முகம்மதின் குழந்தைத் திருமணம்

29 அக்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 10

 

நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்தது. மேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லை. ஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.

அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.

மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160).

புகாரி ஹதீஸ் -3894

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய,  ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல. 

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள  கட்டுரையிலிருந்து…

Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.

A. He was a Paedophile.

B. He was involved in child abuse.

Let’s analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).

A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder) மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம் சட்டப்படுகிறார்.

Paedophile – சிறுகுறிப்பு

Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பது. வயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர். இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                          

 Brittanica encyclopedia 2008

 

கண்டறியும் முறை:

குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்,  ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல். இந்த வற்புறுத்தல் காரணமாக  அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார். இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.

 

DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3,  (American Psychiatric Association).

 

Child abuse– சிறுகுறிப்பு

சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல். மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது. அவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, கற்கும் திறன், மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்

விவாதம்

Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர். ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில், ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களை, Paedophile என்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள், ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லை. நேர்மாறாக  தோற்றத்திலும், அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள கட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.

முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்

Muhammad even wanted to marry a crawling baby-girl. Let us read what ibn Ishaq, the most authentic biographer of Muhammad wrote about this. 

(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 

 

(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)

Musnad Ahmad: 25636

Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, “If she grows up while I am still alive, I will marry her.” 

(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. என்று கூறினார்)

நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்

நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.

மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?

 

முஷ்கின் என்ற பதினொருவயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மோகன கிருஷ்ணன் என்ற காமுகனை ஒட்டு மொத்த தமிழகமும் சபித்தது ஏன்?

09.11.2010-ல் அவன், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, மக்கள் வரவேற்று கொண்டாடியதை நினைவுபடுத்திப் பாருங்கள். மோகன் மீது,  தமிழக மக்கள் இந்த அளவிற்கு வெறுப்பை உமிழ காரணம் என்ன?

சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?

உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலை வாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர். அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி  அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு ‘அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

Sahih Muslim 2:3310, 3311, Page716

‘A’isha (Allah be pleased with her) reported that Allah’s Apostle (may peace be upon him) married here when she was seven years old, and she was taken to his house as a bride when she was nine, and here dolls were with her: and when he (the Holy Prophet) died she was eighteen years old.”

அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார். ஆனால் முஹம்மது நபி விபரீதமான, வினோதமான பொம்மையை வைத்து விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இச்சம்பவத்தை “அதிர்ச்சியளித்தார்” என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.

 புஹாரி ஹதீஸ் : 6130

ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,

நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச்சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.

 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)

 

 Islamic Q&A வின் பதில்

“. . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . .” [al-Talaaq 65:4]

 

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.

Al- Muhallab said: “[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman.”

(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)

அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா  அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?

குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.

திருமணத்திற்கான வயதெல்லை? 

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின் சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும் மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதி. ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).

ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் ‘அதிர்ச்சியளித்ததாக’ எந்த விதமான செய்தியும் இல்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.

அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?

நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர் வர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?

முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …

 

பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும், கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?

“ஆம்” என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)

இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?

முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…?

எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான “அந்த”செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் “தொடைவேலைகளும்” இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்.

‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?

முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

 

தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும், தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும், மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும், நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.

ஆயிஷா அவர்கள் வயது குறைவாக இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடல் முழுவளர்ச்சியடைந்து இருந்தது என்றும் வாதிடுகின்றனர். ஆயிஷா அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)

 

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

   …..என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன்.

 

இச்சம்பவம் நிகழும்பொழுது சுமார் 13 வயது இருக்கும். அப்படியானால் ஒன்பது வயதில் எப்படி இருந்தருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள்.

திருமணத்திற்கான  வயதெல்லை? 

நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.

இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள். சிறுவனுக்கும் ஆயிஷா (ரலி)அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்)  அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.” [புஹாரி :4757]

இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது

 

அவதூறு பேசப்படுவதையும், சிறுவனை வழித்துணையாக பெற்றதும்  உடல்வளர்ச்சியின்  அளவுகோலாக பார்க்கலாமா? அவதூறு செய்தியை நபி  உண்மையென நம்புவதை உணர்ந்த ஆயிஷா அவர்கள், இறைத்தூதர்  அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என கூறுவதை அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக எவ்வாறு காணமுடியும்? இதில் என்ன அறிவுத்திமை இருக்கிறது?

திருமணத்திற்கான  வயதெல்லை? 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .(இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.

ஹதிஸ்கள் என அறியப்படும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அதிகம் அறிவித்தவர்களில் இவரும் ஒருவராகும்.

பெண்ணியல் சட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார்.

ஆறு வயது  குழந்தைக்கு,  கல்வியில் என்ன புலமை இருக்க முடியும்?  ஆயிஸா  அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலர் முழுமையாக இஸ்லாத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா? என்ற கேள்விக்கு திருமணத்திற்கான வயதெல்லை?  ஆசிரியரின் பதில்

 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)

பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். ( மற்றவைகளை இறைவனே அறிவான்.)

ஒரு மனைவி தன் கணவரின் செயல்பாடுகளை தெரிவிப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வு. இதை உலகமகா அறிவுகூர்மை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பிறப்பால் முஸ்லீமான ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். முஹம்மது நபி  அவர்களின் காலத்தில் பிறப்பால் யாரும் முஸ்லீமாக இருக்கவில்லை(?) முஹம்மது நபி  அவர்கள் உட்பட.   எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தார் என்று வாதிடுகின்றனர்.  இவர்கள்  மார்க் அறிவு அல்லது பகுத்தறிவுடன்தான் வாதிடுகிறார்களா என தெரியவில்லை.  பிறப்பால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? இதைக் கூட நபி  அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

ஆயிஷா  அவர்களின் அழகையும், வல்லமைமிக்க நினைவாற்றலையும், அறிவு கூர்மையையும் கண்டுவியந்து அவர் மேல் விருப்பம் கொண்டார். மார்க்கத்தை முழுமையாக கற்பித்து முழுமையான முஸ்லீமாக, பின்வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக  உருவாக்கவே ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தார் என்றும் ஒரு விளக்கம். ஆனால் ஆயிஷா அவர்கள் அறிவித்த பல ஹதீஸ்களைக் காணும் பொழுது அறிவுகூர்மைக்கு பதிலாக வெகுளித்தனமே தெரிகிறது. மேலும் அவர் அறிவித்த ஹதீஸ்களில் பல “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற வகையைச் சேர்ந்தது.

அன்றாட வாழ்வில் மிக திறமையான அறிவுகூர்மையான பல சின்னஞ்சிறு சிறுமிகளைக் காண்கிறோம். ஒரு ஐம்பது வயது மனிதர் அத்தகைய சிறுமிகளைக் கண்டு வியந்து தனக்கு அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பை மேலும் வலுப்படுத்த ஆயிஷா  (ரலி)  அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்.

நபி அவர்களும் அபூபக்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களைப் வாழ்ந்தவர்கள். இத் திருமண உறவு மட்டுமே அவர்களது நட்பை நீடிக்கச் செய்யும் என்று வாதிடுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. உணர்வுகளின் அடிப்படையில்  நபி, ஆயிஷாவை தன் (சகோதரரின்) மகளென்றே கூறியிருக்க வேண்டுமே தவிர அவரது ஆறு வயது பெண் குழந்தையை மனைவியாக காண்பது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.

எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற முதிர்ச்சி கூட இல்லாத ஒரு சிறுமியை வதந்திகளை உண்மையென நம்பி சந்தேகப்படுகிறார், சிறுமியான ஆயிஷா  அவர்களை விட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்கிறார். இறுதியில் ஆயிஷா  அவர்களை மணவிலக்கு செய்ய முடிவு செய்து தோழர்களுடன் ஆலோசிக்கிறார்.

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசப்பட்ட செய்தி…. (இதைப்பற்றி விரிவாக பின்னர் காணலாம்)                       

(புகாரி 2661,3388,4141,4750,4757)

எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தது அற்பமான உடல் தேவைகளுக்காக மட்டுமே!

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

நபி  அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன்  “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி  அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

 இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

 புகாரி ஹதீஸ் -7012

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்

(புகாரி 5078,  5125)

(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)

ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி  அவர்கள்,  ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார்.  ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

இது  தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி  அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி  அவர்கள் ஆயிஷா  அவர்களை திருமணம் செய்வது,  Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்?  அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும்,  தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா  அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக  நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.

ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா  அவர்களைப் பற்றி நபி  அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.

புஹாரி ஹதீஸ் -2028

அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.

(புகாரி 2028-2031, 2046)

மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி  அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே  நபி  அவர்களின் உயிரும் பிரிந்தது.

புஹாரி ஹதீஸ்  : 4450  

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

 (இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி  அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி  மரணிப்பது எப்படி?)  

மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,

புகாரி ஹதீஸ் -5218

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது

என் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்…

 (புகாரி 4913,5115, 5218).

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

மற்ற மனைவியரை விட நபி  அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி  அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர்  மற்றும்  பாத்திமா  அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. 

 

ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி  அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்….

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.

அல்பாக்கவி.com–ன் “அன்னை ஆயிஷா (ரலி)-1″என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

சிறுமிகளை திருமணம் செய்யலாமா?

சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.

புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி  அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி  அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.

 உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி  அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி  அவர்கள்  உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)

நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும், நபி  அவர்களுக்கும்  உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும்  அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.

Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. என்னைத்தவிர வேறுயாரும் Child sex  செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை.  நபி  அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.

மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள்,  தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்

நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர்  அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.

Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.

“‘Umar asked ‘Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. ‘Ali replied that she has not yet attained the age (of maturity). ‘Umar replied, ‘By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me’. Thus ‘Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to ‘Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. ‘Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, ‘You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you’. With that ‘Ali married Umm Kulthum to ‘Umar.” [In Tarikh Khamees, Volume 2, p. 384 (‘Dhikr Umm Kalthum’) and Zakhair Al-Aqba, p. 168]

ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு  பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!

ஆம்…! 

முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.

சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?

அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?

இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி  பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின்  Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?

(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது  ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)

நிச்சயமாக முடியாது. காரணம் Child sex  ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.

இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது.  முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)

நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.

நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர்  செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.

என்னுடைய கேள்விகளால் “திருமணத்திற்கான வயதெல்லை ?” யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.

…இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.

“ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.”

Islamic Q & A வின் பதில்

In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.

 

திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  நிச்சயமாக  Child sex முஹம்மது நபி  அவர்களின்  வழிமுறையாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ் -4788

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி  வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக  உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களும், என் மனதை நெருடியது…

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

43 பதில்கள் to “முகம்மதின் குழந்தைத் திருமணம்”

  1. curesure4u ஒக்ரோபர் 29, 2011 இல் 7:32 பிப #

    ஜாகிர் நண்பரே ..பல நல்ல விஷயங்களை ஆராயலாமே !!!
    தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாமே ..

    • TSri நவம்பர் 14, 2011 இல் 10:38 பிப #

      தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாமே ..

      என்னங்க இப்படி சொல்லுறிங்க! ஆறுவயது குழந்தயை திருமணம் செய்தவர், அந்த சிறுமி ஒன்பதாவது வயதடையும் போது உறவு கொண்டவரை புனிதராக பிரசாரபடுத்துகிறார்கள் அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதை சொல்வது தேவையற்றதா?

      • S.Ibrahim நவம்பர் 15, 2011 இல் 8:46 பிப #

        எம்ஜியார் ,சிவாஜி என்டியார் காலத்தில் அறுபது எழுபது களைத்தாண்டியும் கதாநாயகனாக நடிக்க முடிந்தது.ஆனால் இப்போது அது போன்று முடிகிறதா?ஒரு குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம்?அது போன்று அந்தக்கால நடைமுறைகளை சிந்தித்து பாருங்கள் .சமகாலத்து மக்கள் அரபுலகில் இது போன்று திருமனம்கள் சாதரணமாக நடந்துள்ளதால் ,முஹம்மது நபி [ஸல்] அவர்களுக்கு சிறு தவறுகள் ஏற்படினும் அதை வைத்து பல அவதூறுகள் உருவாக்கி அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில் இது போன்று திருமணத்தை வைத்து உண்டு இல்லை என்று பார்த்திருப்பார்கள். நபி[ஸல்] அவர்கள் காலத்திலே பால்ய விவாகத்திற்கு முடிவு கட்டினார்கள்.

      • Rizwan N. Mohamed ஜூலை 9, 2012 இல் 4:41 பிப #

        அவர்கள் (முஹம்மத் (ஸல்) அவர்கள்) என்ன செய்தார்கள் என்பதை ஒரு கிறிஸ்தவ ஆய்வாளர் சகோதரர் மைக்கல் எச். ஹார்ட் என்ன சொல்லுகிறார் என்று படிங்களேன். முஹம்மது நபி (கி.பி. 570 to 632)

        இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

        எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

        இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

        அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

        இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

        பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

        இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

        அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

        முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

        கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

        ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

        இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

        ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

        ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

        இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

        வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

        ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

        ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.

