Tag Archives: அரசு

இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

26 பிப்

நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்?” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.

கடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.

நகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில்? கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா? நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன? கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா? யார் பொறுப்பேற்பது? யார் விளக்குவது?

எனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா? இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்

21 ஆக

 

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது. 

இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்

பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.

போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். 

இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.

மக்களுக்கான கடன் மறுக்கப்படும்

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…

தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்

க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் 

* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!

* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!

* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!

* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!

* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!

* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!

* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!

* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.

எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர், 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,

தமிழ்நாடு.

 

முதல் பதிவு: தீக்கதிர்

கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

12 ஆக

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜேப்பியார் இன்ஸ்டூட்டுக்காக கட்டப்பட்ட விளையாட்டு ஸ்டேடியத்திற்காக நடந்த கட்டுமான வேலைகள் நடைபெற்றதில் 10 பேர் கோரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இது போல சென்னையில் ஆங்காங்கே தினம் ஒருநபராவது வேலையின் பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுகிறார்கள் என எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.  கட்டுமான தொழிலாளர்களுக்கு பணிச்சூழல் என்பது படுமோசமான நிலை இருக்கிறது. ஹெல்மெட் கிடையாது. பாதுகாப்பு கவசங்கள் கிடையாது.  பாத்ரூம், டாய்லெட் வசதி கூட முறையாக கிடையாது.  முன்பு சென்னையில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்தனர். கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.  இவர்களுக்கு தற்காலிகமாக கட்டித்தரப்படும் வீடுகள் மாடுகள் இருப்பதற்கு கூட தகுதியற்றவை! 

மேலும், பல கட்டுமான நிறுவனங்கள் வேலையை துவங்கிவிட்டால், தங்களுடைய கொள்ளை லாபத்திற்காக இரவு பகல் என தொடர்ச்சியாய் வேலைகளை செய்கிறார்கள்.  ஜேப்பியார் போன்ற கல்வி வியாபாரிகள் ஒவ்வொர் ஆண்டும், மாணவர்களிடமிருந்து ஜூன், ஜூலையில் மாணவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை நன்கொடை என்ற பெயரில் பிடுங்கி தான் தங்கள் கட்டுமான வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்துகிறார்கள். பில்டர்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி தான் வேலையை துவங்குகிறார்கள். இப்படி அடித்து பிடித்து, வேலைகளை செய்யும் பொழுது, கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். உயிரிழப்பும், விபத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள் காலையில் 7 மணிக்கு வேலைக்கு போனால், இரவு திரும்ப 11 மணி ஆகிவிடுகிறது. மூன்று சிப்டுக்கு பதில் இரண்டு சிப்டுகளிலேயே ஆள்களிடம் வேலை வாங்கிவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காவது இ.எஸ்.ஐ. மருத்துவ பாதுகாப்பு உண்டு. கட்டுமான தொழிலில் சீசனல் வேலை என்பதால், இவர்களுக்கு இ.எஸ்.ஐயும் கிடையாது.

இந்தியாவில் விவசாயத்திற்கு பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கே இந்த கதி?  சமீபத்தில் ஒரு கட்டுமான தொழிற்சங்கம் வேலையின் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால், இரண்டு லட்சம் கேட்டு போராட்ட அழைப்பு விடுத்திருந்தது. இன்றும் இரண்டு லட்சத்திற்கே போராடும் நிலை என்பது அவலம் தான்!

ஜேப்பியார் இன்ஸ்டூட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரே ஒரு நபரை கைது செய்தார்கள். மக்கள் போராட்டங்களுக்கு பிறகு தான், ஜேப்பியாரை கைது செய்திருக்கிறார்கள். நாளையே தனது செல்வாக்கை வைத்து, வெளியில் வந்துவிடுவார். 

மக்கள் நலன் நாடும் அரசாய் இருந்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முறைப்படுத்துவார்கள். நடப்பது மக்கள் விரோத அரசு தானே!  போராட்டங்கள் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரும்!

