தொகுப்பு | ஓகஸ்ட், 2012

கிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

25 ஆக

இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள், 

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

(லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

(மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity)  ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மிகச் சாதாரண மனிதர்களே மரணத்தை மிகத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சதாம் ஹூஸைன் சிறிதும் அச்சமின்றி அமெரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவாறே தூக்குக் கையிற்றை நெருங்கியதை  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அனைத்தையும் அறிந்த கடவுள்  இப்படி பயந்து நடுங்கி புலம்பிக் கொண்டே மரணமடைவானா? மேலும், மரணமடைபவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று இஸ்லாம் கேட்கும் கேள்விகளில் எந்த தவறுமில்லை. இயேசு கடவுளாக இருக்க முடியாது  என்ற முஸ்லீம்களின் வாதமும் சரியாகவே தோன்றுகிறது. 

ஆள்மாறாட்டம் செய்தால் மட்டுமே  ஈஸா நபியைக் காப்பாற்ற முடியுமென்ற நிலைமை  அல்லாஹ் இல்லையே? ஆள் மாறாட்டத்தின் விளைவுகளைப் பார்க்கையில், ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  செயல் மாபெரும் குழப்பமாக உள்ளது என்ற கிருஸ்துவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும்  மறுக்க முடியாது. இயேசு சர்வவல்லமையுடைய கடவுள் என்பதும், அல்லாஹ் என்ற சர்வ வல்லமையுடைய இறைவன் தனது தூதரை ஆள்மாறாட்டம் செய்து காப்பாற்றினான் என்ற இந்த இருவாதங்களுமே  முட்டாள்த்தனமானவைகள் என்பது தெளிவாகிறது.

  சிலுவையில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை மட்டுமே, கிருத்துவமும்,  இஸ்லாமும் கூறும் செய்திகளிலிருந்து நாம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆள்மாறாட்டக் கதையை மேலும் சிறிது ஆய்வு செய்வோம். ஈஸா நபியின் உருவ அமைப்பிற்கு யூதாஸ் மாற்றப்பட்டான் என்ற பர்பனபாஸ் சுவிசேஷத்தின்  கருத்தை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதாஸ் என்ன தவறு செய்தான்? முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்தான். அவனது துரோகச் செயலுக்கு  தண்டனையாகவே ஆள்மாறாட்டத்தில் அவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான்.

யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு, ஈஸா நபி மறைந்திருந்து “கொரில்லா” முறைத் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத புரட்சிப்படை தளபதி இல்லையே! ஈஸா நபி யூத மக்களுக்கும், யூத அதிகரிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரிடம் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவார்கள். தனது போதனைகளை எவ்வித ரகசியமுமின்றி வெளிப்படையாகவே செய்தார். அவர் தினமும் யூத கோவிலில், யூதமத குருமார்களுடனும், யூதமதச் சட்ட எழுத்தர்களுடனும், அங்கிருந்த மதவியாபாரிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். ஈஸா நபியின் அற்புதங்கள் மூலமாகவும் அவரை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். ஈஸா நபியை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது, “நான் தினமும் இந்த கோவிலில் இருந்தவாறே உங்களுக்கு போதனை செய்தேன் அப்பொழுது என்னைக் கைது செய்ய உங்களது கரங்களை நீங்கள் உயர்த்தவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு திருடனைக்கைது செய்வதைப் போல இந்த நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறீர்கள் “ என்றார்.

எனவே யூதாஸ்  முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு,  முத்தம் செய்து காட்டிக் கொடுத்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வாதத்தற்காக அவன் ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்ததாகவும் அவனது துரோகத்திற்குப் பலனாக அவன் ஆள்மாறாட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதாவது, ஆள்மாறாட்டத்திற்குப் பிறகு, மறு வினாடியிலிருந்து யூதாஸ் என்றொருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அதாவது யூதாஸின் உருவமும், குரலும் ஈஸா நபியைப்போல மாற்றப்பட்ட பிறகு யூதாஸின் உருவ அமைப்பில் ஒருவரும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு யூதாஸ் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டதாக பல ஆதாரங்கள் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

சிலுவையில் மரணமடைந்த இயேசு நாதரின் உடல் அதாவது, குர்ஆனின் மொழியில் சொல்வதென்றால் ஈஸா நபியைப்போன்ற தோற்றமுடைய(யூதாஸ் என்ற)வரின் உடல் என்ன ஆனது? அது எப்படி எழுந்து சென்றது?

இயேசு நாதர் கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்ததாகவும் சீடர்களுக்கு காட்சி தந்ததாகவும் கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தது யூதஸா? யூதாஸிற்கு அத்தகைய அற்புத சக்தி வழங்கப்பட்டிருந்ததா?

 இதைப் போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எந்த பதிலும் இல்லை…!

பர்னபாஸ் சுவிசேஷம் இதற்கு பதிலைச் சொல்லுகிறது. சிலுவையில் மரணமடைந்த ஈஸா நபியைப் போன்ற தோற்றமுடைய( யூதாஸ் என்ற)வரின் அடக்கம் செய்யப்பட்ட உடலை, கடவுளுக்கு அதாவது அல்லாஹ்விற்குப் பயப்படாத ஈஸா நபியின் சீடர்களில் சிலர்,   கல்லறையிலிருந்து திருடி, மறைத்து, இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறி அனைவரையும் குழப்பத்திலாழ்த்தி நம்பவைத்ததாகக் குற்றம்சாட்டுகிறது.

Those disciples who did not fear God went by night [and] stole the body of Judas and hid it, spreading a report that Jesus was risen again; whence great confusion arose.

 (Gospel of Barnabas 218:1)

ஈஸா நபியை ஏற்றுக் கொண்ட மக்களை, “ஈஸா நபி மரணத்திற்குப் பின்னும் உயிர்த்தெழுந்தார்” என்ற பொய்ச் செய்தியின் மூலம் திசை திருப்பி அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறி, கிருஸ்துவம் என்ற பொய்யான மதத்தை உருவாக்கிய ஈஸா நபியின் சீடர்களைப் பற்றி அல்லாஹ்விற்கு எதுவுமே தெரியவில்லை. பிணத்தை மறைத்து, பொய்யை இட்டுக் கட்டி பெரும் பாவத்தை நிகழ்த்திய, ஈஸா நபியின் சீடர்களைக் கண்ணியமானவர்கள் வெற்றியாளர்கள் என்று குர்ஆனில் கூறுகிறான். பர்னபாஸ் சுவிசேஷத்தை எழுதியவருக்குத் தெரிந்த செய்தி கூட அல்லாஹ்விற்குத் தெரியவில்லை. குர்ஆன் ஒரு முழுமையற்ற, தெளிவற்ற புத்தகம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குழப்பம் இத்துடன் நிறைவடையவில்லை. ஈஸா நபியைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்ட அந்த ஒருவர் யார்? அவர் ஏன் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கேள்விகளுக்கு, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எந்தவிதமான  விளக்கமும் இல்லை. ஆனால் குர்ஆன் விரிவுரைகளில்  விளக்கம் காணப்படுகிறது.

 துரோகத்திற்கு தண்டனையாக யூதாஸின் குரலும் உருவமும் ஈஸா நபியைப் போல மற்றப்பட்டது என்ற விளக்கங்களை நம் இதுவரை பார்த்தோம்.  இனி வேறு விதமான செய்திகளையும் வாதங்களையும் பார்ப்போம்.

குர் ஆனின்4 :157-ம் வசனத்திற்கு இப்ன் அப்பாஸ் கூறும் விரிவுரை

(And because of their saying: We slew the Messiah Jesus son of Mary, Allah’s messenger) Allah destroyed their man Tatianos. (They slew him not nor crucified, but it appeared so unto them) Allah made Tatianos look like Jesus and so they killed him instead of him; (and lo! those who disagree concerning it) concerning his killing (are in doubt thereof) in doubt about his killing; (they have no knowledge thereof save pursuit of a conjecture) not even conjecture; (they slew him not for certain) i.e. certainly they did not kill him.

(ஈஸா நபியை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. டேஸியானோஸ் என்பவர் ஈஸா நபியின் உருவத்திற்கு ஒப்பாக்கப்பட்டார். அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். )

தனது இதே கருத்தை இப்ன் அப்பாஸ் மற்றொரு விளக்கவுரையிலும் உறுதி செய்கிறார்.