        நன்றி : The 100

        படிச்சி முடிச்சிட்டீங்களா. வயறு எரியுது பெரீய ஐஸ் கட்டிய வச்சிகீங்க புரியல ஐஸ் ஐஸ்

  2. kathiravan ஒக்ரோபர் 30, 2011 இல் 7:45 முப #

    « கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – Iஅருந்ததீ ராய் மாவோ தீவிரவாதிகள் பேச்சுக்குத் தயாராம்! »
    கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம்,

  3. S.Ibrahim நவம்பர் 5, 2011 இல் 8:33 பிப #

    இஸ்லாத்தை பற்றி அதிகமாக விமர்சிக்கும் செங்கொடி ,அவர்களே அதற்கு ஒரு மாற்று தீர்வு கம்யுனிசம் என்று ஏட்டளவில் புலம்பிக் கொண்டு வருகிறீர்கள் .எங்கே நடை முறையில் உள்ளது என்று கேட்டால் உலகம் முழுவதும் கம்யுனிச கொள்கையை ஏற்கும் போது அது வரும் என்று உளறுவதை வாடிக்கையாக கூறி வருகிறீர்கள். குறைந்த பட்சம் உங்களது கொள்கைவாதிகள் அளவிலாவது நடைமுறை படுத்தியதை காட்டுங்கள் என்று சொன்னால் ,அது இயலாத ஒன்று எனவும் சொல்லப் படுகிறது. மேலும் நாங்கள் இப்படி இஸ்லாத்தை விமர்சித்துத்தான் கம்யுனிசத்தை உலகம் முழுவதும் கொண்டு வரப்போகிறோம் என்கிறாரோ?இந்தியாவில் அதிகமான கம்யுனிஸ்ட்கள் உள்ளனரே என்றால் அவர்கள் போலிகள் என்கிறார்கள். முதலில் அந்த போலிகளை ,உண்மைகளாக மாற்றிவிட்டு அதன் பின்னர் நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக ,ஏற்கனவே காணாமல் போன கம்யுனிச பாதை சோஷலிசத்தை ரஷ்யாவில் சென்று நல்ல வேலைகளில் இருந்து கொண்டு இணைய தள மூலமாக நடைமுறைகளுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்யலாம். இதையெல்லாம் செய்ய திராணி அற்று இஸ்லாத்தை விமர்சிப்பதை நேரடியாக செய்ய வாருங்கள் என்றால் திரை மறைவே எனக்கு வசதி எனவும் கூறி வருகிறீர்கள். ஆக நீங்களும் போலி கம்யுனிஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை.
    முகம்மது நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கைப் பற்றி விமர்சிக்குமுன் தாங்கள் நியாயவாதியாக இருந்தால் தாங்கள் முதலில் நன்கு அரபியை தெரிந்து அதன் மூல நூல்களை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.ஹதீத் கலை பயின்று இருக்க வேண்டும் உலகில் எந்த மனிதரின் வாழ்க்கையும் இத்தனை வெளிப்படையாக வைக்கப் படவில்லை .உங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் வெளி உலகிற்கு தாங்கள் ஒரு சிறந்த கம்யுனிச சித்தாந்த வாதியாக தெரியும் .ஆனால் அந்த சித்தாந்தத்திற்கு மாறாக எப்படியெல்லாம் இருந்துள்ளீர்கள் என்பது உமது நெருங்கிய நண்பர்களுக்கு தெரியலாம்..அதைவிட உங்கள் குடும்பத்தினருக்கு தெரியலாம்.இன்னும் உங்களது மனைவிக்கு தெரிவதோடு ஏனைய தவறுகளும் உங்கள் மனைவிக்கு தெரியலாம்.உங்கள் மனைவிக்கு தெரியாத உங்களது மனவிகாரங்களும் இருக்கலாம். உதாரணமாக எம்ஜியார் பற்றி வரலாற்று குறிப்புகள் அவரை சிறந்த மனிதராகவே காட்டும் .அவரது பலவீனங்கள் மறைக்கப்படும்.அவரை விமர்சிக்கும் நூல்கள் இரண்டாந்தர நூலாக கூறுவார்கள்.பிரபல்யங்கள் எழுத மாட்டார்கள்.அவர் தனது எழுபது வயதில் பதினாலு வயது பெண்களுடன் கூத்தடித்ததை யாரும் நினைவு கூறமாட்டார்கள் .திரை மறைவு விஷயங்கள் வெளிவராது. வெளிவந்தாலும் நம்பத்தகுந்தவைகள் அல்ல என்று தூற்றிவிடுவார்கள். டிஜிபியாக இருந்து ஒய்வு பெற்ற மோகன் ,தனது நூலில் ,1971 இல் அவர் சிபிஐ அதிகாரியாக இருந்தபொழுது இந்திராகாந்தியின் உத்தரவின் பேரில் திமுகவை உடைக்க எம்ஜியார் வீட்டில் ரைடு நடத்த ரகசியமாக சென்றதாக கூறுகிறார்.இதை எத்தனை பேர் எடுத்து காட்டுகிறார்கள்? இப்படி பார்த்தால் அனைத்து தலைவர்களையும் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை மறைக்கபட்டிருக்கும் .அல்லது பிரபலய மற்றவர்கள் எழுதி இருப்பார்கள்.உங்கள் தன மானத்தலைவர் பற்றிய Young Stalin by Simon Sebag Montefiore என்பவர் எழுதிய நூலில் அவரைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
    1907 இல் ஸ்டாலின் முன்னின்று நடத்திய திபிலிசி வங்கிக்கொள்ளையை மாண்டபியோரி ஹாலிவுட் ஸ்டைலில் விவரிக்கிறார். பட உரிமைகள் விற்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படும் அந்த கொள்ளையில் சிக்கிய கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபிள்கள் பெருமளவு லெனின் வசம் சென்று சேர்கிறது. அதனால் லெனின் ஸ்டாலினிடம் பெருமதிப்பு கொள்கிறார். முதலில் தன்னோடு போட்டியிட்ட, பின்னர் தன் தலைமையை ஏற்ற ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்க ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கிறார்.
    திபிலிசி கொள்ளைக்குப்பின் எண்ணெய் வளம் கொப்பளிக்கும் பாகு நகரத்திற்கு போல்ஷெவிக் கட்சியை வளர்த்தெடுக்க ஸ்டாலின் வருகிறார். கண்ட இடமெல்லாம் எண்ணெய் பீறி அடிக்கும் பாகு, அசெர்பைஜானின் தலைநகர். அக்காலத்தில் ஐரோப்பியப் பெரும் பணமுதலைகள் ( ஆல்ஃப்ரெட் நோபெல் உட்பட ), மத்திய ஆசியத் தொழிலாளர்கள், ரஷ்ய ராணுவம் என்று வினோதமான கலவை நிறைந்த நகரம். நகரில் திடீர்ப் பணக்காரர்கள் குழுமியுள்ளனர். இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் ’அந்த விதத்திலும்’ சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.புத்தக விவரங்கள்: Young Stalin : by Simon Sebag Montefiore Paperback
    Pubished by: Phoenix / Orion Books ltd, London2007/ ISBN: 978-0-7538-2379-8
    இரும்புத்திரை ஆட்சியிலிருந்து இத்தனை விஷயங்கள் வெளிவந்துள்ளன என்றால் இன்னும் மூடி மறைக்கப்பட்ட ஸ்டாலின் ரகசியங்கள் எத்தனை இருக்கக் கூடும்?

    வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,

    கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I


    வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,

    கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – II


    வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,

    கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – III


    இந்த லிங்கில் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரத்தை ஆதாரங்களுடன் மறுக்காமல் பொத்தாம் பொதுவாக மறுத்தது சரியான மறுப்பாகுமா?

    கம்யுனிச தலைவர்களின் இரும்புத்திரைக்குள் நடந்த காம களியாட்டங்களை மூட்டை கணக்கில் வைத்துக் கொண்டு ,கம்யுனிசம் பற்றி ஜோக் சொன்னாலே சிறைக்கு அனுப்பிய மனிதாபிமான அற்றவர்களை ஆட்சியை பெருமையடிக்கும் நீங்கள் பெண்ணுரிமை ,ஆணாதிக்கம் பற்றி கற்பனை உலகில் உழலுவது நியாயமா? முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தன்னை கண்டிக்கும் வசனங்களையும் வெளிப்படுத்த வில்லையா? அவர்களின் தலையில் எத்தனை வெள்ளை முடிகள் இருந்தன என்று கூட வரலாற்றில் எழுதப் பட்டட்டுள்ளது, விதந்தோம்பல் அல்ல .முஹம்மது[நபி]அவர்களின் வாழ்க்கையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.எனபதையே அது போன்றே ஹதீத்கள் மூலம் தெரிய முடிகிறது.

    புகாரி ஹதீஸ் 5081
    உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
    நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.

    நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் அது ஆதாரப்பூர்வமானது அல்ல ஏனெனில் இதை அறிவிக்கும் உர்வா அவர்கள் ஆயிஷா அரலி அவர்களின் திரும்ணத்தின் போது பிறக்கவே இல்லை. நபிகள் நாயகத்தின் காலத்தில் இவர் வாழவும் இல்லை. அதன் மூலத்தைக் கீழே தந்துள்ளேன்
    حدثنا عبد الله بن يوسف حدثنا الليث عن يزيد عن عراك عن عروة أن النبي صلى الله عليه وسلم خطب عائشة إلى أبي بكر فقال له أبو بكر إنما أنا أخوك فقال أنت أخي في دين الله وكتابه وهي لي حلال
    இந்த மாதிரியான ஆதாரமற்ற ஹதீத்களை வைத்துக் கொண்டு கோடிகணக்கான மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதரை விமர்சிப்பது தங்களை சிந்தனையாளர் என்று வெளிபடுத்துமா?அல்லது ஒரு மதத்தின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்த கிடைக்கும் ஆதாரமற்ற செய்திகளை பயன்படுத்தி அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கமா?இதன் மூலம் தங்கள் புகழை கம்யுனிஸ்ட்கள் மத்தியில் உயர்த்தி கொள்ளும் நோக்கமா?
    ///முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ///
    நீங்கள் ஹதீத் கலை அறிஞர் போல் தெளிவாக உறுதி செய்யப்பட ஹதீஸ் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்து உள்ளீர்கள்?
    ///ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல் எப்படி ஒரு பொய்யை கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.///
    இது உங்களுக்குத்தானே பொருந்தும்.ஒரு ஹதீஸின் தரம் தெரியாமல் அதை வைத்து கதை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன அப்படி ஆத்திரம்?
    ///‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான நபி அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?///
    இது ஒரு மடத்தனமான வாதம் .நபி [ஸல்]காலத்திலும் முந்தைய பழக்க வழக்கப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் மது பானம் அருந்தியவர்களாக இருந்தனர் .முதலில் தொழுகையில் மட்டுமே மது பானம் தடை செய்யப் பட்டது,அதன் பின்னர் முழுமையாக தடை செய்யப் பட்டது.உங்களை போல் எழுதுபவர் முந்தைய செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டு குர்ஆனில் தொழுகை தவிர மற்ற நேரங்களில் மது அருந்த அனுமதி உள்ளதே ,அதை ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்ய வில்லை,இதை வைத்து ஒரு பொது விவாதம் நடத்தக் கூடாதா?என்றெல்லாம் கேப்பது போல் உள்ளது உங்களது வாதம்.
    நம்பிக்கை கொண்டோரே !பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர்ஆன்]
    கன்னிப் பெண்ணாயினும் ,விதவை பெண்ணாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள்[ஸல்] அவர்கள் கூறியபொழுது ,கன்னிப் பெண் [சம்மதம் தெரிவிக்க ] வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.அதற்கு நபி[ஸல்] அவர்கள் அவளது மவுனமே அவளது சம்மதம் என்று கூறினார்கள்.புகாரி 6971 , 6964
    எனது தந்தை எனது சம்மதம் பெறாமலே எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் .அதனை விரும்பாத நான் நபி[ஸல்] அவர்களிடம் வந்து இதை கூறியபோது அந்த திருமணத்தை ரத்து செய்தார்கள் .அறிவிப்பவர் கன்ஸா பின்த் kitham [rali ]
    புகாரி 5139,6945,6969
    அவதூறு எழுதுவதற்காக சியாக்களின் ஹதீத்களை தேடி சென்று எழுதும் உங்களுக்கு இந்த ஹதீத்கள் ஏன் கிடைக்கவில்லை ?அபூபக்கர் [ரலி] அவர்கள் கதிஜா இறந்த பிறகு ,நபி[ஸல்] அவர்களிடம் உங்களுக்கு பணிவிடைகள்; செய்ய ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ய வேண்டிய ஹதீத்கள் கிடைக்காமல் உங்கள் கண்ணை மறைத்தது எது? ஆயிஷா [ரலி] அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் ஷவ்வால் மாதத்தில் பருவம் அடைந்த பிறகு இல்வாழ்க்கை தொடங்கியதாக கூறும் ஹதீத்கள் ஏன் உங்கள் பார்வைக்கு எட்டவில்லை?
    பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளார்கள் [குர்ஆன்4;21]
    திருமண ஒப்பந்தத்தை கடுமையான ஒப்பந்தம் என்கிறது குர்ஆன் .கடுமையான ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம் போடும் அந்த கடுமையின் அர்த்தம் தெரிந்தவர்களாக் இருப்பார்கள் அல்லவா?
    [தொடரும்]

    • S.Ibrahim நவம்பர் 15, 2011 இல் 8:36 பிப #

      செங்கொடி, மேலும் தன கட்டுரையில் குழந்தைகளைப் பார்த்து இவள் பெரியவளாக வந்தபின் நான் திருமணம் செய்வேன் என்று கூறியதாகவும் அதையும் விமர்சித்துள்ளார்.அவர் குறிப்பிட்ட ஹதிதின் தரம் என்னவென்று தெரியவில்லை.இருப்பினும் இது போன்று கூறுவது இப்போது சில இடங்களில் நடைமுறை உள்ளது. எனக்கு தெரிந்த பெரியவர் மறைந்து விட்டார்.அவருடைய ஆறு தாய் மாமனார்களில் இளையவர் ,இவரைவிட 15 வயதுகள் குறைவு,இந்த இளைய மாமாவின் இளைய மகள் பெரியவரின் மகளை விட இருபது வயதுக்கு மேல் குறைவு.நான் சிறுவனாக இருந்த சமயம்,ஆறு ஏழு வயது இருக்கும் சிறுமியாக இருந்த அவளை அறுபது பெரியவர் ஆகிய அவர் பார்க்கும்வேளையில்,உன்னை நான் தான் கட்டிக்கப் போகிறேன் என்று தனது தாய் மாமனார் மகளை கிண்டல் செய்வதை பார்த்த்திருக்கிறேன்.இப்படி தாய் மாமா மகளை வயது வித்தியாசம் பார்க்காமல் கேலி செய்வது இன்னும் பல கிராமங்களில் உள்ள விசயமே .தாங்கள் விமர்சனத்திற்கு இப்படியெல்லாம் பூதக் கண்ணாடியை தூக்கிக் கொண்டு அலைவது காழ்ப்புணர்வு மிகைத்திருப்பதையே காட்டுகிறது.அப்புறம் ஆயிசாவின் மடியில் முஸ்லிம்கள் ஏன் மரணிக்கக் கூடாது என்று உமது விகாரபுத்தியை காட்டி யுள்ளீர்கள்.நீங்கள் நல்லவர் என்றால் ஏன் முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் போல் ஒட்டகத்தில் பயணம் செய்வதில்லை?ஏன் அவர்காலத்து உணவை உண்ண வில்லை என்று கேட்டால் கூட உங்கள் கேள்வியினில் நியாயம் இருக்கிறது என்று நம்பலாம். நான் முன்பே கூறியிருக்கிறேன் .முதலில் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பொழுது பீஜே போன்ற நல்ல மார்க்க அறிஞர்களை சந்தித்து இஸ்லாத்தைப் பற்றிய உங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றிருக்க வேண்டும்.உலக விசயங்களில் இஸ்லாமிய அணுகுமுறை என்ன?மார்க்க விசயங்களில் இஸ்லாமிய அணுகுமுறை என்ன?என்பதை கேட்டு தெளிவு பெற்றிருந்தால் இது போன்று உளறி கொட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

  4. nallurmuzhakkam நவம்பர் 5, 2011 இல் 11:49 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    அரபு மொழியில் புலமையில்லாவிட்டால் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீங்கள் மறுப்பதாகாதா?

