நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார்,
எனக்கு வெறும் அம்பேத் காரா?
முதற்பதிவு: முகநூல்
கடந்த சனிக்கிழமை 10.12.2011 முதல் இன்று வரை பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திணறும் போலீசு படிப்படியாக வன்முறையை அரங்கேற்றி வருகிறது. இன்றும் அங்கே தடியடி நடந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!
முதல் பதிவு: வினவு
ஓவியம் என்றதும் வண்ண மலர்கள், பெண்கள், பனிபடர்ந்த சிகரங்கள், அழகுக் காட்சிகள் என நினைத்தீர்களா. இல்லை புரியவில்லை என்று சொன்னால் அறிவில்லை என்றாகும் என்பதால் ஆஹா என்று தலையாட்டும், புரிந்துவிடக்கூடாது எனும் நோக்கில் வரையப்படும் மார்டன் ஆர்ட் என நினைத்தீர்களா?
இவை உங்கள் முகத்திலறைந்து உண்மைகளைப் பேசுபவை. உறைந்து உலவும் துரோகங்களை உலுக்கி எடுத்து அம்பலப்படுத்துபவை. உங்களை அரசியல் விழிப்புணர்வுக்கு ஆற்றுப்படுத்துபவை. காணுங்கள்.
நன்றி:
வினவு
சித்திரக்கூடம்