தொகுப்பு | ஜூலை, 2012

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி

25 ஜூலை

இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

 

ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

 

உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

 

ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

 

ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

 

உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

 

ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி  தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 

முதல் பதிவு: செங்கொடி

கொலைகார இராணுவப் படைகள்; கொடூரமாய் கொல்லப்படும் பழங்குடிகள்

15 ஜூலை

 

கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

 

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.  இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

 

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார்  ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.


நடந்தது என்ன?  

 

பழங்குடியினரது  வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் – ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

 

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில்  பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.

 

 

கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள், ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே  கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்தது.

 

 

எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள். 

 

கொலைகாரன் விஜயகுமார்

 

இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும்  பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.

 

இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும்  நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர். அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.

 

பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.


இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

 

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால்  வெளியில் சொல்கிறேன்” என்றார்.

 

சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

 

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?

 

மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.

சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார். கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

 

ஏன் இந்தக் கொலைகள்?

 

சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

 

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650  கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10  லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.

இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

 

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்

 

இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

 

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!

 

அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.

 

கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:
http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:
முதல் பதிவு: கலையகம்

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

13 ஜூலை

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

 

அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

 

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

 

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

 

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

 

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

 

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

 

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

 

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

 

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

 

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

 

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

 

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

 

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

 

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

 

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

 

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

 

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

 

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

 

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

 

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில் 

 

கடலூர் ஜூலை 15ல்

சென்னை ஜூலை 17ல்

திருச்சி ஜூலை 19ல்

விழுப்புரம் ஜூலை 22ல்

 

கிருஸ்தவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான்

11 ஜூலை

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 21

(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)

ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை  போதித்துவந்தார் என்று  குர்ஆன் சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.

 (குர்ஆன் 19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான்.

(குர்ஆன் 19:24)

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

(குர்ஆன் 19:25)

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

 (குர்ஆன் 19:26)

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

 (குர்ஆன் 19:30)

“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

(குர்ஆன் 19:31)

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

    (குர்ஆன் 19:32)

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.

(குர்ஆன் 19:33)

ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் தன்னை தன் அளவில் உயர்த்திக் கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்து வந்தார். குர் ஆனின்படி ஈஸா நபி  கொண்டுவந்த இஞ்ஜில் (பைபிள்) என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த நபிமார்கள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. ஈஸா நபி  அல்லாஹ்வின்  நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

(குர்ஆன் 42:13) 

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

 (குர்ஆன் 43:59)

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.

(குர்ஆன் 43:63)

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

(குர்ஆன் 43:64)

ஆக, ஈஸா நபி  தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாஹ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் யூத மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டு போகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

        ஈஸா நபி  தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு அல்லது கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் குர் ஆன்,  ஈஸா நபியைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது :

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.

(குர்ஆன் 3:52)

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.

(குர்ஆன் 5:111)

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

(குர்ஆன் 57:26)

ஈஸா நபி, “லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹிஎன்ற கலீமாவையே  போதித்தர்என்று  முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் கலீமா ஆதமை படைப்பதற்கு முன்பே உள்ளதாகும், அல்லாஹ்வின் அர்ஷில் எழுதப்பட்டிருந்த இந்த கலீமாவின் உதவியின் காரணமாகவே ஆதம் மன்னிக்கப்பட்டார் என்பதை முன்பு நான் கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும். பர்னபாஸ் சுவிசேஷத்தின் 39-ம் அதிகாரத்தில் ஒளிரும் பிரகாசமான எழுத்துக்களைக் ஆதம் கண்டதாக கூறுகிறது. அதன் உட்பொருள்  இன்று முஸ்லீம்களால் கூறப்படும் கலீமாவைத் தவிரவேறில்லை.   ஈஸா நபி தினமும் ஐவேளை தொழுததாகவும் பர்னபாஸ் சுவிசேஷம் கூறுகிறது.

ஆகவே, ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொண்ட முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அல்லாஹ், அவர்களுக்கு செய்த உதவியால் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.

 ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

இந்த வசனத்தின்படி “ஈஸா நபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. ஈஸா நபியின் போதனைகளை ஏற்றுக் கொண்டு “வெற்றியாளர்கள் ஆகிவிட்ட” இந்த முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக் கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இப்படிப்பட்ட முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை?

வாதத்திற்காக, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், ஈஸா நபியை கடவுளாக்கிய கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் முஸ்லீம்கள் கூறலாம்.

அல்லாஹ்வால் “வெற்றியாளர்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை எவ்வித சிறு ஆதாரமுமின்றி அழிக்கமுடியுமா?

எந்த ஒரு நம்பிக்கையையோ, சமுதாயத்தையோ அவ்வாறு அழிக்கமுடியாது. உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து இஸ்லாம் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அன்றைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள்,  முஸ்லீம்களை அதிகாரத்தையும், அடக்குமுறைகளைக் கொண்டும்  கிருஸ்துவமதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமின் சுவடுகளை முற்றிலும் அகற்ற முடியவில்லையே?

முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட “தீன்இலாஹி” என்ற மதம் அவருக்குப்பின் ஒருவராலும்  பின்பற்றப்படவில்லை. அக்பரின் வாரிசுகள் கூட அவரது புதிய மதத்தை ஏற்கவில்லை. அக்பரின் மரணத்திற்குப் பிறகு “தீன்இலாஹி” முற்றிலும் அழிந்தது. ஆயினும் “தீன்இலாஹி” பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ஆதாரங்கள் இன்றும் உள்ளது. மிக மிக பலவீனமான, அக்பரின் கற்பனையில் உருவான மதம் “தீன்இலாஹி”யின் குறிப்புகள் இருக்கையில், அல்லாஹ்வினால் அற்புதங்களுடன் அனுப்பப்பட்ட ஈஸா நபியின் போதனைகளின் அடிப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது,  முட்டாள்த்தனத்தின் உச்சம்…! ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை கிருஸ்துவர்கள் அழித்ததாகவோ, அல்லது அழிக்க முயற்சி செய்ததாகவோ எவ்விதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. இது முஹம்மது நபியின் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை…!

எனவே, கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக  கூறுவது, அர்த்தமற்றது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை.

ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து சமுதாயத்தினருக்கு தெரிந்த விவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர். இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.  

உதாரணத்திற்கு : அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார். அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார். இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சி செய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார். ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும்  அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே  அவர் சிலுவையில் அறையப்பட்டார்”. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது.

இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

ஈஸா நபியின் போதனைகள் என்ன ஆனது?

இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் போதனையை மாற்றி விட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் ஈஸா நபியின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்து விட்டார்கள்” என்று பதில் சொல்ல முடியாது.

 ஈஸா நபிக்கு என்ன நடந்தது என்று குர் ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

குர்ஆனின் கூற்றுப்படி, ஈஸா நபி சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக கொள்ளலாம். இருந்தாலும், ஈஸா நபி வானத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? அவர்களது நம்பிக்கை என்ன ஆனது ? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், ஈஸா நபியை பின்பற்றிய எல்லாரும் “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்  என்றும் அவர் மறுபடியும்  உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.

ஈஸா நபியைப் பின்பற்றியவர்களுக்கு, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியது யார்? குர்ஆனின்  கூற்றுப்படி, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற எண்ணத்தை மனிதர்களிடையே  உருவாக்கியதே அல்லாஹ் தான்.

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

குர்ஆனின்  இந்த வாதத்திற்கு வேறு ஆதாரம் ?

இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியைக் கூறுகிறது.

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

        இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”

        இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவி கொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.

        படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”

(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)

“The Gospel of Barnabas”-பர்னபாஸ் என்ற சீடரால் எழுதப்பட்டதல்ல.  இது மிக பலவீனமான ஆதாரமாகும். இந்த சுவிசேஷம் கிபி 1585 ல் எழுதப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.  பர்னபாஸ் சுவிசேஷம் இட்டுக்கட்டி எழுப்பட்ட புத்தகமென்பதற்கு ஏராளமான ஆதரங்கள் இருக்கின்றன. பர்னபாஸ் எழுதிய கடிதங்கள்  இந்த சுவிசேஷத்திற்கு எதிரான செய்திகளைக் கூறுகிறது. இருப்பினும், குர்ஆன் கூறும் ஆள்மாறாட்டம் எவ்வாறு நிகழ்ததென்பதைக் அறிந்து கொள்வதற்காகவே இதையும் முன்வைக்கிறேன். )

அல்லாஹ்வால் நிகழ்தப்பட்ட ஆள்மாற்றத்தை, ஈஸா நபியின் (இயேசுவின்)  தாயாரான மரியம் அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரும் தன்மகன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவே நம்பினர். அல்லாஹ்வால், ஈஸா நபி வானிற்கு உயர்த்தப்பட்டதாகக்  கொண்டு நாம் விவாத்தைத் தொடர்வோம்.