    புஹாரியும், முஸ்லீமும் ஆதாரபூர்வமானவை என்றுதான் நீங்களே பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் தேவைப்படும் போது அதிலும் நம்பமுடியாத ஹதீஸ்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். உர்வா அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கின்றன. புஹாரி தன்னுடைய தொகுப்பை போதுமான கவனத்துடன் தொகுக்கவில்லை என்பது உங்களின் கருத்தா? என்றால், முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்.

    ஆய்ஷாவின் சகோதரி மகனான உர்வா அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த ஹதீஸில் திருமணத்தில் அபூபக்கருக்கு தயக்கம் இருந்ததை மட்டுமே கூறுகிறது. ஆனால் ஆறு வயதில் திருமணம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்றால் யாரிடம் சம்மதம் வாங்கப்பட்டது? ஆறு வயது சிறுமிக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவனுக்கு ஆறுவயது சிறுமியிடம் உள்ள தொடர்புக்கு பெயரென்ன? விளக்குங்களேன்.

    இஸ்லாத்தை விமர்சித்தால் கம்யூனிச அவதூறுகளை தூக்கிக் கொண்டுவருவது தானே உங்களைப் போன்றோரின் ஒரே எதிர்வினை. சொந்த சகோதரி மகன் கூறியதை திருமணத்தின் போது பிறந்திருக்கவில்லை என்று கூறி மறுக்கும் நீங்கள், 1965 ல் இங்கிலாந்தில் பிறந்த சைமன் மண்டேபியாரே, தான் பிறப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் நடந்ததாக ஒன்றை ஹாலிவுட் பாணியில் விவரிப்பதை எந்த அடிப்படையில் உண்மை என்கிறீர்கள்?

    நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் என்ன என்பதை சொடுக்கிப் பார்த்தீர்களா? கம்யூனிசத்தை எதிர்த்து எழுதியிருப்பதை பார்த்ததும் அப்படியே புழகமடைந்து விட்டீர்களோ. விரைவில் இது குறித்து செங்கொடியில் கட்டுரை வரும்.

    • S.Ibrahim நவம்பர் 8, 2011 இல் 5:46 பிப #

      அரபு மொழியில் புலமையில்லாவிட்டால் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீங்கள் மறுப்பதாகாதா?
      புஹாரியும், முஸ்லீமும் ஆதாரபூர்வமானவை என்றுதான் நீங்களே பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் தேவைப்படும் போது அதிலும் நம்பமுடியாத ஹதீஸ்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். உர்வா அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கின்றன. புஹாரி தன்னுடைய தொகுப்பை போதுமான கவனத்துடன் தொகுக்கவில்லை என்பது உங்களின் கருத்தா? என்றால், முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்.
      ஆய்ஷாவின் சகோதரி மகனான உர்வா அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த ஹதீஸில் திருமணத்தில் அபூபக்கருக்கு தயக்கம் இருந்ததை மட்டுமே கூறுகிறது. ஆனால் ஆறு வயதில் திருமணம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்றால் யாரிடம் சம்மதம் வாங்கப்பட்டது? ஆறு வயது சிறுமிக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவனுக்கு ஆறுவயது சிறுமியிடம் உள்ள தொடர்புக்கு பெயரென்ன? விளக்குங்களேன்.
      இஸ்லாத்தை விமர்சித்தால் கம்யூனிச அவதூறுகளை தூக்கிக் கொண்டுவருவது தானே உங்களைப் போன்றோரின் ஒரே எதிர்வினை. சொந்த சகோதரி மகன் கூறியதை திருமணத்தின் போது பிறந்திருக்கவில்லை என்று கூறி மறுக்கும் நீங்கள், 1965 ல் இங்கிலாந்தில் பிறந்த சைமன் மண்டேபியாரே, தான் பிறப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் நடந்ததாக ஒன்றை ஹாலிவுட் பாணியில் விவரிப்பதை எந்த அடிப்படையில் உண்மை என்கிறீர்கள்?
      நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் என்ன என்பதை சொடுக்கிப் பார்த்தீர்களா? கம்யூனிசத்தை எதிர்த்து எழுதியிருப்பதை பார்த்ததும் அப்படியே புழகமடைந்து விட்டீர்களோ. விரைவில் இது குறித்து செங்கொடியில் கட்டுரை வரும்.
      அரபி மொழியில் புலமை இல்லாதவர்கள் மட்டுமல்ல கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வேண்டுமானாலும் இஸ்லாத்தை விமர்சிக்கலாம்.ஆனால் அவைகள் விமர்சனமா அவதூறுகளா?என்பதை அந்த மூல நூல்களின் மொழியறிவு இல்லாமல் ஆய்வு செய்து எழுதுவது அரைவேக்காட்டுத்தனமாகவே இருக்கும். அடைப்புக் குறிக்குள் விளக்கம் தருவது அந்த மொழியை அறிந்தவர்கள் மட்டுமே சரியான விளக்கம் தர முடியும்.ஹதீத் அறிவிப்ப்பாளர்கள் பற்றியும் தரமறிந்து ஹதீத்கள் நிலை அறிந்து ஆய்வுக்கட்டுரைகள் காண முடியும்.
      புகாரியும் முஸ்லிமும் ஆதாரப் பூர்வமானவைகள் என்று யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை.
      ஹதீத் கலையின் அடிப்படையில் ஒரு ஹதீத் ஸஹிஹ் ஆதாரப் பூர்வமானது என்று முடிவு செய்ய பல விதிகள் உள்ளன ,அந்த விதி முறைகளுக்கு உட்பட்டு ஸஹிஹ் என்று முடிவு செய்யப்பட ஹதித்கள் ,99 சதவீதம் உள்ள நூலாக புகாரியும் ,அதற்கடுத்தபடியாக முஸ்லிம் நூலும் உள்ளதால் அந்த நூலகள் முக்கியத்துவம் பெறுகின்றன.புகாரியிலும் முஸ்லிமிலும் ஹதீத்கள் நம்பத் தகுந்தவைகள் என்பது ஹதித்கலை விதிமுறைப் படிதான் செய்யப்படுகின்றன.நூல்கள் அடிபடையில் முடிவு செய்யப்படவில்லை.
      ///முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்//
      இவை உங்கள் அறியாமை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்தால் கூட இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள்
      1965 இலும் ஒன்பதாம் நூற்றாண்டிலும் தகவல் திரட்டும் வாய்ப்புகள் பற்றி ஒப்பிட்டுத்தான் இப்படி எழுதி உள்ளீர்களா?

    • Rizwan N. Mohamed ஜூலை 9, 2012 இல் 6:11 பிப #

      நல்லூர் முழக்க அன்பரே அன்னை ஆயிஷா (றழி) அவர்களை எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆறு (06) வயதில் திருமணம் செய்ததையும், அவர்களோடு அவர்களது ஒன்பது (09) வயதில் இல்லற வாழ்வில் ஈடுபட்டதையும் அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்களோ, அன்னையர்களோ (அவர்களது மனைவியர்), ஸஹாபாக்களோ, ஹதீஸை அறிவிக்கும் இமாம்களோ பொய்யே கூறவில்லை என்பது உண்மை. சரி எதிர்காலத்தில் வரும் மடையர்கள் இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு பேசுவார்களே இதை மறைக்கலாமே என்றோ அல்லது அன்னையவர்களது வயதைக் கூட்டி சொல்லியிருக்கலாமே என்று நினைத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்வில் ஒருநாள் கூட பொய் சொல்லவும் இல்லை தன் வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறைக்கவும் இல்லை. ஏன் என்றால் முஸ்லிம் பொய் சொல்லமாட்டான் என்று கூறியவர்கள் பொய் சொல்லுவார்களா. அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. முடிந்தால் கொணடு வாருங்கள். அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் ஆண் ஸஹாபாககள் அளவிற்கு அதிகமான (ஆயிரத்திற்கும் மேலான) ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அப்படியென்றால் அவர்கள் பெற்ற அறிவு எவ்வளவு பெரிது. அன்னையவர்களாவது தனது 09 வயதில் பருவமடைந்ததாக கூறுகிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆறு வயதில் பருவமடைந்ததைப் பற்றி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்தது. பருவம் அடைவதற்கு வயது முக்கியமல்ல, வாழ்வதற்கு உடலுடன் உள்ளமும் வளர்ச்சியடைய வேண்டும். அதை அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் தெளிவாகவே ஹதீஸ் மூலம் தெளிவு படுத்திவிட்டார்கள். ஆகவே, உங்களக்கு அறிவு இருந்தால் அன்னையவர்கள் அறிவித்த அனைத்து ஹதீஸ்களையும் சேகரித்து படித்துப்பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு விளங்கும்! அன்னையவர்களின் அறிவைப் பற்றி.

  5. nallurmuzhakkam நவம்பர் 9, 2011 இல் 4:06 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    பேசப்படவேண்டிய இலக்கை விட்டுவிட்டு அலங்காரங்களை பேசுவது தான் எப்போதுமே உங்கள் உத்தியா?

    “தாங்கள் நியாயவாதியாக இருந்தால் தாங்கள் முதலில் நன்கு அரபியை தெரிந்து அதன் மூல நூல்களை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.ஹதீத் கலை பயின்று இருக்க வேண்டும்”
    ”அரபி மொழியில் புலமை இல்லாதவர்கள் மட்டுமல்ல கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வேண்டுமானாலும் இஸ்லாத்தை விமர்சிக்கலாம்.ஆனால் அவைகள் விமர்சனமா அவதூறுகளா?என்பதை அந்த மூல நூல்களின் மொழியறிவு இல்லாமல் ஆய்வு செய்து எழுதுவது அரைவேக்காட்டுத்தனமாகவே இருக்கும்”

    இந்த மேற்கோள்களில் நீங்கள் கூறவருவது என்ன? மொழிபெயர்ப்புகள் எல்லாம் மேம்போக்காக தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான். முழுமையாக தெரிய வேண்டுமென்றால் அரபு மொழியில் தான் படிக்க வேண்டும் என்கிறீர்களா? இது தான் மடக்கி மடக்கி நீங்கள் கூறும் கருத்து என்றால், இஸ்லாம் அனைத்து மொழியினருக்கும் என்பதை மாற்றி அரபு மொழியினருக்கு மட்டும் என்று மாற்றுங்கள். அல்லது அரபு மொழியின் முழுமைப் பொருளுக்கு ஈடாக எல்லா மொழியிலும் மொழிமாற்றம் செய்யுங்கள். இவைகளைச் செய்யாமல் அனைவருக்கும் பொது என்று கூற முடியாது. அனைவருக்கும் பொது என்பது, விமர்சனம் செய்தால் மூல மொழியைப் படித்துவா என்பது. என்ன பித்தலாட்டம் இது.

    இது போல் தான் ஹதீஸ்களும். இஸ்லாத்திற்கு குரானைப்போல் ஹதீஸ்களும் முக்கியமானதா? இல்லையா? ஆம் என்றால், அதை ஏன் நம்பக்கூடியதையும், நம்பக்கூடாததையும் கலந்து வைத்திருக்கிறீர்கள். முதலில் இவைதான் நம்பக்கூடியவை என பிரியுங்கள். பின் அதிலிருந்தே நாங்கள் எடுத்துக் காட்டுகிறோம். அப்படி முன்னர் பிரிக்கப்பட்டவைகள் தான் ஆறு நூல்களும் பின்பும் அதிலிருந்து புஹாரியும் முஸ்லீமும். இன்றோ அதிலும் கலப்படம் இருக்கிறது என்று உங்களைப் போன்றோர். 1200 ஆண்டுகளாக இது சரி இது தவறுஎன்று தெளிவாக பிரிக்க முடியாமல் என்ன பணிதான் செய்திருக்கிறார்கள் உங்கள் மதவாதிகள்? இதைக் கேட்டால் நாங்கள் அரை வேக்காடுகளா?

    அட கரிந்து தீய்ந்ததுகளே, எல்லோருக்கும் பொது என்று கூப்பாடு போடுவது விமர்சித்தால் அரபு தெரியுமா என்று உதார்விடுவது. குரானும் ஹதீஸும் முக்கியம் என்பது ஆனால் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினால் ஆதாரமில்லாத ஹதீஸ் என்று ஜல்லியடிப்பது. அன்றிலிருந்து இன்றுவரை இது தானே உங்களின் வழிமுறை. முதலில் உங்களை சரிப்படுத்துக் கொண்டு வாருங்கள். அதுவரை எங்களின் விமர்சனம் காத்திருக்கும்.

    சரி இப்போது முதன்மையானதிற்கு வருவோம். முகம்மது ஆய்ஷாவை திருமணம் செய்தது சரியா தவறா? திருமணத்திற்கு மணப்பெண்ணின் அனுமதி வேண்டுமென்றால் ஆறு வயது ஆய்ஷாவுக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? தவறுஎன்றால் உரத்துக் கூறுங்கள். சரி என்றால் எப்படிசரி விளக்குங்கள். ஆட்டின் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு அது சிலுப்பியவுடன் வெட்டுவதற்கு ஆடு சம்மதம் கொடுத்து விட்டது என்பதைப்போல் ஆய்ஷாவிடம் சம்மதம் வாங்கினாரா முகம்மது. பதில் கூறுங்கள்.

