தொகுப்பு | நூல்/இதழ் விமர்சனம் RSS feed for this section

மின்வெட்டு, மின்கட்டண உயர்வு: காரணமும் தீர்வும்

4 ஜூலை

நூல் அறிமுகம்

 

 

மின் வாரியத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற மின் பொறியாளர் சா.காந்திஎழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண் உயர்வும் ,காரணமும் தீர்வும்” என்ற் புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில்,மின் கட்டணம் வேகமாக உயர்ந்துள்ள சூழலில், தமிழக மின் வாரியத்தின் உள்ளே நடக்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் நடக்கும் குளறுபடிகளின் பிண்ணனியில் இப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற பொருளாதார தத்துவங்கள் 1990 களின் பின் பகுதியில் நம் நாட்டில் கோளோச்ச துவங்கிய பின்பு, நம்து எல்லா சட்டங்களும் மக்கள் நலன் என்ற பாதையிலிருந்து மெல்ல விலகி தனியார் லாபம் என்ற கணக்குக்கு மாறி விட்டது.(டங்கல் திட்டம் காவல் துறை, ராணுவம் தவிர எல்லா துறைகளையும் அரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனக்கூறியது)
கடந்த 2001 ஆண்டு வரை ரூ 387.67 கோடி லாபம் பார்த்த தமிழக மின்சாரவாரியம் அதற்கு அடுத்த ஆண்டே ரூ. 110.13 கோடி நட்டத்தை சந்தித்தது. 

இந்த கால கட்டத்தில்தான் தனியார் முதலாளிகள் மின்சாரம் உற்பத்தி செய்ய கால் ஊன்றுகின்றனர். அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவிகளை நிறுத்துகிறது.2003 ஆம் ஆண்டுநம் நாட்டில் புதிய மின்சார சட்டம் வருகிறது. இது மாநில அரசின் கையிலிருந்த மின் துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டிப்பாட்டுக்கு மாற்றுகிறது.ஒய்வு பெற்ற அதிகாரிகளை நீதிபதிகளை போல செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்தனியார் தங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குகூடுதல் தொகையை மின்வரியத்திடமிருந்து பெறமுயன்று வெற்றி பெற்றனர்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கங்கள் செலவு செய்த மூலதனத்தொகை கூட மின் வாரியம் தனியாருக்கு தர உத்திரவு இடப்பட்டது.மின் வாரியத்தின் வருவாய் தனியார் மின் முதலாளிகளை தாலாட்டவே பற்றாக்குறையாயிருந்தது. புதிய மின் நிலையங்கள் இல்லாத நிலையில் மின் பற்றக்குறை அதிகரித்தது. தனியார் முதலாளிகள் ஒரு யுனிட்டுக்கு ரூ 2 மின்கட்டணத்தை ரூ7 வரை விலை வைத்தனர். சில நெருக்கடியான் சுழலில் ரூ17.78 காசுகள் வரை நீண்டது. ஜி.எம்.ஆர் ,பி.பி.என். மதுரை பவர் , சாம்பல்பட்டி, நெய்வெலி எஸ்.டி.சி.எம்.எஸ் ஆகிய தனியார் பன்னாட்டு கம்பெனிகள் பெருத்த லாபம் அடைந்தன. மின்சார ஒழுங்கு முறை ஆணையமோ வருடம் தோரும் மின்ட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்திரவும் இட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு ந்வீன தாராள மயக்கொள்கையின் விழைவு.மின்சாரம் மக்கள்மயமாக்களுக்கு பதிலாக ஒரு சில தனியாருக்கு சொந்தமானதாக மாறிவருகிறது.மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்துறையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2003 மிசார சட்டத்தை நொருக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை தகுந்த புள்ளிவிபர மற்றும் பிற சான்றுகள் மூலம் சுட்டிகாட்டியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தினை உருவாக்க பெரிதும் உதவியதாக டாக்டர் ஆர். ரமேஸ் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இப் புத்தகம் மிகுந்த கவனம் பெறவேண்டியது அவசியம். அரசியல் இயக்கங்கள் இது குறித்து விவதத்தை துவங்க வேண்டும்

வெளியீடு: ஆழி பப்ளிகேசன்,மே 17 இயக்கம்,பெரியார் திராவிடர் கழகம்.
1A திலகர் தெரு.பாலாஜி நகர்,துண்டல்,அய்யப்பந்தாங்கல்,சென்னை 600 077 போன் 9940147473

– ச.பாலமுருகன், முகநூல் பக்கங்களிலிருந்து….

 

நன்றி: தோழர் சாக்ரடீஸ்

 

35 வது சென்னை புத்தகக் காட்சி

5 ஜன

புத்தகங்கள், மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மனிதாபிமானத்திற்கும் வழிகாட்டும் அதிசயிக்கத் தக்க மனித குலத்தின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு – தோழர் மாக்சிம் கார்க்கி

வாருங்கள் தோழர்களே! நண்பர்களே!!

நூற்றுக்கணக்கான அரங்குகள் மத்தியில்

உழைக்கும் வர்க்கத்தின் பெருமிதமாய்…..

புரட்சி அரசியலின் நூற்களமாய்….

கீழைக்காற்று

அரங்கு எண்கள்: 404, 405

கீழைக்காற்று அரங்கு எங்கிருக்கிறது என்பதைக் காட்டும் வரைபடம் இங்கே

நாள்: 2012 சனவரி 5 முதல் 17 வரை

இடம்: ஜார்ஜ் பள்ளி மைதானம் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 30

நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை

விடுமுறை நாட்களில்: காலை 11 மணி முதல் 9 மணி வரை.

 

சென்னை புத்தக காட்சியில் வாங்க வேண்டிய நூலக்ளின் பட்டியல்

 

இடதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பட்டியல், இறுதியானவை அல்ல. ஏனெனில், பல பதிப்பகங்கள் இன்னமும் விலைப்பட்டியலை கொண்டு வரவில்லை. சிலர் அச்சுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார்கள். வேறு சிலர், விலைப்பட்டியலை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றார்கள். ‘நீங்களாக பார்த்து விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்…’ என்பதே பல பதிப்பகங்களின் பதிலாக இருந்தது.

இந்த நடைமுறை சிக்கலுடனேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதால், விடுப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, பாதுகாக்க வேண்டிய சில நூல்களை கொண்டு வந்த பதிப்பகங்கள், பொருளாதாரம் அல்லது வேறு காரணங்களால் இந்தக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் போடவில்லை. பதிலாக, தாங்கள் வெளியிட்ட நூல்களை பிற பதிப்பகங்களில் வைத்து விற்க முடிவு செய்திருக்கிறார்கள். முடிந்தவரை அப்படி விற்கப்படும் நூல்களின் விவரங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை படிக்கும்படி தோழர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். விடுப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை மறுமொழியில் தெரியப்படுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கண்காட்சி நடக்கும் இடம், மொத்தம் 10 சாலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையின் தொடக்கத்திலும், முடிவிலும் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பட்டியலும் சாலைகளின் எண்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதேபோல் அரசியல், வரலாறு, தத்துவம், கலை இலக்கியங்கள், அறிவியல்… என்றெல்லாம் பிரித்து வகைப்படுத்தாமல், பதிப்பகம் அல்லது விற்பனையகம் சார்ந்தே நூல்களின் விவரங்களை தந்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் 90%, ‘கீழைக்காற்று‘ அரங்கில் கிடைக்கும்.

இனி –

———————-

சாலை எண்: 1

அலைகள் (எண்: 22)

1. சியாங் சிங்: ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம் – ஜாஃபியா ராயன் – ரூ. 70/- (இந்த சியாங் சிங், தோழர் மாவோவின் துணைவியார்)

2. தத்துவத்தின் வறுமை – காரல் மார்க்ஸ் – ரூ. 135/-

3. மதம் பற்றி – லெனின் – ரூ. 70/-

4. சோசலிசமும் போரும் – லெனின் – ரூ. 50/-

5. மகாத்மா புலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 100/-

6. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – தமிழில் ஆ.சீனிவாசன் – ரூ. 750/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது. கடைசி இரு அத்தியாயங்கள் மட்டும் குருசேவ் கால திரிபுவாத கருத்துக்களை கொண்டவை. எந்தெந்த காலகட்டத்தில் மார்க்ஸ், என்னென்ன நூல்களை, எந்தச் சூழலில் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்)

7. இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு – சுகுமால்சென் (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 450/-

8. கறுப்பு அடிமைகளின் கதை (UNCLE TOM’S CABIN) – ஹேரியட்பீச்சர் ஸ்டவ் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 280/-

9. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 50/-

10. வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் – எம்.ஆர்.அப்பன் (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 230/-

11. இந்திய மக்கள்: மதம் – பழக்க வழக்கங்கள் – நிறுவனங்கள் – அபே.ஜெ.எ.துபுவா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 260/-

12. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் – நா.வானமாமலை – ரூ. 100/-

13. தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் – நா.வானமாமலை – ரூ. 30/-

14. பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பெளத்தமும் – நா.வானமாமலை – ரூ. 35/-

15. இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா.வானமாமலை – ரூ. 25/-

16. மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை – ரூ. 35/-

17. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி – நா.வானமாமலை – ரூ. 40/-

18. வரலாறும் வக்கிரங்களும் – ரொமிலா தாப்பர் (தமிழில் நா.வானமாமலை) – ரூ. 35/-

19. கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா? – ரொமிலா தாப்பர் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

20. ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள் – அசோக்ருத்ரா (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 30/-

21. பெளத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும் – உமா சக்கரவர்த்தி (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

22. அறிவியல், தத்துவம், சமுதாயம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: அ.குமரேசன்) – ரூ. 35/-

23. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்: திருமலை) – ரூ. 35/-

24. உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு (தமிழில்: ரா.கிருஷ்ணையா) – ரூ. 250/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருக்கிறது)

25. இந்தியத் தத்துவ இயல் – ஓர் எளிய அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 150/-

26. மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் – கான்ராட் உட் (தமிழில்: மு.இக்பால் அகமது) – ரூ. 130/-

27. இந்தியாவில் பெண்கள் இயக்கம் 1940 – 1950 – ரேணு சக்கரவர்த்தி (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 50/-

28. பிரெடெரிக் எங்கெல்ஸ் – டாக்டர் ஸ்தெபானாவா (தமிழில்: வ.சண்முகசுந்தரம்) – ரூ. 100/- (எங்கெல்சின் வாழ்க்கை வரலாறு)

29. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: வெ.கோவிந்தசாமி) – 125/-

30. உழைக்கும் மக்களின் முன்னணிப் படை – ஏ.ஷாஜின் (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 30/-

31. தொழிற்சங்கங்களைப் பற்றி காரல் மார்க்ஸ் – ஏ.லாவோவஸ்கி (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) – ரூ. 70/-

32. சீன வானில் சிவப்பு நட்சத்திரம் (RED STAR OVER CHINA) – எட்கர் ஸ்நோ (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 375/-

33. மாயையும் எதார்த்தமும் – டி.டி.கோசாம்பி (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 110/-

34. நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி – ஆ.ரைஸ்வில்லியம்ஸ் (தமிழில்: பூ.சோமசுந்தரம்) – ரூ. 140/-

35. வரலாறு என்றால் என்ன? – ஈ.எச்.கார் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

36. ஆதிசங்கரரின் மக்கள் விரோதக் கருத்துக்கள் – கன்னடம்: பகவான் (தமிழில்: முனைவர் சி.சண்முகம்) – ரூ. 55/-

37. மாவோவின் நெடும்பயணம் (THE LONG MARCH) – DICK WILSON (தமிழில்: நிழல் வண்ணன்) – ரூ. 175/-

38. மார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் – தொகுப்பு: சி.இளங்கோ – ரூ. 40/-

39. சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே.வீரராகவன் (தமிழில்: ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) – ரூ. 150/-

40. இளமையின் கீதம் (சீன நாவல்) (THE SONG OF YOUTH) – YANG MO (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 300/-

41. சூறாவளி (சீன நாவல்) (THE HURRICANE) – CHO LI – P0 (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 200/-

42. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹிண்டன் (தமிழில்: கி.இரமேஷ்) – 100/- (கலாச்சார புரட்சி குறித்த வரலாறு)

43. இராணுவமும் அரசியலும் (ஜாக் வோடிஸ் எழுதிய நூலின் சுருக்கம்) – நா.தர்மராஜன் – ரூ. 50/-

முதல் பாதையின் முடிவில் திராவிடர் கழக பதிப்பகத்தின் கடை உள்ளதுஇங்கு தந்தைபெரியாரின் நூல்களை 

வாங்கலாம்.

———

சாலை எண்: 2

கீழைக்காற்று (எண்: 404 / 405)

1. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… – கணேசன் (அய்யர்) – ரூ. 130/-

2. பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – ஆவணங்கள் தொகுப்பு: சமன்லால் (பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) தமிழில்: எஸ்.சம்பத் – ரூ. 15/-

3. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன் – ரூ. 15/-

4. நக்சல்பாரி புரட்சியின் இடிமுழக்கம் – ரூ. 12/-

5. தெராய் பிராந்திய விவசாயிகள் இயக்கம் பற்றிய அறிக்கை செப்டம்பர், 1968 – தோழர் கனுசன்யால் – ரூ. 15/-

6. மக்களிடையே நமது பணிகள் – கதீப் அன்சாரி – ரூ. 12/-

7. ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மாசேதுங் – ரூ. 50/-

8. கட்சி அமைப்பு பற்றி – ஸ்டாலின், காகனோவிர், டிமிட்ரோவ், மாவோ – ரூ. 50/-

9. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம் – செள என் லாய் – ரூ. 10/-

10. முரண்பாடு பற்றி – மாவோ – ரூ. 40/-

11. கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக் – ரூ. 7/-

12. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன் – ரூ. 40/-

13. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின் – ரூ. 75/-

14. சினிமா: திரை விலகும்போது… – புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா விமர்சனங்கள் – ரூ. 70/-

15. மீண்டும் தொழிலாளி வர்க்கம் (வினவு, புதிய கலாச்சாரம் கட்டுரைகள்) – ரூ. 80/-

16. அருந்ததிராய் – கரண்தபார் விவாதம் – தமிழில்: அனாமதேயன் – ரூ. 10/-

17. விடுதலைப் போரின் வீரமரபு – (புதிய கலாச்சாரம் காலனியாதிக்க எதிர்ப்பு சிறப்பிதழ் கட்டுரைகளின் தொக்கு) ரூ. 65/-

18. ஈராக் வரலாறும் அரசியலும் – கலையரசன் – ரூ. 15/-

19. நினைவின் குட்டை நதி (சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்) – ரூ. 70/-

20. நிஜத்தின் உரைகல்லில் சினிமா (வினவு, புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த திரை விமர்சனங்கள்) – ரூ. 110/-

21. ஆகஸ்டு 15, 1947: அதிகாரமாற்றம்: உண்மையா… சடங்கா? – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 25/-

22. பரமக்குடி துப்பாக்கிச் சூடு செப்.11, 2011, உண்மை அறியும் குழு அறிக்கை – ரூ. 15/-

23. நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் – ரூ.

24. ’பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன் – ரூ.50

25. பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன் – ரூ.40

26. ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன் – ரூ. 50/-

27. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? – ரூ. 25/-

28. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவத்துக்கு சவுக்கடி! (அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும் – ரூ.30/-

29. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை – ரூ. 7/-

30. கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு – புதிய கலாச்சாரம் கட்டுரைகள் ரூ. 25/-

31. இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினிய பார்வை – புதிய ஜனநாயகம்- ரூ. 30/-

32. சட்டக்கல்லூரி கலவரம்: சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்! – வினவு – ரூ. 35/-

33. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு – ரூ. 25/-

34. ஐ.டி.துறை நண்பா… – வினவு – ரூ. 35/-

35. மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு- ரூ. 35/-

36. ஜெயமோகன், சாரு நிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் இலக்கிய மொக்கைகள் – வினவு – ரூ. 25/-

37. எண்டோசல்பானையும் பி.டி.கத்திரிக்காயையும் விரட்டி அடிப்போம்! – ரூ. 10/-

38. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – வினவு -ரூ. 55/-

39. இமாலய சாகசம்: 1962 இந்திய சீனப் போர்: காரணங்களும் விளைவுகளும் – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 30/-

40. இசை: போதை பொழுதுபோக்கு போராட்டம் – புதிய கலாச்சார கட்டுரைகள் – ரூ. 40/-

41. இந்தியாவில் சாதிகள் (பாவை வெளியீடு) – அண்ணல் அம்பேத்கர் – ரூ. 30/-

தோழமை (எண்: 385)

1. மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்னைகளும் – ஸ்டாலின் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 130/-

2. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் – லெனின், க்ளாரா ஜெட்கின் உரையாடல் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 100/-

பொன்னி (எண்: 397)

1. வீரத்தெலங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும் – சுந்தரய்யா (தமிழில்: தியாகு) – ரூ. 400/-

2. சிறைக் கடிதங்கள் (கம்பிகளுக்குள்ளிருந்து இயற்கையை நேசிக்க வைக்கும் கடிதங்கள்) – ரோசா லக்சம்பர்க் – ரூ. 50/-

3. இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு (புரோகித ஆதிக்கத்தில் புதையுண்ட இந்திய வரலாறு) – தர்மகீர்த்தி அடிகள் (தமிழில்: வெ.கொ.பாலகிருஷ்ணன்) – ரூ. 120/-

4. அம்பேசிவம் (கூர்மைப்படுத்தப்பட்ட நாத்திகவாதக் கட்டுரைகள்) – குத்தூசி குருசாமி – ரூ. 50/-

5. வால்மீகி இராமாயணம் (மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்) – குருவிக்கரம்பை வேலு – ரூ. 100/-

6. பூமணியின் 5 நாவல்கள் (பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள்) – ரூ. 300/-

7. அம்பாரம் (பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு) – பூமணி – ரூ. 225/-

—————-

சாலை எண்: 3

அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்

1. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆக்கங்களும் 37 தொகுதிகளாக தமிழில் கிடைக்கிறது. கைவசம் பிரதிகள் இல்லாததால் தொகுதி 8, 11, 22 ஆகிய மூன்றும் விற்பனைக்கு இல்லை. மீதமுள்ள 34 தொகுதிகளையும் ரூ. 1400/-க்கு வாங்கலாம். ஒருவேளை சில தொகுதிகள் பேப்பர் பேக் ஆக இருந்தால், இந்தத் தொகை உயரும்.