அதாவது, மனித உடலுடன் அவர் இரண்டாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். இது ஒருமுரண்பாடான செய்தியாகும். எந்த வகையான சொர்க்கத்தைப் (வானம்) பற்றி  முஹம்மது நபி கூறுகிறார் என்பது புரியவில்லை. சொர்க்கம் என்பது ஆன்மாக்கள் வாழும் பகுதியாக இருந்தால், ஈஸா நபி மனித உடலுடன் அங்கு எப்படி வாழ முடியும்? ஈஸா நபி, உணவு, உடை, இயற்கைத் தேவைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சராசரி மனிதர். பூமியை போன்ற ஒரு இடத்தில்தான் அவரது உடலால் வாழ முடியும். எனவே முஹம்மது நபிகூறும் சொர்க்கம் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த உலகமாகவே தோன்றுகிறது. இதன் அடிப்படையில் நோக்கினால், ஈஸா நபி மட்டுமே மிக நீண்ட காலமாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராவர். அப்படியானால் அல்லாஹ்வும் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த  பகுதியில்தான் தனது இருக்கையை (அர்ஷ்) அமைத்து அமர்ந்து கொண்டிருக்கிறானா?.

ஈஸா நபியை எதற்காக  தன்அளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டான்?

ஈஸா நபியை, தீய யூதர்கள் மற்றும் ரோம ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து  காப்பாற்றுவதே மைய நோக்கமென்றால், தனது நேசத்திற்குரிய ஒரு நபியை அநியாயமாகக் கொடூரமான முறையில் கொல்லத் துணிந்தவர்களின் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது  மற்றவர்களையும் எச்சரிக்கும்  முறையில் அவர்களை தண்டிக்கலாம் அல்லது  யூத மற்றும் ரோம ஆட்சியார்களை ஏமாற்றாமல், ஈஸா நபியை  அப்படியே எல்லாருக்கும் முன்பாக எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் தன் அளவில் உயர்த்திக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களது இயலாமையின் காரணமாக எதிராளியை ஏமாற்றி தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யும் ஆள்மாறாட்ட வித்தையை சர்வவல்லமையுடைய அல்லாஹ்வும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அல்லாஹ் “ஈஸா நபியை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து விட்டானே. ஆள்மாறாட்டம்  செய்ய வேண்டிய அவசியம் என்ன?

நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த ஆள்மாறாட்டத்தின் நோக்கம், ஈஸா நபியின்  எதிரிகள் ” ஈஸா நபியை  சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம்” என்று நம்பி ஏமாற வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. (இயேசுவின் தாயார் உட்பட ஒருவருமே அறியாத,   அல்லாஹ்வால் ரகசியமாகச் செய்யப்பட்ட ஆள்மாறட்ட நிகழ்ச்சியை பர்னபாஸ் மட்டும் எப்படி அறிந்து கொண்டார்?) சர்வ வல்லமையுடையவனாகிய அல்லாஹ்விற்கு, ஆள்மாறாட்டம் செய்துதான் தன்னுடைய தூதரைக் காப்பாற்ற முடியுமா? அப்படி ஒரு கட்டாயம் என்ன?

அல்லாஹ்வின் திட்டப்படி வானவர்களால், ஈஸா நபி காப்பாற்றி அழைத்துச் செல்லப்படுவதை  யூத ரோமானியப் படைவீரர்கள் அறிந்து, வானவர்களை வழிமறித்து ஈஸா நபியை திரும்பவும் பூமிக்கு கொண்டுவந்து சிலுவையில் அடித்து கொன்று விடுவார்களோ  என்று அல்லாஹ் அஞ்சியிருக்க வேண்டும். எனவே படையாட்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி ஏமாற்றி ஈஸா நபியைக் காப்ற்றியிருக்கிறான் என்ற காரணத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.

 குர்ஆனின் கூற்றில் மறைந்துள்ள முட்டாள்தனத்தை உங்களால் அறிய முடிகிறதா?

எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் ஈஸா நபியைத்  தன் அளவில் உயர்த்தி எடுத்துக் கொண்டிருந்தால், இப்படி பல மக்களை ஏமாற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று குர்ஆன் நம்மை நம்பச் சொல்கிறது. 

ஈஸா நபியை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், ஈஸா நபியின் சீடர்கள் உட்பட அனைவரும் அல்லாஹவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 3

9 ஜூலை
நண்பர்களே பரிணாமத்திற்கு மாற்றாக அதன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[ID] என்னும் கொள்கையை குறித்த தொடர் பதிவுகளை எழுதி வருகிறோம்.முந்தைய இரு பதிவுகளில் அதன் வரையறுப்பு ,முக்கியமான் கொள்கையாக்கங்களை பார்த்தோம். ID கொள்கையாளர்களின் கருத்துகளை அப்படியே வெளியிடுவதில் மிக கவனமாகவும் வெளிப்படையாகவும் இருந்து வருகிறோம்.இப்பதிவில் அதன் தோற்றம், வரலாறாக அவர்களின் தளத்தில் இருந்தே மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறோம். இதில் பல தேவையான் விவரங்கள் இருக்கலாம். வழக்கம் போல் மொழி மாற்ற சிக்கல்களை தவிர்க்க ஆங்கில மூலத்தையும் அளித்து விடுகிறோம்.

 History of intelligent design and the creation – evolution controversy

1611: அரசன் ஜேம்ஸ் ஆங்கில பைபிள் பிரதி வெளியீடு
1654: கிறித்தவ‌ பேராயர் உஷைர் உலகம் தோன்றிய நாளை பைபிளில் இருந்து 4004B.C.E என கணக்கிடுகிறார்
1802: இயற்கை இறையியல் என்பது அறிவியல்,தத்துவம் உட்பட்ட காரணிகளை கொண்டு  கடவுளின் இருப்பை நிறுவும் முயற்சியாகும்.
William Paley (July 1743 – 25 May 1805) இயற்கை இறையியல் துறை சார்ந்த முக்கியமான புத்தகம் வெளியிடுகிறார். இது Teleological argument என்னும் இயற்கையின் படைப்புகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு இருப்பது கடவுளை நிறுவுகிறது எனும் கொள்கையை தெளிவாக முதலில் முன் வைத்தது எனலாம்.
 
1830: டார்வினின் பரிணாம் கொள்கைக்கு மூல ஆதாரங்களில் ஒன்றான புவியியலின் முக்கியமான புத்தக்மான Principles of Geology        ஐ Charles Lyell          வெளியிடுகிறார்.
 
1859: டார்வினின் உற்ற நண்பரும்,தீவிர ஆதரவாளரான          T.H. Huxley பரிணாம கொள்கைக்கும்,மதவாதிகளுக்கும் கருத்து மோதல் வரலாம் என எதிர் நோக்குகிறார்.  Origin of Species     புத்தகம் வெளிவருவதற்கு முன் டார்வினுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த மோதலுக்காக என் ஆயுதங்களை தயாராக் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார்.
 
1859: அறிவியலாளர் டார்வின் (12 February 1809 – 19 April 1882)  பரிணாம கொள்கையின் மிக முக்கியமான புத்தகமாகிய  “Orgin of Spicies” வெளியிடுகிறார். உயிர்கள் அனைத்தும் ஓர் செல் உயிர்களில் இருந்து இயற்கைத் தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றங்களின் காரணமாக பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகின என்பதுதான் இக்கொள்கையாகும்.
 
1860: T.H. Huxley ம் Samuel Wilberforce ம் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக்த்தில் பரிணாமம் குறித்து விவாதிக்கின்றனர்.
 
