தொகுப்பு | ஒக்ரோபர், 2011

ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

30 அக்

இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.

கிபி ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியில் பல்லவ மன்னர் வழிமுறையில் தோன்றிய போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மருத்துவ நுணுக்கங்களையும், தற்காப்புக் கலையையும் போதித்தார். அதுவே குங்ஃபூ வுக்கும், ஜென் தத்துவத்திற்கும் தொடக்கமாக இருந்தது. ஆனால் தமிழர்கள் இன்று அவைகளை மறந்துவிட சீனர்கள் தமிழரிடம் பெற்ற கலையை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறர்கள். இதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மையக் கரு.

சர்கஸில் வேலை செய்துயும் கதாநாயகன் இடையிடையே காதாநாயகியை காதலித்து பலநாடுகளின் கடற்கரைகளில் பாட்டுப்பாடி கடைசியில் வில்லனை அடித்து நொறுக்கி வெற்றிக் கொடிகட்டும் ஒரு சராசரி திரைப்படத்தினை பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகன் தமிழன் என்பதால் பெருமித உணர்வு கொள்கிறான். இதற்கு திரைப்படக் குழுவினருக்கு கை கொடுத்திருப்பது, வரலாற்றிலிருந்து உருவப்பட்ட ஒரு வரியும், ”தமிழன் மலேசியாவில் அடிபட்டான், இலங்கையில் அடிபட்டான், இப்போது தமிழ்நாட்டுக்குள்லேயே வந்து அடிக்கிறான்” ”ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழன அடிச்சா அதுக்குப் பேரு வீரமில்லை, துரோகம்” ”மஞ்சளை விளைவிக்காத நாடுகளெல்லாம் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது, ஆண்டாண்டு காலமாக விளைவித்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாமோ ஏமாந்து நிற்கிறோம்” என்பது போன்ற சில வசனங்களும். ஒருவேளை திமுகவும் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு தூரோகமிழைத்து விட்டதாக எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்களிடம் தன்னுடைய படத்தின் மூலம் இப்படி தமிழுணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக உதவும் என்று கூட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எண்ணியிருக்கக் கூடும்.

சீனா இந்தியா மீது நுண்ணுயிர் போர் (பயோ வார்) நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சீனா மீது கொண்டிருக்கும் கோபம். அதாவது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவழிப்புப் போரில் இலங்கை ராணுவத்திற்கு சீன செய்த உதவிகளால் சீனா மீது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திரைப்படத்திற்கான ஆதரவாக திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடனேயே சீனா அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் இந்தியா குறித்து திரைப்படம் கொண்டிருக்கும் கருத்து என்ன? இந்தியாவின் போரையே நான் நடத்துகிறேன் என்று ராஜபக்சே கூறியிருந்தது குறித்து, போரில் இந்தியாவின் பங்களிப்பின் ஆதாரங்கள் குறித்து திரைப்படம் மவுனம் சாதிப்பது ஏன்?

தெளிவாகக் கூறினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்து திரைப்படம் மவுனம் சாதிக்கவில்லை, மறைக்கிறது. மறைப்பதோடு மட்டுமின்றி ஆதரவாக திரிக்கிறது. போதிதர்மரின் அறிவை இன்றைய தமிழர்கள் மீளப் பெறவேண்டும் என்று திரைப்படத்தில் போதிக்கப்படுவது எதற்காக? சீனா இந்தியா மீது தொடுத்திருக்கும் நுண்ணியிர் போரை எதிர்கொள்வதற்காக, சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடிக்க வேண்டும் என்பதற்காக. ஆக, ஈழத்தமிழர்களை கொன்றழித்த போருக்கு திட்டமிட்டு உதவிய இரண்டு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அதை ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் திருப்புவதைத்தான் திரைப்படம் தமிழர்களிடம் கோருகிறது. இது அப்பட்டமான மோசடித்தனம் என்பதில் ஐயமொன்றுமில்லை.

பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை, அதுவும் திரைப்படத்தின் சிறிய பகுதியாக வருவதை மட்டும் முழுமையாக எடுத்துக் கொண்டு இது போன்று அரசியல் நோக்கில் விமர்சிப்பது தேவையற்றது என்று கருதப்படலாம். ஆனால் திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தி விளம்பரங்களும், செவ்விகளும் செய்யப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாது படத்தின் மையக் கருவே இது தான். படத்தைப் பார்த்துத் திரும்பும் ரசிகனிடம் அந்தப் படத்தின் அதிகான பகுதியாக வரும் பொழுதுபோக்கு மசலாத்தன காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பழந்தமிழர் பெருமை தான் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அந்த திரைப்படம் பார்வையாளரிடம் என்ன சொல்கிறது என்பதைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான படத்தொகுப்பு, திறமையான ஒளிப்பதிவு, அழகான இடங்கள், பாத்திரங்களின் நடிப்புத்திறன், உணர்வுபூர்வமான இசை போன்றவைகளை முதன்மைப்படுத்துவது, சொல்லவரும் செய்தியை தெளிவாக புரியவைக்க உதவும் அம்சங்களை எடுத்துக் கொண்டு, செய்தியை கண்டு கொள்ளாமல் விடுவது போன்றது.

அறிவியல் புனைவை கதைக் களமாக கொண்டிருக்கும் ஒரு கதையில் நோக்கத்திற்கு உதவியாக இணைந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் எவ்வளவு உயர்வானதாகவும் நேர்த்தியுடன் பயன்படுத்தபட்டிருந்தாலும் புரட்டுத்தனமான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அவைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவியல் புனைவு என்றாலே தர்க்க மீறல்களை கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். என்றாலும் வெறும் நுண்ணோக்கியை வைத்துக் கொண்டு மரபணு ஏணியை பார்வையிடலாம் என்பதும், தனிப்பட்ட ஒருவர் பெற்றிருக்கும் அறிவு மரபணு வழியாக கடத்தப்படும் என்பதும், ஓரிரு நொடிகள் ஒருவரை பார்ப்பதாலேயே ஒருவரின் மூளையிலிருக்கும் சிந்தனைத் தூண்டுதல்கள் இன்னொருவர் மூளைக்குள் புகுந்து கொள்ளும் என்பதும் ’டூ மச்’சாக மட்டுமில்லை, ’ஃபோர் மச்’சையும் தாண்டியிருக்கிறது.

இறுதியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். மஞ்சள் பூசுவதை ஒரு சடங்காக, கலாச்சாரமாக பரப்பாதீர்கள் அதை நச்சுக் கொல்லி எனும் அறிவியாலாக கற்றுக் கொடுங்கள் என்கிறார். அதாவது மெய்யானதை சொல்லாமல் சடங்காக, மரபாக செய்தால் காலப்போக்கில் அது மறைந்து விடும். மெய்யான பயன்பாட்டை புரியவைத்தால் மட்டுமே அது நீடித்து நிற்கும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார். ஆனால் இதை அவர் பின்பற்றியிருக்கிறாரா?

தற்காப்புக் கலைகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழன் இன்று எல்லா இடங்களிலும் அடி வாங்குகிறான் என்பது மெய்யான அரசியலா? மேலெழுந்தவாரியான உணர்ச்சியைத் தூண்டிவிடும் செயலா? ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளியல் நலன், விடுதலைப்புலிகளின் அரசியல் தவறுகள் உள்ளிட்டு பல மெய்யான காரணங்கள் இருக்கும்போது, அவைகளைப் பற்றி மறந்தும் பேசிவிடாமல், பண்டைய தமிழனின் வீரத்தையும் கலைகளையும் மறந்ததுதான் காரணம். அவற்றை தமிழன் மீண்டும் கைக்கொண்டால் திருப்பி அடிப்பதோடு மட்டுமன்றி தமிழன் என்றால் உலகிற்கு ஒருவித பயம் எழும் என்று கூறுவது மெய்யான அரசியலை மறைப்பதோடு மட்டுமன்றி, அதை அறிந்து எழுச்சி பெறவிடாமல் தடுக்கும் செயலாகவும் இருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முதல் பதிவு: செங்கொடி

முகம்மதின் குழந்தைத் திருமணம்

29 அக்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 10

 

நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்தது. மேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லை. ஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.

அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.

மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160).

புகாரி ஹதீஸ் -3894

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய,  ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல. 

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள  கட்டுரையிலிருந்து…

Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.

A. He was a Paedophile.

B. He was involved in child abuse.

Let’s analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).

A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder) மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம் சட்டப்படுகிறார்.

Paedophile – சிறுகுறிப்பு

Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பது. வயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர். இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                          

 Brittanica encyclopedia 2008

 

கண்டறியும் முறை:

குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்,  ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல். இந்த வற்புறுத்தல் காரணமாக  அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார். இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.

 

DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3,  (American Psychiatric Association).

 

Child abuse– சிறுகுறிப்பு

சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல். மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது. அவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, கற்கும் திறன், மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்

விவாதம்

Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர். ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில், ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களை, Paedophile என்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள், ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லை. நேர்மாறாக  தோற்றத்திலும், அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள கட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.

முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்

Muhammad even wanted to marry a crawling baby-girl. Let us read what ibn Ishaq, the most authentic biographer of Muhammad wrote about this. 

(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 

 

(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)

Musnad Ahmad: 25636

Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, “If she grows up while I am still alive, I will marry her.” 

(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. என்று கூறினார்)

நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்

நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.

மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?

 

முஷ்கின் என்ற பதினொருவயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மோகன கிருஷ்ணன் என்ற காமுகனை ஒட்டு மொத்த தமிழகமும் சபித்தது ஏன்?

09.11.2010-ல் அவன், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, மக்கள் வரவேற்று கொண்டாடியதை நினைவுபடுத்திப் பாருங்கள். மோகன் மீது,  தமிழக மக்கள் இந்த அளவிற்கு வெறுப்பை உமிழ காரணம் என்ன?

சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?

உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலை வாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர். அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி  அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு ‘அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

Sahih Muslim 2:3310, 3311, Page716

‘A’isha (Allah be pleased with her) reported that Allah’s Apostle (may peace be upon him) married here when she was seven years old, and she was taken to his house as a bride when she was nine, and here dolls were with her: and when he (the Holy Prophet) died she was eighteen years old.”

அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார். ஆனால் முஹம்மது நபி விபரீதமான, வினோதமான பொம்மையை வைத்து விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இச்சம்பவத்தை “அதிர்ச்சியளித்தார்” என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.

 புஹாரி ஹதீஸ் : 6130

ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,

நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச்சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.