    ஒன்பதாம் நூற்றாண்டைவிட இருபதாம் நூற்றாண்டில் தகவல் பெறும் முறை மேம்பட்டது தான். அதனால் இருபதாம் நூற்றாண்டில் இருப்பவர்கள் அனைவரும் கூறுவது உண்மையாகிவிடுமா?

    • S.Ibrahim நவம்பர் 10, 2011 இல் 5:10 முப #

      கம்யுனிசத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் கயுநிசத்தை செங்கொடி அளவுக்கு அறிந்தவர்களா?பலர் மேம்போக்காகவே பின்பற்றுகின்றனர்.தங்களது வழிகாட்டிகள் தவறான தகவல்களை தரமாட்டார்கள்,மேலும் அவர்களுக்கு அனைத்து புத்தகங்களையும் படிக்கும் ஆர்வமோ நேரமோ இருக்காது.ஆதலால் தலைவர்கள் தரும் செய்திகளை நம்பியே பின்பற்றும் மக்கள் அனைத்து கொள்கைகளிலும் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.இதை செங்கொடி மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
      ஒரு மதத்தை கடுமையான முறையில் விமர்சிக்க ஒருவர் முனைந்தால் அடைப்புக் குறிக்குள் வருபவற்றை தன தோன்றித்தனமாக விமர்சிக்க வரும் வேளையில் மூலநூல்கள் என்ன சொல்லுகின்றன என்பதை அறிந்துதான் விமர்சிக்க முடியும்.இல்லைஎனில் தங்களை விமர்சகாரக பார்க்க முடியாது.பகடு போன்ற இஸ்லாமிய எதிரிகளின் பகடை காய்களாகவே இருக்க முடியும்.ஹதீத் கலை பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் தமிழில் உள்ளன.ஹதீத்களின் தரம் ஒவ்வொரு ஹதீதிலும் அதனை பதிவு செய்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.அத்தனை நூல்களும் மொழியாக்கம் செயப்பட்டுள்ளனவா என்பது தெரியாது.ஆனால் ஒரு அறிஞர் ஒரு ஹதீதை விமர்சனம் செய்யும்பொழுது அவரின் விமர்சன வரிகளில் ஒரு சொல் கூட தவறாக இருந்தால் பல அறிஞர்களிடமிருந்து மாற்று கருத்துகள் ,முந்தயவரின் விளக்கம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை முழுமையாக அரபிமொழி அறிவு இல்லாமலே அறிந்து கொள்ள முடியும்.இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஏற்காமல் விமர்சனம் செய்ய விரும்பினால் மூல நூல்கள் அறிய அரபி மொழி அவசியம்.இஸ்லாத்தினை விமர்சிக்க முனைந்த பலமேல்நாட்டு அறிஞர்கள் அரபி மொழி கற்றே முன்வந்தனர்..
      கரிந்து தீய்ந்தது கம்யுனிசம் என்பதை சீன.ரஷ்யாமக்கள் உட்பட உலக மக்கள் அறிவார்கள் .அலங்காரங்களை பேசுவது உங்கள் உத்தியா என்று கேட்டுவிட்டு அதே அலங்கார வார்த்தைகளை பயன்படுத்துவது சரியா?
      ///குரானும் ஹதீஸும் முக்கியம் என்பது ஆனால் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினால் ஆதாரமில்லாத ஹதீஸ் என்று ஜல்லியடிப்பது. அன்றிலிருந்து இன்றுவரை இது தானே உங்களின் வழிமுறை. முதலில் உங்களை சரிப்படுத்துக் கொண்டு வாருங்கள். அதுவரை எங்களின் விமர்சனம் காத்திருக்கும்.///
      முதலில் உங்களது கம்யுனிசத்தை உங்களது வாழ்க்கை அளவிலாவது நடைமுறைபடுத்திவிட்டு கம்யுனிசம் பற்றி இணைய தளங்களில் மலிந்து கிடக்கும் விமர்சங்களுக்கு பதில் சொல்லிவிட்டு .அதன் பிறகு நீங்கள் போலி கம்யுனிஸ்ட் கள் என்று கூறுபவர்களை உங்களைப் போன்ற போலி கம்யுநிச்ட்களாக மாற்றிவிட்டு ,பிறகு நீங்கள் எல்லோரும் உண்மை கம்யுனிஸ்ட் களாக மாறிய பிறகு இஸ்லாத்தை பற்றி விமர்சிக்க வாருங்கள் .அப்போதுதான் உங்களை உண்மையான சமூக நலவாதியாக கொள்ள முடியும்.இல்லையெனில் காசுக்காகவோ அல்லது புகழுக்காகவோ ஒரு சமயத்தை விமசிக்கும் நய வஞ்சகராகவே கொள்ள முடியும்.
      ஆயிசாவின் திருமணத்திற்கு சம்மதம் பெறப்பட்டாதா என்று மீண்டும் செங்கொடி எனும் மெகா அறிஞர் கேட்டுள்ளார்.முதலில் தொழுகை அல்லாத நிலையில் மது அருந்த அனுமதிக்கப்பட்டது.அதற்கு பின்னரே முழு மது விலக்கு வந்தது என்பதை விளக்கியுள்ளோம்.அதன் பின்னர் மது குடித்தவர்களே குற்றவாளிகள்.மது தடை சட்டம் முழுமையாக வருமுன் குடித்தவர்கள் குற்றவாளியாக மாட்டார்கள்.இஸ்லாத்தில் அனைத்து சட்டங்களும் ஒரே நாளில் வரவில்லை .அறியாமையில் இருந்த மக்களை படிப்படியாக நேரிபடுத்தினார்கள் .மனவிருப்பம் கேட்பது ஆயிஷா[ரலி]அவர்களின் திருமணத்திற்கு பிறகு வந்ததே என்பதற்கு ஆதாரங்கள் உள்ளளன .ஆதலின் தங்களின் அறியாமையை மீண்டும் வெளிப்படுத்தவேண்டாம்.
      //ஒன்பதாம் நூற்றாண்டைவிட இருபதாம் நூற்றாண்டில் தகவல் பெறும் முறை மேம்பட்டது தான். அதனால் இருபதாம் நூற்றாண்டில் இருப்பவர்கள் அனைவரும் கூறுவது உண்மையாகிவிடுமா?////ஆதலின் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கூறும் செங்கொடி கூற்றும் உண்மையாகாது.

  6. nallurmuzhakkam நவம்பர் 10, 2011 இல் 4:21 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    உங்கள் பதிவில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில் இருக்கிறதா? ஆய்ஷா சம்மதம் தவிர. முதலில் பதில் கூறுங்கள் நான் பின்னர் வருகிறேன்.

    • S.Ibrahim நவம்பர் 11, 2011 இல் 10:15 முப #

      நேரடி விவாதத்தில்; இப்படிஎல்லாம் தப்பிக்க முடியாது என்பதால் விவாதத்திற்கு வரமுடியாது என்று கூறி வருகிறீர்கள் என்று நம்புகிறேன்

  7. தஜ்ஜால் நவம்பர் 11, 2011 இல் 4:00 பிப #

    இப்ராஹிம் அவர்களுக்கு,
    “முகம்மதின் குழந்தைத் திருமணம்
    “ கட்டுரை மூன்று செய்திகளை அடிப்படையாகக் கொண்டது.
    1. ஆறுவயது மழலையை மனைவியாகக் காணும் ஐம்பதுவயது கிழவர்
    2. ஒன்பதுவயது சிறுமியை புணர்ந்த ஐம்பத்துநான்கு வயது கிழவர்
    3. புனிதராக போற்றப்படும் அக்கிழவரின் இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?
    மற்றவைகள் விவாதங்கள் இதன் கிளைகளே. உங்களது மறுப்பு இதன் அருகில் கூட நெருங்கவில்லை. கம்யூனிசம்/கம்யூனிஸ்ட்களின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி முஹம்மதின் அருவருக்கத்தக்க செயல்களை சரிகாண முயல்வது இஸ்லாமின் வீழ்ச்சியையே பறைசாற்றுகிறது.
    முஹம்மதின் காலத்தில் உர்வா வாழ்ந்திருக்கவில்லை. எனவே ஹதீஸ் ஏற்புடையதல்ல என்ற உங்களது கொள்கை முடிவை நீட்டித்தால் ஒட்டு மொத்த ஹதீஸ்களையும் மலக்குழியில்தான் எறிய நேரிடும். புகாரி 5081 ஹதீஸைக் காணும் பொழுது மட்டும் உர்வா முஹம்மதின் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்று கூறுவது எந்த வகை மேதாவித்தனம் ?
    ஆயிஷாஒன்பதாவது வயதில் ஷவ்வால் மாதத்தில் பருவமடைந்த பின்னர்தான் உடலுறவு கொள்ளப்பட்டாராம். பருவமடைந்த பெண்ணுடன் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டுமென இஸ்லாம் கூறுகிறதா? குர்ஆன் 65:4 பொருள் என்னவோ?
    குழந்தைத்திருமணம் முஹம்மதின் காலத்திற்குப் பிறகும் நடைமுறையில் இருந்தது, இன்றும் தொடர்கிறது, அதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறேன். அதை கவனிக்காமல் /// இது ஒரு மடத்தனமான வாதம் .நபி [ஸல்]காலத்திலும் முந்தைய பழக்க வழக்கப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் மது பானம் அருந்தியவர்களாக இருந்தனர் .முதலில் தொழுகையில் மட்டுமே மது பானம் தடை செய்யப் பட்டது,அதன் பின்னர் முழுமையாக தடை செய்யப் பட்டது.உங்களை போல் எழுதுபவர் முந்தைய செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டு குர்ஆனில் தொழுகை தவிர மற்ற நேரங்களில் மது அருந்த அனுமதி உள்ளதே ,அதை ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்ய வில்லை,இதை வைத்து ஒரு பொது விவாதம் நடத்தக் கூடாதா?என்றெல்லாம் கேப்பது போல் உள்ளது உங்களது வாதம். //// என்று கூறும் உங்களது அறியாமையைக் காணும் பொழுது அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. இவ்வகைத் திருமணத்திற்கு இஸ்லாமில் அனுமதியில்லை என்பது உங்களது குருட்டு நம்பிக்கைத் தவிர வேறில்லை.
    அரபுமொழிப்புலமையுடன் மட்டுமே இஸ்லாமைப் புரிந்து கொள்ள முடியுமென்று உங்களது அல்லாஹ்வோ, முஹம்மதோ கூறியுள்ளனரா? இப்படி கூற உங்களுக்கு அனுமதியளித்தது யார்? அரபுமொழிப் புலமையில்லாத முஸ்லீம்கள் அரைவேக்காடுகளா? என்னைய்யா கொடுமை இது? நான், இன்றுவரை கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமென்று நினைத்திருந்தேன், S.இப்ராஹிம் அவர்கள் கூறிய பிறகுதான் மொழிசார்ந்த விவகாரம் என்பது புரிகிறது. குர்ஆனும், ஹதீஸ்களும் அனைத்து மொழியினருக்கும் பொதுவானதல்ல என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
    உங்களிலுள்ள அறிஞர் குழுக்கள்தான் இஸ்லாமிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்கின்றன. மொழிபெயர்ப்பிலுள்ள குறையை குறிப்பிட்டு கூறாமல் பொத்தம்பொதுவாக கூறுவது அழகல்ல. அரபுமூலத்தைப் பரிந்துரைப்பதற்கான காரணம் என்ன? அறுபதுவயது கிழவி என்பதை ஆறுவயது குழந்தையென்று மொழிபெயர்த்து விட்டனரா? மடக்கிமடக்கி என்ன சொல்ல வருகிறீர்கள்? அரபுமொழி புலவரான தாங்களாவது அதன் சரியான பொருளைக் கூறலாமே?
    சொற்களையும் வார்த்தைகளையும் சிதைத்து பிழைப்பு நடத்தும் அவசியம் எங்களுக்கில்லை. அல்லாஹ்விற்கு உருவமிருப்பதாக P.J விற்கு பொருள் விளங்கும் ஹதீஸ்களில், அப்துல்லாஹ் ஜமாலிக்கு உருவமற்றவன் என்று விளங்குகிறது. பூமியின் வடிவத்தை நெருப்புக்கோழி முட்டையாக Dr. ஜாகீர் நாயக் பொருள் கூறும் குர்ஆன் வார்த்தைகளை, அவ்வாறு விளங்கவில்லை என்கிறார், த.த.ஜ நிறுவுனர் P.J. மிர்ஸா குலாமையும், ரஷாது கலீஃபாவையும் அல்லாஹ்வின் புதிய தூதர்களாகக் கூறச் செய்ததும் இதே அரபுமொழிப்புலமைதானே? இதுவல்லாமல் அடைப்புக்குறிகள் வேறு. இஸ்லாமும் அடைப்புக்குறிகளுக்குள் தானே இருக்கிறது. இதுதான் அரபுமூலத்திற்குள் நடக்கும் வார்த்தை விளையாட்டு. நேர்எதிராக மொழிபெயர்ப்பு செய்வதற்கு இஸ்லாமியர்களை மிஞ்ச உலகில் எவருமில்லை.
    ஷியாக்களின் ஹதீஸ்களை நாடியிப்பதாக வருத்தப்பட்டிருக்கிறீர்கள்! அவர்களும், அதே குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் மட்டைகள்தானே! தேவைப்பட்டால், ஷியாக்களை மட்டுமல்ல Submitters, காதியானிகளையும் நாடுவோம். உண்மையை வெளிக்கொணர எந்த எல்லைக்கும் செல்வோம். பங்காளிகளைக் கேட்டால்தானே முழுஉண்மைகளையும் அறிய முடியும்.
    குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டுவது, அதை நீங்கள் அதை புனிதமானது அறிவியல், புவியியல் என்றெல்லாம் போற்றுவதால் மட்டுமே. எங்களைப் பொருத்தவரையில் அது நாவிதரின் குப்பையே…!
    நாவிதர் என்றவுடன் வேறெரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது முஹம்மது சிரைக்கப்பட்ட தனது முடியை மக்களிடையே பகிர்ந்தளித்தது எதற்காக?

