Tag Archives: தனியார்மயம்

இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

26 பிப்

நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்?” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.

கடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.

நகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில்? கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா? நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன? கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா? யார் பொறுப்பேற்பது? யார் விளக்குவது?

எனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா? இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்

21 ஆக

 

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது. 

இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்

பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.

போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். 

இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.

மக்களுக்கான கடன் மறுக்கப்படும்

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…

தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்

க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் 

* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!

* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக!

* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!

* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!

* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!

* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!

* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே!

* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.

எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர், 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,

தமிழ்நாடு.

 

முதல் பதிவு: தீக்கதிர்

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

13 ஜூலை

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

 

அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

 

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

 

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

 

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

 

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

 

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

 

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

 

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

 

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

 

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

 

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

 

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

 

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

 

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

 

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

 

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

 

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

 

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

 

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

 

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில் 

 

கடலூர் ஜூலை 15ல்

சென்னை ஜூலை 17ல்

திருச்சி ஜூலை 19ல்

விழுப்புரம் ஜூலை 22ல்

 

மின்வெட்டு, மின்கட்டண உயர்வு: காரணமும் தீர்வும்

4 ஜூலை

நூல் அறிமுகம்

 

 

மின் வாரியத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற மின் பொறியாளர் சா.காந்திஎழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண் உயர்வும் ,காரணமும் தீர்வும்” என்ற் புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில்,மின் கட்டணம் வேகமாக உயர்ந்துள்ள சூழலில், தமிழக மின் வாரியத்தின் உள்ளே நடக்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் நடக்கும் குளறுபடிகளின் பிண்ணனியில் இப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற பொருளாதார தத்துவங்கள் 1990 களின் பின் பகுதியில் நம் நாட்டில் கோளோச்ச துவங்கிய பின்பு, நம்து எல்லா சட்டங்களும் மக்கள் நலன் என்ற பாதையிலிருந்து மெல்ல விலகி தனியார் லாபம் என்ற கணக்குக்கு மாறி விட்டது.(டங்கல் திட்டம் காவல் துறை, ராணுவம் தவிர எல்லா துறைகளையும் அரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனக்கூறியது)
கடந்த 2001 ஆண்டு வரை ரூ 387.67 கோடி லாபம் பார்த்த தமிழக மின்சாரவாரியம் அதற்கு அடுத்த ஆண்டே ரூ. 110.13 கோடி நட்டத்தை சந்தித்தது. 

இந்த கால கட்டத்தில்தான் தனியார் முதலாளிகள் மின்சாரம் உற்பத்தி செய்ய கால் ஊன்றுகின்றனர். அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவிகளை நிறுத்துகிறது.2003 ஆம் ஆண்டுநம் நாட்டில் புதிய மின்சார சட்டம் வருகிறது. இது மாநில அரசின் கையிலிருந்த மின் துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டிப்பாட்டுக்கு மாற்றுகிறது.ஒய்வு பெற்ற அதிகாரிகளை நீதிபதிகளை போல செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்தனியார் தங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குகூடுதல் தொகையை மின்வரியத்திடமிருந்து பெறமுயன்று வெற்றி பெற்றனர்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கங்கள் செலவு செய்த மூலதனத்தொகை கூட மின் வாரியம் தனியாருக்கு தர உத்திரவு இடப்பட்டது.மின் வாரியத்தின் வருவாய் தனியார் மின் முதலாளிகளை தாலாட்டவே பற்றாக்குறையாயிருந்தது. புதிய மின் நிலையங்கள் இல்லாத நிலையில் மின் பற்றக்குறை அதிகரித்தது. தனியார் முதலாளிகள் ஒரு யுனிட்டுக்கு ரூ 2 மின்கட்டணத்தை ரூ7 வரை விலை வைத்தனர். சில நெருக்கடியான் சுழலில் ரூ17.78 காசுகள் வரை நீண்டது. ஜி.எம்.ஆர் ,பி.பி.என். மதுரை பவர் , சாம்பல்பட்டி, நெய்வெலி எஸ்.டி.சி.எம்.எஸ் ஆகிய தனியார் பன்னாட்டு கம்பெனிகள் பெருத்த லாபம் அடைந்தன. மின்சார ஒழுங்கு முறை ஆணையமோ வருடம் தோரும் மின்ட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்திரவும் இட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு ந்வீன தாராள மயக்கொள்கையின் விழைவு.மின்சாரம் மக்கள்மயமாக்களுக்கு பதிலாக ஒரு சில தனியாருக்கு சொந்தமானதாக மாறிவருகிறது.மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்துறையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2003 மிசார சட்டத்தை நொருக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை தகுந்த புள்ளிவிபர மற்றும் பிற சான்றுகள் மூலம் சுட்டிகாட்டியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தினை உருவாக்க பெரிதும் உதவியதாக டாக்டர் ஆர். ரமேஸ் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இப் புத்தகம் மிகுந்த கவனம் பெறவேண்டியது அவசியம். அரசியல் இயக்கங்கள் இது குறித்து விவதத்தை துவங்க வேண்டும்

