குற்றமே ,அதை ஒருவர் தனது கடையில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்திருப்பதும் குற்றமே . நான் கள்ளச்சாராயம் தயார் செய்யவில்லை .தயார் பண்ணியவர் எனது நண்பர் என்பதால் நானும் கள்ளசாராய விரும்பி என்பதாலும் என் கடையில் வைத்துவிட்டு சென்றார் .நானும் அதை மக்கள் பார்வைக்கு வைத்தேனே தவிர யாரையும் குடிக்க சொல்லவில்லை.அதைப் பார்த்து மக்கள் வாங்கிக் குடித்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று உங்களை கைது செய்த காவல்துறையிடம் கூறுங்கள்.காவல்துறை உங்களை அடித்தது காட்டுமிராண்டித்தனமா?அல்லது நீங்கள் சொன்ன காரணம் மொள்ளமாரித்தனாமா?/// இதுதான் இப்ராஹிமின் கலப்படமில்லாத மொள்ளமாரித்தனம். கள்ளச்சாராரயம் காய்ச்சுவது குற்றம், ஆனால் பொதுவில் இருக்கும் ஒன்றை, பொதுவில் இருக்கும் ஒருவரை விமர்சனம் செய்வது உரிமை. கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் விமர்சனம் செய்வதும் ஒன்றா? இப்ராஹிம் நிர்வாக ரீதியாக சில தவறுகள் செய்திருகிறார் என்று விமர்சனம் வைத்தால் என் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக புகார் கொடுத்து கைது செய்ய வைத்தால் அது உரிமை கோரலா? இப்ராஹிமின் மொள்ளமாரித்தனமா? விமர்சனம் செய்வதும் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் ஒன்றா?

    முகம்மது ஐம்பது வயதுக்கு மேல் ஆறு வயது சிறுமியை மணமுடித்தார் என்பதும் கற்பழித்தார் என்பதும் உண்மைகளே. அவதூறு அல்ல. தோழர் நாத்திகர் என்பதால் விமர்சனம் செய்திருக்கிறார். அது அவர் கருத்து. அது தொடர்பான இடத்தில் அந்த கருத்தைக் கூற அவருக்கு உரிமையுண்டு. இதுவும் வியாபாரத்துக்காக அவர் செய்யும் சமரசமும் ஒன்றல்ல. கடந்த பதிவில் நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். அவர் பிஸ்மி சொல்லி அறுப்பதற்காக வேலையாளை நியமிக்கவில்லை. அவர் நாத்திகராக இருக்கும் நிலையில், வேலையாள் முஸ்லீமல்லாதவருக்கும் பிஸ்மி கூறித்தான் அறுக்க வேண்டும் என வற்புறுத்தினால் அது மொள்ளமாரித்தனம். ஆனால் பெருமான்மையோர் முஸ்லீம்களாக இருக்கும் நிலையில் பிஸ்மி கூறுவதை அனுமதிப்பது மொள்ளமாரித்தனம் அல்ல. அது வியாபாரம், வியாபார தந்திரம், வியாபாரத்துக்கான சமரசம். அந்த சமரசத்தை செய்யாவிட்டால் அவரால் உயிர்வாழ முடியாது. அவர் விரும்பும் தொழிலைச் செய்வது அவருக்கான உரிமை. அவரை வேறு தொழிலை செய்யாலாமே என்று நிர்ப்பந்திக்க எவருக்கும் உரிமையில்லை. ஒருவரின் தனிப்பட்ட கருத்தையும், அவரின் வியாபார உத்திகளையும் இணைப்பது தான் மொள்ளமாரித்தனம்.

    அடுத்து, இப்ராஹிம் கூறிய சில பொய்களை அம்பலப்படுத்தி அதை நிரூபிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தேன். கள்ள மௌனம் சாதித்து விட்டார், ஆனால் கிடைக்கும் சந்துகளிலெல்லாம் தன் கொயபல்ஸ்தனத்தை தொடருகிறார். தோழரின் இணைய நடவடிக்கைகளும் சமூக நடவடிக்கைகளும் அனைவரும் அறிந்தே இருந்தார்கள் என்பதை தெளிவாக விளக்கியிருந்தேன். இதை மறுத்து எதையும் கூறமுடியாத அவர், \\\ஒரு முஸ்லிம் கடை என்பதால் துராப்சாவின் முழுமையான கொள்கைகளை அறியாததால் ,அவரது இணையதள நடவடிக்கை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்ததால் அவர்கள் அறிவிக்கவில்லை.அவரைப் பற்றிய உண்மைகள் ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை.நண்பர் உறவினர் என்ற காரணமாக இருக்க வேண்டும். அல்லது நமக்கு ஏன் இந்த ஊர் வம்பு என்று பொது நலனில் அக்கறை கொள்ளாதவர்களாக இருந்திருக்க வேண்டும்/// இதில் அவர் கூற வருவது என்ன? தெரியும் ஆனா தெர்ர்ர்ர்ர்ரியாது. யார் இவர்? கடையநல்லூரைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று யூகம் செய்து அதையே வாதமாக வைக்கிறார். தோழரின் கடையில் கறி வாங்கும் அனைவருக்கும் தெரியும் அவர் நாத்திகர் என்பது. அவர் இணையப் பயன்பாட்டை தொடங்கிய பின் பலருக்கும் அவர் அறிமுகம் செய்திருக்கிறார். பல ஆண்டுகளாக நண்பர்களிடமும் வாய்ப்பு கிடைத்தவர்களிடமெல்லாம் தன் அரசியல் மதவியல் கருத்துகளை பிரச்சாரம் செய்திருக்கிறார். இவர் கூறுகிறார் சிலருக்கு தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை என்று. இப்ராஹிமுக்கு சோதிடம் தெரிந்திருந்தால் அதை அவரோடு வைத்துக் கொள்ளட்டும். இங்கு அவர் யூகமாக கூறுவதை நிரூபிக்க வேண்டும்.

    தோழரின் இணைய தள நடவடிக்கைகளை அறித்த ஒரு ஜமாத் வட்டார ஜமாத்துக்கு தகவல் கொடுத்தது என்ற இப்ராஹிமின் தகவலை அது பொய் என்று நிரூபித்திருந்தேன். இதற்கு இப்ராஹிமின் பதில் என்ன? அவருக்கு மறுப்பு சொல்வதற்கு யூகமாகக் கூட ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், தான் சொன்னது பொய்யான தகவல் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் காணாமல் போய்விடும் என்று கருதக் கூடாது.

    சந்தடி சாக்கில் முஸ்லீம்களால் இழுத்துச் செல்லப்பட்டார் என்று நாங்கள் கூறியது போன்ற ஒரு பில்ட்அப்பை செய்திருந்தார் இப்ராஹிம், அப்படி யாரும் சொல்லவில்லை என்று கூறியிருந்தேன். அவர் கொடுத்த பில்டப்பை திரும்ப பெற்றுக் கொள்கிறாரா? இல்லையா? தகவல் எதுவும் இல்லை. அதுமட்டுமா? உண்மை கம்யூனிஸ்டுகள் ஜமாத் மீது அவதூறு செய்தி பரப்புகிறார்கள் என்றொரு பச்சைப் பொய்யையும் கூறியிருந்தேன். அதற்கு எதிராக பகிரங்கமாக சவால் விடுத்திருந்தேன். இதற்கு கடையநல்லூர்காரர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லமாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். கடையநல்லூர்காரர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் இப்ராஹிம் என்ன சொல்கிறார்? போகிறபோக்கில் சேறு வீசிச் செல்வது தான் அவரின் வழக்கம் தானே?

    அடுத்து பிஸ்மி சொல்லி அறுப்பது ஒரு சடங்கு தான் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியிருந்தேன். முயலுக்கு மூன்று கால் என்று கூற வேண்டும் என்பதற்காக வழுக்கி விழுந்து பதில் கூறியிருந்தார் இப்ராஹிம். \\\கணேசர் படம் போட்ட ஒரு பொருள் கீழே விழுந்து அதை அவர் தொட்டு முத்தினால் அதை முதலாளியான முஸ்லீம் மறுக்க முடியுமா? ////மறுக்க முடியாது ///என்றால் படத்தை முத்திய இந்துவுக்குக்கும் அதை அனுமதித்த முஸ்லீமுக்கும் இடையில் ஏற்பு இருக்கிறது என்று கூற முடியுமா?//// கூறமுடியாது/// தோழர் ஹலால் செய்வதற்காக வேலையாளை வைக்கவில்லை, தோழரின் தகப்பனாரும் அதற்காக வேலையாளை வைக்கவில்லை. உதவி செய்வதற்காகவே வைத்திருந்தனர். தகப்பனாருக்கு முறையாக ஹலால் செய்வதில் ஏற்று இருந்தது, தோழருக்கு அதில் கருத்தியல் ரீதியாக ஏற்பு இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம். கணேசன் படத்தை தொட்டு முத்துவதைதோ, அல்லது அந்த படத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேலையைத் தொடங்குவதையோ ஒரு முஸ்லீம் முதலாளி ஏற்பில்லாத நிலையிலும் மறுக்க மாட்டாரோ; அதுபோல்தான் தோழரும் வேலையாள் பிஸ்மி கூறினாலும் கூறாவிட்டாலும் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார். அதேநேரம் நுகர்வோர் பெரும்பாலும் முஸ்லீம்கள் என்பதால் வியாபாரம் எனும் வகையில் சாய்தளம் அமைப்பது போல் அவருக்கு தகுந்ததும் ஆகும். அதையே வேறொரு விதத்தில் பார்த்தால், யாராவது ஒருவர் வந்து நீ முஸ்லீமா என்று ஒரு வேளை தொழுது காட்டு அதன் பின்னர் நான் தொடர்ச்சியாக கறி வாங்குகிறேன் என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? காறி உமிழ்ந்து அவரை வெளியே அனுப்பியிருப்பார் தோழர். இதுதான் வியாபாரத்திற்காக செய்யப்படுவதற்கும், கொள்கை அளவில் அதை ஏற்பதற்குமான வித்தியாசம். இதில் என்ன மொள்ளமாரித்தனம் இருக்கிறது?

    அடுத்து, அவதூறான ஒன்றை திரும்பத் திரும்ப கூறிவருகிறார் இப்ராஹிம், \\\ஆண்டவன் பெயரை சொல்லி கோழியை அறுக்கிறார் என்று என்று கேலி செய்பவர்/// அப்படி தோழர் யாரிடமாவது கேலி செய்திருந்தால் வியாபாரம் நடந்திருக்குமா? ஆனால் இந்த பிரச்சனைக்கு முன்னர் வரை கடையநல்லூரில் அதிகம் கோழி வியாபாரம் நடக்கும் முதல் ஐந்து கடைகளில் தோழரின் கடையும் ஒன்று. இது எப்படி சாத்தியம்? தைரியம் இருந்தால் தன் கூற்றை இப்ராஹிம் நிரூபித்துக் காட்டட்டும்.

    மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன். இப்ராஹிம் தான் உறுதி கூறியபடியே விவாதத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். கேள்வியை கண்டு கொள்ளாமல் விடுவது, கேள்விக்கு வேறொன்றை பதிலாக கூறி திசை திருப்புவது போன்றவற்றை தவிர்த்துக் கொண்டு சீரிய முறையில் விவாதம் நடத்த வேண்டும்.

     

  9. பீனிக்ஸ் பறவை ஏப்ரல் 24, 2012 இல் 8:20 பிப #

    நான் இந்த விவாதத்தை தொடர்ச்சியாக பார்த்துவருகிறேன்.சகோ.இப்ராஹிம் பசப்பலான பதில்களையே தருகிறார்,நேர்மையாக பதில் சொல்ல தைரியம் இல்லை.குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நேர்மை இப்ராஹிம் யிடம் இல்லை.நான் அப்படியல்ல நடந்த சம்பவத்தை நேரில் கண்டவன்.துராப்ஷா மீது கோபம் கொண்டவர்களில் நானும் ஒருவன் நானும் தாக்கியிருக்கிறேன் அன்றுமட்டும் காவல்துறை உதவியில்லைன்னா அடித்தே கொன்றுயிருப்பார்கள் .அது தவறு என்று புரியவைத்த நல்லூர்முழக்கத்திற்கு நன்றி ! நடந்த தவறுக்காக துராப்ஷாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஒருவரை விசாரிக்காமல் குற்றவாளி என்று தவறாக தண்டனை கொடுத்ததற்கு ஜமாத்தார்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு தெளபா செய்ய வேண்டும் அதற்கு முன்பாக துராப்ஷாவிடமும் ஜமாத்தார்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏனென்றால் அநீதி இழைக்கப்பட்டவர் மன்னித்தால்தான் அல்லாஹ் மன்னிப்பான் .இது காட்டுமிராண்டித்தனம்தான் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன் .ஏனென்றால் நான் உண்மையான முஸ்லீமாக, ( தவறை ஒத்துக்கொள்ளும் மனிதனாக )வாழ விரும்புகிறேன். சகோ.இப்ராஹிம் எப்படி ?
    தவறை ஒத்துக்கொள்ளவேண்டும்..ஒத்துக்கொள்ள தவறினால் அது இப்ராஹிம் யின் அயோக்கியத்தனம் ! இப்ராஹிம் நேர்மையற்றவர் எனபதை நிரூபிப்பதாகும் .
    நேர்மையும்,நற்பன்பும் இல்லாத ஒருவரிடம் விவாதம் புரிவதால் எந்த பயனும் இல்லை,

    • தஜ்ஜால் ஏப்ரல் 26, 2012 இல் 3:52 முப #

      ///நேர்மையும்,நற்பன்பும் இல்லாத ஒருவரிடம் விவாதம் புரிவதால் எந்த பயனும் இல்லை// சரியாகச் சொன்னீர்கள் பீனிக்ஸ் பறவை!
      இராஹிம், இதுவரை எந்த விவாதத்திலும் நேரடியாக பதில் கூறியதில்லை. யூகிப்புகளை மட்டுமே கூறுவார். அதுதான் சரியென்று வாதிடுவார்… உருப்படியாக எந்த ஆதரத்தையும் முன்வைக்கவும் மாட்டார். ஆனால் நம்மிடம் ஆதாரங்களை முன்வைக்கமுடியுமா என்று சவடால் விடுவார். நாம் ஆதரங்களை முன்வைத்தால், அதில் குறைகாணத் துவங்குவார். நாம் அதற்கும் நெற்றியடியாக பதிலளித்துவிட்டால், நாம் முன் வைத்துள்ள ஆதாரங்களிலிருந்து புதிதாக ஒன்றை யூகிப்பார். அதுதான் சரியென்று வாதிடுவார்…. (மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது)

      • S.Ibrahim ஏப்ரல் 27, 2012 இல் 6:08 முப #

        தச்ச ஆள் ///. நாம் ஆதரங்களை முன்வைத்தால், அதில் குறைகாணத் துவங்குவார். நாம் அதற்கும் நெற்றியடியாக பதிலளித்துவிட்டால், நாம் முன் வைத்துள்ள ஆதாரங்களிலிருந்து புதிதாக ஒன்றை யூகிப்பார். அதுதான் சரியென்று வாதிடுவார்….////
        உங்களது இந்த பின்னூட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்

    • S.Ibrahim ஏப்ரல் 27, 2012 இல் 6:06 முப #

      பீனக்ஸ் பறவை ,///ஏனென்றால் நான் உண்மையான முஸ்லீமாக, ( தவறை ஒத்துக்கொள்ளும் மனிதனாக )வாழ விரும்புகிறேன். சகோ.இப்ராஹிம் எப்படி ?
      தவறை ஒத்துக்கொள்ளவேண்டும்..ஒத்துக்கொள்ள தவறினால் அது இப்ராஹிம் யின் அயோக்கியத்தனம் ! இப்ராஹிம் நேர்மையற்றவர் எனபதை நிரூபிப்பதாகும் .///
      உண்மையான முஸ்லிம் என்றால் உங்களது உண்மையான பெயருடன் வந்திருக்க வேண்டும் .எது தவறு? எது அயோக்கியத்தனம் என்பதில் உங்களது கருத்துதான் சரியாகி விடுமா? உங்களது பக்கக் வாத்தியத்தைப் பார்த்தாலே உங்களது சுயரூபம் வெளிபடுகிறதே ,இதிலே தனக்குத்தானே உண்மையான முஸ்லிம் என்று அடை மொழி வேறா?இங்ஙனம் பேசுவதற்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
      கள்ள பெயரில் வருவதுதான் நற்பண்பா?இதற்கு முன்பும் பீனிக்ஸ் பறவை என்ற பெயரை பார்த்துள்ளேன் .அவற்றிலிருந்து நீங்கள்; உண்மையான் முஸ்லிம் என்ற நிலையில் எழுதியதற்கு ஆதாரம் காட்டுங்கள்,

      • பீனிக்ஸ் பறவை ஏப்ரல் 29, 2012 இல் 8:10 பிப #

        சகோ;இப்ராஹிம்.
        நான் கண்ட,கேட்ட செய்திகளை பதிவு செய்துள்ளேன் உங்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது .அன்று பள்ளியில் அவரை விசாரிக்காமல் தண்டனை கொடுத்தது தவறு என நல்லூர் முழக்கம் சுட்டிக்காட்டினார் ஆமாம் ! விசாரிக்காமல் தண்டனை கொடுத்து தவறுதான் என்பதை ஒத்துக்கொண்டுள்ளேன் இதிலென்ன தப்பு .அன்று நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவன் நான் .நீங்கள் பார்த்திருக்கீர்களா ?நீங்கள் நேரில் காணத சம்பவத்துக்காக இங்கே விவாதம் செய்துகொண்டிருக்கின்றீர்களே இது மதவெறியல்லவா ? உண்மைக்கு புறம்பாக பொய் சொல்வதும், ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்து பொய் சொல்வதுதான் இஸ்லாமா ? யாரை காப்பாற்ற இத்தனை பிரயத்தனம் படுகிறீர்க ள் . அந்த அயோக்கிய ஜமாத்தை ( ஜக்கிய ஜமாத்தை) காப்பாற்றவா ? இது அயோக்கியத்தனமல்லவா ?
        நான் எனது உண்மையான பெயரில் வருகிறேன் ஆனால் துராப்ஷாவுக்கு நடந்த காட்டுமிராண்டித்தனம்போல் எனக்கு நடக்காது எனபதற்கு உங்களால் உத்திரவாதம் தர முடியுமா ?
        என்னிடம் இருப்பது மத நம்பிக்கை .
        உங்களிடம் இருப்பது மதவெறி !
        தவறு செய்யாத ஒருவனை தண்டித்த ஜமாத்தை காப்பாற்ற துடிக்கும் உங்கள் செயல் காட்டுமிராண்டித்தனமே ,மதவெறி பிடித்த மோடிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் .

    • S.Ibrahim ஏப்ரல் 28, 2012 இல் 8:59 பிப #

      செங்கொடி ,உங்களது காட்டுமிராண்டித்தனம் பற்றி கேட்டிருந்தீர்கள் .முன்பு நான் செங்கொடியுடன் விவாதித்த பொழுது ரெட் டாக் என்பவர் காட்டுமிராண்டித்தனமாக் தனது கருத்தை வைத்தார். என்னை நேரில் கண்டால் பாய்ந்துபிராண்டிவிடுவது போலவே அவரது கருத்து இருந்தது.மேலும் கீழ் கண்டவைகளுக்கு விளக்கம் தாருங்கள்
      ///நாங்கள் நடத்தும் கூட்டங்களில் எங்களை விமர்சித்து வெளியீட்டை கொண்டு வந்து எங்களிடமே விற்றுச் செல்வதற்கு எங்கள் ஸ்டால்களில் நாங்கள் அனுமதி அளித்திருக்கிறோம். எங்கள் ஆசான்களின் மீது செய்யப்பட்ட அவதூறுகளுக்கு ஆதாரப்பூர்வமாக நாங்கள் பதிலளித்துள்ளோமேயன்றி, எங்கள் பலத்தைக் காட்டி ஒருபோதும் நாங்கள் காட்டுமிராண்டித் தாக்குதல் கொடுத்ததில்லை. எங்காவது அப்படி நடந்ததாக இப்ராஹிமால் நிரூபிக்க முடியுமா?///
      செங்கொடி கேட்டார் ,பதில் இதோ
      http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_17.html

      முகிலன் said…
      இதே ம.க.இ.க முன்பொரு காலத்தில் மதுரையில் ஆபாசத்திரைப்படம் போடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று எங்களை அழைத்துச் சென்று அங்கே போனதும் வெறி கொண்டு தியேட்டரின் ப்ரொஜெக்டரை உடைத்து, ஸ்க்ரீனைக் கிழித்து, பிலிமை எரித்து என்று போர்க்கோலம் பூண்ட போது இவர்களை வெறுத்தவன் தான்..

      இவர்களின் எதிர்ப்பு நியாயமானதாக இருந்தாலும் அதைப் பதிவு செய்யும் முறை எப்போதுமே அராஜகமாகத்தான் இருக்கும்.

      அகநாளிகை
      அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அந்த நிகழ்ச்சியில் ம.க.இ.க. அராஜகத்தையும், அவர்கள் பேசிய ஆபாச வார்த்தை மற்றும் கூட்டம் நடத்த விடாமல், ஆரம்பிக்கும் முன்பாகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விதம் அவர்கள் மேல் எனக்கு 25 வருடங்களாக இருந்த கருத்தை உடைத்துவிட்டது. ஒரு கருத்தை அராஜகம் செய்தும், ஆபாச வார்த்தைகளுடன் கோஷமிட்டும் தகர்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ம.க.இ.க. தோழர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 25 வருடங்களாக இவர்கள் எதையுமே சாதிக்காமல் வெற்று கோஷங்களும், ஆபாசங்களுமாக குடித்துவிட்டு கோஷம் போட்டதினால்தானே என்னவோ அதிகாரத்திற்கு எதிராக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களை நம்பி, வெற்றுப்பரபரப்புக்கு ஓடும் கூட்டம் மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. அப்படியொரு வசை வார்த்தைகளையும், ஆபாச நிகழ்வையும் வேறெந்த கூட்டத்திலும் நான் கண்டதில்லை. ‘தன்வினை தன்னைச் சுடும்‘ என்பார்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ம.க.இ.க. விஷயத்தில்.

      K.R.அதியமான் said…
      ///அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? ///

      உண்மை தமிழன் அண்ணே,

      கம்யூனிசம் நடைமுறையில் அராஜகத்திற்க்கும், சர்வாதிகாரத்திற்க்கும். ஃபாசிசத்திற்க்கும் தான் இட்டுச்செல்லும் என்று பலரும் பல காலமாக சொல்லிவருகிறோம். இன்னும் நீங்க அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. கம்யூனிச தியரி எல்லாம் கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும். நடைமுறையில் மிக கொடூரமான மனித உரிமை மீறல்களை புரியாமல் கமயூனிசத்தை அமலாக்க முடியாது.

      பார்க்கவும் :

      http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

      ஒரு வகையில் இது ஒரு மதவாதம் தான். மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம். எதிரி என்று ஒரு குழுவை அல்லது இனத்தை அல்லது ‘வர்கத்தை’ சித்தரித்து, அவர்களை ஒழித்தால் பொன்னுலகம் அமைக்கலாம் என்ற வெறியை பரப்புவது. oversimplified ‘us Vs them syndrome’.

      வர்க்க எதிரி, எதிர் புர‌ட்சியாள‌ர், அல்ல‌து ம‌க்க‌ளின்
      எதிரி என்று யாரை வேண்டுமானாலும் முத்திரை
      குத்தி எந்த‌ நேர‌த்திலும் ரகசியமாக கைது
      செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப‌ட‌லாம் ; வ‌தை
      முகாம்க‌ளில் அடைக்க‌ ப‌ட‌லாம். கொல்ல‌ப்ப‌ட‌லாம்.
      விசாரனை ம‌ற்றும் வெளிப‌டையான நீதி ம‌ன்ற‌
      வ‌ழ‌க்குக‌ள் கிடையாது. ஹிட்ட‌ல‌ரின் நாசிப்ப‌டைக‌ள்,
      யூத‌ர்க‌ளையும் பிற‌ ம‌க்க‌ளையும் எப்ப‌டி வ‌தை
      முகாம்க‌ளில் அடைத்து கொன்ற‌ன‌ரோ அதே போல்
      ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ர‌ஸ்ஸியாவிலும், சைன‌விலும்
      கொல்ல‌ப‌ட்ட‌ன‌ர். பார்க்க‌ :
      http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part3
      கொடுங்கோல‌ன் ம‌வோவின் ஆட்சியில் திட்ட‌மிட்டு
      கொல்ல‌ப‌ட்ட‌ ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ப‌ற்றி அறிய‌ :
      http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part7
      மேற்கண்டவைகள்;ஐப் படித்து இவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு கொடுத்த லட்சணத்தை தெரிந்து கொள்ளலாம்.
      ////தோழர் நாத்திகர் என்பதால் விமர்சனம் செய்திருக்கிறார். ///
      துராப்சா புரட்சி கம்யுனிஸ்ட் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் ?
      வினவு துராப்சாவை புரட்சி கம்யுனிஸ்ட் என்று அறிமுகப் படுத்துகிறது
      ///முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய சகோதரி தேர்தலில் நின்றபோதும் கூட உறவினர்களையெல்லாம் எதிர்த்து “ஓட்டுப்போடாதே புரட்சி செய்” என்று பிரச்சாரம் செய்தவர்////

      அடுத்து ,நேர்மை என்பது இவருக்கு மட்டுமே தோன்றிய வார்த்தை போல பேசுவார்.இவரது கானொளியில் உள்ள குரல்களை வைத்து அடித்தார்கள் என்று எப்படி கூற முடியும் ?பொதுவாக ஒரு கூட்டத்தில் தவறு செய்தவனை அடியுங்கள் ,அடிடா அவனை என்று பலர் கூச்சல் போடுவது வழக்கம் அது போன்று கூச்சலாக த்தான் இதை கருத முடியுமே தவிர இந்த ஆடியோ கேசட் அடித்ததற்கு ஒருநாளும் சாட்சியாகாது.மேலும் பிற்சேர்க்கையும் கேட்போலியில் சாத்தியமான விசயமே.கேட்போளிக்கு விளக்கமாகத்தான் காணொளி உள்ளது .அவர்கள் அடிக்க திட்டம் போட்டார்கள் ஆனால் அவர்களைவிட அவருக்காக வருந்தியவர்களே அதிகம் என்பது மிக தெளிவாக கூறுகிறார். இதை மழுப்பல் என்று கூறும் செங்கொடி துராப்சா மதம் மாறியதால் அவருக்கு அடிவிழவில்லையே என்ற வருத்தம் உள்ளது போல தெரிகிறது.
      அப்புறம் போலி பத்வாவை மறைத்து விட்டோமாம் .முதலில் இவர் இஸ்லாத்தினை இவர் அரைகுறையாக விளங்கிக் கொண்டு இங்கே பிதற்றியுள்ளார்.இறைவனை மறுப்பவன் அவனது தூதரை விமர்சிப்பவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டான் என்று நான் கூடவே பத்வா சொல்லுவேன்.எழுதி கேட்டால் எழுதி கொடுப்பேன்.நடைமுறையில் மதரசாவில் பத்வா பெரும் வழக்கம் உள்ளது.பிறகு சிவில் சட்ட சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக காஜியிடம் பத்வா வாங்கியுள்ளார்கள்.கம்யுனிசத்தில் வேண்டுமானால் போலி ,உண்மை இரண்டு என்று இருக்கலாம்.பத்வா ஒன்றுதான்
      ///குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? விசாரிக்காமல் தீர்ப்புக் கூறியது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இதற்கு எங்கே பதில்.///
      விசாரிக்காமல் என்ன தீர்ப்பு சொன்னார்கள்?

      ///தோழர் மீது கூறிய குற்றச்சாட்டு பொய்க் குற்றச்சாட்டு என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. தான் எழுதியதாக ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்தான் எழுதினார் என்பதை நிரூபிக்காமல் தண்டனை வழங்கியது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இதற்கு எங்கே பதில்.///
      அவர் எழுதினாலும் ,எழுதப்பட்டதை வெளியிட்டாலும் குற்றமே .மேலும் அவருக்கு என்ன தண்டனை அளித்தார்களா?கசையடி கொடுத்தார்களா?
      ./// அது வியாபாரம், வியாபார தந்திரம், வியாபாரத்துக்கான சமரசம். அந்த சமரசத்தை செய்யாவிட்டால் அவரால் உயிர்வாழ முடியாது. ////
      இதத்தான மார்க்சிஸ்ட் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் செய்தது? பிறகு அவர்களை ஏன் போலி கம்யுனிஸ்ட் என்று வாதம் ஆட்டம் போட வேண்டும் ?
      ///முகம்மது ஐம்பது வயதுக்கு மேல் ஆறு வயது சிறுமியை மணமுடித்தார் என்பதும் கற்பழித்தார் என்பதும் உண்மைகளே. அவதூறு அல்ல. ///
      கற்பழித்தார் என்ற சொல்லுக்கு இவர் விளக்கம் தரவேண்டும் .முற்காலத்தில் முஹம்மது நபி ஸல் அவர்கள் மட்டுமே இது போன்று திருமணம் செய்தார் என்பதை நிருபிக்க வேண்டும் .முஹம்மது அன்பி[ஸல்] அவர்கள் சபிய்யா[ரலி ]அவர்களை திருமணம் செய்த பொழுது அவருக்கு வயது பதினேழு என்று கூறப்படுகிறது .ஆனால் அவர் அதற்கு முன்பு அவர் இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறார்.அப்படி எனில் சபிய்யா [ரலி] அவர்கள் முதல் திருமணம் எப்போது செய்திருப்பார்?
      உதாரணமாக் அசோகர்
      அசோகர் பற்றிய கீழே உள்ள விக்கிபிடியா குறிப்புகளை பாருங்கள் .அவருக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்லப்படவில்லை.அசோகனின் மகனின் கண்கள் அவரது கடைசி மனைவியை கவர்ந்தது என்றால் வயது வித்தியாசங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.அசோகன் எத்தனை வயதில் அவரது திச்யரக்சா வை மணந்தார் என்றும் அப்போது அவரின் மனைவிக்கு எத்தனை வயது என்றும் சொல்லப்படவில்லை.அதற்கு பிறகும் யாருடைய நடனங்களை எல்லாம் பார்த்தார் என்றும் யாரையெல்லாம் மணந்தார்கள் என்றும் சொல்லப்படவில்லை.
      ////It is also believed that due to the age difference between her and Ashoka, once she attracted towards Kunala, son of Ashok, who was religious in nature and inclined towards Buddhism from his early life. Kunala considered Tishyaraksha as his mother due to her place in theMauryan Empire at the time. After perceiving neglect from Kunala, Tishyaraksha turned so furious that she decided to blind him (it is believed that the eyes of Kunal were attractive and beautiful and that they had originally attracted Tishyaraksha towards Kunala////
      //// It is believed that she was a favourite maid of one of the wives of Ashoka and after the death of this wife, she went to Pataliputra as a great dancer and charmed Ashoka with her dance and beauty. Later, she became his wife and during the later life of Ashoka she medically served him as well.///
      ////கள்ளச்சாராரயம் காய்ச்சுவது குற்றம், ஆனால் பொதுவில் இருக்கும் ஒன்றை, பொதுவில் இருக்கும் ஒருவரை விமர்சனம் செய்வது உரிமை. கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் விமர்சனம் செய்வதும் ஒன்றா? ///
      விமர்சனம் செய்தாராம் ,எது விமர்சனம் ?எது அவதூறு ?லூது ஒரு லூசு என்று குரானை விமர்சனம் செய்வது போல காட்டி பைபிளில் உள்ள கதையையும் இணைத்து நிர்வாண படம் போட்டு காட்டுவது விமர்சனமா? ஒரு மதத்தினரை புண் படுத்தும் நோக்கமா? அவ்வாறு புண்படுத்துதல் இபிகோ படி குற்றமே .விமர்சனம் டாஸ்மாக் என்றால் இவர் செய்த அவதூறு கள்ளச்சாராயமே .அதில் மாற்று கருத்து இருக்க முடியாது
      ///பல ஆண்டுகளாக நண்பர்களிடமும் வாய்ப்பு கிடைத்தவர்களிடமெல்லாம் தன் அரசியல் மதவியல் கருத்துகளை பிரச்சாரம் செய்திருக்கிறார். இவர் கூறுகிறார் சிலருக்கு தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை என்று. இப்ராஹிமுக்கு சோதிடம் தெரிந்திருந்தால் அதை அவரோடு வைத்துக் கொள்ளட்டும். இங்கு அவர் யூகமாக கூறுவதை நிரூபிக்க வேண்டும்.
      இப்ராஹிமுக்கு சோதிடம் தெரிந்திருந்தால் அதை அவரோடு வைத்துக் கொள்ளட்டும். இங்கு அவர் யூகமாக கூறுவதை நிரூபிக்க வேண்டும்.///
      துராப்சா முஹம்மது நபி[ஸல்]அவர்கள் ஆயிசா [ரலி]திருமணம் பற்றி இவர் விமர்சித்தது தோழர் கடையில் கறி வாங்கும் அனைவருக்கும் தெரியும் என்பதை செங்கொடி நிருபிக்க வேண்டும்.
      \\\ஆண்டவன் பெயரை சொல்லி கோழியை அறுக்கிறார் என்று என்று கேலி செய்பவர்/// அப்படி தோழர் யாரிடமாவது கேலி செய்திருந்தால் வியாபாரம் நடந்திருக்குமா? ////
      நேரடி கேலி செய்தால் உங்கள் பாணியில் காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கும் .அதை மறைமுகமாக் செய்ததுதான் மொள்ளமாரித்தனம் என்கிறேன்.
      ////ஆனால் இந்த பிரச்சனைக்கு முன்னர் வரை கடையநல்லூரில் அதிகம் கோழி வியாபாரம் நடக்கும் முதல் ஐந்து கடைகளில் தோழரின் கடையும் ஒன்று. இது எப்படி சாத்தியம்? தைரியம் இருந்தால் தன் கூற்றை இப்ராஹிம் நிரூபித்துக் காட்டட்டும்.///
      இதில் எதை நான் நிருபித்துகாட்ட்வேண்டும் என்கிறார்
      நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மேனி ஹிந்துக்கள் உள்ள பகுதியில் கணேசருக்கு பூஜை செய்தால்தான் கோதுமை மாவு வாங்குவோம் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ள மக்கள் ,கடை உரிமையாளர் ஆன முஸ்லிம் தனது வியாபாரத்திர்க்காக் ஒரு ஹிந்துவை வைத்து பூஜை செய்து விற்பது ஒரு பக்கமும் கல்லை வணங்குகிறார்கள் என்று விமர்சிப்பது ஒருபக்கமுமாக இருந்தால் அது மொள்ளமாரித்தனமே ,என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதைத்தான் துராப்சா செய்தார்.
      முஸ்லிம்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு அந்த முஸ்லிம்களின் ஈடு இணையற்ற தலைவர் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் படம் போட்டதற்கே பெரிய கலவரங்கள் நடந்துள்ளதை அறிந்து கொண்டு,குரான் கருத்தை இழிவு படுத்த வேண்டும் என்பதற்க்காக பைபிளையும் அதனுடன் இணைத்து நபியின் ஒரு ஆபாசம் படமும் போட்ட ஒரு செய்திக்கு தனது முகநூலில் ஒருவர் இணைப்பு கொடுக்கிறார் என்றால் அது மொள்ளமாரித்தனமே !
      இந்திய தேசிய கொடியை ஒரு பாகிஸ்தானி அவமாரியாதை செய்ததை வீடியோ எடுத்து இந்தியாவில் இருந்து கொண்டே எல்லோரும் காணும் முகமாக வைத்தால்.அவரை போலீசார் கைது செய்வதும் விசாரணையில் அடித்தாலும் ,அடிப்பதாக மிரட்டினாலும் சரியான நடவடிக்கையே . மக்கள் அவனை தாக்க முற்பட்டாலும் ஏற்புடைய செயலே .அதை காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னால் அது செங்கொடியின் மொள்ளமாரித்தனமே !
      நேர்மையின் சிகரம் என்று தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் செங்கோடியே பதில் தாருங்கள்

      • தஜ்ஜால் மே 1, 2012 இல் 4:13 முப #

        @இப்ராஹீம்
        \\நாம் முன் வைத்துள்ள ஆதாரங்களிலிருந்து புதிதாக ஒன்றை யூகிப்பார். அதுதான் சரியென்று வாதிடுவார்\\ என்று நான் எழுதிருந்தததற்கு, இராஹீம் ஆதாரம் கேட்டார். இதோ இன்னொரு ஆதாரம். நேரில் கண்டதாகக் கூறும் ஃபீனீக்ஸ்பறவையின் வாக்குமூலம் இருந்தும், இப்பொழுது ஆடியோ கேசட் போலி என்று மனம்போன போக்கிற்கு யூகிக்கிறார். //இந்த ஆடியோ கேசட் அடித்ததற்கு ஒருநாளும் சாட்சியாகாது.மேலும் பிற்சேர்க்கையும் கேட்போலியில் சாத்தியமான விசயமே.// இதுதான் இப்ராஹீமின் வாடிக்கை.