 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)

 

 Islamic Q&A வின் பதில்

“. . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . .” [al-Talaaq 65:4]

 

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.

Al- Muhallab said: “[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman.”

(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)

அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா  அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?

குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.

திருமணத்திற்கான வயதெல்லை? 

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின் சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும் மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதி. ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).

ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் ‘அதிர்ச்சியளித்ததாக’ எந்த விதமான செய்தியும் இல்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.

அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?

நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர் வர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?

முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …

 

பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும், கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?

“ஆம்” என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)

இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?

முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…?

எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான “அந்த”செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் “தொடைவேலைகளும்” இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்.

‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?

முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

 

தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும், தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும், மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும், நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.

ஆயிஷா அவர்கள் வயது குறைவாக இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடல் முழுவளர்ச்சியடைந்து இருந்தது என்றும் வாதிடுகின்றனர். ஆயிஷா அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)

 

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

   …..என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன்.

 

இச்சம்பவம் நிகழும்பொழுது சுமார் 13 வயது இருக்கும். அப்படியானால் ஒன்பது வயதில் எப்படி இருந்தருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள்.

திருமணத்திற்கான  வயதெல்லை? 

நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.

இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள். சிறுவனுக்கும் ஆயிஷா (ரலி)அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்)  அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.” [புஹாரி :4757]

இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது

 

அவதூறு பேசப்படுவதையும், சிறுவனை வழித்துணையாக பெற்றதும்  உடல்வளர்ச்சியின்  அளவுகோலாக பார்க்கலாமா? அவதூறு செய்தியை நபி  உண்மையென நம்புவதை உணர்ந்த ஆயிஷா அவர்கள், இறைத்தூதர்  அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என கூறுவதை அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக எவ்வாறு காணமுடியும்? இதில் என்ன அறிவுத்திமை இருக்கிறது?

திருமணத்திற்கான  வயதெல்லை? 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .(இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.

ஹதிஸ்கள் என அறியப்படும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அதிகம் அறிவித்தவர்களில் இவரும் ஒருவராகும்.

பெண்ணியல் சட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார்.

ஆறு வயது  குழந்தைக்கு,  கல்வியில் என்ன புலமை இருக்க முடியும்?  ஆயிஸா  அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலர் முழுமையாக இஸ்லாத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா? என்ற கேள்விக்கு திருமணத்திற்கான வயதெல்லை?  ஆசிரியரின் பதில்

 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)

பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். ( மற்றவைகளை இறைவனே அறிவான்.)

ஒரு மனைவி தன் கணவரின் செயல்பாடுகளை தெரிவிப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வு. இதை உலகமகா அறிவுகூர்மை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பிறப்பால் முஸ்லீமான ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். முஹம்மது நபி  அவர்களின் காலத்தில் பிறப்பால் யாரும் முஸ்லீமாக இருக்கவில்லை(?) முஹம்மது நபி  அவர்கள் உட்பட.   எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தார் என்று வாதிடுகின்றனர்.  இவர்கள்  மார்க் அறிவு அல்லது பகுத்தறிவுடன்தான் வாதிடுகிறார்களா என தெரியவில்லை.  பிறப்பால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? இதைக் கூட நபி  அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

ஆயிஷா  அவர்களின் அழகையும், வல்லமைமிக்க நினைவாற்றலையும், அறிவு கூர்மையையும் கண்டுவியந்து அவர் மேல் விருப்பம் கொண்டார். மார்க்கத்தை முழுமையாக கற்பித்து முழுமையான முஸ்லீமாக, பின்வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக  உருவாக்கவே ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தார் என்றும் ஒரு விளக்கம். ஆனால் ஆயிஷா அவர்கள் அறிவித்த பல ஹதீஸ்களைக் காணும் பொழுது அறிவுகூர்மைக்கு பதிலாக வெகுளித்தனமே தெரிகிறது. மேலும் அவர் அறிவித்த ஹதீஸ்களில் பல “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற வகையைச் சேர்ந்தது.

அன்றாட வாழ்வில் மிக திறமையான அறிவுகூர்மையான பல சின்னஞ்சிறு சிறுமிகளைக் காண்கிறோம். ஒரு ஐம்பது வயது மனிதர் அத்தகைய சிறுமிகளைக் கண்டு வியந்து தனக்கு அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பை மேலும் வலுப்படுத்த ஆயிஷா  (ரலி)  அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்.

நபி அவர்களும் அபூபக்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களைப் வாழ்ந்தவர்கள். இத் திருமண உறவு மட்டுமே அவர்களது நட்பை நீடிக்கச் செய்யும் என்று வாதிடுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. உணர்வுகளின் அடிப்படையில்  நபி, ஆயிஷாவை தன் (சகோதரரின்) மகளென்றே கூறியிருக்க வேண்டுமே தவிர அவரது ஆறு வயது பெண் குழந்தையை மனைவியாக காண்பது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.

எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற முதிர்ச்சி கூட இல்லாத ஒரு சிறுமியை வதந்திகளை உண்மையென நம்பி சந்தேகப்படுகிறார், சிறுமியான ஆயிஷா  அவர்களை விட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்கிறார். இறுதியில் ஆயிஷா  அவர்களை மணவிலக்கு செய்ய முடிவு செய்து தோழர்களுடன் ஆலோசிக்கிறார்.

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசப்பட்ட செய்தி…. (இதைப்பற்றி விரிவாக பின்னர் காணலாம்)                       

(புகாரி 2661,3388,4141,4750,4757)

எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தது அற்பமான உடல் தேவைகளுக்காக மட்டுமே!

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

நபி  அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன்  “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி  அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

 இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

 புகாரி ஹதீஸ் -7012

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்

(புகாரி 5078,  5125)

(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)

ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி  அவர்கள்,  ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார்.  ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

இது  தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி  அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி  அவர்கள் ஆயிஷா  அவர்களை திருமணம் செய்வது,  Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்?  அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும்,  தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா  அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக  நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.

ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா  அவர்களைப் பற்றி நபி  அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.

புஹாரி ஹதீஸ் -2028

அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.

(புகாரி 2028-2031, 2046)

மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி  அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே  நபி  அவர்களின் உயிரும் பிரிந்தது.

புஹாரி ஹதீஸ்  : 4450  

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

 (இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி  அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி  மரணிப்பது எப்படி?)  

மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,

புகாரி ஹதீஸ் -5218

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது

என் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்…

 (புகாரி 4913,5115, 5218).

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

மற்ற மனைவியரை விட நபி  அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி  அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர்  மற்றும்  பாத்திமா  அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. 

 

ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி  அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்….

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.

அல்பாக்கவி.com–ன் “அன்னை ஆயிஷா (ரலி)-1″என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

சிறுமிகளை திருமணம் செய்யலாமா?

சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.

புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி  அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி  அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.

 உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி  அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி  அவர்கள்  உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)

நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும், நபி  அவர்களுக்கும்  உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும்  அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.

Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. என்னைத்தவிர வேறுயாரும் Child sex  செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை.  நபி  அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.

மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள்,  தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்

நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர்  அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.

Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.

“‘Umar asked ‘Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. ‘Ali replied that she has not yet attained the age (of maturity). ‘Umar replied, ‘By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me’. Thus ‘Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to ‘Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. ‘Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, ‘You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you’. With that ‘Ali married Umm Kulthum to ‘Umar.” [In Tarikh Khamees, Volume 2, p. 384 (‘Dhikr Umm Kalthum’) and Zakhair Al-Aqba, p. 168]

ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு  பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!

ஆம்…! 

முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.

சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?

அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?

இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி  பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின்  Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?

(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது  ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)

நிச்சயமாக முடியாது. காரணம் Child sex  ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.

இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது.  முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)

நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.

நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர்  செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.

என்னுடைய கேள்விகளால் “திருமணத்திற்கான வயதெல்லை ?” யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.

…இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.

“ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.”

Islamic Q & A வின் பதில்

In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.

 

திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  நிச்சயமாக  Child sex முஹம்மது நபி  அவர்களின்  வழிமுறையாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ் -4788

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி  வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக  உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களும், என் மனதை நெருடியது…

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

28 அக்

கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.“எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்.” – கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், “50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது.” என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், “அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன.” என்று சாடினார். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது “லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை.” என்று அறிவித்தார்கள். கடாபியிடம், “ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்,” மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட “கடாபியின் இஸ்லாத்தை” கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் “ஆப்பிரிக்க சகோதரத்துவம்” இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, “ஆப்பிரிக்க ஒன்றியம்” உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. “லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து,” இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் “புரட்சிப் படையினரால்” இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, “கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்.” என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

“லிபியப் புரட்சி” ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. “புரட்சிப் படையினர்” கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. “புரட்சிப் படையினரின்” முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த “புரட்சிக் காரர்களின்” பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர். 

பிரத்தியேக “அகதி முகாம்களில்” தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். “அகதி முகாம்” என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் “பாதுகாப்பு ஏற்பாடுகளை” பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். “மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்.” 

துப்பாக்கிகளுடன் திரியும் “புரட்சிப் படையினர்” மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். “அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்.”

புரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. “சர்வதேச சமூகமும்” ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், “கறுப்பு லிபியர்கள்” என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக “புரட்சிப் படையினர்” தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், “கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே” தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, “சர்வதேச மன்னிப்புச் சபை” யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், “அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்.” என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். 

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த “லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு”, கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த “சர்வதேச பயங்கரவாதி” வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு: 

முதல் பதிவு: கலையரசன்

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

24 அக்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தி சில ஊர்களில் பேசிவிட்டால் அது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகிவிடும் என்றால், இந்தியாவில் ஊழல் என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாதவாறு அழிந்து போயிருக்கும். அந்த அளவுக்கு எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் வியாதிகளும் பாகம், பாகமாக ஊழல் ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்கள்.  ஆனால் நாற்பதுகளில் சில ஆயிரங்களில் இருந்த ஊழல் இன்று பல லட்சம் கோடிகளாக வளர்ந்திருக்கிறது.  இந்த ஜன் சேத்னா ரத் யாத்ரா தன் 38 நாள் உழவை முடித்ததும் ஊழல் பயிர் எவ்வளவு மகசூல் காணுமோ.