1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே எதிர்ப்பு’ வந்தது. பலர் டார்வினின் கொள்கையை நிரூபிக்க முடியாது,உயிர்களின் தோற்றம் ,பல் வகை பிரிவுகளாதல் ஆகியவற்றை விளக்க முடியாது என்றே கருத்து தெரிவித்தனர்.இந்த அறிவியல் ரீதியான எதிர்ப்பு  சுமார் 50_80 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.இது மட்டுமல்லாமல் மத ரீதியாகவும் எதிர்ப்பு வந்தது.
 
1874: John William Draper என்ற எழுத்தாளர் History of the Conflict Between Religion and Science என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.அதில் மதம்,அறிவியல் இவற்றின் முரண்பாடுகள் மோதல் போக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறார்.இந்த டார்வினின் பரிணாம கொள்கை மீண்டும் ஒரு மத கொடுந் தண்டனைகளை தோற்றுவிக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.அது என்ன மத கொடுந் தண்டனை [Inquisition] என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்கள் இங்கே பாருங்கள்.
1896: Andrew Dickson White என்ற எழுத்தாளர் A History of The Warfare of Science With Theology என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் . இது கிறித்தவ மதத்தின் கொள்கைகளை ,வரலாற்றை விமர்சித்தது.
 
1905-1915: இதற்கு எதிர்வினையாக கிறித்தவ ப்ராஸ்டன்டன்ட் சபையை சேர்ந்த Bible Institute of Los Angeles (Biola) அமைப்பு The Fundamentals என்ற புத்தக்த்தை வெளியிடுகிறார்கள்.  இது இந்த இரு புத்தகங்களையும் கடுமையாக விமர்சித்தது.பரிணாமம் குறித்த  ஆவணப்படுத்தப்பட்ட முதல் விமர்சனம் இது ஆகும்
1912: நாளிதழ் தலைப்பு செய்தியாக டார்வினின் பரிணாம கொள்கை நிரூபணம் கிடைத்ததாக செய்தி வெளியிடுகிறது.மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான[Missing link] முன்னோர் உயிரினத்தின் படிமம் கிடைத்ததாகவும் இது மதவாதிகளின் தாக்குதலில் இருந்து அறிவியலை வளர்க்க உதவியதாக ஆர்தர் கெய்த் குறிபிட்டார். ஆனால் பொ.ஆ 1953ல் இது ஒரு பொய்யான் படிமாம், ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்டது. இது இன்றும் பரிணாம எதிர்ப்பாளர்களால் பரிணாம(ஆய்வாளர்களின்)த்தின் நேர்மையற்ற சான்றாக  விமர்சிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Piltdown_Man

1925: இக்கால கட்டத்தில் (பெரும்பாலான)உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாம கொள்கையை ஏற்கின்றனர். பள்ளி,கல்லூரிகளில் பரிணாம் பாடத்திட்டம் ஆக்கப்படுகிறது.இப்போது பரிணாமத்திற்கு இருவகைகளில் எதிர்ப்பு வருகிறது.

1. பரிணாம்த்தை முற்று முழுதாக எதிர்க்கும்,பைபிள் ரீதியான படைப்பியல்வாதிகள்.[Young and Old earth creationists]
2.பரிணாம்த்தின் சீரற்ற,ஒழுங்கற்ற தனமையை மட்டும் ஏற்காமல் ,இது ஒரு வழி நடத்தப்பட்ட செயல் என்னும் கொள்கையாளர்கள். [Guided and directed Evolution]
 
1925: ஸ்கோப்ஸ் வழக்கு விசாரணை:பரிணாமத்தை பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டமாக்க அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் எதிர்ப்பு வலுக்கிறது ஜான் ஸ்கோப்ஸ் என்னும் உயிரியல் ஆசிரியர் மீது டென்னீஸ் மாநிலத்தின் பட்லர் சட்டத்தை மீறியதாக் வழக்கு போடப்பட்டது.பட்லர் சட்டம் எனில் பைபிளின் படைப்புக் கொள்கையை தவிர வேறு கல்வி அளித்தல் தவறு.,இது நீதி மன்றத்தில் வழக்காகிறது. இதில் ஸ்கோப்ஸ் சட்டத்தை மீறியதாக நிரூபணம் ஆனாலும்,தீர்ப்பு மாற்றப்பட்டு விடுவிக்கப் பட்டார்.இது மதம் பரிணாமம் மோதலை மிகவும் பரபரப்பு ஆக்கியது. [இது குறித்தே ஒரு சிறப்பு பதிவு இடுவோம்]
 
1959: டார்வினின் புத்தகம் வந்து நூறாண்டு கடந்தும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஓயவில்லை.
1968: படைப்பியல் கொள்கையும் பள்ளிகளில் கற்பிக்கப் பட வேண்டும் என்ற‌ இன்னொரு வழக்கில் Edwards v. Arkansas அமெரிக்க ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் பரிணாம் கல்விக்கு எதிரான சட்டம் நீகப்படுகிறது.எந்த மதத்தின் படைப்புக் கொள்கையும் பாடத் திட்டத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.:

1971: பரிணம்த்தை விமர்சித்து சிறந்த வழக்கறிஞர் Norman Macbeth என்பவர் Darwin Retried: An Appeal to Reason. என்ற புத்தத்தை வெளியிடுகிறார்.இதில் அக்கால கட்டத்தின் பரிணாம் விமர்சனங்களை முன் வைத்தது. 

 
1972: Institute for Creation Research ஆரம்பிக்கப் படுகிறது.இதில் 1980 வரை இளைய பூமி[Young earth] கொள்கையே முன் வைக்கப் பட்டது..

1973: அமெரிக்க டென்னீஸ் மாநில சட்டசபையில் மீண்டும் பட்லர் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்படி மனிதனின் தோற்றமாக் பள்ளிகளில் எந்த கொள்கையும் பாட புத்தகங்களில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படி செய்வதென்றால் அது ஒரு கோட்பாடு[theory] மட்டுமே மற்றும் அறிவியல் ரீதியாக் நிரூபிக்கபடாத உண்மை என்றும் கூறப்பட வேண்டும். பைபிள் உட்பட்ட அனைத்து மத புத்தகங்களும் பாடபுத்தகங்கள் அல்ல என்பதும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

1982: McLean v. Arkansas: வழக்கில்  Arkansas மாநிலத்தில் அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism”] என்பது அறிவியல் அல்ல என தீர்ப்பு வருகிறது.
 
1983. அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism” ]  எதிர்த்து சில அமைப்புகள் உருவாக்கப் படுகிறது. 1982 வழக்கு விசாரணைகளுக்கு பிறகு இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேசிய அறிவியல் கல்வி அமைப்பு[National Center for Science Education (NCSE),] ஆக உருவெடுக்கிறது.
 
1986: ஹியூக் ராஸ்[Hugh Ross] “நம்பிக்கையின் காரணங்கள்” [“Reasons to Believe,” ] என்னும் பழைய பூமி[Old earth] கொள்கை அமைப்பை ஏற்படுத்துகிறார்.
 
1986: மைக்கேல் டென்டன் [Michael Denton] என்பவர்          Evolution: A Theory in Crisis.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
1987: Edwards v. Aguillard: வழக்கில் மூன்று நிபந்தனைகள் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு விதிக்கிறது.
1) பாட திட்டத்தில் மதம், அல்லது சார்ந்த கொள்கைகள் இருக்க கூடாது.
 2) மத பிரச்சாரம் தவிர்த்தல்
 3) அரசு மற்றும் மதத்தின் தொடர்பு பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
1991: Phillip Johnson என்பவர்          Evolution: Darwin on Trial.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.  
1993: பரிணாம எதிர்ப்பு வரலாற்றில் முக்கியமான கூட்டம்            Pajaro Dunes, California. ல் நடக்கிறது. இதில் அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தை[intelligent design movement] தொடங்க போகும்    Phillip Johnson, Michael Behe, உட்ப‌ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ID Starts
1996: Michael Behe எழுதிய புத்தகம்  Darwin’s Black Box, அறிவார்ந்த வடிவமைப்பு[intelligent design] என்னும் சொல்லை முதன் முதலில் பிரபலப் படுத்துகிறது. இப்புத்தக்த்தில்தான் எளிமைப்படுத்தப் படாத சிக்கல்[“irreducible complexity] என்னும் கொள்கையும் விவாதிக்கப்படுகிறது
 
1996: “Mere Creation” ஆய்வரங்கம் Biola University ல் நடக்கிறது.இதில் அறிவார்ந்த வடிவமைப்பின் நாயகர்கள் Michael Behe, David Berlinsky, Walter Bradley, William Dembski, Sigrid Hartwig-Scherer, Phillip Johnson, Robert Kaita, Steven Meyer, J. P. Moreland, Paul Nelson, Nancy Pearcey, Del Ratzsch, John Mark Reynolds, Hugh Ross, மற்றும் Jonathan Wells கலந்து கொள்கின்றனர்..