  10. தஜ்ஜால் ஏப்ரல் 29, 2012 இல் 4:25 முப #

    @ இப்ராஹீம்,
    ’ஆரம்பத்தை நோக்கி’ தொடரில் உங்களது பின்னூட்டங்களே இதற்கு எடுத்துக்காட்டு. இபொழுதும் கூட, நேரடியாக பதிலளிப்பதைவிட்டுவிட்டு ஃபீனிக்ஸ்பறவையை குறைகண்டு கொண்டிருக்கிறீர்கள்

    • S.Ibrahim மே 1, 2012 இல் 5:44 முப #

      தச்ச ஆள் ,ஆரம்பத்தை நோக்கியில் எனது பின்னூட்டங்களில் நீங்கள் சொல்லுது போல் ஒன்றும் இல்லை .நீங்களே ஒன்றை மட்டும் எடுத்துகாட்டுமாறு வேண்டுகிறேன்

  11. S.Ibrahim மே 1, 2012 இல் 5:41 முப #

    பீனிக்ஸ் பறவை ///என்னிடம் இருப்பது மத நம்பிக்கை .
    உங்களிடம் இருப்பது மதவெறி !///
    ///
    விசாரிக்காமல் தண்டனை கொடுத்து தவறுதான் என்பதை ஒத்துக்கொண்டுள்ளேன் இதிலென்ன தப்பு..///
    கையும்களவுமாக் மாட்டிக் கொண்ட பிறகு என்ன விசாரணை வேண்டிக்கிடக்கு?
    உங்களது மதநம்பிக்கைக்கு மாற்றமாக அவர்கள் என்ன தணடனை கொடுத்தார்கள்?
    உண்மையான முஸ்லிம் என்றால் அநீதியை கரம் கொண்டு தடுக்க வேண்டும் .இயலவில்லை என்றால் சொல்லால் தடுக்க முயற்சிக்க வேண்டும்.இல்லையெனில் வெறுத்து ஒதுங்க வேண்டும்.ஆனால் இஸ்லாமிய எதிரியிடம் ,இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் தளத்தில் சரணடைந்தது அது எந்த வகையிலான உண்மையான இஸ்லாம் ?

  12. nallurmuzhakkam மே 2, 2012 இல் 3:11 பிப #

    மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் இது. இப்ராஹிம் நேர்மையானவர் என்றோ சரியான வாதங்களை சான்றுகளை எடுத்து வைத்தால் அவர் உண்மைகளை உணர்ந்து கொள்வார் என்றோ நான் எதிர்பார்த்து இந்த விவாதத்தை தொடங்கவில்லை. வாதம் என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துகளைப் பார்த்து மதம் காரணமாக கொஞ்சம் விலகலில் இருக்கும் நேர்மையான சிலரும் உண்மைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் தான். இப்போது அவர் கூத்தடிக்கத் தொடங்கி விட்டார் என்பதாலும் இனி அது கொஞ்சம் கொஞ்சமாக பரிதாபகரமாக மாறும் என்பதாலும் நான் நினைத்தபடியான பாதையில் இப்ராஹிம் சென்று கொண்டிருக்கிறார் என்பதாலும் மிக்க மகிழ்ச்சி.

    இப்ராஹிம்,

    இவர் இதுவரை செய்து வரும் வாதங்கள் எதற்கும் எந்தவித ஆதாரங்களையும் தரவில்லை. மாறாக அவர் நினைக்கும் கற்பனைகளை மட்டுமே கூறி வருகிறார். கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் குறித்த அவர் வாதங்களுக்கு தகுந்த ஆதாரங்களை வைக்க வேண்டும்.

    நாங்கள் காட்டுமிராண்டித்தனம் செய்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் கேட்டால் இப்ராஹிமை ஒத்த சிலர் இணையப்பரப்பில் கழிந்திருப்பதை காட்டுகிறார். அங்கு நடந்தது என்ன? கவிதை என்ற பெயரில் மார்க்சிய ஆசான்களை நாக்கூசும் நாராச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார் ஒருவர். அவர் யார் என்பது தெரியும் எங்கிருக்கிறார் என்பது தெரியும் ஆனாலும் யாரும் அவரிடம் சென்று எங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று வெறித்தனம் எதையும் காண்பிக்கவில்லை. உண்மைகளை எழுதினாலே உயிரினும் மேலான என்று வசனம் பேசிக் கொண்டு காட்டிமிராண்டித்தனம் செய்பவர்களே! கவனியுங்கள். பதிலுக்கு ஒரு கட்டுரை எழுதி அப்படி எழுதியிருப்பது சரியா? தவறா? எந்த அடிப்படையில் அப்படி எழுதப்பட்டது என்பதை விளக்கி கட்டுரைதான் எழுதினோம். அந்தக் கட்டுரைக்காக எங்களை விமர்சிக்கவே கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்தக் கூட்டத்திலும் சென்று அமைதியாக விளக்கம் கேட்டோமேயன்றி வேறொன்றும் செய்யவில்லை. அதைக்கூட பொறுக்க முடியாமல் மீண்டும் அழுக்கு வார்த்தைகளை வீசி செருப்பை உயர்த்திக் காட்டியது ஆபாசக் கவிதை எழுதிய அதே பெண்மணிதான். அவர் சென்ற அதே வழியில் தானே நாங்களும் செல்ல வேண்டும். அது தான் அங்கு நடந்தது. அந்தக் கூட்டத்தை வீடியோ எடுத்தார்களே, இப்ராஹிமே, உங்களுக்கோ அல்லது நீங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் கழிந்திருப்பவர்களுக்கோ நேர்மை துளியூண்டாவது மிச்சமிருந்தால் அந்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்யட்டும் பார்த்துவிடலாம் யார் கூறுவது உண்மை என்பதை. தங்கள் கருத்துக்கு எதிரானவர்கள் என்பதால் வெட்கமற்று பொய்கள் கூறித்திரிவதை, அதையே ஆதாரமாய் காட்டுவதை தங்களைத் தாங்களே ஊனப்படுத்தும் ஈனத்தனம் என்பதை எப்போது இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்?

    சோசலிச ஆட்சி குறித்து கற்பனைக் கதைகளை எழுதி வெளியிட்டவர்களே நாங்கள் காசு வாங்கிக் கொண்டு அவ்வாறு எழுதினோம் என்று கூறிவிட்டார்கள். மட்டுமல்லாது அவர்கள் கூறியதெல்லாம் பொய் என்று ஆதாரப்பூர்வமாகவே நிரூபித்து பல்லாயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. பல்லியை அடித்தால் வால் மட்டும் சிறிது நேரம் துடித்துக் கொண்டு கிடக்குமே அதுபோல சோசலிச அரசின் மீதான அவதூறுகள் எனும் பல்லி ஆதாரம் எனும் தடி கொண்டு தலையில் உண்மை எனும் அடிவாங்கி எப்போதோ உயிரிழந்துவிட்டது. அந்தோ பரிதாபம்! இப்ராஹிம் போன்ற வால்கள் மட்டும் துடித்துக் கொண்டிருக்கின்றன.

    தோழர் துராப்ஷா தாக்கப்பட்டாரா? இல்லையா? தாக்கப்பட்டார் என்பதற்கு நான் ஆதாரங்களை வைத்திருக்கிறேன். கண்ணியமாக விசாரிக்கப்பட்டார் என்றால் அதற்கான ஆதாரங்கள் எங்கே? ஆதாரமாக நான் வைத்த கேட்பொலியில் அடிக்காதீர்கள் என்கிறார்கள் சிலர், அப்படித்தான் அடிப்போம் என்கிறார்கள் சிலர். இதைவிட அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக வேறெதுவும் கூறிவிட முடியாது. ஆனால் இப்ராஹிம் கூறுகிறார், கேட்பொலியில் பிற்சேர்க்கையும் சாத்தியமாம். மூக்கறுந்து அழுது கொண்டிப்பவர்கள் இப்படித்தான் உளற முடியும். அந்த கேட்பொலி துணுக்கு பொதுவில் தான் இடப்பட்டிருக்கிறது எவரும் தரவிறக்கிக் கொள்ள முடியும். வெட்கம், மானம், சூடு, சொரணை என்று ஏதேதோ சொல்லுவார்களே அப்படி ஏதாவது ஒன்று மிச்சமிருந்தால் அதில் பிற்சேர்க்கை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கட்டும். இயலாதவர்கள் பின்னால் சொரிந்து கொண்டு பிற்சேர்க்கை சாத்தியம் என்று பிதற்றிக் கொள்ளலாம்.

    இன்னும் சற்று விரிவாக இதைப் பார்க்கலாம், நிகழ்வுக்கு முதல் நாள் குடும்பத்தார்கள் செய்த மிரட்டலில் ஓரிடத்தில் அவர்கள் கூறுகிறார்கள், “கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது, அவர்கள் வெறி கொண்டு இருக்கிறார்கள்” என்று; நிகழ்வில் வெறிகொண்ட கூட்டத்தின் இடையிலிருந்து எழும்பும் குரல்களோ, “அடிக்காதீர்கள்” என்றும், “அப்படித்தான் அடிப்போம்” என்றும் கேட்கிறது; நிகழ்வுக்கு பல நாட்கள் கழிந்து நடந்த மீள்சேர்ப்புக்(!) கூட்டத்தில் மழுப்பலாக கூறுகிறார்கள், “உங்களை அடிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சிலர் வந்திருந்தாலும், உங்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்று வருந்தியவர்களே அதிகம்” என்று. இவைகளைக் கொண்டு நேர்மையுள்ள ஒரு மனிதனால் அங்கு நிகழ்ந்தது குறித்து என்ன முடிவுக்கு வரமுடியும்? ஆனால் இப்ராஹிம் கண்ண்ண்ண்ண்ணியமாக விசாரித்தார்கள் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இவைகள் வார்த்தைகள் அல்ல, அவருக்கு மதவெறி எந்த அளவுக்கு முற்றிப் போய் இருக்கிறது என்பதை அளக்கும் முகத்தலளவுக் குடுவை. இப்ராஹிம் மீள்சேர்ப்புக்(!) கூட்டத்தின் உரையாடலைத்தான் தன் துருப்பாக எடுத்துக் காட்டுகிறார். அதில் அடித்தார்கள் என்று நேரடியாக கூறப்படவில்லை, அதேநேரம் அடிக்கவில்லை என்றும் கூறப்படவில்லை. மாறாக, அடித்தார்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அடிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே கூறுகிறார்கள். அடிப்பதற்கான குற்றநோக்கம் (மோட்டிவ்) அவர்களுக்கு இருந்திருந்ததா? ஆம். இருந்திருந்தது, தன்னுடைய நம்பிக்கையை விமர்சித்தவனை சும்மா விடக்கூடாது என்று உணர்ச்சியை தூண்டும் விதமாக பரப்புரை செய்யப்பட்டிருந்தது, பிரசுரம் வினியோகிக்கப்பட்டிருந்தது. அடிப்பதற்கான சூழல் இருந்ததா? ஆம். எந்த விசாரணையும் இல்லாமல் மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் அழைத்து வரப்பட்டு மன்னிப்பு என்பதைக் கூட உச்சரிக்க முடியாத அளவுக்கு கூச்சலும் குழப்பமுமான சூழல் தாக்குவதற்கு ஏதுவானதே. இனி அடுத்த வாக்கியத்தைப் பாருங்கள். அவர்களில், உங்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என வருந்தியவர்கள் இருந்தார்களாம். எப்படி நேர்ந்து விட்டது? இப்ராஹிம் கூற்றுப்படி அங்கு நடந்தது கண்ண்ண்ண்ணியமான விசாரணை என்றால் இப்படி நடந்துவிட்டதே என்று ஏன் வருந்த வேண்டும்? ஆக, அடிக்கவேண்டும் என்று வந்திருக்கிறார்கள். அதனால் வருந்தும்படியான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்ன? அங்கு தாக்குதல் நடந்திருக்கிறது என்பது தான். எங்கள் பகுதியில் ஒரு கதை சொல்வார்கள். இப்ராஹிம், மூஸா, குந்தானி காக்கா ஆகிய மூவர் சேர்ந்து ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். முதல் தொழுகையாக ஜும்மா தொழப்படுகிறது, அதில் .. .. .. .. இப்ராஹீ அவ மூஸா என்று சூராவை முடித்து ருக்ஊ வுக்கு செல்வார்கள். அப்போது குந்தானி காக்கா அதிர்ச்சியாகி தொழுகையை இடையில் நிறுத்துகிறார். செலவு செய்தது நாங்கள் மூன்று பேர். இரண்டு பேர் பெயரையும் கூறிவிட்டு என்னுடைய பெயரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள், என்னுடைய பெயரையும் சேர்க்கவேண்டும் அல்லது அந்த இருவர் பெயரையும் நீக்க வேண்டும் என்று அதிருப்தி தெரிவிக்கிறார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் குந்தானி காக்கா சமாதானமடையவில்லை. கடைசியில் .. .. .. .. இப்ராஹீ அவ மூஸா குந்தானி காக்கா என்று சூராவை முடித்தார்கள். இந்தக் கதையில் வரும் குந்தானி காக்கா மனோநிலையில் தான் இப்ராஹிம் இருக்கிறார்.

    அடுத்து போலி ஃபத்வா, \\\இறைவனை மறுப்பவன் அவனது தூதரை விமர்சிப்பவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டான் என்று நான் கூடவே பத்வா சொல்லுவேன்.எழுதி கேட்டால் எழுதி கொடுப்பேன்.நடைமுறையில் மதரசாவில் பத்வா பெரும் வழக்கம் உள்ளது.பிறகு சிவில் சட்ட சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக காஜியிடம் பத்வா வாங்கியுள்ளார்கள்/// அப்பாவி இப்ராஹிம் எல்லோரையும் அப்பாவி என்று கருதிக் கொள்வது தான் பிரச்சனை. இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று யார் வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். ஆனால் இங்கு காஃபிர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். மணவிலக்கு செய்யப்பட்டிருக்கிறது. மையவாடியில் இடமில்லை எனப்பட்டிருக்கிறது. ஊர் விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவைகளை எல்லாம் செய்வதற்கு ஏதோ ஒரு இப்ராஹிமுக்கு அதிகாரம் இருக்கிறதா? பிதற்றுவதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? முதலில் முபாரக் பள்ளியில் காஃபிர் என்று அறிவித்தார்களே அதை போலி என்று நாங்கள் கூறினோமா? ஏனென்றால் எங்களுக்குத் தெரியும் ஏதோ ஒரு இப்ராஹிம் உளறுவது போல யாரோ உளறிக் கொட்டுவதெல்லாம் ஃபத்வா அல்ல என்று. நடைமுறையில் மதரசாவில் பெரும் வழக்கம் உள்ளதென்றால் ஏன் சட்டச் சிக்கல் வருகிறது? ஏன் மீண்டும் காஜியிடம் போய் வாங்க வேண்டும்? ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது நாம் கூறியது செல்லுபடியாகாது என்று. அதனால் தான் காஜியிடம் சென்றிருக்கிறார்கள். முபாரக் பள்ளியில் ஃபத்வா கொடுக்கப்பட்ட பிறகு நெஞ்சு வரை தாடி வைத்திருக்கும் எவருக்கும் தெரியவில்லை மத்ரஸாவில் ஃபத்வா கொடுக்கும் பெரும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்று. அதனால் தான் உலமாக்கள் சபைக்கு அனுப்ப முயற்சித்திருக்கிறார். ஃபத்வா கொடுத்த காஜிக்கும் தெரியவில்லை யார் வேண்டுமானாலும் ஃபத்வா கொடுக்கலாம். தேவைப்பட்டால் இப்ராஹிம் கூட எழுதிக் கொடுப்பார் என்றும் அவருக்கு தெரியவில்லை. அதனால் தான் சம்மதக் கடிதம் வாங்கிக் கொண்டு வாருங்கள் எதிர் ஃபத்வா தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்ராஹிமுக்கு மட்டும் எங்கிருந்தோ பிய்த்துக் கொண்டு வஹீ வந்திருக்கிறது யார் வேண்டுமென்றாலும் ஃபத்வா கொடுக்கலாம் என்று. முதலில் நீங்கள் ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என்றார், இப்போது யார் வேண்டுமானாலும் ஃபத்வா கொடுக்கலாம் என்கிறார். பாவம் இப்ராஹிம்! அவரும் ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார், ஆனால் நேர்மைக்கும் அவருக்குதான் எட்டாப் பொருத்தமாக இருக்கிறது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? கடந்த பதிவில் இதை கண்டு கொள்ளாமல் கடந்து விட்டார் சுட்டிக் காட்டியதும் இப்போது பதில் கொடுத்திருக்கிறார். இதோ அந்த உலக மகா பதில் \\\விசாரிக்காமல் என்ன தீர்ப்பு சொன்னார்கள்?/// விசாரித்தார்களா இல்லையா? தீர்ப்பு கூறப்பட்டதா? இல்லையா? இது தெரியாமல் தான் இப்ராஹிம் விவாதிக்க வந்தாரா? மேலே சொல்கிறார் யார் வேண்டுமானாலும் தீர்ப்பு கூறலாம் என்று. அடுத்த பத்தியிலேயே என்ன தீர்ப்பு சொன்னார்கள் என்கிறார். ஒருவேளை ”கையபுடுச்சு இழுத்தியா?” வசனத்தை இவர்தான் வடிவேலுவுக்கு கற்றுக் கொடுத்திருப்பாரோ. இப்ராஹிம் இப்படி கேட்பவராக இருக்கிறார் என்றால் அவர் என்ன மனோநிலையில் இருந்திருக்க முடியும்? யாருக்கு தண்டனை கொடுத்தார்களோ அவரிடம் அவர் செய்த குற்றம் குறித்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. இது இப்ராஹிம் உட்பட அனைவருக்கும் தெரிந்தது தான். விசாரிக்காமலேயே தீர்ர்புக் கூறுவது மொள்ளமாரித்தனம் தான் என்பதும் இப்ராஹிம் உட்பட அனைவருக்கும் தெரிந்தது தான். என்றால் விசாரிக்காமல் தீர்ப்புக் கூறியது மொள்ளமாரித்தனம் என்று ஏன் இப்ராஹிமால் ஒப்புக் கொள்ள முடியவில்லை? ஏனென்றால் அதை தடுப்பதும், நியாயமற்று இப்படி வக்காலத்து வாங்க தூண்டுவதும் மதம் என்ற ஒன்றுதான். நேர்மையாக ஒப்புக் கொண்டால் மதம் களங்கப்பட்டுவிடுமே. யப்பா.. நல்லா காப்பாத்துறாங்கையா மதத்த..

    குற்றத்தை நிரூபிக்காமலேயே தீர்ப்பு சொல்லியது மொள்ளமாரித்தனம் என்றால் எழுதினாலும் எழுதியதை வெளியிட்டாலும் என்கிறார். திரு காது கேளாத ஐயா இப்ராஹிம் அவர்களே, அந்த கேட்பொலியில் எழுதியதை ஒத்துக் கொள் என்று கத்துகிறார்களே அதற்கு பொருள் என்ன? எழுதினாலும், எழுதியதை வெளியிட்டாலும் என்பதெல்லாம் நடந்துவிட்ட காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தும் சமாளிப்புகளே. ஏனென்றால், தோழர் மீது சுமத்தப்பட்ட குற்றம் அவர் எழுதினார் என்பது தான். அதை நிரூபிக்க வக்கற்றுப் போனதாலும், தாக்குதல் தொடுத்ததை நியாயப்படுத்த வேறு வழியில்லாததாலும் செய்யப்படும் மொள்ளமாரித்தனம் தான் எழுதினாலும் எழுதியதை வெளியிட்டாலும் என்பது. சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதிப்படுத்தாமல் ஏனடா தண்டனை கொடுத்திர்கள்? என்று கேட்டால் வெளியிட்டது தான் என்று புதுக் குற்றத்தை சுமத்துகிறார்கள். ஐயா நியாயவான்களா? தோழர் மீதான குற்றம் என்ன? அவர் எழுதினார் என்பதா? வெளியிட்டார் என்பதா? சுட்டி கொடுத்தார் என்பதா? சுட்டி கொடுத்தார் என்பது தான் குற்றம் என்றால் எழுதினார் என்பது பொய்க் குற்றச்சாட்டு. முதலில் அதை ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு தான் அடுத்த கேள்வி வருகிறது. கொடுக்கப்பட்ட தண்டனை எழுதியதற்கா? சுட்டி கொடுத்ததற்கா? என்று.

    அடுத்து, எது விமர்சனம்? எது அவதூறு? எனும் இப்ராஹிமின் கேள்விக்கு வருவோம். லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம். அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கதை குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இடம் பெற்றுள்ளது. குரானில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? பழைய ஏற்பாட்டில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? என்பது தெளிவாக பிரித்தறிவித்து காட்டப்பட்டிருக்கிறது. குரானில் இருப்பதை பழைய ஏற்பாடு என்றோ, பழைய ஏற்பாட்டில் இருப்பது குரானில் என்றோ மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? குரானிலோ, பழைய ஏற்பாட்டிலோ இல்லாத ஒன்றை புதிதாக புனைந்து குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இருக்கிறது என்று பொய்யாக கூறப்பட்டுள்ளதா? உள்ளது உள்ளபடி கூறாமல் திரித்து வேறொன்றாக கூறப்பட்டுள்ளதா? கற்பனையான இடைச் செருகல்கள் இருக்கிறதா? இயல்பான பொருளுக்கு மாற்றமாக தவறான பொருள் கூறப்பட்டுள்ளதா? பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? என்ன தான் பிரச்சனை அந்தக் கட்டுரையில்? கிருஸ்தவ தளங்களில் தேடினால் இது போன்ற ஆயிரம் படங்கள் கிடைக்கும். அந்தக் கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது குரானில் இருக்கும் அறைகுறையான கதையை பழைய ஏற்பாட்டின் உதவியுடன் முழுமைப்படுத்தி கட்டுரையாளர் தன்னுடைய தேடலாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார் அவ்வளவு தான். இவ்வளவு தெளிவாக செய்யப்பட்டிருப்பது விமர்சனமா? அவதூறா? பதில் கூறும் திறன் உங்களில் யாருக்காவது உண்டா? எந்த சிந்தனையும் இல்லாமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு புண்பட்டுவிட்டது, புண்பட்டுவிட்டது என்று குதியாட்டம் போட்டால் .. .. .. போங்கடே.. போய் மருந்து போடுங்க, இல்லையின்னா புண் சீழ் வைத்து விடப் போகிறது.

    கள்ளச்சாரம் காய்ச்சுவதும் பொதுவில் இருக்கும் ஒன்றை விமர்சனம் செய்வதும் எப்படி ஒன்றாகும் என்பதை அடுத்த பதிப்பில் இப்ராஹிம் விரிவாக விளக்கவிருப்பதால் அதை படிப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல, தேசியக் கொடியை எரிப்பது குற்றம் என்று இந்திய குற்றவியல் சட்டம் கூறுகிறது. விமர்சிப்பது குற்றம் என்று எந்த சட்டம் கூறுகிறது? இப்படி உதாரணத்திற்கு மேல் உதாரணமாக அடுக்கிக் கொண்டே போகாமல் உண்மையைப் பேச வருமாறு இப்ராஹிமை அழைக்கிறேன்.

    பிஸ்மி சொல்லி அறுப்பது ஒரு சடங்கு, அது கொள்கையோடு உராயும் அளவுக்கு முதன்மைத் தனமானது அல்ல. இதை பல எடுத்துக் காட்டுகளுடனும், பல கேள்விகளுடனும் நிரூபித்திருக்கிறேன். இவைகளில் எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல், கேள்விகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, ஏரோப்பிளேன் இரும்பு லாடத்தில் தான் ஓடுகிறது என்பது போல் பிஸ்மி சொல்வதும், கணேசனுக்கு பூஜை செய்வதும் ஒன்று என்று திரும்பத் திரும்ப கூறிவருகிறார் இப்ராஹிம். எனவே, பிஸ்மி கூறுவதும் கணேசனுக்கு பூஜை செய்வதும் எந்த விதத்தில் ஒன்று என்பதை இப்ராஹிம் விளக்காதவரை இது குறித்து அவர் எழுதும் எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை.

    \\\இப்ராஹிமுக்கு சோதிடம் தெரிந்திருந்தால் அதை அவரோடு வைத்துக் கொள்ளட்டும். இங்கு அவர் யூகமாக கூறுவதை நிரூபிக்க வேண்டும்./// துராப்சா முஹம்மது நபி[ஸல்]அவர்கள் ஆயிசா [ரலி]திருமணம் பற்றி இவர் விமர்சித்தது தோழர் கடையில் கறி வாங்கும் அனைவருக்கும் தெரியும் என்பதை செங்கொடி நிருபிக்க வேண்டும்./// கேள்வி கேட்டது உங்களிடம் முதலில் நீங்கள் நிரூபியுங்கள் பின்னர் எனக்கானதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    \\\\\\ஆண்டவன் பெயரை சொல்லி கோழியை அறுக்கிறார் என்று என்று கேலி செய்பவர்/// அப்படி தோழர் யாரிடமாவது கேலி செய்திருந்தால் வியாபாரம் நடந்திருக்குமா?////நேரடி கேலி செய்தால் உங்கள் பாணியில் காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கும் .அதை மறைமுகமாக் செய்ததுதான் மொள்ளமாரித்தனம் என்கிறேன். ////ஆனால் இந்த பிரச்சனைக்கு முன்னர் வரை கடையநல்லூரில் அதிகம் கோழி வியாபாரம் நடக்கும் முதல் ஐந்து கடைகளில் தோழரின் கடையும் ஒன்று. இது எப்படி சாத்தியம்? தைரியம் இருந்தால் தன் கூற்றை இப்ராஹிம் நிரூபித்துக் காட்டட்டும்./// இதில் எதை நான் நிருபித்துகாட்ட்வேண்டும் என்கிறார்/// ஆண்டவன் பெயரைச் சொல்லி அறுக்கிறார்கள் என்று தோழர் கேலி செய்கிறார் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறினார் இப்ராஹிம். அதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கூறினால் கேள்வியை இரண்டாக பிரித்து மேலே ஒரு சமாளிப்பு, கீழே ஒரு சமாளிப்பு. என்னா ஒரு குயுத்தி, .. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ.. இப்ராஹிம் நேரடியாக எச்சரிக்கிறேன். உங்களது இந்த கேவலப்பட்ட உத்திகளையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு நேர்மையுடன் விவாதிக்க முன்வாருங்கள்.

    அடுத்து, முகம்மது கற்பழித்தார் என்பதில் கற்பழிப்பு என்பதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார் இப்ராஹிம். கலவி, கற்பழிப்பு என்பதிற்கு இடையிலுள்ள பேதம் என்ன? கலவி என்பது இருவரும் கலவி குறித்து அறிந்திருந்து விருப்ப உடன்பாட்டுடன் ஈடுபடுவது. கற்பழிப்பு என்பது ஒருவருக்கு விருப்பமில்லாமலோ, ஒருவருக்கு அது பற்றிய அறிதல் இல்லாமலோ இருக்கும் நிலையில் பிரிதொருவர் தன்னுடைய சுய விருப்பத்திற்கு ஆட்பட்டு ஈடுபடுவது. இதில் முகம்மது ஆறு வயதில் ஆய்ஷாவை திருமணம் செய்தார் என்பதும், ஆய்ஷாவின் ஒன்பது வயதில் முகம்மதின் ஐம்பதிற்கும் அதிகமான வயதில் வீடு கூடினார் என்பதும், அந்த நேரத்தில் ஆய்ஷா பொம்மைகளுடன் தன் வயதையொத்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் அறிந்ததே என்றால் நிகழ்ந்த அந்த உறவுக்கு என்ன பெயரிட்டு அழைப்பது? முகம்மது தான் முதன் முதலில் குழந்தைத்திருமணம் செய்தார் என்று யாருமே எங்குமே கூறவில்லை. கேள்வியெல்லாம் இனி எதிர்காலத்தில் தோன்றும் அத்தனை மனிதனுக்கும் சேர்த்து முகம்மதே முன் மாதிரியாக இருக்கும் தகுதியுடைய ஒருவர் என்று கூறப்படும் நிலையில் முகம்மது குழந்தைத் திருமணம் செய்தது சரியா என்பது தான். இது இந்த விவாதத்தோடு தொடர்பற்ற பகுதி தான் ஆனாலும் இதை தொடங்கியது இப்ராஹிம் தான். எனவே எது கேள்வியோ அதற்குத்தான் பதிலளிக்க வேண்டும். கேட்கப்படாத இடத்தில் கேள்வியை உருவாக்கி பதிலளிக்கக் கூடாது.