இப்போதே இந்த யாத்திரைக்கு பாஜக தலைவர்கள் அதிக அக்கரை காட்ட வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் உத்தரவு போட்டிருக்கிறது.  ஏற்கனவே ஊழல்களால் காங்கிரஸ் சரிவை கண்டிருக்கும் வேளையில், மோடி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை தேசிய அளவில் உயர்த்தி காட்ட முயன்றிருக்கிறார். செய்தி ஊடகங்கள் குஜராத்தை உள்நோக்கத்துடன் கொண்டாடி வருகின்றன.  இந்தநிலையில் தாம் ஏதாவது செய்யாவிட்டால் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் தம் கனவுகள் திரிசங்கு வானத்தில் தான் மிதக்கும் என்று தெரியாதவரா அத்வானி. அதனால் தான் கிளம்பிவிட்டர் ரதத்திலேறி. ஆனால் மக்கள் முட்டாள்களல்லவே.

என்ன சொல்ல வருகிறார்கள் இந்த ரத யாத்திரை மூலம்?  சில நாட்கள் ரத யாத்திரை நடத்தி ஊழலை ஒழித்து விடுமளவுக்கு ஊழல் என்பது சதாரணமானது தான் என்கிறார்களா? அல்லது ஊழல் குறித்து மக்களுக்கு என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்கள்? ஊழல் செய்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகள் அந்த ஊழல்களால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் மக்களிடம் ஊழலுக்கு எதிராக என்னவிதமான பரப்புரை செய்வார்கள்?  ரதமாக மாற்றப்பட்டபேருந்தில் லிப்ட் உதவியுடன் கூரையில் ஏறி நின்று ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும்பணத்தை கொண்டுவந்தால் இந்தியக் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தலாம், சாலை போடலாம், பள்ளிக் கூடம் கட்டலாம்.  ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு ஆதர்ஸ், காமன்வெல்த், 2ஜி என ஊழல் செய்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.  சரி, பாஜக ஆளும்போது என்ன செய்தது? சவப்பெட்டி ஊழல் தொடங்கி எதியூரப்பாவின் நிலபேர ஊழல் வரையான கல்வெட்டுக்களை என்ன செய்வது?  மைய அரசிலோ, மாநிலங்களிலோ ஊழல் செய்யாத ஆட்சி எது? ஊழல் செய்யாத கட்சி என்று ஏதாவது உண்டா? இங்கு இருப்பதெல்லாம் இரண்டே வகை. ஒன்று, ஊழல் செய்து மாட்டியவர்கள், இன்னொன்று, இன்னும் மாட்டாதவர்கள். இதில் யாருக்கு யார் படம் காட்டுவது?

2ஜி, ஆதர்ஸ், காமன்வெல்த், சவப்பெட்டி, போபர்ஸ் இவை மட்டும் தான் ஊழலா?   இது வரை ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? கையூட்டு பெற்றதாய் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதை ஊழலாக கொள்வதற்கு நமக்கு கற்றுத் தருகிறார்கள் இவர்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் அத்தனையும் ஊழல் தான். அந்த வகையில் இந்த அரசும், இந்த அரசின் கொள்கையுமே ஊழல்தான்.  தமிழகத்தில் நோக்கியா நிறுவனத்திற்கு, குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலைக்கு தொழில் தொடங்க அந்தந்த நிறுவனங்கள் முதலீடாக போட்ட தொகையைவிட அதிகமாக மக்கள் வரிப்பணம் சலுகையாக கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதை முன்னேற்றம் என்பவர்கள் திட்டம் போட்டோ, சட்டம் போட்டோ, ரதயாத்திரை நடத்தியோ ஊழலை என்ன செய்வார்கள்? 2ஜியில் நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி இழப்பு என்று கூறியவர்கள் இதுவரை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டதில் எத்தனை லட்சம் லட்சம் கோடிகள் நாட்டிற்கு இழப்பு என்பதை கணக்குப் பார்க்கட்டும். இவைகளை ஏன் ஊழலாக காண மறுக்கிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளபடி ஐந்து லட்சம் கோடி முதலாளிகளுக்கு சலுகையாக கொடுத்திருக்கிறார்கள். இவைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இன்னும் சாலை காணாத கிராமங்களுக்கு, மின்சாரம் பாயாத கிராமங்களுக்கு, கல்விக் கூடங்கள் நுழையாத கிராமங்களுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டுவந்தால் தான் முடியும் என்றால் தனியார் கல்லூரிகளும், தொழிற்சாலைகளும் மின்சாரத்தில் குளித்து பளபள சாலைகளில் தலை வாருவது எப்படி? ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை கருப்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் யாவர்? நாட்டின் வளங்களை சுரண்டிக் கொள்ளையடிக்கும் தனியார் முதலாளிகளும், அவர்கள் வீசி எறிவதற்காய் காத்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் தானே. இவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது கருப்பு வண்ணமென்றால் இங்கு குவித்து வைத்திருப்பதை என்ன வண்ணம் என்பது? நினைவிருக்கிறதா, கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்,உங்கள் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதோடு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்ததற்காக ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்பட்டார் சிதம்பரம். ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை அறிவித்தால் சட்டச் சிக்கல் வரும் என்றார் மன்மோகன் சிங். பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்காகவே தனி அமைச்சரவையை ஏற்படுத்தியது பாஜக. பங்குச் சந்தையை வீழச் செய்வோம் என்று லேசாக மிரட்டியதற்கே வைப்பு நிதியை சந்தையில் கொட்டினார் வாஜ்பாய்.  இவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று கூறினால், நாம் எந்த வாயால் சிரிப்பது?

இந்த ஓட்டுப் பொறுக்கிகள் பொழுதுபோகாமல் நடத்தும் கூத்துகளில் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பினால் இருக்கும் கோமணமும் களவாடப்படுவது தெரியாமல் போய்விடும்.  இவர்களை ஓட்டுப் போடாமல் தண்டித்துவிட்டால் திருந்தி விடுவார்கள் என்று நம்பினால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி.  இவர்களை ஓடுமொத்தமாய் விரட்டியடிக்காதவரை ஊழல் ஒழியப் போவதும் இல்லை.  மக்களுக்கான வாழ்வு மலரப் போவதும் இல்லை.

முதல் பதிவு: செங்கொடி

உணர்வில்லாத ‘உணர்வு’ வார இதழும், சில ரசிகர்களின் விசில் சத்தமும்.

22 அக்

அண்மையில் புதிய கலாச்சாரம் இதழில் “இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்” எனும் கட்டுரை வெளிவந்திருந்தது. அந்தக் கட்டுரை வங்க தேசத்தில் (பங்களாதேஷ்) தன்னை காதலிக்க மறுக்கும், உடன்பட மறுக்கும் பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி அவர்களின் வாழ்வையும், நம்பிக்கையையும் சிதைக்கும் ஆணாதிக்கம் குறித்து விவரிக்கிறது. அந்தக் கட்டுரை இரண்டு பகுதிகளாக இருக்கிறது. முதல் பகுதி வங்க தேசத்தில் நடக்கும் அமில வீச்சுக்களை அதன் சூழலுடன் விவரிக்கிறது. இரண்டாவது பகுதி எல்லா மதங்களும் ஆணாதிக்கத்தை தக்கவைப்பதாக இருப்பதை, குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் பாதிப்புகளை பேசுவதால் இஸ்லாமிய ஆணாதிக்கம் குறித்து தூக்கலாக பேசுகிறது.

இஸ்லாம் குறித்து விமர்சனம் வைத்தாலே அது அறியாமல் எழுதியது, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியது என்பது தான் முஸ்லீம்களின் தீர்ப்பாக இருக்கும். அந்த வகையில் ’உணர்வி’ல் செப்டம்பர் 2-8/2011 இதழில் ”புத்தியிழந்த புதிய கலச்சாரம்” எனும் தலைப்பில் நிஜாம் என்பவர் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரைக்கு மறுப்பு எழுதினால் கட்டுரையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அந்த மறுப்பு இருக்க வேண்டும். ஆனால் உணர்வின் அந்த மறுப்புக் கட்டுரையில் உணர்வும் இல்லை, உள்ளடக்கமும் இல்லை. அதாவது புதிய கலாச்சாரம் கட்டுரை வங்க தேசத்தில் அமிலம் வீசி பெண்களை சிதைப்பதற்கு ஆணாதிக்கம் காரணமாக இருக்கிறது என்பதையும், அந்த ஆணாதிக்கத்தை எல்லா மதங்களும் தக்க வைப்பதைப் போலவே இஸ்லாமும் தக்கவைத்துப் பாதுகாக்கிறது என்பதை தரவுகளுடன் எடுத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் அதை மறுக்கப் புகுந்த உணர்வோ வங்க தேசம் ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால் அங்கு நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது என்று பொதுவாக கூறிவிட்டு நகர்ந்து விடுகிறது. மட்டுமல்லாது தொடர்பே இல்லாமல் சகுந்தலா நரசிம்மனின் பர்தா பற்றிய விதந்தோதல்களும், கமலா தாஸ் சுரையாவாக மாறியதையும் பெட்டிச் செய்திகளாக வெளியிட்டிருக்கிறது.

இதை மறுத்து (மறுப்புக்கு மறுப்பு) வினவு இணைய தளத்தில் தோழர் சாகித் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் பின்னூட்டப் போர்கள் தான் இந்த பதிவிற்கான உந்துதலும் சாரமும்.