(And they schemed) they, i.e. the Jews, planned to kill Jesus, (and Allah schemed (against them)) Allah wished to kill their man Tatianos: (and Allah is the best of schemers) the strongest of those who have a will; it is also said this means: the best of Makers. [Sura 3 aya 54 ; ibn Abbas]

கிருஸ்த்துவம் உருவானதைப்பற்றி கூறும் 61:14 ம் குர்ஆன் வசனத்திற்கு இப்ன் கதீர் கூறும் விரிவுரை

Imam Abu Ja`far bin Jarir Al-Tabari reported that Ibn `Abbas said, “When Allah decided to raise `Isa to heaven, `Isa went to his companions while drops of water were dripping from his head. At that time, there were twelve men at the house. `Isa said to them, `Some of you will disbelieve in me twelve times after having believed in me.’ He then asked, `Who among you volunteers that he be made to resemble me and be killed instead of me; he will be with me in my place (in Paradise).’ One of the youngest men present volunteered, but `Isa commanded him to sit down. `Isa repeated his statement and the young man again stood up and volunteered, and `Isa again told him to sit down. `Isa repeated the same statement and the young man volunteered. This time, `Isa said, `Then it will be you.’ The appearance of `Isa was cast upon that young man, while `Isa, peace be on him, was raised to heaven through an opening in the roof of the house. The Jews came looking for `Isa and arrested the one that appeared as him, killing him by crucifixion. Some of them disbelieved in `Isa twelve times, after they had believed in him.

They divided into three groups. One group, Al-Ya`qubiyyah (the Jacobites), said, `Allah remained with us as much as He willed and then ascended to heaven.’ Another group, An-Nasturiyyah (the Nestorians), said, `Allah’s son remained with us as much as Allah willed and He then rasied him up to heaven.’ A third group said, `Allah’s servant and Messenger remained with us as much as Allah willed and then Allah raised him up to Him.’ The last group was the Muslim group. The two disbelieving groups collaborated against the Muslim group and annihilate it. Islam remained unjustly concealed until Allah sent Muhammad,..

(இமாம் அபு ஜாஃபர் இபின் ஜரீர் அல்-தபரி அறிவிப்பதாக இப்ன் அப்பாஸ் கூறுவது, ஈஸாவை சொர்க்கத்திற்கு உயர்த்த முடிவு செய்த பொழுது, ஈஸா தன் தலையிலிருந்து (வியர்வை) நீர் துளிகள் சொட்டிய நிலையில் தனது சீடர்களிடம் சென்றார். அவ்வேளையில், பன்னிரண்டு பேர் அந்த வீட்டிலிருந்தனர். ஈஸா அவர்களிடம் கூறினார், பன்னிரண்டு முறை என்மீது விசுவாசம் கொண்ட பின்னரும் உங்களில் சிலருக்கு என் மீது விசுவாசமின்றிப் போகும் என்றார். பிறகு அவர் கேட்டார், என் உருவ அமைப்பிற்கு ஒப்பாக்கப்பட்டு எனக்கு பதிலாக (சிலுவையில்) கொல்லப்பட்டு; (மறுமையில்) என்னுடன், என்னுடைய இடத்தில் சொர்க்கத்திலிருப்பதற்கும் உங்களில் தன்னையே அர்பணிப்பதற்கு யார் இருக்கிறார் ? என்று கேட்டார். அவர்களில் இளைஞர் ஒருவர் தன்னை அர்பணிக்க முன்வந்தார். ஆனால் ஈஸா அவரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா தனது கோரிக்கையை மறுபடியும் கூற அதே இளைஞர் எழுந்து நின்றார். ஈஸா மறுபடியும் அந்த இளைஞரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா  மறுபடியும் கூற, மறுபடியும் அதே இளைஞர் எழுந்து நின்றார். இம்முறை ஈஸா, “அப்படியானால் அது நீர்தான்” என்றார். அந்த இளைஞரின் உருவ அமைப்பு ஈஸாவைப் போல மாற்றப்பட்டது. அந்த வீட்டின் கூரையிலிருந்த திறப்பு வழியாக ஈஸா வானுக்கு உயர்த்தப்பட்டார். ஈஸாவைத் தேடி வந்த யூதர்கள் அவரைப் போன்ற உருவ அமைப்பிற்கு மாற்றப்பட்ட அந்த இளைஞரை சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு முறை ஈஸாவின் மீது விசுவாசம் கொண்ட பின்னரும் அவர்களில் சிலருக்கு  விசுவாசமின்றிப் போனது.

அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவான, அல்-யாக்கூபிய்யாவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ் எங்களுடனே இருக்கிறான் என்றனர். மற்றொரு குழுவான, அந்-நஸ்தூரிய்யவினர் கூறினர் அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் மகன் தங்களுடனே இருப்பதாகக் கூறினர். மூன்றம் பிரிவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் அல்லாஹ்விடம் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் சேவகரும், தூதரும் தங்களுடனே இருப்பதாக கூறினர். இறுதியான குழுவினர் முஸ்லீம்கள். நம்பிக்கையற்ற இரு குழுக்களும் முஸ்லீம் குழுவை அழிப்பதற்காகக்கு எதிராக ஒன்றினைந்தனர். அல்லாஹ் முஹம்மதுவை அனுப்பும் வரை இஸ்லாம் அநியாயமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்தது…)

இப்ன் கதீர் கூறும் இந்தக் காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

ஈஸா நபி தன் சீடர்களின் முன் நின்று கொண்டு கூறுகிறார், சொர்க்கத்திற்குவரும்படி எனக்கு அழைப்பு வந்திருக்கிறது, நான் அங்கு சென்று இன்பங்களில் திளைக்கப் போகிறேன். யூதர்கள் என்னைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே எனக்கு பதிலாக  அடிகளையும், உதைகளையும், சவுக்கடிகளையும், கொடுமைகளையும், அவமானங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கொடூரமான முறையில் சிலுவையில் மரணமடைய விரும்புபவர் உங்களில் யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பாரா? இதுதான் தெய்வீகத் தன்மையா?

வேறொருவர் ஒப்பாக்கப்பட்டாமல் ஈஸா நபியை சொர்க்கத்திற்கு உயர்த்த முடியாதா? ஈஸாவிற்குப் பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப்பட்டால் மட்டுமே, அல்லாஹ்வால் அவரை(ஈஸா) சொர்க்கத்திற்கு உயர்த்த முடியும் என்று கூறுவது  சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

இப்ன் கதீர் கூறும் இந்த முட்டாள்தனத்தை,  வாதத்திற்காக உண்மையென்று வைத்துக் கொள்வோம். சிலுவையில் கொல்லப்பட்ட ஒருவரைத் தவிர மீதம் உள்ள பதினொரு சீடர்களுக்கும், ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டதும், சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பதையும் மிக நன்றாக எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அபாண்டமான  பொய்ச் செய்திகளான இயேசு நாதரின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கூறி அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்காக அவரது சீடர்கள் உறவுகளையும், உடைமைகளையும் துறந்து பரதேசிகளாக சுற்றித் திரிந்தனர். பலர் கடுமையான அவமானங்களுக்கும்,  துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி கொடுமையான தண்டனைகளால் உயிரை விட்டனர் என்பது வரலாற்று செய்திகள்.

தெரிந்தே ஒரு பொய்யைத் திட்டமிட்டு பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

 சிலுவை மரணத்திற்குப்பின் ஈஸா/இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுவது பகுத்தறிவிற்கு  ஏற்புடையது அல்ல! இயேசு உயிர்த்தெழுந்த கதை பர்னபாஸ் சவிசேஷம் கூறுவதைப் போல உண்டாக்கப்பட்டிருக்கலாம். குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதை அர்த்தமற்றது. அது அல்லாஹ்வை கையாலாகதவனாக சித்தரிக்கிறது.

பர்னபாஸ் சுவிசேஷத்துடனும் குர்ஆன் முரண்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  இயேசு நாதர் உயிர்தெழுந்த கதையும், குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதையும் அர்த்தமற்றது. இப்படியொரு நம்பிக்கை ஏன் உருவானது?

நித்தியானந்த சாமியாரின் லீலைகள் வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. அப்பொழும் அவர் மீது நம்பிக்கை கொண்ட சிலர், தங்களது குரு நேர்மையானவர், கண்ணியம் நிறைந்தவர் என்று கூறி, குற்றம் சுமத்திய  லெனின் கருப்பனைக்  குற்றவாளி என வாதிட்டவர்களையும் நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. இதை ஆள் மாறட்டம் என்று உறுதிபடக் கூறும் அவர்களது ஆரவாளர்களையும், அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும்  நீங்கள்  இன்றும் பார்க்கலாம்.