    தஜ்ஜால்

    • s.Ibrahim நவம்பர் 12, 2011 இல் 8:40 பிப #

      ///முஹம்மதின் காலத்தில் உர்வா வாழ்ந்திருக்கவில்லை. எனவே ஹதீஸ் ஏற்புடையதல்ல என்ற உங்களது கொள்கை முடிவை நீட்டித்தால் ஒட்டு மொத்த ஹதீஸ்களையும் மலக்குழியில்தான் எறிய நேரிடும். புகாரி 5081 ஹதீஸைக் காணும் பொழுது மட்டும் உர்வா முஹம்மதின் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்று கூறுவது எந்த வகை மேதாவித்தனம் ?///
      அரைகுறையாக படித்துள்ள [கம்யுனிச கிழிசலை ]தச்சஆளே! இதற்குத்தான் மீண்டும் மீண்டும் ஹதீத் கலை பற்றிய புத்தங்களை படித்து வரச்சொன்னோம் .அவ்வாறு படித்து இருந்தால் இவ்வாறு உளற வேண்டியது இருக்காது
      ///குழந்தைத்திருமணம் முஹம்மதின் காலத்திற்குப் பிறகும் நடைமுறையில் இருந்தது, இன்றும் தொடர்கிறது, அதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறேன்.///
      இப்போதும் சில முஸ்லிம்கள் குடிக்கிறார்கள் என்பதால் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று அர்த்தமா?
      மொழி விசயத்தில் மிகைப்படுத்தி புலம்ப வேண்டாம் .இஸ்லாத்தை பின்பற்றுவது வேறு .அதை மட்டந்தட்டி விமர்சித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் உங்களைப் போன்றோர் அரை வேக்காடுதனமாக விமர்சித்து வருகிறீர்கள் ஹதீதின் விதிமுறைகளை இஸ்லாம் அதற்கு ஏற்படுத்தி தந்த அடிப்படையில் தான் அறிந்து கொள்ளமுடியுமே தவிர செங்கொடியும் தச்ச ஆளும் ஏற்படுத்த முடியாது.
      ///அல்லாஹ்விற்கு உருவமிருப்பதாக P.J விற்கு பொருள் விளங்கும் ஹதீஸ்களில், அப்துல்லாஹ் ஜமாலிக்கு உருவமற்றவன் என்று விளங்குகிறது. பூமியின் வடிவத்தை நெருப்புக்கோழி முட்டையாக Dr. ஜாகீர் நாயக் பொருள் கூறும் குர்ஆன் வார்த்தைகளை, அவ்வாறு விளங்கவில்லை என்கிறார், த.த.ஜ நிறுவுனர் P.J. மிர்ஸா குலாமையும், ரஷாது கலீஃபாவையும் அல்லாஹ்வின் புதிய தூதர்களாகக் கூறச் செய்ததும் இதே அரபுமொழிப்புலமைதானே///
      இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்று குதிரைக்கு கண் கட்டிவிட்டது போல் உங்களது பார்வை இருப்பதால் இப்படியெல்லாம் எழுதி உள்ளீர்கள் .கொஞ்சம் ஒருதலை பட்சமாக இல்லாமல் நடுநிலையோடு இஸ்லாத்தினை அறிய முனைந்தால் இவர்களின் கருத்துக்களில் எது உண்மை என்பது புரியும்?
      ஆமாம் கம்யுனிசத்தில் நாவிதர் உண்டா?

  8. ஜெகதீஸ்வரன் நவம்பர் 11, 2011 இல் 8:11 பிப #

    ஓகோ!,..

  9. TSri நவம்பர் 13, 2011 இல் 10:39 பிப #

    நன்று. போதிய விளக்கம் பெற்றேன்.

  10. S.Ibrahim நவம்பர் 14, 2011 இல் 6:06 முப #

    கம்யுனிச கிழிசலை] தச்சஆளே ,///நாவிதர் என்றவுடன் வேறெரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது முஹம்மது சிரைக்கப்பட்ட தனது முடியை மக்களிடையே பகிர்ந்தளித்தது எதற்காக?/
    இந்த செய்தியை எங்கிருந்து பெற்றீர்? மேலும் உமது மயிர் கழிவுகளை நாவிதர் குப்பை என்று சொல்லுவது சரியா?பொதுவுடமையில் நாவிதர் என்று தனி வர்க்கம் உண்டா?

  11. nallurmuzhakkam நவம்பர் 16, 2011 இல் 11:10 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    முதலில் நீங்கள் ஒரு அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி இங்கு விமர்சிக்கவில்லை. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் அத்தனை மனிதர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப் படுகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், விளக்கத்திற்கு மேல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். என்றோ வாழ்ந்த ஒருவர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டார் என்றால் அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் யாருடைய வாழ்க்கை உலக மக்களுக்கெல்லாம் பாடமோ, அவர் குழந்தைத் திருமணம் செய்தது சரியா?

    குழந்தைத் திருமணம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. அப்படி நீங்கள் கருதினால், அதற்கான வசனத்தையோ, ஹதீஸையோ கூறுங்கள். கூடவே உமரும் குழந்தைத் திருமணம் செய்திருக்கிறாரே எப்படி? என்பதையும் கூறிவிடுங்கள்.

  12. தஜ்ஜால் நவம்பர் 21, 2011 இல் 3:57 பிப #

    இப்ராஹிம் அவர்களுக்கு,
    ///இப்போதும் சில முஸ்லிம்கள் குடிக்கிறார்கள் என்பதால் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று அர்த்தமா?/// என்று அவ்வளவு எளிதி கடந்து செல்ல முடியாது. திருமணத்திற்கு வயதெல்லைகளை வகுத்தது மருத்துவ அறிவியலும், மனிதாபிமானமும்தான் மதங்களல்ல. திருமணத்திற்கு முஹம்மது கூறியுள்ள வயதெல்லைகளை தெளிவுபடுத்த வேண்டும். பருவமடைந்த பெண்ணுடன் மட்டுமே உடலுறவு கொள்ளவேண்டுமென இஸ்லாம் கூறவில்லை. அதை நமக்கு குர் ஆனின் 65:04 தெளிவுபடுத்துகிறது.
    ///கொஞ்சம் ஒருதலை பட்சமாக இல்லாமல் நடுநிலையோடு இஸ்லாத்தினை அறிய முனைந்தால் இவர்களின் கருத்துக்களில் எது உண்மை என்பது புரியும்?/// முன்பு மொழியைப்பற்றி கூறினீர்கள், இப்பொழுது நடுநிலை என்கிறீர்கள். இங்கு அது சரி என்பதைவிட, ஏன் இப்படி என்ற கேள்வியே முதன்மையானது. எந்த நிலையிலிருந்தாலும் அதன் பொருளைத்திரிக்க இயலதிருக்க வேண்டும். நான் சுட்டிக்காட்டியுள்ள செய்திகள் முற்றிலும் நேரெதிரான விளக்கத்தைக் கூறுகின்றன. உங்களாலும் உறுதியாகக் கூறமுடியாமல் நடுநிலைக்கு ஓடிவிட்டீர்கள். இதை என்னவென்று செல்வது? உங்களது மொழியில் நடுநிலை என்பது இஸ்லாம் மட்டுமே சரி என்பதுதான். இந்த ’டுபாக்கூர்’ நடுநிலையை எங்களிடம் எதிர்பார்க்க வேண்டாம்.
    என்னதான் அறிவிப்பாளர்களின் வரிசை முழுநிறைவைக் கொடுத்தாலும்; ஹதீஸ், குர்ஆனுக்கு முரண்படக்கூடாது இல்லையா? இதன் நேரடிப்பொருள் குர்ஆன் மட்டுமே உச்சகட்ட அளவுகோல்; தெளிவாக, நன்கு விவரிக்கப்பட்டு, முழுமையக்கப்பட்டதாக கூறப்படும் நூல் குர்ஆன் இருக்கும்பொழுது, சூரியனுக்கு ’’டார்ச்’’ அடிக்கும் பணி எதற்கு? தெளிவாக, நன்கு விவரிக்கப்பட்டு, முழுமையக்கப்பட்டதாக கூறுவது ’பீலா’வா?
    ///இதற்குத்தான் மீண்டும் மீண்டும் ஹதீத் கலை பற்றிய புத்தங்களை படித்து வரச்சொன்னோம் .அவ்வாறு படித்து இருந்தால் இவ்வாறு உளற வேண்டியது இருக்காது/// புஹாரி பொய்யர்களென்று கருதிய 600க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம் ஹதீஸில் இடம்பிடிக்கின்றனர். புஹாரி, புனிதர்களென்று போற்றிய 400க்கும் மேற்பட்டவர்களை முஸ்லீம் பொய்ய்யரென ஒதுக்கிவிட்டார். குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்வைத்துக் கொண்டாடப்படும் புனிதநூல்களின் நிலை இது. இப்பொழுது ஹதீஸ்களின் நம்பகத்தன்மையின் அளவுகோல் என்ன? விடை : அவரவர்களுக்குத் தோன்றியதுதான்.
    அவரவர் சார்ந்திருக்கும் தலைவர் அல்லது கட்சி அடிப்படையாக் கொண்டுதான் ஹதீதுகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பகத்தன்மையை ஆராய்ந்தால் ஒருவரையொருவர் பொய்யரென சராமாரியாகக் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். ஹதீஸ்களை கூறுவதில் (இவர்களை ‘STOREY TELLERS-கதை சொல்லிகள்’ என்றுதான் கூறவேண்டும்) இவர்களுக்கிடையே உள்ள தொழில்முறைப் போட்டிகளுக்கும் பஞ்சமில்லை. குழு உணர்வுதாக்கம் தலைவித்தாடியதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். 300 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்களை பிற்காலத்தில் வந்தவர்கள் பெய்யரென இனம்காண்பதுதான் இதில் உச்சகட்ட நகைச்சுவை. ஹதீத் விதிமுறைகளுடன் அதன் அறிஞர்கள் செய்யும் வேடிக்கைகளை அறிய ஸஹீஹ் முஸ்லீமின் துவக்க பகுதிகளைப் பார்த்தால் போதுமானது. கட்சி அடிப்படையில் நடைபெற்ற/(இன்றும்)பெறும் குத்துவெட்டுகளை கேட்கவே வேண்டாம். இந்நிலையில் ஹதீஸ்களைத் தோராயமானது என்றுதான் கூறமுடியும். அதன் உள்முரண்பாடுகளை விவாதிக்கத் தொடங்கினால் நான் முன்புகூறியபடி மலக்குழியில்தான் எறியவேண்டும். ஹலால்-ஹராம் எவ்வாறு முடிவுசெய்யப்பட்டது விளக்கும் ஹதீதுகளும் உள்ளன. ஹதீதுகளின் காமெடிகளை நினைவூட்டவே முஹம்மதின் சிரைக்கப்பட்ட முடியைப் பற்றி குறிப்பிட்டேன்.
    //இந்த செய்தியை எங்கிருந்து பெற்றீர்? /// onlinepj.com வெளியிட்டுள்ள ஸஹீஹ் முஸ்லீமிலிருந்து,
    அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப் பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, “அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.
    முடிமட்டுமல்ல எச்சில், மூத்திரம் என்றும் நீளுகிறது. என்னங்க… இப்ராஹிம் அவர்களே..! வடிகட்டிய மடத்தனமாக இல்லையா? சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சி இருக்கிறது!
    ///இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்று குதிரைக்கு கண் கட்டிவிட்டது போல் உங்களது பார்வை இருப்பதால் இப்படியெல்லாம் எழுதி உள்ளீர்கள்/// முதலில் உங்களது பக்கப்பட்டைகளை விலக்கி, உண்மை உலகைக் காணவும். உங்கள் மனதை புண்படுத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. நாங்கள் உண்மையைக் கூறுகிறோம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    ///இஸ்லாத்தை பின்பற்றுவது வேறு/// விசிலடிக்க ஆள் சேர்த்தால் போதும் என்கிறீர்கள். அது உங்களது விவகாரம் எனக்குத் தேவையில்லாதது.
    ///ஆமாம் கம்யுனிசத்தில் நாவிதர் உண்டா? மேலும் உமது மயிர் கழிவுகளை நாவிதர் குப்பை என்று சொல்லுவது சரியா?பொதுவுடமையில் நாவிதர் என்று தனி வர்க்கம் உண்டா?/// இடுகை கம்யூனிஸம் தொடர்புடையதல்ல. அதற்குரிய இடத்தில் முன்வைக்கவும். நானும் கம்யூனிஸத்தில் தேர்ந்தவனல்ல. மன்னிக்கவும்…!
    தஜ்ஜால்