காலச்சுவடு (எண்: 11 / 12)

1. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 100/-

2. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய் (தமிழில்:க.பூர்ணச்சந்திரன்) – ரூ. 145/-

3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – ரூ. 100/-

4. மணல்மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

5. கோவில் – நிலம் – சதி – பொ.வேல்சாமி – ரூ. 90/-

6. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி – ரூ. 180/-

7. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் – ரூ. 150/-

8. மந்திரமும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 150/-

9. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

10. தமிழகத்தில் அடிமைமுறை – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 80/-

————

சாலை எண்: 4

விடியல் (எண்: 306 / 307)

1. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 350/-

2. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு – அருந்ததிராய் – ரூ. 30/-

3. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: நிழல்வண்ணன்) – ரூ. 70/-

4. வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன் பஸ்கர் காட்டில் தங்கிய அனுபவம்) – சத்நாம் – ரூ. 130/-

5. இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் – ரூ. 500/-

6. கோபுரத்தை உலுக்கிய காற்று மற்றும் அதிகாலை பெருவெள்ளம் – ஹேன்சூயின் – (இரு நூல்களும் சேர்த்து) ரூ. 1000/-  (எட்கர் ஸ்நோ எழுதிய நூல்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட தோழர் மாவோவின் வாழ்க்கை வரலாறு. அதன் வழியாக சீனாவின் வரலாறு)

7. நீண்ட புரட்சி – எட்கர் ஸ்நோ – ரூ. 175/- (‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலை ஸ்நோ, 1930களின் இறுதியில் எழுதினார். அதன் பிறகு அவர் மாவோவை 1970களில் சந்தித்தபோது எழுதிய நூல் இது)

8. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 80/-

9. மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 100/-

10. முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 75/-

11. சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்:  ) – ரூ. 25/-

(ஜார்ஜ் தாம்சனின் இந்த நான்கு நூல்களையும் வாசித்தால் ஓரளவு மார்க்சியத்தின்அடிப்படைகளை தெரிந்து 

கொள்ளலாம்.)

12. மாஓ சேதுங்: தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் – ரூ. 200/-

13. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (1) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: சிங்கராயர்); இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (2) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில் நிழல்வண்ணன்) – இரு தொகுதிகளும் சேர்த்து ரூ. 600/-

14. தத்துவம்: பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: மு.வசந்தகுமார்) – ரூ. 35/-

15. சீனாவின் வரலாறு – வெ.சாமிநாதசர்மா – ரூ. 150/-

16. ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் – ஆனந்த் டெல்டும்ப்டெ (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 135/-

17. மனிதன் – ஆர்.இராமநாதன் – ரூ. 65/- (62 ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட நூல் இது. மனித குலத்தின் வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட நூல் இது)

18. ஹோசிமின் – யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்) – ரூ. 150/-

19. சீனாவும் சோஷலிசமும்: சந்தை சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும் – மார்ட்டின்ஹார்ட் – லேண்ட்ஸ்பர்க் பால்பர்க்கட் (தமிழில்: க.செங்கோடன்) – ரூ. 100/-

20. 1942 ஆகஸ்ட் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி – ரூ. 100/-

21. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா.முருகவேள்) – ரூ. 150/-

22. உயிரினங்களின் தோற்றம் (சுருக்கப்பட்ட வடிவம்) – சார்லஸ் டார்வின் (தமிழில்: ராஜ்கெளதமன்) – ரூ. 65/-

23. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஸெத்கின் – ரூ. 50/-

24. உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் (தமிழில்: வசந்தகுமார் – நிழல்வண்ணன்) – ரூ. 175/-

அடையாளம் (எண்: 322 / 323)

1. எண்ணெய் அரசியல் – கேர்ரி ரீச் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 170/-

2. காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன் பாசு (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

3. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்ஜினியர் (தமிழில்: ஐ.இசக்கி) – ரூ. 150/-

4. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – ரூ. 425/-

5. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா – ரூ. 120/-

6. பதி பசு பாகிஸ்தான் – எஸ்.வி.ராஜதுரை – 80/-

7. இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை – ரூ. 115/-

பாரதி புத்தகாலயம் (எண்: 18 / 19)

1. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்ப ஆண்டுகள் (1920 – 33) தொகுதி 1 – ரூ. 180/-

2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – குவான் யான்சி (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) – ரூ. 140/-  (Foreign Languages Press, Beijing, China, 1992ல் வெளியிட்ட  MAO ZEDONG MAN, NOT GOD, By Quan Yanchi என்ற நூலின் தமிழாக்கம். மாவோவின் மெய்க்காப்பாளராக பல ஆண்ட்கள் பணிபுரிந்த லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்)

3. ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் – உலக வங்கி – சூசன் ஜார்ஜ் – ரூ. 130/-

4. மார்க்சின் மூலதனம் பற்றி… – எங்கெல்ஸ் – ரூ. 70/-

5. சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம் – என்.எம்.சுந்தரம் (தமிழில்: இலக்குவன்) – ரூ. 60/-

6, நிதி நெருக்கடி ஒரு புரிதல் – அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்) – ரூ. 50/-

———-

சாலை எண்: 6

சிலிக்குயில் (எண்: 277)

பிற பதிப்பகங்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக மனிதன் பதிப்பகம்‘ சார்பில் வெளிவந்த தோழர் கிஷன்ஜி‘, ‘தோழர் ஆசாத்‘ உட்பட மாவோயிஸ்ட்டுகளின் நூல்களை இங்கு வாங்கலாம்.

தவிர, முகம் பதிப்பகம் வெளியிட்ட வரலாற்றில் கிறிஸ்தவம் (புரூனோ பெள்வரும் பழையகிறிஸ்தவமும்பழைய 

கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றிபின் இடைக்கால ஜெர்மனியில்திருச்சபை சீர்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் 

ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) –பிரெடரிக் எங்கெல்ஸ் – நூலும் இங்கு கிடைக்கிறது. இதன் விலை: ரூ. 65/-

———–

சாலை எண்: 8

தமிழ்ப் புத்தகாலயம் (எண்: 209 / 210)

1. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல்ஜி – ரூ. 350/-

2. பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல்ஜி – ரூ. 35/-

3. கலையும் இலக்கியமும் – மாசேதுங் – ரூ. 12/-

4. யுத்தம் வேண்டாம் – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 25/-

5. லெனினுடன் சில நாட்கள் – மாக்ஸிம் கார்க்கி – 24/-

6. அமெரிக்காவிலே… – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 45/-

7. எது நாகரீகம்? – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 30/-

8. தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக் – ரூ. 55/-

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (எண்: 53 / 54)

1. உலகாயதம் பண்டைய இந்தியாவின் ஆரம்பகால பொருள்முதல்வாத சிந்தனைகள் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 500/-

2. மதமும் சமூகமும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிசுபாலன்) – ரூ. 100/-

3. தமிழகத்தின் பொருளாதார வரலாறு – தேவ.பேரின்பன் – ரூ. 55/-

4. என் வாழ்க்கை – கே.என்.பணிக்கர் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 150/-

5. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம் – கார்த்திகேசு சிவதம்பி – ரூ. 130/-

6. மனித சமுதாயம் (வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்த எளிமையான விளக்கம்) – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு) – ரூ. 150/-

7. இந்துத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம்… ஆகிய ராகுல்ஜியின் நூல்கள் ரூ. 50/- முதல் ரூ. 70/-க்குள் தனித்தனியாக கிடைக்கின்றன.

8. மார்க்சிய மெய்ஞானம் – ஜார்ஜ் பொலீட்ஸ்கர் (தமிழில் ஆர்.கே.கண்ணன்) – ரூ. 55/-  இவை தவிர முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட பழைய ரஷ்ய நாவல்களில் பல, இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளன. பல முக்கிய நூல்களை தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள குறை.

———

சாலை எண்: 10

கருப்புப் பிரதிகள் (எண்: 119)

1. காசு ஒரு பிசாசு – கலையரசன் – ரூ. 75/-

2. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – ரூ. 180/-

————

இவை தவிர –

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்கட்சியின் வரலாறு (ரூ. 180/-), நிரஞ்சனா எழுதியநினைவுகள் அழிவதில்லை‘ நாவல் (விலை: ரூ. 60/-) உட்பட சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்கள் அனைத்தும் கீழைக்காற்று‘ மற்றும் பாரதிபுத்தகாலயம்‘ அரங்குகளில் கிடைக்கும்.

அதுபோலவே –

அருணன் எழுதி மதுரையிலுள்ள வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள –

1. தமிழரின்  தத்துவ மரபு (1) – ரூ. 170/-

2. தமிழரின் தத்துவ மரபு (2) – ரூ. 100/-

3. காலந்தோறும் பிராமணியம் (வேதகாலம் முதல் சோழர் காலம் வரை) (1) – ரூ. 150/-

4. காலந்தோறும் பிராமணியம் (சுல்தான்கள் + முகலாயர்கள் காலம் (2 & 3) – ரூ. 350/-

5. காலந்தோறும் பிராமணியம் (கிழக்கிந்திய கம்பெனி காலம்) (4) – ரூ. 150/-

6. காலந்தோறும் பிராமணியம் (பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம்) (5) – ரூ. 350/-

7. காலந்தோறும் பிராமணியம் (நேரு காலம்) (6) – ரூ. 250/-

ஆகிய நூல்களும் கீழைக்காற்று‘ மற்றும் ‘பாரதி புத்தகாலயம்‘ அரங்குகளில் கிடைக்கும்.

முடிவாக,

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியில் வாயிலாக பொதுவான இடதுசாரி அரசியல், பொருளாதாரம், இந்திய, தமிழக வரலாறு, சமூகம், சாதி, மதம் குறித்த ஆரம்ப அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். ஆசான்கள் தவிர்த்த நூல்களில் சில கராறான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒரு அறிமுகம் என்ற வகையில் படிக்கலாம் என்பதால் அதையும் சேர்த்துள்ளோம்.

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள்

5 ஜன

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

 

கண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ!’ எனுமாறு அந்த நூற்குவியலைப் பார்க்கப் பார்க்க விழிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன. ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வெவ்வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.

 

குறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த ‘தாய்’ நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான். நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.

 

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

 

நூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், ”அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க… இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க…” என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாது. அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்துவத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்து விட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்…

 

அன்றைய காலகட்டத்தில் தமிழகமெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ‘சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்’ என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, ‘அனைவருக்குமான’ என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்… என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.

 

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

 

சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.

 

‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்’, ‘நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்’, ‘பூமி எனும் கோள்’, ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது! வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது. அறிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.

 

இன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். ‘போயசு தோட்டமே நல்ல ஆள்’ என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் ‘நிலம் என்னும் நல்லாள்’ நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.

 

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

 

சொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது. ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப் பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.

 

வெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப்பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது. இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.

 

நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் ‘சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.

____________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

முதல் பதிவு: வினவு

நூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்!

1 அக்

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனைக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். மைக்ரோஃபினான்ஸ் என்ற கந்துவட்டியின் தொல்லையால் சென்ற வருடம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆந்திராவில் தங்களை மாய்த்துக்கொண்டனர். மிச்சமிருக்கும் விவசாயிகளும், கிராமப்புறத்தினரும் இந்தியாவின் வடக்கும் தெற்குமாக விசிறியடிக்கபடுகின்றனர். ”இந்தியாவின் முன்னேற்றத்துக்கு” சாட்சியாக முளைக்கும் வானுயர் கட்டிடங்களிலும், பிரமாண்டமான பாலங்களிலும் தங்கள் வாழ்வை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற ஏழைகளும், தொழிலாளர்களும் அரைவயிற்றுக்கே அடிமைகளாக உழைக்க வேண்டியிருக்கிறது.

மக்களின் உரிமைகளை, சொத்துகளை ஏகபோகமாக சுருட்டிக்கொண்டுக் கொண்டு கொழுக்கிறது முதலாளி வர்க்கம். உரிமைகளை இழந்த மக்களோ ஓட்டாண்டிகளாக மாறியதோடு இந்த முதலாளிகளிடமே வேலைக்காக பிச்சையெடுக்கின்றனர். முதலாளிகளின் செல்வத்துக்காக உழைக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். மும்பையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்றமும் இறக்கமுமே நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில், அரசும், அதிகார வர்க்கமும் முதலாளிகளின் கைப்பாவையாக, பன்னாட்டு கம்பெனிகளின் அடியாளாக வேலை செய்துவருகிறது. பொதுத்துறைகளை தனியாருக்கு திறந்துவிட அரசு முழுமூச்சுடன் இயங்கிவருகிறது. தண்ணீர்,மருத்துவம்,கல்வி, இயற்கை வளங்களை அடுத்து மின்சாரத்துறையை கொள்ளையடிக்க தனியாருக்கு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார், தமிழகத்தின் அமைச்சர் ஒருவர்.

எந்த சுதந்திரத்துக்காக நமது மூதாதையர் போராடினார்களோ அந்த பெயரளவிலான சுதந்திரத்தையும் அடகு வைத்துக்கொண்டிருக்கிறது தரகு முதலாளி கும்பலும், அரசும். ஒபாமாவையும், ஹிலாரியையும் வரவேற்று அடிமைசாசனம் எழுதித்தருகிறது

இந்தியா. அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்று அவர்களுக்கு நாட்டை தாரை வார்த்துக்கொடுப்பதே ‘நாட்டுப்பற்றா’க மாறிப்போயிருக்கும்போது அதற்கு உதவும் படியாகவே அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்திப் போராட்டங்கள் பயன்படுகின்றன. உண்மையில் போராட்டம் என்பது எதற்கெதிரானதாக இருக்க வேண்டும்? யாருக்கெதிராக இருக்க வேண்டும்?

சமீபத்தில் வாசித்த ”உன் அடிச்சுவட்டில் நானும்” எனும் நாவல் போராட்டம் என்பதையும், போராளிகளுக்கான அர்த்தத்தையும் சொல்லுவது போலிருந்தது.

இந்த நாவல் வியட்நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் போரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்த வீரதீரமான கம்யூனிஸ்ட் போராளிகளைப் பற்றியது.

அமெரிக்கப்படைகள் பயந்து பின்வாங்கி ஓடிப்போனது என்றால் அது வியட்நாமில்தான். முதலில் அந்த பின்னணியை பார்த்துவிடலாம். பண்டைய வியட்நாமை அரசர் குல சீனாவும், அதன்பிறகு 1800- களில் பிரான்சும் ஆட்சி செய்து வந்தன. 1900-களில் வியட்நாம் சுதந்திரத்துக்காக எழுச்சி கொள்ள துவங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களிடம் பிரான்ஸ் வசமிழந்த நேரத்தில் வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்தது. இந்த ஆக்கிரமிப்புகளால் கொதிப்புடன் இருந்த மக்கள் ஹோ சி மின் கீழ் திரண்டிருந்தனர்.