இப்படியொரு (நஸ்தூரிய்யா – நெஸ்ட்ரோனிய) கிருஸ்துவர்களின் கூட்டம், முஹம்மது நபியின் காலத்தில் அன்று பாரசீகம், டமாஸ்கஸ் மற்றும் வட அரேபிய பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இவர்கள் ஈஸா/இயேசு மனித பண்புகளும் தெய்வீகத்தன்மையும் தனித்தனயே கொண்ட ஒரு மனிதரே என்றும் கடவுளால் மகனான தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவர் என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை கிபி 428-431-ளில் நெஸ்டோரஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள், கடவுளின் மகனைக் கொல்லவே முடியாது கடவுள் ஏதேனும் யூதரின் முகத்தை இயேசுவிற்கு ஒப்பாக மாற்றி அவனை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு சூழ்ச்சி செய்து தனது மகனைக் காப்பாற்றி விட்டார் என்று நம்பிவந்தனர். இந்தக்  கதை குர்ஆனையும் விட்டுவைக்கவில்லை.

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார்பொறுப்பு?

        குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே ! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்

முஹம்மது நபியின் கூற்றுப்படி,  ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட)  சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின்  போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவதுசம்பாதித்துஇருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்குமாற்றவில்லை.

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை.  தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.

        ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

 இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.

இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்.  யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?

 (குர்ஆன் 3:144)

முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

        ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்,  மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்

21 ஆக

 

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது. 

இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்

பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.

போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். 

இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.

மக்களுக்கான கடன் மறுக்கப்படும்

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…

தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்

க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் 

* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!

* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!

* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!

* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!

* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!

* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!

* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!

* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.

எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர், 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,

தமிழ்நாடு.

 

முதல் பதிவு: தீக்கதிர்

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

19 ஆக

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! – பிரசுரம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!


* நாடு மீண்டும் காலனியாவதைத் 
தடுத்து நிறுத்துவோம்!

*  முதலாளித்துவ பயங்கரவாதத்தை
அடித்து வீழ்த்துவோம்!

*  போலி ஜனநாயக தேர்தல் பாதையைத் 
தூக்கியெறிவோம்!

* நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம், 
63, ஆற்காடு சாலை, 
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 4

16 ஆக

 
 
நண்பர்களே.சென்ற பதிவுகளில் அறிவார்ந்த வடிவமைப்பின் விளக்கம் அதன் வரலாறு குறித்து அறிந்தோம்.அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கம்[ID] பிற பரிணாம எதிர்ப்புகளை விட அறிவியல்(?) ரீதியான விமர்சனங்களை பரிணாமத்தின் மேல் தொடுப்பதும் அதற்கு பரிணாம ஆய்வாளர்கள் பதிலளிப்பதும் இந்த 15+ ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப் பட்ட ஒன்று.
இந்த இயக்கமும் பல்கலைகழகம் , ஆய்வுக் கூடம்,கல்வி,விளம்பர பிரச்சாரம் என மும்முரமாக இயங்குகிறார்கள்.இதன் முக்கியமான் நாயகர்கள் குறித்து அறிவோம்.ஒவ்வொருவர் பற்றி சுருக்கமான விவரங்களும் அவர்களின் ஒரு சிறிய உரையும் இப்பதிவில் அளிக்கிறேன்.காணொளியில் அவர்கள் முன் வைக்கும் பரிணாம கொள்கையின் மீதான விமர்சனங்கள் வரும் பதிவுகளில் விவாதிக்கப்படும்.இப்போது அறிமுகம் மட்டுமே!!!!!!!!!!
 
1.Phillip E. Johnson
 
 
 
 
Phillip E. Johnson (d.o.b: 18 June 1940) அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.இவர் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் மட்டுமல்லாது பெர்க்லி பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசியராகவும் [emeritus professor of law at Boalt School of Law at the University of California, Berkeley] 1967 to 2000 ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கிறித்தவ[Presbyterian Church (USA] மத நம்பிக்கையாளர். மைக்கேல் டென்டன் எழுதிய Michael Denton‘s Evolution: A Theory in Crisis. [1985] புத்தகம் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Blind Watchmaker[1986] புதகம் ஆகியவற்றின் மீதான ஆய்வில் பரிணாம விமர்சகராக மாறியதாக குறிப்பிடுகிறார். Discovery Institute‘s Center for Science and Culture (CSC) நிறுவனர்களுள் ஒருவர்.
 
 
 
 

2.Michel Behe

Michael J. Behe (born 1952) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்தவர். உயிர்வேதியலில்[Biochemistry] முனைவர் பட்டம் பெற்ற சிறந்த ஆய்வாளர். sickle-cell disease என்னும் இரத்த குறைபாடு பற்றியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் [1978 to 1982] பெற்றார். உன்னத முனைவர் பட்டம் எனப்படும் postdoctoral work [1982 to 1985] ஆய்வில் டி என் ஏ [DNA] அமைப்பு குறித்து ஆய்வு செய்தார் .பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்விதழ்களில் பதிவிட்டார். நியூ யார்க்கில் உள்ள Queens College  கல்லூரியில் உயிர் வேதியியல் துறை பேராசியராக பணியாற்றியவர். இப்போது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள  Lehigh University ல் பணி புரிந்து வருகிறார். Discovery Institute’s Center for Science and Culture அமைப்பிலும் பெருந் தொண்டு ஆற்றி வருகிறார்.
 
முதலில் பரிணாம் கொள்கையை ஏற்புடையதாக கருதினார்.ஆனால் மைக்கேல் டென்டன் எழுதிய Evolution: A Theory In Crisis புத்தகம் படித்த பின் பரிணாம கொள்கையை விமர்சிக்க தொடங்கினார். பரிணாம் கொள்கை உண்மையாக இருக்க முடியாது என்பதற்கு உயிர்வேதியியல் ரீதியான ஆதாரம் கண்டு பிடித்ததாக கூறினார் பெஹே. சில உயிர்களின் அடிப்படை வடிவமைப்புகள் எளிமைப் படுத்த முடியாத சிக்கலாக இருப்பதாகவும் இவை எந்த ஒரு எளிமையான அமைப்புகளில் இருந்து பரிணமிக்க முடியாது என்ற விமர்சனத்தை வெளியிட்டார்.இதுவே Irreducible complexity     என அழைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையின் சாரம் ஆகும். இவை பரிணாம செயல்முறைகளான் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தின் மூலமாக விளகக முடியாது என்பதால் இவை ஒரு அறிவு கொண்ட சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டு இருக்க முடியும்.இம்மாதிரி விளக்கங்கள் நிறைய கேட்டு இருக்க்லாம்.”கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத‌தால் கடவுள் உண்டு”.இந்த விள்க்கம் எல்லாம் மைக்கேல் பெஹேவின் Irreducible complexity  கொள்கை போட்ட குட்டிகள்தான். இவர் 1996ல் எழுதிய. Darwin’s Black Box  புத்தகம் பிரபலமானது.
 
 
இக்கொள்கை முன்னெடுப்பதில் இவர்&கொள்கைகள் பற்றி இன்னும் அதிகம் வரும் பதிவுகளில் பார்ப்போம்..
 
மைக்கேல் பெஹே கீழ்க்கண்ட வாதங்களை காணொளியில் முன் வைக்கிறார்
முதல் காரணி வாதம்[First cause argument]
 
ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்[Fine tuning argument]
 
இயற்கையாக ப்ரோட்டின் அமையும் நிகழ்தகவு[Probability of protein formation]
 
பிரபஞ்சத்தில் முதல் உயிரின் தோற்றம்.[Abiogenesis]

.Michel Behe

3.William Albert “Bill” Dembski

William Albert “Bill” Dembski (born July 18, 1960) இவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை  William J. Dembski பரிணாம் உயிரியல் பேராசியர் [University of Erlangen-Nuremberg] என்பது வியப்பான உண்மை. William Dembski கணிதம் [University of Chicago], தத்துவம் [Princeton Theological Seminary] என இரு முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறுவயது முதலே பரிணாம் கொள்கை மீது சந்தேகம் கொண்ட டெம்ஸ்கி 1991ல் சீரற்ற தன்மையை வடிவமைத்தல்[Randomness by design] என்னும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.
 