    அடுத்து இந்த விவாதத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய அசோகர் குறித்த வரலாற்றுச் செய்திகளை அரும்பாடுபட்டு கண்டுபிடித்து வெட்டி ஒட்டியதற்கு இப்ராஹிமுக்கு நன்றி கூறியே தீர வேண்டும். அடுத்து அவரது வழக்கமான திருகு தாளங்களுக்கு எடுத்துக் காட்டு தர வேண்டுமல்லவா? வியாபார நோக்கில் அனைவராலும் செய்யப்படும் ஒன்றை வியாபார உத்தி என்பதா? மொள்ளமாரித்தனம் என்பதா? இந்தக் கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதிலைப் பாருங்கள், \\\இதத்தான மார்க்சிஸ்ட் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் செய்தது? பிறகு அவர்களை ஏன் போலி கம்யுனிஸ்ட் என்று வாதம் ஆட்டம் போட வேண்டும்?/// அவர்களை போலி கம்யூனிஸ்ட்கள் என்று கூறுவதற்கு வண்டி வண்டியாக காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த காரணங்களுக்கு இந்த விவாதத்தோடு என்ன உறவு? \\\////தோழர் நாத்திகர் என்பதால் விமர்சனம் செய்திருக்கிறார். /// துராப்சா புரட்சி கம்யுனிஸ்ட் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் ? வினவு துராப்சாவை புரட்சி கம்யுனிஸ்ட் என்று அறிமுகப் படுத்துகிறது/// ஒவ்வொரு முறையும் நான் தோழர் என்று தான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதன் பொருள் அவர் புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் நீடிக்கிறார் என்பது தான். தோழரை நாத்திகர் என்று கூறினால் என்ன? எங்கள் தோழராக கூறினால் என்ன? அதில் இந்த விவாதத்துக்கான பங்களிப்பு என்ன? இதற்குத்தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பார்களோ

    எனவே, இப்ராஹிம் தன் கூத்தடிப்புகளை மேலும், மேலும் தொடர்ந்து செய்து, தெளிய வைத்து, தெளிய வைத்து அம்பலப்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • S.Ibrahim மே 5, 2012 இல் 5:59 முப #

      செங்கொடி ,கம்யுனிசத்தின் அசலை வெளிப்படுத்தியதும் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளி துள்ளி குதிக்கறார்.துராப்சா தாக்கப்பாட்டார் என்று இவர் வைத்த கேட்பொலியும் காணொளி யும் துராப்சா தாக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரம் என்பதே எனது கூற்று.///அடிடா அவனை என்று பலர் கூச்சல் போடுவது வழக்கம் அது போன்று கூச்சலாக த்தான் இதை கருத முடியுமே தவிர இந்த ஆடியோ கேசட் அடித்ததற்கு ஒருநாளும் சாட்சியாகாது.///பிற்சேர்க்கை என்றதும் ரத்தம் கொதித்த அவர் இதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.தனது சகா மாட்டிகொண்டார் என்றால் இவர் ஓடோடி வந்து அவரை காப்பாற்ற முயற்சித்து இருக்க வேண்டும்.அதற்கு கையாலாகவிட்டால் குறைந்தபட்சம் அங்குள்ள ஒருவரைக் கொண்டு அவர்தாக்கபடுவதையாவது ரகசியமாக வீடியோ எடுத்திருக்க ஏற்பாடு செய்திருக்கக் வேண்டும்.அதற்கு இயலவில்லை என்றால் வாய் பொத்தி மவுநியாகிவிடவேண்டும்.இல்லையெனில் துராப்சா என்னைதாக்கினார்கள் என்று கூறியதை பதிவு செய்திருக்க வேண்டும் .எதுவும் செய்யவில்லை.அதையெல்லாம் செய்வதை விட்டு விட்டு கீபோட்டை தட்டிக் கொண்டிருப்பதே இவரது கடுமையான போராட்டம் .இவரை நம்பி யாராவது இவரது கொள்கைக்கு போனால் ,ஒருவேளை அவர் தாக்கப்பட்டால் ,பெயர் மாற்றவே சோம்பேறியான இவர் தடவி கொடுக்கக் கூட வரமாட்டார்.இணையதளத்தில் இருந்து கொண்டு தாக்கப்பட்டது மொல்லுமாரிதனமா?கொள்ளுமாரித்தன்மா?என்று என்னிடம் விவதிக்கத்தயாரா? என்று சவால் விட்டுகொண்டிருப்பார்.பொதுவாகவே கேட்பொலியை விட காணொளி தான் தாக்கப்பட்டதற்கு அனைவரும் ஒப்புக்கொள்ளும் சரியான ஆதாரம் .ஆனால் இவர் வைத்த கானொளியில் அவர் அடிக்கபடவில்லை என்பதற்கு தெளிவான ஆதாரம் இருக்கிறது.இதைவிட நான் வேறு என்ன ஆதாரம் வைக்க வேண்டும்?கேட்பொலியில் அடிங்க ,அடிக்காதிங்க என்று குரல்கள் ஒலிப்பது தாக்கப்பட்டதற்கு ஆதாரம் என்று செங்கொடியும் அவரது செல்லக் கிளிகளும் தான் நமப் வேண்டும். அடிங்க அடிக்காதிங்க என்ற குரல்கள் வைத்தே ஒருவர் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் என்று என்ன அடிப்படையில் கூறுகிறார் எனபது புரியவில்லை.பொதுவாக ஆவேசமான ஒரு கூட்டத்தில் இது போன்று கூச்சல்கள் எழவே செய்யூம் .அடிக்காதீர்கள் என்று ஒரு தரப்பு சொன்னால் அப்படித்தான் அடிப்போம் என்னநீ செய்துடுவாய் என்று வீம்புக்காக மறு தரப்பு சொல்லும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்றே ஆனால் தக்கபப்ட்டதாக கூறப்படும் நபர் சொன்னாலே உண்மையாக கொள்ளமுடியும் .மற்றபடி இந்த கேட்பொலி தாக்கப்பட்டதற்கு ஆதாரம்ஆகாது.காணொளி தாக்கப்படவில்லை என்பதற்கு சரியான் ஆதாரமாக் இருப்பதால் நான் தனியாக ஆதாரம் வைக்க வேண்டியதில்லை.செங்கோடியே அவர் பக்கத்தில் கோல் போட்டுவிட்டார் .அவர் காணொளி அவருக்கு எதிராக உள்ளதை அறிந்து எல்லா ஊரிலும் உள்ள உளுத்து போன பழைய பன்னாஸ் கதையை சொல்லி அவரே அவர் முதுகை சொரிந்துல்லார்.அடித்துவிட்டதாக எங்கோ இருந்து மூக்கை சிந்தி கொண்டு மாரை அடித்து ஒப்பாரிவைக்கிறார்.
      ///இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று யார் வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். ஆனால் இங்கு காஃபிர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். மணவிலக்கு செய்யப்பட்டிருக்கிறது. மையவாடியில் இடமில்லை எனப்பட்டிருக்கிறது. ஊர் விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவைகளை எல்லாம் செய்வதற்கு ஏதோ ஒரு இப்ராஹிமுக்கு அதிகாரம் இருக்கிறதா? ////
      இஸ்லாத்தினை நான் மூழ்கி குளித்துவிட்டேன் என்று சொல்லக் கூடிய செங்கொடிக்கு காபிர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதா என்ன ?அல்லாஹ்வையும் அவனது தூதர் அவர்களையும் நிராகரித்துவிட்ட பிறகு காபிர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டுமாம்? இஸ்லாம் என்ன சாதி என்று நினைத்துக் கொண்டாரா? இல்லை முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தாலே முஸ்லிம் என்று சாகும் வரை நிலைத்திருக்கும் என்று நினைகிறாரே ,என்னை முஸ்லிமாகவே மரணிக்க செய் என்று எத்தனை துஆக்கள் உள்ளதை இவர் அறிந்திருக்கவில்லையா?குரானுக்கும் ஹதித்களுக்கும் கட்டுப்பட்டவர் நிராகரிப்பவராக இருக்க முடியாது.இறைவனையும் அவனது தூதரையும் நிராகரித்தவர் குரானுக்கும் ஹதிதுக்கும் கட்டுப்பட்டவராக இருக்க முடியாது.முஸ்லிமாக இருக்க முடியாது.காபிராகத்தான் இருக்க வேண்டும்.கம்யுனிஸ்ட் உறுப்பினர் அட்டையை கிழித்து எறிந்தவர் எப்படி கம்யுனிஸ்ட் ஆக இறுகக் முடியும் ? தங்களை கம்யுனிஸ்ட் என்று கூறி பல போராட்டங்களை நடத்தி இரு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தவர்களை இவர் போலி கம்யுனிஸ்ட் என்று சொல்லுவதற்கு உரிமை இருக்கிறதாம் .எந்த முகம்மது நபி[ஸல்] அவர்களை நிராகரித்தாரோ ,அந்த முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தந்த வழியில் செய்யப்பட திருமணத்தையும் நிராகரித்து விட்டார் என்றே பொருள் கொள்ள முடியும் .ஆக அவர் அரசுவுவின் பதிவு அலுவலகத்தில் இவரது திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டியதுதானே .எந்த முஹம்மது நபி[ஸல்] அவர்களை நிராகரித்தார்களோ அந்த முகம்மது நபி [ஸல்] அவர்கள் கற்றுத்தந்த வழியில் அடக்கம் செய்யப்படும் மையவாடியையும் நிராகரித்து விடவேண்டியதுதானே ,செங்கொடி போர்த்தி செம் மணலில் மையவாடியை தேடிக் கொள்ள வேண்டியதுதானே .ஊர்விலக்கம் செய்யப்பாட்டால் வழக்கு தொடர்ந்து அவர்தான் நியாயத்தை பெறுக் கொள்ளலாமே .இது என்ன கம்யுனிஸ்ட் நாடா ?நியாயம் கிடைக்காமல் போவதற்கு?ஆக அவர்கள் முதலில் ,மார்க்க சொல்லித்தந்தபடி இறைவனையும் அவன் தூதரையும் நிராகரித்தவரை அவன் தானாகவே காபிர் ஆகிவிட்டாலும் அனைவரும் அறியும் வண்ணம் அவரை காபிர் என்று பத்வா மூலம் அறிவித்துள்ளார்கள் .இப்படி ஒரு ஜமாஅத் அறிவித்தாலே அவருடன் மற்றவர்கள் இஸ்லாமிய உறவை முறித்துக் கொள்வார்கள்.இஸ்லாமிய ரீதியாக இந்த பத்வா போதும் .அரசு ரீதியாக டவுன் காஜி யின் பத்வாவையும் வாங்கியுலார்கள் .உங்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் ,பிறை பார்க்கப்பட்டால் ஜமாத்திளிருந்து தக்பீர் சொல்லி நாளை பெருநாள் என்று அறிவித்துவிடுவார்கள்.டவுன் காஜி யின் அறிவிப்பைஎல்லாம் எதிர் பாக்கமாட்டார்கள்.ஆனால் அரசு ,டவுன் காஜியின் அறிவிப்பை எதிர்பார்த்தே அரசு விடுமுறை தினத்தை அறிவிக்கும் .பெரும்பாலும் அது பெருநாளுக்கு மறு நாளாகவே இருக்கும் என்பதை அடிக்கடி பார்த்து வருகிறோம்.
      ////தீர்ப்பு கூறப்பட்டதா? இல்லையா? இது தெரியாமல் தான் இப்ராஹிம் விவாதிக்க வந்தாரா? மேலே சொல்கிறார் யார் வேண்டுமானாலும் தீர்ப்பு கூறலாம் என்று. அடுத்த பத்தியிலேயே என்ன தீர்ப்பு சொன்னார்கள் என்கிறார். ஒருவேளை ”கையபுடுச்சு இழுத்தியா?” வசனத்தை இவர்தான் வடிவேலுவுக்கு கற்றுக் கொடுத்திருப்பாரோ. ////
      இரண்டு சாட்சிகளுடன் பிறை பார்த்தாலே போதும் .தமிழகம் முழுவதும் பெருநாள் தொழுகை நடந்துவிடும்.அரசுகாஜி அறிவிக்காவிட்டாலும் சரி அரசு விடுமுறை அறிவிக்காவிட்டாலும் சரி .பெருநாள் தொழுகை நடந்துவிடும். அதைப்போலவே அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்தாலே அவர் காபிர் தான் .அதைத்தான் ஜமாஅத் அறிவித்தது.அதில் தீர்ப்பு ஒன்றும் இல்லை.அவருக்கு ஏதாவது தண்டனை கொடுத்தாலே தீர்ப்பு ஆகஇருக்க முடியும் .ஆனால் அவர் முஸ்லிமகளின் விசாரணைக்கோ தீர்ப்புக்கோ அப்பாற்பட்டவர் ஆக காபிர் ஆகிவிட்டார்.அதைத்தான் பொது அறிவிப்பு செய்துள்ளார்கள்.ஆகவே இந்த பொது அறிவிப்பை ஐயோ தீர்ப்பு சொல்லிவிட்டார்கள் .கபிர் என்று சொல்லிவிட்டார்கள் என்று கூக்குரளிடுவதே மொல்லாமாரித்தனமாகும் ,கொஞ்சம் கூடுதலாக சொல்லுவதென்றால் லூசுமாரித்தனமாகும் .
      ////பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? ///லூசுமாரிதனம் இங்கே அரேங்கேருகிறது.பழைய ஏற்பாட்டில் உள்ளதற்காக ஒப்ப்நோக்க வேண்டிய அவசியமே இல்லை.குர்ஆனில் உள்ளத மட்டுமே முஸ்லிம்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வார்கள்.குர்ஆனில் நபிமார்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் ,அதன் மூலம் மக்களுக்கு உணர்த்தப்படும் படிப்பினைகள் வலியுறுத்தப் படவே அன்றி கதைகலாட்சேபம் நடத்த அல்ல. ஆனால் இங்கே தச்சஆள் முஸ்லிம்கள் சீண்டி பார்க்கவும் அதன் மூலம் அவர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவும் மட்டுமே குரானையும் பழைய ஏற்பாட்டையும் இணைத்து குதர்க்கம் பண்ணியுள்ளார்.
      ///அந்தக் கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது குரானில் இருக்கும் அறைகுறையான கதையை பழைய ஏற்பாட்டின் உதவியுடன் முழுமைப்படுத்தி கட்டுரையாளர் தன்னுடைய தேடலாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார் .///
      குர்ஆனில் மக்களுக்கு தேவையுள்ளது கூறப்பட்டுள்ளது .அதை அரைகுறை கதை என்று லூசுகள் சொல்லுவதை நாங்கள் பதில் சொலவேண்டும் புரியவில்லை.குர்ஆனில் உள்ளதோடு பழைய ஏற்பாட்டையும் இணைத்து நல்லநோக்கில் எழுதப்பட்ட கசசுள் அன்பியா எனும் நூலையே தூக்கி வீசியாகிவிடது.பிறகு இவர் யார் அதை இணைத்து கதை சொல்ல? குரான் கதை சொல்லவில்லை .மக்களுக்கு படிப்பினைகள் ,வாழ்வியல் வழிமுறைகளை மட்டுமே அதன் நோக்கம்
      ///பிஸ்மி சொல்லி அறுப்பது ஒரு சடங்கு, //// ஆயிரம் மடங்கு சொன்னாலும் அது சடங்கு அல்ல .நடத்தை நெறி .இறைவனின் திருப் பெயரால் அருக்கபடாதை சாப்பிடக் கூடாது எனபது எப்படி சடங்காகும் ?
      ஆண்டவன் பெயரை சொல்லி குழந்தையை கற்பளிக்கிறாங்க என்று கடுமையான வார்த்தைகளை சொல்லகூடிய ஒருவர் தனது கடையில் அதே ஆண்டவன் பெயரை சொல்லி கோழி அறுப்பதை தனது பிழைப்புக்காக செய்கிறார் என்றால் அது மொள்ளமாறித்தனமா இல்லையா?அதே நபர் கம்யுனிசத்தை தூக்கி எரித்தால் தான் உங்களது கடையில் கோழிக்கறி வாங்குவோம் என்று சொல்லப்பட்டதும் கம்யுனிசத்தை மையவாடிக்கு அனுப்பினாரா இல்லையா?
      ///சோசலிச ஆட்சி குறித்து கற்பனைக் கதைகளை எழுதி வெளியிட்டவர்களே நாங்கள் காசு வாங்கிக் கொண்டு அவ்வாறு எழுதினோம் என்று கூறிவிட்டார்கள். ///
      அன்று உண்மையை எழுதி விட்டார்கள் .அதற்கு அமேரிக்கா காசு கொடத்தது.இன்று அமெர்க்கா கோர்ட்டில் அதை பொய் என்று சொல்ல ரசியர்கள் காசு கொடுத்திருப்பார்கள் .
      ////பல்லியை அடித்தால் வால் மட்டும் சிறிது நேரம் துடித்துக் கொண்டு கிடக்குமே அதுபோல சோசலிச அரசின் மீதான அவதூறுகள் எனும் பல்லி ஆதாரம் எனும் தடி கொண்டு தலையில் உண்மை எனும் அடிவாங்கி எப்போதோ உயிரிழந்துவிட்டது. அந்தோ பரிதாபம்! இப்ராஹிம் போன்ற வால்கள் மட்டும் துடித்துக் கொண்டிருக்கின்றன./// அன்பர்களே ,உண்மையில் இங்கே சோசலிசம்தான் பல்லி.அதன் வால் செங்கொடி .எனபதை யாரும் மறுக்க முடியாது.உண்மையில் செத்தது சோசலிசம் தான்என்பதை எல்லோரும் அறிவார்கள்.பல்லியை அடிக்க தடி தேவை இல்லை பல்லியை அடிக்கவே தடி தூக்கியவர்கள்,மனிதர்களை ஒடுக்க என்ன செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆனால் ஓன்று தடி கொண்டு தாக்கிய பல்லியின் வால் துடித்ததை நான் பார்க்கவில்லை.ஆக சோசலிசத்தைப் பற்றி வாய் திறந்தால் பல்லி யாக இருந்தால் கூட தடி கொண்டு தாக்குவார்கள் .எச்சரிக்கை.

      பழைய ஏற்பாடு ஒருதடவை உமர்[ரலி] அவர்கள் வாசித்தபொழுது ,அதை நபி [ஸல்]அவர்கள் கண்டித்துள்ளார்கள் .அவ்வாறு இருக்க குர்ஆனில் பாதி கதையுள்ளது மீதி பழைய ஏற்பாட்டில் உள்ளது என்று தச்ச ஆள் கணித்து குரானில கற்பிக்கப்பட்ட ஒழுக்க நெறியினை பழைய ஏற்பாட்டோடு இணைத்து ஆபாசப் படுத்தியது தச்ச ஆளின் எழுத்து காட்டுமிராண்டித்தனம் .அதை தனது முகநூளில் இணைப்பு கொடத்தது துராபசாவின் மொள்ளமாரித்தனம். அதனால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னைகளை குறிப்பிட்ட ஜமாஅத் துராப்சாவை அணுகி முடிவு கண்டதால் துராப்சாவை இழந்த செங்கொடி ,தகுந்த நேரத்தில் துராப்சாவுக்கு உதவாமல் இப்போது கும்மியடித்துக் கொண்டிருப்பது மொள்ளமொள்ள மாரித்தனம் என்பதே நிதர்சனமான் உண்மை.

  13. S.Ibrahim மே 5, 2012 இல் 7:58 பிப #

    ////இது இந்த விவாதத்தோடு தொடர்பற்ற பகுதி தான் ஆனாலும் இதை தொடங்கியது இப்ராஹிம் தான். ////
    இதை நான் துராப்சா முன்பு ஒரு பின்னூட்டத்தில் ஆயிசா[ரலி] திருமணம் பற்றி எழுதியிருந்ததை,குறிப்பிட்டு அவர் எப்படிபட்டவர் என்பதை காட்டுவதற்காக உங்களது கவனத்திற்கு கொண்டு வந்தேன் .நீங்கள் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ///முகம்மது ஐம்பது வயதுக்கு மேல் ஆறு வயது சிறுமியை மணமுடித்தார் என்பதும் கற்பழித்தார் என்பதும் உண்மைகளே. ////என்று தேவை இல்லாமல் அவரது கருத்தை வலியுறுத்தியுள்ளீர்.அவர் எழுதினாரா இல்லையா எனபது மட்டுமே கேள்வி.அனால் அதில் வேட்னுமென்றே மூக்கை நுழைத்து உமது அல்ப புத்தியை காட்டியுள்ளீர்கள்.///எனவே எது கேள்வியோ அதற்குத்தான் பதிலளிக்க வேண்டும். ///ஆம் துராப்சா இப்படிப்பட்டவர் என்பது உண்மை என்று மட்டுமே கூறயிருக்க வேண்டும்,ஆனால் நீங்கள் அதைவிட ஒருபடி மேலேறி கற்பழிப்பே என்று ஊறிய எச்சியை உமிழ்ந்து உள்ளீர்கள்.///கேள்வியெல்லாம் இனி எதிர்காலத்தில் தோன்றும் அத்தனை மனிதனுக்கும் சேர்த்து முகம்மதே முன் மாதிரியாக இருக்கும் தகுதியுடைய ஒருவர் என்று கூறப்படும் நிலையில் முகம்மது குழந்தைத் திருமணம் செய்தது சரியா என்பது தான். ///
    முஹம்மது [ஸல்]அவர்கள் அக்காலத்திற்கும் ஏற்றவர்,இக்காலத்திற்கும் ஏற்றவர் ,அக்காலத்திலும் அவர்கள் முன்மாதிரி .இக்காலத்திற்கும் அவர்களே முன் மாதிரி . முகம்மதுநபி[ஸல்] அவர்கள் முதன்முதலாக திருமணம் செய்யவில்லை என்பதை ஒத்துக் கொண்டீர்கள்.மேலும் அத்திருமணம் தனது மரணத்திற்குப் பிறகும் அதிக கால வாழ்ந்து பாளியல்விவகார சட்டங்களை பெண்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்பதர்க்ககவும் ஆயிசாவை திருமணம் செய்தார்கள் .அதைப் போலவே ஹதித்கள் அதிகமாக் அறிவித்தவர்களில் ஆயிசா[ரலி]அவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள்.
    இங்ஙனம் பால்ய விவாகம் செய்த முஹம்மது நபி[ஸல்]அவர்கள் எதிர்காலத்திற்கும் அந்த முன்மாதிரியை விட்டு சென்றார்களா?என்றால் இல்லை .///கலவி என்பது இருவரும் கலவி குறித்து அறிந்திருந்து விருப்ப உடன்பாட்டுடன் ஈடுபடுவது. //இதையெல்லாம் முன்பே உணர்ந்து பெண்ணின் சம்மதத்தின் பேரிலே திருமணம் என்றும் கன்னிப்பெண்களின் மவுனமே சம்மதம் என்றும் மிகதெளிவாக வழிகாட்டி சென்றார்கள்.முஹம்மது நபி[ஸல்] அவர்களே உலகில் முதன் முதலாக பால்ய விவாகத்தை அறிவுப்பூர்வமாக நாசுக்காக தடை செய்து முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

  14. பீனிக்ஸ் பறவை மே 5, 2012 இல் 9:49 பிப #

    சகோ;இப்ராஹிம்.
    நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அவர் தாக்கப்பட்டது உண்மை . நான் அதை நேரில் கண்டேன்.அப்படியிருந்தும் தாக்கப்படவில்லையென்று எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள் ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்கிறீர்களே ! இதுதான் இஸ்லாமியப் பண்பா? யாரை காப்பாற்ற இத்தனை பொய்கள் .
    செங்கொடிக்கு தகுந்த பதில் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நம்பியிருந்தேன் நீங்கள் என்னான்னா லூசுத்தனமாக உளரிக்கிட்டுயிருக்கின்றீர்கள்.
    ஒருவருடன் வாதம் செய்யும் முன் அந்த வாதம் குறித்து நன்கு தெரிந்துகொண்டு உண்மை நிலவரமென்ன, நடந்த விசயமென்ன,நீங்கள் யாரைப்பற்றி வாதம் செய்கிறீர்களோ அவர் இப்போது எப்படியுள்ளார்,அந்த ஊரிலுள்ளவர்கள் அவரிடம் இப்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பன போன்ற விசங்களை சேகரித்துக்கொண்டு வாதம் செய்தால் நன்றாகயிருக்கும் உண்மையாகவும் இருக்கும்.
    இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால்.அவர் எப்போதுமே தன்னை கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்லிக்கொள்ளவேயில்லை.இவ்வளவு இழப்புக்குப் பின்னும் தன் அரசியல் நடவடிக்கையை குறைத்துக்கொள்ளவேயில்லை.இதற்கு சமீபத்திய உதாரணம்.
    எங்களூரில் இருக்கும் mym இஸ்லாமிய நூலகம் ஒன்றில் மாத மாதம் கருத்தரங்கம் நடைபெறும். அதுபோல் ஏப்ரல் மாதம் 27/04/2012 அன்று நடைபெற்ற கூட்டத்தை துராப்ஷா பொருப்பேற்று தன் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரை அழைத்து வந்து தானே முன்னின்று அந்த கூட்டத்தை நடத்தினார்.கூட்டத்தில் ஜமாத் பெரியவர்கள்,இளைஞர்கள் என்று எல்லோரும் கலந்து கொண்டார்கள் யாரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் என்பது வேறு,மதம் என்பது வேறு என்று புரிந்துள்ளனர்.அவரும் தன் அரசியல் நடவடிக்கையை தன்னை எதிர்த்த மக்களிடத்திலேயே பரப்பியுள்ளார்.அந்த பகுதி மக்கள் அவருடைய அரசியல் கருத்தை அங்கீகரித்துள்ளனர் என்றுதானே அர்த்தம்.
    இந்த உண்மை தெரியாமல் அவர் கம்யூனிஸ்ட் இல்லை நீங்கிவிட்டார் என்று சொல்வது பொய்தானே ! எதையும் வாதம் செய்யும் முன் உண்மையை தெரிந்துகொண்டு வாதம் செய்யுங்கள்.
    அதுசரி சம்பவம் நடக்கும்போது செங்கொடி சவூதியில் இருந்தார் நீங்களோ இங்குதான் இருந்திருப்பீர்கள் என நினைகிறேன் இவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு நேரில் சம்பவத்தை பார்த்தது போல் எழுதுகிறாரே அது எப்படி ? அவருக்கு ஆடியோ ,விடியோ எல்லாம் கிடைத்திருக்கிறது உங்களுக்கு இப்படி எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையா ? அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன தைரியல் வாதிடுகிறீர்கள்? இன்னும் கடையநல்லூரில் எத்தனையோ பேர் செங்கொடியின் பக்கம் உள்ளனர்.துராப்ஷாவை நாம் மிரட்டி ,தாக்கி மீட்டெடுத்தாச்சு ஆனால் இன்னும் நிறைய பேர் இருப்பதுபோல் தெரிகிறது.பார்த்து வாதம் செய்யுங்கள்.இப்ராஹிமே !

  15. nallurmuzhakkam மே 8, 2012 இல் 9:33 முப #

    பூமி தட்டை என்று ஒருவர் கூறுவதாக கொள்வோம். அதை மறுத்து பூமி கோள வடிவமானது என்று செயற்கைக்கோள் படங்களை காட்டி கூறினால்; பூமி தட்டை என நான் நம்புகிறேன், செயற்கைக்கோள் படத்தில் பிற்சேர்க்கை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் கோளவடிவத்திற்கு ஆதாரமாக காட்டிய படத்திலேயே அது பார்ப்பதற்கு தட்டை போலத்தான் அச்சிடப்பட்டிருக்கிறது. எனவே பூமி தட்டை தான் என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினால், நீங்கள் அவரை என்னவென்று அழைப்பீர்கள்? பைத்தியன் என்றா? மடையன் என்றா? நான் இப்ராஹிம் என்று அழைக்க பரிந்துரைப்பேன். ஆகவே..

    இப்ராஹிம் அவர்களே,

    தோழர் துராப்ஷாவின் கருத்துச் சுதந்திரத்தை மீறி காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டார். இது சரியா? தவறா? அது தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். ஆனால் இப்ராஹிம் என்ன செய்திருக்கிறார். கேட்பொலியில் பிற்சேர்க்கை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. கூட்டம் என்று வந்தால் நாலு பேர் சத்தம் போடத்தான் செய்வார்கள் அப்படி சப்தம் போட்டிருக்கலாம். காணொளியில் தாக்கப்பட்டார் என்பதை நேரடியாக கூறவில்லை எனவே அவர் கண்ணியமாக விசாரிக்கப்பட்டார் என்கிறார். ஆகவே இப்ராஹிம் அவர்களே..

    நான் தோழர் துராப்ஷாவை காப்பாற்ற ஏன் வரவில்லை? ஏன் இணையத்தில் மட்டும் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்? இது விவாதத்தில் கேட்க்கப்பட்ட கேள்வியா? அல்லது இந்த விவாதத்தோடு தொடர்புடையதா? கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்புக்கெட்ட இப்ராஹிம் கேட்கப்படாத கேள்விகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? தாக்கப்பட்டார் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார் ஆனால் வெளிப்படையாக கூறமாட்டார். கூறினால் அவரின் மதம் அசிங்கப்பட்டுவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறார். ஆனால், பாவம்! நாம் தான் விடுவதில்லையே.

    காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன். ஒன்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுத்து அவரின் விளக்கங்களை கூற வேண்டும். மறுத்து கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்.

    கேட்பொலியில் பிற்சேர்க்கை சாத்தியமே என்றார். ஏன் அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. அவரால் நிரூபிக்க முடியாத ஒன்றை ஏன் கூற வேண்டும்? முதலில் அதை தெளிவு படுத்தி விடுவேண்டும். அதில் பிற்சேர்க்கை சேர்க்கப்பட்டிருக்கிறது என்கிறாரா? இல்லை என்கிறாரா? சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். முடியவில்லை என்றால் அது மெய்யானது தான் என்பதை உறுதி கூற வேண்டும். போகிற போக்கில் நரகலை எடுத்து வீசிவிட்டுச் செல்ல இது கழிப்பறை அல்ல, அப்படி வீசுபவன் மனிதனும் அல்ல, நான் இப்ராஹிமை மனிதனாக மதிக்க விரும்புகிறேன்.

    அடிங்க, அடிக்காதீங்க என்று ஆவேசக் குரல்கள் எழத்தான் செய்யும் என்பது உண்மையா? அல்லது இப்ராஹிம் செய்யும் யூகமா? இது விவாதம். இங்கு யூகங்களுக்கு இடமில்லை. நான் பொதுவில் வைத்திருப்பது என்னுடைய ஆதாரத்தை என்னுடையை ஆதாரத்தின் மீது யூகம் செய்வதற்கு இப்ராஹிமுக்கு உரிமையில்லை. அது கேலி செய்வது. விவாதத்தில் கேலி செய்பவன் முஸ்லீம் அல்ல என்றொரு ஹதீஸ் இருக்கிறது என்பது இப்ராஹிமுக்கு தெரியுமா? அதிலும் அந்தக் கேட்பொலியில் அப்படித்தான் அடிப்போம் என்பது வீம்புக்காக கூறுவதாகுமா? அடிக்காமல் வீம்புக்காக கூறுவதாக இருந்தால் அடித்தால் என்ன செய்வாய் என்று தான் கேட்டிருப்பார்கள். அடிக்காமலேயே அப்படித்தான் அடிப்போம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மாட்டார்கள். சரி, அடிக்கவேண்டும் எனும் நோக்கத்தில் வந்தார்கள், அடிக்கும் அளவுக்கு வெறியோடு இருந்தார்கள். அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். இல்லையென்றால் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டிய தேவை இல்லையே. இவ்வளவு தூரம் முனைப்பு காட்டியவர்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என்றால் அது எப்படி? அப்படி இப்ராஹிம் நம்ப விரும்புகிறார் என்பதால் நாமும் அப்படித்தான் நம்ப வேண்டுமா? பாவம் இப்ராஹிம்! இஸ்லாத்தை காக்க எவ்வளவெல்லாம் சிரமப்படுகிறார்.

    நான் முன்பே கூறியிருக்கிறேன், அடிப்பதை காணொளியாக பிடித்து ஆதாரமாக போட்டாலும், அப்போதும் ஆடையில் பட்ட அழுக்கை அகற்றுகிறார்களே தவிர அடிக்கவில்லை என்று தான் கூறுவார். ஏனென்றால் அவர் நோக்கம் தாக்கப்படவில்லை என்று கூறுவது தான். என்ன ஆதாரம் கொடுத்தாலும் தாக்கவில்லை என்று கூறுவதற்கு என்ன வழி இருக்கிறது? என்று தான் பார்த்துக் கொண்டிருப்பார். தோழர் துராப்ஷா கூறியதை பதிவு செய்து போட்டால், அது துராப்ஷாவின் குரல் தான் என்பதை எப்படி நம்புவது என்பார், துராப்ஷாவே நேரடியாக அவரின் வீடு தேடிச் சென்று நான் தாக்கப்பட்டேன் என்று கூறினாலும், துராப்ஷா போல ஒருவரை செட்டப் செய்து என்னிடம் பேச வைத்திருக்கிறார்கள் என்பார். அவருடைய நோக்கம் கொடுத்த ஆதாரங்களை பரிசீலித்து நடந்த உண்மையை உணர்ந்து கொள்வதல்ல. இப்போதும் கூட நேரில் கண்ட ஒருவர் தோழர் தாக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார். இவைகளையெல்லாம் இப்ராஹிம் பரிசீலிக்க மாட்டார். ஏனென்றால், அவர் நோக்கம் என்ன கொடுத்தாலும் அதை திரித்து அப்படி நடக்கவில்லை என்று கூறுவது தான். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நேர்மையாக பரிசீலிப்பவர்கள் நடந்தது தவறு என்பதை உணர்ந்து வருந்திக் கொண்டிருக்கிறர்கள்.

    செய்யப்பட்டது தீர்ப்பா? அறிவிப்பா? அப்படித்தான் பொருள் கொள்ள முடியும், இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்று இப்ராஹிம் பலவாறாக புலம்பியிருக்கிறார். அறிவிப்பு என்றால் என்ன? தீர்ப்பு என்றால் என்ன? முதலில் முபாரக் பள்ளியில் செய்யப்பட்டது அறிவிப்பு. அதை யாரும் ஏற்கவும் செய்யலாம் மறுக்கவும் செய்யலாம் மீறவும் செய்யலாம். அப்படி அறிவிப்பு செய்யப்பட்டதை மீறி வியாபரம் நடந்திருந்தது. ஆனால் தீர்ப்பு என்றால் யாராலும் மீறப்பட முடியாதது மீறப்படக் கூடாதது. அதனால் தான் பரசுராமபுரம் பள்ளியில் (போலியாக) தீர்ப்பு கொடுக்கப்பட்டதும் அதை யாரும் மீறவில்லை. அந்த தீர்ப்பின் ஒரு அம்சம் இதை மீறியவர்களும் ஊர்விலக்கம் செய்யப்பட்டவர்களாவார்கள் என்பது. இதற்குப் பெயர் அறிவிப்பா? வேறு யாருக்காவது சென்று பாடம் நடத்துங்கள்.

    அறிவிப்பு என்றால் தெரிவித்தல். யாரைக் கேட்டு அல்லது யார் கேட்டுக் கொண்டதன் பேரில் திருமணம் ரத்து செய்யப்பட்டது? இஸ்லாம் சொல்லும் திருமண வரையரையை ஒருவர் மீறிவிட்டார் என்று நினைப்பதற்கும்; எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரோடும் தொடர்பில்லாத இன்னொருவர் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த இருவரும் கணவன் மனைவி அல்லர் என்று கூறினால் அது அறிவிப்பா? தண்டனையா? இப்ராஹிம் தான் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு மூக்கு ஒழுகித் திரிகிறார் என்றால் அனைவரையும் அப்படியா நினைத்துக் கொள்வது?

    சந்தடி சாக்கில் சிலதை விட்டுவிட்டார் இப்ராஹிம். (பொய்யாக என்றாலும்)குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? அது மட்டுமா? கண்ண்ண்ண்ண்ணியமாக விசாரித்திருக்கிறார்கள் என்று கூறியவர். இப்போது அந்த வார்த்தையையே கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? கண்ண்ண்ணியமாக விசாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்கே? கொடுக்கப்பட்டது அறிவிப்பா? தீர்ப்பா? தண்டனையா? ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எதற்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கிறது? எழுதியதற்கு எதிராகவா? வெளியிட்டதற்கு எதிராகவா? சுட்டி கொடுத்ததற்கு எதிராகவா? இதற்கு எங்கே பதில்? பிஸ்மி சொல்லி அறுப்பதை கேலி செய்தார் என்றார், ஆதாரம் கேட்டதும் காணாமல் போய் விட்டார். சங்கடமான கேள்விகள் என்றால் இப்ராஹிமுக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்து விடுமா?

    \\\லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம். அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கதை குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இடம் பெற்றுள்ளது. குரானில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? பழைய ஏற்பாட்டில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? என்பது தெளிவாக பிரித்தறிவித்து காட்டப்பட்டிருக்கிறது. குரானில் இருப்பதை பழைய ஏற்பாடு என்றோ, பழைய ஏற்பாட்டில் இருப்பது குரானில் என்றோ மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? குரானிலோ, பழைய ஏற்பாட்டிலோ இல்லாத ஒன்றை புதிதாக புனைந்து குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இருக்கிறது என்று பொய்யாக கூறப்பட்டுள்ளதா? உள்ளது உள்ளபடி கூறாமல் திரித்து வேறொன்றாக கூறப்பட்டுள்ளதா? கற்பனையான இடைச் செருகல்கள் இருக்கிறதா? இயல்பான பொருளுக்கு மாற்றமாக தவறான பொருள் கூறப்பட்டுள்ளதா? பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? என்ன தான் பிரச்சனை அந்தக் கட்டுரையில்? கிருஸ்தவ தளங்களில் தேடினால் இது போன்ற ஆயிரம் படங்கள் கிடைக்கும். அந்தக் கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது குரானில் இருக்கும் அறைகுறையான கதையை பழைய ஏற்பாட்டின் உதவியுடன் முழுமைப்படுத்தி கட்டுரையாளர் தன்னுடைய தேடலாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார் அவ்வளவு தான். இவ்வளவு தெளிவாக செய்யப்பட்டிருப்பது விமர்சனமா? அவதூறா? பதில் கூறும் திறன் உங்களில் யாருக்காவது உண்டா?/// எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கிறேன், அத்தனையையும் ஒதுக்கி விட்டு இப்ராஹிம் கூறுகிறார், \\\இங்கே தச்சஆள் முஸ்லிம்கள் சீண்டி பார்க்கவும் அதன் மூலம் அவர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவும் மட்டுமே குரானையும் பழைய ஏற்பாட்டையும் இணைத்து குதர்க்கம் பண்ணியுள்ளார்./// புண்பட்டுவிட்டது என்பார், ஆனால் எப்படி புண்பட்டது என்று கூற மாட்டார். குதர்க்கம் பண்ணுவதாக குறிப்பிடுவார் ஆனால் எப்படி அது குதர்க்கம் என்று கூறமாட்டார். அவர் குதர்க்கம் என்று கூறிவிட்டால் குதர்க்கம். புண் என்றுகூறிவிட்டால் புண்.