வெளியீடு: ஆழி பப்ளிகேசன்,மே 17 இயக்கம்,பெரியார் திராவிடர் கழகம்.
1A திலகர் தெரு.பாலாஜி நகர்,துண்டல்,அய்யப்பந்தாங்கல்,சென்னை 600 077 போன் 9940147473

– ச.பாலமுருகன், முகநூல் பக்கங்களிலிருந்து….

 

நன்றி: தோழர் சாக்ரடீஸ்

 

மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

1 ஜூன்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் தகுந்ததாகும், அதுவே சரியானதுமாகும் என எந்த மீளாய்வுக்கும் ஆயத்தமின்றி ‘நம்புபவர்களை’ விட்டு விடுவோம். ஜாதி மதங்கள் அபத்தமானவை என்று ஏற்பவர்களும் கூட சமூக அழுத்தங்களால் நீடித்துக் கொண்டு; அந்த அழுத்தங்களின் தயக்கங்களால் தம் குழந்தைகளையும் அவர்கள் அழுந்திக் கிடக்கும் ஜாதி மதங்களுக்குள்ளே அழுத்தி வைப்பது என்ன நீதி?

 

எவரையும், ஏதாவது ஒரு மதத்தின், ஜாதியின் வார்ப்பாய் இருக்க வைப்பதில் நடப்பு கட்டுப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, குறிப்பாய் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள். தம் குழந்தைகளை ஜாதி மதமற்றவர்களாய் வளர்க்க விரும்பும் யாரும் முதலில் எதிர்கொள்வது இந்த தலைமை ஆசிரியர்களைத் தாம். ஒரு குழந்தையை பயிற்றுவிப்பதில் எந்த அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் ஊதியத்துக்கான ஒரு வேலையாய் மட்டுமே ஆசிரியத் தொழிலை கருதுபவர்கள், இந்த சூழலில் மட்டும் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக மாறிப் போவார்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்த விசயம் என்பதால் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள் என்பார்கள். அரசின் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டுவார்கள். வளர்ந்த பின் அவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கான வழிமுறைகள் எனக்குத் தெரியாது, எதற்கும் நீங்கள் வட்டாட்சியரையோ, வருவாய் அலுவலரையோ சந்தித்து கடிதம் வாங்கி வாருங்களேன் என்று கை கழுவுவார்கள்.

 

சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பவர்கள் யார்? தன் குழந்தை எப்படி சுயநலமாய் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வேண்டும்? என்ன வேலைக்கு செல்ல வேண்டும்? யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்ன வழியில் வாழ வேண்டும்? என்பது வரை அனைத்திலும் தன்னுடைய விருப்பத்தை, ஆசையை, நிறைவேறாத கனவுகளை தன்னுடைய குழந்தைகளின் மீது நேரடியாக திணிப்பவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள், ‘உங்களின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்’ என்று. தன்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் வேண்டாம் என தீர்மானிப்பவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் சிந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செய்வார்கள். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய களிமண் எச்சமாக தன் குழந்தை இருந்தாக வேண்டும் என்பவர்களின் ஆட்சேபங்களை அற்பமாக எண்ணி நாம் கடந்தாக வேண்டும்.