1945-ல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் கலகலத்துப் போயிருந்தது. தகுந்த சமயம் பார்த்திருந்த ஹோ சி மின், ஹனாய் பிரதேசத்தை தலைமையாகக்கொண்டு வியட்நாமை சுதந்திர நாடாக அறிவித்தார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஹோ சி மின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியட்நாமின் சுதந்திர பிரகடனத்தை மறுத்த பிரான்ஸ் வியட்நாமுக்கு படைகளை அனுப்பியது. நவீன ஆயுதங்களுடன் வந்திறங்கிய பிரெஞ்சு படையுடன் பார்க்கும்போது ஹொ சி மின் படைகள் மரபான கெரில்லா படைகள்தான். ஆனாலும் உறுதியுடன் போரிட்டு பிரெஞ்சு ராணுவதளத்தை தகர்த்தனர், ஹோ சி மின் படையினர். இதில் வடக்கு வியட்நாம் பகுதி கம்யூனிஸ்ட் கட்சி வசமிருந்தது. தென் வியட்நாம் பகுதி பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி, வடக்கு தெற்கு என வியட்நாம் பிரிந்திருப்பதை வெறுத்தது. எல்லைக்கோடுகளை அழித்து மக்களை ஒன்று சேர்த்து ஒருமித்த வியட்நாமை உருவாக்க விரும்பியது. இதற்காக ஹோ சி மின் உலகநாடுகளிடம் உதவி கேட்கிறார்.

ஏற்கெனவே கம்யூனிச நாடுகளான சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவின் மீதான கடுகடுப்பில் இருந்தது அமெரிக்கா. இதில் ஹோ சி மினுக்கு உதவினால் கம்யூனிசம் வளர ஏதுவாகிவிடுமென்று தனது படைகளை பிரான்சுக்கு அளித்து உதவுகிறது. ஆமை புகுந்த வீடு உதவாது என்று சொல்வது போல அமெரிக்கா புகுந்த நாடு விளங்குமா?

மெதுவாக தெற்கு வியட்நாம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தனது சார்பாக ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுகிறது, அமெரிக்கா. ராணுவம் மற்றும் , போலீசின் அடக்குமுறைக்கும் எண்ணற்ற இன்னல்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். குண்டு மழை பொழிய ஆரம்பிக்கிறது. உயிர்கொல்லும் ரசாயனங்கள் வயல்கள் மீது தூவப்படுகிறது.

அரிசி விளையும் நிலங்களும் காடுகளும் அழிக்கப்படுகின்றன. நாபாம் என்று மிகக்கொடிய குண்டுகள் வீசப்பட்டன. கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசு பொதுமக்கள் மீதும் தன் கைவரிசையைக் காட்டியது, அமெரிக்கா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரெஞ்சு படைகளை சமாளிப்பதோடு அமெரிக்க படைகளையும் சமாளித்தாக வேண்டியிருந்தது. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அமெரிக்காவுக்கு அப்படியென்ன வியட்நாம் மீது அக்கறை? வியட்நாமில் கம்யூனிச சமுதாயம் மலர்ந்துவிட கூடாதென்பதே அதன் குறிக்கோள்.

இதற்காக அமெரிக்கா பலியிட்ட படைவீர்களின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் விசாரணையே இல்லாமல் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புத்தபிட்சுகள் தங்களை தாங்களே நெருப்பு இரையாக்கிக்கொண்டனர். 1965-ல் போர் மிகவும் உக்கிரமடைந்தது. அமெரிக்க அதிபர் ஜான்சனுக்குத் துணையாக போரை முன்னின்று நடத்தியவர் ராணுவத்தளபதி மக்நமாரா. வியட்நாம் போரின் முக்கியமான ஆலோசகராகவும், மூளையாகவும் செயல்பட்ட மக்நமாரா வியட்நாமுக்கு பலமுறைகள் சென்று வந்திருக்கிறான்.

மக்நமாராவை கொலை செய்ய திட்டமிட்டிந்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். முதல்முறை தப்பிவிட்டான். இரண்டாம் முறை “காங்லி” எனும் பாலத்தை கடக்கும் போது மயிரிழையில் தப்பிவிட்டாலும் காயங்களடைந்தான். மக்நமாராவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ”நகூயென் வான் டிராயை” கைது செய்கிறது போலீஸ்.

கைது செய்யப்படும்போது ட்ராயுக்கும் அவர் காதலித்த குயெனுக்கும் திருமணம் முடிந்து 19 நாட்களே ஆகியிருந்தன. இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு. அவர்களுக்கு வேண்டியதெல்லாம், “வெடிகுண்டுகள் எங்கிருக்கின்றன, மற்ற தோழர்கள் எங்கிருக்கின்றனர்” என்ற செய்திதான். ”அமெரிக்க வெறியர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வெடிகுண்டுகள்இருக்கின்றன” என்கிறார் ட்ராய். குயெனும் பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். அதில், ட்ராயை குறித்து பயமுறுத்தி, பலவித சோதனைகள் கொடுத்து உண்மையை வாங்கிவிட முயற்சி செய்கிறது.

தோழர்கள், மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு இந்த சிறைகளில் சொல்லவொண்ணா துயர்களைஉபாதைகளை அனுபவித்துள்ளனர். அவர்கள் மன உறுதி எந்நாளும் சிதைக்கப்படுவதில்லை. இந்த உண்மையை கைதிகளை சித்ரவதை செய்ய தண்ணீர் நிரப்பிய வாளிகளும், நகக்கண்களில் ஏற்ற விதவிதமான ஊசிகளும், நூதன முறையிலான ஆயுதங்களையும் சிறையில் பார்த்து அறிந்துக்கொள்கிறார், குயென்.

குயெனுக்கு ட்ராயின் கட்சி வேலைகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால்,ட்ராய் மாலை வேளைகளில்,இரவுகளில் தாமதமாக வருவதும், ஏதோ யோசனையில் மிகவும் தீவிரமாக இருப்பது மட்டும் புரிகிறது. திருமணமான சில தினங்களில் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வியட்நாமிலும் சம்பிரதாயமாக இருக்கிறது. ஆனால், ட்ராயுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று அவர் மீது வருத்தம் கொள்கிறார் குயென். பொது மக்களின் மனநிலையில் இருக்கும் குயென் சிறைவாசத்தின் போதும்,, அதற்கு பிறகு ட்ராயின் மரணதண்டனையினாலும் புடம் போடபட்டு ட்ராயின் அடிச்சுவட்டில் ஒரு தோழராக தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த நாவல்.

சிறையில், சகத்தோழர்களின் போராட்ட வாழ்க்கையையும், அர்ப்பணிப்பையும் கண்டும் கேட்டும் குயென் சாதாரன பெண்ணிலிருந்து போராளியாக மாறுகிறார். இந்த நாவல் குயென் சொல்லச் சொல்ல ட்ரான் வான் தின் எழுதியது. இதில், குயென் சிறையில் சந்தித்த நபர்களின் பெயரை வெளியிடாமல்”எக்ஸ்”, “எம்” என்றே குறிக்கிறார். இன்று அந்த மனிதர்கள் இல்லை. ஆனால், கட்சியின் ரகசியத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்துக்கொள்ள இது உதவுகிறது.

இன்றும் இணையத்தில், மொக்கைகள் பலர், தோழர்களுடன் விவாதம் செய்யும்போது ”உன் உண்மையான பேர், ஊரோட வா” என்று கேட்பதை காண்கிறோம். இதைக்கேட்டுவிட்டு பதில்சொல்ல இயலாத கேள்வியை கேட்டுவிட்டது போல இறுமாந்து விடுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி என்பது பெரும்பாலான நேரங்களில் தலைமறைவாகவே இயங்க வேண்டியிருக்கிறது. அதோடு, அது கட்சிக் கட்டுப்பாடு. சுரண்டுபவர்களும், ஒடுக்குபவர்களும், போரை ஏவுபவர்களும் தைரியமாக உலா வருகையில் மக்கள் மீது அக்கறையும், தேசத்தின் பால் பற்றும் கொண்ட மக்கள் தலைமறைவாக இயங்கவேண்டியிருப்பது மிகப்பெரிய முரண்தான் இல்லையா?!

குயென் சிறையில், தோழர்களுடன் இணைந்து பாடல்களையும், அவர்களது வாழ்க்கையை கேட்டறிகிறார். ட்ராயுடன் தான் வீம்பு பிடித்ததும், சாதாரண காரியங்களுக்காக கோபித்துக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது, ட்ராய் தன்னை புதிய உலகுக்காக தயார் செய்ய முனைந்திருக்கிறார், பக்குவப்பட்ட பெண்ணாக மாற்ற முனைந்திருக்கிறார் என்று அறிந்துக்கொள்ளும்போது குயெனுக்கு தெளிவு பிறக்கிறது. கட்சி வேலைகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ள மனதளவில் தயாராகிவிடுகிறார், குயென். சிலநாட்களில் விடுதலை அடைகிறார்.

ஆனால், அவர் இப்போது பழைய குயென் அல்ல. தன் நாட்டுமக்களை நேசிக்கும் ஒரு போராளி. போலீசின் நைச்சியமான ஆசைகாட்டுதல்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் மயங்காத ஒரு போராளி. தன் கணவர் மரண தண்டனை அடைந்தாலும் அவரது அடிச்சுவட்டில் பயணம் செய்ய தயங்காத ஒரு போராளி.

இதை நாவல் என்று சொல்வதைவிட வாழ்க்கைக்கதை என்றே சொல்லலாம். குயென் சொல்லச் சொல்ல ட்ரான் தின் வான் எழுதியிருக்கிறார். நாவலில், ட்ராய் அனுபவிக்கும் போலீசின் அடக்குமுறைகளும் சித்திரவதைகளும் வலியும் வேதனையும் மிக்கவை. பொதுமன நோக்கில் பார்த்தால், இதனால் அவர் தனிப்பட்ட அளவில் எதனையும் பெறவில்லை என்று கொண்டாலும் அவர் இழந்ததுதான் அதிகம். எனினும், எதற்காக ட்ராய் அவற்றை அனுபவிக்க வேண்டும்? காதலித்து மணம் புரிந்த தன் மனைவியுடன் இனிமையாக காலத்தை கழித்திருக்கலாமே!

ட்ராயும், குயெனும், வானும், சிறையிலிருந்த தோழர் ”எம்”மும் “எக்ஸும்” இன்னும் எண்ணற்ற தோழர்களும் எளிமையான குடிமக்கள். தங்கள் நாட்டுக்காக, தாங்கள் விரும்பிய புதிய சமூகத்தை அமைத்திட தம்மை அர்ப்பணித்தவர்கள். ஆனால், இவர்கள்தான் அமெரிக்கப்படைகளை ஓட ஓட விரட்டியவர்கள். இது வரலாறு. இந்த சாதாரண மக்களின் வீரம்தான் அமெரிக்காவை தன் படைகளை மீளப்பெற வைத்தது. எத்தனை உபாதைகளை, உடலளவிலும், மனதளவிலும் அனுபவித்தாலும் கொண்ட கொள்கை மாறாதவர்கள். வெகு சாதாரண மக்கள். இவர்களின் பெயர்கள்அதிகமாக வெளியில் அறியப்படுவதில்லை.

ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய ஒன்றிரண்டு விதிவிலக்கின் வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும் இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள். கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?

இன்று இந்தியாவும் அன்றைய வியட்நாம் போல அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அதன் பொம்மை அரசாங்கம்தான் இங்கு ஆட்சி செய்கிறது. விவசாயிகளும், பழங்குடியினரும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களும், நகர்ப்புற ஏழைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகபோகத்துக்காக நாடு முழுவீச்சில் மறுகாலனியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டின் மீது உண்மையான பற்றும்,பக்தியும் இருந்தால் புரட்சிக்காக நம் கையில் இருக்கவேண்டியது மெழுகுவர்த்திகளோ வெற்றுக்கோஷங்களோ அல்ல என்று நாம் உணர்வது எப்போது?

நகூயென் வான் ட்ராய் சுடப்படும் வீடியோ

 

 

நூல் விவரங்கள் :

வரலாற்று நாவல்:  உன் அடிச்சுவட்டில் நானும்
பக்கங்கள் : 112
எழுதியவர் : ட்ரான் வான் தின்
தமிழாக்கம் : தா. பொன்னிவளவன்
வெளியீடு : அலைகள் 

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

விலை :  ரூ 40

__________________________________________________________

-வேல்விழி
____________________________________________________

முதல் பதிவு: வினவு

 

நூல் அறிமுகம்: “நிலம் என்னும் நல்லாள்”

1 செப்

“இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் பொதுவுடைமை பேசுகிறார்கள், இருப்பவர்கள் இழக்க நேரிடுமே என்று முதலாளித்துவம் பேசுகிறார்கள்”, என்றார் நண்பரொருவர். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் இல்லாதவர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு இந்நேரம் புரட்சி வெடித்து சோசலிசமல்லவா மலர்ந்திருக்கவேண்டும்?

ஒரு போதும் செல்வந்தர்களாகிவிட முடியாதென்று தெரிந்தாலும்  செல்வம் சேர்த்துவிடலாமமென கற்பனை செய்துக்கொண்டாவது வாழ்க்கையை தள்ளுகிறவர்களை  எல்லோருக்கும் எல்லாம் என்ற சோசலிசத்தை நோக்கி வருவதற்கு எது தடுக்கிறது?

கம்யூனிசம் என்றால் இப்போது இருக்கும் நிலையியிலிருந்து கீழேதான் வாழ வேண்டியிருக்கும் என்று  பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்றால் தமக்கு எதுவும் கிடைக்காதென அவநம்பிக்கை கொள்கிறார்கள். (எனில், மற்றவர்களிடமிருந்து சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுதான் அது தன்னிடம் வருகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் எனபது ஒரு பக்கம்.) தமது வசதி வாய்ப்புகள் பறி போய்விடும், தற்போதைய சுகமான வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதில், முதலாளித்துவத்தின் வதந்திகள் – “தமது பெண்களும் பொதுச் சொத்தாகி விடுவார்கள் அல்லது உனக்கென்று எந்த சொத்தும் இருக்காது, உன் வருங்கால சந்ததிக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது, இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது, கம்யூனிசமென்றால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவார்கள், யாருக்கும் பொறுப்பு இருக்காது அல்லது  கடினமாக உழைப்பவருக்கும் படுத்துறங்கி நாளைக் கழிப்பவருக்கும் வித்தியாசமில்லையா” முதலான அவதூறுகள் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து இன்றளவும் பரப்பப்பட்டு உயிருடன் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, இல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை கிடைக்க வழி செய்வதுதானே, அவர்களை மேலே முன்னேற வைப்பதுதானே என்று தமக்கிருப்பதை இழக்காமல் வாழ்வதையே சமத்துவமாகக் கருதிக்கொள்கிறார்கள்.

உண்மையில் கம்யூனிசம் மக்களுக்கு இதைத்தான் வழங்குகிறதா? புதிய சமுதாயத்தை, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கு உறுதி அளிக்கும் கம்யூனிசம்,மக்களிடமிருந்து இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக்கொண்டு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைவிட கீழே தள்ளிவிடப் பார்க்கிறதா?

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் காணாத சாதனைகளை குறுகிய காலத்தில் அம்மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

எனில், அது அவ்வளவு எளிதாகவா இருந்தது? முதலாளித்துவ நாடுகளில் சுரண்டல்களுக்கிடையிலே வாழும் நமக்கே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது குதிரைகள்,மாடுகள், கோழிகள், கொஞ்சம் நிலம் என்று விவசாயம் செய்த அம்மக்கள் எந்த பிரச்சினையுமின்றி சோசலிசத்தை ஏற்றுக்கொண்டனரா?

நிச்சயமாக இல்லை.  சொத்துரிமைக்காக உடன்பிறந்தவராக இருந்தாலும்  ஜென்மப்பகை பாராட்டுவதை பைபிள் காலத்திலிருந்தே காணலாம். ஒரு சதுர அடி நிலம் உடன்பிறந்தவனுக்கு அதிகப்படியாகப் போய்விட்டது என்ற காரணத்துக்காக ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு செல்வதை நாம் கண்கூடாகவே கண்டிருப்போம். கையளவு நிலமாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. இணையத்தில் கூட யாரிடமாவது ஏதாவது பிரச்சினையென்றால் “அவருக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறா” என்ற கமெண்டை சர்வசாதாரணமாகக் காணலாம். எனில்,நிலத்தின் மீது மக்களுக்கிருக்கும் பிணைப்பை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

அப்படியிருக்கும்போது, நிலத்தை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமென்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? எல்லாம் ஒரு சொடுக்கில் வழுக்கும் வெண்ணெய் போல நடந்து விட்டதா? முதலாளித்துவம் பரப்பிவருவது போல உண்மையில் சர்வாதிகாரமாகத்தான் சோவியத் ஆட்சி நடைபெற்றதா? கூட்டுப்பண்ணைக்காக ருஷ்ய மக்கள் தங்களது சொத்துரிமையை இழந்தனரா?

இந்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,  கூட்டுப்பண்ணைக்காக, சோசலிசத்துக்காக தங்களை தயார்படுத்திக் கொண்ட க்ராமியாச்சி கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை, கலகங்களை, சந்தேகங்களை, துரோகங்களை நம் கண்முன் விரிக்கிறது  – மைக்கேல் ஷோலோக்கோவ் எழுதிய ”நிலம் என்னும் நல்லாள்” நாவல்.