[பரிணாமத்தின் படி வடிவமைப்பு என்பது சீரற்ற தன்மையால் [Design by randomness] இவர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார். ஹா ஹா ஹா சரியான போட்டி!!!!!!!!!! சில பரிணாம கொள்கையாளர்கள் சீரற்ற சிறுமாற்றம் மட்டும்தான் ஒழுங்கற்றது இயற்கை தேர்வு அப்படியல்ல என்று கூறுவது சரியே என்றாலும் இங்கு இப்பதிவு ஒரு  ID கொள்கையாளரின் கண்ணோட்டதிலேயே எழுதப்படுகிறது. விமர்சனங்கள்,விவாதங்கள் பிறகு ]
 
பரிணாம செயல்முறைகள் மூலம் சிக்க்லான வடிவமைப்பு நிகழ முடியாது என்பதற்கு கணித ரீதியாக சில விமர்சனங்களை வைக்கிறார். பரிணாமத்தின் மாதிரியான Evolutionary Algorithms      பல கணித சிக்கல்களை தீர்ப்பது பரிணத்தின் நிரூபணம் என்பதை உடைக்க முயல்கிறார். இதற்கு No free lunch theorem மற்றும் Complexity theory அடிப்படையில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.இவர் Discovery Institute‘s Center for Science and Culture (CSC)  ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனக்கு பிடித்தவர் இவர்தான் . இவர் நம்ம specialization  ஆள் அதனால் வரும் பதிவுகளில் இவர் கட்டுரைகள் நுணுக்கமாக் அலசப்படும்

4.Stephen C Meyer

Stephen C. Meyer.Director of the Center for Science and Culture at the Discovery Institute and Vice President and Senior Fellow at the Discovery Institute
Stephen C. Meyer புவியியலில் பட்டமும்,வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் எழுதிய   signature in the cell     என்ற புத்தகமும் பிரபல்மானது.செல்லில் உள்ள டி என் ஏ ல் உள்ள சிக்கலான வடிவமைப்பு,தகவல்கள் பரிணாமத்தை தவறு என்று நிருபிப்பதாக வாதிடுகிறார்.
 
 
இது இல்லாமல் இன்னும் சிலரும் உண்டு என்றாலும் இந்த நால்வரை பற்றி சில குறிப்புகள் கொடுத்தது ஏன் எனில் இவர்களில் விமர்சன முறைகள் வேறுபட்டது.திரு ஜான்சன் சட்டாரீதியாக‌வே பரிணாம கொள்கை கல்வி எதிர்ப்பு குறித்து மேற்கொண்டார்.
 

திரு மைக்கேல் பெஹே உயிர் வெதியியல் சார்ந்தும்,திரு டெம்ஸ்கி கணிதம் சார்ந்தும் ஸ்டீஃபன் மெயர் செல் ஆய்வு சார்ந்தும் விமர்சனம் வைப்பதால் இந்த விமர்சகர்களை  அறிவது அவசியம் ஆகிறது.இனி நேரடியாக  கொள்கை  மற்றும் அதன் பரிணாம் விமர்சனம் குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.நன்றி

 

முந்திய பதிவுகள்

விடியவில்லையா? விடிவே இல்லையா?

15 ஆக

”நள்ளிரவில் வாங்கினோம்

இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை

உலவுவதுண்டு.

எதிர்மறையில் ஏற்கும்

ஏக்கம் அது.

 

கருப்புக் கொடி நாட்டி

கருப்பு நாள் என்றறிவித்து

எதிர்ப்பை பதிவு செய்யும்

எதிர்வினைகளும் இங்குண்டு.

எதிர்ப்பின் மூலமே

இருப்பதாய் கட்டிக் கொள்ளும்

பொருளும் வந்து விடுகிறது அதில்.

 

விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும்

கருப்புதினம் எனும் துக்கத்துக்கும்

எதிராய்,

விடுதலை எனும் சொல்லின் வீச்சு

இந்த சுதந்திர நாளில்(!)

எங்கேனும் ஒட்டியிருக்கிறதா?

எனும் கேள்வியே மாற்று.

 

சட்டையில் மூன்றுநிறக் கொடியும்

நெஞ்சில் பூக்கும் பெருமிதமுமாய்

சுதந்திர தினம் கொண்டாடும்

அப்பாவிகளே!

எதில் இருக்கிறது என்று

இன்றை கொண்டாடுகிறீர்கள்?

 

உழைக்கும் மக்களின் பிரச்சாரத்தை மறுத்து

நகரின் சுவர்களில்

வண்ணாங்களாய் தீட்டி வைத்த

ஓவியங்களின் முதுகில்

சுவரொட்டி ஒட்டும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி

வரிச் சலுகையாய் உன் பணத்தை

கொட்டி முழுங்கும் முதலாளியை

இலவச முதலாளி என்றோ

விலையில்லா முதலாளி என்றோ

விளிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

விளைச்சலை கொள்முதல் செய்யும் வசதிக்காக

கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு

மக்களுக்காக உள்கட்டுமான வசதிகள்

என உதார் விடுவது போல்

பசுமைப் புரட்சி எனும்

விவசாயிகளின் தூக்குக் கயிற்றை

முதலாளிகளின் செல்லத்திட்டம்

என்றழைக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

மருத்துவ வியாபாரிகள்

கோடிகளில் லாபம் பெற

உன் உறுப்புகளை தானம் செய்வது

மனிதாபிமானம் என திரிக்கப்பட்டிருக்கிறதே,

அவசரம் என்று ஒதுங்க

அவர்களின் பளிங்கு கக்கூசை கூட

திறக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?

 

பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்

இந்த பணம் படைத்த உலகில்

உங்கள் உரிமைகளுக்காய் வீதியில் கூடி

போராடச் சுதந்திரம் தான் உண்டா உனக்கு?

 

ஆனால்,

 

முன்னேற்றம் எனும் பெயரில்

முதலாளி குவிக்கும் பொருட்களை

நுகர்ந்து ஏமாற

சுதந்திரம் உண்டு உனக்கு.

 

எந்தச் சுதந்திரத்துக்காக

நீ கொண்டாடுகிறாய்?

இல்லாத சுதந்திரத்துக்கா?

இருக்கும் சுதந்திரத்துக்கா?

 

என்ன பொருளில் நீ கொண்டாடினாலும்

உன்னை அடிமையாய் ஆளப்படுவதற்ற்கு

நீயே வழங்கும் சுதந்திரம் அது

என்றே கொள்ளப்படும்.

 

திணிக்கப்படும் கொண்டாட்டங்களை மறு,

மறுக்கப்படும் உரிமைகளுக்கான சட்டங்களை மீறு

திரண்டு வீதியில் போராடு

அதுவே உன் சுதந்திரத்தைச் சமைக்கும்.

– நசீபா காஹ்துன்

 

கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

12 ஆக

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜேப்பியார் இன்ஸ்டூட்டுக்காக கட்டப்பட்ட விளையாட்டு ஸ்டேடியத்திற்காக நடந்த கட்டுமான வேலைகள் நடைபெற்றதில் 10 பேர் கோரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இது போல சென்னையில் ஆங்காங்கே தினம் ஒருநபராவது வேலையின் பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுகிறார்கள் என எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.  கட்டுமான தொழிலாளர்களுக்கு பணிச்சூழல் என்பது படுமோசமான நிலை இருக்கிறது. ஹெல்மெட் கிடையாது. பாதுகாப்பு கவசங்கள் கிடையாது.  பாத்ரூம், டாய்லெட் வசதி கூட முறையாக கிடையாது.  முன்பு சென்னையில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்தனர். கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.  இவர்களுக்கு தற்காலிகமாக கட்டித்தரப்படும் வீடுகள் மாடுகள் இருப்பதற்கு கூட தகுதியற்றவை! 

மேலும், பல கட்டுமான நிறுவனங்கள் வேலையை துவங்கிவிட்டால், தங்களுடைய கொள்ளை லாபத்திற்காக இரவு பகல் என தொடர்ச்சியாய் வேலைகளை செய்கிறார்கள்.  ஜேப்பியார் போன்ற கல்வி வியாபாரிகள் ஒவ்வொர் ஆண்டும், மாணவர்களிடமிருந்து ஜூன், ஜூலையில் மாணவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை நன்கொடை என்ற பெயரில் பிடுங்கி தான் தங்கள் கட்டுமான வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்துகிறார்கள். பில்டர்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி தான் வேலையை துவங்குகிறார்கள். இப்படி அடித்து பிடித்து, வேலைகளை செய்யும் பொழுது, கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். உயிரிழப்பும், விபத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள் காலையில் 7 மணிக்கு வேலைக்கு போனால், இரவு திரும்ப 11 மணி ஆகிவிடுகிறது. மூன்று சிப்டுக்கு பதில் இரண்டு சிப்டுகளிலேயே ஆள்களிடம் வேலை வாங்கிவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காவது இ.எஸ்.ஐ. மருத்துவ பாதுகாப்பு உண்டு. கட்டுமான தொழிலில் சீசனல் வேலை என்பதால், இவர்களுக்கு இ.எஸ்.ஐயும் கிடையாது.