 

நம் குழந்தைகளுக்கு தற்போது அரசு என்ன சலுகைகளை வழங்கி விட்டது? அடிப்படைத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையுமே தனியாரிடம் அடகு வைத்துவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் அரசு நம் குழந்தைகள் மீது என்ன கரிசனம் செலுத்தி சலுகைகளை தந்துவிடப் போகிறது? நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த கல்வியும், சரியான வேலை வாய்ப்புமே தேவை. அதை வழங்குமா இந்த அரசு? நம்மை பிச்சைக் காரர்களாய் மாற்றி நம் தன்மானத்தை விலையாய் கேட்கும், இலவச, விலையில்லாப் பொருட்களுக்கு கூட ஜாதி மதத்தை கூறியாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

 

எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று மிரட்டும் எவரையும், நிதானமாய் என்ன பிரச்சனை ஏற்படக் கூடும் என்று கருதுகிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கூற முடியாமல் விழிப்பார்கள். ஜாதி மதத்தை பதிவு செய்ய மறுப்பதால் ஏற்படப் போவதாக கருதப்படும் ஒரே பிரச்சனை இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மதத்தை பதிவு செய்வது போன்ற அபத்தம் வேறொன்று இல்லை. கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எனும் சொல்லை பொருளற்ற சொல்லாக மாற்றி நெடு நாட்கள் ஆகி விட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் போதிய வசதிகளற்று, ஆசிரியர்களின்றி, கவனமின்றி, கவனிப்பின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எதைச் செய்து விடும்? வேலை வாய்ப்பு .. .. ..? அரசு துறையில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் மிச்ச மிருக்கிறதா? அரசு துறையே மிச்சமிருக்கிறதா என்று உருப்பெருக்கி வைத்து தெடும் நிலை தான் இருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இருக்கும் சிலவும் கூட எப்படி எப்போது கைமாற்றுவது எனும் முடிவை எடுப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் இட ஒதுக்கீடு எனும் முழுச் சொல்லை அல்ல ‘இ’ எனும் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாது. இதை முன்வைத்தா சான்றிதழ்களில் அசிங்கங்களைச் சுமப்பது?

 

ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவன் என்று பதிவு செய்யுங்கள். இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்படி வெறும் வாய் வார்த்தையால் கூறினாலே சான்றிதழில் பெற்றோரின் விருப்பப்படியே பதிவு செய்தாக வேண்டும் என்று அரசாணை இலக்கம்:1210 கூறுகிறது.அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு 39 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1973 ஆம் ஆண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டு இன்று வரை நடப்பில் இருக்கிறது. ஆனால் இது குறித்து யாருக்கும் தெரியாது தெரிவிக்கப்படவும் இல்லை. மக்களை கசக்கிப் பிழிந்து விட்டு அதையே சாதனைகளாய், மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் அரசுகள், இந்த அரசாணை குறித்து மக்களுக்கு தெளிவிப்பதே இல்லை. அந்த அரசாணை கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் படியெடுத்து பள்ளிகளில் காட்டி ஜாதி மதமற்றவர்களாக பதிவு செய்யுங்கள். மறுத்தால், அவர்களின் மறுப்பை எழுத்து பூர்வமாக கேளுங்கள். நடுநடுங்கிப் போவார்கள். உங்கள் குழந்தைகளை ஜாதி மதம் மறுத்து பள்ளிகளில் சேர்த்து மனிதனாக வளர்க்க வாழ்த்துக்கள்.