வினவு இணைய தளம் அனைத்து மதங்களையும், அனைத்து பிற்போக்குத்தனங்களையும் விமர்சித்து அரசியல், சமூக தளத்தில் பல்வேறு கட்டுரைகளை வீரியமாக எழுதியிருக்கிறது, தொடர்ந்து எழுதும். ஆனால் ஒவ்வொரு தனித்த கட்டுரையின் பின்னூட்டங்களிலும், குறிப்பாக மதங்களை எதிர்த்து எழுதும் கட்டுரைகளில் ஏன் அந்த மதத்தை எழுதவில்லை, ஏன் இந்த மதத்தை எழுதவில்லை என கேள்வி எழுப்பப்படுவது வாடிக்கை. அதற்கு இந்தக் கட்டுரையிலும் விதிவிலக்கில்லை. இனி விசில் சத்தங்கள் குறித்து பார்க்கலாம்

இப்ராஹிம்

இவர் கூறுகிறார், \\நீங்கள் சொல்லுவதுதான் மையக் கருத்து என்றால் ‘வங்க பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம் ‘என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.ஆனால் இங்கு இஸ்லாத்தை சாடவே வழி மீது விழி வைத்து குற்றம் கண்டு பிடித்து எழுதப்பட்ட கட்டுரையாகும்// வங்கப் பெண்கள் என்றாலும் இஸ்லாமியப் பெண்கள் என்றாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. ஏனென்றால் வங்கத்திலுள்ள இஸ்லாமியப் பெண்கள் குறித்து தான் அந்தக் கட்டுரை பேசுகிறது. எனும்போது இஸ்லாமிய பெண்கள் எனக் குறிப்பிடுவது எப்படி தவறாகும்? இஸ்லாமியர்கள் செய்வதினால் மட்டுமே அது இஸ்லாத்தின் குற்றம் என்றாகிவிடும் என்று கட்டுரையிலோ, மறுப்பிலோ குறிப்பிடப்படவே இல்லை. மாறாக இஸ்லாத்தின் ஆணிவேரே முஸ்லீம்களை அப்படி வழிநடத்துவதற்கு தூண்டுதலாக இருக்கிறது என்பதையே தரவுகளுடன் குறிக்கிறது. எனவே கேரள கம்யூனிஸ்டுகள் செய்வது கம்யூனிசத்தைச் சராது (அவர்கள் போலிகள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களே அதுவரைக்கும் நன்றி)

ஏன் கம்யூனிசத்தின் சில கொள்கைகளை நடப்பு முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் செயல்படுத்தும் சூழல் இல்லை என்பதை ஏற்கனவே உங்களுக்கு விவாதங்களில் விளக்கியிருக்கிறேன். என்றாலும் இது போன்ற சில வாய்ப்பாட்டுக் கேள்விகளை கேடயமாக பிடித்துக் கொள்வது உங்கள் வாடிக்கை. தவ்வுஹீத் உட்பட உலகின் ஏனைய அனைத்து கொள்கைகளும் நடப்பு உலகில் சில சீர்திருத்தங்களை மட்டுமே கோருகின்றன. ஆனால் கம்யூனிசமோ தலைகீழ் மாற்றத்தைக் கோருகிறது. நடப்பில் இருக்கும் ஒன்றில் சிறு சீர்திருத்தம் செய்து காட்டுவதற்கும், நடப்பில் இருக்கும் அனைத்தையும் தலை கீழாக மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டுவருவதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் புரியாதது போல் நடித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஐந்து நிமிட தேடலில் சுட்டி எடுத்துக் காட்டுவதற்கு முன்பாக தோழர் சாஹித் என்ன கேட்டிருக்கிறார் என்பதை கொஞ்சம் கவனித்திருக்கலாம். கம்யூனிஸ்டுகள் அமிலம் வீசினார்களா? கம்யூனிச கொள்கை அமிலம் வீச தூண்டுகிறதா? எனும் கேள்விக்கு நீங்கள் அளித்திருக்கும் சுட்டியில் ஏதாவது பதில் இருக்கிறதா? மட்டுமல்லாது சீனாவும், ரஷ்யாவும் சோசலிச நாடுகளல்ல சமூக ஏகாதிபத்திய நாடுகள் என்பது வினவில் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  மேலும் குரானின் எந்தெந்த வசனங்கள் கொள்ளையடிக்க, கற்பழிக்க, அடக்கியாள தூண்டுதலாக இருக்கிறது என்பதையும் பலர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உங்களின் ஆசைக்காக இன்னொரு முறையும் வெளிப்படுத்தலாம். கீழ்காணும் வசனங்களை படித்துப்பாருங்கள். வகைக்கு ஒன்றாக மூன்று வசனங்கள். இந்தப் பொருளில் மேலும் சில வசனங்கள் இருப்பது உங்களுக்கே தெரியும். 8:69, 4:24, 4:34

புர்கா பற்றி சுடிதார் போன்ற முழுமையாக மறைக்கும் ஆடைகளே போதுமானது என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் நடப்பில் அப்படி யாரும் கருதுவதில்லை என்பது உங்களுக்கே தெரியும். குரான் வசனங்களும் ஆடைகளுக்கு மேலாக இன்னொரு ஆடை வேண்டும் என வலியுறுத்துகிறது. இது குறித்து மேலும் அறிய அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா எனும் கட்டுரையை பார்க்கவும்.

அடுத்து பண்ணை வாழ்க்கை என்று ஒன்றை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறீர்கள். அப்படி என்றால் என்ன? கம்யூனிசத்தில் அப்படி ஏதேனும் இருக்கிறது என நீங்கள் கருதினால் அதை விவரியுங்கள், பின்னர் நாங்கள் பதிலளிக்கிறோம். மாறாக கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக யாரோ எழுதிய நாவலின் தலைப்பை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால், கவனம் கீழே விழுந்து அடிபட்டுவிடாதீர்கள் என்று மட்டுமே அறிவுரை கூற முடியும்.

நீங்கள் ஒரு அவதூறைக் கூறி, அது பொய்த்தகவல் என்பதால் உங்களிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால் நீங்களோ கிமு காலத்து உத்தியைப் பயன்படுத்தி அது என்னவென்றே தெரியாதது போல் நடிக்கிறீர்கள். அதாவது, எதை அவதூறு என்றும் பொய் என்றும் கூறுகிறோமோ அதை நாங்களாகவே மீண்டும் கூறவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு. மெய்யாகவே நீங்கள் மறந்திருந்தால், வினவு, புதிய கலாச்சாரம் என்ற பெயர்களைக் கேட்டதும் உங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். எனவே உங்கள் உத்திகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

அப்துல்லா

முஸ்லீம்களுக்கு புதிய கலாச்சாரம் பிடிக்காது இஸ்லாமிய கலாச்சாரம் தான் பிடிக்கும் என எதுகை மோனையுடன் கூறியிருக்கிறீர்கள். வீதியில் இறங்கி உணர்வு இதழை விற்ற அனுபவம் உங்களுக்கு இருக்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் புஜ புக இதழ்கள் விற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு. இந்துப் பாசிசங்களை விமர்சித்து கட்டுரை வந்தால் அதை பெருவாரியான முஸ்லீம்கள் வாங்குவதும், (ஜும்மா பள்ளிவாசல்களில் கூட விற்றிருக்கிறோம்) இஸ்லாத்தை விமர்சித்து கட்டுரை வந்தால் முகத்தை திருப்பிக் கொள்வதும் நாங்கள் வழக்கமாக எதிர்கொள்வது தான். அந்த அடிப்படையில் தோழர் சாஹித் கூறியது சரியானது தான். அதே நேரம் உணர்வு வார இதழ் குறித்து அறிந்திராத முஸ்லீம்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

புர்காவை விமர்சித்துவிட்டால் அதை நிர்வாணமாக அலைய விடுவதற்கான அனுமதியாக பார்ப்பது உங்களைப் போன்றவர்களுக்கு வாடிக்கை தான். ஏனென்றால், இப்படி வண்ணம் பூசாவிட்டால் உங்களால் புர்காவை நியாயப்படுத்த முடியாதே.

\\அநியாயமாக எந்த உயிர்களையும் கொள்ளக்கூடாது , அனைவரிடமும் அன்பு கட்ட வேண்டும், நீதி போற்றப்படவேண்டும் என்று இஸ்லாத்தின் உலக சமத்துவத்தை சொல்லிகொண்டே போகலாம் // இது போல இஸ்லாம் மட்டுமல்ல, உலகின் பொழுதுபோகாத அத்தனை தீர்க்கதரிசிகளும், தீர்த்தாங்காரர்களும், நன்னெறியாளர்களும் இதை கூறித்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை அவைகளை எப்படி ஏற்படுத்துவது என்பது தான். அந்தப் பார்வையில் தான் இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. என்ன செய்வது ‘குன்’ என்று கூறி உலகில் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதே.

இஸ்லாமிய பெண்கள் புர்காவை விரும்பி அணிகிறார்கள் என்று கூறப்படுவது உண்மையல்ல. மதச்சடங்கு என்றாகும் போது அங்கு விருப்பம் புறக்கணிக்கப்பட்டு மத அழுத்தமே எஞ்சியிருக்கும். இன்றும் புர்கா அணிய மறுக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். விஜய் டிவி புர்கா விவாத விளம்பரத்தில் எத்தனையோ பெண்கள் புர்காவுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள், அதை ஒளிபரப்ப விடாமல் தடுத்தது ஏன்? புர்காவை தூக்கி எறிந்தால் அவர்கள் எறிவது இஸ்லாத்தையல்ல தங்கள் மானத்தை என்கிறீர்கள். புர்கா அணியவில்லை என்றால் அது மானத்தை இழந்த தன்மை என்று பொது வெளியில் தயக்கமில்லாமல் கூறுகிறீர்களே, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் பெண்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே புர்கா அணிகிறார்கள் என்பதற்கு?

யுஏஇ தமிழன்

இஸ்லாத்தை விமர்சித்தால் உடனே மூட்டை முடிச்சுகளுடன் வந்து விடுகிறார்கள்” என நான் எழுதியதை மறுத்து பின்னூட்டம் குறித்த வினவின் கருத்துகளைக் கூறி விளக்கமளித்துள்ளீர்கள். நான் எழுதியது என்ன பொருளை உள்ளடக்கி இருக்கிறது என்பதை அறியாத விதத்தில் உங்களின் விளக்கம் அமைந்திருக்கிறது. முஸ்லீம்கள் கருத்தாட வரக்கூடாது எனும் பொருளில் அது எழுதப்படவில்லை. மாறாக, இஸ்லாம் குறித்த கட்டுரைகளுக்கு மட்டுமே வருகிறார்கள், ஏனைய சமூக அரசியல் கட்டுரைகளுக்கு வருவதில்லையே எனும் ஆதங்கத்தையே என்னுடைய அந்தக் கூற்று உள்ளடக்கி வெளிப்படுத்துகிறது. ’மூட்டை முடிச்சுகளுடன்’ என்பது ஒருவித எள்ளல் தான். ஆனால் அந்த எள்ளல் மற்றுக் கருத்து கொண்டவர்களை கேவலப்படுத்தி, கோபப்படுத்தி எங்கள் நிலைப்பாட்டை நிறுவுவதற்காக அல்ல. எல்லா கட்டுரைகளுக்கும் வந்து உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனும் தேடல் தாகத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே அந்த எள்ளல் ஆளப்பட்டிருக்கிறது. இன்னும் மூட்டை முடிச்சுகளுடன் என்பது உங்களிடம் இருக்கும் மீளாய்வுக்கு ஆட்படாத தன்மையையும் மறைமுகமாக சுட்டுகிறது.