முதல் பதிவு: குருத்து

மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

1 ஜூன்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் தகுந்ததாகும், அதுவே சரியானதுமாகும் என எந்த மீளாய்வுக்கும் ஆயத்தமின்றி ‘நம்புபவர்களை’ விட்டு விடுவோம். ஜாதி மதங்கள் அபத்தமானவை என்று ஏற்பவர்களும் கூட சமூக அழுத்தங்களால் நீடித்துக் கொண்டு; அந்த அழுத்தங்களின் தயக்கங்களால் தம் குழந்தைகளையும் அவர்கள் அழுந்திக் கிடக்கும் ஜாதி மதங்களுக்குள்ளே அழுத்தி வைப்பது என்ன நீதி?

 

எவரையும், ஏதாவது ஒரு மதத்தின், ஜாதியின் வார்ப்பாய் இருக்க வைப்பதில் நடப்பு கட்டுப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, குறிப்பாய் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள். தம் குழந்தைகளை ஜாதி மதமற்றவர்களாய் வளர்க்க விரும்பும் யாரும் முதலில் எதிர்கொள்வது இந்த தலைமை ஆசிரியர்களைத் தாம். ஒரு குழந்தையை பயிற்றுவிப்பதில் எந்த அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் ஊதியத்துக்கான ஒரு வேலையாய் மட்டுமே ஆசிரியத் தொழிலை கருதுபவர்கள், இந்த சூழலில் மட்டும் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக மாறிப் போவார்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்த விசயம் என்பதால் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள் என்பார்கள். அரசின் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டுவார்கள். வளர்ந்த பின் அவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கான வழிமுறைகள் எனக்குத் தெரியாது, எதற்கும் நீங்கள் வட்டாட்சியரையோ, வருவாய் அலுவலரையோ சந்தித்து கடிதம் வாங்கி வாருங்களேன் என்று கை கழுவுவார்கள்.

 

சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பவர்கள் யார்? தன் குழந்தை எப்படி சுயநலமாய் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வேண்டும்? என்ன வேலைக்கு செல்ல வேண்டும்? யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்ன வழியில் வாழ வேண்டும்? என்பது வரை அனைத்திலும் தன்னுடைய விருப்பத்தை, ஆசையை, நிறைவேறாத கனவுகளை தன்னுடைய குழந்தைகளின் மீது நேரடியாக திணிப்பவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள், ‘உங்களின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்’ என்று. தன்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் வேண்டாம் என தீர்மானிப்பவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் சிந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செய்வார்கள். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய களிமண் எச்சமாக தன் குழந்தை இருந்தாக வேண்டும் என்பவர்களின் ஆட்சேபங்களை அற்பமாக எண்ணி நாம் கடந்தாக வேண்டும்.

 

நம் குழந்தைகளுக்கு தற்போது அரசு என்ன சலுகைகளை வழங்கி விட்டது? அடிப்படைத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையுமே தனியாரிடம் அடகு வைத்துவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் அரசு நம் குழந்தைகள் மீது என்ன கரிசனம் செலுத்தி சலுகைகளை தந்துவிடப் போகிறது? நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த கல்வியும், சரியான வேலை வாய்ப்புமே தேவை. அதை வழங்குமா இந்த அரசு? நம்மை பிச்சைக் காரர்களாய் மாற்றி நம் தன்மானத்தை விலையாய் கேட்கும், இலவச, விலையில்லாப் பொருட்களுக்கு கூட ஜாதி மதத்தை கூறியாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

 

எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று மிரட்டும் எவரையும், நிதானமாய் என்ன பிரச்சனை ஏற்படக் கூடும் என்று கருதுகிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கூற முடியாமல் விழிப்பார்கள். ஜாதி மதத்தை பதிவு செய்ய மறுப்பதால் ஏற்படப் போவதாக கருதப்படும் ஒரே பிரச்சனை இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மதத்தை பதிவு செய்வது போன்ற அபத்தம் வேறொன்று இல்லை. கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எனும் சொல்லை பொருளற்ற சொல்லாக மாற்றி நெடு நாட்கள் ஆகி விட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் போதிய வசதிகளற்று, ஆசிரியர்களின்றி, கவனமின்றி, கவனிப்பின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எதைச் செய்து விடும்? வேலை வாய்ப்பு .. .. ..? அரசு துறையில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் மிச்ச மிருக்கிறதா? அரசு துறையே மிச்சமிருக்கிறதா என்று உருப்பெருக்கி வைத்து தெடும் நிலை தான் இருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இருக்கும் சிலவும் கூட எப்படி எப்போது கைமாற்றுவது எனும் முடிவை எடுப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் இட ஒதுக்கீடு எனும் முழுச் சொல்லை அல்ல ‘இ’ எனும் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாது. இதை முன்வைத்தா சான்றிதழ்களில் அசிங்கங்களைச் சுமப்பது?

 

ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவன் என்று பதிவு செய்யுங்கள். இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்படி வெறும் வாய் வார்த்தையால் கூறினாலே சான்றிதழில் பெற்றோரின் விருப்பப்படியே பதிவு செய்தாக வேண்டும் என்று அரசாணை இலக்கம்:1210 கூறுகிறது.அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு 39 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1973 ஆம் ஆண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டு இன்று வரை நடப்பில் இருக்கிறது. ஆனால் இது குறித்து யாருக்கும் தெரியாது தெரிவிக்கப்படவும் இல்லை. மக்களை கசக்கிப் பிழிந்து விட்டு அதையே சாதனைகளாய், மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் அரசுகள், இந்த அரசாணை குறித்து மக்களுக்கு தெளிவிப்பதே இல்லை. அந்த அரசாணை கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் படியெடுத்து பள்ளிகளில் காட்டி ஜாதி மதமற்றவர்களாக பதிவு செய்யுங்கள். மறுத்தால், அவர்களின் மறுப்பை எழுத்து பூர்வமாக கேளுங்கள். நடுநடுங்கிப் போவார்கள். உங்கள் குழந்தைகளை ஜாதி மதம் மறுத்து பள்ளிகளில் சேர்த்து மனிதனாக வளர்க்க வாழ்த்துக்கள்.

 

கடைசியாக ஒரு தகவல்: உலகின் மொத்த மக்கட் தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்களே. அதாவது உலகில் கிருஸ்தவத்தை பின்பற்றும், இஸ்லாத்தை பின்பற்றும் மக்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

முதல் பதிவு: செங்கொடி

மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

1 ஜூன்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் தகுந்ததாகும், அதுவே சரியானதுமாகும் என எந்த மீளாய்வுக்கும் ஆயத்தமின்றி ‘நம்புபவர்களை’ விட்டு விடுவோம். ஜாதி மதங்கள் அபத்தமானவை என்று ஏற்பவர்களும் கூட சமூக அழுத்தங்களால் நீடித்துக் கொண்டு; அந்த அழுத்தங்களின் தயக்கங்களால் தம் குழந்தைகளையும் அவர்கள் அழுந்திக் கிடக்கும் ஜாதி மதங்களுக்குள்ளே அழுத்தி வைப்பது என்ன நீதி?

 

எவரையும், ஏதாவது ஒரு மதத்தின், ஜாதியின் வார்ப்பாய் இருக்க வைப்பதில் நடப்பு கட்டுப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, குறிப்பாய் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள். தம் குழந்தைகளை ஜாதி மதமற்றவர்களாய் வளர்க்க விரும்பும் யாரும் முதலில் எதிர்கொள்வது இந்த தலைமை ஆசிரியர்களைத் தாம். ஒரு குழந்தையை பயிற்றுவிப்பதில் எந்த அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் ஊதியத்துக்கான ஒரு வேலையாய் மட்டுமே ஆசிரியத் தொழிலை கருதுபவர்கள், இந்த சூழலில் மட்டும் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக மாறிப் போவார்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்த விசயம் என்பதால் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள் என்பார்கள். அரசின் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டுவார்கள். வளர்ந்த பின் அவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கான வழிமுறைகள் எனக்குத் தெரியாது, எதற்கும் நீங்கள் வட்டாட்சியரையோ, வருவாய் அலுவலரையோ சந்தித்து கடிதம் வாங்கி வாருங்களேன் என்று கை கழுவுவார்கள்.