    • S.Ibrahim நவம்பர் 23, 2011 இல் 9:37 முப #

      தச்சஆளே !ஒரு பெண்ணின் சம்மதம் கேட்பது என்பது அவளது வயதை தீர்மானிக்க அளவுகோலாக இருக்கமுடியாதா? சூரியன் உச்சியிலிருந்து சாயத்துவங்கும் நேரம் என்பதைக் கொண்டுதான் பகல்தொழுகையின் [லுஹர்] துவக்கம் பனிரண்டுமணி பத்துநிமிடங்களுக்கு பிறகு என்பது காலத்திற்கு தகுந்தவாறு நிர்ணயிக்கப் படுகிறது .அதைப்போலவே ஒரு பெண்ணின் சம்மதம் பெரும் அறிவு பதினாறு வயதிக்கு மேல் என்பதை நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது.
      ///பருவமடைந்த பெண்ணுடன் மட்டுமே உடலுறவு கொள்ளவேண்டுமென இஸ்லாம் கூறவில்லை. அதை நமக்கு குர் ஆனின் 65:04 தெளிவுபடுத்துகிறது.///
      இந்த வசனம் நீங்கள் நினைப்பது போல் இல்லை .மாதவிலக்கு வராத பெண்களும் உண்டு.அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.அவர்கள் விசயத்தில் விவகாரத்து குரிய இடைக்காலத்தை தான் கூறுகிறதே தவிர பருவம் அடையாத பெண்களை பற்றி அது கூறவில்லை .இதைதான் காமாலை கண்கள் பார்வைஎன்பது . பாலை கொடுத்து கடையசொன்னால் வெண்ணை யைத்தான் எடுக்க வேண்டும் .அதில் விசத்தை தேடுபவர்களை என்ன செய்வது?
      நான் நடுநிலை என்று சொன்னது உங்கள் மனநிலையை ,குரான் மீது செங்கொடி போன்றோர் ஏற்படுத்தியுள்ள அவதூறுகளை மறந்து இஸ்லாமியர்கள் சொல்லும் உய்ர்நிலையும் புறம் தள்ளி நடுநிலையோடு நீங்கள் ஆய்வு எய்தால் வெண்ணையே கிடைக்கும்.
      குர் ஆனில் நேரடியாக விளங்கும் பகுதிகள் பெரும்பாலும் உள்ளன.இருப்பினும் சூல்நிலைகேற்றவாறு விளங்க வேண்டிய விசயங்களும் உள்ளன.இரவில் நிலவு ஒளி தேவைப்படும் .சூரிய ஒளியை நிலவு பிரதி பலிப்பது போலவே குரானையே ஹதித் பிரதிபலிக்கும் .சூரியனை மேகம் சூழும் நிலையில் ஏற்படும் இருளில் டார்ச் தேவைப்படவே செய்யும் .
      புகாரி, முஸ்லிம் போன்றவர்கள் லட்சகனகானவர்களை ஆய்வு செய்து எழுதுகையில் பிழைகள் ஏற்படுவது இயல்பே //புஹாரி பொய்யர்களென்று கருதிய 600க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம் ஹதீஸில் இடம்பிடிக்கின்றனர். புஹாரி, புனிதர்களென்று போற்றிய 400க்கும் மேற்பட்டவர்களை முஸ்லீம் பொய்ய்யரென ஒதுக்கிவிட்டார். குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்வைத்துக் கொண்டாடப்படும் புனிதநூல்களின் நிலை இது. /// நீங்கள் குறிப்பிட்ட அளவில் அறிவிப்பாளர்கள் விசயத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லை. மேலும் அறிவிப்பாளர்கள் பற்றிய கருத்துக்கள் ஒருவரின் மதிப்பிட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் குறிப்பிட்ட அறிவிப்பாளர்களின் விசயத்தில் இவர்கள் இவர்களின் கருத்து வேறுபாடுகளை ஏனைய ஹதித் கலை அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டு முடிவு செய்யப் படுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் வந்தவர்கள் தங்களது சொந்த முடிவை சொல்ல வில்லை.தங்களுக்கு முன் உள்ளவர்கள் துண்டு துண்டாக எழுதி வைத்ததையும் மனனம் செய்து வைத்ததையும் வைத்தே தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். பலரின் கருத்துக்கள் பலவாறாக இருந்தாலும் இவர்களின் கருத்து எது சரியானது என்பதை மலத்தில் குளிப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .ஜலத்தில் குளிப்பவர்கள் அதை அறிவர்.நாவித குப்பைபற்றிய ஹதித் கள் எல்லாம் பலவீனமானவை என்பதை அதை எழுதிய அறிஞர்களே குறிப்பிட்டுள்ளனர். பலவீனமானவற்றை ஏன் எழுத வேண்டும் என்றால் உங்களைப் போன்ற சில மலந்தின்னிக்ள மக்களிடம் நிலவ விடப்பட்ட இது போன்ற ஏராளமான ஹதித்களை பிற்கால மக்களிடம் பரப்பி விடகூடாது என்பதற்காகவே ,போலிஸ் ஸ்டேசனில் குற்றவாளிகள் போட்டோக்களை வைத்திருப்பது போல்.
      நீவிர் கம்யூஸ்ட் அல்ல என்பதால் நாவிதரை கேவலமாக சித்தரிப்பது சரியா?இது மனிதாபிமான அற்ற செயலாக தெரியவில்லையா?

      • தஜ்ஜால் நவம்பர் 29, 2011 இல் 3:48 பிப #

        இப்ராஹிம் அவர்களுக்கு,
        ///தச்சஆளே !ஒரு பெண்ணின் சம்மதம் கேட்பது என்பது அவளது வயதை தீர்மானிக்க அளவுகோலாக இருக்கமுடியாதா?/// என்று கேள்வியை கேட்ட நீங்களே ///அதைப்போலவே ஒரு பெண்ணின் சம்மதம் பெரும் அறிவு பதினாறு வயதிக்கு மேல் என்பதை நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது./// என்றொரு பதிலையும் கூறி, எனது பணியை எளிதாக்கி விட்டீகள். எனது கேள்வி இதுதான், ஆறு வயது மழலையான ஆயிஷாவிற்கு ஆண்-பெண் கலவி பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்? ஒன்பது வயது குழந்தையுடன் உடலுறவு (வல்லுறவு) கொண்ட 54 வயது கிழவனை என்ன செய்யலாம்?
        குர் ஆன் ஹதீஸைக் கொண்டு எங்களது குற்றச்சாடுகளை மறுக்க முடியவில்லை. எனவே, ///நாவிதரை கேவலமாக சித்தரிப்பது சரியா? இது மனிதாபிமான அற்ற செயலாக தெரியவில்லையா?/// என்று தரங்கெட்ட முறையில் திரித்துக் கொண்டிருக்கிறீகள். நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை குறைந்தபட்ச அறிவுடன் படித்திருந்தால்கூட இப்படி உளற வேண்டியிருக்காது. சாதி என்ற தீய ஆயுதத்தை கைலெடுத்து முஹம்மதைக் காப்பாற்ற முயற்சிக்கிறீகள். வேறுவழி தெரியவில்லையா? இடுகையின் மையப் பொருளுக்கு வாருங்கள் நண்பரே!
        ///மலத்தில் குளிப்பவர்///மலந்தின்னிக்ள/// என்பதோடு ஏன் நிறுத்திவிட்டீர்கள்? சாட்டையடி. சவுக்கடி, செருப்படி, இடுப்பெலும்பு முறிப்பது, முதுகெலும்பை முறிப்பது என்றல்லவா நிறைவு செய்யவேண்டும்? நீங்கள் பீ.ஜே-வின் சீடராக இருக்கத் தகுதியற்றவர்! இவ்வசைமொழிகள் உங்களது இயலாமையை வெளிப்படுத்திவிட்டது. முஹம்மதின் இமேஜைக் காப்பாற்ற உங்களை போன்றவர்கள் மேற்கொள்ளும் சிரமத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது

        தஜ்ஜால்

  13. செந்தோழன் நவம்பர் 30, 2011 இல் 9:37 பிப #

    ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
    ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?

    • S.Ibrahim திசெம்பர் 2, 2011 இல் 5:13 முப #

      எனது கேள்வி இதுதான், ஆறு வயது மழலையான ஆயிஷாவிற்கு ஆண்-பெண் கலவி பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்? ஒன்பது வயது குழந்தையுடன் உடலுறவு (வல்லுறவு) கொண்ட 54 வயது கிழவனை என்ன செய்யலாம்?
      இப்போது இந்த கேள்வியை கேட்பது எளிது .நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுபது வயது கிழவர்கள் இருபது வயது இளைஞர் ஆக 14 வயது பெண்களுடன் காதல் வசனங்கள் பேசியதை ரசித்த உலகமே இது. இப்போது அந்நிலை மாறிவிட்டது.அது போன்றே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து மக்களும் அது போன்று திருமணங்கள் செய்து வந்தனர்.சமகாலத்தில் உலகம் முழுவதும் அது போன்று திருமணங்கள் நடைமுறையில் இருந்தது.ஆறு வயதில் பெயரளவில் திருமணம் நடந்தது. ஆயிஷா அவர் வீட்டிலே இருந்தார். பருவம் எய்துவிட்டால் ஒன்பது வயதில் கலவி அப்போது நடைமுறையில் இருந்தது .அதை மறுக்கும் ஆதாரங்கள் இருந்தால் சொல்லுங்கள்.மேலும் நபி[ஸல்] அவர்களிடம் காமமே மிகைத்திருந்தது அதனால் தான் அவர் அப்படி திருமணம் செய்தார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள். அன்றைய மக்களிடமிருந்து ஒவ்வொரு தவறான நடவடிக்கைகளையும் படிப்படியாக திருத்தம் செய்கிறார். அது போன்றே பால்ய விவாகத்தையும் தடுக்கும் வண்ணமாக பெண்ணின் சம்மதம் கேட்டு திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுகிறது. எப்படி பெண்களுக்கு சொத்துரிமையை முதலாக வழங்கிய இஸ்லாம் பாலிய விவாகத்தையும் முதன் முதலில் தடுத்ததும் இஸ்லாமே . மக்களிடம் முதலில் தனது நபித்துவத்தை அறிவித்த பொழுது குறைஷிகள் ,நபி[ஸல்] அவர்களிடம் உங்களுக்கு விரும்பிய பெண்களை மணமுடித்து தருகிறோம் ,பொற்காசுகள் தருகிறோம் ,உங்கள் புதிய கொள்கைகளை கைவிடுங்கள் என்று வற்புறுத்தியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாது ,சொல்லடிகள் கல்லடிகள் மட்டுமே தனது மார்க்கத்திற்காக ஏற்றுக் கொண்டு விரட்டியடித்தபோதும் அத்தனை வேதனைகளையும் தனி மனிதனாக தாங்கிக் கொண்டு சமுதாய மாற்றங்களை கண்டவர் .அவர்களுடைய பொது மற்றும் சொந்த வாழ்க்கையில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற அளவில் அவர்களது வரலாறு பகிரங்கம்மாகப்பட்ட எங்களது உயிரினும் மேலான நபி[ஸல்] அவர்கள் பற்றி ,கள்ளப்பெயரில் வரும் தங்களை போன்றோர் பேசுவதற்கு கிஞ்சிற்றும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
      ///இடுகையின் மையப் பொருளுக்கு வாருங்கள் நண்பரே!///
      குர் ஆண் ஹதீதை கொண்டு மையப் பொருள் பொய்யான ஹதித் மூலம் மையமாகிவிட்டதே ,பிறகென்ன மையப்பொருள் ,மயிர் பொருள்.
      ///சாதி என்ற தீய ஆயுதத்தை கைலெடுத்து முஹம்மதைக் காப்பாற்ற முயற்சிக்கிறீகள். வேறுவழி தெரியவில்லையா////
      நாவிதர் என்ற வார்த்தையை கொண்டு வந்தது யார்?ஏன்? அதை சாதியாக இப்போதும் குறிப்பிட்டு அவர்களை இழிவாக காட்டியுள்ளதும் சரியா?
      ///மலத்தில் குளிப்பவர்///மலந்தின்னிக்ள/// என்பதோடு ஏன் நிறுத்திவிட்டீர்கள்? சாட்டையடி. சவுக்கடி, செருப்படி, இடுப்பெலும்பு முறிப்பது, முதுகெலும்பை முறிப்பது என்றல்லவா நிறைவு செய்யவேண்டும்? நீங்கள் பீ.ஜே-வின் சீடராக இருக்கத் தகுதியற்றவர்! இவ்வசைமொழிகள் உங்களது இயலாமையை வெளிப்படுத்திவிட்டது. ///
      ஹதித்களை மலக் குழிக்குள் போடவேண்டும் என்று ஆரம்பித்த தச்சஆளே ,நாங்கள் புனிதமாக் கருதும் ஹதித்களை அசிங்கப்படுத்த முயற்சிக்கும் பொழுது நீவிர் எமக்கு எம்மாத்திரம், எம்மூத்திரம் எனக் கொள்ள மாட்டோமா? தாங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறவே செய்வோம்.

      ///முஹம்மதின் இமேஜைக் காப்பாற்ற உங்களை போன்றவர்கள் மேற்கொள்ளும் சிரமத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது///
      முஹம்மது நபி[ஸல்] அவர்கள் உலகில் சிறந்த நூறு மனிதர்களில் முதல் மனிதராக இருக்கிறார். உம்மை போன்ற கள்ள பெயரில் வரும் அநாமதேயங்களால் அவர்களின் இமேஜ்க்கு பாதிப்பு வருவதாவது , அவர்கள் தம் கொள்கை பின்பற்றும் மாணவர்களின் செய்திகள் உலகத்தில் பறைசாற்றி கொன்று இருப்பதை காணுவீர்

      http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.html

    • S.Ibrahim திசெம்பர் 2, 2011 இல் 5:19 முப #

      சாட்டையடி. சவுக்கடி, செருப்படி, இடுப்பெலும்பு முறிப்பது, முதுகெலும்பை முறிப்பது என்றல்லவா நிறைவு செய்யவேண்டும்? நீங்கள் பீ.ஜே-வின் சீடராக இருக்கத் தகுதியற்றவர்! இவ்வசைமொழிகள் உங்களது இயலாமையை வெளிப்படுத்திவிட்டது.
      என்று கூறியுள்ள தச்ச ஆளே ,கீழே உமது செந்தோழரின் வார்த்தைகளை பார்த்து சொல்லுங்கள் ,எனது வாதங்களுக்கு பதில் சொல்ல இயலாமை எப்படி வெளிப்பட்டுள்ளது என்று பாருங்கள்
      ///ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க.
      ஜயா இப்ராஹிம்!உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?////
      இவருக்கு செங்கொடியின் சீடராக இருக்க தகுதி வந்து விட்டதா?