இந்தியாவில் விவசாயத்திற்கு பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கே இந்த கதி?  சமீபத்தில் ஒரு கட்டுமான தொழிற்சங்கம் வேலையின் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால், இரண்டு லட்சம் கேட்டு போராட்ட அழைப்பு விடுத்திருந்தது. இன்றும் இரண்டு லட்சத்திற்கே போராடும் நிலை என்பது அவலம் தான்!

ஜேப்பியார் இன்ஸ்டூட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரே ஒரு நபரை கைது செய்தார்கள். மக்கள் போராட்டங்களுக்கு பிறகு தான், ஜேப்பியாரை கைது செய்திருக்கிறார்கள். நாளையே தனது செல்வாக்கை வைத்து, வெளியில் வந்துவிடுவார். 

மக்கள் நலன் நாடும் அரசாய் இருந்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முறைப்படுத்துவார்கள். நடப்பது மக்கள் விரோத அரசு தானே!  போராட்டங்கள் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரும்!

முதல் பதிவு: குருத்து

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

8 ஆக

 

இஸ்லாமிய பரப்புரைப் பதிவர்களில் எதிர்க்குரல் ஆஷிக் அஹமது சற்றே வித்தியாசமானவர் அல்லது வித்தியாசமான பதிவர். தெளிவாகச் சொன்னால் ஆஹா, ஓஹோ என்று அற்புத சுகமளிக்கும் எழுத்துக்கூட்டல் செய்யாமல், இரும்பூறெய்தாமல் தான் விரும்பும் படைப்பு வாதத்தை, பரிணாமத்தின் தவறு என அவர் கருதும் ஒன்றின் மீதே கட்டியமைப்பவர்.  நினைத்ததை எழுத்தில் கொண்டுவரும் வல்லமை கொண்டவர் என்பதை அவரின் பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம். பரிணாம எதிர்ப்பு பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருபவர். என்னுடைய கணிப்பு சரியானது என்றால், தமிழ் இணையப் பரப்பில் இஸ்லாமிய பதிவர் சிண்டிகேட்டின் பிதாமகன். இவரின் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் எண்ணமிருப்பதாக முன்பொருமுறை தெரிவித்திருந்தேன். ஆனால் அதை அப்போது செயலுக்கு கொண்டுவரவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

 

முதலாவதாக, அவரின் ஆக்கங்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை ஆங்கிலக் கட்டுரைகளின் மறு ஆக்கங்கள். அறிவியல் இணைய இதழ்களில் வெளியாகும் பரிணாமத்திற்கு எதிரான ஐயநோக்குடைய கட்டுரைகளே இவருடைய ஆக்கங்களுக்கான கருப்பொருள். ஆனால் எனக்கோ ஆங்கிலப் புலமை போதாது. தமிழில் அவர் எழுதுபவைகளை உள்வாங்கிக் கொள்வதிலோ, அது சரியா தவறா என சீர் தூக்குவதிலோ எனக்கு போதிய திறனிருப்பதாகவே கருதுகிறேன் (உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாம்) ஆனாலும் மூலக் கட்டுரையை படித்து முழுமையாக புரிந்து கொள்வதில் இருக்கும் போதாமை சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

 

இரண்டாவதாக, அவர் பயன்படுத்தும் ஒரேமாதிரியான வடிவம். அதாவது, ஏதாவது ஒரு அறிவியலாளரின் அல்லது அறியப்பட்டவர்களின் பரிணாமத்துக்கு எதிரான ஒரு கூற்றை எடுத்துக் கொள்வது; அதைக் கொண்டு பரிணாமமே தவறானது, அறிவியலல்லாதது என்று சொந்த வாதத்தை இட்டு நிரப்புவது; பிறகு எந்தவித நிருவலும் இல்லாமல் இதற்கெதிராக படைப்புக் கொள்கையே சரி எனும் தோற்றம் தரும் முத்தாய்ப்பைச் செய்வது. சற்றேஎறக்குறைய அவரின் அனைத்து பரிணாம எதிர்ப்பு ஆக்கங்களும் இந்த பாட்டையிலேயே பயணப்பட்டிருக்கும். ஒரேவிதமான இதுபோன்ற நிருவலில்லாத கட்டுரைகளுக்கு ஏன் மறுப்பெழுத வேண்டும் எனும் அயர்ச்சியும் சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

 

ஆனாலும் அவருக்கு மறுப்பெழுத வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்துக் கொண்டே வந்தது. எனவே தயக்கங்களைத் தள்ளி வைத்துவிட்டு களத்துக்கு வந்து விட்டேன். எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் என்பதால் உள்ளபடியே இப்பதிவுகளுக்கு நேர்க்குரல் எனும் பொருள் வந்து விடுகிறது, நேரிய குரலாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. நண்பர் ஆஷிக் தன் பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார் என்றாலும் தொடராக எழுதுவதில்லை. ஆகவே அவர் எழுதியிருக்கும் வரிசையிலேயே நேரிய குரலை நடத்தலாம் என்பது திட்டம்.

 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் அவரும் நானும் செய்து கொண்ட ஒரு உரையாடலின் மீள்பதிவிலிருந்து இந்த மறுப்பை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். ‘செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி, புதிய கடவுளர் யார்? எனும் கட்டுரையில் பின்னூட்டத்தினூடாக நாங்கள் நடத்திக்கொண்ட உரையாடல் இதோ,

 

Aashiq AhamedAugust 18, 2010 at 9:31 pm

சகோதரர் மருதையன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

உங்களிடம் சில கேள்விகள்

 

1. “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று கிரேக் வென்டர் கருத்து சொன்னது மே மாதம். உங்களுடைய இந்த கட்டுரை வெளிவந்தது ஜூலை மாதம். கிரேக் வென்டர் மறுப்பு தெரிவித்தது உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைத்து விட்டீர்களா?

 

2. உயிரியலைப் பொறுத்தவரை ஒரு செல்லை உருவாக்கினால் தான் உயிரை உருவாக்கியதாக அர்த்தம். இவர்கள் உருவாக்கியதோ செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? இந்த விசயமும் உங்களுக்கு தெரியாதா?

 

அதுவும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு ஏற்கனவே உள்ள செல்கள் தான் தேவைப்பட்டிருக்கின்றன. இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

 

3. பதினைந்து வருடங்களாக பாடுபட்டு, பலருடைய உதவியைக் கொண்டு செயற்கை மரபணுத் தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்களோ ஒரு செல் ஆதி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று சொல்கின்றீர்கள், இது அறிவுக்கு ஒத்து வரும் வாதமா?

 

4. விஞ்ஞானிகளோ “ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒரு நல்ல அறிவியல் முன்னேற்றத்தை உங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

 

இந்த செயற்கை செல் ஆய்வு, இறை நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளதா, அல்லது உங்களைப் போன்றவர்கள் முகத்திலா?

 

உங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய இந்த பதிவை சற்று பாருங்கள்

 

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

 

நன்றி

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

செங்கொடி August 19, 2010 at 11:51 pm 

 

நண்பர் ஆஷிக்,

 

உங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். உங்கள் கட்டுரையின் திசையும், இந்தக் கட்டுரையின் திசையும் வேறு வேறானது. செயற்கை உயிர் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பது தவறானது. அது தோழர் மருதையனுக்கு தெரியவில்லை. மெய்யில் செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதை மறைத்து தோழர் மருதையன் நாத்தீகத்துக்கு ஆதரவாக பொய் சொல்லிவிட்டார், என்பது உங்கள் குற்றச்சாட்டு. அதற்காக ஆங்கில இணைய தளங்களைத் தேடிப்படித்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

 

அதேநேரம் இந்தக் கட்டுரையை நீங்கள் நிதானமாக படித்திருந்தீர்களென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் தோழர் மருதையன் அவ்வாறு கூறவில்லை என்பது.

 

\\ ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா//

 

\\ செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத் தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்//

 

\\ கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது//

 

இவைகள் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில் சில. ஆதாவது நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது தான் இந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தலைப்பில் செயற்கை உயிர் எனக் குறிப்பிட்டதை மட்டும் வைத்துக்கொண்டு தோழர் பொய் சொல்லிவிட்டார் என்கிறீர்களே, சரிதானா அது?

 

சரி ஏன் செயற்கைசெல் என குறிப்பிட வேண்டும்? அது ஒரு குறியீடு. செயற்கை செல் என்பது அந்த ஆராய்சியை குறிக்கும் குறியீடு. இந்தப் பெயரைத்தான் அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள், அது முழுவதும் செயற்கையான செல் அல்ல என்றபோதிலும். இதையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\ வென்டர் தன்னுடைய ஆய்வை “synthetic cell ” என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன்// ஆக நீங்கள் தலைப்பிட்டதன் நியாயம் தோழரின் தலைப்பிடலுக்கு பொருந்தமுடியாது என்று எப்படி அவ்வளவு தீவிரமாக நம்புகிறீர்கள்.