1998: William Dembski எழுதிய புத்தகம் The Design Inference அறிவார்ந்த வடிவமைப்பின் பல கொள்கைகளை கணித ரீதியாக அளிக்கிறார். .

1999: அமெரிக்க கான்சாஸ் மாநிலத்தில் பெரும் பரிணாமம் [macroevolution] குறித்த பாடத்திட்டங்களை கல்வியில் இருந்து நீக்குகிறது.

 
2000: Jonathan Wells எழுதிய புத்தகம் Icons of Evolution வெளியிடப் படுகிறது.
2000: David K. DeWolf, Stephen C. Meyer, and Mark Edward எழுதிய புத்தகம்  “Teaching the Origins Controversy: Science, Or Religion, Or Speech”  வெளியிடப் படுகிறது. இது பாட திட்டத்தில் அறிவார்ந்த வடிவமைப்பு சார்ந்த பரிணாம விமர்சனம் சேர்க்கப் பட வேண்டும் என வலியுறுத்தியது.

2001: PBS ன் பரிணாமம் குறித்த ஆவணப் படம் ஒளிபரப் பட்டது.

2001ல் இருந்து இன்றுவரை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் பரிணாமம் vs ID , மோதல் நீதி மன்றங்களில் மற்றும் பல தளங்களில் தொடர்கிறது……………… தொடர்கிறது!!!!!!!!!!!!!!.

(நாமும் தொடர்வோம்)
References:

1. Summer for the Gods by Edward J. Larson.
2. Bones of Contention by Marvin L. Lubenow.
3. Darwinism and the Law: Can Non-Naturalistic Scientific Survive Constitutional Challenge by H Wayne House (see http://www-acs.ucsd.edu/~idea/house.rtf).
4. Cretinism or Evilution? No. 2 Edited by E.T. Babinski. See http://www.talkorigins.org/faqs/ce/2/part12.html
5. Timeline for Origins Class at http://jmlynch.dhs.org/classes/origins/timeline.php
6. Religion and Science: History, Method, Dialogue in “Dispelling Some Myths About The Split Between Theology and Science in the Nineteenth Century” an essay by Claude Welch.
7. See PBS Evolution‘s re-interpretation of this famous exchange.
8. William Jennings Bryan & The Scopes Trial by R.M. Cornelius at http://www.bryan.edu/historical/wjbryan_trial/ from Bryan College Historical Resources (a Christian college in Dayton Tennessee, home of the Scopes Trial).

முந்திய பதிவுகள்

மின்வெட்டு, மின்கட்டண உயர்வு: காரணமும் தீர்வும்

4 ஜூலை

நூல் அறிமுகம்

 

 

மின் வாரியத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்ற மின் பொறியாளர் சா.காந்திஎழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண் உயர்வும் ,காரணமும் தீர்வும்” என்ற் புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில்,மின் கட்டணம் வேகமாக உயர்ந்துள்ள சூழலில், தமிழக மின் வாரியத்தின் உள்ளே நடக்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் நடக்கும் குளறுபடிகளின் பிண்ணனியில் இப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற பொருளாதார தத்துவங்கள் 1990 களின் பின் பகுதியில் நம் நாட்டில் கோளோச்ச துவங்கிய பின்பு, நம்து எல்லா சட்டங்களும் மக்கள் நலன் என்ற பாதையிலிருந்து மெல்ல விலகி தனியார் லாபம் என்ற கணக்குக்கு மாறி விட்டது.(டங்கல் திட்டம் காவல் துறை, ராணுவம் தவிர எல்லா துறைகளையும் அரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனக்கூறியது)
கடந்த 2001 ஆண்டு வரை ரூ 387.67 கோடி லாபம் பார்த்த தமிழக மின்சாரவாரியம் அதற்கு அடுத்த ஆண்டே ரூ. 110.13 கோடி நட்டத்தை சந்தித்தது. 

இந்த கால கட்டத்தில்தான் தனியார் முதலாளிகள் மின்சாரம் உற்பத்தி செய்ய கால் ஊன்றுகின்றனர். அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவிகளை நிறுத்துகிறது.2003 ஆம் ஆண்டுநம் நாட்டில் புதிய மின்சார சட்டம் வருகிறது. இது மாநில அரசின் கையிலிருந்த மின் துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் கட்டிப்பாட்டுக்கு மாற்றுகிறது.ஒய்வு பெற்ற அதிகாரிகளை நீதிபதிகளை போல செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்தனியார் தங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குகூடுதல் தொகையை மின்வரியத்திடமிருந்து பெறமுயன்று வெற்றி பெற்றனர்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கங்கள் செலவு செய்த மூலதனத்தொகை கூட மின் வாரியம் தனியாருக்கு தர உத்திரவு இடப்பட்டது.மின் வாரியத்தின் வருவாய் தனியார் மின் முதலாளிகளை தாலாட்டவே பற்றாக்குறையாயிருந்தது. புதிய மின் நிலையங்கள் இல்லாத நிலையில் மின் பற்றக்குறை அதிகரித்தது. தனியார் முதலாளிகள் ஒரு யுனிட்டுக்கு ரூ 2 மின்கட்டணத்தை ரூ7 வரை விலை வைத்தனர். சில நெருக்கடியான் சுழலில் ரூ17.78 காசுகள் வரை நீண்டது. ஜி.எம்.ஆர் ,பி.பி.என். மதுரை பவர் , சாம்பல்பட்டி, நெய்வெலி எஸ்.டி.சி.எம்.எஸ் ஆகிய தனியார் பன்னாட்டு கம்பெனிகள் பெருத்த லாபம் அடைந்தன. மின்சார ஒழுங்கு முறை ஆணையமோ வருடம் தோரும் மின்ட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்திரவும் இட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு ந்வீன தாராள மயக்கொள்கையின் விழைவு.மின்சாரம் மக்கள்மயமாக்களுக்கு பதிலாக ஒரு சில தனியாருக்கு சொந்தமானதாக மாறிவருகிறது.மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்துறையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2003 மிசார சட்டத்தை நொருக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை தகுந்த புள்ளிவிபர மற்றும் பிற சான்றுகள் மூலம் சுட்டிகாட்டியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தினை உருவாக்க பெரிதும் உதவியதாக டாக்டர் ஆர். ரமேஸ் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இப் புத்தகம் மிகுந்த கவனம் பெறவேண்டியது அவசியம். அரசியல் இயக்கங்கள் இது குறித்து விவதத்தை துவங்க வேண்டும்

வெளியீடு: ஆழி பப்ளிகேசன்,மே 17 இயக்கம்,பெரியார் திராவிடர் கழகம்.
1A திலகர் தெரு.பாலாஜி நகர்,துண்டல்,அய்யப்பந்தாங்கல்,சென்னை 600 077 போன் 9940147473

– ச.பாலமுருகன், முகநூல் பக்கங்களிலிருந்து….

 

நன்றி: தோழர் சாக்ரடீஸ்

 

நீயா நானா? .. .. மூத்திரத்தைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது

3 ஜூலை

 

அழுகையை அதிகம் காட்டுவது சீரியல்கள்தான் எனும் கருத்தோட்டம் பெரும்பாலான மக்களிடம் உண்டு. டிவிதான் மக்களை கெடுக்கிறது எனும் சிந்தனை பலருக்கும் இருக்கிறது. உருப்படியான நிகழ்ச்சிகள் எதுவுமே வருவதில்லை என ஏராளமானவர்கள் அங்கலாய்க்கிறார்கள். ஆனால் இவர்கள் பலரும் நீயா நானா ஒரு நல்ல நிகழ்ச்சி எனும் கருத்தில் ஒத்துப்போகக்கூடும். நல்ல நிகழ்ச்சி என்பது நல்லதை சொல்ல வேண்டிய நிகழ்ச்சி எனும் வரையறை மாறி, கெட்டதை சொல்லாமலிருந்தாலே போதும் எனும் யதார்த்த சூழலை கணக்கிலெடுத்துக்கொண்டால்கூட இந்த விவாத நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சிதானா என ஆராய்வது அவசியமாகிறது.