_____________________________________________

க்ராமயாச்சி கிராமத்தில் கூட்டுப்பண்ணையை உருவாக்குவதற்காக மாவட்ட கமிட்டியால் அனுப்பப்படுகிறார் டாவிடேவ். அவர் வரும் போதே கிராமத்தில் நடுத்தர விவசாயிகளை, வழி தவறிச் செல்பவர்களையும் பற்றி அறிவுறுத்தப்பட்டே அனுப்பப்படுகிறார்.

கிராம சோவியத்துக்குச் சென்று செயலாளரையும், தலைவரையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரு கூட்டுச்சங்கம் இருப்பதாகவும் , டிராக்டர் இல்லாததால் மாடுகளை வைத்து உற்பத்தியை பெருக்குவதும், வாங்கிய கடன்களை அடைக்கமுடியததாலும் அது செத்ததாகவும் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்,செயலாளர் நாகுல்நாவும், தலைவரான ரஷ்மியட்நாவும்.

மேலும் கூட்டுச்சங்கத்தின் தலைவர் வியாபாரியாக மாறிவிட்டதாலும் சரியானபடி இல்லையென்று சொல்கிறார்கள். டாவிடேவ் ஏழை கொசாக்கியர்களையும் விவசாயிகளையும் அடுத்த நாளே கூட்டுப்பண்ணை சங்கம் தொடர்பாக சந்திக்கவும் கூட்டம் கூடவும் வேண்டுமென்கிறார்.

இதற்கிடையில் பழைய தளகர்த்தர்கள் போலீஸ்டீவும், யாக்கோவ் லூக்கீச்சும் இரவு முழுக்க கூடிப்பேசுகிறார்கள். அதில் போலீஸ்டீவ் கார்ல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை வாசித்திருப்பதாகவும், கூட்டுப்பண்ணை அவர்களது சொத்துகளை முழுக்க அபகரித்துவிடுமென்று அறிந்திருப்பதாகவும் கூறுகிறான்.”கூட்டுப்பண்ணையில் ஆரம்பித்து கம்யூனில் கொண்டுபோய் கடைசியில் சொத்துரிமையையே அது ஒழித்துவிடும். மாடுகள், காளைகள் மட்டுமல்ல,குழந்தைகளைக் கூட அரசாங்கமே எடுத்துக்கொள்ளும், வாத்து சூப்பும், கோதுமைக் கஞ்சியும் சாப்பிட நமக்கு பிரியமாக இருந்தாலும் புளித்த பீரைத்தான் கொடுப்பார்கள், கொத்தடிமையாக கடைசிவரை நிலத்தோடு கட்டுண்டு கிடக்க வேண்டியதுதான்” என்று பேசி இருவரும் தங்களது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் கம்யூனிஸ்டுகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் எதிராக போரிடுவதாக கையொப்பம் இடுகிறார்கள்.

அடுத்தநாள் தீவிர தொழிலாளிகளும், கொசாக்கியருமாக 32 பேர் ஆண்களும் பெண்களுமாக கூடியிருக்க, டேவிடாப் கூட்டுப்பண்ணையை பற்றியும் அதன அவசியத்தைப் பற்றியும் பேசுகிறான். ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்களை ஒழித்து ஆடுகள், மாடுகள், கருவிகளை சமூகச் சொத்தாக்கினால் மட்டுமே அனைவரும் நீடித்து வாழ முடியும். நிலச்சுவான்தார்களிடம் தானியம் இருந்தாலும் அவர்கள் கொடுக்க மனமில்லாமல் கீழே கொட்டுவதால்தான் வறுமையில் வாடுகிறீர்கள், உங்களிடம் கொடுக்க மனமிருந்தாலும் தானியங்கள் இல்லை. கூட்டுப்பண்ணை ஒன்றினால்தான் விவசாயி வறுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லையென்றால் இரக்கமற்ற நிலச்சுவான்தார்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்று தோழர் லெனின் இறக்கும் போது கூட கூறியதாகவும் சொல்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. உடனடியாக சேர பலர் முன்வருகிறார்கள். அவர்களது வர்க்க உணரச்சியை பாராட்டும் டாவிடேவ், இவர்களே சோவியத் ரஷ்யாவின் ஜீவநாடி என்றும் கூட்டுப்பண்ணையில் சேர தயங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர விவசாயிகளையும் அழைத்துவரவேண்டும் என்று கூறுகிறான்.

இதன் நடுவில் நாகுல்நாவ் உணர்ச்சி மேலிட்டவனாய், சொத்துரிமையால் தங்கள் குடும்பத்துக்கும் அண்டை வீட்டார் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சிறுபகை எப்படி அண்டைவீட்டுக்காரரின் மகனை காவு கொண்டது என்றும் அதற்காக தான் பல ஆண்டுகள் தன் குடும்பத்தை விட்டு விலகியதையும் கூறுகிறான். நகரத்தில் தொழிலாளியாக இருந்து தற்போது போல்ஷிவிக்காக திரும்பி வந்திருப்பதாகவும் நடப்பவற்றை பார்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உலகபுரட்சி அண்மையில் நம்மை நாடி வந்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

அடுத்ததாக, நிலச்சுவான்தார்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. தானியங்கள், கால்நடைகள், கருவிகள் அனைத்தும் பதிவேடுகளில் குறிக்கப்பட்டு பொதுச் சொத்தாக்கபடுகிறது. இதை ஏற்கெனவே ஊகித்த சில நிலச்சுவான்தார்கள் தங்களது செல்வத்தை,கால்நடைகளை விற்று தங்கமும் காசுகளுமாக்கி புதைத்து வைக்கின்றனர். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர்.

நிலச்சுவான்தார்களின் வீட்டை நோக்கி போகும் குழுக்கள் அவர்களின் வீடுகளில் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கின்றனர். அவர்களும் பயத்தில் உறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தட்டுமுட்டு சாமான்களை சாக்குகளில் கட்டியபடி இருக்கின்றனர். அல்லது காவல்நாய்களை அவிழ்த்துவிட்டு  கூட்டுச்சங்கத்தாரை கடிக்கவிடுகின்றனர்.

குழுக்கள், வீடுகளிலிருந்து ஆடைகளை, புது பூட்சுகளை, தங்கம் போன்ற தானியங்களை, தேனை  களஞ்சியத்துக்கு கொண்டு வருகின்றனர். கந்தல் துணிகளை தைத்து தைத்து வரிகள் விழுந்த ஆடைகளைக் கொண்டவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்படுகிறது. ஒரே ஆடையை துவைத்து நிர்வாணமாக நின்று கணப்பு அடுப்பருகே உலர்த்திவிட்டு அதே ஆடையை அணிந்து கொள்ளும் மக்கள் அடுத்த குளிர்காலம் வரை இது வரும் என்ற மகிழ்ச்சியை புதிய ஆடைகள் தருகிறது.

குழுவில் ஒருபகுதியினர் நிலச்சுவான்தார்கள் ஓட்டிச் சென்ற குதிரை,கால்நடைகளை தேடி நிலச்சுவான்தார்களிடம் துப்பாக்கி இருந்தாலும் உயிருக்கு பயப்படாமல் பின் தொடர்ந்து சென்று அவர்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அக்குழுவில் ஒருவனான ஆன்றி தன்னால் நிலச்சுவான்தார்களிடமிருந்து பொருளை கைப்பற்ற முடியாதென்றும் தான் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டவன் அல்லவென்றும் நிலச்சுவான்தார்களை ஒழிப்பது பாவமென்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள்  மரண பயத்தில் மூழ்கி கிடக்கிறார்களென்று இரக்கமேற்படுவதாகவும் கூறி பின்வாங்குகிறான்.

ஆன்றியிடம், “நம் குழ்ந்தைகள் வடித்த கண்ணீருக்காக நம் விரோதிகள் என்றாவது அழுததுண்டா அல்லது தாங்கள் கொன்ற குழந்தைகளுக்காக கலங்கியது உண்டா?வேலை நிறுத்தம் நடந்தபோது எனது தாய்க்கு வேலை போய்விட்டது, நாலு பிள்ளைகள், அவள் எங்களுக்கு உணவு வழங்குவதற்காக நாள் முழுவதும் சுற்றி விருந்தினருடன் வருவாள். திரைக்கு அந்தப்புறம் நாங்கள் இருப்போம். சிறுபிள்ளைகள். சமயத்தில் குடிகாரர்கள் வருவார்கள். என் தங்கைகள் அழுதுவிடக்கூடாதென்று அவர்கள் வாயை பொத்துவேன். அப்படி சம்பாதித்த காசுதான் எங்களுக்கு ரொட்டி வாங்க பயன்பட்டது . இப்படிபட்டவர்கள் மீதா இரக்கப்படுகிறாய்  இத்தகைய குறைபாடுகள் அற்ற சமுதாயத்தைதான் உருவாக்க முயல்கிறோம். வருங்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடாது. மிராசுதாரரின் பிள்ளை மிராசுதாரராக முடியாது அப்படி நினைத்தால் தொழிலாளி வர்க்கம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்” என்று சொல்லி ஆன்றியை சிந்திக்க வைக்கிறான்.

க்ராமயாச்சி கிராமத்தில் திரும்பவும் கூட்டுப்பண்ணை தொடர்பாக கூட்டம் நடக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் பல சந்தேகங்கள். கேள்விகள். கோழி முட்டையொத்த நிலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களால் விரிந்த முறையில் கூட்டுப்பண்ணையை பார்க்க முடியவில்லை. இரு குடும்பங்கள் இருந்தால், அதில் முதலில் பெண்களுக்கிடையில் சண்டை வரும் அதனால் ஆண்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். விரிசல் பெரிதாகி தனித்தனியாகிவிட வேண்டியதுதான். குடும்பங்களுக்கே இப்படி என்றால் கூட்டுப்பண்ணைகள் வெற்றி பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்களும் கேள்விகளும் வருகின்றன.

யாவுமே சமூகச் சொத்தாக்கப்படுமா?

வீடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொந்த நிலங்களைப் வைத்து வேலை செய்வோரின் நிலை என்னவாகும்?

அவர்களிடமிருந்து நிலம் எடுத்துக்கொள்ளப்படுமா?

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதா?

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளிக்கிறான் டேவிடாவ். தற்போது இருப்பதை விட நிலைமை மோசமாகிவிடாதென்றும், கம்யூனிசம் அவர்களை  புதிய சமுதாயத்தில் உந்தித் தள்ளுகிறது என்றும் பாலைக் குடிக்காவிட்டால் கன்றுக்குத்தான் நஷ்டமென்றும் உணர்ந்து கொண்ட விவசாயிகள் கூட்டுப்பண்ணையில் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இருநூற்று பதினேழு குடும்பங்களில் அறுபத்தி ஏழு பேர் மட்டும் சேர கையை உயர்த்தினர். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. இத்தனை நாள்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழவில்லையா என்று  நடுத்தர விவசாயிகள் பலரும் தயக்கத்துடன் இருக்கின்ற்னர்.

அடுத்தநாளே ஒரு கூட்டமாக குதிரைகளும்,ஆடுமாடுகளும் கிராம சோவியத்தின் முன்பு நின்றது. மக்கள் மனுக்களை கொடுத்து கூட்டுப்பண்ணையில் சேர்ந்தனர். கூட்டுப்பண்ணைக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்தனர். நாகுல்நாவும் தச்சர்களும் சேர்ந்து மாட்டுக்கான கொழுவை அடித்தனர். க்ராமியாச் கிராமத்தில் சமூகத்துக்காக பொதுவாக செய்யப்பட்ட முதல்காரியமாக அது இருந்தது.

தங்களது சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த நிலச்சுவான்தார்கள் கொசாக்கியரை வஞ்சம் தீர்க்க  ஒன்றாக கூடி திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கு நடுவில் நிலச்சுவான்தார்களால் ஒரு கொசாக்கிய விவசாய தம்பதியினர் கொலையுண்டு போகிறார்கள். இதுவும் நிலச்சுவான்தார்களின் வேலை.

கூட்டுப்பண்ணையில் சேர்ந்த யாக்கோவ் லூக்கிச் இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கினான். பகலில் கூட்டுப்பண்ணையில் உடம்பு நோக வேலை செய்வான். இரவில், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலச்சுவான்தார் போலஸ்டீவுக்கு உதவிக் கொண்டிருப்பான்.

பனி பெய்யும் பிப்ரவரி மாதம். சூரியன் உதயமாகி பனியை உருகியோடச்செய்யும். பனி உருகியதும் நிலம் காய்ந்து வெடிக்கும். யாக்கோவ் லூக்கிச் தனது ஆடுகளை வெட்ட ஆரம்பிக்கின்றான், லூக்கிச் புரட்சி ஏற்படு முன்னரே செல்வம் சேர்க்க ஆரம்பித்துவிட்டான். மகனை கர்னலுக்கு படிக்க வைக்க வேண்டும். சீமாட்டியை திருமணம் செய்விக்க வேண்டும். ஒரு ஆலையை கட்ட வேண்டும். தங்க சங்கிலியில் கடிகாரம் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். தனது மகனையும் சீமாட்டியை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால், புரட்சி அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுவிட்டது.

தனது சொத்தில் ஒன்று கூட செஞ்சேனைக்கு சென்று விடக்கூடாதென்று திட்டமிட்டிருந்தான். அதன்படி ஆடுகளை அடித்து களஞ்சியத்தில் தொங்கவிட்டார்கள். லூக்கிச்சின் தூண்டுதலின் பேரில் கிராமத்தில் இரவு தோறும் கால்நடைகள் வெட்டப்பட்டன. அனைவரும் தின்ன முடியாமல் கறியை வயிறு முட்ட தின்றனர். வயிற்றுவலியால் அங்குகிங்கு நகரவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

இப்படி கால்நடைகள் சம்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்ட டேவிடாவ் கூட்டுச்சங்கத்தை கூட்டினான். கால்நடைகளை வெட்டுவோர் கூட்டுப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், அப்படி வெளியேற்றினால் கூட்டுப்பண்ணையில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. கூட்டம் முடியும் போது கிராமத்தார்கள் ஒருவரோடொருவர் பேசியபடி கலைந்து சென்றனர் – “அவள்தான் வெட்டு வெட்டு என்று என்னை தூண்டிவிட்டாள், வீட்டுக்குப் போய் கவனித்துக்கொள்கிறேன், அவளை நன்றாக”.

குதிரைகளுக்கு கொட்டகை கட்டப்பட்டது. எல்லா குதிரைகளும் கொண்டு வந்து விடப்பட்டன. குதிரைக்குச் சொந்தக்காரர்கள் தங்களது குதிரைக்கு அதிகம் வைக்கோல் போடுமாறு கவனித்துக்கொள்பவனை கேட்டுக்கொண்டனர். இரவுகளில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்களில் யாருக்கும் அவ்வளவு எளிதில் சொத்துமீது ஆசை போகவில்லை.  ஆனால் கூட்டுப்பண்ணை ஆரம்பமானதில் இருந்து கிராமத்தில் ஒரு புதுவித பரபரப்பு தோன்றியிருந்தது. கால்நடைகளைக் கொல்வதும் நின்றது.

அடுத்துக்கூடிய கட்சி கூட்டத்தில், ஸ்டாலின் கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களின் கால்நடைகளை மட்டுமில்லாமல், கோழி-வாத்து போன்றவற்றையும் சமூகமயமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்கு பெண்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு இருந்தது. மழைக்காலத்துக்குள்ளாக குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வாங்கிவிடலாமென்றும் அவை நூற்றுக்கணக்கில் பொரிக்க உதவுமென்றும் பிடிவாதமாக இருக்க வேண்டாமென்றும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், வருத்தப்பட்டார்கள், சிரித்தார்கள், பறவைகளையும் கோழிகளையும் பொதுக்கூண்டுக்குள் அடைத்தார்கள். கோழிகள் முட்டையிட்டன. அவையெல்லாம் பொதுவாக சேமிக்கப்பட்டன.

நடுவில், புது வதந்தி கிராமத்தை சுற்றியபடி இருந்தது. அதாவது, கூட்டுப்பண்ணையில் நீராவி இயந்திரம் இல்லாத காரணத்தால் முட்டை பொரிக்க வைக்க அறுபது வயதுக் கிழவிகளை அடைக்காக்க சொல்லப் போவதாக வந்த வதந்திதான் அது. இதைக்கேட்டு கிழவிகள் கோபமடைந்துவிட்டார்கள், சிறு சிறு நாற்காலிகள் செய்து அதனடியில் வைக்கோலைப் பரப்பி முட்டையை வைத்து கிழவிகளை அடைகாக்க சொல்ல்ப்போகிறார்கள், முடியாதென்று சொல்லும் கிழவிகளை நாற்காலியோடு கட்டுப்போட்டு விடுவார்கள் என்ற வதந்தியை ஒரு கன்னியாஸ்திரி மூலமாக பண்ணையார்கள் பரப்பிவிட்டார்கள் நல்லவேளையாக அந்த கன்னியாஸ்தீரி கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களிடம் அகப்படவில்லை.