 

கடைசியாக ஒரு தகவல்: உலகின் மொத்த மக்கட் தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்களே. அதாவது உலகில் கிருஸ்தவத்தை பின்பற்றும், இஸ்லாத்தை பின்பற்றும் மக்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

முதல் பதிவு: செங்கொடி

மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

1 ஜூன்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 

கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் தகுந்ததாகும், அதுவே சரியானதுமாகும் என எந்த மீளாய்வுக்கும் ஆயத்தமின்றி ‘நம்புபவர்களை’ விட்டு விடுவோம். ஜாதி மதங்கள் அபத்தமானவை என்று ஏற்பவர்களும் கூட சமூக அழுத்தங்களால் நீடித்துக் கொண்டு; அந்த அழுத்தங்களின் தயக்கங்களால் தம் குழந்தைகளையும் அவர்கள் அழுந்திக் கிடக்கும் ஜாதி மதங்களுக்குள்ளே அழுத்தி வைப்பது என்ன நீதி?

 

எவரையும், ஏதாவது ஒரு மதத்தின், ஜாதியின் வார்ப்பாய் இருக்க வைப்பதில் நடப்பு கட்டுப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, குறிப்பாய் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள். தம் குழந்தைகளை ஜாதி மதமற்றவர்களாய் வளர்க்க விரும்பும் யாரும் முதலில் எதிர்கொள்வது இந்த தலைமை ஆசிரியர்களைத் தாம். ஒரு குழந்தையை பயிற்றுவிப்பதில் எந்த அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் ஊதியத்துக்கான ஒரு வேலையாய் மட்டுமே ஆசிரியத் தொழிலை கருதுபவர்கள், இந்த சூழலில் மட்டும் நம் மீதும் நம் குழந்தைகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக மாறிப் போவார்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்த விசயம் என்பதால் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள் என்பார்கள். அரசின் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டுவார்கள். வளர்ந்த பின் அவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கான வழிமுறைகள் எனக்குத் தெரியாது, எதற்கும் நீங்கள் வட்டாட்சியரையோ, வருவாய் அலுவலரையோ சந்தித்து கடிதம் வாங்கி வாருங்களேன் என்று கை கழுவுவார்கள்.

 

சுய விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பவர்கள் யார்? தன் குழந்தை எப்படி சுயநலமாய் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வேண்டும்? என்ன வேலைக்கு செல்ல வேண்டும்? யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்ன வழியில் வாழ வேண்டும்? என்பது வரை அனைத்திலும் தன்னுடைய விருப்பத்தை, ஆசையை, நிறைவேறாத கனவுகளை தன்னுடைய குழந்தைகளின் மீது நேரடியாக திணிப்பவர்கள் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள், ‘உங்களின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்’ என்று. தன்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் வேண்டாம் என தீர்மானிப்பவர்கள் ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் சிந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செய்வார்கள். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய களிமண் எச்சமாக தன் குழந்தை இருந்தாக வேண்டும் என்பவர்களின் ஆட்சேபங்களை அற்பமாக எண்ணி நாம் கடந்தாக வேண்டும்.

 

நம் குழந்தைகளுக்கு தற்போது அரசு என்ன சலுகைகளை வழங்கி விட்டது? அடிப்படைத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையுமே தனியாரிடம் அடகு வைத்துவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கும் அரசு நம் குழந்தைகள் மீது என்ன கரிசனம் செலுத்தி சலுகைகளை தந்துவிடப் போகிறது? நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த கல்வியும், சரியான வேலை வாய்ப்புமே தேவை. அதை வழங்குமா இந்த அரசு? நம்மை பிச்சைக் காரர்களாய் மாற்றி நம் தன்மானத்தை விலையாய் கேட்கும், இலவச, விலையில்லாப் பொருட்களுக்கு கூட ஜாதி மதத்தை கூறியாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

 

எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று மிரட்டும் எவரையும், நிதானமாய் என்ன பிரச்சனை ஏற்படக் கூடும் என்று கருதுகிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கூற முடியாமல் விழிப்பார்கள். ஜாதி மதத்தை பதிவு செய்ய மறுப்பதால் ஏற்படப் போவதாக கருதப்படும் ஒரே பிரச்சனை இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மதத்தை பதிவு செய்வது போன்ற அபத்தம் வேறொன்று இல்லை. கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு எனும் சொல்லை பொருளற்ற சொல்லாக மாற்றி நெடு நாட்கள் ஆகி விட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் போதிய வசதிகளற்று, ஆசிரியர்களின்றி, கவனமின்றி, கவனிப்பின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசே முன்னின்று செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வியில் இட ஒதுக்கீடு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எதைச் செய்து விடும்? வேலை வாய்ப்பு .. .. ..? அரசு துறையில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் மிச்ச மிருக்கிறதா? அரசு துறையே மிச்சமிருக்கிறதா என்று உருப்பெருக்கி வைத்து தெடும் நிலை தான் இருக்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இருக்கும் சிலவும் கூட எப்படி எப்போது கைமாற்றுவது எனும் முடிவை எடுப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் இட ஒதுக்கீடு எனும் முழுச் சொல்லை அல்ல ‘இ’ எனும் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாது. இதை முன்வைத்தா சான்றிதழ்களில் அசிங்கங்களைச் சுமப்பது?

 

ஆகவே நண்பர்களே! தயக்கமின்றி சான்றிதழ்களில் ஜாதி மதம் தேவையற்றவன் என்று பதிவு செய்யுங்கள். இதற்கென்று தனியாக எந்த நடைமுறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குழந்தைக்கு ஜாதி மதம் தேவையில்லை என்று கூறினால் மட்டும் போதுமானது. அப்படி வெறும் வாய் வார்த்தையால் கூறினாலே சான்றிதழில் பெற்றோரின் விருப்பப்படியே பதிவு செய்தாக வேண்டும் என்று அரசாணை இலக்கம்:1210 கூறுகிறது.அதுவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு 39 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1973 ஆம் ஆண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டு இன்று வரை நடப்பில் இருக்கிறது. ஆனால் இது குறித்து யாருக்கும் தெரியாது தெரிவிக்கப்படவும் இல்லை. மக்களை கசக்கிப் பிழிந்து விட்டு அதையே சாதனைகளாய், மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் அரசுகள், இந்த அரசாணை குறித்து மக்களுக்கு தெளிவிப்பதே இல்லை. அந்த அரசாணை கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் படியெடுத்து பள்ளிகளில் காட்டி ஜாதி மதமற்றவர்களாக பதிவு செய்யுங்கள். மறுத்தால், அவர்களின் மறுப்பை எழுத்து பூர்வமாக கேளுங்கள். நடுநடுங்கிப் போவார்கள். உங்கள் குழந்தைகளை ஜாதி மதம் மறுத்து பள்ளிகளில் சேர்த்து மனிதனாக வளர்க்க வாழ்த்துக்கள்.

 

கடைசியாக ஒரு தகவல்: உலகின் மொத்த மக்கட் தொகையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்களே. அதாவது உலகில் கிருஸ்தவத்தை பின்பற்றும், இஸ்லாத்தை பின்பற்றும் மக்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூரில் மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம்

16 மே

 

கடையநல்லூர் கடைவீதியில் இருக்கும் எம்.ஒய்.எம் நூலக அரங்கத்தில் கடந்த 27/04/2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் நாகராசன் கலந்து கொண்டு மின்வெட்டு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.

 

மின்வெட்டு குறித்து அரசு திட்டமிட்டு பரப்பிவரும் பொய்ப் பரப்புரைகள், அதன் பின்னாலிருக்கும் அரசியல், மின் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது? அதற்கு யார் காரணம்? கூடங்குளம் அணு உலையை திறந்தால் மின்வெட்டு சரியாகிவிடுமா? போன்ற பல அம்சங்களை விரிவாகவும், புள்ளிவிபரங்களுடனும், தெளிவாகவும் விளக்கக் கூடியதாக தோழர் நாகராசனின் சிறப்புரை அமைந்திருந்தது. தோழரின் பேச்சை முழுமையாக கீழே இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியில் கேட்கலாம்.