செயற்கைகோள் தொலைக்காட்சி துவங்கிய காலத்தில் இருந்து ஒளிபரப்பாகிவந்த வழமையான நிகழ்ச்சிகளில் இருந்து மாறுபட்ட நிகழ்ச்சிகளை கொடுத்த டிவி எனும் பெயர் விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு. கருணாநிதியைவிட ஜெயலலிதா மாறுபட்டவர் என்பது எப்படி உண்மையோ அப்படிப்பட்ட உண்மைதான் இதுவும். உற்று கவனிக்கையில் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒரு பார்வையாளனுக்கு வரவேண்டிய நியாயமான கோபத்தை மழுங்கடிக்கின்றன, மனிதர்களின் மென்மையான உணர்வுகளை தூண்டிவிட்டு அதனை நிகழ்ச்சியாக்குகின்றன, என்பது புலனாகும்.

அழுகை அதிகமாக இருக்கிறது என சீரியல்களை நக்கலடிக்கும் நடுத்தரவர்க மனிதர்கள் பலரும் விஜய் டிவியை புகழ்வதை பார்த்திருக்கிறேன். சரி என்னதான் இருக்கிறது என அவ்வப்போது அந்த டிவியை பார்த்தால் அங்கு நிகழ்ச்சிகள்தான் வேறேயன்றி அழுகை அப்படியேதான் இருக்கிறது. பாட்டு பாடுபவர்கள் அழுகிறார்கள், நடனம் ஆடுவோர் அழுகிறார்கள், ஆடுவோர் பாடுவோரின் ஆத்தா அப்பனும் அழுகிறார்கள், அவ்வப்போது நடுவர்கள் அழுகிறார்கள். கருத்து சொல்வோர் அழுகிறார்கள், சரி தொலையட்டும் என சிவக்குமார் மகன் நடத்தும் கோடி ரூபாய் போட்டியை பார்த்தால் அங்கேயும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் அழுகிறார்கள். ஏதாவது எழவு வீட்டுக்கு போனால்கூட இது ஒருவேளை விஜய் டிவி படப்பிடிப்பாக இருக்குமோ என சந்தேகம் வரும் அளவுக்கு அழுகை இந்த தொலைக்காட்சியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அப்படிப் பார்த்தாலும் நீயா நானா ஒன்றும் அழுகாச்சி நிகழ்ச்சி இல்லையே என யாரேனும் கேட்கலாம், அவர்களுக்கு எனது பதில் இது அழுகாச்சி நிகழ்ச்சிகளைவிட ஆபத்தான நிகழ்ச்சி என்பதே. மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும் குப்பை என்பது பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். கலா மாஸ்டரும் ராதிகாவும் தங்கள் நிகழ்ச்சிகள் சமூக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் இங்கு கதையே வேறாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எனும் ஒரே தகுதியோடு கோபி ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுதியிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் வாழ்வை காப்பாற்ற இந்த ஒரு நிகழ்ச்சியே போதும் என்று கிளைமாக்ஸ் வைத்த தோனி எனும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. இதெல்லாம் நீயா நானாவுக்கு இருக்கும் அறிவார்ந்த நிகழ்ச்சி பிம்பத்தையே காட்டுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேச தெரிவு செய்யப்படுபவர்கள் பலரும் உயர் மத்தியதர வகுப்பினர் அல்லது அந்த வகுப்பிற்கான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள். அவர்களை மகிழ்விக்கும் தலைப்புகள் மட்டுமே அங்கு விவாதிக்கப்படும். டீக்கடைக்கு வெளியேயும் சலூனுக்குள்ளும் அரசியல் பேசுவதை வெறுக்கும் அதை வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் எள்ளி நகையாடும் இந்த கூட்டம் மயிரைப் பற்றிக்கூட கூச்சமில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் முன்னால் பேசுகிறது. அதற்கு சிறந்த நிகழ்ச்சி என பரவலான அறிமுகமும் கிடைக்கிறது. எப்படி சீன் போடுகிறார்கள், வழுக்கை விழுந்தவரை கல்யாணம் செய்துகொள்வீர்களா மாட்டீர்களா? என்பது மாதிரியான தலைப்புக்கள் விவாதிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி சீரியல்களுக்கு மாற்றான நல்ல நிகழ்ச்சி என அங்கீகரிக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கே அவமானகரமானது இல்லையா?

எக்ஸிபிஷனிசம் என்றொரு நோய் மனோவியாதிகளின் பட்டியலில் உண்டு. சற்று ஆபத்தான சட்டப்படி தண்டிக்க வைக்கும் வாய்ப்புள்ள நோய் அது. அடுத்தவர் அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக பார்த்து ரசிக்கும் மனோபாவத்தை எக்ஸிபிஷனிசம் என வரையறுக்கலாம். நீயா நானா நிகழ்ச்சி பல சமயங்களில் நம்மை இந்த வியாதியுடையோராக்குகிறது. சில வாரங்களுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் உங்கள் மனைவியிடம் பிடிக்காத இயல்பு என்னவென்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. என் மாமனார் வீட்டுக்காரர்கள் மாதக்கணக்கில் என் வீட்டில் தங்குவார்கள், அதையெல்லாம் சகித்துக்கொண்டேன். என் மனைவி எனக்கு தெரியாமல் அவர் தங்கைக்கு பணம் கொடுத்தார். இந்த பழக்கம்தான் என் மனைவியிடம் எனக்கு பிடிக்காதது என்கிறார் ஒரு கணவர். அந்த பெண்ணின் உறவுக்காரர்களுக்கு இது எத்தனை பெரிய அவமானம் என்பதை உங்களால் அனுமானிக்க முடிகிறதா?

ஆனால் இந்த மாதிரியான பதில்கள்தான் அங்கு வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு விவாதத்தில் தவறியும் நீங்கள் ஒரு நிறுவனத்தை குற்றம்சாட்ட முடியாது, சொன்னாலும் அந்த வார்த்தைகள் வெட்டப்படும். ஒரு கம்பெனிக்கு இருக்கும் மரியாதை ஒரு நேயரின் மாமனாருக்கும் தகப்பனுக்கும் இல்லையா? நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்கு விலை ஒரு பார்வையாளனின் குடும்ப மானம். அது அவனது வியாபாரம் என வைத்துக்கொள்வோம், ஊரான் வீட்டு விவகாரங்களை அம்பலமாக்கும் நிகழ்ச்சியை நாம் கொண்டாடுவதை என்ன பெயரிட்டு அழைப்பது? அதிகப்படியான சொந்த விவகாரங்களை கிளரும்படியான தலைப்புக்கள்தான் அங்கு விவாதத்துக்கு வைக்கப்படுகிறது. சொந்த பிரச்சனைகளுக்கு தரப்படும் அதிக அளவிலான நேரம் மற்றவர்களையும் தங்கள் சொந்த கதையை சொல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது. நெடுந்தொடர்கள் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் வாயிலாக உங்களை உணர்ச்சிவயப்படவைக்கிறது. நீயா நானா அந்த வேலையை செய்யும் பாத்திரங்களில் ஒருவராக நம்மை நிறுத்துகிறது. உண்மையில் எது மோசமான நிகழ்ச்சி?

இது ஏதோ ஒரு நாள் நடந்த காட்சியல்ல. மிக அதிகமான விவாதங்களின் தலைப்புக்கள் ஆண் பெண், கணவன் மனைவி எனும் இரண்டு தரப்பை மையப்படுத்தியே இருக்கின்றன. கணவனுக்கு எதிராக மனைவியையும் பேசவைப்பதும் மனைவிக்கு எதிராக கணவனை பேசவைப்பதும் ஒரு தொழில்நுட்பமாகவே இவர்களால் கையாளப்படுகிறது. சமீபத்தில் இன்னுமொரு மைல்கல்லை இவர்கள் தொட்டிருக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியை இழந்த 50 வயதை கடந்தவர்களுக்கான நிகழ்ச்சியாக அது ஒளிபரப்பானது. அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் பல அவர்களின் துன்பத்தை வெளிக்கொணர்வதாக இருந்ததேயன்றி துணையை இழந்த பிறகு வாழ்வை எதிர்கொள்வது எப்படியெனும் ஆரோக்யமான கருத்தை தொடவேயில்லை.