உங்கள் கோபம், எங்கள் கோபம் என்றெல்லாம் அங்கு ஒன்றுமில்லை. எது போன்ற சொல்லாடல்கள் கையாளப்பட்டிருக்கிறதோ, அதேபோன்ற சொல்லாடல்களுடன் எதிர்வினை செய்யப்பட்டுள்ளது அவ்வளவு தான். ஒன்று தெரியுமா உங்களுக்கு? வினவு தளத்தில் முஸ்லீம்கள் இதுவரை கம்யூனிச விமர்சனம் எதையும் வைத்ததில்லை. அவர்கள் செய்வதெல்லாம் செவியுறும் அவதூறுகளை கொட்டிப் போவது தான். அதற்கு மறுப்புக் கூறினாலும் கூட தொடர்ச்சியாக அதன் நிலை குறித்து பேசுவதில்லை. மாறாக பிரிதோர் இடத்தில் தோன்றி மீண்டும் அதே அவதூறுகளைக் கடைபரப்புவார்கள்.

சிவப்புச் சட்டையையும், கருப்புச் சட்டையும் இறைமறுப்பு எனும் அடிப்படையில் ஒன்றிப் போவதக நீங்கள் கருதலாம். ஆனால் இரண்டு வண்ணங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. எனவே இரண்டும் நாத்திகம் என்று மேலோட்டமாக பொதுமைப்படுத்திவிட முடியாது. நாத்திகர்களுடனான விவாதத்தில், சாராம்சமாக பார்த்தால் அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரால் எப்படி கூறமுடிந்தது என்று முஸ்லீம்கள் தரப்பும், அந்த வசனங்கள் சாதாரணமாகத்தான் இருக்கின்றன, அறிவியல் விளக்கங்களை அதனுள் திணிக்கிறீர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என திராவிடர் கழகம் தரப்பும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தன. இதில் முடிவு எதையும் வந்தடையாத நிலையில் வென்றுவிட்டோம் என்று ஒரு தரப்பு மட்டும் எப்படி கூறிக் கொள்ள முடியும்? மட்டுமல்லாது இந்த விவாதம் தொடங்கிய புள்ளி முகம்மதின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம். இது குறித்து உண்மை இதழில் வெளிவந்த கட்டுரையைத் தொடர்ந்தே உணர்வு கட்டுரைகளும் பின்னர் விவாதமும் ஏற்பட்டது. ஆனால் விவாதம் செய்த இரண்டு தரப்பினருமே மையப்புள்ளியான முகம்மதின் விண்வெளிப் பயணம் குறித்து மறந்தும் கூட வாய்திறக்காத மர்மம் என்ன என்பதை யோசித்துப் பாருங்களேன்.

நேரடி விவாதம் குறித்து நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இஸ்லாத்தை, மதங்களை விமர்சிக்கிறோமோ அந்த நோக்கம் பிஜே வடிவ விவாதங்களில் நிறைவு பெறுவதில்லை. எனவே நீங்கள் கூறும் நேரடி விவாதங்களை நான் மறுதலிக்கிறேன். அதேநேரம் தினமும் நாங்கள் நேரடி விவாதங்களை சமூக, அரசியல், மத விவகாரங்களில் நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்புவதுபோல் நேரடி விவாதம் தவிர ஏணையவை கோழைத்தனமானவை என்பதை உள்ளுக்குள் நீங்கள் மீளாய்வு செய்து பார்த்தால் அவை தவறானவை என்பது உங்களுக்கே புலப்படும். அவை எல்லாவற்றையும் மீறி எழுத்து விவாதம் கோழைத்தனமானது என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால், மன்னிக்கவும். உங்களின் பிஜே வடிவ விவாதங்களில் பங்கு பெற்றுத்தான் எங்களின் துணிவை நிருபித்தாக வேண்டும் எனும் அவசியம் எங்களுக்கு இல்லை.

அப்புறம் வழக்கமான செத்துப்போன கம்யூனிசம் எனும் வாய்ப்பாட்டு. இதற்கு ‘இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே‘ எனும் விவாதத்தில் பதிலளித்திருக்கிறேன். முடிந்தால் அதை மறுத்துப் பாருங்கள். அல்லது அங்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற முயற்சித்துப் பாருங்கள்.

கடைசியாக ஒன்று, இஸ்லாத்திற்கு மாற்று ஒன்றுமேயில்லை என முஸ்லீம்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். அவர்களின் நம்பிக்கை எனும் அளவில் அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்த நம்பிக்கை தான் உண்மையானது, இஸ்லாத்திற்கு மாற்றை கூறிவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என பொது வெளியில் கூறித்திரிகிறார்கள். மக்களின் நலவாழ்வுக்கு மர்க்சியமே சரியான வழி என்றே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஒப்பீடு செய்ய விரும்பும் யாரும், எப்போதும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கடாஃபி: சர்வாதிகாரிகளுக்கான முடிவு என்றாலும் அவரைக் கொன்றவர்கள் ஜனநாயகவாதிகளல்லர்

22 அக்

புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள இறைச்சிக் கூடத்தில் கிடக்கிறது. அவரது உடலை ரகசியமாகப் புதைக்க இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புரட்சிப் படையினரால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரடா பகுதியில் இறைச்சி கூடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.

ஆனால், பின்லேடன் உடலை கடலில் புதைத்தது மாதிரி கடாபியின் உடலையும் ரகசியமாகப் புதைக்க வேண்டும் என இடைக்கால அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் உடலை தங்களது இனத்தைச் சேர்ந்த லிபிய பழங்குடியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் உடலை எங்கே புதைப்பது என்பது குறித்து லிபிய அதிகாரிகள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஒசாமா பின் லேடனை புதைத்தது போல் கடாபியின் உடலை கடலில் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருவதாகத் தெரிகிறது. எதிர்காலத்தில் கடாபியின் கல்லறை புனிதச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதில் நேடோ நாடுகள் தீவிரமாக உள்ளன.

இதற்கிடையே கடாபி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் புரட்சிப் படையினர் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேடோ போர் விமானங்கள் அவரது வாகனத்தை குண்டு வீசித் தாக்கி சிதறடித்ததும், காயமடைந்த அவர் ஒரு சாக்கடைக் குழாயில் பதுங்கியபோது புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந் நிலையில் அவரை எடுத்தவுடன் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவரிடம் போர்க் குற்றங்கள் குறித்து சில மணி நேரம் அடித்து, உதைத்து விசாரணை நடத்திவிட்டு, தெருவில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி விட்டே சுட்டுக் கொன்றதாகவும் தெரிகிறது. அவரை தெருவில் உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோவும், அவர் கெஞ்சுவது போன்ற வீடியோவும் இப்போது வெளியாகியுள்ளது.

இந் நிலையில் தங்களது ‘லிபியப் பணி’ முடிவடைந்து விட்டதாக நேடோ அறிவித்துள்ளது. கடாஃபி இறந்துவிட்டார் என்றால், லிபியாவில் நேட்டோவின் ராணுவத் தலையீடும் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் என்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸி கூறியுள்ளார்.

ஐஆர்ஏ உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து இங்கிலாந்திலும் தீவிரவாதத்தை வளர்த்த கடாபி கொல்லப்பட்டது, தீவிரவாதிகளால் பலியான குடும்பங்களுக்கு நிம்மதி தரும். கடாபியின் அரசை முடிவுக்குக் கொண்டு வருவதில் இங்கிலாந்தும் பங்கு வகித்தது பெருமை என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

கடாபியை கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே திட்டமிட்டு அமெரிக்கா தலைமையின நாடுகள் கொன்று விட்டன என்று வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ் கூறியுள்ளார்.

********************************************************

கடாஃபி தன்னுடைய அரசை மக்களுக்கான அரசாக நடத்தியவரல்லர். அவர் சர்வாதிகாரி தான், மக்களைப் பொருட்படுத்தாதவர்தான். சர்வாதிகாரிகளின் முடிவு இப்படித்தான் இருக்கும். ஆனால் அவரின் இந்த முடிவு அவருடைய சர்வாதிகரத்திற்கான முடிவல்ல. ஏகாதிபத்தியங்களை அனுசரித்துப் போகாததற்கான முடிவு. இன்னும் தெளிவாகச் சொன்னால் லிபியாவின் வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க அனுமதிக்காததற்கான முடிவு. அப்படி அவர் அனுமதித்திருந்தால் இன்றும் லிபியாவின் அசைக்க முடியாத அரசுத் தலைவராக அவரால் நீடித்திருந்திருக்க முடியும்.

 

லிபியாவிற்கான ஏகாதிபத்திய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

 

கடாஃபியின் கடைசி நிமிடங்கள்

பலதாரமணம் ஏன்? 2

21 அக்

 

 

 

 

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 9

 

 

Dr.ஜாகீர் நாயக்தொடர்கிறார்

 மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

நாடு ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பஹ்ரைன் 1.03
ட்ஜிபௌடி 1.07
ஜோர்டான் 1.1
குவைத் 1.5
ஓமன்    1.31
கத்தார்  1.93
ஐக்கிய எமிரேட்                1.51

 

 

சவுதிஅரேபியா ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயது ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது 1.05
 15 வயதிற்குள் 1.04
15-64 வயது வரைs 1.33
65 வயதிற்கு மேல்r 1.13
மொத்த மக்கள் தொகையில் 1.2

 

எனவே சவுதிஅரேபியா மற்றுமுள்ள இஸ்லாமிய நாடுகளில்,  ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் என்ற முறையை நடைமுறைப்படுத்துவது அல்லது Dr.ஜாகீர் நாயக் கூறுவது போல ஆண்களை  ‘பொதுச் சொத்தாக மாறுவது’ சரியான தீர்வாக அமையும்.

Dr.ஜாகீர் நாயக்  தொடர்கிறார்,

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அடிப்படை நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.

மறுப்பு :

ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது. மகிழ்ச்சியான குடும்பங்கள் இணைந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவல் காரணமாக வெளியே சென்று திரும்பும் கணவன் புதிதாக ஒரு பெண்ணை தனது துணைவியாக வீட்டிற்கு அழைத்துவந்தால் முன்பே இருக்கும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும்?

முஹம்மது நபியின் அலுவல் போர்க்களத்திற்குச் செல்வது ஒவ்வொரு முறையும் அவர் விதவிதமான பல பெண்களுடனே தனது இல்லத்திற்கு திரும்பினார். அவரது மனைவியர்களால் எதுவும் பேசமுடியவில்லை. அவருடைய மனைவி(யர்கள்) அறிய பிற பெண்களுடன் கூடி மகிழ்ந்தார் அம்மனைவியர்களால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை காரணம் அல்லாஹ்வின் அனுமதி.