 

பெருந்திரளான மக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு அரங்கம் நிறைந்த கூட்டமாக நடந்தது. வழக்கமாக இது போன்ற கூட்டங்களில் இஷா தொழுகை நேரத்தில் கலைந்து சென்றுவிடும் மக்கள் கூட்டம் இந்த முறை தோழர் முழுமையாக பேசி முடிக்கும் வரை யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கேட்டது குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.

 

முழுமையான உரையைக் கேட்க இங்கு சொடுக்கவும்

 

 

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

26 ஜன

 

வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?

 

இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?

 

இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?

 

இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.

 

90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

 

இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.

 

இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?

 

மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.

 

எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.

 

தொடர்புடைய பதிவுகள்

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்

தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.

முதல் பதிவு: செங்கொடி


ஊழலுக்கு எதிரான மெழுகுதிரி போராளிகளே! உங்கள் முகம் எங்கே?

7 ஜன

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், போராட்டம், அரசுக்கு சவால் என பெரிய அளவில் பேசி வரும் ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும் காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே. இவ்வளவு பெரிய இடம் மற்றும் பங்களாவை வெறும் ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே பதிவு செய்துள்ளார் அவர்!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் சாந்தி பூஷண் ரூ 1.35 கோடி முத்திரை வரி மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தி, அவர் இந்த தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

ஆனால் வழக்கம் போல இதை அரசின் பழிவாங்கல் என்றும் சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் சாந்தி பூஷண். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வருவாய்த் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஜனதாஆட்சியில் (மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில்) சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சாந்தி பூஷண். அமைச்சர் அந்தஸ்தைக் காட்டிதான் இவர் தனது வீட்டு உரிமையாளரை மிரட்டி வந்ததாக புகார் கூறப்பட்டது.

சாந்தி பூஷண் மீது ஊழல் குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை அல்ல!

*******************************************************

காந்தி குல்லா அணிந்து பட்டினி கிடந்தாலும், நேரு குல்லா அணிந்து செரிமாண பிரச்சனைக்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அல்லது வேறு எந்த வண்ணத்தில் குல்லா போட்டு சீன் காட்டினாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைத்த தீரர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் அம்பலப்படுவதால் மட்டுமே ஊழலை அதனால் ஒழிக்க முடியாதுஎன்று கூறவில்லை. ஒரு லோக்பால் அல்ல, ஒன்பது ஜோக்பால் வந்தாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல் ஒழிப்பு என்று பொதுமைப்படுத்தி பேசுவதால் குறிப்பாக வெளிப்பட்ட ஊழல்களை ஒளிப்பதற்கு மட்டுமே உதவும்.

 

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை ஊழலுக்கு உரமிடுகிறது. நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு செய்யப்படும் ஒப்பந்தங்களை மீறுவது மட்டுமே ஊழல் என்று சாதிக்கிறது. ஒப்பந்தப்படி கொள்ளையடித்தால் அது ஊழலும் இல்லை, சட்டப்படி குற்றமும் இல்லை. அன்னா கோமாளிகளோ அந்த ஒப்பந்தங்களை மீறினால் பிரதமரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூவுகிறார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அவர்களின் உழைப்புக் கருவிகளையே ஆயுதமாக ஏந்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் திட்டங்கள் அதை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வெண்ணெய் வெட்டி வீரர்களோ கையில் மெழுகுதிரியுடன் பொழுதுபோக்கிக் கொண்டு, அதையே போராட்டம் என்று நம்பச் சொல்கிறார்கள்.

இதோ இன்னோரு கடையநல்லூர்

2 ஜன

 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 28000 நெசவாளர் குடும்பங்களில் நெசவுத்தொழில் செய்தார்கள். ஆனால் இப்போது 1300 நெசவாளர்களே இருக்கிறார்கள். காரணம் என்ன?