மற்றொரு விவாதம், நகரத்துப் பெண்களை ஆண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பாதது பற்றியது (தலைப்பு வேறாக இருக்கலாம்.. ஆனால் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்த விசயம்தான்). அதில் நகரத்துப் பெண்களுக்கு ஆதரவாக பேச வந்த சிறப்பு விருந்தினர் சாரு நிவேதிதா. எப்படி இருக்கு? இணையத்தில் தனது முகநூலில் அறிமுகமான இளம் பெண்ணிடம் அரட்டை எனும் பெயரில் பாலியல் வன்முறை செய்த சாருவை திருமணமாகாத நகரத்து பெண்கள் பற்றிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததிலிருந்தே அவர்களுக்கு அந்த விவாதத்தின் மீதிருந்த மரியாதையை நாம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அமைப்பாளர்களுக்கு நித்யானந்தா கால்ஷீட் கிடைக்கவில்லையோ என்னவோ. எது எப்படியோ அங்கு போய் சாரு எந்த பெண்ணிடமும் சில்மிஷம் செய்யவில்லை எனும் அளவில் அந்த நீயா நானாவை ‘நல்ல’ நிகழ்ச்சி என நாம் ஏற்றுத் தொலைக்கலாம். ஈழப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சேவையே அந்த படுகொலைகளை விசாரிக்கச் சொல்லும் வல்லரசு நாடுகள் இருக்கையில், ஊடக வல்லரசான ஸ்டார் குழுமம் பெண்கள் சார்பாக பேச சாருவை அழைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே..

தேவையற்ற முட்டாள்தனமான தலைப்பை அவர்கள் விவாதிக்கிறார்கள் என்பது மட்டுமே பிரச்சனையல்ல. சமூகத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டியதே. ஐயங்காராக பிறப்பது உயர்வானது நான் அடுத்த ஜென்மத்திலும் அய்யங்காராகவே பிறக்க விரும்புகிறேன் என சொல்கிறார் ஒரு பெண், எந்த கண்டனமும் இல்லாமல் தொடர்கிறது நிகழ்ச்சி. பேயை பார்த்ததாக சொல்பவர்கள் ஜாதகத்தை பார்த்துத்தான் எதையும் செய்வேன் என சொல்பவர்கள் என எல்லோருக்குமான தளமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இதை சம வாய்ப்பு என்று சொல்ல இயலாது. காரணம், நடுநிலையை எல்லா இடங்களிலும் நாம் பராமரிக்க முடியாது. மோடிக்கும் அவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இசுலாமியர்களுக்கும் இடையேயான நடுநிலையை நம்மால் பராமரிக்க முடியுமா? ஆனால் அதைத்தான் தங்கள் நிகழ்ச்சியின் விதி என சொல்கிறார்கள் அவர்கள்.

அழகு எனும் சொல்லுக்கு பின்னால் பல பன்னாட்டு நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி வியாபாரம் இருக்கிறது. சிகப்பு நிறம் விரும்பப்படுவதன் பின்னால் அது ஒரு வகையில் சாதியின் குறியீடாக பார்க்கப்படும் பழக்கம் இருக்கிறது. இந்த நிஜங்களை புறக்கணித்துவிட்டு அல்லது மேலோட்டமாக விவாதித்துவிட்டு அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் போடலாமா வேண்டாமா என்பதை நீண்ட நேரம் விவாதிப்பது ஒரு வகையான மோசடி. மக்களை உண்மைகளில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சி. அதனால்தான் ஆரம்பத்தில் சமூக நலன் சார்ந்த தலைப்புகளை விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது வெறும் அரட்டையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

அரசியல் பேச விரும்பாத, அரசியலில் ஈடுபடவிரும்பாத நவீன நடுத்தரவர்கத்தின் ஊடகமான விஜய் டிவி தனது விவாத நிகழ்ச்சிகளில்கூட அரசியலை விலக்கி வைக்க விரும்புகிறது. அதற்காவே இப்படியான மொன்னையான, கிச்சு கிச்சு மூட்டுகிற அல்லது குடும்பத்துக்குள் குத்து வெட்டை உண்டாக்கும் தலைப்புக்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றன. இலக்கிய விவாதங்களாக இருந்த பட்டிமன்றங்கள் சாலமன் பாப்பையா லியோனி குழுவினரால் வெட்டி அரட்டையாக மாற்றப்பட்டதைப் போல விவாத நிகழ்ச்சிகளில் மட்டும் இருந்த அரசியலை துடைத்து சுத்தம் செய்திருக்கிறது விஜய் டிவி.

 கொண்டாடு, அழு அதற்கு மேல் எதுவும் செய்யாதே எனும் எளிய பாடத்தை கற்றுக்கொடுக்கிறது நீயா நானா. இதே பாடத்தை கற்றுத்தரும் இன்னொரு இடம் டாஸ்மாக். களைப்பை போக்க பலர் தேநீர் அருந்துவார்கள், பலர் மது அருந்துவார்கள். எதுவானால் என்ன களைப்பு தீர்ந்தால் சரி என்று நாம் சொல்லமுடியாது. பலரும் விரும்புவதாலேயே சாராயத்துக்கு நாம் தேநீரின் அந்தஸ்தை தந்துவிட முடியுமா? நீயா நானா நிகழ்ச்சிக்குப் பின்னால் மக்களை சமூகம் எனும் அமைப்பில் இருந்து தனிமைப்படுத்தும் யுக்தி இருக்கிறது. உங்கள் வீட்டுக் கூடத்துக்கு வெளியே எந்த சிக்கலும் இல்லை என உங்களை நம்பச்செய்கிறது இந்த நிகழ்ச்சி.

சில நல்ல கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படாமல் இல்லை. ஆனால் அதற்கு எதிரான மட்டமான கருத்துக்களுக்கு தரப்படும் மதிப்பே இங்கு  நல்ல கருத்துக்கும் தரப்படுகிறது. அழகு என்பதைப் பற்றி சவுக்கால் அடித்த மாதிரி ஒருமுறை பேசினார் மருத்துவர் ஷாலினி. அடுத்தவர் அழகாக இருப்பதாக சொன்னால் உங்களுக்கு (ஷாலினி) பொறாமை வருகிறது என சொல்கிறார் தொகுப்பாளர். ஆக அங்கே நல்ல கருத்து என்பது ஒரு கருத்து அவ்வளவே. சாக்கடையில் பாலைக்கொட்டினால் பாலுக்காக வருந்தலாமேயன்றி சாக்கடை சிறப்படைந்துவிட்டதாக சொல்ல முடியாது. நீயா நானாவில் அவ்வப்போது கிடைக்கும் நல்ல கருத்துக்களை நாம் இப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு சாதாரண நிகழ்ச்சியை பார்க்கும் உரிமையைக்கூட குறைசொல்ல வேண்டுமா எனும் கேள்விகள் எழும்போதெல்லாம், பார்ப்பதற்கு இருக்கும் உரிமை அதனை பார்க்காதே என சொல்வதற்கும் இருக்கிறது என நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மது அருந்துவது குற்றமில்லை என்பது அதனை அருந்தாதே என சொல்லும் உரிமையை பறித்துவிடாது. மோசமான நிகழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதும் நல்லவற்றை அறிமுகப்படுத்துவதும் பகுத்தறிவுடைய ஒவ்வொரு பார்வையாளனின் கடமை. அதிலிருந்து நாம் விலகிவிடக்கூடாது.

 

முதல் பதிவு: வில்லவன்

அணிகளே! அழைக்கிறோம் வாருங்கள்!

2 ஜூலை

ஒரு நகரின் மையப் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இப்படி ஒரு அறிவுப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. (இது தான் எல்லா ஊரிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் இடப்பெயர் மறைக்கப் பட்டிருக்கிறது) சிபிஎம், சிபிஐ கட்சியினரை கம்யூனிஸ்டுகள் என்று அழைக்காமல் போலிகள் என்றே அழைப்பதற்கு பெரிதாக சித்தாந்த காரணங்களையெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது போன்று நடைமுறையில் ஏனைய ஓட்டுப் பொறுக்கி கட்சிகளைவிட தரம் தாழ்ந்து சீரழிந்து போய்க் கொண்டிருக்கும் யதார்த்த அனுபவங்களே போதுமானது. மேடைகளிலும், செவ்விகளிலும் வாய் கிழிய தத்துவ விசாரங்களை விளம்பிக் கொண்டிருக்கும், உள்ளுக்குள் முதலாளித்துவ கொள்கைகளுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சித் தலைமைகளை; அவர்களின் நடிப்பிலிருந்தே அவர்களை விழித்தெழ வைக்கும் செயல்கள் மிக்க கடினமானவை. ஆனால் .. .. ..?