    அதாவது இவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்றால், அவர்கள் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அவர்கள் எதை எப்படி வேண்டுமென்றாலும் நம்பிக் கொள்வார்கள், அதை மற்றவர்கள் கேள்வி கேட்காமல் நம்ப வேண்டும். விமர்சனம் செய்தால் அதை புண்படுத்தி விட்டதாக நம்புவார். நாம் எப்படி என்று கேள்வி கேட்டால் பதில் வராது. ஆனால் அதை நம்ப வேண்டும். குரானில் இருப்பது மக்களுக்கு தேவையான அளவு என்று நம்புவார்? அதை நாமும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அட! அப்பரசண்டிகளா! இப்படித்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் நம்புகிறார்கள். அயோத்தியில் குறிபிட்ட இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று. அதை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நம்பிக்கை மட்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது. அடுத்தவர் நம்பிக்கையை கிண்டிக் கிளறி ஆதாரம் கேட்பீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர்தான் பாசிசம். இதற்குப் பெயர்தான் காட்டுமிராண்டித்தனம். இதற்குப் பெயர் தான் அயோக்கியத்தனம். இதற்குப் பெயர் தான் மொள்ளமாரித்தனம். எப்படியப்பா உங்கள் மனது புண்பட்டது என்று கேட்டால் வார்த்தையை மட்டும் மாற்றி குதர்க்கம் பண்ணுகிறார்கள் என்பார்களாம். எப்படி, இவர்களெல்லாம் பாலூட்டி வகையை சேர்ந்தவர்கள் தானே. ஐயமாக இருக்கிறது.

    பழைய ஏற்பாட்டை உமர் படித்தபோது முகம்மது கண்டித்ததாக ஒரு ஹதீஸை எழுதியிருக்கிறார். அது எந்த நூலில் எந்த எண்ணில் இருக்கிறது என்பதை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். சரி விசயத்துக்கு வருவோம். முகம்மது கண்டித்தது பழைய ஏற்பாட்டுக்கு மட்டுமா? புதிய ஏற்பாட்டுக்கும் பொருந்துமா? முகம்மது ஒன்றை செய்யக்கூடாது என்று கண்டித்திருக்கிறார் என்றால் அதை இனி எந்த முஸ்லீமும் செய்யக் கூடாது. ஆனால் இப்ராஹிம் உட்பட தமிழ் முஸ்லீம்கள் போற்றும் அண்ணன்களெல்லாம் பாராயணமாக வைத்திருக்கிறார்களே எப்படி? எல்லோருக்கும் எதிராக இப்ராஹிம் பத்வா எழுதிக் கொடுத்து விடுவாரோ!

    முகம்மது கற்பழித்தாரா என்பது குறித்து கேட்கப்பட்டதாலேயே விளாக்கம் அளிக்கப்பட்டது. \\\கற்பழித்தார் என்ற சொல்லுக்கு இவர் விளக்கம் தரவேண்டும்/// இப்படி கேட்டது இப்ராஹிம் தானே. ஆயிசா மேட்டரை பலமுறை இப்ராஹிம் சுட்டிக்காட்டினார் அதை நான் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் இதைத் தொட்டால் விசயம் வேறு பக்கம் திரும்பும் என்பதால் தான். ஆனால் இப்ராஹிம் விடுவதாக இல்லை. அதனால் தான் முகம்மது கற்பழித்தார் என்பது உண்மை அதை நாத்திகரான எங்கள் தோழர் கூறியது மொள்ளமாரித்தனம் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவதற்காக \\\முகம்மது ஐம்பது வயதுக்கு மேல் ஆறு வயது சிறுமியை மணமுடித்தார் என்பதும் கற்பழித்தார் என்பதும் உண்மைகளே. அவதூறு அல்ல/// என்று குறிப்பிட்டேன். மீண்டும் கூறுகிறேன். முகம்மது கற்பழித்தாரா? அது சரியா? என்பதெல்லாம் இந்த விவாதத்தோடு தொடர்பற்றவைகள். அதுபற்றி பேசவேண்டிய தேவை எனக்கில்லை. ஆனால் இப்ராஹிம் தொடரும் வரை இதை நானும் தொடர்வேன்.

    முகம்மது முன்மாதிரி என்றால் இப்போது குழந்தை திருமணம் செய்யலாமா? ஆம். செய்து கொள்ளலாம். இதில் இஸ்லாத்தில் மறுப்பேதும் இல்லை. இஸ்லாத்தில் அது குற்றமும் இல்லை. இப்ராஹிம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற அவசியமில்லாமல் அதை விட தெளிவாகவே குரான் வசனம் இருக்கிறது. எனவே, இஸ்லாத்தைப் பொருத்தவரை குழந்தையை திருமணம் செய்வது ஏற்புடையதே, குற்றம் அல்ல, ஆனால் எந்த நாட்டின் சட்டமும் அதை அனுமதிக்காது. மற்றப்படி தடை செய்வதிருக்கிறது என்று பசப்புவதெல்லாம் இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள் என்பதற்காகவே.

  16. S.Ibrahim மே 11, 2012 இல் 5:57 முப #

    செங்கொடி ,நீங்கள் கொண்டு வந்த 1 கேட்பொலி ஆதாரம் ;”அடிங்க’ என்று சொன்னார்களா ?இல்லையா ? என்றால் அடிங்க என்று சொன்னார்கள் என்பதற்கு மட்டுமே அதை ஆதாரமாக கொள்ள முடியும் .நியாய சிந்தனையுள்ள நடுநிலையாளர்கள் யாரும் அதை அடித்ததற்கு ஆதாரமாக கொள்ளமாட்டார்கள்.
    2 அடிக்கவில்லை என்பதற்கு காணொளி ஆதாரமாக மிகத் தெளிவாக உள்ளது .அடிக்கவேண்டும் என்ற சிநதனையில் சிலர் இருந்தார்கள் .ஆனால் உங்களின் நிலைக்கு ,அதாவது அடிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டீர்களே என்று பலர் வருத்தப்பட்டதாகா முல்லா தெளிவாகக் கூறுகிரார்..இதைவிட அடிக்கபடவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்?வார்க்கப்பட்ட தோசையை திரித்து மீண்டும் இட்லி பண்ண முயற்சிக்க வேண்டாம்.
    மேலும் அங்கே உள்ள துராப்சாவும் அதை ஆமோதிக்கிறார்..அவர் அடிபட்டிருந்தால் ,சிலர் எனனை அடித்துவிட்டார்கள் ,இருப்பினும் எனக்கு அது பொருட்டல்ல ,நான் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.நான் தாக்கப்பட்டதை விட அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்று நாசுக்காக கூட அவர் தாக்கப்பட்டதை பதிவு செய்திருக்கலாம் ஆனால நடவாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும்? என்றே அவர் அங்கு ஏதும் கூறவில்லை.
    நொண்டி ஆதாரங்கள் நொறுங்கிப்போன பிறகு உதாரணத்தை தேடி பூமியை சுத்திவருகிறார்.என்னிடம் கேட்பொலி இருக்கிறது ,காணொளி இருக்கிறது என்று போட்ட ஆதாரங்கள் பொய்த்துப் போனபிறகு இப்போது பைத்தியம் என்கிறார்.அது யாருக்கு என்பது போக போகத் தெரியும்.கம்யுனிச வெறிபிடித்து பேயாட்டம் போடும் செங்கொடி தனது காட்டுமிராண்டித்தனத்தை நிருபித்து வருகிறார்..இவருடைய உதாரணத்தை அவர்தான் மெச்சிக் கொள்ளவேண்டும்.இவர் படத்தைக் காட்டியது உண்மைதான் .ஆனால் அது வடிவேல் வடிவத்தில் உள்ளது.மக்களிடம் பணத்தை வாங்கி கடவுளை காட்டப்போவதாக காட்டிற்கு அழைத்து சென்று குன்றின் உச்சியை காட்டி அங்கே கடவுள் தெரிவதாக சொல்லி மக்களிடமிருந்து நழுவியது போல ,இவர் நழுவாமல் ,ஒரு சாப்பாடு தட்டு படத்தை காட்டி ,இதுதான் பூமியின் செயற்கைக்கோள் படம் இதை பாருங்கள் ,இது கோளவடிவத்தில் உள்ளது ,என்கிறார்.அங்கு சென்ற நான் நீவிர் காட்டியிருப்பது தட்டு படம் ,அது எப்படி கோள வடிவத்தில் இருக்கும் என்று கூறினால் எனனை பார்த்து பைத்தியம் என்கிறார்.
    ///தோழர் துராப்ஷாவின் கருத்துச் சுதந்திரத்தை மீறி காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டார். இது சரியா? தவறா? அது தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். ///
    ரசியாவில் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் மக்கள் மத்தியில் காணொளி ,கேட்பொலி இல்லாவிட்டாலும் , உங்களது சோஷலிச இருப்பிலிருந்தாவது ஒன்றை காட்டலாம் இல்லையா? உழைக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஹம்மது நபி[ஸல்] அவர்களை போல படம் போட்டதற்கே கலவரம் நடந்ததை அறியமாட்டீர்களா? அவ்வாறிருக்க குர் ஆனில் இலாத ஒன்றை எங்கிருந்தோ கொண்டு வந்து ஏன் விமர்சிக்க வேண்டும்? முஸ்லிம்கள்,கம்யுனிஸ்ட்கள் மத்தியில் வந்து சோஷலிச உங்களது தெய்வம் ஸ்டாலினோடு ,ஸ்டாலின் கதை பாதி தெரிந்து மீதி முடிவு இல்லாவிட்டால் நித்தியானந்தா கதையோடு இணைத்து முடித்தால் அதற்கு பெயர் விமர்சனமா?கருத்து சுதந்திரமா?இல்லை முஸ்லிம்கள் அப்படி ஏதாவது செய்தார்களா? இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டீர்களா? எப்படியும் நாசமாக போகவேண்டியதுதானே ,இஸ்லாத்தை விமர்சித்தால் , அதை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் ,அவர்கள் உணர்வுபூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் ,அதன் மூலம் பிரபல்யமாக வேண்டும் என்பதுதானே உங்களது குறிக்கோள் . எவனும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாங்கள குளிரறையில் உட்கார்ந்து கொண்டு கீபோர்டு தட்டி வேடிக்கையை ரசிக்கிறோம் என்பது பச்சையான மொள்ளமாறித்தனமா ஆகாதா? இவர் கருத்துப்படி , துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் .அப்போது இவரது தோழரை காப்பாற்ற இவர் என்ன செய்தார் ? இவர் தோழர் தாக்கப்படும் போழ்து ஓடோடி வந்து அவருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமா?இல்லையா ? அவர் விசாரிக்க அழைக்கப்பட்டால் அழைத்தவர்களை தொடர்பு கொண்டு அவரது கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்க வேண்டாமா?அவர்களுடன் வாதாடி உமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டாமா?அவாரில்லாமல் தன்னை காப்பாற்ற எடுத்த முயற்சியில் ,தந்திரத்தில் ,கொஞ்சமேனும் தோழருக்காக செய்யவில்லையே , அதுவும் ஒரு மொள்ளமாரித்தனம் என்பதாலே குறிப்பிட்டுள்ளேன் .
    கருத்து சுதந்திரமா?இல்லாத ஒன்றை இட்டு கட்டுவது கருத்து சுதந்திரமா ? ஆதாரம் ,தாரம் இல்லாமல் தவிக்கிறது .இவர் ஆதாரத்துடன் காட்டிவிட்டாராம்.நீவிர் காட்டிய கானொளியில் சிலர் அடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள் என்று தெளிவாக இருக்கிறது..நீவிர் காட்டிய கானொளியில் அவர் கண்ணியமாகவே காட்டப்பட்டுள்ளார். அதை நீவிர் கன்னியாக ,,,,,,இழுத்துக்கொண்டே போனால் எனெக்கென்ன ஆயிற்று?
    ////காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன். ஒன்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுத்து அவரின் விளக்கங்களை கூற வேண்டும். மறுத்து கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்.///
    அடிக்க வேண்டும் என்ற சிந்தையில் இருந்திருக்கிரறாக்கள் என்று முல்லா தெளிவாக கூறுவது தாக்கப்பட்டார் என்று கூறியிருப்பதாக அர்த்தமாம். அதையும் தெளிவாக நிருவியிருக்கிராராம் .கேழ்வரகில் நெய்வடிகிறது,,,,,,,,செங்கொடியும் அவரது செல்லகிளிகளும் தான் நக்கிக் கொள்ளவேண்டும்.மேலும் கேட்பொலியில் பிற சேர்க்கை சாத்தியம் என்றுதான் சொல்லியுள்ளேன் .அதை அவர் மறுத்தது தோடு நில்லாது அதையும் அவரே நிருபித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் நான் அக்கருத்தை வலியுறுத்தாத பொழுது அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஏனோ? வேறு வாதங்களுக்கு வாய்ப்பில்லை என்று நினைத்துவிட்டாரோ?
    அடித்தற்கு கேட்பொலி ஒரு ஆதாரமே இல்லை .அடிப்போம் என்று கூறினார்களா இல்லையா ?என்பதற்கே இந்த கேட்பொலியை ஆதாரமாகக் கொள்ளமுடியும் .

    ////அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். ///
    அப்படிஎன்றால் அடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

    ////இல்லையென்றால் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டிய தேவை இல்லையே.///
    அடிக்காதீர்கள் என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளதால் அடிக்க படவில்லை என்பதுதானே உண்மை.

    //இவ்வளவு தூரம் முனைப்பு காட்டியவர்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என்றால் அது எப்படி? அப்படி இப்ராஹிம் நம்ப விரும்புகிறார் என்பதால் நாமும் அப்படித்தான் நம்ப வேண்டுமா? பாவம் ///
    இவ்வளவு தூரம் கேட்பொலி ,காணொளி எடுத்தவர்கள் ஒரு அடி விழுவதையாவது காட்டியிருக்க வேண்டுமா இல்லையா எப்படி? அப்படி அடித்ததாக செங்கொடி நம்ப விரும்புகிறார் என்பதால் அப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டுமா?

    அடிப்பதை கானொளியில் படம்பிடித்துக் காட்டினாலும் அழுக்கை துடைத்ததாக கூறுவேணாம். . அடித்தால்தானே படம் எடுப்பதற்கு ?நடவாத ஒன்றை எப்படி படம் எடுக்க முடியும்? நல்லவேளை இந்தியாவில் செங்கொடி தெய்வம் ஸ்டாலின் ஆட்சி இல்லை .இல்லைஎன்றால் காணோளியாவது கேட்பொலியாவது ? காணமும் கேப்பையும்தான் கிடைக்கும் சிறையில் .

    ///இப்போதும் கூட நேரில் கண்ட ஒருவர் தோழர் தாக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ///
    என்னிடம் கூட நேரில் கண்டவர் ஒருவர் கூறினார் ,தாக்கப்படவில்லை என்று.

    பரசுராமபுரம் பள்ளியில் கூறியது தீர்ப்பாம் ,முபாரக் பள்ளியில் கூறியது அறிவிப்பாம்.சே ,,உங்களது வியாக்கியானமே தனி அலாதி. முபாரக் பள்ளியின் அறிவிப்பிற்கு யாரும் கட்டுபடவில்லையாம் . பரசுராமபுரம் பள்ளியில் சொன்னபிறகு ஒருவரும் கோழிகடைக்கு செல்லவில்லையாம் .முபாரக் பள்ளியை மஹல்லாவாக கொண்டவர்கள் ஐந்து சதவீதம் இருப்பார்கள் .அதனால் அவர்கள் மட்டும் கட்டுபட்டிருப்பார்கள் .பரசுராமபுரம் பள்ளியை மஹல்லா வாக கொண்டவர்கள் 75 சதவீதம் பேர்கள் இருப்பார்கள் .அதனால் அனைவரும் கட்டுபட்டிருக்க வேண்டும்.ஆக இரண்டுமே அறிவிப்புகள் தான் .

    ///எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரோடும் தொடர்பில்லாத இன்னொருவர் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த இருவரும் கணவன் மனைவி அல்லர் என்று கூறினால் அது அறிவிப்பா? தண்டனையா? ///
    எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரும் அவர்களோடு தொடர்புடைய பெற்றோரும் தங்களை தம்பதியர்களாக்க எங்கே விண்ணப்பித்து கட்டணம் கட்டி அவர்கள் தம்பதியர்கள் என்று சாட்சிகளுடன் உறுதி செய்யபப்ட்டு ,அவர்களை தம்பதியர்கள் என்று அறிவித்தார்களோ , அந்த ஜமாத்தும் எதன் அடிப்படையில் அறிவித்ததோ ,அந்த அடிப்படையை ,அந்த தமபதியர்களில் ஒருவர் மீறினால் , அவர்களுக்கு அவர்கள் இஸ்லாத்தின் அடைப்படையில் கணவன் மனைவி அல்ல என்று கூறினால் அது அறிவிப்பே .தண்டனை அல்ல .அதன் பிறகும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்களில் ஒருவருக்கு கசையடி கொடுத்தாலே தண்டனை.சிலர் அந்த அறிவிப்பையே தண்டனையாக கொண்டால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல .
    பிஸ்மி சொல்லி கற்பு அழித்ததாக கூறும் ஒருவர் தனது கடையில் பிஸ்மி சொல்லி கோழியை அறுக்க ஆள் வைத்திருக்கிறார் என்றால் அது கேலி செய்வதாக கொள்ளமுடியும் என்பதே எனது சொல்லின் சாராம்சம் .நான் நேரடியாக கூறினார் என்று கூறவில்லை.

    ///லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.///
    செங்கொடி பற்றி கதை எழுத ஆரம்பித்து ,அவரது இணைய தளம் மூடி விட்டு ஓடிவிட்டாதால் அதற்கு மேல் அவரைப்பற்றி ஒன்றும் தகவல் இல்லாததால் மீதி கதையை செந்தோழன் நிகழ்வுடன் முடித்தால் அதற்கு என்ன பெயர்? இருவரும் செந்தோழர்கள் தானே .
    மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம் ,லூது நபி[அலை]அவர்களின் கதையை குர்ஆனில் சொல்லவில்லை. அவர்களின் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட குற்ற செயலுக்காக ,அதை கண்டித்து மக்கள் அதலிருந்து விடுபடவேண்டும் என்பதர்க்ககா ஒரு பாடமாக சொல்லப்பட்டுள்ளது.அதிலிருந்து உமது அல்ப புத்தி கதையை துவங்கினால் முஸ்லிம்கள் கண்டிக்கவே செய்வார்கள்.உங்களுக்கு தேவையானால் அது போன்ற படங்கள் நிறைய இருப்பதால் அங்கே உமிழ்ந்து கொள்ளுங்கள்.மேலும் உமர்[ரலி] பற்றிய ஹதிது புகாரியில் உள்ளது ஹதித் எண் அடுத்து தருவோம்
    //பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? ///
    இதற்கு முன்னர் என்ன ஒப்பு நோக்கப்பட்டது?சொல்லுங்கள்.

    ///அப்பரசண்டிகளா! இப்படித்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் நம்புகிறார்கள். அயோத்தியில் குறிபிட்ட இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று. அதை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நம்பிக்கை மட்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது. அடுத்தவர் நம்பிக்கையை கிண்டிக் கிளறி ஆதாரம் கேட்பீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர்தான் பாசிசம். ///
    செங்கொடியின் அறிவின் முதிர்ச்சி வெறித்தனம் ஆகி நாளடைவில் உளற ஆரம்பித்துவிட்டது.இதைத்தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வதாக சொல்லுவார்கள்.குர் ஆனில் என்ன உள்ளதோ ,அதை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் . அந்த நம்பிக்கைப் பற்றி இவரது தச்ச ஆள விமர்சிக்கட்டும் .துச்சமெனக் கொண்டு பதிலுரைப்போம். பைபிளில் உள்ள கதையை குரானின் தொடராக சேர்த்தது மொள்ளமாறித்தனமா இல்லையா? பைபிள் எங்களது நம்பிக்கையா? இதற்கும் ராமன் பிறந்த நம்பிக்கை எங்களுக்கு பொருட்டல்ல அதற்காக அங்குள்ள பள்ளிவாசலை இடித்து இடத்தை வன்முறையில் பெறுவதும் ஒன்றாகுமா?அடுத்தவர் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கவில்லை .குறிப்பிட்ட பள்ளிவாசலை இடிப்பதற்கும் ,அந்த இடத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் தான் ஆதாரம் கேட்கப்பட்டுள்ளது.மேலும் இதில் அரசியல் உலகறிந்த உண்மை .அதை தூக்கி கொண்டு இங்கே செங்கொடி வருவது ,தமிழன் போன்றவர்கள் இவர் புகழ் பாடவே .
    அடுத்து இவர் அப்ரண்டிஸ் என்பதை நிருபிக்கிறார் .உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் நடத்தை நெறியாக வற்புருத்தியுள்ளர்கள்.ஆனால் உட்கார்ந்தால் அசுத்தமாகிவிடும் என்று கருதப்பட்ட இடத்தில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்கள் .அதை போலவே ,உமர் [ரலி] அவர்கள் இன்ஜிலை வாசித்த சமயத்தில் மக்களுக்குஅது தேவை இல்லை எனப்பட்ட காலம் . முகம்மதுநபி[ஸல்] அதனால்அதை வாசிப்பதை நிறுத்த வேண்டுகிறார்கள்.ஆனால் இப்போது கஹ்பா நிலைக்குமா?குரான் இறைவேதமா ? என்று அவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க ,அதை ஒழிக்க முனையும் பொழுது அவர்களோடு தர்கித்து உண்மையை மக்களுக்கு விளக்க அவர்களது வேதத்தை பாராயண செய்தது தவறில்லை.கம்யுனிசத்தில புரளும் தாங்கள் இஸ்லாத்தை இப்படி அரைகுறையாக அறிந்து கொண்டு விமர்சிப்பது அழகன்று .

    துராப்சாவின் நிலைபாட்டை மக்கள் அறிந்திருந்தும் அவர் கடையில் கோழிக்கறி வாங்கினார்கள் என்று செங்கொடி கூறியதாலே ,அப்படி என்றால் துராப்சா ஆயிசா[ரலி]அவர்கள் பற்றி கூறிய இந்த கருத்தையும் மக்கள் அறிந்து இருந்தார்களா? என்று கேட்டிருந்தேன் .அதற்கு செங்கொடி என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? ஆம் அலல்து இல்லை என்றுதான் பதில் சொல்லியிருக்க வேண்டும் .ஆனால் அதை செய்யாமல் தனது குரூர புத்தியை வெளி கொணர்ந்து அந்த செய்தியின் உள்ள நுழைகிறார்.செந்தோழன் என்ற பெயரில் துராப்சா ஆயிசா பற்றி எழுதியதை வற்புருத்த்கிறார்.
    முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு முந்தைய ,பிந்திய காலத்திலும் நடைமுறையில் உள்ள வழக்கபடியே ,.சபிய்யா [ரலி] அவர்கள் கைபர் போரில் கைதானபோளுது அவருக்கு வயது பதினேழி என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பே அவர் யூதராக இருக்கையிலே இரண்டு திருமணம் செய்துள்ளார் என்றால் அவரது முதல் திருமணம் என்ன வயதில் நடந்திருக்கும்?இந்த மாதிரி இளம் வயதிலே திருமணம் நடந்துள்ளதால் ,தோழிகள் மூலம் இல்லற வாழ்க்கையி அவர்கள் அறிந்து இருக்கவே முடியும்.அதனால் கற்பழிப்பு என்று கூறுபவர்கள் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் தான் பைத்தியக்காரன் .ஆனாலும் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் பெண்களின் சம்மதத்துடனே திருமணம் என்று வரையருத்திருப்பதிளிருந்து ,உலகின் முதன் முதலாக பால்யவிவாகத்திர்க்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாமே .
    மேலும் ,பெண்களை வலுகட்டாயமாக் அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர் ஆன் 4;19 ]
    ///இப்ராஹிம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற அவசியமில்லாமல் அதை விட தெளிவாகவே குரான் வசனம் இருக்கிறது.///மூக்கில் வடிவதை நேரடியாகவே துடைத்துக் கொள்ளுங்கள்
    குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வசனத்தை கூறுங்கள்.

    • தஜ்ஜால் மே 13, 2012 இல் 5:27 முப #

      நான் முன்பு குறிப்பிட்டதை மீண்டும் கூறுகிறேன், இப்ராஹீம் யூகித்தார், யூகிக்கிறார், இன்னும் புதிது புதிதாக யூகிப்பார். முடிவற்ற யூகங்கள். இதை நம்பவேண்டுமென வற்புறுத்துவார். நாம் ஆதரங்களுடன் மறுத்தால் நடுநிலை(?)யாளர்களிடம் ஓடிவிடுவார். இறுதியில் விவாதத்தை திசைதிருப்பிவிடுவார். இபொழுது ஆயிஷா விவகாரத்தை கையிலெடுத்துவிட்டார்…

  17. nallurmuzhakkam மே 15, 2012 இல் 4:54 பிப #

    இப்ராஹிம்,

    இவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்பதற்கு இவருடைய வாதங்களே சான்றாகி நிற்பதைத்தான் இவரின் பதிவு வெளிப்படுத்துகிறது. கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனம் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதை சான்றுகளுடன் நிருவியிருக்கிறேன். ஆனால் இப்ராஹிம் நடத்திக் கொண்டிருக்கும் வாதங்கள் அவரின் ஒட்டாண்டித்தனங்களையே புலப்படுத்துகின்றன. எப்படி?

    ஒரு மதத்தை விமர்சித்து கட்டுரை எழுதுவது கருத்துச் சுதந்திரமா? இல்லையா? இதற்கு இப்ராஹிம் கூறும் பதில் என்ன? எங்கள் மனதைப் புண்படுத்தும் எதுவும் விமர்சனம் இல்லை. எது உங்கள் மனதை புண்படுத்துகிறது? எப்படி புண்படுத்துகிறது? பதிலே கூற மாட்டார்கள். முண்டிக் கேட்டால், குரானை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் எனவே அதற்கு வெளியில் எதையும் கூறக் கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள் நம்பும் மத விரிவுரையாள அண்ணன்களெல்லாம் ஆயிரம் முறை பழைய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஒரு முறை அண்ணனிடம், (பண்டை)இப்ராஹிம் கொல்ல முயன்றது யாரை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. உடனே பழைய ஏற்பாட்டின் கதைகளிலிருந்து தொடங்கி நீண்டதொரு சொற்பொழிவே நிகழ்த்தினார். கசசுள் அன்பியா என்று இப்ராஹிமே ஒரு எடுத்துக்காட்டு தந்திருந்தார், ஆனால் அதையே வேறு யாரும் செய்து விட்டால் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப எங்கள் மனது புண்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடுவார். உண்மைகளை பேச திராணியற்று உதாரணங்களை தூக்கிக் கொண்டு ஓடி வருவார். தோழர் ஸ்டாலினும் கழிசடை நித்யானந்தாவும் ஒருவரா? அந்தக் கட்டுரை, லூத்தை கோவிலை பெண்களுடன் சல்லாபிக்கும் ஓட்டலாக பயன்படுத்திய தேவநாதனுடனா ஒப்பிடப்பட்டிருந்ததா என்ன? குரானின் லூத்தும், பழைய ஏற்பாட்டின் லோத்தும் ஒருவரா? வேறு வேறானவர்களா? ஒருவரின் கதையை (கமல் நடித்த விருமாண்டி போல) குரான் ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறது பழைய ஏற்பாடு வேறொரு கோணத்தில் கூறியிருக்கிறது. இதை ஒப்பிட்டு பார்ப்பதற்கு முஸ்லீம்களின் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. எனவே ஒப்பிட்டதே எங்கள் உடம்பில் சீழை வடிவிக்கும் என புலம்பிக் கொண்டிருக்காமல் எப்படி அது விமர்சனம் இல்லை என்பதை விளக்குங்கள், \\\கருத்து சுதந்திரமா?இல்லாத ஒன்றை இட்டு கட்டுவது கருத்து சுதந்திரமா/// இப்படி கேட்பதற்கு இப்ராஹிம் வெட்கப் படவேண்டும் என்று எழுதலாம் என எண்ணினேன். ஆனால், அவரிடம் இல்லாத ஒன்றை எப்படி படுமாறு கேட்க முடியும்? நான் கேட்பதும் அதுதான் அந்தக் கட்டுரையில் இட்டுக்கட்டப்பட்டது எது? உடம்பில் நல்ல ரத்தம் ஓடினால் சுட்டிக் காட்டுங்கள். தொடர்ச்சியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். அல்லது கருத்து சுதந்திரமாக ஒப்புக் கொண்டு உண்மையாக இருக்க முன்வாருங்கள்.

    இப்படி ஒரு கட்டுரைக்கு சுட்டி கொடுத்தது ஒருவரை வியாபாரத்தைக் கெடுத்து, திருமண பந்தத்தை முறித்து, தாக்கி ஊரைவிட்டு விலக்கி வைத்தது சரியான செயலா? காட்டுமிராண்டித்தனமா? மொத்தமான இதை தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நேர்மையற்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். வியாபரத்தைக் கெடுத்ததற்கு கணேச பூஜை என்று பொருந்தாத ஒப்பீட்டை திருப்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். அந்த ஒப்பீடு எப்படி சரியானது என்பதை விளக்காவிட்டால் பதில் கூறமாட்டேன் என்று கூறினேன் இன்றுவரை பதிலைக் காணோம், ஆனால் உளரல் தொடர்கிறது. தாக்கினார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கினேன், அதற்கு ’ஆட்ரா ராமா’ ‘ஆட்ரா ராமா’ என்று குட்டிக்கரணங்கள் அடித்துக் கொண்டிருக்கிறார். \\\அடிக்காதீர்கள் என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளதால் அடிக்க படவில்லை என்பதுதானே உண்மை/// எப்படி இந்த அளவுக்கு ஒருவர் கேவலமாக கீழிறங்க முடியும்? அடிக்காதீர்கள் என்று சுற்றி நிற்கும் உறவினர்கள் தடுத்தால் அதற்கு அடிக்கவில்லை என்பது தான் இப்ராஹிம் கூறும் பொருள். சரிதான், இப்ராஹிம் என்றால் பொய்ராஹிம் என்பது பொருள்.

    தாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை பொய்ராஹிம் ஒப்புக் கொள்கிறார். சூழ இருந்த உறவினர்கள் அடிக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். இதில் சிந்தையில் நேர்மை கொண்டவர்கள் என்ன முடிவுக்கு வர முடியும்? பொய்ராஹிம் தாக்கப்படவில்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே. இதுவாவது பரவாயில்லை. புதிதாக ஒரு கண்டுபிடிப்பை செய்திருக்கிறார் பாருங்கள் .. .. .. அடடா மீப்பெரும் விஞ்ஞானி என்றுதான் பட்டம் கொடுக்க வேண்டும். அடிங்க என்று கேட்பொலியில் இருந்தால் (கேட்பொலியில் அடிக்காதீர்கள் என்று தடுப்பதும், அப்படித்தான் அடிப்போம் என்று மீறுவதும் இருக்கிறது) அடித்ததற்கு ஆதாரமல்ல அடிங்க என்று சொன்னதற்குத்தான் ஆதாரம். குரான் அல்லா தந்தது என்று முகம்மது கூறினால் முகம்மது அப்படி கூறினார் என்பதற்குத்தான் ஆதாரமேயன்றி குரான் அல்லா தந்தது என்பதற்கு அவர் கூறியது ஆதாரமல்ல. குரானில் அல்லா இப்டி நடந்தால் சொர்க்கம் அப்டி நடந்தால் நரகம் என்பதெல்லாம் குரானில் அப்படி இருக்கிறது என்பதற்குத்தான் ஆதாரமேயன்றி, அல்லா அப்படி கூறினான் என்பதற்கு ஆதாரமல்ல. அடேங்கப்பா! போகப் போக என்னவெல்லாம் வந்து விழுமோ.. .. .. பயமாக இருக்கிறது. காணொளியில் அந்த முல்லா இப்படி ஆகிவிட்டதே என்று பலர் வருந்துவதாக குறிப்பிட்டிருப்பது ஒரு சமாளிப்பு தான். ஏனென்றால், அவர் அதை பிறரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார், அவர் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அல்ல. நடந்தது தவறு என்றவர் உணர்ந்திருக்கிறார், அதனால் தான் தோழருக்கு ஆறுதல் கூறும் நோக்கில் அப்படி பேசியிருக்கிறார். தாக்குதல் நடக்கவில்லை என்றால் கடையநல்லூரைச் சேராத அவர் வருந்தியவர்கள் தான் அதிகம் என்று கூறியிருக்க வேண்டியதில்லை. இதெல்லாம் நேர்மையானவர்களுக்கு புரியும். பொய்ராஹிம்களுக்கு புரியப் போவதில்லை. தாக்கப்பட்டதை தான் நேராக பார்த்ததாக ஒருவர் கூறியிருக்கிறார். அதற்கு பதிலாக தாக்கப்படவில்லை என்று ஒருவர் பொய்ராஹிமிடம் கூறியதாக கூறுகிறார். ஒருவரல்ல ஆயிரம் பேர் கூறினாலும் கூட இரண்டாயிரம் பேர் பொய்ராஹிமின் கனவில் வந்து பேர் தாக்கப்படவில்லை என்று சாட்சி கூறுவார்கள். முன்னர் நான் யூகமாக கூறியதையெல்லாம் பொய்ராஹிம் உண்மைப்படுத்தி வருகிறார். அவருக்கு நன்றி.

    தாக்கவில்லை கண்ண்ண்ண்ண்ண்ண்ணியமாக விசாரித்தார்கள் என்று கூறினார் பொய்ராஹிம். எங்கே ஆதாரம் என்றால், மீள் இணைப்பில் எடுத்து நான் இணைத்த ஆதாரத்தை அது தான் இது என்று வாழைப்பழம் காட்டுகிறார். ஒரு குற்றத்தை சுமத்தினால் அது சரியா தவறா என்று விசாரிக்க வேண்டுமா? இல்லையா? விசாரித்ததற்கு ஆதாரம் தர வேண்டும் அல்லது விசாரிக்காமல் தீர்ப்பு கூறியது மொள்ளமாரித்தனம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அடுத்து, என்ன குற்றத்திற்காக தோழருக்கு இந்த தண்டனை தரப்பட்டது? என்று கேட்டிருந்தேன் பதில் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். தோழர் பிஸ்மி கூறுவதை அவமதிக்கிறார் என்று பொய் சொல்லியவர் ஆதாரம் கேட்டதும் பல்டியடித்துவிட்டார். ஆனால் இந்த பொய்யின் மீது தான் பொய்ராஹிம் தன்னுடைய யூகங்களைச் செய்திருந்தார் என்பதும் கவனத்திற்கு.