      • தஜ்ஜால் திசெம்பர் 6, 2011 இல் 3:30 பிப #

        இப்ராஹிம் அவர்களுக்கு,
        ///நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுபது வயது கிழவர்கள் இருபது வயது இளைஞர் ஆக 14 வயது பெண்களுடன் காதல் வசனங்கள் பேசியதை ரசித்த உலகமே இது/// அந்த 70 வயது கிழவரின் ’சுன்னா’வையும் பின்பற்றத் தயாராகிவிட்டீகள் போலிருக்கிறதே. பலே.. பலே..!.
        ///ஆண்டவன் பெயரைச் சொல்லி குழந்தையைக்கூட கற்ப்பழிக்கிறாங்க .இந்த காவாலித்தனத்துக்கு இப்ராஹிம் போன்றோர் சப்போர்ட் கட்டாயம் பன்னுவாங்க.ஏனென்றால் இவங்க இந்தமாதிரி ஈனப்புத்தியில் தான் இருக்கிறாங்க. ஜயா இப்ராஹிம்! உனது 6 வயது மகளை 50 வயது கிழவனுக்கு மணமுடித்து கொடுப்பாயா?அல்லது நீதான் 6 வயது சிறுமியை மணமுடிப்பாயா?/// என்பது மனிதாபிமானமுள்ள எவரும் கேட்கக் கூடிய மிக நியாயமான கேள்வி இதில் என்ன தவறிருக்கிறது? பதில் சொல்ல முதுகெலும்பில்லை///பாலிய விவாகத்தையும் முதன் முதலில் தடுத்ததும் இஸ்லாமே/// என்று கதையளக்க வந்துவிட்டீர்.. இதை, ஜும்ஆ பயானில் சொல்லுங்கள், எவனாவது ஏமாந்த சோணகிரி முஸ்லீம் வந்து “கை மடக்குவான்”.
        /// அது போன்றே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து மக்களும் அது போன்று திருமணங்கள் செய்து வந்தனர்.சமகாலத்தில் உலகம் முழுவதும் அது போன்று திருமணங்கள் நடைமுறையில் இருந்தது///எந்த காலத்திலும் ஒரு கிழவன் சிறுமிகளை மணப்பது மிகவும் பொதுவானது நடைமுறையில் இருந்ததல்ல. அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சில சமயங்களில் தவழும் வயதில் கூட, நிச்சயம் செய்வது வழக்கம். எனது தாத்தாவிற்கும் பட்டிக்கும் அவர்களின் திருமணத்தின் போது முறையே 14 மற்றும் 11 வயதுடையவர்களாக இருந்தனர். சிறுவர் சிறுமியர் காதல் கொள்வது இன்றும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அவர்கள் தங்கள் வயதுள்ள மற்ற ஒருவரை காதலிப்பார்கள். நாம் விவாதிப்பது இதைப் பற்றி அல்ல. ஐம்பது வயதுள்ள மனிதன் ஆறு வயதுள்ள சிறுமியின்மீது காதல் கொள்வதற்கு pedophilia என்று பெயர் அதாவது சிறுமிகளின் மேல் உள்ள காம இச்சையினால் வெறிகொண்டு அலைவதைப் பற்றி பேசுகிறோம் ஐம்பது வயதுள்ள மனிதன் ஆறு வயதுள்ள குழந்தையை காமம் கொள்வது எந்தக் காலத்திலும் பொதுவான நடைமுறையல்ல.
        1. ஆறுவயது மழலையை மனைவியாகக் காணும் ஐம்பதுவயது கிழவரின் தரங்கெட்ட மனநிலை.
        2. ஒன்பதுவயது சிறுமியை புணர்ந்த ஐம்பத்துநான்கு வயது கிழவரின் காமவெறி
        3. புனிதராக போற்றப்படும் தரங்கெட்ட அக்கிழவரின் இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?
        //குர் ஆண் ஹதீதை கொண்டு மையப் பொருள் பொய்யான ஹதித் மூலம் மையமாகிவிட்டதே, பிறகென்ன மையப்பொருள், மயிர் பொருள்///எது பொய்யாகி விட்டது? இதில் எதை மறுத்துள்ளீர்கள்? முஹம்மது அபூபக்கரிடம் வலிய பெண்கேட்டுச் செல்லவில்லை, அபூபக்ர்தான் தனது ஆறு வயது மகள் ஆயிஷாவை, ஐம்பது வயது கிழவனின் தலையில் வைத்து கட்டி விட்டார் என்பது உங்களது நிலையெனில், அதற்கான ஆதரங்களை முன்வையுங்கள். வாதத்திற்கு அப்படியொரு ஆதாரமிருந்தாலும் (இல்லையென்பது வேறு விஷயம்) ஒன்பதுவயது சிறுமியை புணர்ந்த முஹம்மது என்ற ஐம்பத்துநான்கு வயது கிழவனின் காமவெறி எப்படி நியாயமாகும்?

        தஜ்ஜால்

  14. Robin திசெம்பர் 6, 2011 இல் 5:46 பிப #

    தஜ்ஜால் கேட்ட கேள்விகளை நானும் இஸ்லாமியர்களிடம் கேட்டுள்ளேன். அவர்கள் எல்லாரும் இங்கே இப்ராஹீம் பாடும் ஒரே பல்லவியைத்தான் பாடினார்கள். உண்மை என்னவென்றால் முகமது உத்தமர் என்று சிறுவயதிலிருந்தே இவர்களுக்கு சொல்லப்பட்டு வந்துள்ளது. திடீரென்று தங்கள் நம்பிக்கைக்கு விரோதமான உண்மைகள் ஆதாரத்துடன் முன்வைக்கப்படும்போது ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள், எதையாவது சொல்லி சமாளிக்கிறார்கள் அல்லது விரக்தியில் வசை பாடுகிறார்கள்.

    • S.Ibrahim திசெம்பர் 7, 2011 இல் 10:21 முப #

      தச்சஆளே ,நெறி கெட்டு பேசுவதை தவிருங்கள் . .இப்போது உங்களால் தனி மனித பேச்சுரிமை இந்நாட்டில் வழங்கப்பட்டிருந்தும் உங்களால் உங்களது கருத்துக்களை உங்களை அடையாளம் காட்டி எடுத்து வைக்க முடியவில்லை.அத்துனை உள்ளூர பயம். ஆனால் நபி[ஸல்] அவர்கள் காட்டுமிராண்டிதனமான காலத்தில் தனது கருத்துக்களை தனி மனிதனாக எடுத்து வைக்கிறார். அதனால் வரும் அத்தனை எதிர்ப்புகளையும் சந்திக்கிறார்.கொலை முயற்சிகளையும் வெல்கிறார். இனி இவரை வன்முறையால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த மக்கள் அவ்வப்போது குறைஷிகள் சமரச திட்டதினுடன் நபி[ஸல்] அவர்களை அணுகினார்கள்.ஒரு அறிவிப்பில் ,நாங்கள் உங்களுக்கு இவ்வளவு செல்வதந்து விடுகிறோம்,நீங்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகி விடலாம் ;நீங்கள் விரும்புகின்ற பெண்ணை உங்களுக்கு மனம் முடித்து தந்துவிடுகிறோம் ,நாங்களும் உங்களை பின்பற்றி நடக்க தயாராக இருக்கிறோம்,நீங்கள் எங்களது கடவுள்களை குறை கூறுவதை விட்டு விட வேண்டும் என்னும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் போதும்,என்று ஒரு சமரச திட்டத்தோடு அணுகினார்கள் .நீங்கள் சொல்லுவது போல் அவர் காமுகராக இருந்தாலோ பொருளாசை உடைவாரகா இருந்தாலோ அதை ஏற்றுக் கொண்டிருப்பார். மேலும் அவர்மீது கொலை வெறித்தாக்குதல் பண்ணிய மக்களும் அவர்களின் பாலியல் வாழ்க்கை பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கவில்லை.அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிய யூதர்களும் ஆயிசாவின் திருமணத்தை விமர்சிக்கவில்லை.இதன் மூலம் சமகாலத்து மக்கள் அது போன்ற திருமணம் நிகழ்ந்ததையே காட்டுகிறது.அடுத்து அடுத்து வந்த நூற்றாண்டு மக்களும் ஆயிசாவின் திருமணத்தை விமர்சிக்க வில்லை.இதிலிருந்து உண்மை என்னவென்பதை புரிந்து கொள்ளாமல் ,நபி[ஸல்] அவர்கள் முதன் முதலாக தடை செய்யப்பட்டது பால்யவிவாகம் அதன் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் இன்று அதுபோன்ற திருமணம் நமக்கு பெரும் குற்றமாக தெரிகிறது.
      ///எந்த காலத்திலும் ஒரு கிழவன் சிறுமிகளை மணப்பது மிகவும் பொதுவானது நடைமுறையில் இருந்ததல்ல.////
      இது உங்களது இப்போதைய கருத்து .அப்படி இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் எங்கே?
      ///அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சில சமயங்களில் தவழும் வயதில் கூட, நிச்சயம் செய்வது வழக்கம். ///
      கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகமாக் இருந்த இந்த பழக்கம் இப்போதும் முழுமையாக நிற்கவில்லை.நான் பேசுவது 1400 ஆண்டுகளுக்கு முந்தய காலத்தைப் பற்றி என்பதை மனதிற் கொள்ளுங்கள்.
      ///எனது தாத்தாவிற்கும் பட்டிக்கும் அவர்களின் திருமணத்தின் போது முறையே 14 மற்றும் 11 வயதுடையவர்களாக இருந்தனர்///
      இது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறுவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு .
      மீண்டும் தச்ச ஆளே உளறுவதை நிறுத்தி ,1400 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று திருமனம்கள் நடை பெறவில்லை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.
      கடந்த நூற்றாண்டிலேதான் பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய ஞானோதயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகளை கொல்லும் காலம் நேற்று வரை இருந்து வந்துள்ளது. இன்னும் அவர்களின் மாதவிடாய் காலம் தீட்டு என்று கருதப்பட்டு வீட்டின் ஒதுக்குப் புறத்தில் வைத்ததும் சமிப காலம் வரை நடந்து வந்தது. ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக் பெண்களுக்கு சொத்துரிமையை நிலைநாட்டியவர் , பெண் குழந்தைகளின் பெருமைகளை கூறி சிசு கொலையை தடுத்தவர் ,மாதவிடாய் காலத்தில் பெண்களை பெருநாள் திடலுக்கு அழைத்தும் தனது மனைவியை பள்ளிக்கு தொழுகை அல்லாத காரியத்திற்காக நுழைய வைத்ததும் ,அவர்களது மடியில் தலைவைத்து குரான் வாசித்ததும் அந்த தீட்டு என்ற பழக்கத்தை நீக்க அவர்கள் நடத்திய போராட்டங்களாகும்
      ஒருவர் காமுகராக் இருந்தால் ஒன்பது வயது பெண்களை விட 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே தேர்ந்தெடுப்பார்கள் .நபி[ஸல் ]அவர்கள் தனது மறைவுக்கு பிறகும் அதிகம் காலம் வாழ்ந்து பாலியல் பிரச்னைகளில் இஸ்லாமிய அணுகுமுறைகளை பெண்கள் மத்தியில் விளக்கம் கொடுக்க ஆயிசாவை திருமணம் செய்திருக்கலாம். அதை போலவே ஆயிசா நீண்ட காலம் வாழாவிட்டாலும் ஹதித்களை அதிகமாக் அறிவித்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
      கள்ளபெயரில் வரும் நாலாந்தர பேர்வழியே ,இப்போது ஏன் பின்பற்ற படவில்லை என்பதற்கு பலமுறைகள் பதில்கள் சொல்லியாகிவிட்டது.பெண்ணின் சம்மதத்தோடு தான் திருமணம் என்பதால் அந்த சம்மதம் தெரிவிக்கும் வயது பதினாராக் கொள்ளலாம் .இஸ்லாம் இவ்வாறாக பாலியல் திருமணத்தை தடுத்ததால் ,அந்த பழக்கம் உலகம்முழுவதும் பரவி ,படிப்படியாக மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்கி ,இப்போது அந்த மாற்றத்தை கொண்டு வந்தவரையே இவ்வாறு கேள்வி கேட்க தூண்டியுள்ளது.வேறு எவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட பெரியவர் சிறியவர் திருமணத்தை விமர்சித்ததாக வரலாறு இல்லை.

      • தஜ்ஜால் திசெம்பர் 13, 2011 இல் 4:07 பிப #

        இப்ராஹிம் அவர்களுக்கு,
        ///தனி மனித பேச்சுரிமை இந்நாட்டில் வழங்கப்பட்டிருந்தும் உங்களால் உங்களது கருத்துக்களை உங்களை அடையாளம் காட்டி எடுத்து வைக்க முடியவில்லை.அத்துனை உள்ளூர பயம்/// ஏனெனில், ”அல்லாஹ்வுடனும் அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது கொல்லப்படுதல் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல்…” என்ற முஹம்மதின் உளறலை (கு 5: 33) கண்மூடித்தனமாக நம்புகின்ற மூடர்களுக்கு இந்த நாட்டிலும் பஞ்சமில்லை. மேலும் தன்னை விமர்சித்தவர்களை முஹம்மது, கையாண்ட விதம் ஹதீஸ்களில் நாறிக்கிடக்கின்றது.
        ///பெண்ணின் சம்மதத்தோடு தான் திருமணம் என்பதால் அந்த சம்மதம் தெரிவிக்கும் வயது பதினாராக் கொள்ளலாம்/// என்பது உமது வறண்ட கற்பனையே. இன்றும், இளம் வயதுடைய குழந்தையைக்கூட திருமணம் செய்தால், இஸ்லாமிய சட்டப்படி செல்லும் என்பதற்கான ஹதீஸ் ஆதாரம்,
        ஆயிஷா (ரலி) அறிவித்தார்
        நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்…

        இந்த எளிய ஹதீஸக் கூட புரிந்து கொள்ள முடியாமல் ///பாலிய விவாகத்தையும் முதன் முதலில் தடுத்ததும் இஸ்லாமே/// என்று ஒரு வடிகட்டிய பொய்யை நீட்டி முழக்கிக்கொண்டு விவாதிக்க வந்துவிட்டீர்கள். முஹம்மதால் தடைசெய்யப்பட்ட அறியாமைக்கால திருமணமுறைகளிலும் ’இந்த’ பாலியவிவாகம் வரவில்லை (புகாரி 5127). மேலும் குறைந்த கால அளவிற்கு ஒப்பந்தமிட்டு செய்யபடும் அல்முத்ஆ திருமணம் என்ற விபச்சாராத்திற்குக் கூட, அனுமதித்ததாகவும், தடைசெய்தாகவும், மீண்டும் வழக்கிலிருந்ததாகவும் முரண்பட்ட பல்வேறு அறிவிப்புகள் காணப்படுகிறது. ஆனால் இந்த பாலிய விவாகத்திற்கு அப்படிக்கூட எதையும் காண்பிக்க உங்களால் இயலவில்லை. உங்களால் இதுவரை எந்த ஒரு ஆதாரத்தையும் தரமுடியவில்லை. அவ்வளவு ஏன், குற்றச்சாட்டுகளை மறுக்கும்விதமாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட(!?) ஹதீஸைக்கூட உங்களால் காண்பிக்க முடியவில்லை. உங்களுக்கே இது கேவலமாக இல்லையா? இஸ்லாம் பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கோட்டை!