டேவிடாவுக்கும், கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களுக்கும் ஒரு விவாதம் வந்தது. அதாவது, இந்த பறவைகள் விஷயம் சிறிதானதுதான். உண்மையில், செய்திருக்க வேண்டியது நூற்றுக்கு நூறு அங்கத்தினர்களை சேர்த்துவிட்டு விதைப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டுப்பண்ணையை கம்யூனாக்கிக்கொண்டிருக்கிறோம். இது இடதுசாரி வழுக்கல். ஒரு போல்ஷிவிக்குரிய  வீரத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு கோழிக்குஞ்சுகளை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிடலாமென்று முடிவுக்கு வருகிறார்கள்.

இடையில், இரட்டை வேடமிட்ட லூக்கிச் போலீஸ்டீவின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு கூட்டுப்பண்ணையை உள்ளிருந்தே சிதைக்கும் வேலையை தொடங்கியிருந்தான். குதிரைகள், மாடுகள் இரவில் படுக்குமிடத்தில் வைக்கோலுக்கு பதிலாக மணலை கொட்டுவது, அதனால் கால்நடைகளின் தோல் பனியில் சிக்கி சீரழிவது என்று நடந்து கொண்டிருந்தது.

அதோடு, விதைப்புக்கும் பயிரிடப்பட வேண்டிய ஹெக்டேர்களும், தானியங்களும் தீர்மானிக்கப்பட்டது. விதை தானிய வசூல், உற்பத்தி, கருவிகளை செப்பனிடுவது, வேலைப்பிரிவினை, விஞ்ஞான  முறையில் பயிடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டன. கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள் தானியவசூலை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கூட்டுப்பண்ணை விவசாயிகளும், தனி விவசாயிகளும் தானிய வசூலை எதிர்த்தனர்.

ஏனெனில், தானியம் வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்த விதைப்பே இருக்காது. எந்த நேரத்தில் போர் வரலாம் போன்ற காரணங்கள்தான்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல கிராமமெங்கு பரவியது. ஆனாலும் தானிய வசூல் வெற்றியடையவே இல்லை. கொசாக்கியர்கள் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

இவை நடுவில்,  நிலச்சுவான்தார்கள் போல்ஷ்விக்குகளை தாக்க ஒரு படையை திரட்டியிருந்தனர். காலியாக இருந்த நிலச்சுவான்தாரின் வீட்டை தலைமையலுவலகமாக மாற்றியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகள் யாருமற்ற இரவு வேளைகளில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. குதிரைகளை லாயத்திலிருந்து திருடிக்கொண்டு படைகளை  அழைக்க சென்றனர். லூக்கிச்சும் அவர்களுடன் சென்றிருந்தான். கொசாக்கியர்களைப் பார்த்து கோலாஸ்டீவ் தாக்குதலுக்கு தயாராகும்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த பெரியவர் எழுந்தார்.

“நீங்கள் வருவதற்கு சற்று முன்னர்தான் அந்த பத்திரிக்கையை படித்தோம். ஸ்டாலின் எழுதிய கடிதம். அதைப்படித்தபின் நீங்களும் நாங்களும் வேறு என்று புலனாகிவிட்டது. நாங்கள் ஊழலை மட்டும்தான் எதிர்க்கிறோம், எங்கள் சோவியத்தை அல்ல. நாங்கள் கையெழுத்திட்ட மகஜர்களை திருப்பிக்கொடுத்துவிடுங்கள். எங்கள் கிராமத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்தான். உங்களுடன் சேர்ந்தால் வெளிநாட்டுப்படைகள் வரும். கம்யூனிஸ்டுகள் யார், நமது சகோதர்கள்தானே?” என்று அவர்களை துரத்தி விட்டார்கள்.

போலாஸ்டீவும், லூக்கிச்சிடம் முடிந்தவரை கூட்டுப்பண்ணைக்கு தீங்கு செய்துக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு குதிரைகளை விட்டு ஓடிவிட்டான். லூக்கிச்சுக்கு அவன் கிளம்பினதும்தான் மனமகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. எதிர்புரட்சிக்காரர்கள் கிராமத்தை விட்டோடினர். ஸ்டாலினின் அந்தக்கட்டுரை வெள்ளப்பெருக்கினால் மூன்று வாரங்கள் தாமதமாக பல கிராமங்களை சென்றடைந்தது.

இந்த நாவலில், கட்சி அங்கத்தினர்களான டேவிடாவ்,நாகுல்நாவ், ரஷ்மியட்நாவ், போலீஸ்டீவ், லூக்கிச் கதாபாத்திரங்கள் உண்மையானவையே. சம்பவங்களும், கிராம மக்களது உணர்ச்சிகளும் உண்மையானவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே.  இப்போது நாம் நாவலை வாசித்தாலும்  கூட்டுப்பண்ணையின் காலத்துக்கே சென்று வந்தது போலிருக்கிறது.

மக்களுக்கும் சொத்துக்குமான உறவைப் பற்றி சொல்வதில் ஷோலோக்கோவ் வெற்றி பெறுகிறார். சுயநலம், ஏமாற்றி பிழைத்தல்,மூடநம்பிக்கைகள், வதந்திகள் என்று பலவும் மக்களிடம் நிலவி வந்திருக்கிறது, இன்று போலவே. இழக்க ஒன்றுமில்லாதவர்கள், உழைக்கத் தயங்காதவர்கள் கூட்டுப்பண்ணையின் அவசியத்தை உணர்ந்து இணைய முன்வந்தாலும் நடுத்தர விவசாயிகளிடம் ஊசலாட்டம் இருந்திருக்கிறது.  மாலையில் தோன்றி மறையும் மின்மினி பூச்சிகளின் வாழ்க்கையையொத்த நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணத்தை எந்த போராட்டத்திலும் நாம் காணலாம்.

மிக சொற்பமான சொத்துகளே இருந்தாலும் எண்ணத்தில் செல்வந்தராகவும், அன்றாட வாழ்க்கையில் வறியோராகவும்  இருந்தாலும் என்றாவது சொத்து சேர்த்து செல்வந்தாராகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். உழைக்கும் மக்களைபோல தம்மீதான சுரண்டலை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இவர்களும் வர்க்க உணர்வு பெற்றால் சுரண்டலற்ற, சமத்துவமான,  ஒளிமிக்க எதிர்காலமான உலக புரட்சிக்கான நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்த நாவல் இரத்தமும் சதையுமான சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகள் குறித்த அழுத்தமான அனுபவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. சொத்துடமையின் வரலாற்று ரீதியான பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறியிருக்கும் மக்களை மாற்றுவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்த ஒன்று என்பதை இந்நாவல் பாத்திரங்களினூடாக நாம் உணர முடியும். ஆனாலும் இத்தகைய தடைகளை தகர்த்தெறிந்து அதற்கான பொறுமையையும், போராட்டத்தையும் கைவிடாத அந்த எளிய தோழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிசம் என்பது எல்லா வசதிகளையும் செய்து தரும் சொர்க்க மல்ல. அது மக்களே தமது வாழ்க்கையை உழைத்து உருவாக்கும் ஒரு போராட்டம். அந்த போராட்டத் தருணங்களை நுகர விரும்புவர்கள் உடன் இந்த நாவலை படியுங்கள். கம்யூனிசம் குறித்து அறிய விரும்புவர்களுக்கு இந்த நாவல் கூட ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

நாவல்: நிலம் என்னும் நல்லாள் (Virgin soil Upturned)

பக்கங்கள்: 490, விலை ரூ. 200.00

ஆசிரியர்: மைக்கேல் ஷோலோக்கோவ்

தமிழாக்கம்: தா.பாண்டியன்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

நன்றி: வேல்விழி

முதல் பதிவு: வினவு

பெண்களை அடிமைப்படுத்தும் சமூகம் தலைநிமிர முடியாது – சித்தி ஜுனைதா பேகம்

25 ஆக

இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

 

முதல் பதிவு: ஆபிதீன் பக்கங்கள்

மேலதிக விபரங்களுக்கு

காதலா கடமையா வாசிக்க

மீண்டும் நல்லூர் முரசு இதழ் வெளிவருகிறது

1 ஏப்

கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிவராமல் நின்று போயிருந்த “ந‌ல்லூர் முரசு” வார இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. கடையநல்லூரிலிருந்து சில மத இதழ்களும் ஒரு பெண்கள் இதழும் வெளிவந்து கொண்டிருந்தாலும், சமூகத்தளத்தில் செய்திகளைத் தாங்கி அச்சு இதழ்கள் எதுவும் வெளிவரவில்லை. அந்த இடைவெளியை நிரப்பும் வண்ணம் நல்லூர் முரசு வெளிவந்து கொண்டிருந்தது. நிர்வாக காரணங்களால் அது நின்று போயிருந்து, தற்போது மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

பழைய நல்லூர் முரசு இதழில் வாராந்திர செய்திகளும், சமூக, அரசியல் கட்டுரைகளும், கதை, கவிதை போன்றவற்றை உள்ளடக்கி இலவசமாக வெளிவந்தது. ஒரு அச்சு இதழை நடத்துவதிலுள்ள சிரமங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே என்றாலும், அதில் இருந்த குறை விளம்பரம் தருபவர்களுக்கு ஏதுவான செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிடுவது.

பழைய இதழின் அதே குறை, புதிய இதழிலும் தொடர்கிறதோ என எண்ணும் வண்ணம் அதன் முதல் வெளியீடு இருக்கிறது. இதை நீக்கி சமூக விழிப்புணர்வை நோக்கி நடைபோடும் போது மிகச்சிறப்பாக அமையும், அமைய வேண்டும்.

புதிய நல்லூர் முரசு இதழ்

இதில் “விலைவாசி உயர்வு தீர்வு என்ன?” எனும் கட்டுரையை சேயன் இப்ராஹிம் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் விலைவாசி உயர்வுக்கான முழுமுதல் காரணத்தை தொடவே இல்லை. மட்டுமல்லாது எது விவசாயத்தை அழித்ததோ அதையே அதையே விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான தீர்வாகவும் கட்டுரையாளர் முன்வைத்திருக்கிறார். இது அறிந்தே கூறப்பட்டதா அல்லது அறியாமையினாலா எனும் கேள்வியைவிட அபாயகரமானது என்பதால், அதன்மீது விமர்சனம் அவசியமாகிறது. சுருக்கமாக பார்ப்போம்.

விலைவாசி உயர்வுக்கான காரணங்களை மேலோட்டமாக கட்டுரையாளர் கடந்து செல்கிறார். ஊக வணிகம் என்பது விலைவாசி உயர்வுக்கான காரணங்களில் ஒன்று. சில பொருட்களுக்கு விலக்கு அளித்திருந்தாலும், விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வேறு காரணங்களால் விலை உயர்கிறது. விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களும் விலை உயர்கிறது என்பதால் ஊக வணிகம் காரணமல்ல என்று கூறமுடியாது. பல காரணங்கள் ஒன்று சேர்ந்து நிகழ்வதில் ஒரு காரணத்தை மட்டும் தனிமைப்படுத்தி பார்த்து அது இல்லை என்று கூறவோ விலக்களிக்கவோ முடியாது. உற்பத்தியிலும், நுகர்விலும் எந்த பங்களிப்பையும் செய்யாத ஒரு கூட்டம் கணிணி முன் அமந்து விலையை தீர்மானிப்பது எந்த விதத்தில் விளைச்சலுக்கோ, நுகர்வுக்கோ உதவும் என்பதை சிந்தித்தாலே விலைவாசி உயர்வுக்கு ஊக வணிகம் எந்த அளவுக்கு தூண்டுதலாய் இருக்கிறது என்பது விளங்கும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு முழு முதற் காரணமல்ல என்பதால் விலைவாசி உயர்வில் அதன் பங்களிப்பை மறுக்கமுடியுமா? விலக்கின்றி அனைத்து பொருட்களின் விலை உயர்விலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை பாமரர்களும் அறிந்திருக்கையில் எந்த விளக்கமுமின்றி பெட்ரோல் விலைஉயர்வு காரணமல்ல என்பது ஏற்புடையதா?

இப்படி காரணமில்லை என கூறி தாண்டிச் செல்லும் கட்டுரையாளர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று குறிப்பிடுவது கொள்முதல் விலை உயர்த்தபடுவதை. வேடிக்கையாக இருக்கிறது. கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயி நிலத்தை தரிசாக போட்டு வைத்திருப்பதையும், வந்த விலைக்கு விற்றுவிடுவதையும் அறிந்துவைத்திருக்கும் கட்டுரையாளர், விவசாயி ஏன் கொள்முதல் விலையை உயர்த்தக் கோருகிறான்? என்பதை சிந்திப்பதற்கு எது தடையாக இருக்கிறது. பசுமைப் புரட்சி குறித்த அவரின் மதிப்பீடும் இங்கு தான் இடறுகிறது.

விவாசயம் இந்தியாவில் நிலிந்து கொண்டே செல்வதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று, அரசு கொள்கைகள் விவசாயத்தை புறக்கணிப்பது, இரண்டு விவசாய இடுபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. இந்த இரண்டும் விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து அன்னியப்படுத்தி அதை பெரு நிறுவங்களின் கைகளில் திணித்திருக்கிறது. இதை சாத்தியப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது தான் பசுமைப் புரட்சி திட்டம். இதன்படி இயற்கை சார்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருந்த விவசாயத்தை உரங்களின் தயவில் நடக்க வேண்டிய ஒன்றாக மாற்றி, உற்பத்திச் செலவை எகிர வைத்ததுடன் நிலத்தையும் மலட்டுத்தன்மையுடையதாக மாற்றியது. விவசாய உரங்களுக்கு மாறுமாறு விவசாயிகளை வற்புறுத்திய அரசு, பின்னர் உணவு தானியங்களைத் தவிர்த்து லாபப் பயிர்களான தோட்டப் பயிர்களுக்கு மாறுமாறு அறிவுரை கூறியது. பின்னர் காட் ஒப்பந்தத்தின் பேரில் தண்ணீரை தனியார்மயப் படுத்தி விவசாயிகளின் வயிற்றிலடித்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பய்ன்படுத்தச் சொல்லி விளம்பரம் செய்ததை கேட்டு அதை மறு சுழற்சி செய்யமுடியாமல் விவசாயி கடனில் வீழ்ந்தான். 90களுக்குப் பிறகு மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இன்றோ சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலை செய்து வயிறைக் கழுவுகிறான் விவசாயி. கொள்முதல் விலையை அதிகரிக்க கோருவதன் பின்னாலிருக்கும் இந்த சதித்தனங்களையெல்லாம் காணாமல் கண்ணை மூடிக் கொண்டுவிட்டு பாதிக்கப்பட்டு நிற்கும் விவசாயியின் மீதே பழியையும் சுமத்துவது அறியாமையா? முதலாளிய சதித்தனங்களுக்கான ஆதரவா?

விலைவாசி உயர்வை பொதுமைப்படுத்திப் பார்த்தால் மக்கள் வாங்கியே தீர வேண்டிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்வதும், மக்களை வாங்க வைத்தாகவேண்டும் எனும் நிலையிலிருக்கும் செல்போன், கணிணி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே செல்வதும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? எது காரணம்? என்பதை.

பா.ராகவன்: ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி

21 ஜன

கண் போனாலென்ன, பா.ராவின் ‘நடுநிலை’ போகாது!

ஒரு சைக்கோ நம் கண்களுக்குள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருகினால் என்னவாகும்? இந்தக் கேள்வியைக் கிழக்குப் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனிடம் கேட்டால் ‘சிலர் குருடாகும் என்பார்கள், சிலர் குருடாகாது என்பார்கள், நான் நடுநிலையாக சொல்ல வருவது என்னவென்றால்….” என்று மென்று முழுங்குவார். அதன் பொருள் குருடாகாது என்பதுதான். அவர் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “ஆர். எஸ். எஸ் – மதம், மதம் மற்றும் மதம்” புத்தகத்தின் முன் அட்டையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த நடுநிலைப் பார்வை என்று அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அதன் வரலாற்றுக் காலத்தில் வைத்து, விருப்பு-வெறுப்பின்றி விளக்குவதற்குப் பதில், தன்னுடைய இந்துத்வ திட்டத்திற்கேற்ப பச்சையான புளுகுகளையும் அரை உண்மைகளையும் கொண்டு  திரிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உத்தி. ஆனால் நம்ம பா.ரா இந்த அளவுக்கு கச்சாவாக புளுகாமால் கொஞ்சம் உப்பு, புளி, அஜினாமோட்டா அதாவது சுஜாதா நயத்தில் பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுகிறார்.

லவ புராண ஒளியில் முசுலீமின் எதிர்வினையாய் ஆர்.எஸ்.எஸ் விசுவரூப தரிசனம்!

லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் – வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாக சொல்லப்படும் – லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. இராமரால் கட்டப்பட்ட மண்பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தை கட்டக்கூடாது என்று அவாள் கூறும் ஒரு பச்சையான புரட்டிற்கு ஒப்பான இந்த லவ லாகூர் கதையின் அவசியம் என்ன? இப்பேற்ப்பட்ட லாகூரிலிருந்தான் முசுலீம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாக போட்டு தாக்குவதுதான் பா.ராவின் நோக்கம்.

“ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரசாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மதவாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப்போகிறது. சந்தேகமில்லை” – பக்.10

பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில் இப்படி முசுலீம் லீக் அநீதியாக பிரிவினையை பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் கிருஷ்ண பரமாத்மாவாக களமிறங்கியது என்று புரியவைக்கிறார் பா.ரா. எனில் முசுலீம் லீகின் பிரிவினை வாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?

அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையைப் பார்ப்போம்

ஒத்துழையாமை இயக்கமும் இந்துத்தவ ‘போராளி’களும்!

1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து அந்த போராட்டத்தை திரும்ப பெறுகிறார்.  இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்து ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்கர் என்ற அந்த தலைவர் வெள்ளையனை எதிர்த்து பயங்கரமாக போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன?

1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். “இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது” என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இதுவாக இருக்க நம்ம அஜினோமோட்டோ பா.ரா படிக்கிறவெனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.

இனி பா.ராவின் அடுத்த புளுகைப் பார்ப்போம். இதே ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதை கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்தியப் சித்பவனப் பார்ப்பனர் 1925இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படி பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி. அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்.

காந்தியை எதிர்த்தது பகத்சிங்கா, ஆர்.எஸ்.எஸ்ஸா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை பார்த்து விடுவோம். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார். கூடவே அவர்கள் காந்தியின் முசுலீம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலீம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலீம் லீகை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார். காரணம் இப்போது உள்ள முசுலீம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்து பொதுப்புத்தி இதை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான்.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது ஸ்பான்சரோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம்ம அக்மார்க் அம்பியான பா.ராகவன் கம்யூட்டரின் கீ போர்டே கதறி அழுமளவுக்கு பகத்சிங் தோழர்களின் வீர அத்தியாத்தை மறைத்துவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை திருட்டுத்தனமாய் திணித்து விடுகிறார். இப்படித்தான் கோழைகள் பா.ரா கையால் குட்டுப்பட்டு போராளிகளாய் ஆபாசத்தோடு உருவாக்கப்படுகிறார்கள்.

ஹெட்கேவாரின் பார்ப்பனியக் கவலைகள்!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கேவார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்

“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலை தணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன” (The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle- எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)

இந்த விளக்கத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாக பார்த்தாலே, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன?

சமூகங்களுக்கிடையே உள்ள மோதல், மக்களிடையே ஏற்பட்டு வரும் பிளவு அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், பார்ப்பனரல்லாதோர் முதலான சமூகங்கள் அம்பேத்கார், பெரியார், திராவிட இயக்கம் போன்றவர்களின் முயற்சியில் ஆதிக்க சாதிகளை எதிர்க்க துவங்கிவிட்டனர். குறிப்பாக அந்த வரலாற்று காலத்தை வைத்துப் பார்த்தால் 1922 ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு பார்ப்பன ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் போக்கு, இயக்கங்கள் முன்னிலைக்கு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அவதரித்த மராட்டிய மண்ணில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சம உரிமை போராட்டங்கள் சூல் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒத்துழையாமை இயக்கத்தின் உதவியால் யவனர்கள் அதாவது முசுலீம்கள் தங்களது சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இவைதான் ஹெட்கேவாரின் இதயத்தை குடைந்தெடுத்த கவலைகள். இந்த கவலை அவரிடத்தில் வந்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்டகாலம். இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தனது சாம்ராஜ்ஜியத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் – குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாக போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.

இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்தவரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடேயே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.

அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிர்ராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் எற்கனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் மேலும் வயிறெறிந்து போகிறார்கள்.

இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வருண சாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பாலிய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆக மொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?

இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. இந்த இயக்கத்தில் தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்கத்தில் முசுலீம் நவாப்புகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன ‘மேல்’சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள்  புரிந்து கொள்ள முடியும். இந்த வரலாற்றை மறுத்து நூலாசிரியர் பா.ரா உருவாக்கும் மோசடியையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இன் புரவலர்கள் யார்?

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்?

சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்ஐ குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.

அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று –

“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”

இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.

வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.

ஆனால் பா. ராவோ, பத்துப் பதினைந்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் “மெல்லியக் குரலில்” சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.

பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.

இந்துத்வக் காங்கிரசில் முசுலீம்கள் இணைய முடியுமா?

மேலும் இந்திய அரசியலில் மதத்தை கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டை சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலீம்களின் எதிர்ப்புக் கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினை கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலீம்களை அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரஸில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவவாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திரபிரதேசத்தில் “பாரத தர்ம மகாமண்டலம்” என்கிற அமைப்பை நிறுவியவர் – தான் இறக்குவரை காங்கிரஸில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா.  இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை.

அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டு தான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் காங்கிரசை அனைத்து பார்ப்பனியவாதிகளும் இது நம்ம ஆளு கட்சி என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலீம்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும்?

இப்படி இந்துத்துவவாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறுவழியின்றி தோன்றியது தான் முசுலீம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டை திறமையாக பயன்படுத்தி முற்றவைத்தார்கள். முசுலீம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலீம்களைக் கல்வியறிவு பெறச்செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன்வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லரைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரஸின் இசுலாமிய பிரதி தான் முசுலீம் லீக்.

முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலீம் என மதவேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதசார்பற்ற தேசிய இயக்கத்தை கட்டுவதற்கு பதில் இந்துத்தவ வழியில் காங்கிரசு கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.

இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு இதை அப்படியே புரட்டிபோட்டு முசுலீம்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார்.

எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ்: கோழைகள் சூரர்களான அதிசயம்!

“மிசாவில் கைதாகி சிறை சென்றவர்களுள், முழு எமர்ஜென்சி காலமும் சிறைப்பட்டிருந்தவர்கள் அநேகமாக ஆர். எஸ். எஸ் காரர்கள்தாம்.” என்கிறார் பா.ரா. தேசமெங்கும் அவசர நிலையை எதிர்த்து போராடுமாறு தனது தொண்டர்களை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்று “மாறு வேடங்களில் வீடுவீடாகச் சென்று இந்திரா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துச் சொல்வது, பத்திரிகையாளர்களை ரகசியமாகச் சந்தித்து, சிறையில் இருக்கும் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிப்பது” போன்ற வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்தார்களாம்.

நரியைப் பரியென்று காட்டும் பேராசை பா. ராகவையங்காருக்கு வந்ததில் தப்பில்லை – ஒரு ‘நூலின்’ துயரம் இன்னொரு ‘நூலு’க்குத்தானே புரியும்? அதற்காக தெளிவாய் நாடே பார்த்துக் கொண்டிருந்த போது பகிரங்கமாய் இந்திராவின் காலை நக்கியாவது சிறையிலிருந்து வெளியே வரத் தயாராக இருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகளை வீரர்களாகக் காட்டுவது, போட்டுக் கொண்டிருக்கும் ‘நடுநிலை’ முகமூடிக்கு சற்றும் பொருந்தாமல் அசிங்கமாய் பல்லிளிப்பதை பா.ரா உணராமல் இல்லை. இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அரசியல் இயக்கம் இல்லையாம். அதனால் அதன் தலைவர் அப்படித்தான் அணுகுவாராம்.

முதலில் இவர்கள் சொல்வது போல் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் விரோதியல்ல. அன்றைக்கு இந்தியாவிலிருந்த அமெரிக்க சார்பு முதலாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்து நின்ற ரசிய சார்பினருக்குமான முரண்பாடுகளின் பின்னணியில் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்ததாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளால் வரவழைத்துக் கொண்ட ஒன்றல்ல. மாறாக இந்திராவின் அரசியல் கணக்குகளுக்காக அதன்மேல் திணிக்கப்பட்டது.

அதேபோல ரசிய சார்பு கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படாமல் இருந்ததற்கும், ரசிய சார்பற்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதற்கும் இந்திராவின் ரசிய சார்புதான் காரணம். இதே அவசர நிலை காலத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைபட்டதற்கும் கூட அவர்கள் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள் என்பதோடு உள்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தலைவலியாக செயல்பட்டார்கள் என்பதே.

மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை  எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.

அன்னை இந்திராவின் அடிமைகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

எமர்ஜென்சிக்கு முன்பே இந்திரா காந்தி வெளிப்படையாக விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மேல் போடப் பட்ட தடையே ஒரு அடையாளத்திற்காகத் தானேயொழிய இவர்கள் அன்றைக்கு சிறையிலிருந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்களைப் போல எமர்ஜென்சி கொடுமைகள் எதையும் அனுபவித்ததில்லை. இருந்த போதும் கைதான மறு நொடியிலிருந்தே இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி?

சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் கடிதம் மேல் கடிதமாய் இந்திராவுக்கு எழுதித் தள்ளுகிறார். அவற்றில் இந்திராவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு, இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டி விட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்து சொல்லி விட்டு – தங்கள் மேலான தடையை விலக்குமாறும், தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்பியக்கத்திற்கும் தொடர்பிலை என்றும், தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியாவது எமர்ஜென்சிக் கொடுமைகளை அனுபவித்து முடித்த பின் தான் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சரண்டரானார். அடி வாங்கிய பின் தான் தி.மு.க அழுதது – இவர்களோ இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே தம் காலோடு மூத்திரம் பெய்து கண்ணீர் விட்டுக் கதறிய கோழைகள்.

எனினும் நூலாசிரியர் பா.ரா கூச்ச நாச்சமின்றி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவசர நிலையை எதிர்த்த வீரர்கள் என்ற பட்டத்தை அவர்களே  வெட்கப்படுமளவுக்கு மனம் குளிர வழங்குகிறார். இன்று தேவரஸ் உயிரோடு இருந்திருந்தால் பா.ராவிற்கு “சங்கம் காத்த சிங்கம்” என்று பட்டமே வழங்கியிருப்பார்.

அயோத்தி – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பா.ரா

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்து வெறியர்கள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, சாமானிய மக்களிடையே மதவெறி நஞ்சைக் கலந்து மக்களிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் தடைச் சுவரையே ஏற்படுத்தி, பல கலவரங்கள் நடத்தி பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமான பாபர்மசூதி எனும் அயோத்தி விவகாரத்தை வரலாற்றறிஞர் பா. ரா வெறும் ஒன்றரை பக்கத்திலேயே முடித்துக் கொள்கிறார். இதை விரித்து எழுதியிருந்தால் அவரே விரும்பினாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொலைபாதகத்தை மறைக்க முடியாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அயோத்தி விவகாரத்தை மூலதனமாக்கி, நாட்டு மக்களை ஒரு ரத்தக் குளியலில் மூழ்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் தலையெடுத்த அந்த நிகழ்வுக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசு, அரசியல், நீதி, நிர்வாக, ஊடக அமைப்புகள் அனைத்தும் இந்துமதவெறி பாசிசத்தின் தூண்களாக அம்பலப்பட்டதன் பின்னணி குறித்து அவருக்கு அக்கறை ஏதும் இல்லை. ஏனெனில் அவரும் கூட இந்த தூண்களில் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அயோத்தி விவகாரத்தை வேறு விதமாக சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்கிறார் – அதற்கு உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவியதை ‘சாதுர்யமாகச்’ சாதித்துக் கொண்டதாக எடுத்துக் காட்டுகிறார்.

விவேகானந்த கேந்திரத்தின் வரலாறும், தமிழகத்தில் இந்துமதவெறியும்!

“விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்?எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின.”

“சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால் புனித  சேவியர் இங்கு வந்த போது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது” – பக்கம் 123.

இதன்படி பா.ரா கூறுவது என்ன?

நினைவுச்சின்னம் அமைக்க ஏக்நாத் ரானடே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய பொதுச் செயலாளரை அதன் தலைவர் கோல்வால்கர் அனுப்புகிறார். வந்தவர் கையெழுத்து இயக்கம் எடுத்தது, தி.மு.க தலைவர் அண்ணாதுரையை நினைவுச் சின்ன கமிட்டிக்குள் இழுத்தது, உச்சகட்டமாக ஜோதிபாசு எனும் கம்யூனிஸ்ட் தலைவரிடமே விவேகானந்தர் வங்கத்துகாரர் என்று நன்கொடை கேட்டது, இப்படியே மத்திய மாநில அரசுகளை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து நாசூக்காக காரியத்தை சாதித்ததாக பா.ரா சொல்கிறார்.

ஆனால் உண்மை என்ன?

தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தருக்குப் பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் விவேகானந்தர். காங்கிரசு மட்டுமல்ல  போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தரை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. சாமானியர்கள் வழிபடும் வினாயகரைக் கைப்பற்றியதும், கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் எனும் பெயரில் சிறு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவதும் இதற்கான உதாரணங்கள்.

இப்படித்தான் விவேகானந்தரை வைத்து தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் இதற்காக குறிவைக்கிறது.

நாட்டில் பெயர் பெற்ற பண்டாரம் பரதேசிகள் மூத்திரம் பெய்த, வெளிக்கு போன இடங்களையெல்லாம் கண்டுபிடித்து நினைவாலயம் அமைக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் மக்கள் வசிக்கவே இடம் காணாது. விவேகானந்தரோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறார் – சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவர்கள் குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் – அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் இருந்ததும் தான். மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.

மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தனக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு தான் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.

இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்படுகிறது. கூடவே கன்யாகுமாரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்படுகிறது.

இயல்பாகவே ஆளும் அதிகார வர்க்கத்தினிடையே நிலவும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தையும், குண்டர்படையையும் துணைக்கு வைத்துக் கொண்டு எதிர்ப்புகள் நசுக்கப்பட்டதாலேயே விவேகானந்தர் பாறை நினைவாலயம் சாத்தியமானது. இந்த ‘அமைதி’ வழியைத் தான் பா.ரா அயோத்தி விஷயத்திற்கும் பரிந்துரைக்கிறார்.

அதாவது, இவர்கள் ஏன் அவசரப்பட்டு கலவரம் செய்து, முசுலீம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, கைகளை இரத்தச் சகதியில் முக்கியெடுத்து, மசூதியை இடித்து இத்தனை கெட்ட பெயரை வாங்க வேண்டும்? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால், நீதி மன்றத்தின் மூலமே ‘முறையான’ தீர்ப்பைப் பெற்று, இராணுவத்தைக் கொண்டே மசூதியை இடித்து கோயிலைக் கட்டியிருக்கலாமே என்பது தான் பா.ராவின் அங்கலாய்ப்பு. இப்போது அலகாபாத் உயர்நீதி மன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ராவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அயோத்தயில் இந்து கோவிலை இடித்துத்தான பாபர் மசூதியைக் கட்டினார் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் அபாண்டத்தை பா.ராவும் வழிமொழிகிறார். கருத்து வேறுபாடு எதில் என்றால் இந்த விவகாரத்தை சாணக்கிய குள்ளநரித் தந்திரத்தின் மூலம் சிரமமின்றி சாதித்திருக்கலாம் என்பதே.

குஜராத் இனப்படுகொலையை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லையாம்!

இதையே தான் குஜராத் கலவரங்கள் பற்றிய விவரணைகளின் பின்னும் சொல்கிறார்.

“அடிப்படை இது தான். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும்  இது தான். இது மட்டும் தான். ” பக்கம் – 138

ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முசுலீம் பெண்களின் கருப்பையைக் கிழித்து கண்களைக் கூடத் திறக்காத பிஞ்சுகளை வீசியெறிந்து வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடிய பின்னும் மோடி வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர் குஜராத்திற்குக் காட்டிய வளர்ச்சிப் பாதை தான் என்றும் – வளர்ச்சியொன்றே முக்கியமென்றும் சொல்கிறார் பா.ரா.

யூதர்களை கொன்று பின்னர் ஜெர்மனியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு அவர்களது செல்வாக்கை அணிதிரட்டிய ஹிட்லரின் வெற்றியும் அப்படித்தான். நவீன இந்தியா கண்ட மிகக் கொடூரமான முசுலீம் மக்கள்  இனப்படுகொலைதான் 2002 கலவரங்கள். அது முடிந்து எட்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இனி வளர்ச்சிதான் மோடியின் தாரகமந்திரம் என்று பாவமன்னிப்பு வழங்குகிறார். இதன்படி இந்துமதவெறியர்கள் கலவரத்தின் மூலம் சிறுபான்மை மக்களைக் கொன்றுவிட்ட கையோடு ஏதாவது கார் தொழிற்சாலை, வளர்ச்சி என்று செட்டிலாகிவிட்டால் அது பிரச்சினையில்லை.