 

எனவே அது செயற்கைசெல் இல்லையென்றாலும் செயற்கைச் செல் என்றே குறிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். பின் உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன? அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\ மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன? செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா? செயற்கையா? என்று அமைத்திருக்கிறீர்கள். தலைப்புக்கு தோதுவாக கடைசியில் “என்னைப் பொருத்தவரை” என்ற சொல்லடையோடு உங்கள் கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம் உங்களுக்கு?

 

ஒரு மரபணுத் தொகுப்பை உருவாக்கவே பல ஆண்டுகள் முயன்று பல கோடி ரூபாய் செலவில் பலருடைய பங்களிப்பினால் தானே முடிந்திருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் ஆதியில் ஒரு செல் தானாகவே உருவானது என கூறுகிறீர்களே இது எப்படி அறிவாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?

 

ஒரு அறிவியலாளரின் தன்னடக்கத்திற்கும் ஆன்மீகவாதியின் தன்னடக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கட்டுரையிலேயே குறிக்கப்படுள்ளது ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு உயிரை உருவாக்கும் அளவுக்கு அறிவியலாளர்களுக்கு உயிரியல் தெரியாது என்று அவர்கள் கூறினால் அது உண்மை. இன்றைய அறிவியலில் அதற்கு வழியில்லை, அதை நோக்கி முனைந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இது நியாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் ‘குன்’ என்று சொன்னதும் ஆகிவிட்டது என்று நம்புபவர்களிடம்தான் இது எந்த விதத்தில் நியாயம் எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.

 

படைப்பு என்பது ஆண்டவனின் தனித்துறை. அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது. அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை.

 

தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன. பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி. பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?

 

இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்.

 

செங்கொடி

 

Aashiq Ahamed August 20, 2010 at 7:10 am 

 

அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

நீங்கள் நான் எழுதியதை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா? புரியவில்லை. நீங்கள் எழுதியதில் தான் எவ்வளவு குழப்பங்கள்

 

1. செயற்கை உயிர் என்று தலைப்பில் வந்ததா பிரச்சனை?. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை? மருதையன் தலைப்பில் செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.

 

பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்.

 

கடவுள் எப்போது காலியாவார்?, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே? இவர்கள் உயிரை உருவாக்கினார்களா?, வென்டர் ஒப்புக்கொண்டார் “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று. பின்னர் எங்கிருந்து வந்தது “பழைய கடவுள் காலி” என்பது போன்ற வார்த்தைகள்?

 

தலைப்பில் ஒன்று வைத்து விட்டு பின்னர் பதிவில் வேறுவிதமாக எழுதியது (நீங்களே பட்டியலிட்டு இருக்கின்றீர்கள்) படிப்பவர்களை முட்டாளாக்கும் செயலில்லையா? தலைப்பை justify பண்ணி மருதையன் எழுதினார் என்கின்றீர்களா?

 

இந்த பதிவை படித்த ஒரு சிலராவது நிச்சயம் குழம்பி இருப்பார்கள், “என்ன இது தலைப்பு இப்படி இருக்கிறது, பதிவு வேறு மாதிரி இருக்கிறதே” என்று

 

இப்போது நீங்கள் இது தெரியாதது போன்று எழுதி மறுபடியும் அவர் செய்த தவறை நீங்களும் செய்கின்றீர்கள் .. நியாயமா?

 

2. //இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது//

 

இப்படியெல்லாம் நீங்கள் எழுதினால் பின்னர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தான் கேட்போம்

 

சரி விடுங்கள். ஒரு செல் உருவாகுவதற்கு நிறைய காலம் ஆகின்றது என்றே வைத்து கொள்வோம். இங்கு அதுவும் அல்ல பிரச்சனை என்ன தெரியுமா பிரச்சனை?

 

//தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?//

 

இது தான் பிரச்சனை. இன்று 15 ஆண்டுகள் அயராது உழைத்து ஒன்றை உருவாக்கியவர்கள் நாளை ஒரே நாளில் இதனை உருவாக்கலாம்.

 

ஆனால் இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று கூறுகின்றீர்களே அதுதான் பிரச்சனை. இந்த மரபுரேகை 1.08 base pairs கொண்டது. இப்போது இவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால் இந்த மில்லியன் வார்த்தைகளை (அதாவது அதற்குண்டான வேதிப்பொருட்களை) பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டு தூர சென்று விட்டு நோட்டம் விடட்டும். இவையெல்லாம் தற்செயலாக ஒன்று சேர்ந்து மரபுரேகை உருவாகுகிறதா என்று பார்ப்போம்.

 

எடிசன் உருவாக்கிய கரியிழை குமிழ் விளக்குக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் அது தற்செயலாக ஒன்று சேர்ந்து விளக்காக ஆகிறாதா என்று பார்த்து சொல்லுங்கள்.

 

இந்த கருத்தை என்னுடைய பதிவில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றேனே .. நீங்கள் படித்து மறந்திருந்தால் உங்களுக்கு ஞாபகமூட்ட இன்னொருமுறை ..

 

//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?//

 

புரிகிறதா?

 

3. //அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது//

 

அப்படியா சேதி? இதற்கும் வென்டர் பதில் சொல்லியிருக்கின்றாரே, பார்க்கவில்லையா?

 

//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை//

 

பிறகு நான் எழுதியது, //இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது//

 

இப்போது அவர்கள் கடவுளின் எல்லைக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் .. ஒரு நிமிஷம், அதற்கு முன்னர் உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்.

 

4. //அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை//

 

relax please.. .ஒரு விஷயம் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்தால் இப்படி ஒரு பதிலா? உணர்ச்சிவசப்பட வேண்டாம் சகோதரரே..

 

இந்த செயற்கை செல் ஆய்வை விமர்சித்து ஆய்வாளர்கள் (in Nature, in The Sceintist etc) கருத்து சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன வலி இருக்கமுடியும்? என்னவோ போங்க..

 

கரியை பூசியிருக்கா? யார் மேல்? நாத்திகத்தின் மேல் தானே?

 

5. //தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன//

 

வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்

 

வேண்டாம் வேண்டாம். ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதற்கும் மட்டும் ஆதாரங்கள் கொடுங்கள் போதும். அது தான் விவாதப் பொருள்.

 

6. //பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி//

 

நல்ல வேலை பரிணாமத்தையும், அறிவியலையும் கமா போட்டு பிரித்தீர்கள். அறிவியல் என்று எழுதி பிராக்கெட்டில் பரிணாமம் உட்பட என்று எழுதாமல் போனீர்களே, அதுவரை மகிழ்ச்சி. அப்படி எழுதியிருந்தால் பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டியிருக்கும்.

 

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, “இது பொய் அதனால் அது உண்மை” என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அப்படி சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இது பொய் என்றால் அது உண்மை என்றாகாது. அது உண்மை என்பதற்கு வலுவான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.

 

//பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?//

 

நியாயமான நல்ல கேள்வி ஆனால் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லையே என்னுடைய தளத்தில் இதற்கான ஒரு உரையாடல் உள்ளது. இது பற்றி பிறகு பேசுவோம் இன்ஷா அல்லாஹ்

 

இப்போது என்ன விஷயம் என்றால், மருதையன் அப்படி தலைப்பு வைத்தது சரியா தவறா என்பதுதான். அதனை தீர்த்து கொள்வோம் முதலில்

 

மறுபடியும் சொல்கின்றேன், உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

 

7. //இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்//

 

அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?

 

நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், முதலில் நான் என்ன சொல்ல வந்திருக்கின்றேன் என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். அது உங்களது நேரத்தையும் சரி, என்னுடைய நேரத்தையும் சரி அதிகமாக்வே மிச்சப்படுத்தும்

 

நன்றி

 

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக ஆமின்

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

 

செங்கொடி August 23, 2010 at 2:46 am  45.3

நண்பர் ஆஷிக்,

 

முதலில் மருதையன் பொய் சொல்கிறார் என்றீர்கள், இப்போது \\ செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்// என்கிறீர்கள். ஆக செயற்கை உயிர் என்பது பிரச்சனைக்குறியதல்ல அதன் பின்னதான கடவுள் குறித்தது தான் பிரச்சனையானது எனின் உங்களின் கட்டுரை கடவுளை மையமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த ஆய்வை மையமாக எடுத்துக்கொண்டிருந்தது என்பதை உங்கள் கட்டுரைக்கான கரு மயக்கம் எனக் கொள்ளலாமா?