 

செங்குந்தபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் குமாரிடம் பேசினோம். “பட்டுக்கு பாகு காய்ச்சி சேலை நெய்வது ரெம்பக் கஷ்டம். காலையில் இருந்து சாயங்காலம் அரை வேலை செய்தால்தான் 150 ரூபாய் கூலி கிடைக்கும். அதுவும் இப்போது ஒழுங்காக கிடைப்பதில்லை. கேட்டா, கோஆப்டெக்ஸில் இருந்து பண்ம் வரவில்லை என்கிறார்கள். அதனால் எங்களுக்கு கூலி கிடைக்க வாரக் கணக்கு, மாதக்கணக்கில் ஆகிறது. தாக்குப் பிடிக்க முடியாமல் எங்க ஊர்க் காரர்கள் எல்லாம் குடும்பத்துடன் சென்னையில் இருக்கும் பெரிய கடைகளில் கூலி வேலை செய்வதற்காக போய் விட்டார்கள். எங்களைப் போன்ற ஒரு சிலர் தான் வழியில்லாமல் இங்கேயே முடங்கிக் கிடக்கிறோம்” என்றார் வருத்தமாக.

 

சுந்தர விநாயகா கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான உலகநாதன், “நாங்கள் நெய்யும் பட்டுச் சேலைகளை தமிழக அரசு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக தள்ளுபடியில் விற்கிறார்கள். அந்த தள்ளுபடியை அரசு மானியமாக தருவது தான் வழக்கம். ஆனால் அரசு கடந்த சில ஆண்டுகளாக மானியத்தை கொடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு பணம் இன்னும் வரவே இல்லை. எங்கள் பகுதியில் இருக்கும் 27 சங்கங்களில் சில சங்கங்களில் மட்டும் தங்களுடைய சொந்தப் பணத்தில் நெசவாளர்களுக்கு கூலி கொடுக்கிறார்கள். மற்றவர்களால் அப்படி முடிவதில்லை. அதனால் எங்களுக்குச் சேரவேண்டிய ஒரு கோடி ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதோடு, கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டத்தை பவர் மெசின் மூலம் செய்வது நியாயமா? எங்களுக்குத்தான் அந்த ஆர்டரைத் தரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிம்மதியாக வாழமுடியும்” என்றார்.

 

இது ஜூனியர் விகடன் 18.12.2011 இதழில் வெளிவந்த செய்தி. இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கடையநல்லூரை நினைவுபடுத்துகிறதா? இது கடையநல்லூர் போன்று ஏதோ ஒரு சில பகுதிகளில் மட்டுமோ, கைத்தறி நெசவு போன்று ஏதோ ஒரு தொழிலில் மட்டுமோ நடைபெறும் நிகழ்ச்சியல்ல. மக்கள் தங்கள் வாழ்வை கடத்த செய்து கொண்டிருக்கும் அத்தனை தொழில்களுக்கும், அனைத்து ஊர்களுளிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

அரசுகள் மக்கள் நலம் சார்ந்து திட்டங்களை தீட்டுவதும் இல்லை, நடைமுறையில் இருக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதும் இல்லை. 80களில் தொடங்கிய ’குறுக்கீடில்லாத மறுகாலனியாக்கத்தை’ பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் படிப்படியாக அரசுகள் கொண்டு வந்தன. இதன் மைய நோக்கமே அரசு நடத்திக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து விலகி அவற்றை தனியார்மயமாக்குவது, அரசின் கொள்கையை முழுக்க முழுக்க நிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றுவது, சட்டரீதியாக நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் மக்களைச் சுரண்டி லாபமீட்டுவதற்கு தடையாக இருக்கும் அனைத்திலும் திருத்தம் செய்வது தேவைப்படும் புதுச்சட்டங்களை இயற்றுவது போன்றவை தான்.