அடுத்து குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் திட்டமிடவில்லையாம். அதற்கு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய மத உணர்வு கொண்டவர்கள் தான் காரணமாம். அதாவது, கொலைகளையும் கற்பழிப்புகளையும் குண்டு வீசியதும் ஆர்.எஸ்.எஸ்ஸால் மத உணர்வு ஊட்டப்பட்டவர்கள் தான் – அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என்று பச்சையாய் புளுகுகிறார். இதே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்களை கொலைகாரர்களாக பார்ப்பதற்கு பா.ரா தயாரில்லை. அதனால்தான் அந்த கொலைகாரர்களது சித்தாந்தத்தை நெஞ்சிலேந்தி விடம் கக்கும் அரவிந்த நீலகண்டன் போன்ற பாம்புகளெல்லாம் பா.ராகவனது தமிழ் பேப்பரில் படம் எடுத்து ஆடுகின்றன. நல்ல பாம்பு படமெடுப்பதை இரசிக்கும் பா.ரா போன்ற கண்ணியவான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பனியாக்களின் பின்புலத்தோடு குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணிதிரட்டியிருக்கிறார்கள்.

இது ராகவன் சொல்வது போல ஏதோ “உணர்வால் உந்தப்பட்டு” சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல; பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தை பாராட்டும் பா.ரா!

1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட. ஆனால் அவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்காரர்தான், காந்தி கொலையின் போது அவர் அந்த இயக்கத்தில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். இதை டெக்னிக்கலாக சொல்லி ஆர்.எஸ்.எஸ் பங்கை விடுவிக்கிறார், பா.ரா.

சரி, ஒரு ஸ்வயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா? இல்லை. உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அவ்வளவு ஏன் நமது சிலம்பரசனது ரசிகர் மன்றத்தில் கூட உறுப்பினர்கள் என்றால் ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அந்தந்த அமைப்புகளின் ஆவணங்களில் உறுப்பினர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு ஜனநாயக நடைமுறை ஆர்.எஸ்.எஸ் இல் அறவே கிடையாது. யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இந்த லாஜிக்படி கோட்சே ஒரு ஸ்வயம் சேவக்தான்.

ஆர்.எஸ்.எஸ்இல் இப்படி உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ்இன் பாரம்பரியம் தொடர்கிறது.
இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால்

” ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ” பக்.57

என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார் பா.ரா. ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை என்பதை பா.ரா விவரிக்கவில்லை என்பதும் அதையே போற்றுகிறார் என்றால் அது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவருடைய நூலை வாங்கி படிக்கும் ‘இந்துத்வ’ நடுத்தர வர்க்கத்திடம் கேட்டால் கூட ” இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்” என்று சொல்வார்கள்.
காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகை அந்த இயக்கத்திற்கு எப்படி கிடைக்கிறது?

அமெரிக்க கைக்கூலியாய் கம்யூனிசத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

அப்போது தமது இயக்கத்தின் மேலான தடையை விலக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ்இன் தலைவர் கோல்வால்கர், நேருவுக்கு எழுதிய கடிதங்களில் உலகெங்கும் கம்யூனிச அபாயம் பரவுவதாகவும் இந்தியாவிலும் அது வேகமாகப் பரவிவருவதாகவும் இதை எதிர்த்த போராட்டத்தில் அரசுக்கு விசுவாசமான அடியாள் படையாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்துள்ளார். அன்றைய சூழ்நிலையில் உலகளவில் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அஞ்சியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியளவில் நிலபிரபுக்களும், தரகு முதலாளிகளும் தான். இதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலகட்டத்தில் தெலுங்கானாவில் நிலவுடைமை பண்ணையார்களை தூக்கி எறிந்துவிட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி ஆயுதந் தாங்கிய போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தார்கள். இந்த செயல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றால் அதற்கு பரிகாரம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் துடித்திருக்கிறது. மேலும் உலக அளவில் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரியா, வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் வென்று வரும் நேரத்தில் அமெரிக்கா அலறித் துடிக்கிறது. அந்த அமெரிக்காவின் கையை பலப்படுத்தி இந்தியாவில் கம்யூனிச அபாயத்தை வீழ்த்துவதற்கு தங்கள் மீதான தடையை விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

ஆம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் எதிர்ப்புரட்சி கும்பல் என்பதே. அதனால்தான் அந்த இயக்கத்தின் மீதான தடை நேரு அரசாங்கத்தால் நீக்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை பா.ரா என்ற ‘நூல்’ ஆசிரியரின் அக்கறைக்குரியதாக இல்லை. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பண்ணையார்களது அதிகாரம், நில உடமை பறி போவதை பார்த்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பதறுகிறது என்றால் இந்த கட்சியின் யோக்கியதை குறித்து வாசகர் முடிவு செய்து கொள்ளலாம்.

மக்களுக்குகாக போராடாத ஆர்.எஸ்.எஸ்இன் பரிவார அமைப்புகள்!

இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு பரிவார இயக்கங்களைப் பற்றி பிரம்மிப்பூட்டும் வகையில் விவரிக்கிறார் பா.ரா. இவை ஆரம்பிப்பதற்கு என்ன காரணம்? காந்தி கொலையின் போது அந்த இயக்கத்தின் சார்பில் பொது அரங்கில் பேசுவதற்கு யாருமில்லை என்று கோல்வால்கர் கவலைப்பட்டு இத்தகைய கிளைகளை ஆரம்பிக்கிறாராம். பா.ரா இதில் பார்க்கத் தவறிய உண்மை ஒன்று இருக்கிறது. என்னதான் தடை நீக்கபட்டாலும், பட்டேல் போன்ற தீவிர இந்துத்வவாதிகள் காங்கிரசில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொள்கையை நேரடியாக பேசுவதற்கும், செயல்படுத்துவதற்குமான ஒரு அரசியல் கட்சி இல்லை என்பதும், அரசியல் அதிகாரத்தில் நாமே நேரடியாக குதிக்க வேண்டும் என்ற அவாவே ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பரிவார இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாகும். அந்த வகையில் ஜனசங்கம் என்ற முன்னாள் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பிக்கு ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய தொழிற்சங்கம் இருக்கிறதாம். இன்னும் தேசமெங்கும் செல்வாக்கான மடங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் ஊடுருவி வேலை செய்யும் பலமான வி.எச்.பி, வடநாட்டில் அநேகமாக எல்லா மலைவாசி கிராமத்திலும் கிளைகள் கொண்ட வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று அவர்களது பலமான வலைப்பின்னலை ஒரு வியப்புடன் வாசகனுக்கு விவரிக்கிறார் பா.ரா.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருப்பதாகத் தோன்றும். இது தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி சங்கங்கள் அடித்துவிடும் பிரம்மாண்டமான உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும். மேலும் பொட்டு வைத்தவெனெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற பொதுப்புத்திக்கு முரண்படாத வாதமும் ஆகும்.

இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு அரங்கத்திற்கும் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ், அந்தப் பிரிவு மக்களின் எத்தனை கோரிக்கைகளுக்குப் போராடியுள்ளது என்கிற செய்தியை மட்டும் பா.ரா சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அபிமானத்திற்குரிய வாசர்களான மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படாத தகவலாய் இருக்கலாம்; ஆனால் வினவு வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆளும் வர்க்க கட்சிகளிலும் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு என்று வைத்திருக்கிறார்கள். இவர்களாவது அந்தந்த வர்க்கப் பிரிவினரின் கோரிக்கைக்காக ஒரு சந்தர்ப்பவாதமாகவாவது போராடியிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியே வியாபாரமாகப் போய்  விட்ட சூழலில், படித்த எத்தனையோ இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலையில், எத்தனையோ அரசுக் கல்லூரிகள் அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஏ.பி.வி.பி ஆரம்பிக்கப் பட்ட இத்தனை வருடங்களில் எத்தனை முறை போராடியிருக்கிறார்கள்?

மாணவர் சமுதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நடத்திய இயக்கங்கள் எத்தனை? சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க ஏ.பி.வி.பி ஏன் ஆரம்பிக்கப் பட்டது? யாருடைய நலனுக்காக இயங்குகிறது?

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். பா.ராவே பதில் சொல்கிறார் – மாணவர்களை மொழிப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தடுத்து அவர்களை அரசியல் விலக்கம் செய்வது தான் நோக்கமாம். ஏ.பி.வி.பியில் இணையும் மாணவனை ஷாகாக்களுக்கு வரவழைத்து இந்துத்வத்தை ‘உணர்வாகவும் உணவாகவும்’ ஊட்டுவார்களாம் (பக்கம் 44). மொழி உரிமைப் போராட்டம் என்று பா.ரா குறிப்பிடுவது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தான். அதாவது, தமது பார்ப்பன சனாதன தருமத்தின் பரவலுக்கு மாணவர் பிரிவினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து விடாமல் தடுத்து அவர்களை மடை மாற்றி மதவெறி ஊட்டி பாசிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

அதே போல் உலகிலேயே முதலாளிகளைக் கேள்வியே கேட்காமல் உழைக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கருங்காலி தொழிற்சங்கம் தான் பி.எம்.எஸ். அந்த வகையில் முதலாளிகள் இந்த சங்கத்தை ஸ்பான்சர் செய்து வளர்த்தார்கள். முதலாளிகளும், தொழிலாளிகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கை முழக்கம். மே தினத்திற்கு பதில் விசவகர்மாவின் ஜன்ம நட்சத்திர தினத்தைத்தான் தொழிலளிகளும், முதலாளிகளும் கொண்டாட வேண்டுமென்பது இந்த சங்கத்தின் சுதேசிக் கொள்கை.

பழங்குடிகள் போராட்டத்தை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்!

வடநாட்டில் வனவாசிகள் வாழும் கிராமம் தோறும் கிளைகள் கொண்டிருப்பதாக பா.ராவால் வியந்தோதப்படும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் ஒரிசாவிலும் சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும், பீகாரிலும், மேற்குவங்கத்திலும் வனவாசி மக்கள், பன்னாட்டு நிறவனங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த போது எங்கே போனது? இதன் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் எங்கே மாயமாக மறைந்து போனார்களா?

அயோத்தி புனிதம். மதுரா புனிதம். காசி புனிதம். எனில்  நியாம்கிரி புனிதமில்லையா? கோண்ட் இன மக்களின் வாழ்வாதாரமாய் இருக்கும் அம்மலையை பன்னெடுங்காலமாய் அவர்கள் புனிதத்தாயாக வணங்கி வருகிறார்களே அதை அவர்களிடமிருந்து பறித்து, அம்மண்ணை விட்டும், கோண்ட் தாயை விட்டும் விரட்டியடித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இந்திய இராணுவமே களத்தில் இறங்கியிருக்கும் போது, குண்டாந்தடிப் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் செய்ததென்ன? பாரதிய ஜனதா மூலமும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலமும் திரட்டப்பட்ட சில கைக்கூலி பழங்குடியினரை வைத்து சல்வாஜூடும் என்கிற குண்டர் படையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து லட்சக்கணக்கான பழங்குடியினர் மேல் ஏவி விட்டுள்ளனர். போஸ்கோ, மிட்டல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அடியாள் படையாக அணிதிரட்டி நிறுத்தியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்இன் சங்க பரிவார அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை கோடிகளில் காட்டும் கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரும், ‘மாபெரும் அறிஞரு’மான பா.ராவுக்கு இந்த உண்மைகள் மறந்தும் கூட தெரியாமல் போனது என்?

பெண்கள் சேரமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸும் அல்கைதாவும்!

பெண்களுக்காகத் ‘தனியே’ ஒரு இயக்கம் ஆரம்பித்தது இவர்களுடன் பெண்கள் நிறைய சேர ஒரு காரணம் என்று பா.ரா ஆச்சரியமாய்க் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் அவர் குறிப்பிடாமல் மறைத்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.  தி.மு.கவாகட்டும், அ.தி.மு.கவாகட்டும் இன்னும் உலகில் எந்தவொரு அரசியல் சமூக இயக்கங்களாகட்டும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், உலகிலேயே பெண்களை இயக்கத்தில் சேர்க்காமல் ‘தனியே’ தள்ளி வைத்திருக்கும் இயக்கங்கள் மூன்று தான் – ஒன்று கூ -க்ளக்ஸ் – க்ளான், இரண்டு அல்காயிதா, மூன்று ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்இன் விதிமுறைப்படி அங்கு பெண்களுக்கு இடமில்லை. அதனால்தான் பெண்களுக்கென்று தனியே ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். சங்கபரிவார அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு பெண் உறுப்பினராக சேரக்கூடாது என்று இன்றும் அதாவது இருப்பத்தியோராவது நூற்றாண்டிலும் ஒரு கூட்டம் இருக்கிறு என்ற பாசிச உண்மையை அதன் பக்தரான பா.ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் அவரும் அத்தகைய விழுமியங்களை, பச்சையான ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சான்றோர்தானே?

ஆதாரம் வேண்டுவோர் பா.ராவை அணுகி அதுகுறித்து கல்கி பத்திரிகையில் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி என்ன சொல்லியிருக்கிறார், உயிரோடு இருக்கும் ஜெயேந்திரர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் தப்பாமல் சொல்வார். ஏனெனில் அந்த மேற்கோள்களை பக்தி சிரத்தையோடு பிழை திருத்தம் பார்த்த பக்தர் அவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்இன் ஒழுக்கமும், தேசபக்தியும் உண்மையல்ல!

பா.ரா தனது நூலின் நெடுக ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி எந்த விமரிசனத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையாக அவர் கூறுவது, போற்றுவது, வாசகர்களிடம் உருவாக்க நினைப்பது என்ன? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள், முக்கியமாக திருமணத்தை தியாகம் செய்த பிரம்மச்சாரிகள் என்றும் புகழ்கிறார். இதை வாசகர்கள் எந்த சந்தேகமின்றியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

நாம் ஒரு வாதத்திற்காக பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா – உமாபாரதி காதல் கதைகளும், பிரச்சாரக் சஞ்சை ஜோஷியின் காமக் களியாட்டங்கள் சி.டியாக வலம் வந்ததையும், வாஜ்பாயி, இல.கணேசன் போன்ற அக்மார்க் பிரம்மச்சாரிகளின் யோக்கியதை குறித்து குமுதமே கிசுகிசு எழுதி அம்பலமாகி ஊரே நாறி சிரிப்பாய்ச் சிரித்ததை ஒதுக்கி வைத்து விட்டு பா.ரா அளிக்கும் ஒழுக்கவாத சான்றிதழைப் பார்க்கலாம்.

ஒழுக்கம் என்பது என்ன? அதன் அளவு கோள் என்ன?

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருவன் ரொம்ப ஒழுக்கமானவன். புகைப் பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நெற்றியில் பட்டை – கழுத்தில் கொட்டை; பெரிய பக்திமான். முக்கியமாக அவன் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், அவன் தொழிலில் மட்டும்  விபச்சாரத் தரகன். இவனின் ஒழுக்கம் பற்றி இப்போது நீங்கள் கொள்ளும் மதிப்பீடு என்ன?

ஆக, ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களிலும் தனிப்பட்ட பண்புகளிலும் மட்டும் சுருங்கிக் கொள்வதல்ல. அது அம்மனிதன்  சமூக உறவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டும் தான் உருவெடுக்கிறது. சமூக உறவுகளில் ஒழுக்கமில்லாத ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய ஒழுக்கவானாக இருந்தாலும் அவன் ஒரு அயோக்கியனே. இல்லையென்றால் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல், கோவில் கொடைகளுக்கு வாரி வழங்கும் பல்வேறு ரவுடிகளையும் நாம் பிரச்சாரக்குகள் போன்று போற்ற வேண்டும். இந்திய இராணுவத்தின் இரகசியங்களை விற்று கைதான தீவிர ஆன்மீக சிவபக்தரான கூமர் நாராயணனையும் நாம் வணங்க வேண்டும்.

வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.கவின் பாரத மாதா விற்பனை!

பா.ரா தனது நூலின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தியை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் வைத்து போற்றுகிறார். வேறு பெரிய விளக்கங்களை இதற்கு நாம் தேட வேண்டிய அவசியம் எதையும் வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஒருவர் போராட்டம் ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப் பட்ட போது நீதி மன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த ‘தேசபக்தியை’ தெளிவாக விளக்குகிறது.

“He had given a confessional statement in the court which helped in his release from the jail for his being just the onlooker of the assembly which went on to damage the government property. At that time he was a dedicated and active member of RSS. In his confession he wriggles out of active participation. ‘ I along with my brother followed the crowd, I did not cause any damage. I did not render any assistance in demolishing the government buildings’ ” (<http://www.milligazette.com/Archives/15-12-2000/Art6.htm>)

மேலே உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காட்டியும் கொடுத்த அந்த தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். தேசவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அந்த தேர்ந்த முன் அனுபவம் தான் பிற்காலத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தையே காட்டிக் கொடுக்க அவருக்குக் கை கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் தனது சுதேசி ஜாக்ரன் மன்ச் எனும் ஒரு காமெடி பீஸு இயக்கத்தை கொண்டு மக்களிடம் சுதேசிப் பொருள்களின் பட்டியலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவரோ சுதேசி நிறுவனங்களை விதேசிகளிடம் ‘தேசபக்தியோடு’ விலை பேசிக் கொண்டிருந்தார்.