    கொடுக்கப்பட்டது தீர்ப்பா? அறிவிப்பா? அது தீர்ப்பு தான் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன். அவைகளை மறுக்க முடியாமல் 5 சதவீதம் 75 சதவீதம் என்று கதை விடுகிறார். இவர் பொய்ராஹிம் என்பதற்கும், கடையநல்லூர் குறித்து இவருக்கு ஒரு சுக்கும் தெரியாது என்பதற்கும் இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை. இதற்கு முஞாக்கிரதையாக ’லாம்’ என்று ஐயவிகுதியையும் சேர்த்துக் கொண்டுள்ளார். விவாதம் செய்கிறேன் என்று வந்து விட்டு தொடக்கத்திலிருந்து இவரின் யூகங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். அது அறிவிப்பா தீர்ப்ப என்பதற்கு இன்னொரு விளக்கத்தையும் பார்க்கலாம். தோழர் மீது ஒரு குற்றம் சாட்டப்படுகிறது. சாட்டப்பட்ட அந்த குற்றத்திற்கு எதிராகத்தான் ஒரு முடிவு கூறப்படுகிறது. என்றால் அந்த முடிவு அறிவிப்பா தீர்ப்பா. குற்றச்சாட்டிற்கு எதிராக கூறப்படுவது தீர்ப்பாகத்தான் இருக்க முடியுமேயன்றி அறிவிப்பாக இருக்க முடியாது. இந்த முடிவு திருமண ரத்து போன்ற கட்டளைகளைக் கொண்டிருப்பதால் அது தண்டனை தான்.

    இதுவரை இந்த விவாதத்தில் பொய்ராஹிம் எந்தவித ஆதாரங்களையும் வைக்கவில்லை மாறாக அவரது நம்பிக்கையையும், யூகங்களையும் மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார். இதன் தொடக்கமே லூத் லூஸ் கட்டுரை தான். அது எப்படி புண் படுத்துகிறது என்று யாரும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் எதிர்வினையாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அது தவறு என்று விளக்கிக் கூறினாலும் கொஞ்சமும் மனிதத் தன்மையற்று அதை மதம் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கிறார்கள். இதன் பொருள் அவர்களின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான். இதைத்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் செய்கிறார்கள். அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள். இரண்டு நம்பிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? புரிதலற்று பிதற்றித் திரிவதற்குத்தான் மதம் கற்றுக் கொடுக்குமோ.

    உமர் பழைய ஏற்பாட்டை படிப்பதை முகம்மது கண்டித்தார் என்பது புஹாரியில் எந்த எண்ணில் இருக்கிறது என்பதை கூறுவதற்காக காத்திருக்கிறேன். இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டு அது எனக்கு தேவைப்படுகிறது. முதலில் பழைய ஏற்பாடு என்றார் இப்போது இஞ்ஜில் என்கிறார். இஞ்ஜில் என்றால் அது பழைய ஏற்பாடா? புதிய ஏற்பாடா? அடுத்து அந்த ஹதீஸின் தேவைப்படும் காலத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற குறிப்பு இருக்கிறதா? அது தேவைப்படாத காலம், இது தேவைப்படும் காலம் என்பதை யார் முடிவு செய்வது? செய்தது? முகம்மது செய்யச் சொன்னதை செய்வது சுன்னா என்றால் கண்டித்ததை செய்வதற்கு என்ன பெயர்?

    ஆயிசா விசயத்தில் தோழர் எப்போதோ இட்ட ஒரு பின்னூட்டத்தை இழுத்துக் கொண்டு ஓடிவந்தது பொய்ராஹிம் தான். பிஸ்மி சொல்லி அறுப்பது மொள்ளமாரித்தனம் என்று காட்டுவதற்காக அதை இழுத்துக் கொண்டு வந்தார். பொய்ராஹிம் கொண்டு வந்த நோக்கத்தில் நின்று தான் என்னுடைய பதிலும் அமைந்திருந்தது. தோழர் நாத்திகர் என்பதாலும், முகம்மது கற்பழித்தது உண்மை என்பதாலும் அதைக் கூறியது மொள்ளமாரித்தனம் இல்லை என்றுதான் என் பதில் அமைந்திருந்தது. இதற்கு பதிலளிப்பதாக இருந்தால் எந்த விதத்தில் அந்த இரண்டும் பொருந்தாது என்று தான் விளக்கமளித்திருக்க வேண்டும். மாறாக பொய்ராஹிமோ கற்பழிப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டார். நானும் விளக்கிக் கொண்டிருக்கிறேன். இப்போதும்கூட அது கற்பழிப்பா? இல்லையா? என்பதை விட்டுவிட்டார். குழந்தைத்திருமணம் செய்யலாமா? கூடாதா? என்பதை தொங்கிக் கொண்டிருக்கிறார். நோக்கமில்லாத இடத்தில் விவரித்து நிற்பதும் பொய்ராஹிம் வழக்கங்களில் ஒன்று தான். மீண்டும் கூறிக் கொள்கிறேன். விவாதத்தோடு தொடர்பற்றவைகளை பேசுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதேநேரம் பொய்ராஹிம் தொடரும் வரை நானும் விடமாட்டேன்.

    இஸ்லாத்தில் குழந்தைத் திருமணம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஐயமிருப்பவர்கள் குரான் வசனம் 65:4ன் பொருளைப் புரிந்து கொள்ளவும். இனி யார் எங்கு வழிவதை எப்படி துடைக்க வேண்டுமோ அதை அப்படி துடைத்துக் கொள்ளலாம்.

    விவாதத்திற்கு வெளியில் சுற்றிவளைத்து திசை திருப்புவது கூடாது என்பதை விதிமுறையாக வைத்து உறுதிப்படுத்துமாறு கேட்டிருந்தேன். ஒரு முறை வலியுறுத்தியதற்குப் பிறகு உறுதியளித்தார் பொய்ராஹிம். \\\விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என உறுதி கூறி நீங்களும் உறுதி கூற வேண்டும் என கேட்டிருந்தேன், அதை உறுதிப்படுத்துங்கள்.உறுதிபடுத்துகிறேன்/// ஆனால் வழக்கம் போல் தற்போது தேவையில்லாதவைகளைக் கூறி திசை திருப்புகிறார் பொய்ராஹிம். \\\நல்லவேளை இந்தியாவில் செங்கொடி தெய்வம் ஸ்டாலின் ஆட்சி இல்லை . இல்லை என்றால் காணோளியாவது கேட்பொலியாவது ? காணமும் கேப்பையும்தான் கிடைக்கும் சிறையில்/// \\\ரசியாவில் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் மக்கள் மத்தியில் காணொளி ,கேட்பொலி இல்லாவிட்டாலும் , உங்களது சோஷலிச இருப்பிலிருந்தாவது ஒன்றை காட்டலாம் இல்லையா?/// இவைகளெல்லாம் எந்த விதத்தில் இந்த விவாதத்தோடு தொடர்புடையவைகள். எது குறித்து விவாதமோ அதை விவாதிக்குமாறு பொய்ராஹிமை எச்சரிக்கிறேன்.

    உண்மைகளுக்கு பதிலாக உதாரணத்தைக் கொண்டுவருவது பொய்ராஹிமின் பாணி. இதை இந்த விவாதத்திலும் காணலாம். அதேநேரம் உதாரணத்தில் இருக்கும் உண்மைகளை விட்டு விட்டு உதாரணத்திற்கு பதில் கூறிக் கொண்டிருப்பதும் பொய்ராஹிம் பாணி தான். இதை இந்த விவாதத்திலும் தொடங்கியிருக்கிறார். புவியின் கோள வடிவம் இதற்கு எடுத்துக்காட்டு. மதத்தைக் காப்பாற்ற வந்துவிட்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் பொய்ராஹிம். பார்ப்போம் இன்னும் எவ்வளவு தூரம் போகிறார் என்று.

  18. S.Ibrahim மே 15, 2012 இல் 9:11 பிப #

    தச்ச ஆள ///நடுநிலை(?)யாளர்களிடம் ஓடிவிடுவார். //// நான் நடுநிலையாளர்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் .இன்னாரேல்லாம் நடுநிலையாளர்கள் என்று குறிப்பிட்டு இருந்தால் இவர் கேள்விக் குறி போடலாம் .நான் பொதுவாகவே கூறியிருக்கையிலே இவர் கேள்விக் குறியை பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை அவாறேனின் ,இவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதுவே முடிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
    ///அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். /// இதுதான் செங்கொடியின் யூகம்
    ////நாம் ஆதரங்களுடன் மறுத்தால் நடுநிலை(?)யாளர்களிடம் ஓடிவிடுவார். /////
    ஆதாரங்களை நடுநிலையாளர்களிடம் கொண்டு செல்லாமல் தச்ச ஆளிடம் கொண்டு வரவேண்டுமா?
    இல்லை பீனிக்ஸ் முஸ்லிமிடம் கொண்டு வரவேண்டுமா?
    அப்புறம் உங்களது ஆசானுக்கு கோபம் கொப்பளித்திருக்கிறதா? இல்லை வேறு ஒன்றுமில்லையே !பைத்தியம் என்கிறார் பொய்ராஹீம் என்கிறார்.என்ன ஆச்சு? இவருக்கு ,சவுதியிலிருந்து வந்துவிட்டதாக சொன்னபொழுது கூட இப்படி காயலியே,ச்சூ

  19. மணி மே 16, 2012 இல் 8:58 முப #

    இபுராகிம் அண்ணே உங்களிடம் ஆதாரமெதாவது இருந்தால் அதை கூறுங்கள் கேட்டுவிட்டு முடிவுக்கு வரலாம்

  20. S.Ibrahim மே 16, 2012 இல் 8:52 பிப #

    மணி ,///இபுராகிம் அண்ணே உங்களிடம் ஆதாரமெதாவது இருந்தால் அதை கூறுங்கள் கேட்டுவிட்டு முடிவுக்கு வரலாம்.///////

    செங்கொடி தாக்கப்பட்டதாக வைத்த ஆதாராத்தில் ஆடியோவில் ‘அடிங்க அடிக்காதீங்க “என்ற குரல்கள்தான் துராப்சாமீது அடி விழுந்ததற்கு ஆதாரங்கள் என்கிறார்.மேலும் அவர் வைத்த வீடியோவில் ,ஒரு முல்லா,” அடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் சிலர் வந்தார்கள் ,ஆனால் பலர் தங்களது நிலை கருதி வருந்தினர்” என்றும் கூறுகிறார்.
    அடுத்து ,இதை கேட்டுக் கொண்டிருக்கும் துராப்சா அந்த இடத்தில் குறுக்கிட்டு,அவர்கள் அடித்தார்கள் ,அது நான் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனையாக கொள்ளுகிறேன் என்று கூறி அவர் தாக்கப்பட்டதை அங்கு பதிவு செய்திருக்க வேண்டும் .அவர் தாக்கப்படவில்லை ,அதனால் முல்லா பேசிக் கொண்டு இருப்பதை ஆமோதித்த வண்ணமாக உள்ளார்.
    அப்புறம் துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப் பட்டதாக செங்கொடி கூறுகிறார்.அப்படி எனில் பெட்டிகடையில் ஐம்பது பைசாவுக்கு பேன்ட்எய்ட் வாங்கி ஒட்டியிருப்பதை காட்ட வேண்டும் .இல்லையெனில் காயமில்லாத அடிகள் என்றாலும் காட்டுமிர்டாண்டித்தனமாக தாக்கப்பட்டால் உடம்பில் அதற்கான தடயங்கள் இருக்கும் .அதை செங்கொடி அவர் வராவிட்டாலும் ,தச்ச ஆள் ,பீனிக்ஸ் போன்றவர்களை வைத்து படம் பிடித்திருக்க வேண்டும் .அதுவுக்கும் வழியில்லை

  21. மணி மே 20, 2012 இல் 12:32 முப #

    இபுராகிம் அண்ணே, இந்த தம்பிக்கு பதில் சொல்லியதற்கு நன்றி. ஆனா பாருங்க, நீங்க செங்கொடி தந்த ஆதாரத்துல குறை இருக்குறதா சொல்றீங்களே தவிர உங்களிடம் ஆதாரம் இருக்கா இல்லையா? நீங்க கடயாநல்லூர் காரர் இல்லைன்னு தெரியுது. சம்பவம் நடந்தபோது நீங்க அங்கே இருந்தீங்களா? இல்லைன்னா எப்படி நீங்க அங்க அடி நடக்கலைன்னு ஸ்ட்ராங்கா சொல்லுறீங்க. செங்கொடி ஆதாரத்த கேக்குரப்போ அடி நடந்ததாகத்தான் தெரிகிறது. குறை சொல்லறவங்க ஆயிரம் சொல்லலாம். ஆனா உங்கள்ட்ட ஆதாரம் இல்லாமல் குறை மட்டும் சொல்வீங்கண்ணா சாரி, நீங்க சொல்றத நம்ப முடியவில்லை.

    முன்னால நடந்த பாலியல் விவாதத்தை படிச்சுக் கிட்டிருக்கேன். பாதிவரை நல்லாத்தான் பதில் சொல்றீங்க. அதுக்கு அப்புறம் தான் சொதப்பி இருக்கீங்க. முழுசா படிச்சுப் பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்.

    • S.Ibrahim மே 20, 2012 இல் 8:23 பிப #

      மணி ////உங்கள்ட்ட ஆதாரம் இல்லாமல் குறை மட்டும் சொல்வீங்கண்ணா சாரி, நீங்க சொல்றத நம்ப முடியவில்லை.///
      அடித்ததற்குத்தான் ஆதாரம் தரவேண்டும் .அதற்கு ஆதாரம் இல்லைஎன்றால் அடிக்கப்படவில்லை என்று பொருள் ..ஒரு காரியம் நடந்ததற்குத்தான் ஆதாரம் தரப்பட வேண்டுமே ஒழிய நடக்கவில்லை என்பதற்கு எப்படி ஆதாரம் தர முடியும் ?அதுதான் நடக்கவில்லையே பிறகு எப்படி ஆதாரம் இருக்கும்?
      கோழி முட்டை போட்டது என்பதற்கு முட்டை ஆதாரம் .முட்டை போடவில்லை என்பதற்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும்?

  22. S.Ibrahim மே 20, 2012 இல் 5:10 முப #

    செங்கொடி தனது ஆதாரங்கள் எதிர்வாதத்திற்கு சாதகமாகிவிட்டதை உணர்ந்து இப்போது எழுத்து காட்டுமிராண்டியாக தனது வாதங்களை தொடர்கிறார்.முற்றிய பைத்தியம் என்கிறார்.முற்றிய பைத்தியத்திடம் ஒருவர் வாதாடுகிறார் என்றால் இவர் நிலை என்னவாக இருக்க வேண்டும்? வாதங்கள் வற்றினால் வரும் வார்த்தைகளே பைத்தியம் என்பது.இவர் ஒரு நிலைபாட்டை எடுத்துவிட்டால் அதை நிலைப்படுத்த இயலாவிட்டால் அதற்காக அடுத்தவர்களை பைத்தியம் என்பதும் இவர் நிலைப்பாடோ ?
    தன்னுடைய ஆதாரங்களாக ஆடியோவையும் வீடியோவையும் வைத்தார்.ஆடியோவில் பதிவு செய்யப்படும் குரல்கள் வைத்து ஒரு காரியம் நடந்ததாக கூறமுடியாது..அவரை அடிக்க வேண்டும் என்று முன்னரே கூடி சதி பண்ணினார்கள் என்பதற்கே ஆடியோ ஆதராம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.ஒரு கும்பலில் ஒருவரை தாக்கியதற்கு பதிவு செய்யப்படும் குரல்களே ஆதாரம் என்றால் ,அவனை வெட்டுங்க என்று ஒருவர் கத்தினால் அவரை வெட்டியதாக கூறமுடியுமா? அடிங்க என்று கூறப்பட்டுள்ளதால் அடித்ததற்கு அதுவே ஆதாரம் என்றால் ,அடிக்காதீர்கள் என்று குரல்கள் உள்ளதால் அடித்திருக்கிறார்கள் என்று அர்த்தம் என்றால் வெட்டுங்கள் என்று சொன்னால் வெட்டியதற்கு ஆதாரமா?வெட்டாதீர்கள் என்று சொன்னாலும் வெட்டியதற்கு ஆதாரமா?
    வீடியோவில் துரப்சா தாக்கப்பட்டதாக முல்லா கூறியிருக்கிறார் என்று ஒரு பச்சை பொய்யை ஆதாரத்துடன் சொல்லிவிட்டு என்னை பார்த்து பொய்ராஹீம் என்கிறார்.பாவம் இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.வாதங்கள் பொய்த்தால் வார்த்தைகள் இப்படி வருவது இயல்பே .நிறுவிவிட்டேன் நிறுவிவிட்டேன் என்று செல்லக் கிளிகளுக்கு சொல்ல கற்று கொடுக்கிறார் செல்லா கிளி.
    விவாதம் பண்ணிக் கொண்டிருக்கையிலே அவர் தந்த ஆதாரத்திலே முல்லா அடிக்கவேண்டும் என்ற சிந்தனையில் சிலர் இருந்தார்கள் என்று சொல்லுவதை அடித்ததாக திரிக்கும் செங்கொடி இன்னும் என்ன தில்லுமுல்லுகள் எல்ல்லாம் பண்ணியிருப்பார் என்று பாருங்கள்.முல்லா கூறுவதற்கு துராப்சா உடல் அசைப்பில் கூட மறுக்கவில்லை.அவர் தாக்கப்பட்டிருந்தால் அங்கு அனிச்சையாக கூட மறுப்பு வந்திருக்கும் .ஆனால் அப்படி ஒன்றுமில்லை.
    ////குரான் அல்லா தந்தது என்று முகம்மது கூறினால் முகம்மது அப்படி கூறினார் என்பதற்குத்தான் ஆதாரமேயன்றி குரான் அல்லா தந்தது என்பதற்கு அவர் கூறியது ஆதாரமல்ல. குரானில் அல்லா இப்டி நடந்தால் சொர்க்கம் அப்டி நடந்தால் நரகம் என்பதெல்லாம் குரானில் அப்படி இருக்கிறது என்பதற்குத்தான் ஆதாரமேயன்றி, அல்லா அப்படி கூறினான் என்பதற்கு ஆதாரமல்ல. ///
    ஏன் இப்படி உளற ஆரம்பித்துவிட்டார்? குர்ஆன் அல்லாஹ் தந்தது என்று முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கூறினால்,அவரகள் கூறியதாக வந்துள்ளது அவர்களின் கூற்றுக்கு ஆதாரம் .முஹம்மது நபி[ஸல்] அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளதால் அது இறைவன் தந்ததுதான் என்று நம்புவோம்.துராப்சாவை நையப் புடைத்தார்கள் என்று கடையநல்லூர் கிளை டிஎண்டிஜே தலைவர் சொல்லியுள்ளதாக ஒரு கூட்டத்தில் பேசிய ஆடியோவை காட்டினால் அது அடித்ததற்கு ஆதாரமே . ஆடியோவில் அடிங்க என்று ஒரு குரல் பதிவாகி இருக்கிறது என்றால் அது ஒருவர் அடிங்க என்று சொன்னாரா இல்லையா? என்றால் சொன்னார் என்பதற்கே ஆதாரம் ஆகும் .அதைப்போலவே அடிக்காதீர்கள் என்று ஒரு குரல் கேட்டால் ,அடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் ஆகாது .அடிக்காதீர்கள் என்று ஒருவர் கூறினார் என்பதற்கே ஆதாரம் ஆகும்.அடிங்க என்று ஒருவர் சொல்லை கேட்டு அடித்தார்கள் என்பதற்கு அந்த குரலே ஆதாரம் என்றால் அப்படி அடிக்க வந்தவர் அடிக்காதீர்கள் என்று மற்றொருவர் சொல்லை கேட்டு அவர் அடிக்கவில்லைஎன்பதற்கும் அதுவே ஆதாரம் ஆகும் .நான் அடித்தேன் என்று குரல் பதிவாகியிருந்தால் அது அடித்ததற்கு ஆதாரகமாக கொள்ளமுடியும். மற்றபடி உங்களது ஆதாரங்கள் உங்களுக்கு அல்ல எங்களுடைய ஆதாரங்களே அவையாகும்

    கருத்து சுதந்திரம் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்க்காகவே உங்களது தெய்வம் ஸ்டாலின் காலத்தில் உள்ள கருத்து சுதந்திரம் பற்றி கையிருப்பை கேட்டால் திசை திருப்புகிறேனாம்.இவர்களும் ஸ்டாலினை விமர்சனம் செய்கிறார்களாம் .இப்போது கேட்கவில்லை. ஸ்டாலின் காலத்தில்,ரசியாவில் வேலை செய்து அங்கு ஸ்டாலின் பற்றி மூச்சுவிட்டால் சவ்தி அரேபியா கதை நடந்திருக்குமா?சைபீரியாவில் ரத்தம் உறைந்திருக்குமா?அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் .நேர்மையின் கோணலே ,திசை திருப்பாமல் சிவப்பு திசையிலே இருந்தே பதில் சொல்லுங்கள்.
    ஒருவரின் கதையை குர்ஆன் ஒரு கோணத்திலும் பைபிள் ஒரு கோணத்திலும் சொல்லியுள்ளதை இவர் ஒப்பிட்டாரம்.எப்படி ஒப்பிட்டார்? என்று இவர் சொல்ல வேண்டும்.குர்ஆனை விமர்சிக்க அனுமதி தேவை இல்லைதான் .அதே சமயத்தில் உழைக்கும் வர்க்கம் உணர்வுகளுக்கும் இந்த உழைப்பாளி வர்க்க கள்ள ஆதரவாளர்கள் பதில் சொல்லவேண்டும் அல்லவா?உழைக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களை தூண்டிவிட்டு அதன் பிறகு மொள்ளமாறித்தனம் என்று ஏசி அறையில் உட்கார்ந்து இணையதளத்தில் உலா வரும் இவரின் அசல் என்ன? உழைக்கும் மக்களை காட்டுமிராண்டிகள் என்று வர்ணிக்க இந்த பெயர் மாற்ற இயலாத சோம்பேறிகளுக்கு என்ன வேண்டி கிடக்கிறது? குரானை விமர்சிக்க அனுமதி என்பது அப்புறம் முதலில் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? உழைக்கும் மக்களுக்காக் ,உழைக்கும் மக்கள் பார்க்க வாய்ப்பில்லாத இணையதளத்தில் இவருக்கு என்ன வேலை?சில ஹிந்துத்துவ வெறியர்களை மகிழ்வூட்ட, இஸ்லாத்திற்கு எதிரான அவர்களது வெறித்தனங்களையும் வெளியிட இவருடைய அற்ப ஆசையின் இலக்கு என்ன? உழைக்கும் மக்களுக்கு இணையதளத்தில் இவர் சாதித்தது என்ன? இந்தியாவில் தனது பெயரை மாற்றவே எப்படியெல்லாம் கஷ்டபட வேண்டியுள்ளது என்பதை அறிந்து வைத்திருக்கும் செங்கொடி அதை ஒழிக்க எத்தனை போராட்டங்கள் நடத்தினார்? உழைக்கும் வர்க்கம் இது போன்ற பல் பிரச்னைகளுக்கு தாலுகா அலுவலகத்தில் படும் அவலங்களை போக்க இவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்தியாவில் உழைத்து பாடுபடாமல் சவுதியில் முஸ்லிமாக நடித்து காசு சம்பாதிக்க வேண்டுமா? இஸ்லாமை விமர்சித்தே தீருவேன் என்ற கட்டாயம் எங்கிருந்து வந்தது? உழைக்கும் மக்களின் இன்னல்களுக்கு தலையாய காரணம் இஸ்லாமா? செத்துப்போன சோஷலிச குழந்தையை முதலில் அடக்கம் செய்துவிட்டு வாருங்கள் .பிணம் நாறிக் கொண்டிருக்கிறது.பிண நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இஸ்லாம் என்னும் மனிதனை விமர்சிக்க உங்களுக்கு என்னதகுதி?
    ///ஒரு முறை அண்ணனிடம், (பண்டை)இப்ராஹிம் கொல்ல முயன்றது யாரை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. உடனே பழைய ஏற்பாட்டின் கதைகளிலிருந்து தொடங்கி நீண்டதொரு சொற்பொழிவே நிகழ்த்தினார். ///
    என்ன நிகழ்த்தினார் ?எப்போது நிகழ்த்தினார் ?என்று அதை அல்லவா சொல்லியிருக்க வேண்டும் ,ஒருவேளை அவர் நிகழ்த்திவிட்டாலும் அது சரியா தவறா?என்று ஆய்வுக்குட்பட்டதல்லவா?அண்ணன் சொன்னதெல்லாம் வேதம் என்று யார் சொன்னது?
    ///நான் கேட்பதும் அதுதான் அந்தக் கட்டுரையில் இட்டுக்கட்டப்பட்டது எது? உடம்பில் நல்ல ரத்தம் ஓடினால் சுட்டிக் காட்டுங்கள். ///இது செங்கொடியின் கூற்று.

    தச்சால்கட்டுரை ////மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
    ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
    இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத்(லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,,,,,,,,,,,,,,
    ,,,,,,,,,குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    ,,,,,,,,,,,,,,,,,,,அந்தப் பிள்ளைகளுக்கு லோத்து தந்தையா? தாத்தாவா? பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

    இதுதான் உலகின் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் வாயிலாக அடியார்களுக்கு போதிக்கும் மோட்சத்திற்குரிய வாழ்க்கைநெறி!///இவ்வாறு தச்சால் கூறுகிறார்.

    குரானை விமர்சிக்க ஆரம்பிக்கும் அயோக்கியர் தச்சால் அந்த குர்ஆனில் விமர்சிக்க நாதியற்று ,குர்ஆனில் கிடைக்காது பழைய ஏற்பாட்டிற்கு சென்று அங்கு முடிவுரை கண்டு அதன் பின்னர் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மூலம் அடியார்களுக்கும் போதிக்கும் வாழ்க்கைநெறி என்கிறார் என்றால் இவர்களிடம் இஸ்லாத்தை விமர்சிப்பதர்க்கான வெறி காட்டுமிராண்டித்தனமாக உள்ளதா இல்லியா?அவர் உடம்பில் நல்ல ரத்தம் ஓடினால் கட்டுரையின் துவக்கத்தில் குரானையும் பழைய ஏற்பாடு பற்றியும் சொல்லியிருக்க வேண்டுமா அல்லவா?
    ////அதாவது லூத் தனது மகள்களை பாலியல் அடிமைகளாக வழங்க முன்வந்திருக்கிறார் என்பதுதான் இதன் நேரடிபொருள் இதை விளங்க எந்த தப்ஸீர் விளக்கவுரையும் தேவையில்லை.///
    எந்த தப்சீரும் தேவையில்லை என்று கூறும் தச்சால் அடுத்து பீஜேயின் தப்சீரை தேடுகிறார்.குரானில் தனது காட்டுமிராண்டி விமர்சனத்துக்கு தேவைப்படும் வேளையில் நேரடி விளக்கமும் தேவைப்படும் வேளையில் தப்சீரும் தேடுவது மொள்ளமாறித்தனமாக தெரியவில்லையா?
    ///இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர்P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும். அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து,,,////என்று கதையளக்கிறார்.
    தனது கொள்கைக்கு எதிராக முஸ்லிம்கள் மத நம்பிக்கைக்கு ஆதரவாக பிஸ்மி சொல்லி கோழி அறுக்க ஆள் வைத்திருப்பதும் ,சிலைவணக்கத்தை எதிர்ப்பவர் தனது கடையில் கனேசர்பூஜை செய்து விற்பனையை துவங்கினாலே கோதுமை மாவு வாங்குவோம் என்று கட்டாயத்திர்கேற்ப ஹிந்துவை வைத்து கனேசர்பூஜை செய்து வியாபாரம் பண்ணுவதும் ஒன்றே என்றால் அது எங்ஙனம் என்கிறார்.ஒன்னும் ஒன்னும் இரண்டு என்றாலும் இப்படித்தான் பிராண்டுவாரோ !
    ///இதைத்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் செய்கிறார்கள். அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள். இரண்டு நம்பிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? ////
    அவர்கள் நம்பிக்கையில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எங்களது நம்பிக்கைக்கு குரான் ஆதாரம் .அவர்களது அந்த குறிப்பிட்ட நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்.? எங்களது நம்பிக்கைபடி நாங்கள் மட்டுமே பின்பற்றுகிறோம் .அவர்களது நம்பிக்கையை முஸ்லிம்கள் மீது திணிப்பது ஏன்? முஸ்லிம்களும் ராமர் பிறந்த இடம்தான் என்று நம்பி அந்த இடத்தை கொடுக்க வேண்டுமா ?[பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் எனது கருத்து மாறுபட்டது என்பது வேறு]
    கம்யுநிசத்தையும் ,கம்யுனிச தெய்வங்களையும் கடுமையாக விமர்சித்த ஒரு இணையதளத்திற்கு ஒரு தீவிர கம்யுனிஸ்ட் தனது முக நூலில் இணைப்பு கொடுக்கிறார் அது பற்றி அவரிடம் கேட்டால் நான் அமெரிக்காவின் ஜனநாயகத்தை ஆதரிக்கும் கம்யுனிஸ்ட் என்று பதில் கூறுகிறார் என்றால் அவர் கொள்கையை விட்டு வெளியேறிவிட்டார் ,பிறகு என்ன விசாரணை வேண்டி கிடக்கிறது?கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்காவிட்டாலும் அவர் எப்படி கம்யுனிஸ்ட்டாக இருக்க முடியும்? அவர் தன்னை கம்யுனிஸ்ட் என்றாலும் கட்சியிலிருந்து அவர் கம்யுனிஸ்ட் இல்லை என்றும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்று அறிக்கை வெளியிட்டால் அதற்கு பெயர் தீர்ப்பா?
    இதற்கு மேலும் அதை தீர்ப்பு என்று ஆடினால் , உமது தாந்தோன்றித்தனமாகத் தான் இருக்குமே ஒழிய வாதமாக இருக்க முடியாது.
    துராப்சா லூது ஒரு லூசு என்ற தச்சாளின் தறி கெட்டமைக்கு இணைப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ,செந்தோழன் என்ற பெயரில் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் ஆயிசோ[ரலி] அவர்களின் திருமணம் பற்றிய கருத்தே அவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிவிட்டது. அனால் அது ஜமாத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை.செந்த்லன் என்ற கள்ளபெய்ரை தனது வியாபார்த்திர்க்காக பயன்படுத்தி இருக்கிறார்.இறைவனையும் அவனது தூதர் முஹம்மது நபி [ஸல்] அவர்களையும் மறுத்தாலே அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் துரப்சா பத்து படிகள் மேலே சென்று இஸ்லாத்தை விமர்சித்த பிறகு இஸ்லாத்தை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டார் .இதனை உண்மை என்று அவர் மூலமாகவே தெரிந்த பிறகு துராப்சா முஸ்லிம் இல்லை என்றும் ,அதனால் முஸ்லிம் பெயரால் பதிவு செய்யப்பட தங்களது ஜமாத்தின் திருமண பதிவேட்டில் உள்ள துராப்சாவின் திருமணம் ரத்து ஆகிவிட்டது என்பதை ஜாமாத்து மக்கள் அனைவருக்கும் அறிவிப்பு மூலம் தெரிவிப்பது மரபு என்பதால் அதை செய்துள்ளனர் .துராப்சா இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய பிறகு இனி அவர் ஜமாத்துக்கு கட்டுபடமாட்டார் அதனால் அவரது இல்லற வாழ்வில் ஏதாவது பிரச்னைகள் அதில் ஜமாத்து தலையிடாது என்பதை முன்னறிவிப்பு மூலம் தெரிவிக்கின்றனர்.இங்ஙனம் ஜமாஅத் தனது நிலைபற்றி அறிவிப்பதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறும் செங்கொடியின் மொள்ளாமாரித்தனமாக இது தெரியவில்லையா?
    இஸ்லாத்தில் குழந்தை திருமணம் செய்வதற்கு அனுமதி இருக்கிறதாம் ,அதற்கு ஆதாரம் குர்ஆன் வசனம் 65 ;4 உங்கள் பெண்களில் மாதாவிடாய் அற்றுப் போனவர்கள் விசயத்தில் நீங்கள் சந்தேகப் பட்டால் ,அவர்களுக்கும் மாதவிடாய் ஏற்படாதொருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள் ,,, என்ற வசனத்தை காட்டுகிறார்.இதில் குழந்தை என்று எங்கே இருக்கிறது? ஆனால் வயதாகியும் மாதவிடாய் ஏற்படாதவர்கள் இருக்கிறார்களா இல்லையா? அவர்களுக்கும்திருமணம் நடந்திருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட பெண்கள் பற்றிய நிலையை குரான் அறிவிக்கிறது. இவர் சொல்லுவது போல நடந்த குழந்தை திருமணங்களும் அவர்கள் பருவ வயதை அடையும் வரை தங்களது தாயுடன் இருந்துள்ளார்கள். மேலும் இந்த மூன்றுமாதகால் அவகாசம் மறு திருமணம் செய்வதர்க்ககவே ,ஒரு சில பால்ய விவாகம் நடந்தாலும் அவர்களது கணவர் இறந்திருந்தால் மூன்று மாத காலத்திற்குள் அடுத்த உடன் திருமணம் பண்ணவேண்டிய நிர்பந்தம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை .இங்ஙனம் பலமுறை விளக்கம் அளித்தும் மீண்டும் அந்த வசனத்தை தூக்கி கொண்டு வருவதும் செங்கொடியின் மொள்ளமாரித்தனமே

    • S.Ibrahim மே 20, 2012 இல் 8:16 பிப #

      செங்கொடி ///காணொளியில் அந்த முல்லா இப்படி ஆகிவிட்டதே என்று பலர் வருந்துவதாக குறிப்பிட்டிருப்பது ஒரு சமாளிப்பு தான். ஏனென்றால், அவர் அதை பிறரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்////
      அவர் அதை பிறரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்.ஆனால் செங்கொடி அடித்ததை சவுதியிலிருந்து அடித்ததை நேரில் பார்த்து சொல்லுகிறார்.
      ////அவர் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அல்ல. நடந்தது தவறு என்றவர் உணர்ந்திருக்கிறார், அதனால் தான் தோழருக்கு ஆறுதல் கூறும் நோக்கில் அப்படி பேசியிருக்கிறார். தாக்குதல் நடக்கவில்லை என்றால் கடையநல்லூரைச் சேராத அவர் வருந்தியவர்கள் தான் அதிகம் என்று கூறியிருக்க வேண்டியதில்லை////
      முல்லா உணர்வுகளை செங்கொடி எப்படி உணர்ந்தார்?ஆறுதல் கூறும் நோக்கில் அவர் பொய் சொல்லியிருக்கிறாரா?அப்படியெனில் அந்த முல்லா ஒரு பொய்யர் என்பதை நிருபிக்க வீடியோ எடுத்துள்ளார்களா? இவர் கூறுவதெல்லாம் யூகம் இல்லை .
      அடித்ததை நேரில் பார்த்ததாக் கூறுபவர் கையில் உள்ள செல்போனில் வீடியோ எடுத்திருக்கலாம் .அல்லது போட்டோ எடுத்திருக்கலாம்.அடித்ததை பீனிக்ஸ் பறவை என்ற கள்ளர் பார்த்ததாக கூறுகிறார்.ஒரு நல்லவரை கூற சொல்லுங்கள் ஏற்றுகொள்வோம் .