 

போகட்டும் தோழர் மருதையனின் அந்தத் தலைப்பு கடவுளை முக்கியமாக கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா? பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்? இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\ அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?// நீங்கள் போட விரும்பும் அருவாளை உங்கள் மூளையில் போட்டுக் கொள்ளுங்கள், அதுவாவது உங்கள் புரிதலை கூர் தீட்டட்டும்.

 

கடவுளை கண்ணால் பார்த்தால் தான் நம்புவோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இப்போது அது போல் ஒரு செல்லை உருவாக்கிக் காட்டுங்கள் என்பது. டி.என்.ஏ மரபணு செய்திகளில் ஏற்படும் தவறுகள் மூலம் புதிய கூறுகள் உயிர்களுக்கு ஏற்படுவதையும், சூழலியல் தாக்கங்கள் உயினினங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையிலான பின்னோக்கிய யூகித்தல் தான் தற்செயல் தோற்றம் என்பது. ஒரு அணுவின் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் வேறொரு அணுவாக மாற்ற முடியும் என்பது வேதியல். அறிவியலாளர்கள் அப்படி மாற்றியும் காட்டியிருக்கிறார்கள். என்றால் இன்றைய அதி நவீன கருவிகளும் அறிவியலாளர்களின் திறமையும் அணுக்கட்டமைப்பை மாற்றுவதற்கு தேவைப்படுகிறது எனும் போது தொடக்க நாட்களில் அது எப்படி மாறியிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புவது புத்திசாலித்தனம் அல்லவே. இன்றைக்கு அதி நவீன கருவிகளும், அறிவியலாளர்களும் ஆற்றும் பங்களிப்பை அற்றை நாட்களில் தட்ப வெப்பமும் சூழலும் செய்திருக்கும். உயிர் என்பதற்கு அளவுக்கு மீறி மிகை மதிப்பை ஏற்றியதால் தான் முதல் செல் எப்படி உருவாகியது என்பது உங்களுக்குள் மிகைத்த ஒன்றாக நிற்கிறது. நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள், அது உயிரற்றதிலிருந்து உயிர் எனும் உங்களில் மிகை மதிப்புக்கு சற்று விளக்கமளிக்கும். http://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/

 

\\ அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா?// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய(!) படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய(!) படைப்பினங்கள் தான் பயன்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?

 

அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சி குறித்து எதிர்க்கருத்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான். அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமே எதிர்க்கருத்துகளும் உண்டு. அவை குறித்த ஆய்வை மேம்படுத்த செழுமைப்படுத்தவுமே உதவும். அந்த எதிர்க்கருத்தும் உங்களிஅப் போன்றவர்களின் எதிர்க்கருத்தும் ஒன்றல்ல.

 

அறிவியல் கண்டு பிடிப்புகளை நாத்திகத்திற்கு பயன் படுத்தலாமா? இந்தக் கேள்வி அடிப்படையிலேயே தவறானது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆத்தீகத்திற்கு ஆதரவாக பயன்படுத்தலாமா என்றுதான் கேள்வி எழுப்பமுடியும். ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தன் இயல்பிலேயே மூட நம்பிக்கைகளை தகர்ப்பதாக இருக்கிறது.

 

மீண்டும் உங்களைக் கேட்கிறேன் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// நியாயமான கேள்வி என ஒத்துக்கொண்ட நீங்கள் பதிலையும் கூறினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.

 

செங்கொடி

 

Aashiq Ahamed August 25, 2010 at 5:56 am 

 

அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

 

//ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?//

 

இதற்கு தான் //உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்// என்று கூறினேன். படித்தீர்களா?

 

ஒரு மரபுத் தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான் என்ற உங்களுடைய பழைய கேள்விக்கான பதில் தான் இது. இப்போது மறுபடியும் கேட்டு, நான் பதில் சொல்லிய பிறகும் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா?

 

“.. the ability to synthesize DNA sequences chemically and insert them into already living cells has existed for decades, the JCVI achievement simply changes the scale..” – Christina Agapakis, What synthia means to me, Oscillator, Science Blogs, dated 21st May 2010.

 

கிறிஸ்டினா அவர்கள் கூறியிருப்பது புரிகிறதா?.வென்டர் கழகம் செய்தது போன்று பல காலங்களாக நடந்து வருகிறதாம். இப்போது நடந்துள்ளது தான் அளவுக்கோளில் பெரியதாம்.

 

நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் தயவுக்கூர்ந்து இது குறித்து நன்கு படித்து விட்டு வாருங்கள் என்பதுதான். “ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான்” என்பது போன்ற வாதங்கள் உங்களுக்கு அறிவியலில் உள்ள தவறான புரிதலையே காட்டுகின்றன.

 

உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்

 

நன்றி,

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

 

 

செங்கொடி August 31, 2010 at 2:29 am 

 

நண்பர் ஆஷிக்,

 

முதலில் தோழர் பொய் சொல்லி விட்டார் என்றீர்கள், இல்லை என காட்டப்பட்டது. தலைப்பில்தான் பிரச்சனை என்றீர்கள், தலைப்பு சரியானது தான் என விளக்கப்பட்டது. இந்த இரண்டையும் உங்களின் தற்போதைய பின்னூட்டத்தில் விட்டு விட்டீர்கள் என்பதே உங்களின் கேள்விகளை நான் சரியாக உள்வாங்கி பதிலளித்திருக்கிறேன் என்பதையும் நீங்களும் அதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் \\ மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா? என்னுடைய எந்த பதில் உங்களுக்கு என்ன விதத்தில் குழப்பமாக இருக்கிறது எனக்கூறுங்கள்.

 

நடந்த ஆய்வு எங்கு நடந்தது என்பதற்கு மட்டும் இப்போது பதில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவிதமே வருவோம். அந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த பெரிய வெற்றியெல்லாம் அடைந்துவிடவில்லை என்றே கொள்வோம். கடுகினும் சிறிய வெற்றியாகவே அது இருக்கட்டும். கேட்பதெல்லாம் ஒன்றுதான். அத்தனை சிறிய வெற்றி எந்தத் துறையில் நடந்திருக்கிறது? அது கடவுளின் துறையா? இல்லையா? இதற்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

 

\\ உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்// இல்லை போதுமானது என நான் நினைக்கவில்லை.

 

கடவுளின் வாசலை தட்டியிருக்கும் ஆய்வின் நுணுக்கங்களை நுணுகி ஆராயும் நீங்கள் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// எனும் கேள்வியை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியில்லையே.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இந்த உரையாடல் நண்பர் ஆஷிக் பதில் தராததால் அதன் பின்னர் தொடரவே இல்லை. மீள்பதிவினால் நண்பருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதும், விட்டுவிடுவதும் நண்பரின் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. அடுத்த பதிவிலிருந்து நண்பரின் எதிர்க்குரல் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நேரிய குரலாக மறுப்புகள் வரும்.

 

 

பாசிச ஜெயாவின் அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு!

6 ஆக

 

தண்ணீர்-வெட்டு

‘சென்னை மக்களுக்கு வினியோகித்து வரும் தண்ணீர் அளவில் 25 சதவீதம் வரை குறைக்கப்படும்’ என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பால் விலையேற்றம், பேருந்து கட்டண விலையேற்றம், மின் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’.

சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 250 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்த வீராணம் ஏரி வற்றிப் போய் விட்டது. செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு சுமார் 30 சதவீதம்தான் உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஏற்படப் போகும் பற்றாக் குறையை சமாளிக்க நகரின் சில பகுதிகளில் அதிகார பூர்வமாக அறிவிக்காமல் தண்ணீர் வினியோகத்தின் அளவை 25 சதவீதம் குறைத்து விட்டதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சொல்கின்றனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்வதாலும் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என்று மதிப்பிடப்படுவதாலும் இந்த நிலைமை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்திய விவசாயத்தை பருவக்காற்றுகளின் சூதாட்டம் என்று சொல்வது போல அடிப்படைத் தேவையான குடிநீர் வினியோகமும் ‘பருவமழையின் சூதாட்டமாக’ மாறியிருக்கிறது. உண்மையில் இது இயற்கை மட்டும் நம்மை வஞ்சிக்கும் பிரச்சினையா?