ஒழுக்கமான, நேர்மையான, பிரம்மச்சாரியான இன்றைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்ன செய்கிறார்? அப்பட்டமாய் அம்பலமாகி ஊரே காறித்துப்பிய பொம்பளைப் பொறுக்கி மற்றும் கொலைகாரனான காஞ்சி சங்கராச்சாரியின் காலைக் கழுவிக் குடிக்கிறார். நித்தியானந்தா அம்பலமாகி நின்ற போது ஒரு அடையாளமாகக் கூட எந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் கண்டிக்க வில்லை. இன்னொரு ஒழுக்கமான பிரம்மச்சாரி பிரச்சாரக்கான வாஜ்பாயி, நம்மிடம் பாரதமாதா படத்தைக் கொடுத்து சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு – வெளியே பாரதமாதவைப் பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். அதாவது பாரதமாதாவை ஏகாதிபத்தியங்கள் ‘கற்பழிப்பதற்கு’ ரேட்டு பேசினார்.

இந்தத் தேசத்தின் நதிகளெல்லாம் புனிதமென்று ஷாகாவில் பயின்று வந்த பிரச்சாரக்கான வாஜ்பாயி தான் கங்கையை விலை பேசினார். எங்கள் தேசத்தின் புழுதியே சந்தனம் தானென்று தினமும் ஷாகாவில் பஜனை பாடிய பயிற்சி பெற்று வந்த வாஜ்பாயி  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சுயாட்சிப் பிரதேசங்களாகப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளார்.

தேசபக்தியென்பது காவிக் கொடியேந்திய லட்சுமி படத்தை பாரத மாதாவென்று சொல்லி சூடம் சாம்பிராணி காட்டி கும்பிடுவது தானா? தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா? இல்லை காவிக் கொடியேந்திய லட்சுமி படமா? இல்லை. ஒரு தேசம் என்பது அதனுள் ரத்தமும் சதையுமாக வாழும் மக்கள். அந்த மக்களின் நலனுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. இந்தப் பரிவாரங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டங்களை, இயக்கங்களை எத்தனை முறை முன்னெடுத்திருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்பதே இந்த தேசபக்தர்களது யோக்கியதை.

ஆர்.எஸ்.எஸ்இன் பிரம்மச்சாரி பிரச்சாரக்குகள் தியாகிகளாம்!

அயோத்தி ராமனை இந்த நாட்டின் மாபெரும் இலட்சிய புருஷன் என்று அவாள் கம்பெனிகள் போற்றுவதற்கு என்ன காரணம்? எல்லா  இராமயணங்களும், அதன் உபன்னியாசர்களும் அதற்கு இறுதியில் கூறும் காரணமென்னவென்றால் இராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பதாகும். ஒரு நாட்டில் ஒருவன் ஒரு பெண்டாட்டியை வைத்திருக்கிறான் என்பதற்காகவே அவனை போற்றுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்றவர்களெல்லாம் பொம்பள பொறுக்கிகள் என்று அர்த்தம்.

அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமென்பதால் இந்த தியாகத்தின் உண்மை ரூபம் வெளியே கசிவதில்லை.

ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், காஷ்மீரத்திலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகளை இழந்து அனாதைகளாய் கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் காமத்தை திருட்டுத்தனமாய் அடக்கினான் என்பதுதான் தியாகமா? பா.ராவின் ஆய்வு இந்த விசயத்தில் ஆபாசமாகவும், அருவெறுப்பாயும் இருக்கிறது.

முடிவுரை:

உலக பாசிச இயக்கங்களின் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்!

முதல் உலகப் போர் முடிந்து, ரசியாவில் கம்யூனிச எழுச்சி ஏற்பட்ட பிறகு 1920களில் உலகமெங்கும் உள்ள முதலாளிகளில் தீவிர தேசியத்தின் முகமூடியில் இனவெறி பேசிய பாசிச பிரிவினர் தோன்றுகிறார்கள். இனிமேலும் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியாது என்று மத,சாதி,இனவெறியின் பேரில் தோன்றிய ஹிட்லரின் நாசிக் கட்சி, முசோலினியின் பாசிசக் கட்சி, ஜப்பானின் தேசியவெறி மன்னராட்சி முதலான சமகால பாசிச இயக்கங்களின் வரிசையில்தான் அதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோன்றுகிறது. மற்ற இயக்கங்கள் பாசிசத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து பின்னர் அழிந்து விட்டன என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணம் இந்த நச்சுப் பாம்புகளை, இவர்களது பார்ப்பனியத்தை எதிர்த்து இந்தியாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன என்பதுதான்.

இன்று தீவிர இந்துத்வம் பேசினால் கடை ஓடாது என்ற நிலையில் அரசியல் ரீதியில் அவர்கள் காலாவதியாகும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு ஒளிவட்டம் போட்டு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் பா.ரா. உலகமயமாக்கத்தின் தயவில் நுகர்வுக் கலச்சாரத்தில் முங்கி எழும் நடுத்தர வர்க்கம் தனது பண்பாட்டு ஏக்க புலம்பலுக்காக ஆன்மீகம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று சுயதிருப்தி அடையும் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் வருகிறது. மேலும் பொதுப்புத்தியில் இந்துத்வம் வலுவாக படிந்திருக்கும் நிலையில் அதை விற்று காசாக்கும் நோக்கில்தான் கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூல் திட்டமிட்டு பொய்களோடும், புனைவுகளோடும் சந்தையில் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

பா.ராவை ஆதரிப்போரும், விமரிசிப்போரும் ஸ்வயம் சேவக்குகளே!

இதனால் அரவிந்த நீலகண்டன், ஜடாயு, டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதல்ல. அவர்களைப் பொறுத்த வரை பா.ரா வை கொஞ்சம் செல்லமாக கடிந்து விட்டு அவர் இந்துத்வத்தின் தீவிர இலட்சியத்தை இந்த நூலில் முன்வைக்க வில்லை என்று விமரிசிப்பார்கள். இது அசோக் சிங்காலின் குரல் என்றால் அதே ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அருண் ஷோரி, இந்தியா டுடே, வாஜ்பேயி, கிழக்குபதிப்பகம், தமிழ் பேப்பர் போன்ற முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்வவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் இந்த நூலை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த புத்தகம் தராளமய தாசர்களான இந்துத்வவாதிகளை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

எது வரலாறு?

வரலாறு என்பது எப்போதும் தெளிவான சித்திரத்தை பதிவு செய்து எதிர்காலத்திற்கு வழங்கிவிடும் ஒன்றல்ல. உண்மையில் வரலாறு என்பதே சமூகத்தின் நிகழ்ச்சிப் போக்கான இயக்கத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒன்றாகும். இதில் எதை நீங்கள் கண்டு பிடிக்க போகிறீர்கள் என்பது உங்களது வர்க்க நலன் தீர்மானிக்கும். அந்த வகையில் எல்லா வரலாறுகளும் கூட அந்தந்த வர்க்க நலன்களின் விருப்பங்களோடும், தேவைகளோடும்தான் உருவாகிறது. அதனால் வரலாறு என்பது முழுக்க அகநிலை விருப்பங்களால் புனைந்துரைக்கப்படும் புனைவு என்று பொருளல்ல. அது பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எதை பார்க்க விரும்புகிறீர்கள், எதை முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள், யாருக்காக ஆய்வு செய்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது என்கிறோம்.

சாரமாக பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து பார்த்தால் வரலாறு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நீதிக்காக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை குறிக்கிறது என்று அறியலாம். அதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒடுக்கும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உருவானது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ளலாம். கூடவே நூலாசிரியர் பா.ராவின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த நூலுக்கு பா.ரா படித்த புத்தகங்களில் அதிகம் இருப்பது ஆர்.எஸ்.எஸ்இன் வெளியீடுகள்தான். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அந்தக் காலத்திலேயே இராமன் குரங்கு கூட்டத்தை வைத்து மண்ணால் பாலம் கட்டினான் என்று வரலாறு எழுதும் இந்த கும்பலிடமிருந்து எதை ஆய்வுக்கு எடுக்க முடியும்? ஒருவேளை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பிற்போக்கு பாத்திரத்தை நிறுவுவதற்குத்தான் பயன்படவேண்டும். ஆனால் பா.ரா அவர்களது புளுகுகள் பலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார். அந்த வகையில் பா.ராவையும் நாம் ஒரு இலட்சியப் பூர்வமான ஸ்வயம் சேவக் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாது தலைவர் கோல்வல்கர் எழுதிய ஞானகங்கை நூலில் அவர் ஹிட்லரையும், இஸ்ரேலையும் வியந்தோதி வழிப்பட்டிருப்பதெல்லாம் கூட பா.ராவின் காமாலைக் கண்ணுக்கு தென்படவில்லை. சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தையும், துவேசத்தையும் கக்கும் படிமங்களும், வசனங்களும் அந்த நூலில் ஏராளம். இருந்து என்ன பயன்?

கிழக்கு பதிப்பகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம். பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதற்கு கடன் அட்டை வசதி வழங்கும் வெகு நவீனமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பா.ராவின் இந்த நூல் ஒரு காயலான் கடையில் இருக்கும் ராஜேஷ்குமாரின் பழைய பாக்கெட் நாவலின் தரத்தில் கூட அதாவது உள்ளடக்கத்தில் இல்லை. முதலாளித்துவ பதிப்பகங்களிடம் இருக்கும் குறைந்த பட்ச தரமும், நம்பகத்தன்மையும் இந்த நூலில் நிச்சயம் இல்லை. இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார்கள் என்ற அலட்சியம் கூட இந்த டவுண்லோடு அறிவாளிகளிடம் இருக்கலாம்.

கல்கி பத்திரிகையில் சீனியர் சங்கராச்சாரியின் அருள் வாக்கோடு அறிவைப் பயின்ற இந்த பா.ராகவன் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பார்ப்பனிய அறிஞர்தான். கூடவே அவர் சுஜாதாவின் ‘சிலிர்ப்பான’ நடையையும் கொஞ்சம் பயின்றிருக்கிறார். இது பதிவுலகின் மொக்கைகள் பலரும் ஆராதிக்கும் விசயமாகும். ஆனால் பா.ராவின் இந்த நடையைப் பார்த்தால் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. எது ஆர்.எஸ்.எஸ்இன் கருத்து, எது பா.ராவின் கருத்து என்று பிரித்தறிய முடியாமல் பேருக்கு ரெண்டு விமரிசனங்களையும் கலந்துவிட்டு ஏதோ மர்ம நாவலைப் போல திடுக்கிடும் கோணங்களில் அவர் எழுதுவதைப் பார்த்தால் காறித் துப்பத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பகத்தை கேள்வி கேளுங்கள்!

கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன?

சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ்  நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்! கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரின் நூலே இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்றால் மற்ற கத்துக்குட்டிகளின் புரட்டுக்கள் எப்படி இருக்குமென்பதை அறிந்து கொள்ளுங்கள்!

வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய்  கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.

_______________________________________________________________

பின்குறிப்பு:

  1. எங்களுக்கு நேரம் அமைந்தால் இது குறித்து தனியான அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த கட்டுரையில் பேசாத விசயங்கள் அத்தனை குறித்தும் விளக்குகிறோம். முடிந்தால் தனியாக ஒரு நூலையும் கொண்டு வர முயல்கிறோம்.
  2. இந்த ‘நூல்’ ஆசிரியர் காஷ்மீர் குறித்தும் ஒரு வரலாறு எழுதியிருக்கிறார். கூடிய விரைவில் அது குறித்த விமரிசனம் வரும்.

__________________________________________________

விளக்கக் குறிப்புகள்:

ஆர்.எஸ்.எஸ்: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். பொருள்: தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களது இயக்கம்

விநாயக தாமோதர சாவர்கர்: ஆரம்பத்தில் இந்து விழுமியங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த தேசியவாதியாகவும், பின்னர் காலனிய ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்வவாதியாகவும் மாறிய மராட்டியத்தை சேர்ந்த சித்பவன பார்ப்பனர்.

கேசவ பலிராம் ஹெட்கேவார்: ஆர்.எஸ்.எஸ்ஐ 1925இல் ஆரம்பித்தவர். 1940இல் மரணம் அடைகிறார்.

மாதவ சதாசிவராவ் கோல்வல்கர்: ஹெட்கேவாருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரானவர்

மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்: கோல்வல்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் மூன்றாவது தலைவரானாவர்.

ஷாகா: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக சந்திக்கும் கிளை

ஸ்வயம் சேவக்: ஆர்.எஸ்.எஸ் ஷாகக்களுக்கு வருகை தரும் உறுப்பினர்.

பிரச்சாரக்: ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியர்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்: ஏ.பி.வி.பி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பு.

வனவாசி கல்யாண் ஆஷ்ரம்: பழங்கடி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த இயக்கம்.

ராஷ்ட்ரிய சேவிகா சமிதி: ஆர்.எஸ்.எஸ்இன் பெண்கள் அமைப்பு

விசுவ ஹிந்து பரிஷத்: உலக அளவில் இந்துக்களை அணிதிரட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த அமைப்பு

பி.எம்.எஸ்: பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்இன் தொழிலாளர்(முதலாளிகளும்தான்) பிரிவு

அஜினோ மோட்டோ: நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் சீனத்து உப்பு. அப்படி பா.ராவின் மொழி நடையை நினைத்தால் மொக்கைகளுக்கு கிளர்ச்சி வருமாம்.

ராஜரிஷி: ஷத்திரிய மன்னர்களை இந்து வருண சாதி தர்ம அறத்தின் வழியில் நடத்திய பார்ப்பன சாணக்கிய குருக்கள்

___________________________________________________________

இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள்,நூல்கள் பல இருக்கின்றன. எனினும் இணையத்தில் உள்ள சுட்டிகளை மட்டும் இங்கு இணைக்கிறோம்.

http://www.countercurrents.org/gatade240507.htm

http://www.radianceweekly.com/38/67/Fascism-and-Muslim-Today/2006-10-22/Cover-Story/Story-Detail/Fascism-in-India.html

http://goanobserver.com/high-cost-of-freedom.html

http://www.countercurrents.org/dalit-george020906.htm – Fascism Versus Indigenous People

http://www.countercurrents.org/teltumbde100510.htm – Modi Vomits Caste Venom

http://www.countercurrents.org/dalit-sivaraman250903.htm – Amedkar vs Hindutva

http://www.countercurrents.org/desai160510B.htm – Background of Gujarat Riots

http://www.countercurrents.org/gatde130710.htm – Hindutva Terror

http://www.indianexpress.com/storyOld.php?storyId=34620 – GOA – A Liberation from Lies

http://www.storyofpakistan.com/articletext.asp?artid=A119 – Minto Morley Reforms

http://www.hinduonnet.com/fline/fl2207/stories/20050408001903700.htm – SAVARKAR’S MERCY PETITION

http://pd.cpim.org/2001/march25/march25_nalini.htm – Savarkar Pledged Loyalty To British Government

http://www.indianexpress.com/res/web/pIe/columnists/full_column.php?content_id=2638 – Hindu Rashtravad

http://www.punjabspectrum.com/english/index.php?option=com_content&view=article&id=1840:golden-gloss-on-khaki-knickers-rss&catid=171:politics&Itemid=173 – GOLDEN GLOSS ON KHAKI NICKERS

http://www.rediff.com/news/2004/aug/23spec1.htm – Who was Veer Savarkar

http://www.revolutionarydemocracy.org/rdv7n1/videshi.htm – Videshi roots of RSS

மற்றும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்கள், ம.க.இ.க வெளியீடுகள், எஸ்.வி.ராஜதுரையின் நூல்கள்….

 

நன்றி: வினவு

கம்யூனிசமும் குடும்பமும் – புத்தக அறிமுகம்

17 ஜன

ஆசிரியர் : தோழர் அலெக்சான்ட்ரா கொலந்தாய்

ஆசிரியர் குறிப்பு : 1872ல் பிறந்தார். 1899-ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903-ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார்.1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.

புத்தகத்திலிருந்து… சில பகுதிகள்.

//தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை// பக். 6.

//அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது// பக். 10

//உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்// பக். 15.

//அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்// பக். 19.

//வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்// பக். 16

//முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது// பக். 20

//முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம் உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது// பக். 21.

//கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல// பக்.22

//மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்// பக். 22

//உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்// பக். 23

//பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!// பக்.24

1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family – என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

விலை ரூ. 20/- பக்கங்கள் : 24

வெளியீடு : பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 600 095. தொலைபேசி : 98416 58457

கிடைக்கும் இடம் : கீழைக்காற்று, சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் 39, 40 கடைகளில் கிடைக்கும்.

நன்றி: குருத்து

நூல் வெளியீட்டு விழா: அழைக்கிறோம் வாருங்கள்

23 டிசம்பர்

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

 

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

 

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

 

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

 

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்
, பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

 

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)