 

சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பவர்கள் யார்? தன் குழந்தை எப்படி சுயநலமாய் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வேண்டும்? என்ன வேலைக்கு செல்ல வேண்டும்? யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்ன வழியில் வாழ வேண்டும்? என்பது வரை அனைத்திலும் தன்னுடைய விருப்பத்தை, ஆசையை, நிறைவேறாத கனவுகளை தன்னுடைய குழந்தைகளின் மீது நேரடியாக திணிப்பவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள், ‘உங்களின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்’ என்று. தன்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் வேண்டாம் என தீர்மானிப்பவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் சிந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செய்வார்கள். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய களிமண் எச்சமாக தன் குழந்தை இருந்தாக வேண்டும் என்பவர்களின் ஆட்சேபங்களை அற்பமாக எண்ணி நாம் கடந்தாக வேண்டும்.

 

நம் குழந்தைகளுக்கு தற்போது அரசு என்ன சலுகைகளை வழங்கி விட்டது? அடிப்படைத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையுமே தனியாரிடம் அடகு வைத்துவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் அரசு நம் குழந்தைகள் மீது என்ன கரிசனம் செலுத்தி சலுகைகளை தந்துவிடப் போகிறது? நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த கல்வியும், சரியான வேலை வாய்ப்புமே தேவை. அதை வழங்குமா இந்த அரசு? நம்மை பிச்சைக் காரர்களாய் மாற்றி நம் தன்மானத்தை விலையாய் கேட்கும், இலவச, விலையில்லாப் பொருட்களுக்கு கூட ஜாதி மதத்தை கூறியாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

 

எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று மிரட்டும் எவரையும், நிதானமாய் என்ன பிரச்சனை ஏற்படக் கூடும் என்று கருதுகிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கூற முடியாமல் விழிப்பார்கள். ஜாதி மதத்தை பதிவு செய்ய மறுப்பதால் ஏற்படப் போவதாக கருதப்படும் ஒரே பிரச்சனை இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மதத்தை பதிவு செய்வது போன்ற அபத்தம் வேறொன்று இல்லை. கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எனும் சொல்லை பொருளற்ற சொல்லாக மாற்றி நெடு நாட்கள் ஆகி விட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் போதிய வசதிகளற்று, ஆசிரியர்களின்றி, கவனமின்றி, கவனிப்பின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எதைச் செய்து விடும்? வேலை வாய்ப்பு .. .. ..? அரசு துறையில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் மிச்ச மிருக்கிறதா? அரசு துறையே மிச்சமிருக்கிறதா என்று உருப்பெருக்கி வைத்து தெடும் நிலை தான் இருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இருக்கும் சிலவும் கூட எப்படி எப்போது கைமாற்றுவது எனும் முடிவை எடுப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் இட ஒதுக்கீடு எனும் முழுச் சொல்லை அல்ல ‘இ’ எனும் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாது. இதை முன்வைத்தா சான்றிதழ்களில் அசிங்கங்களைச் சுமப்பது?