  23. S.Ibrahim மே 20, 2012 இல் 8:28 முப #

    மணி ///நீங்க அங்கே இருந்தீங்களா? இல்லைன்னா எப்படி நீங்க அங்க அடி நடக்கலைன்னு ஸ்ட்ராங்கா சொல்லுறீங்க. ////
    நீங்கள் நடு நிலை தவறிவிட்டீர்கள்.செங்கொடி மட்டும் அங்கு இருந்தாரா?
    /// செங்கொடி ஆதாரத்த கேக்குரப்போ அடி நடந்ததாகத்தான் தெரிகிறது. ///
    செங்கொடி ஆதாரத்தை பாக்கறப்போ அடிநடக்கவில்லை என்பது தெரியவில்லையா? முல்லா அடிக்கவேண்டும் என்ற சிந்தனையில் வந்தார்கள் என்று கூறுவதை துராப்சா கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதை பார்க்கவில்லையா? அவரே அதை ஆமோத்திக்கும் பொழுது சவுதியில் இருக்கும் செங்கோடிக்கு மட்டும் அடித்தது அறிந்தது எப்படி? இத்தனைக்கும் துராப்சவை சுற்றி நிற்பவர்கள் அவரது அபிமானிகள் .அந்த இடத்தில் அவர் நடந்ததை முல்லாவிடம் கூறியிருக்கலாமே

  24. nallurmuzhakkam மே 24, 2012 இல் 1:42 பிப #

    பொய்ராஹிம்,

    பைத்தியம் என்றும், பொய்ராஹிம் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பவை சுட்டுச் சொற்களல்ல, காரணச் சொற்கள்.

    கடையநல்லூரில் நிகழ்ந்தது காட்டுமிராண்டித்தனம் என்று ஏன் சொல்கிறேன்? பொய்யாக ஒரு குற்றத்தைச் சுமத்தி, அதன் மீது எந்த விசாரணையும் நடத்தப்படாமல் தண்டனை தரப்பட்டிருக்கிறது என்றால் அது காட்டு மிராண்டித்தனமா? இல்லையா? இந்த அடிப்படையில் நின்று பொய்ராஹிம் வாதிக்கிறாரா? இல்லை.

    இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஐந்தாக பிரிக்கலாம்.

    1. குற்றம் – தோழர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? இது குறித்து பொய்ராஹிம் மூச்சு விடமாட்டார். லூத் மீது அவதூறு கட்டுரையை இணையத்தில் எழுதினார் என்பது தான் தோழர் மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டு. இதை தோழர் மறுக்கிறார். நிரூபிக்க வேண்டிய கடமை யாருக்கு உண்டு. பொய்யாக குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க வேண்டும். அல்லது அநீதியாக ஆதரித்து நிற்பவர்கள் நிரூபிக்க வேண்டும். பொய்ராஹிம் நிரூபிக்க முன்வருவாரா?

    2. அவதூறா? விமர்சனமா? – லூத் எனும் லூஸ் கட்டுரையில் வேதங்கள் கூறும் செய்திகளுக்கு மாறான எதுவும் இடம் பெறவில்லை. எடுத்தாளப்பட்டுள்ள வேதங்களின் செய்திகள் உள் நோக்கத்துடன் திரிக்கப்படவில்லை. செய்திகள் மாற்றி குறிப்பிடப்படவில்லை. அதாவது குரானின் செய்தி பழைய ஏற்பாட்டில் இருப்பதாகவோ, பழைய ஏற்பாட்டின் செய்தி குரானில் இருப்பதாகவோ குறிப்பிடப்படவில்லை. வேதங்களின் செய்திகள் இதுவரை வழங்கப்பட்டு வந்திருக்கும் பொருளுக்கு மாற்றமாய் கூறப்படவில்லை. தலைப்பை உண்மைப்படுத்தும் கேள்வி கட்டுரையில் எழுப்பபட்டிருக்கிறது. இப்படி வேதங்களை ஒப்பிடுவதற்கோ, அல்லது விமர்சனம் செய்வதற்கோ யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லை. என்றால் இது விமர்சனமா? அவதூறா? அவதூறு என்று கூறுபவர்கள் எப்படி இது அவதூறு என்பதை விளக்க வேண்டும். பொய்ராஹிம் விளக்குவாரா?

    3. விசாரணை – குற்றம் சுமத்தப்பட்டவரிடம், சுமத்தப்பட்ட குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? இல்லையா? அப்படி ஒரு விசாரணை நடத்தப்படவே இல்லை. இது குறித்து பொய்ராஹிம் மூச்சு விட்டிருக்கிறாரா? அல்லது இனியாகிலும் விடுவாரா? விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு கூறுவது மொள்ளமாரித்தனமா? இல்லையா? இது குறித்த அறவுணர்ச்சி கடையநல்லூர் காட்டுமிராண்டிகளுக்கு இல்லை என்பது வெளிப்படையாகி விட்டது. அநீதியாக அதை ஆதரித்து நிற்கும் பொய்ராஹிமுக்காவது உண்டா?

    4. போலித் தீர்ப்பு – கொடுக்கப்பட்ட தீர்ப்பு தீர்ப்பு கொடுப்பதற்கு தகுதியானவரால் கொடுக்கப்பட்டதா? தகுதியற்றவர்களால் கொடுக்கப்பட்டதா?தகுதியற்றவர்களால் கொடுக்கப்படும் தீர்ப்புகள் கட்டைப்பஞ்சாயத்து என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. பொய்ராஹிமுக்கு உண்டா?

    5. தண்டனை – கொடுக்கப்பட்ட தண்டனையை நியாயப்படுத்த முடியாது என்பதால்; அது தண்டனையே அல்ல அறிவிப்புதான் என்று வம்படி செய்கிறார் பொய்ராஹிம். அறிவிப்பு, தீர்ப்பு, தண்டனை இந்த மூன்றையும் குழப்பிக் கொள்ளாமல் தன் நியாயப்படுத்தலைச் செய்ய முடியாது என்பதால், திட்டமிட்டு மூன்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். இவைகளின் வேறுபாடுகளை உணர்த்தி விளக்கினால் அந்த விளக்கத்திற்கு பதிலளிக்காமல் வெறுமனே உதாரணங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். அதையும் விளக்கினால் எதற்காக உதாரணம் கூறப்பட்டதோ அதை விட்டுவிட்டு உதாரணத்தை மட்டுமே பதிலாக மாற்றிவிடுவார். இதனால் தான் மீண்டும் மீண்டும் நாம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதிருக்கிறது. நேர்மையான விவாதத்தை நடத்த பொய்ராஹிம் முன்வருவாரா?

    இவைதான் இந்த விவாதம். தற்போது பொய்ராஹிம் இதைத்தான் வாதித்துக் கொண்டிருக்கிறாரா? வாதித்தாலும் அதை நேரிய முறையில் செய்கிறாரா? பொய்ராஹிம் இப்போது கேள்வி எழுப்புவதைப் போலன்றி, ஒரு பைத்தியத்தனமான விவாதக்காரருடன் விவாதிக்கப் போகிறேன் என்பதை தொடங்குவதற்கு முன்னும், அதன் பின்னரும் தெளிவாக அறிவித்திருக்கிறேன். \\\இவருடன் ஏற்கனவே விவாதித்த அனுபவம் உண்டு. இனி இவருடன் விவாதிப்பதில் பலனில்லை என எண்ணும் அளவுக்கு தலைப்பிற்கு அப்பாற்பட்டதை பேசுவது, என்ன கேட்கப்பட்டதோ அதைவிடுத்து வேறொன்றை பதிலாக கூறுவது, பிடிவாதமாக பதில் கூற மறுப்பது என நேர்மையற்ற முறையில் விவாதத்தை பிடிவாதமாக மாற்றுபவர்/// \\\இப்ராஹிம் நேர்மையானவர் என்றோ சரியான வாதங்களை சான்றுகளை எடுத்து வைத்தால் அவர் உண்மைகளை உணர்ந்து கொள்வார் என்றோ நான் எதிர்பார்த்து இந்த விவாதத்தை தொடங்கவில்லை. வாதம் என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துகளைப் பார்த்து மதம் காரணமாக கொஞ்சம் விலகலில் இருக்கும் நேர்மையான சிலரும் உண்மைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் தான்/// எனவே பைத்தியக்காராருடன் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறாரா எனும் பொய்ராஹிமின் கேள்வி பொருளற்றது.

    பொய்ராஹிம் தோழர் தாக்கப்படவில்லை என்பதை சொல்வதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்து கொண்டிருக்கிறார். அடிக்கும் நோக்கத்தோடு இருந்தார்கள் என்பதை பொய்ராஹிம் ஒப்புக் கொள்கிறார். தாக்குவதற்கான தார்மீகம் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த கூட்டம் குழுமியிருக்கிறது. ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் தடுக்கும் அளவுக்கு அக்கூட்டம் வல்லமையுடன் இருக்கிறது. ஆனாலும் தாக்கப்படவில்லை என்று பொய்ராஹிம் நம்புகிறார். அதனால் நாமும் நம்ப வேண்டும்.

    கூட்டத்தில் இருந்த உறவினர்கள் சிலர் அடிக்காதீர்கள் என்று தடுக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அனைவரும் கையைக் கட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் என்று பொய்ராஹிம் நம்புகிறார். அதனால் நாமும் நம்ப வேண்டும்.

    அடித்து, ஊரைவிட்டு விரட்டி, எந்த இடத்திலிருக்கிறோம் என்பதை மனைவிக்கும் கூட தெரிவிக்காமல் இருக்கும் நிலையில்; இருந்த வீடு, நடத்திய கடை, மனைவி, மூன்று குழந்தைகள், தாயார், சகோதரி உள்ளிட்டு வாழ்ந்த குடும்ப வாழ்க்கை என அனைத்தும் பறிபோய்விடுமோ எனும் அச்ச உணர்வில், பல்வேறு முனைகளிலிருந்து வந்த மிரட்டல்களினால் வேறு வழியற்ற நிலையில் தாக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த மீள் சேர்ப்புக் கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதை மறைமுகமாக குறிப்பிடவில்லை என்கிறார் பொய்ராஹிம். அவர் அப்படி குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அங்கு நடந்த உரையாடல் தாக்கப்பட்டதையே குறிக்கிறது என்பது அங்கு அமர்ந்திருந்த அனைவருக்குமே தெரியும். தாக்கப்பட்டதை உணர்ந்து ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்கும் முறையில் பேசிய பேச்சுக்களை இடைமறித்து தான் தாக்கப்பட்டேன் என்று கூறுவதற்கு தோழர் ஒன்றும் பொய்ராஹிம் இல்லையே. மாறாக தாக்கப்பட்டீர்களா? என்று அங்கு கேள்வி எழுப்பபடவே இல்லை. எழுப்பியிருந்தால் தான் தாக்கப்பட்டதை தோழர் கூறியிருப்பார். தவிரவும், உள்ளங்கை புண்ணை கண்ணாடி வைத்துப் பார்க்கும் நிலையில் அவர்களும் இல்லை.

    மட்டுமல்லாது, பொய்ராஹிம் ஒரு கிறுக்கர் தான் என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டுமா? இதோ, \\\ஒருவர் அடிங்க என்று சொன்னாரா இல்லையா? என்றால் சொன்னார் என்பதற்கே ஆதாரம் ஆகும் .அதைப்போலவே அடிக்காதீர்கள் என்று ஒரு குரல் கேட்டால் ,அடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் ஆகாது .அடிக்காதீர்கள் என்று ஒருவர் கூறினார் என்பதற்கே ஆதாரம் ஆகும்.அடிங்க என்று ஒருவர் சொல்லை கேட்டு அடித்தார்கள் என்பதற்கு அந்த குரலே ஆதாரம் என்றால் அப்படி அடிக்க வந்தவர் அடிக்காதீர்கள் என்று மற்றொருவர் சொல்லை கேட்டு அவர் அடிக்கவில்லைஎன்பதற்கும் அதுவே ஆதாரம் ஆகும் .நான் அடித்தேன் என்று குரல் பதிவாகியிருந்தால் அது அடித்ததற்கு ஆதாரகமாக கொள்ளமுடியும்/// தாக்கவேண்டும் என்று வெறி கொண்டு கூடியிருக்கும் கூட்டத்திலிருந்து அடிக்காதீர்கள் என்று குரல் வந்திருக்கிறது என்றால்; அப்படி கூறியவர்கள் ஏன் கூற வேண்டும்? அடி விழுந்தால் மட்டுமே அடிக்காதீர்கள் என்று கூற முடியும். யாரும் அடிக்கவில்லை என்றால் ஏன் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டும்? இது மட்டுமா, எதற்கு அழைத்து வரச் சொன்னீர்கள் அடிக்கவா? என்றும் குரல் பதிவாகி இருக்கிறது. பொய்ராஹிமின் அகராதியில் இதற்கு என்ன பொருள்? பொய்ராஹிமின் வழிக்கே வருவோம். அடிங்க என்று குரல் பதிவாகியிருக்கிறது என்றால், அடிங்க என்று கூறியிருப்பதற்குத் தான் அது ஆதாரம். சரி, ஏன் அடிங்க என்று கூறினார்கள்? அடிக்காதீர்கள் என்று குரல் பதிவாகியிருப்பது கூறியதற்குத்தான் ஆதாரம் என்றால் ஏன் அடிக்காதீர்கள் என்று கூறினார்கள்? இந்தப் பின்னணியில் தான் முன்னர் நான் எழுப்பிய கேள்வியை பரிசீலிக்க வேண்டும். தாக்க வேண்டும் என்று வெறியேற்றப்பட்ட கூட்டம், மொத்தமாக திரண்டு தோழரை ஒரு சொல்லைக் கூட உச்சரிக்க விடாத அளவுக்கு வல்லமை பெற்றிருக்கும் இடத்தில், சிலர் அடிக்காதீர்கள் என்று தடுத்திருக்கும் இடத்தில், எதற்கு அழைத்தீர்கள் அடிப்பதற்கா என்று அதற்றும் இடத்தில் எந்த அறிவு நாணயமும் இல்லாமல் யாரும் அடிக்கவில்லை என்று எந்த அடிப்படையில் நம்புவது? எந்த அடிப்படையும் பொய்ராஹிமுக்கு தேவையில்லை, மதம் எனும் மதம் பிடித்திருந்தால் போதும். அதனால் தான் அவர் பொய்ராஹிம். நான் அடித்தேன் என்று பதிவு இருந்தால் தான், அடித்ததற்கு ஆதாரமாகும் என்கிறார் பொய்ராஹிம். அந்தக் கூட்டம் என்ன அடித்தார்களா? இல்லையா? என்று கேள்வி எழுப்பவா கூட்டப்பட்டிருந்தது. அடிப்பதற்காகக் கூடிய கூட்டத்தில் யாரும் நான் அடித்தேன் என்று கூற வேண்டிய அவசியமென்ன? பாவம் மதத்தைக் காப்பாற்ற பொய்ராஹிம் படும் பாடு நமக்கே பரிதாபத்தை வரவழைக்கிறது.

    டி.என்.டி.ஜேவினர் நையப்புடைத்தோம் என்று கூறினால் அது நையப்புடைத்தோம் என்று கூறியதற்கு ஆதாரமா? அல்லது நையப்புடைத்ததற்கு ஆதாரமா? டி.என்.டி.ஜேவினர் கூறினால் நம்புவேன் என்று கூறுகிறார் பொய்ராஹிம். நிச்சயம் அந்தக் கூட்டத்தில் மகஇகவினர் வந்து அடிங்கள் என்று கூறியிருக்க வாய்ப்பே இல்லை. ஏன் கே.டி.என்.ஜேவினர் கூறினால் நம்பியிருக்க மாட்டாரோ பொய்ராஹிம்? இன்னும், மனித நீதி பாசறை, த.மு.மு.க உள்ளிட்ட வேறு சில இயக்கத்தினரும் கடையநல்லூரில் இருக்கிறார்கள் அவர்களில் யாரேனும் கூறியிருந்தால் அது பொய்ராஹிமின் நம்பிக்கைக்கு உடைத்ததாக ஆகியிருக்காதோ. ஒருவர் கூறியிருப்பதை உண்மையா? இல்லையா? என்பதை கண்டறிய அவர் என்ன இயக்கத்தில் இருக்கிறார் என்பதை கண்டறிய வேண்டுமா? குரான் அல்லா தந்தது என்று முகம்மது கூறினால் அது முகம்மது கூறியதற்கு மட்டுமல்ல அது அல்லா தந்தது என்பதற்கும் ஆதாரம் ஏனென்றால் அதை பொய்ராஹிமும் நம்புகிறார். கவனிக்கவும், அது உண்மையா பொய்யா என்பது அவருக்கு முக்கியம் இல்லை, அவர் நம்புகிறாரா? இல்லையா? என்பது தான் முக்கியம். அவர் நம்பினால் பொய்யாக இருந்தாலும் அது உண்மை. நம்பாவிட்டால் உண்மையாக இருந்தாலும் அது பொய்.

    ஒரு விசயத்தைக் கவனிக்கலாம். கடையநல்லூரில் நடந்ததைப் பற்றி பொய்ராஹிமுக்கு ஒரு சுக்கும் தெரியாது என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன். இதோ அதற்கு இன்னோரு ஆதாரத்தையும் அவர் வழங்கியிருக்கிறார், \\\இத்தனைக்கும் துராப்சவை சுற்றி நிற்பவர்கள் அவரது அபிமானிகள்/// அதாவது மீள் சேர்ப்புக் கூட்டத்தில் தோழரைச் சுற்றி நிற்பவர்களெல்லாம் தோழரது அபிமானிகளாம். எதையும் தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளவும் முயலாமல் சகட்டுமேனிக்கு அவித்து விடுவது பொய்ராஹிமுக்கு கைவந்த கலை. அந்தக் கூட்டத்தில் தோழரைச் சூழ நிற்பவர்கள் தோழரது அபிமானிகள் அல்லர். அபிமானிகள் என்று பொய்ராஹிம் கூறியிருக்கிறார் என்றால் அதை நிரூபிக்க பொய்ராஹிம் தயாரா?

    இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும், பொய்ராஹிமின் குயுக்தியைக் பாருங்கள். முதலில் கேட்பொலியில் பிற்சேர்க்கைக்கும் வாய்ப்பிருக்கிறது என்றார். நிரூபித்துக் காட்டுங்கள் என்றதும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். மீண்டும் நான் வலியுறுத்தியதும். விட்டுவிட்டால் விட்டுவிட வேண்டியது தானே நிரூபியுங்கள், நிரூபியுங்கள் என்று ஏன் கூறுகிறீர்கள் என்றார் பொய்ராஹிம். அவருக்கு உறுதியாக தெரியாத ஒன்றை ஏன் கூற வேண்டும்? இப்போது நைச்சியமாக இப்படி எழுதுகிறார், \\\இன்னும் என்ன தில்லு முல்லுகள் எல்ல்லாம் பண்ணியிருப்பார் என்று பாருங்கள்/// அதாவது, நேரடியாக கூறினால் பிரச்சனை வருகிறது என்பதால் மறைமுகமாக கூறுகிறார். அதாவது, ஆதாரங்களை வைத்தால் ஒரு பக்கம் அவரது யூகங்களை மட்டுமே கூறி வம்பளக்கிறார். மறுபக்கம் ஏதோ தில்லு முல்லு செய்திருப்பதாக பிம்பம் ஏற்படுத்த முயல்கிறார். இது தான் பொய்ராஹிமின் அசல் முகம். மீண்டும் நான் கூறியதையே கூறுகிறேன், அவர் நம்பினால் பொய்யாக இருந்தாலும் அது உண்மை. நம்பாவிட்டால் உண்மையாக இருந்தாலும் அது பொய். கடையநல்லூரில் என்ன நடந்தது என்பது பொய்ராஹிமுக்கு தெரியாது. ஆனால் அங்கு பொய்க்குற்றம் சாட்டி, விசாரணையின்றி, தண்டித்திருக்கிறார்கள் எனும் உண்மை பொய்ராஹிமின் மதத்துக்கு இழுக்காக தெரிகிறது. அதனால் தான் அவர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார். பொய்க்குற்றம் சாட்டியிருக்கிறார்கள் என்பதையோ, விசாரணை செய்யவில்லை என்பதையோ விரிவாக எடுத்துக் கொண்டால் வேசம் கலைந்து விடும் என்பதால் அவற்றை கடந்து சென்றுவிட முயல்கிறார் பொய்ராஹிம், அதேநேரம் தாக்கினார்கள் என்பதை திரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் வெறுமனே அவரது யூகங்களை மட்டுமே கூறி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார் இதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மீண்டும், மீண்டும் நான் எழுப்பிக் கொண்டிருப்பது தான். கடையநல்லூரில் நடந்தது என்ன என்பதை ஆதாரங்களுடன் பொய்ராஹிம் நிரூபிக்கட்டும்.

    லூத் ஒரு லூஸ் எனும் கட்டுரை விமர்சனமா? அவதூறா? இது குறித்து பொய்ராஹிம் ஏன் பேச மறுக்கிறார்? எத்தனை கேள்வி கேட்டிருக்கிறேன். அவை எவற்றுக்கும் வம்படியாய் பதில் கூற மறுக்கும் பொய்ராஹிம், கேட்காத ஒன்றை எடுத்துக் கொண்டு ஏதேதோ கூறியிருக்கிறார். கட்டுரை எழுதிய தஜ்ஜால் ஒரு இடத்தில் விளக்கம் தேவையில்லை என்று எழுதிவிட்டு வேறொரு இடத்தில் அறிஞர்(!) பிஜேவின் விளக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? ஒரே குறிப்பிற்கு ஒரு இடத்தில் விளக்கம் தேவை என்றும், வேறொரு இடத்தில் விளக்கம் தேவையில்லை என்றும் எழுதினால் அதை முரண்பாடு எனலாம். ஆனால் விளக்கம் தேவையில்லை என்று கூறியிருப்பதும், விள்க்கத்தை எடுத்துக் காட்டியிருப்பதும் இரண்டு வேறுபட்ட கருத்துக்களில். இதில் பொய்ராஹிமுக்கு என்ன பிரச்சனை? மதத்தில் ஊறிக் கிடப்பவர்களுக்கு இது வாடிக்கை தான். ”உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையல்லவா? அதனால் உங்களுக்கு எதன் மீதும் நம்பிக்கை இருக்கக்கூடாது” அல்லது “உங்களுக்கு எதன் மீதாவது நம்பிக்கை இருந்தால் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்கிறார்கள். இதை விதண்டாவாதம் என்பதா? நேர்மையாக விவாதிக்க முடியாத அயோக்கியத்தனம் என்பதா? எந்த இடத்தில் விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறோமோ அந்த இடத்தில் விளக்கம் தேவையில்லை, எந்த இடத்தில் விளக்கம் தேவையோ அந்த இடத்தில் விளக்கம் எழுதுகிறோம். இதை நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. விளக்கம் தேவையில்லை என கருதிய இடத்தில் விளக்கம் தேவை என்பதை சுட்டிக் காட்டுங்கள் அது நேர்மை. பொய்ராஹிமின் மறதியை உத்தேசித்து அந்த கேள்விகள் மீண்டும் \\\லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம். அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கதை குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இடம் பெற்றுள்ளது. குரானில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? பழைய ஏற்பாட்டில் எதிலிருந்து எதுவரை இருக்கிறது? என்பது தெளிவாக பிரித்தறிவித்து காட்டப்பட்டிருக்கிறது. குரானில் இருப்பதை பழைய ஏற்பாடு என்றோ, பழைய ஏற்பாட்டில் இருப்பது குரானில் என்றோ மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? குரானிலோ, பழைய ஏற்பாட்டிலோ இல்லாத ஒன்றை புதிதாக புனைந்து குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இருக்கிறது என்று பொய்யாக கூறப்பட்டுள்ளதா? உள்ளது உள்ளபடி கூறாமல் திரித்து வேறொன்றாக கூறப்பட்டுள்ளதா? கற்பனையான இடைச் செருகல்கள் இருக்கிறதா? இயல்பான பொருளுக்கு மாற்றமாக தவறான பொருள் கூறப்பட்டுள்ளதா? பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? என்ன தான் பிரச்சனை அந்தக் கட்டுரையில்? கிருஸ்தவ தளங்களில் தேடினால் இது போன்ற ஆயிரம் படங்கள் கிடைக்கும். அந்தக் கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது குரானில் இருக்கும் அறைகுறையான கதையை பழைய ஏற்பாட்டின் உதவியுடன் முழுமைப்படுத்தி கட்டுரையாளர் தன்னுடைய தேடலாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார் அவ்வளவு தான். இவ்வளவு தெளிவாக செய்யப்பட்டிருப்பது விமர்சனமா? அவதூறா? பதில் கூறும் திறன் உங்களில் யாருக்காவது உண்டா?/// நேர்மையின் கோணல் என்று ஏகடியம் செய்தால் மட்டும் போதாது. நேர்மையாய் இருப்பதற்கும் முயல வேண்டும்.

    பாபர் பள்ளிவாசல் குறித்து, நம்பிக்கையை காட்டி பாசிசத்தனமாய் இருப்பதில் மதவாதிகளுக்கிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்பது தான் நான் குறிப்பிட்டது. அதாவது, வம்படியாய் பார்ப்பன பாசிசங்கள் ராமன் இங்கு தான் பிறந்தான் என்பதை நாங்கள் நம்புகிறோம் அதனால் நீங்களும் நம்புங்கள் என்கிறார்களோ அதேபோல் தான் பொய்ராஹிமும் அது அவதூறு என்று நாங்கள் நம்புகிறோம் அதனால் நீங்களும் நம்புங்கள் என்கிறார். அவர்களின் நம்பிக்கை மசூதியை இடிக்கச் செய்தது, பொய்ராஹிம் போன்றோரின் நம்பிக்கை தோழரை தாக்கச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் பார்ப்பன பாசிசங்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பாதிக்கப்பட்ட நாங்கள் பொய்ராஹிம் போன்றோரின் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கிறோம். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் ஆணிவேர் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை எங்கள் நபியை அவதூறு செய்கிறது என்று சிலர் நம்பியது தான். அந்த நம்பிக்கை சரியா? அதை மீளாய்வு செய்ய முன்வருவார்களா? என்பது தான் கேள்வி. பொய்ராஹிம் போன்றோர் ஒருகாலமும் மீளாய்வுக்கு உடன்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தலைக்குள் ஏறி இருப்பது மதம்.

    குழந்தைத் திருமணம் குறித்த வசனம் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கும் வசனம் தான். எப்படி? முகம்மது வாழ்ந்த காலத்தில் குழந்தைத் திருமணம் சரியா? தவறா?; செய்யலாமா? கூடாதா? என்ற கேள்வியே எழுந்திருக்காது. ஏனென்றால் அப்போது அது தான் யதார்த்தம். அந்த யதார்த்தத்திலிருந்து தான் விவாகரத்தானவர்களுக்கான இத்தா காலம் யாராருக்கு எவ்வளவு காலம் எனும் விதி தோன்றுகிறது. அந்த அடிப்படையிலிருக்கும் குரான் வசனம் தான் 65:4. அது கூறும் ’மாதவிடாய் ஏற்படாதவர்கள்’ என்பவர்கள் யாவர்? பொய்ராஹிம் கூறுகிறார் விதிவிலக்காய் வயதாகியும் மாதவிடாய் ஏற்படாதவர்களைத் தான் அது குறிப்பிடுகிறது என்று. இது சரியா? லட்சத்தில் அல்லது கோடியில் ஒருவருக்கு இது போன்ற குறைபாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த விதிவிலக்கை முகம்மது ஏன் தன்னுடைய குரானில் குறிப்பிட வேண்டும்? முகம்மதின் சம காலத்தில் இந்தக் குறைபாடுடையவர்கள் இருந்தார்கள் என்று யாராவது கூற முடியுமா? அல்லது இப்படி ஒரு குறைபாடு சமூகத்தில் இருக்கிறது என்று முகம்மதுவுக்கு தெரிந்திருந்தது என்பதை எதன் மூலமாவது உறுதிப்படுத்த முடியுமா? ஆனால் குழந்தைத் திருமணம் முகம்மதின் சமகாலத்தில் நடப்பில் இருந்திருக்கிறது, முகம்மதே குழந்தைத் திருமணம் செய்தவர்தான். அவர் தெரிந்த ஒன்றை தன்னுடைய குரானில் கூறுவாரா? தெரியாத ஒன்றையா? முகம்மதியர்கள் நம்புவது போல் குரானுக்கும் முகம்மதுக்கும் சம்மந்தமில்லை. அது அல்லா இறக்கியது(!) என்பது சரியாக இருந்தால், குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் வசனங்கள் நேரடியாகவே குரானில் இடம் பெற்றிருக்கும். முகம்மது குழந்தைத் திருமணம் செய்ததை அல்லா ஏற்றிருக்க மாட்டார். அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணத்தை தடை செய்ய முடியாதபடியான சிக்கல் என்று எதுவும் இருந்ததில்லை. முக்காலமும் தெரிந்தவராக அல்லா இருந்திருந்து அவர்தான் குரானை இறக்கினார் என்றால் குழந்தைத் திருமணத்தை தடை செய்வது அவருக்கு நோக்கமில்லை. எவ்வாறென்றால், திருமணத்திற்கென்று வயது வரம்பு எதையும் விதிக்கவில்லை, விரும்பாத நிலையில் திருமணம் செய்யாதீர்கள் என்றும், இருவரும் செய்து கொள்ளும் உடன்படிக்கை என்றும் தான் கூறியிருக்கிறார். தினம் நான்கு சாக்லேட் தருகிறேன் என்று கூறினால் எந்தச் சிறுமியும் திருமணத்திற்கு சம்மதிப்பாள். உடன்படிக்கை செய்வதும் பெரிய விசயம் ஒன்றுமில்லை. எனவே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று அடித்து நெளித்து பொருளெடுத்து குழந்தைத் திருமணத்திற்கு தடை என்பதை விட, மாதவிடாய் ஏற்படாதவர்கள் எனும் சொற்களிலிருந்து குழந்தைத் திருமணத்திற்கு அனுமதி என்று கொள்வது தான் பொருத்தமானது. இந்த வசனத்தின் வேறு சில மொழி பெயர்ப்புகளையும் பார்க்கலாம்.

    .. .. those who have no courses .. .. யூசுஃப் அலி

    .. .. those who have it not .. .. பிக்தல்

    .. .. those who have not menstruated as yet .. .. அர்பெர்ரி

    .. .. those too who have not had their courses .. .. ஷாகிர்

    .. .. those who do not experience menstruation .. .. சர்வார்

    .. .. those who have no menstruation due to young age or a disease .. .. மாலிக்

    .. .. those who have not yet menstruated .. .. கரிபுல்லா

    இவைகள் ஒருபக்கம் இருக்கட்டும். முகம்மது செய்தது கற்பழிப்பா இல்லையா? இனி வரும் அனைத்து காலங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர் குழந்தைத் திருமணம் செய்தது சரியா? பொய்ராஹிம் இந்தக் கேள்விகளை கண்டு கொள்ளாமல் நழுவிவிட்டது ஏன்?