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.…

(குர்ஆன்2:223)

இக்குர்ஆன்வசனத்தின்படி, பெண்கள், ஆண்களைத் திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்களின் நிலை கீழ்தரமானதே.

ஒரு பெண்  பல ஆண்களுடன் ஏன் வாழ முடியாது?

ஹதீஸ்களில் பெண்களின் நிலை

புகாரி ஹதீஸ் : 5219           பாடம் : 108

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது :

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா நான் சஅத்தை விட ரோஷக்காரன் அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன்” என்று சொன்னார்கள்.

அதாவது ஒருவரது மனைவியுடன் அந்நிய ஆண்  அவ்வாறு இருப்பதாக கண்டவுடன் ரோஷம் கொண்டு அந்த ஆணை வெட்டலாம். அந்த பெண்ணை அந்நிய ஆணுடன் உறவு கொண்ட குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

                ஆனால் ஒரு பெண் தன் கணவன் விதவிதமாக மனைவிகளுடனும், அடிமைப் பெண்களுடனும் உறவு கொள்வதை அறிந்தும் அவள் ரோஷம் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் அது அல்லாஹ் ஆணுக்கு வழங்கிய உரிமை.

பெண்கள் ரோஷம் கொள்ளக் கூடாத ஒரு உயிரினம் !

 

நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இஸ்லாமியக் கொள்கைகளின் இழிநிலை  இதுதான்.

 

 ஆண் உயர்வானவன் என்பதே அல்லாஹ்வின் நிலை. அல்லாஹ்விற்கு, அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத்,  என்ற பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களது பரிந்துரைகள் அல்லாஹ்வால் ஏற்கப்படுகிறது என்றும்  குரைஷிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு, அல்லாஹ்வின் பதில்,

 

ஆண் மக்களை விட பெண் மக்களையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?

(குர்ஆன் 37:153)

ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)?

(குர்ஆன் 43:18)

உங்களுக்கு ஆண் குழந்தைகளும், அவனுக்குப்  பெண் குழந்தைகளுமா?

அவ்வாறாயின் அது அநீதியான பங்கீடாகும்.

(குர்ஆன் 53:21-22)

அல்லாஹ், தனக்கு மனைவிகளோ, குழந்தைகளோ இல்லையென்று கூறுவதற்காக பெண்களை எதற்காக இழிவாக கூறவேண்டும்? பெண்களின் மீது இவ்வளவு இழிவாக கருத்து கொண்ட அல்லாஹ், எதற்காக அவர்களைப் படைக்க வேண்டும்? மேற்கண்ட குர்ஆன் வசனங்களைக் காணும்போது, பெண் இனத்தை அல்லாஹ் படைக்கவில்லை என்றே என் மனதில் தோன்றுகிறது.

இது  உண்மையாகவே, அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனின் வார்த்தைகள் தானா?

 பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறும் சில உயர்ந்த கருத்துக்களையும் காண்போம்.

புகாரி ஹதீஸ் :5094

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

 

Tirmidhi

        Women are your prisoners, treat them well, if necessary beat them but not           severely…104

        (பெண்கள் உங்களின் கைதிகள் அவர்களை நல்ல முறையில்      நடத்துங்கள்,       தேவைப்பட்டால் அடியுங்கள் ஆனால் கடுமையாக              அல்ல)

        A woman must immediately respond to her husband’s demand for sex even       when she is in the midst of baking bread in an oven…109

(தன் கணவன் உறவுக்கு அழைத்தால் ஒரு பெண் கட்டாயமாக உடனே செல்ல வேண்டும். அவள் அடுப்பில் ரொட்டி சமைப்பது           பாதியிலிருந்தாலும் சரி.)

        If a woman wears perfume and attends a party, she is an adulteress…330

        (ஒரு பெண், வாசனை திரவியங்கள் பூசி விழாக்களில் கலந்து     கொண்டால், அவள் விபச்சாரியே)

        If a woman annoys her husband Allah does not accept her prayer; ditto for a     runaway slave and a leader disliked by his people…344, 347

        Virgins have the sweetest mouths, the most prolific wombs and are easily             satisfied with very little; so marry them…920

        If a religious person (that is, a Mullah, a Maulana or a Maulovi) asks your           daughter for marriage, you must accede to his request…919

 

Ibn Majah

        A black dog is a Satan; a black dog or a donkey or a woman cancels a                 prayer…                2.952

        (கருப்பு நாய் ஒரு சைத்தானாக இருக்கிறது. ஒரு கருப்பு நாய் அல்லது   ஒரு       கழுதை அல்லது ஒரு பெண்ணால் தொழுகையை தடுக்க   முடியும்)

        Beat your wives if they commit sinful acts…3.185

        (உங்கள் மனைவியர்களைஅடிக்கலாம் அவர்கள் பாவமானசெயலை        செய்திருந்தால்)

        A husband is worth worshipping by his wives…3.1852

        A woman is a property; a righteous woman is the best property…3.1855

        பெண் ஒரு உடைமைப் பொருளாக இருக்கிறாள். நல்ல பெண்     மிகச்சிறந்த         உடைமையாவாள்.

        If a woman contracts her own marriage, she is an adulteress…3.1882

        தனது திருமண ஒப்பந்தத்தை ஒரு பெண் தானே முடிவுசெய்தால், அவள்               விபச்சாரியே

(முஹம்மது நபியின் முதல் மனைவி கதீஜா, முஹம்மது நபியுடனான தனது திருமணத்தை தானே முடிவு செய்து கொண்டார் அப்படியானால் அவரும் ஒரு விபச்சாரியா?)

        You can marry a woman with just a pair of sandals…3.1888

        Muhammad’s final sermon is:—beat women…4.3074

        Raise three daughters, miss hell…5.3669      

        Raise two daughters, enter paradise…5.3670

        A naked woman tears down the curtain of Allah…5.3750

        Women are extremely harmful for men…5.3998

        ஆண்களுக்கு மிக ஆபத்தானவர்கள் பெண்களே

        Fear women…5.4000

        பெண்களை அஞ்சுங்கள்

        Women are stupid…5.4003

        பெண்கள் முட்டாள்களே

 

Imam Ghazali

“(Prophet said – if husband would be covered with pus from head to toe, and       wife would lick it, even then wife’s gratitude to husband wouldn’t be fulfilled”.

Your sexual intercourse with your wife is an act of charity. If you throw your      semen in lawful things (inside a vagina), you will get rewards. (p.1.236)

Muhammad said: A prison in the corner of a house is better than a        childless woman. (p.2.24)

மலடியை விட  வீட்டின் மூலையில் சிறையிருப்பது மேல்

An ugly woman with children is better than a beautiful woman without                 children (p.2.24)

அழகற்ற பெண் , அழகான மலடியைவிட மேலானவள்

If you see a woman in front, she is a devil. After seeing such a woman, hurry to your         wife for immediate sex because your wife also becomes a devil if you do  not do (immediate sex). (p.2.26)

Devil runs through your vein like the circulation of blood; so do not go to a woman            without the presence of her husband. Only Muhammad had been saved from the                machinations of devils.(p.2.26)

      A wife’s duty is to do household chores and to satisfy her husband’s sexual         appetite. (p.2.27)

வீட்டு வேலைகளைச் செய்வதும், கணவணின் உடல்ப்பசியைத் தீர்ப்பதுமே ஒரு மனைவியின் கடமை

The best woman is she who is beautiful and whose dower is little.(p.2.31)

Miserliness, pride and cowardice are bad for men but good for women.(p.2.31)

கஞ்சத்தனமும், தற்பெருமையும், கோழைத்தனமும் ஆண்குக்கு அழகல்ல             ஆனால் இவை  பெண்களுக்கு சிறந்ததாகும்

When marrying a girl, look for her beauty, as this will save you from      fornication (p.2.31)

அழகான பெண்களை திருணம் செய்வதால், அவள் உங்களை    கள்ளத்தொடர்பிலிருந்து பாதுகாப்பாள்

If it be known that a woman is barren, do not marry her marry lovely and            child bearing women.(p.2.32)

A good woman is one who is married early at her age, who gives birth to a child without delay and who demands a small dower.(p.2.32)

Choose a woman for your semen as a vein is like an arrow (p.2.32)

 

மேற்கண்ட விளக்கங்கள், கேள்விக்கான பதிலை தருகிறது. பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதே இஸ்லாமின் முடிவு. முஹம்மது நபி  ஏன் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அல் தபரி  யில் இருந்து ஹதீஸைக் காண்போம்:

 

… Layla bt. al-Khatim b. ‘Adi b. ‘Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, “I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me.” He replied, “I accept.” She went back to her people and said that the Messenger of God had married her. They said, “What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him.” She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139)

(லைலா பின்த காதிம் என்ற பெண்மணி நபியவர்களை சந்தித்து, அவர் கூறினார், …என் பெயர் லைலா பின்த காதிம். திருமணத்தின் மூலம் என்னை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் என்று கூறினாள். எனவே என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி சரி என்றார். தன்னுடைய ஆட்களிடம் திரும்பிச் சென்ற அப்பெண் நபியுடன் தனக்கு நடந்த திருமணத்தை பற்றி கூறினாள். அவர்கள் (அப்பெணின் ஆட்கள்) என்ன மோசமான காரியத்தை செய்திருக்கிறாய்! நீ ஒரு தன்மானம் கொண்டபெண், ஆனால் நபி ஒரு பெண்பித்தர். அவரிடம் தலாக் பெற்றிடு என்றனர். நபியிடம் திரும்பிச்சென்ற அப்பெண்,  தன்னை தலாக் செய்துவிட கோரினார், நபி அதற்கு உடன்பட்டார். )

 

மணப்பெண்ணின் பொறுப்புதாரியிடம் சம்மதம் பெறாமலே இத்திருமணம் நிகழ்ந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முஹம்மது நபி   அவர்களின் மீது சுமத்தப்படும் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஹதீஸ்களிலிருந்து கிடைக்கும் ஆதாரம்.

 

ஒரு பெண்களைக் கண்டு அலைபாய்ந்த முஹம்மது நபி அவர்களின்  நிலையைப் பற்றிய ஹதீஸ் இது.

 

Sahih Muslim Book 008, Number 3240:

Jabir reported that Allah’s Messenger (may peace be upon him) saw a woman, and so he came to his wife, Zainab, as she was tanning a leather and had sexual intercourse with her. He then went to his Companions and told them: The woman advances and retires in the shape of a devil, so when one of you sees a woman, he should come to his wife, for that will repel what he feels in his heart.