 

ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவன் என்று பதிவு செய்யுங்கள். இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்படி வெறும் வாய் வார்த்தையால் கூறினாலே சான்றிதழில் பெற்றோரின் விருப்பப்படியே பதிவு செய்தாக வேண்டும் என்று அரசாணை இலக்கம்:1210 கூறுகிறது.அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு 39 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1973 ஆம் ஆண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டு இன்று வரை நடப்பில் இருக்கிறது. ஆனால் இது குறித்து யாருக்கும் தெரியாது தெரிவிக்கப்படவும் இல்லை. மக்களை கசக்கிப் பிழிந்து விட்டு அதையே சாதனைகளாய், மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் அரசுகள், இந்த அரசாணை குறித்து மக்களுக்கு தெளிவிப்பதே இல்லை. அந்த அரசாணை கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் படியெடுத்து பள்ளிகளில் காட்டி ஜாதி மதமற்றவர்களாக பதிவு செய்யுங்கள். மறுத்தால், அவர்களின் மறுப்பை எழுத்து பூர்வமாக கேளுங்கள். நடுநடுங்கிப் போவார்கள். உங்கள் குழந்தைகளை ஜாதி மதம் மறுத்து பள்ளிகளில் சேர்த்து மனிதனாக வளர்க்க வாழ்த்துக்கள்.

 

கடைசியாக ஒரு தகவல்: உலகின் மொத்த மக்கட் தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்களே. அதாவது உலகில் கிருஸ்தவத்தை பின்பற்றும், இஸ்லாத்தை பின்பற்றும் மக்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

முதல் பதிவு: செங்கொடி

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

26 ஜன

 

வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?

 

இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?

 

இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?

 

இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.

 

90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

 

இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.

 

இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?

 

மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.

 

எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.

 

தொடர்புடைய பதிவுகள்

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்

தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.

முதல் பதிவு: செங்கொடி


கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!

10 ஜன

ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்

மொத்த அளவு (மெ.வா) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் 1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) 1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு 305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 610

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும்.

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெ.வா குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை 700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள் 900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல் >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.

வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகிறோமா ?

– சங்கர் சர்மா

மின் கொள்கை ஆய்வாளர்

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

முதல் பதிவு: பூவுலகின் நண்பர்கள்

 

இவர்களை உரசிப்பார்க்க இன்னொரு உரைகல்லும் வேண்டுமோ …?

9 ஜன

கறுப்புப் பணம் சம்பந்தப்பட்ட கணக்கு விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், யாராவது வற்புறுத்திக் கேட்டாலும் சொல்லவே கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். தேசிய அவமானம். ஆனால் இதனை சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பலரே பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து பல காலமாகப் பேசப்பட்டாலும், எந்த அரசும் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை.

இப்போது கறுப்புப் பணம் குறித்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டதால் உஷாராகிவிட்ட பலர், பணத்தை இடம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. லிச்டென்ஸ்டீனில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்து வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) பெற்றுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து 9,900 தகவல்கள், ஆவணங்களைப் பெற்றுள்ளது.

இந்த பெயர் பட்டியலின் ரகசியத்தை பாதுகாப்பதில் சி.பி.டி.டி. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ஒருவேளை இந்தப் பெயர்ப் பட்டியல் வெளியாகிவிட்டால், வெளிநாடுகள், கறுப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி விடும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முன்வராது என்றும் சி.பி.டி.டி. கூறி வருகிறது.

இந்த பெயர் பட்டியல், ஏற்கனவே கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், இந்த பெயர் பட்டியலைக் கேட்டு வருகின்றன.

சொல்லவே சொல்லாதீங்க…

அப்படி கேட்கும் அரசுத் துறைகளிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பிறகே பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. உத்தரவிட்டுள்ளது. ‘பெயர் பட்டியலை வரிவசூலுக்காகவோ அல்லது வரிஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம்’ என்று எழுதி கையெழுத்து பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்களை கைது செய்யவோ, இவர்கள் பற்றி செய்தி வெளியிடவோ கூடாது.

மேலும், இந்த பெயர் பட்டியல், எந்த அதிகாரி பெயரில் பெறப்படுகிறதோ, அவரே இந்த பட்டியலை ரகசியமாக பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், எத்தகைய சோதனையிலும் இந்தப் பட்டியல் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்றும் சி.பி.டி.டி. கூறியுள்ளது.

பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மானத்தை இத்தனை அக்கறையோடு காக்கும் அரசு, உள்நாட்டில் வரி செலுத்தாதவரிடத்திலும் இதே கரிசனம், கவனம், ரகசியக் காப்பைக் காட்டுமா?

*************************************************

ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் எனும் கழிசடை அரசியலின் அடிப்படையைக் கூட இழந்து வெட்கமின்றி அம்மணமாகி நிற்கிறார்கள். இன்னுமா இவர்களை ந‌ம்ப வேண்டும் மக்களே? இன்னுமா இவர்களை ஆட்சியாளர்கள் என்று அழைக்க வேண்டும்? இன்னுமா  இவர்களை தேர்ந்தெடுக்க வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு அதை கடமை என்று ஏமாந்து கொள்வது? இந்த ஓட்டுப் பொறுக்கிகள் அத்தனை பேரையும், அவர்களை தாங்கி நிற்கும் இந்த அமைப்பையும் தூக்கி எறிவதைத்தவிர வேறு மாற்று ஏதும் உண்டா நமக்கு?

ஊழலுக்கு எதிரான மெழுகுதிரி போராளிகளே! உங்கள் முகம் எங்கே?

7 ஜன

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், போராட்டம், அரசுக்கு சவால் என பெரிய அளவில் பேசி வரும் ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும் காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே. இவ்வளவு பெரிய இடம் மற்றும் பங்களாவை வெறும் ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே பதிவு செய்துள்ளார் அவர்!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் சாந்தி பூஷண் ரூ 1.35 கோடி முத்திரை வரி மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தி, அவர் இந்த தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

ஆனால் வழக்கம் போல இதை அரசின் பழிவாங்கல் என்றும் சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் சாந்தி பூஷண். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வருவாய்த் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஜனதாஆட்சியில் (மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில்) சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சாந்தி பூஷண். அமைச்சர் அந்தஸ்தைக் காட்டிதான் இவர் தனது வீட்டு உரிமையாளரை மிரட்டி வந்ததாக புகார் கூறப்பட்டது.

சாந்தி பூஷண் மீது ஊழல் குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை அல்ல!

*******************************************************

காந்தி குல்லா அணிந்து பட்டினி கிடந்தாலும், நேரு குல்லா அணிந்து செரிமாண பிரச்சனைக்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அல்லது வேறு எந்த வண்ணத்தில் குல்லா போட்டு சீன் காட்டினாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைத்த தீரர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் அம்பலப்படுவதால் மட்டுமே ஊழலை அதனால் ஒழிக்க முடியாதுஎன்று கூறவில்லை. ஒரு லோக்பால் அல்ல, ஒன்பது ஜோக்பால் வந்தாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல் ஒழிப்பு என்று பொதுமைப்படுத்தி பேசுவதால் குறிப்பாக வெளிப்பட்ட ஊழல்களை ஒளிப்பதற்கு மட்டுமே உதவும்.

 

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை ஊழலுக்கு உரமிடுகிறது. நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு செய்யப்படும் ஒப்பந்தங்களை மீறுவது மட்டுமே ஊழல் என்று சாதிக்கிறது. ஒப்பந்தப்படி கொள்ளையடித்தால் அது ஊழலும் இல்லை, சட்டப்படி குற்றமும் இல்லை. அன்னா கோமாளிகளோ அந்த ஒப்பந்தங்களை மீறினால் பிரதமரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூவுகிறார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அவர்களின் உழைப்புக் கருவிகளையே ஆயுதமாக ஏந்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் திட்டங்கள் அதை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வெண்ணெய் வெட்டி வீரர்களோ கையில் மெழுகுதிரியுடன் பொழுதுபோக்கிக் கொண்டு, அதையே போராட்டம் என்று நம்பச் சொல்கிறார்கள்.

இதோ இன்னோரு கடையநல்லூர்

2 ஜன

 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 28000 நெசவாளர் குடும்பங்களில் நெசவுத்தொழில் செய்தார்கள். ஆனால் இப்போது 1300 நெசவாளர்களே இருக்கிறார்கள். காரணம் என்ன?

