ஆரம்பத்தை நோக்கி

12 ஜூன்

 

தீவிரமாக இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகும் ஒருவராயிருந்து பின்னர் ஏற்பட்ட ஒரு சந்தேகத்திற்கு விடைதேடி வேதங்களையும் அதன் விளக்கங்களையும் விரிவாக ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியின் பயனாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒரு முன்னாள் இஸ்லாமியரின் பயணம் தான் இந்த நூல். தனக்குத்தானே தஜ்ஜால் என பெயர் சூட்டிக்கொண்ட இவர், இந்நூலை ஆழ்ந்து படித்து முடிக்கும் ஒரு இஸ்லாமியர் இஸ்லாத்திலிருந்து விலகுவது திண்ணம் என்கிறார். என்ன நண்பர்களே இவரின் சவாலை சந்திக்க நீங்கள் தயாரா?

 துவங்கும் முன்

ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்,

 

என்  சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என நபிகள் நாயகம் உத்தரவிட்டிருந்தார்கள் .

 

குர்ஆன்  எழுதிப்பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது  நபிகளாரின் பொன்மொழி? என்பதில்  குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆகவே  நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

 

ஆயினும்  அபூஹூரைரா போன்ற ஓரிரு நபித்தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவு பெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும்  அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

 

நபித்தோழர்கள்  அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே நபிகளாரின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்  அக்காலங்களில் நபிகளாரின் பொன்மொழிகளை மனனம் செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை  காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ  ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல  மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.

 

ஹதீஸ் என்றால் என்ன?

 ஹதஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதிய செய்தி எனப்பொருள்படும். இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

        அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

 

 

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

 

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

 

ஹதீஸ் வகைகள்

ஹீஹ் அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச் சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

 

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

 

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

 

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ:கள் மவ்லூஉ எனப்படும்.

 

முதல்  தொகுப்பு

ஹிஜ்ரீ  முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (கி.பி 681-717.) ஆட்சிக் காலத்தில்  நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

 

உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) நபிகளாரின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்திசிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் நபிகளாரின் பொன்மொழிகளை திரட்டத் தொடங்கினார்கள்.

 

அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. நபிகளாரின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம் பெற்றன. தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பொய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி நபிமொழி என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர். அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கின. இப்பொய்ச் செய்திகள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன.

 

இந்நிலையில் தான் இமாம் முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். மார்க்கத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்சிக்குப்பின் தனக்கு மனனமாக இருந்த சுமார் 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு ஆதரப்பூர்வமான பொன்மொழிகள் தொகுப்பை உலகுக்கு வழங்கினார். அதற்குப்பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு.

 

1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர்   :  அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரீ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) ஷவ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக் கிழமை இரவு

இறப்பு          : ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால அயராத உழைப்பிற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அன்னார் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.

 2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர்  :  சுனன் அபூதாவூத்

ஆசிரியர் பெயர் : அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)

பிறப்பு          : ஹிஜ்ரீ 202

இறப்பு          : ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை

ஈரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் (சஜிஸ்தானீ) (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் பெருமையாகக் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.

 

3. ஸஹீஹ் முஸ்லிம்

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் : அபுல் ஹஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைசாப ரீ அல்கு ரீ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)

இறப்பு          : ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள் ஞாயிறு மாலை

இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குi~ரீ அன்நைசாபூரீ (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள்.ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹ_ல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து இது ஸஹீஹுல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

 

 4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்  : அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் : அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்)

பிறப்பு          : ஹிஜ்ரீ 209

இறப்பு          :ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)

  இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ (ரஹ்) அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

5. இப்னுமாஜா

நூலின் பெயர்  :சுனன் இப்னுமாஜா

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)

பிறப்பு          :ஹிஜ்ரீ 209

இறப்பு          :ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அப+ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அப+ ஜர்ஆ அர்ராஜீ (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.

 

 

 6. சுனன் நஸயீ

நூலின் பெயர்  : சுனன் நஸயீ

ஆசிரியர் பெயர் : அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அந்நஸயீ (ரஹ்)

பிறப்பு  : ஹிஜ்ரீ 215

இறப்பு  : ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)

 

கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அன்னஸயீ (ரஹ்) அவர்கள் முஸ்லிம் (ரஹ்) அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

 

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

 

 

 

இமாம் புகாரி அவர்களின் வாழ்க்கை வரலாறு

 இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயில் பின் இப்ராஹீம் பின் முஃகீரா பின் பர்திஸ்பா அல்ஜூஅஃபி அல்புகாரீ (ரஹ்) அவர்கள் ஆவார். இன்றைய ரஷ்யக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு (கி.பி.810) `வ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு அன்னார் பிறந்தார்கள்.

 

சிறு வயதிலேயே தந்தையை இழந்த அன்னார் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். உள்ளூரிலேயேஆரம்பக் கல்வியைக் கற்று முடித்த பின் தாயார் மற்றும் சகோதரருடன் தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி206இல்) ஹஜ் புனித்ப பயணம் மேற்கொண்ட அன்னார் ஹதீஸ் எனும் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக திரு மக்காவிலிலேயே தங்கிவிட்டார்கள்.