        ///.நபி[ஸல் ]அவர்கள் தனது மறைவுக்கு பிறகும் அதிகம் காலம் வாழ்ந்து பாலியல் பிரச்னைகளில் இஸ்லாமிய அணுகுமுறைகளை பெண்கள் மத்தியில் விளக்கம் கொடுக்க ஆயிசாவை திருமணம் செய்திருக்கலாம். அதை போலவே ஆயிசா நீண்ட காலம் வாழாவிட்டாலும் ஹதித்களை அதிகமாக் அறிவித்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்./// இதுபோன்ற “லாம்” களால் பயனேதுமில்லை. ஆயிஷா அறிஞர் கிடையாது. அவர், தனது கணவ்ரின் செயல்களை நினைவுபடுத்தி கூறினார் அவ்வளவே. என்றோ இறந்துபோன தனது கணவரின் செயல்களை தினமும் கூறிக் கொண்டிருக்கும் மூதாட்டிகளை நாம் தினமும் காணலாம். இப்ராஹிம் அவர்களின் பார்வையில் இவர்களும் அறிஞர்தான்.
        தஜ்ஜால்

  15. S.Ibrahim திசெம்பர் 14, 2011 இல் 9:29 பிப #

    தச்ச ஆளே ,தன்னை விருந்துக்கு அழைத்து உணவில் விஷம் கலந்து கொடுத்த பெண்ணையே மன்னித்தவர் முஹம்மது நபி[ஸல்] அவர்கள்.அதனால் நாற்றம் ஹதிதில் இல்லை..கோளாறு உமது மூக்கிலே .
    இப்போது சட்டம் பாதுகாப்பாக இருந்தும் உங்களது கருத்தை எடுத்து வைக்க உங்களுக்கு இருக்கும் பயம் நியாயமானதுதான்.மறுப்பதற்கில்லை. ஆனால் அரபுலகின் காட்டுமிராண்டி காலத்தில் முற்றிலும் அந்தமக்களின் மாறுபட்ட கருத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து பிரச்சாரம் பண்ணி அதில் வெற்றி கொடியும் நாட்டுகிறார் என்றால் அது ஒரு மனிதனின் செயலாக இருக்க முடியுமா? நிச்சயமாக இது இறைவனின் வேத வெளிப்பாட்டாலே முடியும்
    ///ஆயிஷா (ரலி) அறிவித்தார்
    நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்…///
    இந்த ஹதீதை கூறி இது போன்ற பாலிய விவாகம் தடை செய்யப் பட்டதற்கு ஆதாரம் கேட்டுள்ளீர்கள்.இது அக்காலத்தில் இருந்த பழக்கம் .அதன் பின்னரே அது தடை செய்யப்பட்டது.நீங்கள் சொல்லுவதுபோல் குரான் வசனத்தை காட்டி இப்போதும் தொழுகை அல்லாத நேரங்களில் மது அருந்தலாம் என்றும் கூறலாம் .ஆனால் அதன் பின்னர் அது தடை செய்யப்பட்டது.
    பெண்ணின் சம்மதம் பெற்றே திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அது போன்று தனது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யப்பட பெண் நபி[ஸல்] அவர்களிடம் முறையிடுகிறார்கள் அந்த திருமணம் ரத்து செய்யப்படுகிறது.மேலும் பெண்கள் ஆண்களிடம் வலுவான உடன்படிக்கை செய்துள்ளார்கள் என்ற வசனமும் உள்ளது.இதன் மூலம் திருமணம் செய்வதற்கு பெண்ணின் சம்மதம் கட்டாயம் என்பதாலும் உடன்படிக்கை செய்யும் அளவில் அவர்கள் பக்குவம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும் பால்ய விவாகம் நடைபெறாதவாறு தடை செய்யும் நடைமுறைகள் நடுநிலையாளர்களால் உணரமுடியும் .
    ‘பஸ்ஸில் ஒருவர் சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்.நடத்துனர் அவரைப் பார்த்து ஐயா ,பஸ்ஸில் சிகரெட் குடிக்கக் கூடாது என்று எழுதி உள்ளோமே ,ஆதலால் உடன் நீங்கள் சிகரெட் குடிப்பதை நிறுத்துங்கள் என்கிறார்.ஆனால் அவரோ ,எங்கைய்யா எழுதி போட்டுள்ளீர்கள்.காட்டுங்கள் என்கிறார். நடத்துனரும் புகைபிடிக்கக்கூடது என்று எழுதி உள்ளதை காட்டுகிறார்.உடன் அவர் அதில் புகை பிடிக்கக்கூடாது என்றுதானே எழுதி உள்ளது. நான் புகையை எங்கே பிடிக்கிறேன்?புகையை எப்படி பிடிக்க முடியும்?நான் சிகரெட் அல்லவா குடிக்கிறேன் என்றாராம்.”தச்ச ஆள் ,உங்கள் நிலையும் இந்த சிகரெட் குடிகாரர் போல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?
    ///இதுபோன்ற “லாம்” களால் பயனேதுமில்லை. ஆயிஷா அறிஞர் கிடையாது. அவர், தனது கணவ்ரின் செயல்களை நினைவுபடுத்தி கூறினார் அவ்வளவே. என்றோ இறந்துபோன தனது கணவரின் செயல்களை தினமும் கூறிக் கொண்டிருக்கும் மூதாட்டிகளை நாம் தினமும் காணலாம். இப்ராஹிம் அவர்களின் பார்வையில் இவர்களும் அறிஞர்தான்.///
    ஆயிஷா[ரலி] அவர்கள் ஐயாயிரத்துக்கும் அதிகமான அறிவிப்புகளை சொல்லியுள்ளார்கள்.இது போன்று எத்தனை மூதாட்டிகள் தங்கள் கணவர் செயல்களை கூறியுள்ளார்கள்?மேலும் அவர்கள் அதிகபட்சம் அவர்களல ஐம்பது சம்பவங்களை கூட கூற முடியாது.ஹதீதை எப்படி அதன் அறிவிப்பாளர்கள் மனனம் செய்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். நபி ஸல் அவர்கள் ஒரு தோழருக்கு “வ நபியி கல்லதி அர்சல்த ,,,,,”என்று ஒரு சொற்றொடரை சொல்லி கொடுக்க துவங்குகிறார்கள்.அப்போது அந்த தோழர் ,வ ரசூலி கல்லதி அர்சல்த ,,,,,,,”என்று சொல்லுகிறார் .உடன் நபி [ஸல்] அவர்கள் நான் எவ்வாறு சொன்னேனோ அவ்வாறே சொல்ல வேண்டும் என்கிறார்கள். அதாவது இங்கே “நபியி ” என்றாலும் ரசூலி என்றாலும் ஒருவரைத்தான் குறிக்கும் என்றாலும் சொல் மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதன் மூலம் ஒரு ரிக்கார்டிங் போல் மனதில் பதிவு செய்யப்படுகிறது. நான் சொல்லாத வொன்றை என் பெயரில் யார் சொன்னார்களோ அவர்கள் நரகில் தங்கியிருப்பார்கள்,என்ற நபி மொழிக்கு அஞ்சி பலர் தங்களது ஞாபக பிசகுக்கு பயந்து ஹதிகளை அறிவிக்க தயங்கியுள்ளனர்.

    • தஜ்ஜால் திசெம்பர் 22, 2011 இல் 4:11 பிப #

      இப்ராஹிம் அவர்களுக்கு,

      ///இது அக்காலத்தில் இருந்த பழக்கம். அதன் பின்னரே அது தடை செய்யப்பட்டது./// ///நடத்துனரும் புகைபிடிக்கக்கூடது என்று எழுதி உள்ளதை காட்டுகிறார்./// இதற்கான தெளிவான ஆதாரத்தை குர்ஆன், ஹதீஸிலிருந்து தாருங்கள் என்றுதான் கேட்கிறேன். ஆனால் நீங்கள் சுற்றிவளைத்து ’எதையோ’ தொட்டுட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த்தது தற்கால நாகரீகத்திற்குப் பொருந்தாது என்கிறீர்கள். ஆனால், “…அல்லாஹ்வுடைய ரஸூலிடத்தில் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது” (குர்ஆன் 33:21) என்று குர் ஆன் இவ்விஷயத்தில் முரண்படுகிறதே? குர்ஆனில் உள்ளது தவறு என்கிறீர்களா?
      ///பெண்ணின் சம்மதம் பெற்றே திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது அது போன்று தனது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யப்பட பெண் நபி [ஸல்] அவர்களிடம் முறையிடுகிறார்கள் அந்த திருமணம் ரத்து செய்யப்படுகிறது/// திருமணத்திற்கு, கன்னிப்பெண்ணின் வெளிப்படையான ஒப்புதல் தேவையில்லை என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. மாறாக நீங்கள் கூறும் பொருளில் அல்ல!

      ஆயிஷா அறிஞர் கிடையாது. அவர், தனது கணவ்ரின் செயல்களை நினைவுபடுத்தி கூறினார் அவ்வளவே. அபூஹுரைரா, ஆயிஷாவைவிட அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார். முஹம்மதுவும் அபூஹுரைராவும் தம்பதிகளாக வாழ்ந்தனரா? இல்லையே!

      • S.Ibrahim திசெம்பர் 24, 2011 இல் 8:29 முப #

        /// 1400 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த்தது தற்கால நாகரீகத்திற்குப் பொருந்தாது என்கிறீர்கள். ஆனால், “…அல்லாஹ்வுடைய ரஸூலிடத்தில் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது” (குர்ஆன் 33:21) என்று குர் ஆன் இவ்விஷயத்தில் முரண்படுகிறதே? குர்ஆனில் உள்ளது தவறு என்கிறீர்களா?///
        தச்சாளின் சிந்தனை இஸ்லாம் என்றால் ஏன் இப்படி பிற்ப்போக்காக போகிறது.?நபி[ஸல்] அவர்கள் அக்கால வழக்கை தடை செய்த அந்த செயல் தான் அழகிய முன்மாதிரி .
        ///திருமணத்திற்கு, கன்னிப்பெண்ணின் வெளிப்படையான ஒப்புதல் தேவையில்லை என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. மாறாக நீங்கள் கூறும் பொருளில் அல்ல///
        நான் கூறிய ஹதிதுக்கும் ,நீங்கள் சொன்ன ஹதீதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஒரு பெண் ,தனது சம்மதம் இல்லாமல் செய்யப்பட திருமணத்தை நபி[ஸல்] அவர்களிடம் முறையிடுகிறார் என்றால் அக்காலத்தில் பெண்களுக்கு துணிச்சலையும் உரிமைகளையும் தந்தது யார்?.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அல்லவா? மேலும் கன்னி பெண்கள் வெளிபடையாக சம்மதம் தெரிவிக்க கூடாது என்று சட்டம் சொல்ல வில்லை .அவர்கள் வெட்கபடுவார்களேயானால் மவுனமே சம்மதம் என்கிறார்கள் . இப்போதைய பெண்கள் சம்மதம் தெரிவிக்க வெட்க படுவதுமில்லை.அதற்கு தடையும் இல்லை.
        ///அபூஹுரைரா, ஆயிஷாவைவிட அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார். முஹம்மதுவும் அபூஹுரைராவும் தம்பதிகளாக வாழ்ந்தனரா? இல்லையே!///
        பெண்களிடையே பாலியல் சம்பத்தப்பட்ட ஹதித்களை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்.மேலும் அபு ஹ்ரைரா [ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் தின்னைத்தோழர் ஆவார்கள்

  16. janoon.mohamed ஜனவரி 5, 2012 இல் 8:55 பிப #

    muttrilum……………..poi

    • riyal மார்ச் 19, 2012 இல் 8:38 பிப #

      நீங்க சொன்னது உண்மை

  17. janoon.mohamed ஜனவரி 5, 2012 இல் 8:56 பிப #

    MULUTUM……….POI

    • தஜ்ஜால் ஜனவரி 17, 2012 இல் 4:05 பிப #

      பொய் என்று எப்படி கூறுகிறீர்கள்?

  18. riyal மார்ச் 19, 2012 இல் 8:28 பிப #

    இது பொய் சான்று காணப்படுகிறது

  19. riyal மார்ச் 19, 2012 இல் 8:31 பிப #

    இதில் அநேகமான இடங்களில் பொய் சான்று காணப்படுகின்றது
    உதாரணம் “ஆதாரம் ” பொய் பொய் பொய் ……………………………….

  20. riyal மார்ச் 19, 2012 இல் 8:35 பிப #

    இந்த அட்ரஸ் அநியாயம் “வெஸ்ட் “

  21. iniyavan ஜூன் 19, 2012 இல் 7:22 பிப #

    இறைவாக்கு என்றால் அதன் பொருளும் இறைபுத்தகத்திலிருந்தே பெறுவதுதான் பொருத்தமாக‌ இருக்கும். அதை விட்டு ஒரு புத்தகத்திற்கு பொருள் வேரொரு புத்தகத்தில் கிடைக்கும் எனில் அது ஏற்புடையது அல்ல.ஒரு செய்தியை அதன் பொருளுணர்ந்து படிக்கும் சக்தியை இறைவனால் தர இயலவில்லை என்றால் (இறைவேதம் என சொல்வதால்)அது இறைவேதம் என்பதற்கு பொருளில்லை.இறைவேத‌த்திலேயே பலர் பலவிதமாக பொருள் கொள்ளும் அளவிற்கு பேதம் நிறைந்த வேதமாகத் திகழ்கிறது. மனிதன் கண்டுபுடித்த கணினியில் தவறுதலாக அச்சிட்டாலே அதை உடனே திருத்திக் கொள்வதற்கு வழிமுறைகளைக் கையாண்டு விட்டான்,மனித சக்தி உயர்ந்துவிட்டது இங்கே ஆனால் இறைசக்தியில் குடுமிச்சண்டை ஓய்ந்தபாடில்லை இதுவும் அவன் செயலோ?

  22. noor mohammed நவம்பர் 19, 2014 இல் 6:12 பிப #

    இவர் எழுதும் கட்டுரைகளில் முக்கால்வாசி நூற்றுக்கு 95 சதவீதம் பொய்யாகவே உள்ளது.
    அடிக்கடி குரான் வசனத்தை சொல்வதால் இவர் சொல்வதை அப்படியே நம்பி விடாதீர்கள்.
    இவர் மனதில் பட்டதை சொல்கிறார். இவருடைய முழு விபரம் தேவை
    அனுப்பவும் snmrpower@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு

Trackbacks/Pingbacks

  1. முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள் « - நவம்பர் 6, 2011

    […] முகம்மதின் குழந்தைத் திருமணம் இவைகளில் பகிருங்கள்:மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌TwitterFacebookLinkedInEmailPrintDiggRedditStumbleUponLike this:LikeBe the first to like this . […]

பின்னூட்டமொன்றை இடுக