 

செங்குந்தபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் குமாரிடம் பேசினோம். “பட்டுக்கு பாகு காய்ச்சி சேலை நெய்வது ரெம்பக் கஷ்டம். காலையில் இருந்து சாயங்காலம் அரை வேலை செய்தால்தான் 150 ரூபாய் கூலி கிடைக்கும். அதுவும் இப்போது ஒழுங்காக கிடைப்பதில்லை. கேட்டா, கோஆப்டெக்ஸில் இருந்து பண்ம் வரவில்லை என்கிறார்கள். அதனால் எங்களுக்கு கூலி கிடைக்க வாரக் கணக்கு, மாதக்கணக்கில் ஆகிறது. தாக்குப் பிடிக்க முடியாமல் எங்க ஊர்க் காரர்கள் எல்லாம் குடும்பத்துடன் சென்னையில் இருக்கும் பெரிய கடைகளில் கூலி வேலை செய்வதற்காக போய் விட்டார்கள். எங்களைப் போன்ற ஒரு சிலர் தான் வழியில்லாமல் இங்கேயே முடங்கிக் கிடக்கிறோம்” என்றார் வருத்தமாக.

 

சுந்தர விநாயகா கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான உலகநாதன், “நாங்கள் நெய்யும் பட்டுச் சேலைகளை தமிழக அரசு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக தள்ளுபடியில் விற்கிறார்கள். அந்த தள்ளுபடியை அரசு மானியமாக தருவது தான் வழக்கம். ஆனால் அரசு கடந்த சில ஆண்டுகளாக மானியத்தை கொடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு பணம் இன்னும் வரவே இல்லை. எங்கள் பகுதியில் இருக்கும் 27 சங்கங்களில் சில சங்கங்களில் மட்டும் தங்களுடைய சொந்தப் பணத்தில் நெசவாளர்களுக்கு கூலி கொடுக்கிறார்கள். மற்றவர்களால் அப்படி முடிவதில்லை. அதனால் எங்களுக்குச் சேரவேண்டிய ஒரு கோடி ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதோடு, கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டத்தை பவர் மெசின் மூலம் செய்வது நியாயமா? எங்களுக்குத்தான் அந்த ஆர்டரைத் தரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிம்மதியாக வாழமுடியும்” என்றார்.

 

இது ஜூனியர் விகடன் 18.12.2011 இதழில் வெளிவந்த செய்தி. இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கடையநல்லூரை நினைவுபடுத்துகிறதா? இது கடையநல்லூர் போன்று ஏதோ ஒரு சில பகுதிகளில் மட்டுமோ, கைத்தறி நெசவு போன்று ஏதோ ஒரு தொழிலில் மட்டுமோ நடைபெறும் நிகழ்ச்சியல்ல. மக்கள் தங்கள் வாழ்வை கடத்த செய்து கொண்டிருக்கும் அத்தனை தொழில்களுக்கும், அனைத்து ஊர்களுளிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

அரசுகள் மக்கள் நலம் சார்ந்து திட்டங்களை தீட்டுவதும் இல்லை, நடைமுறையில் இருக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதும் இல்லை. 80களில் தொடங்கிய ’குறுக்கீடில்லாத மறுகாலனியாக்கத்தை’ பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் படிப்படியாக அரசுகள் கொண்டு வந்தன. இதன் மைய நோக்கமே அரசு நடத்திக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து விலகி அவற்றை தனியார்மயமாக்குவது, அரசின் கொள்கையை முழுக்க முழுக்க நிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றுவது, சட்டரீதியாக நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் மக்களைச் சுரண்டி லாபமீட்டுவதற்கு தடையாக இருக்கும் அனைத்திலும் திருத்தம் செய்வது தேவைப்படும் புதுச்சட்டங்களை இயற்றுவது போன்றவை தான்.