(ஒரு பெண்ணைக் கண்டு கிளர்ச்சியடைந்த நபி, விரைவாக தன் மனைவியிடம் வந்தார். தோல் விரிப்பை உலர்த்திக் கொண்டிருந்த மனைவி ஜைனப்புடன் கலவியில் ஈடுபடுகிறார். பிறகு தன் தோழர்களிடம் சென்று, ஒரு பெண்ணைக் கண்டு ஒரு உங்களது மனம் கிள்ச்சியடையும் போது, அவர் “மனதிலுள்ளதை” தணிக்க, அவர் தன் மனைவியிடம் விரைவாக வரவேண்டும் என்று கூறினார்)

 

பெண்களைக் கண்டு கிளர்ச்சியடைந்து மனைவிகளை  தேடி ஓடியதோடு நிற்கவில்லை. தன்னுடைய அற்பத் தேவைகளுக்காக அந்த பெண்களையே அணுகிய நிகழ்ச்சி இது.

 

புகாரி ஹதீஸ் 52551

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி  (ரலி) அவர்கள் கூறியதாவது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்து பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அப்பெண்(ணின் பெயர்) உமைம பின்த் நுஅமான பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அந்த பெண், “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் “உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்)அவரை நோக்கி “கண்ணியான (இறவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரி இருக்கிறாய்” என்று சொல்லி விட்டுஅங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் மேலும் அபூஉசைதே இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து , அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே தேவைக்கும் அதிகமான மனைவிகள் இருக்கும் பொழுது மீண்டும் ஏன் பெண்களைத் தேடி ஓடவேண்டும்? அழகிய பெண்களைக் கண்டால் வேலையைக் காட்ட வேண்டுமா? அந்த பெண் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறியதால் முஹம்மது நபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் “கதை” கந்தலாக போயிருக்கும். தெளிந்த மனநிலை கொண்ட மனிதனின் செயலா இது?

                 “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்ற அப்பெண்ணின் துடுக்குத்தனமான பதிலிலிருந்தும், அவளுடன் அவளைப் பராமரிக்கும் செவிலித் தாயும் உடனிருப்பதைக் கொண்டும் அவள் வயதை நாம் யூகிக்க முடியும். முஹம்மது நபியைப் பற்றி தெரிந்தும் வயது முதிர்ந்த பெண்ணால் இவ்வாறு தைரியமாக பேச முடியாது. அப்படியானால் அவள் வயது குறைந்த சிறுமியாகவே இருக்க முடியும்.  

                இன்றுவரை, மார்க அறிஞர்கள் ஆயிரம்  விளக்கங்கள், கூறினாலும் முஹம்மது நபி  அவர்களுடைய விஷயத்தில் எதுவும் எடுபடவில்லை. மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரண்படுவதால் புதிது புதிதாக பல கேள்விகளையே அவைகள் உருவாக்குகின்றன.

                ஷஃபியா, ரைஹானா போன்றவர்கள் தங்களது கணவர்களைக் கொலை செய்த முஹம்மது நபியுடன்  மிக மிழ்கச்சியாகவே தம்பத்திய வாழ்கை நடத்தினர் என்ற வாதமும், ஒரே இரவில் பல மனைவிகளிடமும் அடிமைப் பெண்களிடமும் தம்பத்திய உறவு கொண்டு தங்களிடமும் வரும் முஹம்மது நபியின் செயல்களை அவரது மற்ற மனைவியர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் வாதமும் அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லது சல்மான் ருஸ்டி கூறுவது சரியாக இருக்க வேண்டும்.

                வாழ்க்கைத் துணையில்லாததால் செய்யப்படும் மறுமணங்களைப் பற்றி நான் விவாதிக்கவில்லை என்பதை நினைவில் வைக்கவும். ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வதை முதிர்ச்சியடையாத வாதங்களால் நியாயப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்.

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

 

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

18 அக்

ஓட்டுக்கட்சித் தலைவர்களை தெய்வமாகப் பார்க்கும் பக்த மனப்பான்மைக்கும், அதே தலைவர்களை தமது வியாபார நலன்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனப்பான்மைக்கும் இடையேயான கள்ளக்காதலின் விகாரமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள். இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற காசில் தூக்கியெறியப்படும் எலும்புத் துண்டுகள் என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவையே பன்னாட்டுக் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வகைசெய்யும் அட்சய பாத்திரங்களாகவும் விளங்குகிறது.

இந்தவகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியுடன் போட்டியில் முந்துவதற்கு, ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்களில் முக்கியமானது மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் (மடிக்கணினி) வழங்கும் திட்டம்.

கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டு 9,12,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 70 லட்சம் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கணினிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் எல்காட் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக 9,12,000 மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் ஜூன் 4, 2011 அன்று வெளியிட்ட டெண்டரின்படி – லினக்சு (LINUX) மற்றும் விண்டோசு (Windows Starter Edition) இயங்குதளங்கள், விண்டோசுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் ஆண்டிவைரஸ் மென்பொருள் ஒரு ஆண்டு உரிமத்துடன், 320 GB ஹார்ட் டிரைவ், 1.3 மெகாபிக்சல் ஒளிபடக் கருவி (Webcam), Wi-Fi வலையிணைப்பு வசதி, 8X டிவிடி எழுதி (DVD Writer) போன்ற வசதிகளுடன் கணினி வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கணினிக்கு 15,000 ரூபாய் வரை விலை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இருப்பதால் செலவு 10,000 ரூபாய் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது வெளிச் சந்தையில் சுமார் 2000 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. இதனோடு சேர்த்து, லினக்ஸ் இயங்குதளத்தை இரட்டைத் துவக்க முறையில் (Dual boot) அளிப்பதால், கணினி பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் உள்ளடக்குவதாக இருக்கும். மேலும், அலுவலகத் தேவைக்கான மென்பொருட்களையோ கல்விக்கான மென்பொருட்களையோ தனியே காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், எல்காட் நிறுவனம் தனது ஜூன் 4-ம் தேதியிட்ட டெண்டரில் திருத்தங்கள் செய்து ஆகஸ்டு 20-ம் தேதி  மறுடெண்டர் ஒன்றை வெளியிட்டது. மாற்றியமைக்கப்பட்ட டெண்டரில் லினக்ஸ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மைக்ரோசாப்டு விண்டோஸ் (Full Edition) மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டார்ட்டர் எடிஷனை விட சுமார் 5000 ரூபாய் விலை கூடுதலானது. விண்டோஸ் இயங்குதளத்தின் அதிக விலைக்கு ஈடு கொடுக்க முதல் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான கருவிகள் சிலவற்றை இரண்டாவது டெண்டரில் எல்காட் நீக்கிக் கொண்டது.  இவ்வாறு நீக்கப்பட்டவை – வெப்கேம் மற்றும் Wi-Fi வசதி, கூடவே 320 GB ஹார்ட் டிரைவ் 160 GB ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.

“விண்டோஸ் தான் பயன்படுத்த எளிதானது. லினக்ஸ் கற்றுக்கொள்வது கடினம்” என்று விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்திப் பழக்கமாகி விட்டவர்களுக்குத் தோன்றலாம். முதன்முதலில் கணினி பயன்படுத்த போகும் மாணவர்களுக்கு இவை இரண்டையுமே கற்பதற்கு சம அளவிளான உழைப்பும் முயற்சியுமே தேவை. அது மட்டுமல்லாமல், லினக்ஸ் போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்களை பள்ளிகளிலும் அரசு அலுவலங்களிலும் எந்தச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முன்மாதிரி ஏற்கனவே சில இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளவிலும் சில நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

2007-ஆம் ஆண்டு கேரள அரசு, எதிர்கால கணினித் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் தனது தகவல் தொடர்பு கொள்கையில் ‘அரசுத் துறைகளில் சுதந்திர கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவித்தது. கணினி அறிவை மக்களிடையே பரப்பவும், மென்பொருள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் வழிகாட்டலாக அந்தக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் எல்காட் நிறுவனம், 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.டி உமாசங்கரின் வழிகாட்டலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பஞ்சாயத்துகளிலும், பள்ளிகளிலும் கட்டற்ற சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்து மைக்ரோசாப்டின் ஆதிக்கத்தை உறுதியாக வெளியேற்றியது. 30,000 அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் லினக்சில் பயிற்சி பெற்றனர். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 400 கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்துகிறது.

லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை


மேற்சொன்ன “முன்மாதிரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில் லினக்சு மட்டும்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், வைரஸ் தொல்லை இல்லாத பயன்பாட்டுச் சூழலையும் ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்” என்று கணினித் துறைசார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wi-Fi,  வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும். மட்டுமல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் வைரஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மடிக்கணினிகளை வாங்கும் ஏழை மாணவர்கள் மேல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் வாங்க வேண்டிய சுமையும், தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்ஸ்களை செய்ய வேண்டிய சுமையும் விழுகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தின் தன்மையின் படியே, தொடர்ந்த பயன்பாட்டில் அது தனது இயங்கு திறனை இழந்து விடுமென்பது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, மாணவர்களின் கல்வி உதவிக்காக என்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பொருள் தீராத தலைவலியாக மாறப் போவது தான் எதார்த்தமான உண்மை. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் விண்டோஸைக் கட்டிக் கொண்டு மாரடிக்கப்போகிறார்கள். இதில் பழுது பார்க்கும் செலவும் ஆண்டி வைரஸ் மென்பொருட்களின் லைசென்ஸுகளை புதுப்பிக்கும் செலவும் வேறு மாணவர்களின் தலையில் இறங்கப் போகிறது.

ஈழத்தாயின் மனதையே மாற்றி விடுமளவிற்கு ஜூன் 4க்கும் ஆகஸ்டு 20க்கும் இடையில் என்ன தான் நடந்திருக்கும்?  அதைச் சொல்வதற்கு முன் மைக்ரோசாப்டு விண்டோஸ் இயங்கு தளத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது, லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள்தான் பரவலான மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழி என்று ஏன் சொல்கிறோம் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ணினித் துறையில் மென்பொருட்களை வணிக முறையில் கொள்ளை லாபம் வைத்து விற்பதற்கு  மைக்ரோசாப்டு முதலான முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கண்டுபிடித்த உத்திதான் closed source எனப்படும், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருள் உரிம முறை. மென்பொருள் விற்பவர்கள் பைனரியை மட்டும் வாங்குபவருக்கு கொடுத்து விட்டு, மூலநிரல் வடிவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதன் மூலம் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ச்சியாக பணம் கறக்கும் உத்தியை வளர்த்தெடுத்தனர். இதன் மூலம் கணினித் தொழிலில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்டன.