 

ஆனால், கம்யூனிசம் எனும் சாரத்தால் ஈர்க்கப்பட்டு வழி தெரியாமல் இது போன்ற போலிக் கட்சிகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் அணிகளே! உங்களை நீங்களே பரிசீலனை செய்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் உள்ளூர் தலைமைகளிடமேனும் இது குறித்து விமர்சனம் செய்து பாருங்களேன். நீங்கள் இன்னும் சீரழிந்து போகாமலிருந்தால் கிடைக்கும் பதில் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

 

வாருங்கள். விமர்சனம், சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள். புரட்சிகர கம்யுனிச இயக்கங்களின்பால் உங்களை திருப்பிக் கொள்ளுங்கள். ஏராளம் பணிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

தென் மாவட்டங்களில் டெங்கு! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

1 ஜூலை

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகளே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம் !

அரசின் அலட்சியப் போக்கே உயிர் பலிகளுக்கு அடிப்படைக் காரணம் !

மனித உரிமை பாதுகாப்பு மையம் உண்மை கண்டறியும் குழு ஆய்வு முடிவுகள் !

டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, 7 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தது. அக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்துள்ளனர். அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையறியும் குழு உறுப்பினர்கள்:-

  1. க.சிவராசபூபதி, வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர். ம.உ.பா.மையம்.
  2. தங்கபாண்டி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம்,துத்துக்குடி
  3. ஜெயந்தி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்
  4. ராமர், ஆதிக்க சாதி எதிர்ப்பு கூட்டமைப்பு
  5. அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், திருநெல்வேலி
  6. கேபால், ம.உ.பா.மையம், நெல்லை
  7. ராஜபாண்டி, ம.உ.பா.மையம், துத்துக்குடி

கடந்த 26.5.12 அன்று நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள மருதம்புத்துர்,லட்சுமியூர், ராஜபாண்டி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய டெங்கு அதிகம் பாதித்த ஊர்களில் நேரில் ஆய்வு செய்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு :-

மருதம்புத்துரைச் சேர்ந்த சுரேஷ்-பிச்சம்மா ஆகியோரின் மகன் விஷ்ணு– வயது ஒன்றே முக்கால். காய்ச்சல் வந்தவுடன் குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போகப்பட்டது. அங்கே முதலுதவி கொடுத்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 வது நாள் இறந்தது.

விஷ்ணுவின் தாத்தா கூறியதாவது :- காய்சல் வந்த 2வது நாள் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றோம். காய்சல் இல்லை என்று கூறினார்கள். மீண்டும் காய்சல் வந்தது. தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். டெங்கு என்று கூறி நெல்லை G.H. கொண்டு போகச் சொன்னார்கள். தென்காசியில் 4 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் தான் மருத்துவர் வந்தார். சரியாக கவனிக்க வில்லை.

பென்சா-வயது மூன்று, 3 நாட்கள் காய்ச்சல். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அங்கே சாதாரண காய்ச்சல் என்று சொல்லி விட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக் கொண்டு வந்த போதும் சாதாரண காய்ச்சல் என்று கூறி விட்டனர். நாடி பிடித்துக் கூடப் பார்க்கவில்லை. 3வது நாள் சிறுமி இறந்து விட்டாள்.

டிக்சன்-10 மாதம். பெற்றோர் சபில்தேவ்-ராதா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை திராவிடமணியில் சேர்க்கப்பட்டது. Vomino என்ற மருந்து கொடுத்ததில் குழந்தை 11 மணிநேரம் துங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர். குழந்தை ஆரோக்யமாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு நடத்திய டெங்கு சிறப்பு முகாமில் காட்டிய போது டெங்கு இல்லை என்று கூறிவிட்டனர். 2 நாட்களில் குழந்தை இறந்துவிட்டது.

அபர்சிகா-11 மாதக் குழந்தை. இளையராஜா-மகேஸ்வரி தம்பதியரின் மகள். கடுமையான காய்ச்சலின் காரணமாக இழுப்பு வந்துள்ளது. பின்னர் மூக்கின் வழியாக ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டது.

லட்சுமியூரைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை கிருத்திகா தேவி. இதயத்தில் ஓட்டை இருந்ததாக திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. நெல்லை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பயனின்றி குழந்தை இறந்து விட்டது. இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் மறுநாள் வீடு தேடி வந்து அந்தச் சான்றிதழை திரும்பப் பெற்றுச் சென்று விட்டனர். சான்றிதழை ஜெராக்ஸ் நகல் கூட எடுக்க விடவில்லை. எதனால் அந்தச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

ராஜபாண்டியைச் சேர்ந்த உஷா நந்தினி என்ற 10 வயது சிறுமியும், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சீலா என்ற 18 வயது பெண்ணும் டெங்கு அறிகுறிகளுடன் இறந்துள்ளனர்.

கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-

டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்

தமிழ்நாட்டில் டெங்கினால் அதிகபட்சம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லுர் மற்றும் தட்டான்குளம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.5.12 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.

கடையநல்லுரின் சுகாதார நிலைமை படுமோசம். ஊரின் நடுவே வாய்க்கால் ஒன்று குறுக்கு வெட்டக ஓடுகிறது. இது பாசனக் கால்வாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கால்வாயின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மனிதக் கழிவுகள் முழுவதுமாக இதில்தான் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே வாய்க்கால் கரையில்தான் அரசு மருத்துவமனை, பிண அறை, ஆடு அறுக்கும் வதைக்கூடம் (Slaughter House) அனைத்தும் உள்ளன. எனவே சுகாதாரக் கேடு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கடையநல்லுருக்கு குடிநீர் தரும் ஆழ்குழாய்க் கிணறும் இங்கே தான் உள்ளது. நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் கோடிக் கணக்கில் கொசுக்கள் வாசம் செய்கின்றன. ஆற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற நீரோடு போர் தண்ணீரும் சேர்த்து குடிநீராக வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கடையநல்லுர், புளியங்குடி, தென்காசி போன்ற ஊர்கள் சுகாதார சீர்கேடு நிறைந்தும், பன்றிகளின் சொர்க்கமாகவும் திகழ்வது பலமுறை ஊடகங்களால் அம்பலமாகியுள்ளது. எனவே கடையநல்லுர் எல்லாவித தொற்று நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்குவதில் வியப்பேதும் இல்லை தான்.

கடையநல்லுரில் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் டெங்குவினால் உயிர் இழந்து உள்ளனர். டெங்குவினால் இறந்த N.செய்யது மசூது என்பவரது உறவினர் ஜபருல்லா கூறும் போது, “வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று கூறவே இல்லை. குணமாகி விடும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். போதுமான சிகிச்சை அளிக்கவில்லை. அதுபற்றிய விவரமும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடைசியில் நோயாளி இறந்து விட்டார். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ஜபருல்லா கூறினார்.

கடையநல்லுரின் சுகாதார சீர்கேடு மிகவும் பிரபலம். அதனால் தான் டெங்கி-னால் உயிரிழப்பு அங்கே அதிகம். இவ்வளவு பாதிப்புக்குப்பின், திடீரென்று 50 சுகாதாரப் பணியாளர்களை நிர்வகாகம் இறக்கி விட்டுள்ளது. அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அள்ளவும், மருந்து தெளிக்கவும் வந்த போது பொதுமக்கள் அவர்களைத் தடுத்து விரட்டி விட்டுள்ளனர். “இதுவரை இந்தப் பக்கமே வராதவர்கள் இன்று மட்டும் திடீரென்று வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எங்களுடைய சுகாதாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் போங்கள்” என்று சொல்லி தடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரப் பணிகள் அங்கு நின்று போயிருந்திருக்கிறது.

அறிகுறிகள் என்ன ?

டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

முதல் உதவி :-

 ”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம் என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.

டெங்குக்கு மருந்து இல்லை :

மருத்துவ அறிவியல் வானளாவ உயர்ந்திருக்கிற இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் டெங்கு காய்சலுக்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். “சில தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும், பாதிக்கப்பட்டவரை உடனிருந்து நன்கு கவனிப்பதன் மூலம் காப்பாற்ற முடியும்” என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முதல்வர் மனோகரன்.