 

இதன் அடிப்படையிலேயே கைத்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு, வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பும், நிதி உதவிகளும் படிப்படியாக நிருத்தப்படுதும், கைத்தொழில்களுக்கு என்றிருக்கும் சிறப்பு ரகங்களை பெரும் தொழிற்சலைகளில் உற்பத்தி செய்ய அனுமதிப்பதும் நடந்து வருகிறது. இதன் மூலம் வாழ வழியற்றுப் போகும் உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளினால் வேறு தொழில்களுக்கு போகும் போது அங்கும் இதுவே மீள நடக்கிறது.

 

குறிப்பாக கூறினால், ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவந்த விவசாயிகள், நசுக்கும் அரசின் திட்டங்களினால் மூன்று லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கானோர் தங்கள் நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு விவசாயக் கூலிகளாகவும், கூலித் தொழிலாளர்களாக நகரங்களுக்கு இடம் பெயர்ந்தும், பெட்டிக்கடைகளை வைத்து வியாபாரம் செய்தும் காலங் கடத்துகிறார்கள். குறுதொழிற்கூடங்கள் அரசின் ஊக்கமின்மையால் நசிவுற்று அதில் ஈடுபட்ட மக்கள் சில்லரை வணிகத்திற்கு வந்திருக்கிறார்கள். தற்போது அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம் மக்களை அங்கிருந்தும் விரட்ட முயற்சிக்கிறது.

 

கடையநல்லூரைப் பொருத்தவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கைத்தறி நெசவு தான் மக்களுக்கு இருந்த ஒரே வாழ்வாதாரம். இன்று கைத்தறி நெசவு வழக்கொழிந்து போகும் கடைசி எல்லையில் நிற்கிறது. பிற பகுதிகளில் மக்கள் கூலிவேலைக்கு சென்றார்களென்றால் கடையநல்லூரில் அது வெளிநாட்டு கூலிவேலையாக மாறியது. வெளிநாட்டு நாணயமாற்று மதிப்பு விகிதம் ஒப்பீட்டளவில் கடையநல்லூர் மக்களை ஓரளவு செழிக்க வைத்திருந்தாலும், நிலமை மாறிக் கொண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் சொந்த மக்கள் வேலையில்லா திண்ணாட்டத்தில் இருக்கும்போது வெளிநாட்டினருக்கு வேலை கொடுப்பதா எனும் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், ஊதியக் குறைப்பு, சலுகைகள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்கிறது.

 

இன்னும் கடையநல்லூர் மக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்ததால் தாங்களே முன்வந்து கைத்தறி நெசவை கைவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கைத்தறியின் சிறப்பு ரகங்கள் விசைத்தறிகளிலும் உற்பத்தி செய்யலாம் எனும் சட்டத்திருத்தமே கடையநல்லூர் பகுதிகளில் கைத்தறி நெசவை ஒழித்தது என்பதே உண்மை. வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கடையநல்லூருக்கான மாற்றுத் தொழில் என்ன? என்பது தான் மக்கள் முன்னிற்கும் முதன்மைக் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். மாறாக முன்னிற்கும் இந்த பிரச்சனை குறித்த புரிதல் ஏதுமற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திய வளத்திலும், அந்த வளத்தின் விளைவால் ஒருபக்கம் ஏற்பட்ட மேட்டிமைத் தனத்திலும், கலாச்சார சீரழிவுகளிலும், மறுபக்கம்  மதப் பிடிப்பிலும் ஊறிக் கிடப்பது மக்களைப் பீடித்திருக்கும் நோய். இந்த நோய்க்கான மருத்துவமே இன்று கடையநல்லூரின் முதல் தேவையாக இருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைக‌ள்

நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?

கடையநல்லூர் பொருளாதாரம்: அடையாளமா? ஆழமா?

கடையநல்லூரை எப்படி பார்ப்பது?

கடையநல்லூரும் உகந்த தொழில்களுக்கான மனோநிலையும்

கடையநல்லூரின் மாற்றங்கள்