    இஞ்சீலையோ, பழைய ஏற்பாட்டையோ வாசிக்கக் கூடாது எனும் ஹதீஸ் புஹாரியில் எந்த இடத்திலிருக்கிறது? இதை தெரிந்து கொள்ளும் ஆவலிலிருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தியிருந்தும், அடுத்த பதிவில் கூறுகிறேன் என்று பொய்ராஹிம் கூறியிருந்தும் கடந்த இடுகையில் அவர் குறிப்பிடவில்லை. ஏன்? மீண்டும் ஒருமுறை தெளிவாக கூறிவிட்டு பழைய கேள்விகளை வைக்கலாம். இது இந்த விவாதத்திற்கு தொடர்பற்ற ஒன்று தான் அறிதலுக்காகவே கேட்கிறேன். அல்லது போகிறபோக்கில் எதற்கும் இருக்கட்டுமே என்று ‘குன்ஸாக’ அடித்துவிட்ட ஹதீஸா அது? \\\உமர் பழைய ஏற்பாட்டை படிப்பதை முகம்மது கண்டித்தார் என்பது புஹாரியில் எந்த எண்ணில் இருக்கிறது என்பதை கூறுவதற்காக காத்திருக்கிறேன். இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டு அது எனக்கு தேவைப்படுகிறது. முதலில் பழைய ஏற்பாடு என்றார் இப்போது இஞ்ஜில் என்கிறார். இஞ்ஜில் என்றால் அது பழைய ஏற்பாடா? புதிய ஏற்பாடா? அடுத்து அந்த ஹதீஸின் தேவைப்படும் காலத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற குறிப்பு இருக்கிறதா? அது தேவைப்படாத காலம், இது தேவைப்படும் காலம் என்பதை யார் முடிவு செய்வது? செய்தது? முகம்மது செய்யச் சொன்னதை செய்வது சுன்னா என்றால் கண்டித்ததை செய்வதற்கு என்ன பெயர்?///

    • S.Ibrahim மே 29, 2012 இல் 5:24 முப #

      செங்கொடி என்ற காபிரே , ///காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன்.////
      இப்படி சொன்னவர் பொய்யரா இல்லையா? இப்படி பச்சை பொய் சொன்ன காபிர் செங்கொடியை பொய்யர் என்று அழைத்தால் மிகையாகாது.அல்லது செத்தகொடி என்று சொன்னால் கூட உண்மைக்கு மாறாக இருக்காது.
      ///ஆயிசா விசயத்தில் தோழர் எப்போதோ இட்ட ஒரு பின்னூட்டத்தை இழுத்துக் கொண்டு ஓடிவந்தது பொய்ராஹிம் தான். ////
      சற்றேறக்குறைய 20 நிமிடங்கள் ஓடும் கேட்பொலியில், “அவனை வெளியில் இழுங்கள்” என்று கூச்சலிடுவதையும்; உறவினர்கள் “எதற்க்கு அழைத்து வரச்சொன்னீர்கள் அடிக்கவா?” என்று கேட்பதும்; சிலர் “அடிக்காதீர்கள்” என்பதும்; ”அப்படித்தான் அடிப்போம்” என்று சிலர் வெறிக் கூச்சலிடுவதும் காதுள்ளவர்களுக்கு கேட்கும்.
      1 .ஆடை அவிழ்ந்தவன் கை போன்று நண்பருக்கு உதவ வேண்டும் என்பார்கள்.ஆனால் நண்பர் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் காபிர் செ.கொ.இணையதளத்தில் விவாதம் நடத்தி காப்பாற்றுவார்.துராப்சாவுக்கு கம்யுனிசத்தையும் காட்டுமிராண்டித்தனமாக இஸ்லாத்தை விமர்சிப்பதையும் கற்றுக் கொடுத்த காபிர் செ.கொ .அந்த வேலை எப்படி எங்கிருந்து செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுக்கவில்லை.முஸ்லிம் பெயரில் வெளிநாட்டிற்கு சென்று ,தமிழர்களே இல்லாத கம்பெனியில் சேர்ந்து ,காபிர் பெயரில் கள்ளத்தனமாக இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்ற ரகசியத்தை துராப்சாவுக்கு வேண்டுமென்றே சொல்லி கொடுக்க வில்லை.துராபசவை வைத்து முஸ்லிம் பகுதியில் இவரது காட்டுமிராண்டித்தனமான விமர்சனத்தை ஆழம் பார்த்து அதன் எதிர்விளைவுகளைய அறிய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.பாவம் துராப்சா கர்சிப்பை தலையில் கட்டி செல்லும் நிலை.இஸ்லாத்தை அறியாமை என்று சொன்னவர் இஸ்லாத்தில் அறியாமை நிலைக்கு சென்றுவிட்டார்.தோழர் மீது சுமத்தபப்ட்ட குற்றம் லூத்நபி[அலை]அவர்கள் பற்றி அவதூறு கட்டுரை எழுதியது ,இதை தோழர் மறுக்கிறார்.போய்ராஹீம் நிருபிக்க தயாரா என்கிறார் இதோ நிருபிக்கிறேன் .
      ஒருகடையில் கள்ளச்சாராயம் இருக்கிறது ,போலிஸ் அவரை கைது செய்து கள்ளச்சாராயம் இவர் தயாரித்தார் என்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்கிறது விசாரணையில் அவர் நான் தயாரிக்கவில்லை ,கடையில் விற்பனைக்காக மக்கள் பார்வையில் வைத்து இருந்தேன் என்று கோட்டார் முன்னிலையில் சொல்கிறார்.கோட்டார் என்ன முடிவு எடுப்பார் ?இவர் மீது குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டை தாக்கல் செய்யுங்கள் என்பார்.அந்த சமயத்தில் நான் இவர் தனது பெயரிட்டு தயாரித்த விஷ சாராயத்தை ஆதாரத்துடன் கோர்ட்டார் முன்னிலையில் வைக்கிறேன், துராப்சா வக்கீல் காபிர் செ.கொ அது நவம்பர் 30 2011 தயாரித்தது என்கிறார்.2011நவம்பர் 30 க்கும் 2012ஜனவரி 19 க்கும் இடையே ஐம்பது நாட்கள் .
      ////செந்தோழன்
      நவம்பர் 30, 2011 இல் 9:37 பிற்பகல் #
      ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
      ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?///
      இப்படியான விஷ சாராயத்தை தயார் செய்தபொழுது போலீசிடம் சிக்காத துராப்சா ,அடுத்தவர் தாயாரிப்பான கள்ளச்சாராயத்தை மக்கள் பார்வையில் வைத்த பொழுது மாட்டிக் கொண்டார்.ஆக பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொண்டான் .லூது அலை அவர்கள்பற்றிய கருத்துக்கு இணைப்பை விட ஆயிசா பற்றி அவர் எழுதியது எத்தனை பெரிய வேதனைக்குரியது . கள்ளச்சாராயம் தயாரித்ததை நிருபிக்க வேண்டுகிறார. விஷ சாராயம் தயாரித்ததையே நிருபித்தாயிற்று.போதாதா?
      2 .அவதூறு என்பதை எப்படி என்று நிருபிக்க வேண்டுமாம் .இவர்களது நோக்கம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் செய்ய வேண்டும் .ஆனால் அது போன்று வேசம்தரித்து ,முஸ்லிம்களை சீண்டி பார்க்க துடித்துல்லார்கள்.செத்துப்போன பிணத்தை அடக்கம் செய்யாமல் ,இஸ்லாத்தை கொன்று பிணத்தை உயிர்பிக்க முயற்சிக்கிறார்கள்
      ////சரி… தப்பிச்சென்ற ’லூசு’ [மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
      குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.////
      குர்ஆனில் இதுபற்றி தகவல் இல்லாததால் குர்ஆனுக்கு முந்தைய வேதமான பழையஏற்பாடு வுக்கு செல்வோம் என்கிறார் .ஆனால் முஸ்லிம்களோ அது பழைய ஏற்பாடு அல்ல ,அது முழுவதும் திரிக்கப்பட்ட ஒரு புத்தகம் என்கிறோம் அது பழைய எபாடாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்னும் பொழுது குர்ஆனில் முடிந்த கதையை அந்த பழைய எர்பாடுவுடன் தொடர்வதும் அதில் உள்ள கற்பனைகளுக்கும் முஸ்லிம்கள் புனிதராக ஏற்றுக் கொண்ட லூது நபி[அலை] அவர்களை பற்றிய அவதூறு ஆகாதா? காபிர் செ.கொ அவர் திருமணம் செய்த பொழுதே முஸ்லிம் இல்லை என்கிறார்.தச்சாளின் மனைவியும் ,காபிர் செ.கொ வின் மனைவியும் தங்களை முஸ்லிம்களாகவே பாவித்து வருகின்றனர்.அவ்வாறு இருக்கையில் காபிர்களான செ.கொ தச்சால் ஆகியோருடன் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்தினால் ,அது பச்சையான விபச்சாரமே.ஆதலின் அவர்கள் நால்வரும் விபச்சாரர்களே என்று அவர்கள் கணவன் ,மனைவி பெயர்களுடன் நோட்டிஸ் அடித்து இவர்களின் சொந்த ஊர்களிலும் விநியோகித்தால் அது சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்வார்களா?இறைவன் அருளால் தொடரும்

      • S.Ibrahim மே 30, 2012 இல் 5:00 முப #

        காபிரான செத்தகொடி ,தாந்தோன்றித்தனமாக் எழுதுவதே உமது வழக்கம்.குற்றம் குறித்து என்ன விசாரணை நடத்த வேண்டும் ?லூது பற்றிய கட்டுரை எழுதினாலும் அது பற்றிய இணைப்பு கொடுத்தாலும் குற்றம் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டது.மேலும் அவர் ஒரு முஸ்லிம் இல்லை என்று சொல்லிவிட்டார்.அதனால் அவர் முஸ்லிமாக இருந்து முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் திருமணம் செய்தது ரத்து செய்யப்பட்டு அவரது வாக்குமூலத்தை உறுதிசெய்து அவர் முஸ்லிம் இல்லை காபிர் என்று அறிவிப்பு செய்கிரார்கள் .அதை நீவீர் தீர்ப்பு எனக் கொண்டாலும் தண்டனை என்று கொண்டாலும் நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களது வாதங்களை கோர்ட்டுக்கு கொண்டு சென்று அவர் காபிர் இல்லைஎன்றும் அவர்திருமணம் செல்லும் என்றும் ஜமாஅத் தீர்ப்பு கட்ட்பஞ்சயத்து தீர்ப்பு ,காட்டுய் மிராண்டி தீர்ப்பு என்று வாதாடி கோர்ட்டில் தீர்ப்பை பெற்று உமது மனக் கோளாறின் பாதிப்பை உமது இணையதளத்தில் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களது கம்யுனிச பைத்தியத்தனத்தை தெரிந்துதான் நீங்கள் எத்தனையோ கூக்குரலிட்டும் ,ஓவென்று கூச்சல் போட்டும் ,விவாதத்திற்கு வருகிறீர்களா?என்று தெரு காய்கறி வியாபாரி போன்று கத்தியும் யாரும் உங்களை சீண்டவில்லை.ஐயோ பாவம் என்ன சொல்லவருகின்றார் என்று பார்ப்போம் என்றுதான் நான் விவாதத்திற்கு முன் வந்தேன்.நீவிர் பிராண்டுவதை பார்த்தால் 110 டிகிரி வெப்பத்தைவிட கொடுமையாக இருக்கிறது.காபிர் என்று டவுன் ஹாஜியிடன் பதவா கேட்பது சட்டசிக்கலில் பாதுகாத்துக் கொள்ளவே.மற்றபடி டவுன் காஜி திருமணத்தை நடத்தி வைக்கவில்லை.அவர் அங்கீகரித்தால்தான் திருமணம் செல்லும் என்றில்லை.மேலும் ,விவாகரத்து பிரச்னைகளிலும் ஜமாஅத் முடிவுதான் சுப்ரீம் கோர்ட் வரை செல்லுபடியாகும் . போலிபெயரில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் உமக்கு போலிதீர்ப்பு பற்றி ஏன் பேசவேண்டும் ?
        //// தாக்கவேண்டும் என்று வெறி கொண்டு கூடியிருக்கும் கூட்டத்திலிருந்து அடிக்காதீர்கள் என்று குரல் வந்திருக்கிறது என்றால்; அப்படி கூறியவர்கள் ஏன் கூற வேண்டும்? அடி விழுந்தால் மட்டுமே அடிக்காதீர்கள் என்று கூற முடியும். யாரும் அடிக்கவில்லை என்றால் ஏன் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டும்? ///
        ஒரு கூட்டத்தில் ஒருவர் அடிக்கவேண்டும் என்று ஆவேசத்தில் அடிங்கடா என்று கத்தி வந்தால்,அடிக்காதீர்கள் என்று சொல்லப்படுவது வழக்கமே.அப்புறம் வெட்டுங்கள் என்று சொன்னால் வெட்டியதாக அர்த்தமா? என்பது பற்றி கேட்டிருந்தேன் அதுபற்றி மூச்சு காட்டவில்லை .மவுனியாக மாறி அடுத்து கிறுக்கு என்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.உழைக்கும் மக்கள் மத்தியில் அவர்களது நம்பிக்கையான மதம் பற்றி,அவர்களது நபிகள் பற்றி லூசு ,கற்பழிப்பு என்று கூறினால் அந்த உழைக்கும் மக்களிடம் எதிர்வினை எப்படி இருக்குமஎன்பதை அறிந்து கொண்டே அதன் மூலம் வேடிக்கை பார்க்க நினைத்து இந்த மொள்ளமாறிகள் இணையதளத்தில் குடி கொண்டுள்ளார்கள்.அடுத்தவர்களை விமர்சித்து சுதந்திரம் கிடையாதா? விமர்சிக்கக் உரிமை இல்லையா?என்று எழுதுவதை விட சூடு சொரணை இருந்தால் உங்களது உலக தீர்வு இறுதி வெற்றியென்று நம்பும் கம்யுனிசஆட்சிக்கு பாதை காட்டிய சோஷலிச ரசியாவில் ,சோஷலிச ஆட்சியில் சோஷலிச சர்வாதிகாரியை எப்படியெல்லாம் அவர்காலத்து மீடியாக்கள் விமர்சித்தன?அதை புதிய ஜனநாயக தளகர்த்தர் ,அது மக்களின் சுதந்திரம் என்று தலையிடாமல் இருந்தார்? கொலைகாரபாவிகளே ,தனது நாட்டில மக்களை கொன்றது போதாதென்று ஆப்கானிஸ்தானிலும் உங்களது கொலைவெறி பாதகங்களை செய்து சுதந்திரம் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
        ///ஒருவர் கூறியிருப்பதை உண்மையா? இல்லையா? என்பதை கண்டறிய அவர் என்ன இயக்கத்தில் இருக்கிறார் என்பதை கண்டறிய வேண்டுமா? ///
        எங்களது இயக்கம் பற்றி எகளுக்குஎங்களுக்கு அல்லவா தெரியும்?புளுகுணி கூட்டத்திற்கு என்ன தெரியும்? அவர் காட்டுமிராண்டித்தனமாக் தாக்கப்பட்டால் அவர் அந்நேரம் மருத்துமனையில் அனுமதித்திருக்க வேண்டும் .காட்டுமிராண்டிகள் எப்படி தாக்குவார்கள்?கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வரம்பு இல்லாமல் தாக்கியிருப்பார்கள் அவர் உயிர் பிழைத்திருக்கவே முடியாது .அதுவே காட்டுமிராண்டி தாக்குதல் .ஆனால் துராப்சா உடலில் ஒரு ரூபாய் பேன்ட் எய்ட் கூட ஒட்டப்படவில்லை. உழைக்கும் மக்கள்மத்தியில் அவர்கள் நம்பும் மதம் பற்றி அவதூருபரப்பி விட்டு ஆத்திரப்பட்ட மக்கள் தங்களது கைகளால் அறைந்தால் ,அவரது சட்டையில் மடிப்பு கூட கலையாத அளவில் ஒரு சில அடிகள் விழுந்தால் அதை காட்டு மிராண்டித்தனம் என்பது உழைக்கும் மக்களை அவமரியாதை செய்வதாக த்தான் பொருள் கொள்ளமுடியும் [தொடரும் இறை அருளால்]

    • S.Ibrahim மே 31, 2012 இல் 5:23 முப #

      காபிர் செ.கொ///வம்படியாய் பார்ப்பன பாசிசங்கள் ராமன் இங்கு தான் பிறந்தான் என்பதை நாங்கள் நம்புகிறோம் அதனால் நீங்களும் நம்புங்கள் என்கிறார்களோ அதேபோல் தான் பொய்ராஹிமும் அது அவதூறு என்று நாங்கள் நம்புகிறோம் அதனால் நீங்களும் நம்புங்கள் என்கிறார். ///
      பார்ப்பனர்களிடம் சென்று நாங்கள் வம்படியாக எதையும் சொல்லவில்லை .அவர்களே எங்களிடம் வம்படியாக இது பாபர் பிறந்த இடம் ,நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசலை இடித்து கோயில் கட்ட செய்வோம் என்கிறார்கள்.
      அது போலவே ,இங்கே இந்த போலி கம்யுனிச கூட்டத்திடமும் முஸ்லிம்கள் வம்படியாக எதையும் சொல்லவில்லை .பார்ப்பனியர்கள் போலவே வம்படியாக எங்களிடம் குர்ஆனில் உள்ள லூது பற்றிய செய்திகள் அத்துடன் முடியவில்லை ,அதன் தொடர்ச்சி பழைய ஏற்பாட்டில் உள்ளது .ஆகவே உங்களது நம்பிக்கைக்கு மாற்றமாக அவர் ஒரு லூசு என்பதை நம்புங்கள் என்று கதைக்கிறது .
      ஆக ,இங்கே பார்ப்பனிய பாசிசங்கள் யார்? பாதிக்கப்பட்டிருப்பது யார்?
      செத்துப்போன கம்யுனிசம் பற்றி பேசினால் இவர்கள் செய்த அட்டூழியம் பற்றி சுட்டிகள் கொடுத்து இருந்தேன் அதை சால்ஜாப்பு செய்யும் உங்களுக்கு ,அந்நிய நாடன் ஆப்கானில் புகுந்து அப்பாவி மக்களிக் கொன்று கற்பழித்து இன்றுவரை அந்த நாட்டுக்கு கேடுவிளைவிக்க காரணமாக இருந்த சோசலிச அயோக்கியர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
      ஆப்கான் என்று பேசினால் வாய் மூடும் செத்தகொடி காபிர் ,இவர் வாதத்தின் படி துராப்சாவுக்கு ஓரிரு அடிகள் விழுந்தாலும் அது காட்டுமிராண்டித் தனமா?உடலில் சிறு காயங்கள் கூட இல்லாத நிலையில் அது காட்டுமிராண்டித்தனமா? ஆப்கானில் நுழைந்தது உட்பட பல சுட்டிகளில் கொடுக்கபப்ட்ட கம்யுனிச கொடுரங்கள் காட்டுமிராண்டித்தனமா?
      ///குரானில் இருக்கும் அறைகுறையான கதையை பழைய ஏற்பாட்டின் உதவியுடன் முழுமைப்படுத்தி கட்டுரையாளர் தன்னுடைய தேடலாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார் அவ்வளவு தான். இவ்வளவு தெளிவாக செய்யப்பட்டிருப்பது விமர்சனமா? அவதூறா? பதில் கூறும் திறன் உங்களில் யாருக்காவது உண்டா?
      குர்ஆனில் இருக்கும் அரைகுறையான கதை என்று தச்சாளுக்கு உரைத்தது யார்? ஒவ்வொரு நபிமார்கள் மூலம் மக்களுக்கு படிப்பினைகள் காட்டப் படவே அவர்கள் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.கதாகலாட்சேபம் நடத்துவதற்கு அல்ல .அதைப்போலவே இங்கு ஓரின சேர்க்கை கூடாது ,என்பதும் அதைமீரும் மக்களுக்கு அழிவு ஏற்படும் என்பதற்க்காகவே இங்கு லூது அவர்களின் வரலாற்று குறிப்பு கூறப்பட்டுள்ளது .மேலும் பழைய ஏற்பாடு எனபது இறைவேதம் அல்ல என்பதும் அது மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை .அதற்கு மாற்றமாக இவர்கள் மனம் போல குர்ஆனில் கூறப்பட்டுள்ளதையும் பழைய ஏற்பாட்டில் உள்ளதையும் இணைத்து கதையாகக தச்சாளுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றால் அதை கண்டிக்கும் சுதந்திரம் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கும் இருக்கிறது.அமைதியாக வாழும் மக்களிடம் அந்த மக்களுக்கு தேவையான பல அத்தியாவசிய பணிகள் கண்டுகொள்ளாமல் இருக்கையில் இப்போது லூது ஒரு லூசு என்று கூறுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? அவற்றையும் இணையதளத்தில் வெளியிட்ட வேண்டிய அவசியம் என்ன? மூச்சுக்கு முன்னூறு தடவை கம்யுனிசம் பேசும் இந்த கயவர்கள் இவர்களது கம்யுனிச பாதையான சோஷலிச ஆட்சியில் சுதந்திர சரக்கு கையிருப்பில் இருந்தால் சொல்ல வேண்டினால அதை காணாமல் இருப்பது ஏனோ?உழைக்கும் மக்களுக்கு இவர்கள் செய்த பணிகள் என்ன?உழைக்கும் மக்கள் இவர்களிடம் இதை கேட்டார்களா? இஸ்லாத்தை அசிங்கப் படுத்த கம்யுனிச வேஷம் எதற்கு?

      • S.Ibrahim மே 31, 2012 இல் 9:16 பிப #

        ////அவர்களே எங்களிடம் வம்படியாக இது பாபர் பிறந்த இடம் ,நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசலை இடித்து கோயில் கட்ட செய்வோம் என்கிறார்.///
        பாபர் பிறந்த இடம் என்பதை ராமர் பிறந்த இட்சம் என்று வாசிக்க ,

    • S.Ibrahim ஜூன் 1, 2012 இல் 4:52 முப #

      ////விரும்பாத நிலையில் திருமணம் செய்யாதீர்கள் என்றும், இருவரும் செய்து கொள்ளும் உடன்படிக்கை என்றும் தான் கூறியிருக்கிறார். தினம் நான்கு சாக்லேட் தருகிறேன் என்று கூறினால் எந்தச் சிறுமியும் திருமணத்திற்கு சம்மதிப்பாள். ///
      சிறுமிகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து சில்மிஷம் செய்யும் அனுபவசாலிகளின் அனுபவத்தை காபிர் செ.கொ கூறியிருக்கிறார் திருமணத்தில் பெண்ணின் தந்தையோ அல்லது காப்பாளரோ வலி செய்ய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறதே அப்போது இந்த சாக்லேட் பேர்வளி என்ன செய்வார்?
      இருவரும் செய்யும் உடன்படிக்கை என்பதும் விரும்பாத நிலை என்பதும் என்ற வார்த்தைகளுக்கு பொருள் சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று காபிர் செ.கொ.புது விளக்கம் தந்துள்ளார்.இருவரும் செய்யும் உடன்படிக்கை என்பது மிக தெளிவாக பால்யவிவாகத்தை எதிர்கொள்கிறது.ஒரு சிறுமியிடம் சாக்லேட் தருகிறேன் ,உன் கழுத்தில் செயினை தா என்பதும் ,ஒரு பெண்ணிடம் உன் கழுத்தில் உள்ள இரண்டு பவுன் செயினை தா ,இருபதாயிரம் கடன் தருகிறேன் ,பின்னர் பணத்தை கொடுத்து செயினை வாங்கி கொள் என்பதும் ஒன்றா ?இதில் எதை உடன்படிக்கை என்று சொல்லுவார்கள்? பிளஸ் டூ படிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு திருமணம் ,ஆனால் அந்த பெண் திருமண அன்று வீட்டைவிட்டு வெளியேறி தனது ஆசிரியை வீட்டில் தஞ்சம் புகுந்தாள். பரபரப்பாக போலீசார் தேடுகையில் மறுநாள் அப்பெண் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
      அடுத்து உமர் [ரலி]ஹதித் பற்றி இன்சால்லாஹ்

    • S.Ibrahim ஜூன் 2, 2012 இல் 5:42 முப #

      நான் உமர்[ரலி] ஹதீதை எங்கோ படித்த ஞாபகத்தில் புகாரி என்று கூறியுள்ளேன் .ஆனால் அது தாரமி என்ற நூலில் 347 வது ஹதிதாக வருகிறது .
      ///அது தேவைப்படாத காலம், இது தேவைப்படும் காலம் என்பதை யார் முடிவு செய்வது? செய்தது? முகம்மது செய்யச் சொன்னதை செய்வது சுன்னா என்றால் கண்டித்ததை செய்வதற்கு என்ன பெயர்?///
      உமர் ரலி அவர்கள் அதை ஒரு வேதநூலாக வாசித்து காட்டுகிறார்.இப்போது அது வேத நூல் இல்லை என்றும் அது மனிதர்களால் புனையப்பட்டது என்று நிருபிக்க வாசிக்கப்படுகிறது. நபி ஸல் அவர்கள் என்ன காரனத்திற்காக கண்டித்தார்களோ அதை வலியுறுத்தும் முகமாக இப்போது வாசிக்கப்படுகிறது .இதை இங்ஙனம் விளக்கையே அறிவு பக்தருக்கு புரிய வைக்க வேண்டும் .
      முகம்மது செய்தது கற்பழிப்பா இல்லையா? இனி வரும் அனைத்து காலங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர் குழந்தைத் திருமணம் செய்தது சரியா? பொய்ராஹிம் இந்தக் கேள்விகளை கண்டு கொள்ளாமல் நழுவிவிட்டது ஏன்
      இது போன்ற பல கேள்விகளுக்கு பல இணையதளங்களில் விளக்கப்பட்டுள்ளது.பருவம் அடைந்த பிறகே ஆயிசா ரலி அவர்களுடன் இல்லற வாழ்வை துவங்குகிறார்.அது போன்று அதே வயதில் திருமணமான அவரது தோழிகள் உடலுறவு பற்றி தெளிவாக கூறி இருப்பார்கள் .அதை புரிந்து கொண்டு அவர்களும் நடந்திருக்கையில் அது எப்படி கற்பளிப்பாகும் .தனது கணவருடன் இல்லறவாழ்க்கை உட்பட அனைத்தையும் மிக தெளிவாக அறிவிக்கும் ஆயிஷா ரலி அவர்கள் ஆரம்ப காலத்தில் தனக்கு உடலுறவு என்பது புரியவில்லை என்றால் அதையும் அறிவித்திருப்பார்கள்,.இனி வரும் அனைத்து காலங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர் குழந்தை திருமணம் செய்தது சரியா?என்கிறார்.அவர்கள் காலத்தில் உள்ளதை போன்றே திருமணம் செய்த முகம்மது நபி ஸல் அவர்கள் இனி வரும் காலங்களில் அது போன்று பாலய விவாகம் பண்ணக் கூடாது என்பதாலே இருவரின் சம்மதம் பெற்ற கடுமையான் உடன்படிக்கை என்று குறிப்பிடுகிறார்.இதை நல்லவர்கள் நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள் விதண்டாவாதிகளுக்கு இதற்கு மேலும் விவரிக்க அவசியமில்லை .இவரைப் போன்று விமர்சித்த இவரது சகா சார்வாகன் “பகடு ‘வில் கூறுவதை பாருங்கள் .
      ////நலவிதாமக் முகமது குரான்,ஹதிதுகள் ,சிராவில் சித்தரிக்கப்படவில்லை என்பது அபோது நடந்தவற்றை இபோதைய கண்ணோட்டத்தில் பார்ப்பதால் வரும் முடிவு ஆகும்.

      சர்ச்சைக்குறிய விடயங்களாக் சிதரிக்கப்படுபவை அபோதைய காலகட்டத்தில் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட இருக்கும்////.

      அடுத்து விவாத அரங்கில் இருதரப்பிற்கும் ஒரே மாதிரியான நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் .செ.கொ காபிர் தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் போல்ட் லட்டரிலும் சிவப்பு நிறத்திலும் எழுதிகிறார்.ஆனால எதிர் கருத்துக்களை அவ்வாறு வெளியிடுவதில்லை .அவ்வ்வாறு வெளியிட வாய்ப்பில்லை என்றால் அவருடைய கருத்துக்களும் பொதுவாகவே இருக்க வேண்டும் .[முடிந்தது ]

  25. மணி மே 25, 2012 இல் 10:38 முப #

    இபுராகிம் அண்ணே,

    செங்கொடி தாக்குதல் நடந்தன்னு சொல்கிறார். ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் தாக்குதல் நடக்கலைன்னு சொல்றீங்க. அதுக்கு ஆதாரம்னு எதுவும் உங்க கிட்ட இல்லை. செங்கொடி அந்த ஊர்காரர். நடக்கும்போது ஊர்ல இல்லைன்னாலும், நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிருக்கு, நிறைய பேர்ட்ட இதைப்பத்தி விசாரிச்சிருக்கார்னு அவர் எழுதுற வச்சு தெரியுது. நீங்களோ வெளியூர்காரர், நடந்தத்பத்தி முன்னாடியே உங்களுக்கு தெரியலை. ஆனா அடி நடக்கலைன்னு ஸ்ட்ராங்கா சொல்றீங்க அததான் எப்படின்னு கேட்கிறேன். அந்த ஊர்ல என்ன நடந்ததுங்கறதுக்கு உங்கள்ட்ட இருக்கிற ஆதாரத்த கொடுங்க கேட்டுட்டு முடிவுக்கு வரலாம். அப்படி ஆதாரம் எதுவும் உங்கள்ட்ட இல்லையின்னா செங்கொடி சொல்றது தான் நிஜமா இருக்கிறதுக்கு வாய்ப்பு அதிகம்.

  26. nallurmuzhakkam ஜூன் 6, 2012 இல் 3:41 பிப #

    Sorry for delay,

    Have some problem in my mechine. within one or two days will comeback

  27. nallurmuzhakkam ஜூன் 15, 2012 இல் 5:11 பிப #

    பொய்ராஹிம்,

     

    தனியாக பொய்ராஹிமை அம்பலப்படுத்த வேண்டிய அவசியமின்றி, அவர் ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார். அதனால் மீண்டும் ஒருமுறை பொய்ராஹிமுக்கு நன்றி கூறியே தொடங்கலாம்.

     

    விவாதத்தின் தொடக்கத்திலேயே பொய்ராஹிமைப் பற்றி நான் இப்படி குறிப்பிட்டிருந்தேன், \\\தலைப்பிற்கு அப்பாற்பட்டதை பேசுவது, என்ன கேட்கப்பட்டதோ அதைவிடுத்து வேறொன்றை பதிலாக கூறுவது, பிடிவாதமாக பதில் கூற மறுப்பது என நேர்மையற்ற முறையில் விவாதத்தை பிடிவாதமாக மாற்றுபவர்/// என்றாலும் கொஞ்சமேனும் அவரை இழுத்துப் பிடிக்க வேண்டும் என்பதற்காக எப்படி விவாதிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியிருந்தேன், \\\கேள்விக்கு, கேள்வியின் நோக்கத்திற்கு அளிக்கப்படும் பதில் உட்பட்டிருக்க வேண்டும். திசை திருப்பல் கூடாது. தலைப்புக்கு வெளியிலிருந்து எதையும் பேசக் கூடாது. வழக்கம் போல விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எதிர்தரப்பிலிருந்து எதிர்பார்க்கிறேன்/// தற்போது பொய்ராஹிம் செய்து கொண்டிருக்கும் விவாதம் இந்த முறைமைகளில் இல்லை என்பது நான் கூறித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்த விவாதத்தை தொடக்கத்திலிருந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று தெளிவாய் புரிந்திருக்கும், பொய்ராஹிம் மூளையில் படிந்திருக்கும் மதம் எனும் அழுக்கை எத்தனை சர்ஃப் எக்செல் போட்டாலும் கழுவ முடியாது என்பது.

     

    ஆயிரத்தெட்டு திசை திருப்பல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்பது பொய்ராஹிமுக்கு அவசியமாக இருக்கலாம். ஏனென்றால் அவரிடம் அறிவு நாணயமோ, நேர்மைத் திறனோ, உண்மையோ துளியும் இல்லை. ஆனால் நம்முடைய நிலை அவ்வாறில்லையல்லவா. எனவே பொய்ராஹிமின் திசைதிருப்பல்களை ஒதுக்கிவிட்டு விவாதப் பொருளை மையப்படுத்தலாம்.

     

    இந்த விவாதத்தின் கருவை ஐந்தாக பிரித்திருந்தேன். 1. குற்றம், 2. அவதூறா? விமர்சனமா?, 3. விசாரணை, 4. போலித் தீர்ப்பு, 5. தண்டனை. இந்த ஐந்திலும் பொய்ராஹிம் கொண்டிருக்கும் நிலை என்ன? அது காட்டுமிராண்டித்தனமாக, மொள்ளமாரித்தனமாக, மதம் எனும் ஒரே காரணத்திற்காக அவைகளை ஆதரித்து நிற்பதாக இருக்கிறது.

     

    தோழர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? லூத் ஒரு லூஸ் எனும் அவதூறு கட்டுரையை எழுதி இணையத்தில் வெளியிட்டார் என்பது. இந்த குற்றத்தை தோழர் செய்தார் என்று பொய்ராஹிம் உட்பட யாராவது நிரூபித்தார்களா? தற்போது மீண்டும் கள்ளச் சாராய உதாரணத்தை இழுத்து தன் கோர முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார் பொய்ராஹிம். அய்யா அல்லாவின் அடுத்த வீட்டுப் பிள்ளைகளா! கள்ளச் சாராயம் விற்பதும், பொதுவிலிருக்கும் ஒன்றை விமர்சனம் செய்வதும் ஒன்றா? என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தேனே, உங்கள் செலக்டிவ் அம்னீஷியாவுக்கு இன்னும் மருத்துவம் செய்யவில்லையா? செந்தோழன் ஷா கொடுத்த பின்னூட்டம் சரியானதே. அதில் உண்மைக்கு மாறானதோ, அவதூறோ ஒன்றுமில்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பொய்ராஹிம் கருதினால் அந்த பின்னூட்டத்தில் என்ன தவறு இருக்கிறது? அது எப்படி தவறாக இருக்கிறது? என்பதை விளக்கட்டும். மாறாக ‘எங்கள் உயிரினும் மேலான நபியை.. ..’ என்று ஒன்றாம் வகுப்பு வாய்ப்பாட்டை மீண்டும் பாட வேண்டாம்.

     

    எங்கள் நபியை அவதூறு செய்து விட்டார்கள் என்று கதவில் மட்டிக் கொண்ட எலியைப் போல் கீச்சிட்டுக் கொண்டிருந்த பொய்ராஹிம்களிடம் எப்படியப்பா அது அவதூறு என்று கேட்டால் “பைத் பத்தா நூறு, பானைக்குள்ள சோறு” என்கிறார்கள். யப்பா அம்பிகளா! உங்களை பெடைக்கும் போது கபாலத்துக்குள்ளே மூளையை வைக்க மறந்து விட்டாரோ உங்கள் அல்லா? குரான் இறை வேதம் என்று அவர்கள் நம்புகிறார்களாம், பழைய ஏற்பாடு இறை வேதமில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்களாம். அதனால் நாமும் அதை அப்படியே நம்பி, குரானில் இருக்கும் படிப்பினையை மட்டும் படித்து பரீட்சை எழுத வேண்டுமாம். நீங்க இத நம்புங்க; அவங்க அத நம்பட்டும் அதை எங்களிடம் திணிக்காதிர்ர்கள். எங்களுக்கு இரண்டுமே பொருந்தாக் குப்பைகள் தாம். ஒரே ஆளைப் பற்றி இருவேறு விதமாக கொட்டிய குப்பைகள் என்பதால் பொருத்திக் காட்டி விமர்சித்திருக்கிறோம். அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? அது மட்டும் தான் கேள்வி.முஸ்லீம்களுக்கும் சுதந்திரம் இருக்கிறதாம். பேஷா இருந்திட்டுப் போகட்டும். நாங்க விமர்சனம் செய்திருக்கிறோம். நீங்க எதிர் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் நீங்கள் குண்டாந்தடி விமர்சனம் பண்ணுகிறீர்களே. அதுவல்லவா இங்கு பிரச்சனை.

     

    குற்றம் கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டது என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறார் பொய்ராஹிம். தோழர் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டதோ அந்தக் குற்றம் பிடிக்கப்படவும் இல்லை, தோழர் அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. என்றால் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? இதைக் கேட்டால் பொய்ராஹிம் முன் வாயில் வழியாக மட்டுமல்ல, பின் வாயில் வழியாகக் கூட மூச்சு விடமாட்டேன் என்கிறார். அண்ணனுக்கு பின்னால் ‘லெஃப்ட் ரைட்’ போடும் தவ்ஹீத் தம்பிகளா! நீங்க மொதல்ல சுட்ட தோசை என்ன? அப்பாலிக்கா அதை எப்படி திருப்பி போட்டீங்க? என்று விபரமாக வாருங்கள். அப்போது தானே உங்கள் கண்ண்ண்ண்ண்ணியமான விசாரணையின் அழகு தெரியும்.

     

    செய்யப்பட்டது அறிவிப்பா? தீர்ப்பா? தண்டனையா? என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அதற்கு பொய்ராஹிமிடமிருந்து தர்க்க ரீதியான மறுப்பு எதுவும் இதுவரை வரவில்லை. ஆனாலும் அது அறிவிப்பு தான் என்று முயலின் ஒரு காலை வெட்டி வீசிவிட்டு காட்டிக் கொண்டிருக்கிறார். சட்டச் சிக்கல் வரக்கூடாது என்று காஜியிடம் வேண்டினார்களாம். ‘சமாத்’ முடிவு தான் சொப்ரீம் கோர்ட்டு வரை செல்லுபடியாகும் என்றால் இதில் மட்டும் சட்டச் சிக்கல் எங்கிருந்து மொளைக்குது? ஐயா ஐ கோர்ட்டு ஜட்ஜுங்களா! தீர்ப்பு சொன்ன நாட்டாமைகள் எல்லாம் டவுண் காஜியிடம் போய் ”சட்டச் சிக்கல் வந்துடும் நீங்க கையெழுத்து போட்டுத் தாங்க” என்று முட்டுக்கையை சொரிந்து கொண்டு கேட்டால்; அதுக்கு பேர் தாங்கோ போலித் தீர்ப்பு.