1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.

இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.

இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.

ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம்  அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.

1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில்  மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.

இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு  தளமாகவும் கிடைக்கிறது.

டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.

கணினித் துறையைப் பொறுத்த வரை கணினி இயங்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிறுவனம் மற்ற எல்லா மென்பொருட்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெறுகிறது. உதாரணமாக, விண்டோசு இயங்குதளம் பயனர் கணினிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுவதால், அதில் பயன்படுத்தப்படும் அலுவலக மென்பொருட்கள், தகவல் பகிர்வு மென்பொருட்கள், நிரல் உருவாக்க கருவிகள் சந்தைகளிலும் மைக்ரோசாப்டு தனது ஏகபோக ஆதிக்கத்தை பரப்ப முடிகிறது.

இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கணினி நிறுவனங்களை போட்டி இயங்குதளங்கள் நிறுவி கணினிகளை விற்கக் கூடாது என்று மிரட்டுவது (சொன்னதைக் கேட்கா விட்டால், விண்டோசு உரிமத் தொகையை 4 மடங்காக ஏற்றி விடுவேன்!), அரசாங்கங்கள் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த முயற்சிக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணையுடன் அந்த அரசுகளின் மீது அழுத்தம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்ற எதுவும் கைகொடுக்காவிட்டால், இலவசமாகவே விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து விடுவது. இயங்குதளத்தை இலவசமாகக் கொடுப்பதன் மூலம், பிற பயன்பாட்டு மென்பொருட்களில் கொள்ளை லாபம் அடித்துக் கொள்வது என்று சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள அயராது பாடுபடுகிறது மைக்ரோசாப்டு.

அமெரிக்க அரசு வியட்நாம் அரசை 3 லட்சம் விண்டோசு உரிமங்கள் வாங்க கட்டாயப்படுத்தியதையும், துனீசியா நாட்டில் அந்நாட்டு அதிபரின் மனைவி நடத்தும் சமூக சேவை நிறுவனத்துக்கு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி அளித்ததன் (விண்டோசு உரிமங்கள் அளித்ததன்) மூலம் அரசுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மைக்ரோசாப்டு மாற்றிக் கொண்டதையும் கடந்த ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தின.

இந்தியாவைப் பொறுத்தளவில் மைக்ரோசாப்ட் அத்தனை சிரமப் படத் தேவையே இல்லை. இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் அமெரிக்கா கண்ணைக் காட்டினால் கடலில் கூட பாய்ந்து விடத் தயாராக இருக்கும் போது அவர்களுக்குக் கவலையென்ன. கடந்த ஜூலை மாதம் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவிருக்கிறதல்லவா? அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதிய ஜூ.வி ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு பத்திரிகைகள் என்னவோ பக்கத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போல, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லிப்ட் ஏறிப் போய் அம்மாவைப் பார்த்தார்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா சொன்னதை கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டு போனார்கள்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

சீமான் போன்ற புதிய கோமாளிகள் முதல் பழம் பெருச்சாளிகளான தமிழனவாதக் குழுக்கள் வரை ‘ஈழம் காத்த தாயே…’ என்று ஆரம்பித்து விதவிதமான ‘அம்மா’ புகழ்பாடி ஊரெல்லாம் சுவரொட்டி அடித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.

அந்தச் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னதை ஜெயலலிதா கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார் என்பதுதான் நடந்ததுள்ளது. இதைத் தான் இந்த மடிக்கணினி டெண்டர் மாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன.   இதன் மூலம் 5 ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமானம் 3000 கோடி ரூபாய் மைக்ரோசாப்டுக்கு டீச்செலவுக்குச் சரியாகப் போகும் சிறுதொகையாக இருக்கலாம், ஆனால், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருளில் பயிற்றுவிக்கப்படும் தமிழ்நாட்டின் மாணவர்களும் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு சமூகமும் எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கு கப்பமாக கட்டப் போவது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களான சுமையாக இருக்கப் போகிறது.

இது ஒருபக்கமிருக்க, ஒரு நாட்டு அரசின் டெண்டரைக் கூட தலையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருப்பதும், இறையாண்மை மாநில உரிமையெல்லாம் கிழிந்த காகிதமாக பறக்கவிடப்படுவதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘புரட்சித் தலைவி’  அசைக்க முடியாத இரும்புப் பெண்மணி என  தினமலர்-இந்து-தினமணி-துக்ளக்குகள் கட்டி வந்த கதையும் அம்பலமாகியிருக்கின்றது

கவர்ச்சித் திட்டங்கள் ஊரை ஏமாற்றும் எத்து வேலைகள் தானென்றும், இவையெல்லாம் மக்களின் தாலியறுத்த காசில் எறியப்படும் எலும்புத்துண்டுகளென்றும் நாம் சொல்லி வந்தோம். கருணாநிதி பத்தடி பாய்ந்தால் அம்மா பதினோரடியாவது பாய வேண்டுமல்லவா? எனவே இதிலும் அம்மா ஒருபடி மேலே செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அமெரிக்காவிலிருந்து கழுதை விட்டைகளை இறக்குமதி செய்து மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார்.

_________________________________________________________

குமார்
தகவல்மூலம் – http://www.tehelka.com/story_main50.asp?filename=Ws101011MICROSOFT.asp

முதல் பதிவு: வினவு

விரிவடைகிறது வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு

17 அக்

தொழில் அதிபர்களின் பேராசையை கண்டித்து அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. நான்கு கண்டங்களுக்கும் போராட்டங்கள் பரவிவருகின்றன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு

தொழிற்சாலை அதிபர்கள் பேராசைக்காரர்களாக உள்ளனர், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதார நெருக்கடி போன்ற பல காரணங்களை கூறி ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஒருமாதத்துக்கும் குறைவான இந்தக் கால அளவில், வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்பு இயக்கம் நன்கு வலுவடைந்து, அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. வாஷிங்டன் ஆக்ரமிப்பு இயக்கம், லாஸ் ஏஞ்சலீஸ் ஆக்ரமிப்பு இயக்கம் என்ற நகர்சார் பெயர்களில் கிளைகளாகப் பரவும் ‘ வால்ஸ்ட்ரீட்’ ஆக்ரமிப்பு’ (Occupy Wall Street) இயக்கம் மிக அமைதியான முறையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை நோக்கி போராட்டக்குழுவினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணியாக சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மான்ஹட்டன் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஐரோப்பா, ஆசியாவில் பரவுகிறது

இந்த போராட்டம் இப்போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகள் உள்பட 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த 950 முக்கிய நகரங்களில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் போராட்டம்

லண்டனில் செயின்ட்பால் கத்தீட்ரல் அருகில் நூற்றுக்கும் அதிகமானோர் டென்ட் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோமில் இளைஞர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுத்ததால் அங்கும் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கும்பலை கலைத்தனர்.

செப்டம்பர் 17 தொடக்கம்

இப்போராட்டத்திற்கான முதல் அழைப்பு, கனடாவில் இருந்து வெளிவரும், “ஆட்பஸ்டர்ஸ்’ இதழில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதலில் வெளிவந்தது. அந்த இதழில், எகிப்திய போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, லட்சக்கணக்கானோர் வால் ஸ்டிரீட்டில் திரள வேண்டும் என்று, பிப்ரவரி 2ம் தேதி, தலையங்கம் அறைகூவல் விடுத்தது.

தொடர்ந்து, ஜூலை 13ம் தேதி, இந்தப் போராட்டத்திற்காக,”ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ என்ற “ட்விட்டர்’ கணக்கை, “ஆட்பஸ்டர்ஸ்’ துவங்கியது. இதையடுத்துத் தான், செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு வால் ஸ்டிரீட்டில், புகழ்பெற்ற பங்குச் சந்தையின் அடையாளமான காளைச் சிற்பத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்’ முழக்கம், “நாங்கள் 99 சதவீதம்” என்பதாகும். மீதமுள்ள ஒரு சதவீதம் தான், அரசியல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பது இதன் உட்பொருள்.

கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்ததைப் போல, நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டுள்ள மக்கள், தங்கள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கும், பூங்காவின் தூய்மைக்கும், தாங்களே பல குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றனர்.

சிக்கலில் நாடுகள்

ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், அகிம்சை வழியிலேயே திகழ வேண்டும் என, “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு’ இயக்கத்தின் இணையதளத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை உலகளவில் ஆதரவைப் பெறும் எனவும், இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மையங்கொண்டிருந்தாலும், இந்த கிளர்ச்சிப் புயலானது ஐரோப்பாவின் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று பரவி, அங்கும் போராட்டங்கள் நடந்துள்ளன. இதனால் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன.

எதியூரப்பா கைதும் அத்வானி யாத்திரையும்

15 அக்

பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் ‘டிராமாவுக்கு’ பின் கைது செய்யப்பட்டார்.

இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் எதியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.

எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எதியூரப்பா அந்த வீட்டில் இல்லை.

இதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எதியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.

இதனால் அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ் குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எதியூரப்பா அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை கைதாகாமல் இருக்கவும் எதியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் எதியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக இன்றைய விசாரணையின் போது எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் முதுகு வலி காரணமாக ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், முதுகு வலியை வைத்துக் கொண்டு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எப்படி ஈடுபட்டார் என எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

எதியூரப்பா இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால், அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று எதியூரப்பாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீடுகளுக்கு வந்தபோது, ஒரு அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கூட அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அசோக் மற்றும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னருடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை நடத்தினார்.

*******************************************************

காங்கிரசுக்கும் ஊழலுக்கும் இருக்கும் காதலை தனியாக கூற வேண்டியதில்லை. ஊழலுக்கு எதிராக அத்வானி யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார், அதேநேரம் ஊழலுக்காக எடியூரப்பா கைதாகியிருக்கிறார். இன்னும் என்ன வேண்டும் ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒழிப்பு யோக்கியதையை அறிந்து கொள்ள. ஊழல் ஓட்டுப் பொறுக்கிகளின் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, ஒரு தேர்தலில் தோற்கச் செய்தால் திருந்திவிடுவார்கள் என்று இன்று யாரும் நம்பவில்லை. அரசின் கொள்கையே ஊழலாக இருக்கும்போது ஆளை மாற்றினால் வேலைக்காகுமா? அமைப்பையே மாற்ற வேண்டுமல்லவா? அதை தேர்தல் புறக்கணிப்பிலிருந்து தொடங்குவோம்.