‘கடந்த 139 வருடங்களில் பருவ மழை ஒரு தடவை கூட வராமல் இருந்ததில்லை என்றும் எல்லா ஆண்டுகளிலும் சராசரியில் 60 சதவீதத்துக்கு குறையாமல் மழை பெய்துள்ளது’ என்றும் இந்து நாளிதழில் ஜூலை 26-ம் தேதி வெளியாகியுள்ள அறிக்கை சொல்கிறது. ஆனால், மழைக் காலத்தில் வெள்ளமும் மற்ற மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் என்பதுதான் சென்னை நகர மக்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

இதற்கு காரணம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், அடிப்படை கட்டமைப்புகளை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதில்  மட்டுமே கவனம் செலுத்தும் அரசு கொள்கைகள்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரில் வாழும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியால் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்யும் ஊழியர்களின் குடியிருப்புகள், மேட்டுக் குடியினருக்கு தேவைப்படும் ஐந்து நட்சத்திர தரத்திலான கேளிக்கை வசதிகள் இவை அனைத்துக்கும் சேர்த்து நீர் தேவையை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரில் ஒரு நபருக்கு 135 லிட்டர் ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. அந்த கணக்கின்படி சென்னை நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பதோடு, இருக்கும் குடிநீர் வளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சென்னையின் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு நபருக்கு 75 லிட்டரை விட குறைவான அளவு நீரே வினியோகிக்கப் படுகிறது.

காலம் காலமாக பருவ மழை பெய்யும் போது நீரைத் தேக்கி வைத்து மற்ற நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த நீர் நிலை ஆதாரங்கள் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை வருமானத்தால் ஏற்றி விடப்பட்ட வீட்டு வாடகை, நில விலை ஏற்றம் காரணமாக பல ஏரிகள் நிரப்பப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுவது வெகு வேகமாக நடந்து முடிந்திருக்கிறது.

1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்த 29 ஏரிகளின் மொத்த நீர் தேக்கப் பரப்பில் 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முகப்பேர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கொளத்தூர், செந்நீர்குப்பம், ஆதம்பாக்கம், உள்ளகரம், தாம்பரத்தில் இருக்கும் தலக்கன்சேரி ஆகிய இடங்களில் இருக்கும் ஏரிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இல்லாமல் ஆகி விட்டிருக்கின்றன. தாம்பரம் புதுத்தாங்கல் ஏரியில் 93 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வெறும் 7 சதவீதம் மட்டுமே குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவில் 77 சதவீதம் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போயிருக்கிறது.

பெருகி வரும் நகரத்துக்கு தேவையான புதிய நீர் வளங்களை உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் அரைகுறையாகவே முடிந்திருக்கின்றன. 1968-ல் ஆரம்பிக்கப்பட்ட வீராணம் திட்டம் பல கோடி ரூபாய் விரயத்துக்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல் ஏலம் விடப்பட்டன. 1976-ல் திட்டமிடப்பட்ட கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய மொத்த 12 டிஎம்சி நீரில் சுமார் 3 டிஎம்சி அளவே சென்னைக்கு வந்து சேருகிறது. 2004-ல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை நிலத்தடி நீராக தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்தாலும், பொது இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் வீணாக போவதையும், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பதையும் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமது தேவைகளுக்கான நீரை அடுக்குமாடி குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும் ஆள் துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி நிறைவு செய்து கொள்கின்றன. இதன் விளைவாக 1990க்குப் பிறகு சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் அளவு இறங்கி விட்டிருக்கிறது. மேலும் மேலும் தண்ணீரை இறைப்பதன் விளைவாக நிலத்தடி நீரில் குளோரைடின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச வரம்பை விட இரண்டு மடங்கு இருக்கிறது. புளோரைடும் நைட்ரேட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி விட்டிருக்கின்றன.

பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத நிலைமை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அத்தகைய நீரும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடும்.

தண்ணீர்-வெட்டு

பருவ மழை குறைவாக பெய்வதால் ஏற்படும் குறுகிய கால தட்டுப்பாட்டிலும் சரி, நீண்ட கால நோக்கிலான தண்ணீர் இல்லாமையிலும் சரி, பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் மட்டும்தான். மேலும் மேலும் குறைந்து கொண்டே போகும் தண்ணீர் வளங்களை சுட்டிக் காட்டி ‘தண்ணீரை விற்பனை பண்டமாக ஆக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும்’ என்கிறது மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை. என்ன விலை கொடுத்தும் வாங்க பணம் வைத்திருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமைச்சர்களின் வீடுகளுக்கும் தேவையான தண்ணீர் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு தண்ணீர் வினியோகம் குறைக்கப்படும்.

மறுகாலனியாக்கத்தின் மூலம் நம் நாட்டை கொள்ளையடித்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை வெட்டி விற்பது என்பது குறுகிய கால லாபத்தை கொடுப்பதுதான். ஆனால் தண்ணீர், மருத்துவம், போக்குவரத்து, கல்வி, மின்சாரம் இவையெல்லாம் வற்றாத லாபம் தரும் வளங்கள். நாட்டில் உள்ள 100 கோடி பேரும் தண்ணீர் குடிக்க வேண்டும், மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும், பயணம் செய்ய வேண்டும், மின்சாரம் பயன்படுத்த வேண்டும், இவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால் தலைமுறை தலைமுறையாக லாபம் சம்பாதிக்கலாம். அதனால்தான் புதுப் புது இடம் தேடி அலையும் பன்னாட்டு மூலதனம், ‘தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தாமாகவே தனியார் மயமாக்கத்தின் அவசியத்தை உணரும்படி அரசின் சேவைத் துறையை திட்டமிட்டு சீரழிக்க வைக்கிறார்கள். காலியாகும் வேலையிடங்கள் நிரப்பப்பட மாட்டாது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது, அதிகாரிகளின் லஞ்ச, ஊழல்கள் கண்டு கொள்ளப்பட மாட்டாது. மக்களுக்கு தேவையான சேவை கிடைக்காமல் தவிக்கும் நிலைமை ஏற்படும். இப்படித்தான்’காசு கொடுத்தாலாவது தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் கல்வி கட்டணத்துக்காக மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பள்ளிக் கட்டணம் கட்டி விடுவது போல, அவசர மருத்துவ தேவைகளுக்காக சேமிப்புகளையும் சொத்துக்களையும் முற்றிலுமாக இழந்து விடுவது போல தண்ணீருக்கும் தமது வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சுருங்கக் கூறின் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சினை என்பதாக இவர்கள் பேசி வருகிறார்கள். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், உபயோகிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம் அந்த பொறுப்புணர்ச்சியைகை கொண்டு வருவதும் வேண்டும் என்று இவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

உண்மையில் தண்ணீரை விரயமாக்குவது யார்? கால் கழுவவும், சமைக்கவும், துவைக்கவும் பொதுக்குழாயை நம்பியிருக்கும் மக்கள்தான் சென்னையில் அதிகம். இவர்களெல்லாம் விரும்பினாலும் கூட தண்ணீரை விரயமாக்க முடியாது. நினைத்த நேரத்தில் தெருக்குழாயில் வரும் நீரை காத்திருந்து பிடிப்பதில் துவங்கி பல இன்னல்களை அடையும் இம்மக்கள்தான் உண்மையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் மூலம் ஏரிகளை சாதாரண மக்கள் வளைக்க வில்லை. கோடி ரூபாயில் விலைபேசப்படும் அப்பார்ட்மெண்டுகளிலும் அவர்கள் வசிக்கவில்லை. நட்சத்திர விடுதிகளும், பங்களாக்களும்தான் பாத்டப், நீச்சல் குளம், குளிப்பதற்கு கூட குடிநீர் என்று நீரை விரயமாக்கி வருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை கேன் நீர், பாட்டில் நீர் இல்லாமல் வாழமுடியாது என்பதற்கு பழகிவிட்டார்கள். இவர்களை குறிவைத்துத்தான் தனியார்மய தண்ணீர் வியாபாரம் கொழித்து வருகிறது. இப்போது அரசே தண்ணீர் வெட்டை அறிவித்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் முழு நீர்ப் பயன்பாடும் தனியார் கையில் மின் கட்டணம் போல தண்ணீர் கட்டணம் வசூலித்து செயல்படும் நிலை ஏற்படும்.

இயற்கையான நீர் ஒரு வணிகப் பொருளாக விற்க்கப்படும் நிலை என்பது வேறு எதனையும் விட கொடூரமானது. வேறு எதற்காகவும் கூட அரசியல் போராட்டங்களை விரும்பாத ‘கண்ணியத்திற்குரியவர்கள்’ தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக போராட வேண்டும். இல்லையேல் உங்களது வருமானத்தில் கணிசமான அளவு நீருக்காக செலவிட வேண்டும். தண்ணீரிலிருந்தாவது உங்களது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கட்டும்.

__________________________________________

நன்றி: செழியன்.

முதல் பதிவு: வினவு

______________________________________