நெல்லை, துத்துக்குடி மாவட்டங்களில் டெங்கினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான். அங்கு நேரில் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில் பாய் விரித்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய கவனிப்பு இல்லை. குழந்தைகள் அதிகம் என்பதால் உடன் வருவோரின் கூட்டமும் சேர்ந்து பெருங் கூட்டமாக உள்ளது. நோயாளிகளுக்கு குடிக்க வெந்நீர் போடும் வசதி கூட இல்லை. போதிய மருத்துவர்களோ, பணியாளர்களோ, செவிலியர்களோ இல்லை. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சை பற்றிய விவரம் கேட்டால் மருத்துவக்கல்லுரி முதல்வர் கூட அதற்குப் பதில் சொல்ல மறுக்கிறார். சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இப்போது மாவட்ட மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த அதிகாரி பரிசோதனைக் கூடத்தில் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டத்தை கண்டித்து ஊழியர்களை கடுமையாகத் திட்டியுள்ளார். ஊழியர் தவறாக சோதனை மேற்கொண்டு தப்பான முடிவினைத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் கண்டறிந்தது உண்மைதான் என்று ஆதராப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் விளைவாகத்தான் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் அத்தியாவசியமான எந்த நடவடிக்கையையும் தானும் செய்யமாட்டார். பிறரையும் செய்யவிடமாட்டார் என்று மருத்துவ வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட உண்மையை பரிசீலித்து உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் டெங்கு இந்த அளவுக்குப் பரவ விடாமல் தடுத்திருக்கலாம் என்பது பலரும் கூறும் பொதுக் கருத்தாகும். இதனை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீரான் மைதீன் மட்டுமல்ல அரசு எந்திரத்தின் ஒவ்வொரு துறையிலும் பல அதிகாரிகள் இவ்வாறு தான் உள்ளனர். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற தன்மை. அரசும் சிக்கியவர்களைப் பழிவாங்கி விட்டு பின்னர் பிரச்சினையைக் கிடப்பில் போட்டுவிடுவது வாடிக்கை.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை :

டெங்கு பாதித்த நபர்கள் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அங்கு தரமான சிகிச்சை தரப்படவில்லை. மருத்துவ மனை சுத்தம் சுகாதாரமாக இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு மக்கள் போக ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் திராவிட மணி மருத்துவமனை, நெல்லை சுதர்சன், முத்தமிழ் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அநியாய கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற போதிலும் தனியார் மருத்துவமனைகளை வேறு வழியின்றி மக்கள் நாடிச் சென்றுள்ளனர்.

வழக்கம் போல தனியார் மருத்துவமனைகள் பழச்சாறும், இளநீரும், சாதாரண மருந்து மாத்திரைகளையும் கொடுத்து ரூ 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் மக்கள் கட்டாயமாக தனியாருக்குத் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்குவினால் இறந்தவர்களில் 90 விழுக்காடு பரம ஏழை மக்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு நேரடியாக ரத்தம் ஏற்றுகின்றனர். ஆனால் தனியாரில் பிளேட்லெட்ஸ் ஏற்றப்படுகிறது. ரத்தம் ஏற்றுவதை விட பிளேட்லெட் ஏற்றுவதே சிறந்த பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ?

டெங்கு பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நீர்நிலைகளில், சாக்கடைகளில் மருந்து தெளிப்பது, குடி தண்ணீரில் குளோரின் கலப்பது, கிராமப்புறங்களில் டெங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, நகர்ப்புறங்களில், சுவரொட்டி, துண்டறிக்கை, ஆட்டோ பிரச்சாரம் செய்வது, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு இவை தவிர வேறு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

குடிதண்ணீரை மூடிவையுங்கள், காய்ச்சி குடியுங்கள், சிரட்டை, டயர், தேங்காய் மட்டை, நெற்று போன்ற சிறிய கொள்ளளவில் தேங்கும் நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே அவற்றைக் கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. இத்துடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது. வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து வருவதாகவும் அரசு சுகாதாரத்துறை ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறது. இது, டெங்கு வருவதற் கான சுற்றுச்சூழல் மக்களால் தான் ஏற்படுவது போன்ற கருத்தை உருவாக்கு கின்றது. ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. குப்பைகளை அகற்றுவது, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, கழிப்பறை வசதி-இவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

உண்மையான காரணங்கள் என்ன ?

நல்ல தண்ணீரில் தான் டெங்கு வைரஸ் உருவாகின்றது என்று சொல்லப் படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. டெங்குவை ஆர்போ வைரஸ்கள் பரப்புகின்றன. மனிதர்களிடமும், கொசுக்களிடமும் மட்டுமே இந்த வைரஸ் குடியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவாது. டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் மூலம் பிறருக்கும் வைரஸ் பரவும். எனவே டெங்கு பரவுதலுக்கு மோசமான சுகாதார சீர்கேடு தான் காரணம். அதிலிருந்து தான் மானாவாரியாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கொசு உற்பத்தியைக் கட்டுப் படுத்தவில்லையானால் நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால் தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. குடிநீருக்கும் டெங்குக்கும் சம்பந்தமே இல்லை.

அரசு தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதார பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. எனவே தனியார் முதலாளிகள் லாப நோக்கத்தோடு மட்டுமே செயல்படுபவர்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வாறு அவர்களது வேலை நடைபெறுகிறது. எனவே எல்லா நிலைகளிலும் சுகாதாரம் பராமரிப்பின்றி நோயுற்றிருக்கிறது கண்கூடு. இதில் கொசு, கிருமிகள், வைரஸ் பரவல் & ஒழிப்பும் அடங்கும்.

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொறுப்பையும் அரசு கை விடுகிறது. தண்ணீர் லாபத்துக்கென்று மாறிவிட்டது. டெங்கு பாதித்தவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 4 லிட்டர் சுகாதாரமான (மினரல் வாட்டர்) குடிநீர் தரவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவ மனைகளில் குடிநீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது, கட்டணக் கழிப்பறை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குடிக்க சுடுதண்ணீர் வசதி கூட இல்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு அன்றாடம் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. டெங்கு தொற்று போன்ற நேரங்களில் சொல்லவே தேவை இல்லை. இந்தக் கூட்டத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள், கருவிகள் இல்லை. கவனிப்பும் இல்லை. அரசு மருத்துவ மனையில் கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பறை வசதி மிக மோசமாக இருப்பதால் பொது மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுவதாக மக்கள் கூறுகின்றனர்.

சோதனைக்கூட வசதி இல்லை. ரத்தத்தில் பிளேட்லெட் அளவைக் கண்டறியும் சோதனைக்கு தனியார் சோதனைக் கூடங்களில் ரூ1500/- கட்டணம். இரண்டு மூன்று முறை சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் செலவு கூடுதலாகும். இந்த வசதி அரசு மருத்துவமனையில் குறைவாக உள்ளது. பிளேட்லெட் எண்ணிக்கை 3 லட்சம் இருக்க வேண்டியது 10 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டால் இறப்பு நிச்சயம் எனும் போது ஏழை நோயாளியின் நிலை பரிதாபத்துக்குரியது.

டெங்கு பாதிப்பு முதலில் பாளை அரசு மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதை அலட்சியப்படுத்தி சோதனை முடிவு தவறு என்று ஊழியர்களைக் கடிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவர்கள் டெங்கு பற்றிய விவரங்களை உள்ளமுக்குவதற்கு செய்த முயற்சிகளே பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. ஏனெனில் காய்ச்சலில் இறந்த யாருக்கும் அவர்கள் இறப்பு சான்று தரவே இல்லை. தந்ததையும் பறித்துக் கொண்டனர்.

இது போன்ற, மக்களின் சுகாதாரம் தொடர்பான தனிச்சிறப்பான நிலைமைகள் தோன்றும் போது அதை எதார்த்தமாக திறந்த மனதுடன் பரிசீலித்து தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கும் தன்மை நமது அரசுக்கும் அரசு எந்திரத்துக்கும் இல்லை என்பது எமது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இலவசங்களைக் கொடுத்து நலத்திட்டங்கள் என்று கூறும் அரசு, மக்களின் உடல்நலம் தொடர்பான திட்டங்களை அலட்சியப்படுத்துகிறது.

______________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம்  தமிழ்நாடு
குமரிதுத்துக்குடி மாவட்டங்கள்.

_______________________________________________________

முதல் பதிவு: வினவு