     

    அதிசயம், ஆனால் உண்மை. பொய்ராஹிம் முதன்முறையாக (இதற்கு மேலும் சமாளிக்க வேறு வழியில்லாமல்) ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு ரூபாய் பேண்ட்எய்ட் கூட ஒட்டப்படவில்லை என்றாலும் சில அடிகள் விழுந்தன என்று கூறியிருக்கிறார். அண்ணே தர்மாஸ்பத்திரி டாக்குடருங்களா! தோழர் பேண்ட்எய்ட் போட்டிருக்கிறார் என்றோ, ஐசி யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றோ நாங்கள் எங்கும் கூறியதில்லை. தாக்கப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே கூறி வந்திருக்கிறோம். தற்போது தோழர் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை பொய்ராஹிமே ஒப்புக் கொண்டுள்ள படியால் அவருக்கான கேள்வி எளிமையாகி விட்டது. தாக்கப்பட்டது சரியா? தவறா?

     

    இவைதாம் விவாதம். இதில் பொய்ராஹிம் செய்து கொண்டிருக்கும் சர்க்கஸ் வேலைகள் இன்னும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் அம்பலமாக வேண்டும். அதனூடாக மதம் என்ற ஒன்று எப்படி மனிதர்களை அயோக்கியத்தனத்திற்கு துணை போக வைக்கிறது என்பது இன்னும் தூலமாக வெளிப்பட வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு பொய்ராஹிம் நிச்சயம் உதவுவார்.

     

    அடுத்து, பாபர் மசூதி ஒப்பீடு. பார்ப்பனர்களிடம் முஸ்லீம்கள் எதையும் நம்புமாறு கூறவில்லையாம், அதேபோல் விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும் என்று முஸ்லீம்கள் கூறவில்லையாம். என்னெ ஒப்பீடு! பாப்பான்கள் பள்ளியை இடித்தார்கள். அது குற்றம். அதேபோல் முஸ்லீம்கள் எங்கள் தோழரை இடித்தார்கள் அதுவும் குற்றம். இதில் பார்ப்பனர்களாக செயல்பட்டிருப்பது யார்? அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களே! எங்கள் தோழர் அவதூறு செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? சும்மா உழக்குக்குள்ளே கிண்டிக் கிண்டி கிழங்கெடுக்காமல், கிட்னியை கொஞ்சம் யூஸ் பண்ணுங்கப்பா.

     

    அடுத்து, குழந்தை திருமணத்திற்கான அனுமதி குறித்து, குறிப்பிட்ட அந்த வசனம் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறது என்பதற்கு மூன்று ஆதாரங்களை வைத்திருந்தேன். 1. முகம்மதுவுக்கு குறிப்பிட்ட அந்த நோய் பற்றி தெரியாது, குழந்தையை திருமணம் செய்வது பற்றித்தான் தெரியும். எனவே அது குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது தான். 2. அல்லாவுக்கு குழந்தைத் திருமணத்தை தடுக்க வேண்டும் எனும் நோக்கமில்லை. எனவே, அது குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது தான். 3. குரானுக்கு உரையெழுதிய பல்வேறு அறிஞர்கள், குறிப்பிட்ட அந்த வசனத்தை மாதவிடாய் இன்னும் ஏற்பட்டிருக்காத சிறுமியை அடையாளப்படுத்துவதாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனவே, அது குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது தான். இந்த மூன்று ஆதாரங்களையும் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்ட பொய்ராஹிம், சாக்லேட்டோடு கதையை முடித்துக் கொண்டு நழுவி விட்டார். விபரம் தெரியா சிறுமிக்கு இனிப்பு சாக்லேட் என்றால் பெற்றோர் காப்பாளருக்கு வேறு வித சாக்லேட். இந்த வேறு வித சாக்லேட்டுக்கு ஹைதராபாத் ஆமினா தொடங்கி ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றனவே.

     

    முகம்மது செய்தது கற்பழிப்பு தான். உடலுறகு குறித்து ஆய்ஷாவுக்கு தெரிந்திருக்கும், தோழிகள் சொல்லியிருக்கலாம் என்று பொய்ராஹிம் யூகம் செய்கிறார். ஆனால் ஆய்ஷாவுக்கு உடலுறவு குறித்து தெரிந்திருக்கவில்லை என்பதை ஹதீஸ்களின் வாயிலாகவே புரிந்து கொள்ள முடியும். தன் கணவன் உடலுறவு குறித்து தன்னிடம் என்ன கூறினான்?, எப்படி நடந்து கொண்டான்? என்பதை அறிவிப்பதற்கு பெரிய புத்திக் கூர்மை ஒன்றும் தேவையில்லை. தேவை என்று பொய்ராஹிம் கருதினால் ஆய்ஷா அவ்வாறு அறிவித்த சில ஹதீஸ்களை எடுத்துக் கூறட்டும். பார்த்து விடலாம் அதில் என்ன புத்திக் கூர்மை ஒழிந்திருக்கிறது என்று. மட்டுமல்லாது இதைக் கூறுவதற்கு ஒரு சிறுமியை திருமணம் செய்ததால் தான் ஆயிற்று என்றால் அதைவிட பெரிய அசட்டுத்தனம் வேறொன்று இருக்க முடியாது. முகம்மது பால்ய விவாகத்தை தடுக்க விரும்பவில்லை என்பதை மேலே தெளிவாகவே நிறுவியிருக்கிறேன். அந்தக் காலத்தில் நடந்தது என்றால் அது இந்தக் காலத்துக்கு பொருந்தாது என்பதை முதலில் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முன்வாருங்கள். முகம்மதுவோ, அல்லாவோ செய்யாத ஒன்றை நீங்களாகவே வலிந்து திணிக்காதீர்கள்.

     

    அடுத்து உமர் ஹதீஸ் குறித்து, தாரமி எனும் புதிய ஒரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ஆனால் இந்த நூல் சஹி சித்தா வில் அடங்குமா? அந்த தூலுக்கு சுட்டி கொடுங்கள் அல்லது அந்த ஹதீஸ் முழுவதையும் எழுதுங்கள். ஏனென்றால் அதில் உமர் படித்தது பழைய ஏற்பாடா? புதிய ஏற்பாடா?; கால வேறுபாட்டை எதைக் கொண்டு அறிந்து கொள்வது? என்பன போன்று பல கேள்விகள் இருக்கின்றன.

     

    அடுத்து, என்னுடைய வாதத்தை வண்ணத்திலும் தடித்த எழுத்துகளிலும் அமைப்பது குறித்து பொய்ராஹிம் பேசியிருக்கிறார். அது எனக்கு மட்டுமானது அல்ல. பின்னூட்டமிடும் யாரும் அது போல் செய்து கொள்ள முடியும். ஹெச்.டி.எம்.எல் கோடாக பின்னூட்டத்தை இட்டால் விரும்பியபடி கொடுக்க முடியும்.

     

    இந்த முறை பொய்ராஹிம் ஒரு புதிய உத்தியை கையாண்டிருக்கிறார். நான்கு நாட்களில் பதில், இயலாத போதுகளில் காரணத்துடன் எப்போது என்பதை அறிவிப்பது என்பது தான் முதலில் பேசப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆனால் தன்னுடைய வாதத்தை பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு நாளாக இடுவது என்பது ஏற்புடையதல்ல. இது இழுத்தடிப்பதற்கு பயன்படும் உத்தி. ஒரு பதிவை வைப்பதற்கு ஐந்து நாட்களுக்கு மேல் பொய்ராஹிமுக்கு தேவைப் பட்டிருக்கிறது. இது மேலும் மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே இருவரும் ஏற்றுக் கொண்ட நடைமுறையின் படி நான்கு நாட்களுக்குள் ஒரே நாளில் பதிலை வைத்துவிட வேண்டும்.

    • S.Ibrahim ஜூன் 24, 2012 இல் 3:21 பிப #

      காபிரான செ .கொ ,ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே அம்பல படுத்திக் கொண்டதாக என்னைப் பற்றி அலறும் செ .கொ அதை எங்ஙனம் என்று கூறவில்லை .ஆனால் அவர் தன்னைத்தானே அம்பல படுத்திக் கொண்டதை என்னால் கூற முடியும் .இப்போது பாருங்கள் அவர் பொதி சுமக்கும் கழுதையை தூக்கி வந்த காணொளியும் கேட்போலியும் கேட்பாரற்று போய்விட்டது .ஏனெனில் ,கானொளியில் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை .மாறாக ,அவர் குறிப்பிடும் முல்லா தாக்க வேண்டும் என்ற சிந்தனையிலே வந்தனர் என்று கூறுவதிலிருந்தே துராப்சா தாக்கப் படவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.ஆக இதன் மூலம் காபிர் செ.கொ தன்னைத்தானே உண்மையை அம்பலப் படுத்திக் கொண்டார்.அதோடு விட்டாரா இல்லை கேட்பொலியிலும் மாட்டிக் கொண்டார்.’அடிங்க”என்று கூறினால் அடித்தார்கள் என்று கொள்ள வேண்டும் என்று கூறியவர் வெட்டுங்க என்று கூறினால் வெட்டினார்கள் ,என்று அர்த்தமா எனக் கேட்டால் மவுநியாகிவிட்டார்.இங்கேயும் அவர் தன்னைத்தானே அம்பலப் படுத்திக் கொண்டார்.இப்போது அந்த ஆதாரங்களையும் ஆற்றில் இறக்கிவிட்டார்.இங்ஙனம் அவர் கொண்டு வந்த ஆதாரங்களை கொண்டே துராப்சா தாக்கப்படவில்லை என்று நிருபித்து விட்டு திருப்பங்கள் குழப்பங்கள் ,அறிவுநாணயம் ,நேர்மை நாணயம் என்று சில்லறைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
      பொதுவிலிருந்து ஒன்றை விமர்சனம் செய்வதும் கள்ள சாராயம் விற்பதும் ஒன்றா என்று கேட்கிறார்.உதாரனத்திளிருந்து விளங்கி கொள்ளவிடாமல ,உவமானத்தையும் உவமேயத்தையும் ஒன்றா என்று கேட்டு திசை திருப்பி வேடிக்கை காட்டுகிறார்.பொதுவிலிருந்து விமர்சனம் செய்வது டாஸ்மாக் என்றால் உங்களது அவதூறுகள் கள்ளச்சாராயம் என்று விளக்கிய பிறகும் தனது திருகு தாளத்தை முழக்கி பார்க்கிறார்.தான் திருடி பிறரைத் திருடன் என்பது போல அடுத்தவர்கள் மீது திசைதிருப்புகிறார்,என்று பழிபோட்டு அவர்தம் அக்காரியம் செய்கிறார்.துராப்சா போட்ட பின்னூட்டம் தவறு என்பதை காபிரான செ.கொ.கோணத்திலிருந்து பார்க்க முடியாது.இந்திய அரசியல் சட்டத்தின் மூலமே பார்க்க முடியும் .மற்றவர்களின் விமர்சனங்களில் இவரது வகையறாக்கள் எங்ஙனம் நடந்துள்ளார்கள் என்பதை சுட்டி காட்டினால் சுட்டிமூலம் காட்டினால் அதை நான் நிருபிக்க வேண்டுமாம் .இன்னும் இவர்களது மூலகர்த்தா ஆட்சியில் கம்யுனிசத்தை விமர்சனம் செய்தால் என்ன கதி அடைவார்கள் என்று கேட்டால் வேப்பங்காயைத் தின்னது போல துப்புகிறார்.பொதுவிலிருந்து விமர்சனம் செய்பவர் பொதுஇடத்தில் இருந்து விமர்சனம் செய்யாமல் கள்ளச் சாராய வியாபாரி பதுங்கி பதுங்கி வியாபாரம் செய்யவது போல பதுங்கியிருந்து விமர்சனம் செய்ய வேண்டும்?
      ///மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
      ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
      இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத்(லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,////
      என்று குர்ஆணை விமர்சிக்க ஆரம்பித்தவர் அடுத்து குர்ஆனைமேலும் கடுமையாக விமர்சிக்க பழைய ஏற்பாடோடு தொடர்பு படுத்துகிறார்.
      ///குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.////
      இரு வேதங்களையும் விமர்சிப்பவராக இருந்தால் துவக்கத்தில் இரு வேதங்களையும் பற்றி தனது விமர்சன முகவுரையை தெரிவித்திருக்க வேண்டும் .ஆனால் முழுக்க குரானை பற்றி துவக்கத்தில் விமர்சித்து விட்டு அதன் தொடராக பழைய ஏற்பாட்டை யும் சம்பந்த படுத்த முனைகிறார்.அந்த இடத்தில் கூட பளையேர்பாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சனம் இல்லை.இவ்வாறு குரானோடு பளையஎர்பாடடியும் இணைத்து தனது அத்து மீறி செய்திருக்கும் அயோக்கிய நாயகர் தச்சா ஆளுக்கு இவர் வக்காலத்து வாங்கும் விசயத்தில் உண்மையை ஏனையோர் புரிந்து கொள்ளட்டும்.
      இன்னும் இன்சாஅல்லாஹ்

    • S.Ibrahim ஜூலை 1, 2012 இல் 4:58 முப #

      ////குற்றம் கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டது என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறார் பொய்ராஹிம். தோழர் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டதோ அந்தக் குற்றம் பிடிக்கப்படவும் இல்லை, தோழர் அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. என்றால் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? ////
      மீண்டும் தனது அதி புத்திசாலித்தனத்தை பயன் படுத்தி தவறை மறைக்க முயல்கிறார் .விசாரணை நடத்த வேண்டுமாம் . அவர்களுக்கு துராப்சா எழுதியவை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றால் அவர் குற்றம் செய்யவில்லை என்று அர்த்தமா?கருணாநிதி மீது எந்த ஒரு லஞ்ச ஊழல் வழக்குகளும் ஆரம்பகட்டத்திலேயே ஆதாரமற்று தள்ளுபடியாகி விடுகின்றன என்பதற்காக கருணாநிதி லஞ்ச ஊழல் பண்ணாதவர் என்று யாரவது கூறுவார்களா? துராப்சா மீது கூறப்பட்ட கள்ள சாராயம் குற்றசாட்டு பிடிக்கப்படவில்லை என்கிறர சரி என்போம் .ஆனால் அவர் விஷ சாராயம் காய்ச்சியத்தை இங்கே ஆதாரமாக வைக்கப்பட்டதா இல்லையா?இவர் மீது விசாரணை நடப்பதை நான் அறிந்து இருந்தால் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பற்றி இவர் எழுதியதை அந்த இடத்தில் நான் காட்டியிருந்தால் துராப்சா நிலை என்னவாக இருக்கும்?
      ///செய்யப்பட்டது அறிவிப்பா? தீர்ப்பா? தண்டனையா? என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அதற்கு பொய்ராஹிமிடமிருந்து தர்க்க ரீதியான மறுப்பு எதுவும் இதுவரை வரவில்லை. ////
      இப்போது நான் செத்த கொடியான செங்கொடியை அவர் “என்னைப்பற்றி “என்று செங்கொடிதளத்தில் எழுதியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு அவர் முஸ்லிம் இல்லை ,அவர் இறைநிராகரிப்பாளர் ,கெஜெட்டில் தனது பெயரை மாற்றாமல் முஸ்லிம் பெயரிலே இருக்கிறார். அவர் முஸ்லிம் என்று நம்பி மதரீதியிலான மற்றும் திருமண ரீதியான உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் ஒரு மீடியா வாயிலாக அறிவித்தால் அதன் பெயர் தீர்ப்பா ?
      தான் பிடித்த முயலின் காலை வெட்டியதும் வறட்டு பிடிவாதம் பண்ணிக்கொண்டிருப்பதும் யார் என்பது இங்கே உங்களுக்கு பக்கவாட்டு பாட யாரும் வரவில்லை என்பதின் மூலம் அறிந்து கொள்ள முடியும்
      ///சட்டச் சிக்கல் வரக்கூடாது என்று காஜியிடம் வேண்டினார்களாம். ‘சமாத்’ முடிவு தான் சொப்ரீம் கோர்ட்டு வரை செல்லுபடியாகும் என்றால் இதில் மட்டும் சட்டச் சிக்கல் எங்கிருந்து மொளைக்குது? ஐயா ஐ கோர்ட்டு ஜட்ஜுங்களா! தீர்ப்பு சொன்ன நாட்டாமைகள் எல்லாம் டவுண் காஜியிடம் போய் ”சட்டச் சிக்கல் வந்துடும் நீங்க கையெழுத்து போட்டுத் தாங்க” என்று முட்டுக்கையை சொரிந்து கொண்டு கேட்டால்; அதுக்கு பேர் தாங்கோ போலித் தீர்ப்பு.///
      அது அவர்களது நிலைப்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள் .இல்லைஎன்றால் நாங்கள் இஸ்லாத்தை விமர்சித்தாலும் நாங்கள் முஸ்லிம்கள்தான் என்று மண்ணாங்கட்டி மேதையே ! கொஞ்சம் வாதாடிப் பாருங்களேன்
      ///அண்ணே தர்மாஸ்பத்திரி டாக்குடருங்களா! தோழர் பேண்ட்எய்ட் போட்டிருக்கிறார் என்றோ, ஐசி யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றோ நாங்கள் எங்கும் கூறியதில்லை. தாக்கப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே கூறி வந்திருக்கிறோம். ///
      அப்படி எனில் காட்டுமிராண்டி தாக்குதல் என்பது பொய்யல்லவா? இதுதானே விவாதத்தின் தலைப்பு .இப்போது விவாதம் முடிவு நிலையை எட்டிவிட்டது .துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப் படவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார் .
      ////பாப்பான்கள் பள்ளியை இடித்தார்கள். அது குற்றம். அதேபோல் முஸ்லீம்கள் எங்கள் தோழரை இடித்தார்கள் அதுவும் குற்றம். இதில் பார்ப்பனர்களாக செயல்பட்டிருப்பது யார்? அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களே! எங்கள் தோழர் அவதூறு செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? ////
      என்னே ஒப்பிட்டு ? மூளை யை உபயோகிக்காமல் கிட்டினியை உபயோகித்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்.மேலும் கம்யுனிஸ்ட்கள் எல்லாம் கிட்னியை யூஸ் பண்ணியே சிந்திக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது.
      முஸ்லிம்கள் பாபர் கட்டிய பள்ளிவாசலாக நம்பி வந்த பள்ளிவாசலை பாப்பான்கள் இடித்தார்கள் .
      முஸ்லிம்கள் லூது [அலை] அவர்களை புனிதராக ,இறைதூதராக நம்பி வந்ததை அவரை லூசு என்று கூறி கழிசடை எங்களது மனதை இடித்ததை ,இவரால் கைவிடப்பட்ட ,மேலும் இவரையும் இவரது கொள்கையும் கைவிட்டுவிட்ட ,தோழர் துராப்சா அதை முகநூல் மூலம் இன்னும் அதிகமான முஸ்லிம்களை ,அவர்களின் மனதுகளை இடித்தார் .
      உங்கள் கைவிடப்பட்ட தோழர் அதை முகநூலில் வெளியிட்டது ஒரு ஆதாரம் .நபி]ஸல்] அவர்களின் ஆயிசா [ரலி]திருமணம் பற்றி எழுதியதும் ஒருஆதாரம் .
      ,//// சாக்லேட்டோடு கதையை முடித்துக் கொண்டு நழுவி விட்டார். விபரம் தெரியா சிறுமிக்கு இனிப்பு சாக்லேட் என்றால் பெற்றோர் காப்பாளருக்கு வேறு வித சாக்லேட். இந்த வேறு வித சாக்லேட்டுக்கு ஹைதராபாத் ஆமினா தொடங்கி ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றனவே.///
      சாக்கலேட் உதாரணம் சப்பிப் போனதும் தப்பிக்க ஹைதரப்பத் ஆமினாவாம் .முஸ்லிம்கள் செய்யும் குற்றங்கள் அறியாமை எல்லாம் இஸ்லாத்திற்கு ஆதாரமா?
      அந்த குரான் வசனத்தை மேலும் வலுவடைய செய்யும் பலஹதித்கள் உள்ளன .ஒரு பெண் தனது சம்மதம் இல்லாமல் செய்த திருமணத்தை ரத்து செய்கிறார்கள் முஹம்மது நபி[ஸல்] அவர்கள்.திருமணத்தை ஒரு பெண் செய்யும் உறுதியான உடன்படிக்கை என்று வசமா கூறுகிறது ஒரு உறுதியான உடன்படிக்கை என்றால் அது பத்து ,பதிமூணு வயதில் செய்யக் கூடியதா என்பதை கிட்னி மூளைகளுக்கு எங்ஙனம் புரிய வைக்க முடியும்?
      ஆக முஹம்மது நபி[ஸல்]அஅவர்கள் அக்காலத்தின் படியே பால்ய விவாகம் பண்ணினாலும் இக்காலத்தின் படியே அதை தடுக்கவும் செய்தார்கள்.ஆக இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருந்தும் .ஒரு நூற்றாண்டுக்குள்ளே செத்து செல்லரித்து மக்கிப் போன கம்யுனிசம் போல் அல்லாமல் இனி வரும் காலத்திலும் அதன் அற்புதங்கள் புரியும்.
      தாரமி சிஹாஹ் சித்தாவில் உள்ள ஒன்று அல்ல .அதன் சுட்டியை காட்ட இயலாது .ஆனால் அந்த நூலில் உள்ளது சத்தியம் .
      நான் மிசின் ரிப்பேர் இரண்டு நாளில் வருவேன் என்று சொல்லி பத்து நாட்களை இழுத்தடிக்கவில்லை. இப்போது தாமதத்திற்கு காரணம் ,உமது ஆதாரவாளர்கள் அதிகமாகா உலாவரும் இத்தளத்தில் உமக்கு ஆதரவாக கருத்துக்கள் வரவில்லை என்பதிலிருந்து உமது வறட்டு வாதங்களை அறிந்து கொண்டு ,எனது போரடிக்கும் நேரத்திலே இதை எழுத நினைத்தேன்

  28. nallurmuzhakkam ஜூலை 4, 2012 இல் 2:22 பிப #

    பொய்ராஹிம்,

    கடந்த பகுதியை பதிவு செய்வதற்கு கால தாமதம் ஆகிவிட்டது. என்னுடைய கணிணியில் நேர்ந்த இணையத் தொடர்பு பிரச்சனையால் தாமதமாகிறது என்பதை அறிந்ததும் முறைப்படி காரணத்துடன் ஓரிரு நாட்களில் பதிவு செய்வதாக தெரிவித்திருந்தேன். ஆனால் மேலும் தாமதமாகிவிட்டது. இதனை பொய்ராஹிம் ஒரு குற்றச்சாட்டைப் போல் தெரிவித்திருந்தார். ஏற்றுக் கொள்கிறேன், ஓரிரு நாட்களில் என்று அறிவித்துவிட்டு அறிவித்தபடி பதிவிட முடியாதது தவறு தான். நேர்மையுடன் அதை ஒப்புக்கொண்டு சுய விமர்சனம் செய்து கொள்கிறேன். இனி அவ்வாறு நேரா வண்ணம் கவனம் கொள்கிறேன். ஆனால் இதேபோல் பொய்ராஹிமிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? முன்னர் சிலமுறை பொய்ராஹிம் தாமதமாக பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் அதற்கு அவர் எந்தக் காரணத்தையும் கூறியதில்லை. ஒப்புக்கொண்ட முறைக்கு மாற்றமாக புதிய முறையில் ஒற்றை பதிவை ஐந்து நாட்களாக பதிவு செய்தார். இது குறித்து அவர் அறிவித்தாரா? இல்லை காரணம் ஏதாவது கூறினாரா? கடந்த பதிவின் பதிவுகளை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக பதிவு செய்தார். அவ்வாறு செய்யக்கூடாது, ஒப்புக் கொண்டபடி ஒரே பதிவாக வைக்க வேண்டும் என்று கூறியிருந்தும் தொடர்ந்து அது போலவே செய்திருக்கிறார். மட்டுமல்லாது, பதிவுகளுக்கிடையே இரண்டு நாட்கள் வரை இடைவெளி. இனி அடுத்த பதிவுகளில் எத்தனை நாட்கள் இடைவெளி இருக்குமே தெரியாது. இது காலம் கடத்தும் உத்தியா? இல்லையா? அது மட்டுமா? போரடிக்கும் நேரத்தில் எழுத நினைத்தேன் என்று திமிராக அறிவித்திருக்கிறார்.

    இதுதான் பொய்ராஹிம்களின் கிடக்கை. விவாதம் செய்கிறேன் என்று வரவேண்டியது, பதிலளிக்க முடியாத நிலை வந்ததும் திசை திருப்பல்கள், திருகு தாளங்கள் பதில் சொல்லாத கள்ள மௌனங்கள், தலைப்புக்கு அப்பாற்பட்டதைப் பேசுதல் என குழப்பி கும்மியடிக்க வேண்டியது. வெட்கமே இல்லாமல் முட்டாள்கள் போல் நடிப்பது. இத்தனையும் எதற்கு? மதத்தைக் காப்பாற்றுவதற்கு. கேட்டகும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வக்கற்ற இவர்கள் தாங்கிப் பிடிக்கும் மதம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதற்கு தெளிவான அத்தாட்சியாக பொய்ராஹிமின் வாதங்கள் இங்கே காட்சியளிக்கின்றன.

    காட்டுமிராண்டித்தனம் என்று இது வரை நான் எதைச் சொல்லி வந்திருக்கிறேன்? இதை பலமுறை தெளிவாக எழுதியிருக்கிறேன். மேலே படித்துப் பார்த்துக் கொள்ளலாம். காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையாக நான் குறிப்பிட்டது காட்டிமிராண்டித்தனமான அடியாக மாறி காயம் இல்லை என்பதால் காட்டுமிராண்டித்தனம் இல்லை என்று நானே ஒப்புக் கொண்டுவிட்டேனாம். மதம் என்று வந்துவிட்டால் இப்படியுமா வெட்கம் கெட்டுத் திரிவார்கள் உலகில்?

    கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனத்தை ஐந்தாக பிரித்து தெளிவான கேள்விகளாக கேட்டிருக்கிறேன். அவைகளுக்கு தீர்க்கமான பதிலை கூறும் வரை இந்தக் கேள்விகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

    பின்குறிப்பு 1. உமர் குறித்த அந்த ஹதீஸுக்கு சுட்டி தர முடியவில்லை என்றால், அந்த ஹதீஸை எழுதுங்கள். அப்படி நீங்கள் எழுதாவிட்டால், அப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாக நீங்கள் கூறியது நீங்களே உங்களின் வசதிக்காக உருவாக்கிய பொய் ஹதீஸ் என்று நான் முடிவுகட்ட வேண்டியதிருக்கும்.

    பின்குறிப்பு 2. இஸ்லாம் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்களோடு எழுதியதற்கு முறையான மறுப்போ, பதிலோ இல்லை. சமாளிப்புகளையெல்லாம் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், பதிலை மட்டும் கூறுங்கள்.

  29. nallurmuzhakkam ஜூலை 13, 2012 இல் 8:08 பிப #

    கடந்த பதிவை வெளியிட்டு இன்றுடன் பத்து நாட்களாகிறது. பொய்ராஹிமிடமிருந்து விக்கலோ முக்கலோ எதுவுமில்லை. ஒருவேளை இதன் பிறகு அவருக்கு முனகல் வரக் கூடும். பரவாயில்லை பொய்ராஹிமுக்கு எதுவோ வந்து விட்டுப் போகட்டும். இங்கு இந்த விவாதத்தை நாம் ஒரு மீள் பார்வை செய்து விடலாம்.

    கடையநல்லூரில் தோழர் துராப்ஷாவுக்கு நடந்தது நேர்மையற்ற காட்டுமிராண்டித்தனம் என்பது பெரும்பாலானோருக்கு இப்போது புரிந்திருக்கும். அங்கு என்ன நடந்தது என்பதற்கு ஆதாரங்களாக காணொளி, கேட்பொலிகளை வைத்திருந்தேன். தேவைப்பட்டால் மேலதிகமான ஆதாரங்களை தருவதற்கும் ஆயத்தமாக இருந்தேன். ஆனால் பொய்ராஹிம் அப்படி அதிகமான ஆதாரங்களை வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவே இல்லை. என்பதோடு மட்டுமன்றி வைத்த ஆதாரங்களைக் கூட தகுந்த முறையில் உள்வாங்கவோ, எதிர்வாதங்களோ புரியவே இல்லை. பொய்ராஹிம் செய்ததெல்லாம், மதம் தலைக்கேறி செய்த வறட்டுத்தனங்கள் தான். விவாதத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முதலிலேயே விரிவாக பேசினோம், விவாதம் கடையநல்லூர் அளவிலா, உலக அளவிலா என்பது குறித்தெல்லாம் பேசிவிட்டுத் தான் விவாதம் செய்ய வந்தோம். ஆனால் பொய்ராஹிம் தொடர்பே இல்லாமல் சோவியத் ஸ்டாலின் என்றெல்லாம் உளறிக் கொட்டினார். இதில் மட்டுமல்ல,பொய்ராஹிம் முன்னர் புரிந்த விவாதத்திலும் இது தான் நடந்தது. பொய்ராஹிம் மட்டுமல்ல என்னுடன் விவாதம் புரிந்த அனைவரும் இதைத்தான் செய்தனர். உங்களுக்கு ஸ்டாலின் குறித்து பேச ஆசை என்றால் வாருங்கள் அதை தலைப்பாக எடுத்து விவாதிக்கலாம் என்றால் இருக்கும் அத்தனை ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டு ஓடி விடுகிறார்கள். ஆனால் எதை விவாதமாக எடுத்தாலும் பதில் கூற முடியாத இடத்தில் சாக்கடைகளில் ஓடும் பெருச்சாளிகளைப் போல் ஸ்டாலின், படுகொலை என்று கீச்சிட ஆரம்பித்து விடுவார்கள்.

    கடையநல்லூரில் நடந்ததை ஐந்தாக பிரித்து என்னுடைய வாதங்களை வைத்திருந்தேன். 1. குற்றம், 2. அவதூறா? விமர்சனமா?, 3. விசாரணை, 4. போலித் தீர்ப்பு, 5. தண்டனை. இந்த ஐந்து விதங்களிலும் பொய்ராஹிம் நேர்மையற்று, முறையற்ற சமாளித்தல்களையே செய்து கொண்டிருந்தார். இன்ன குற்றத்துற்காகத்தான் தோழரை தண்டித்தார்கள் என்று தெளிவாக அவரால் கூற முடியவில்லை. இதை அவதூறு என்று நாங்கள் நம்புகிறோம் என்கிறாரே தவிர இன்னின்ன காரணங்களால் இது அவதூறு என்று பொய்ராஹிமால் விளக்க முடியவில்லை. முதலில் கண்ண்ண்ண்ணியமாக விசாரித்தார்கல் என்று கூறிய பொய்ராஹிம் பின்னர் அது குறித்து மூச்சு கூட விடவில்லை. தீர்ப்பு கூற தகுதியில்லாதவர்கள் தீர்ப்புக்கூறி தண்டனைக்கு உள்ளாக்குவது எந்த அடிப்படையில் சரி எனும் கேள்விக்குள் புக மறுக்கும் பொய்ராஹிம் தற்போது அது அவர்களின் நிலைப்பாடு என்கிறார். அவர்களின் நிலைப்பாடு என்றால் இவருக்கு என்ன வேலை என்ற கேள்வி கூட பொய்ராஹிமிடம் எழவில்லை. தண்டனையில் மட்டும் சற்றே இரக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தான் இந்த விவாதத்தின் சாராம்சம். இதற்குத்தான் இத்தனை சவடால்கள், அங்கலாய்ப்புகள், ஆரவாரங்கள்,அள்ளி விடல்கள்.

    ஏன் .. ..? நடந்த ஒரு நிகழ்வு சரியா தவறா? இந்த விதத்தில் சரி இன்ன விதங்களில் தவறு என்று ஏன் பொய்ராஹிமால் நேர்பட நின்று வாதிட முடியவில்லை. மதம் என்று வந்து விட்டால் யாராலும் சரியா தவறா என்று ஆலோசிக்க முடியாது. அவ்வாறு ஆலோசிக்க மதங்கள் அனுமதிப்பதும் இல்லை. எந்த ஒரு மதவாதியும் தான் கொண்டிருக்கும் நிலைப்பாடு சரியா என்று தங்கள் மதத்தை உள்நோக்கி விமர்சன நோக்கில் பார்ப்பதே இல்லை. பார்க்கத் தொடங்கி விட்டால் அந்தக் கணத்திலிருந்து மதத்தை விட்டு வெளியேறத் தொடங்கி விடுகிறான். பிடிவாதமாக உள்நோக்கி பார்க்க மறுப்பவன் மதவாதியாக உறுமாறுகிறான். பொய்ராஹிம் அப்படியான ஒரு மதவாதி. அதனால் தான் என்ன நடந்தது என்பது குறித்து கொஞ்சமும் தெரியாத போதும் மதம் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு காட்டுமிராண்டித்தனத்தை ஆதரித்து நிற்க முடிந்திருக்கிறது பொய்ராஹிமினால். இது தான் மதம் என்பதன் நோக்கம், உள்ளீடு, உட்கிடக்கை எல்லாம். தன்னை ஏற்பவர்களின் விமர்சனப் பார்வையை முற்றாக ஒழித்து அடிமைத்தனமான பின்பற்றலைக் கோருவது தான் அது எந்த மதமாக இருந்தாலும் அதன் சாராம்சம். பொய்ராஹிம் அதற்கொரு துல்லியமான எடுத்துக்காட்டு. மதங்களின் அசிங்கமான பக்கங்களை மீண்டும் வெளிக்காட்டி அம்பலப்படுத்துவதற்கு உதவியதற்காக பொய்ராஹிமுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைக் கூறி இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து இந்த விவாதத்தை வாசித்து வந்தவர்களுக்கு கருத்துகளை கூறியவர்களுக்கும் நன்றி.

    பின்குறிப்பு 1: உமர் குறித்து பழைய ஏற்பாடு படித்ததாக பொய்ராஹிமால் கூறப்பட்ட ஹதீஸ் தனக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்.

    பின்குறிப்பு 2: குழந்தைத் திருமணம் செய்வதற்கு இப்போதும் இஸ்லாத்தில் எந்த ஒரு தடையும் இல்லை என்பது நான் எடுத்து வைத்த சான்றுகளை பொய்ராஹிம் கண்டு கொள்ளாமல் விட்டதால் நிரூபணமாகி விட்டது.

பின்னூட்டமொன்றை இடுக