 

இதன் அடிப்படையிலேயே கைத்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு, வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பும், நிதி உதவிகளும் படிப்படியாக நிருத்தப்படுதும், கைத்தொழில்களுக்கு என்றிருக்கும் சிறப்பு ரகங்களை பெரும் தொழிற்சலைகளில் உற்பத்தி செய்ய அனுமதிப்பதும் நடந்து வருகிறது. இதன் மூலம் வாழ வழியற்றுப் போகும் உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளினால் வேறு தொழில்களுக்கு போகும் போது அங்கும் இதுவே மீள நடக்கிறது.

 

குறிப்பாக கூறினால், ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவந்த விவசாயிகள், நசுக்கும் அரசின் திட்டங்களினால் மூன்று லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கானோர் தங்கள் நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு விவசாயக் கூலிகளாகவும், கூலித் தொழிலாளர்களாக நகரங்களுக்கு இடம் பெயர்ந்தும், பெட்டிக்கடைகளை வைத்து வியாபாரம் செய்தும் காலங் கடத்துகிறார்கள். குறுதொழிற்கூடங்கள் அரசின் ஊக்கமின்மையால் நசிவுற்று அதில் ஈடுபட்ட மக்கள் சில்லரை வணிகத்திற்கு வந்திருக்கிறார்கள். தற்போது அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம் மக்களை அங்கிருந்தும் விரட்ட முயற்சிக்கிறது.

 

கடையநல்லூரைப் பொருத்தவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கைத்தறி நெசவு தான் மக்களுக்கு இருந்த ஒரே வாழ்வாதாரம். இன்று கைத்தறி நெசவு வழக்கொழிந்து போகும் கடைசி எல்லையில் நிற்கிறது. பிற பகுதிகளில் மக்கள் கூலிவேலைக்கு சென்றார்களென்றால் கடையநல்லூரில் அது வெளிநாட்டு கூலிவேலையாக மாறியது. வெளிநாட்டு நாணயமாற்று மதிப்பு விகிதம் ஒப்பீட்டளவில் கடையநல்லூர் மக்களை ஓரளவு செழிக்க வைத்திருந்தாலும், நிலமை மாறிக் கொண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் சொந்த மக்கள் வேலையில்லா திண்ணாட்டத்தில் இருக்கும்போது வெளிநாட்டினருக்கு வேலை கொடுப்பதா எனும் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், ஊதியக் குறைப்பு, சலுகைகள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்கிறது.

 

இன்னும் கடையநல்லூர் மக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்ததால் தாங்களே முன்வந்து கைத்தறி நெசவை கைவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கைத்தறியின் சிறப்பு ரகங்கள் விசைத்தறிகளிலும் உற்பத்தி செய்யலாம் எனும் சட்டத்திருத்தமே கடையநல்லூர் பகுதிகளில் கைத்தறி நெசவை ஒழித்தது என்பதே உண்மை. வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கடையநல்லூருக்கான மாற்றுத் தொழில் என்ன? என்பது தான் மக்கள் முன்னிற்கும் முதன்மைக் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். மாறாக முன்னிற்கும் இந்த பிரச்சனை குறித்த புரிதல் ஏதுமற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திய வளத்திலும், அந்த வளத்தின் விளைவால் ஒருபக்கம் ஏற்பட்ட மேட்டிமைத் தனத்திலும், கலாச்சார சீரழிவுகளிலும், மறுபக்கம்  மதப் பிடிப்பிலும் ஊறிக் கிடப்பது மக்களைப் பீடித்திருக்கும் நோய். இந்த நோய்க்கான மருத்துவமே இன்று கடையநல்லூரின் முதல் தேவையாக இருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைக‌ள்

நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?

கடையநல்லூர் பொருளாதாரம்: அடையாளமா? ஆழமா?

கடையநல்லூரை எப்படி பார்ப்பது?

கடையநல்லூரும் உகந்த தொழில்களுக்கான மனோநிலையும்

கடையநல்லூரின் மாற்றங்கள்