 

திருமக்கா மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து சிரியா இராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார்கள். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல லட்சங்களாகும் இருப்பினும். நம்பத் தகுந்த ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே இந்நூலில் இடம் பெறச் செயவதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

 

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. இவற்றில் திரும்பத் திரும்ப வரும் நபிமொழிகளை நீக்கிப் பார்த்தால் சுமார் 4000 நபிமொழிகளே மிஞ்சும். இந்த எண்ணிக்கையே இமாம் இப்னுஹஜ்ர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் விரிவுரை மூலத்தில் காணப்படுகிறது.

 

இந்நூலுக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் சூட்டிய முழுப்பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசூலில்லாஹி (ஸல்) வ அய்யமிஹி ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவுறாத நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற, அல்லாஹ்வின் திருத் தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதன் பொருளாகும். இதனை ஸஹீஹூல் பபுகாரீ (இமாம் புகாரீ அவர்களின் ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்பு) என்று சுருக்கமாகக்கூறுவர். 16 ஆண்டு காலக் கடின உழைப்புக்குப் பின் இத்தொகுப்பு உருவானது.

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இந்நூலன்றி வேறு பல நூல்களும் எழுதியயுள்ளார்கள். அவற்றில் சில,

  1. அல் அதபபுல் முஃப்ரத்
  2. அத்தாரீகுல் கபீர்
  3. அத்தாரீஸ் ஸஃகீர்
  4. அல் முஸ்னதுல் கபீர்
  5. அத்தஃப்சீரல் கபீர்
  6. அல் மப்சத்
  7. அல்ஹிபா
  8. அல் அ`ரிபா                   
  9. அல்வஹ்தான்
  10. அல் இலல்

 

கல்விக் கடலாகத் திகழ்ந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இறைவழிபாடு,  நபிவழி வாழ்க்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் தூய்மையான முறையில் வாழ்ந்தார்கள். வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட அன்னார் ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து நகரில் தமது 62ஆவது வயதில் மறைந்தார்கள்.

Rahmath.net லிருந்து

*****

11 பதில்கள் to “ஆரம்பத்தை நோக்கி”

  1. unmai virumbi செப்ரெம்பர் 30, 2011 இல் 9:44 முப #

    “”வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)” .inda hadisin enn(Number) thara mudiyuma?

  2. S.Ibrahim திசெம்பர் 18, 2011 இல் 7:59 முப #

    தச்சஆள் இவர் முன்னாள் இஸ்லாமியராக இருந்த பொழுது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தாராம் .அந்த ஆய்வுயன் அடிப்படையில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி தனது பயணத்தை இங்கே கூறுகிறார்.அதை படித்தால் படித்தவர்கள் அனைவரும் வெளியேறி விடுவோமாம். ரஹ்மத் நெட்டிலிருந்து நீவிர் ஹதிஸ் பற்றி அறிந்ததை விட பல நூல்களில் ஹதிஸ் பற்றி அறிந்தவர்கள் நெட்டை பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.உமது தும்மாத்துண்டு அறிவை வைத்துக் கொண்டு அதை அப்படியே கோணல் மாணலாக எழுதிவிட்டால் அதை அப்படியே நம்பி அனைவரும் வெளியேறி விடுவார்களாம் .ஆகா என்ன உங்களது அற்புத அறிவு? ஹதிச்களின் வகைகளை ரஹ்மத் நெட்டிலிருந்து காப்பி பண்ணிய நீங்கள் அதிலுள்ள லயிப்,மவ்லுஆ ஹதித்கள் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? நீங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதித்களின் தரம் பற்றி ஆய்வுகள் செய்யப்படவில்லை. அதன் காரணம் என்ன?2006 இல்தான் மார்ர்க்கம் பற்றிய தூய வடிவை காண ஆரம்பித்ததாக கூறும் நீங்கள் எப்படி இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றியதாக கூற முடியும்? நபி[ஸல்] அவர்கள் பற்றி பெருமையும் வழிகாட்டலும் கூடிய எத்தனையோ ஹதித்கள் ஸஹிஹ் தரத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் பற்றிய அவதூறுகளை கிளப்பியுள்ள பொய்யான தரம் குறைந்த நூல்களிலிருந்து எடுத்து வெளியிட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? கம்யுனிச மயத்தை காட்டினால் அதிலுள்ள குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்று நாத்திக வேடம் போட்டு வந்துள்ளீர்களோ! சரி உங்களை கேட்கறேன்.சரி நீவிர் விமர்சிக்கும் முஹம்மது நபியை பின்பற்றியவர்களை விட நாத்திகம் மக்களை நெறிபடுத்தியுள்ளது என்பதை நிருபிக்க முடியுமா? முஸ்லிம்களை விட நாத்திகர்கள் நல்லவர்களாக உள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிருபிக்க் முடியுமா? இதற்கு நீங்கள் பதில் அளிப்பீர்களானால் அடுத்து சில கேள்விகளை தொடர விரும்புகிறேன்.

    • S.Ibrahim திசெம்பர் 18, 2011 இல் 8:47 முப #

      ////என்ன நண்பர்களே இவரின் சவாலை சந்திக்க நீங்கள் தயாரா?///

      நல்லூர் முழக்கமே ,அவரின் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம் .அதற்கு முன்னர் அவரது சவாலை அவரது உற்றதுணை மனைவியிடம் செயல்படுத்தி காட்டட்டும் .நபி[ஸல்] அவர்களின் முதல் வஹியை ஏற்கக் கூடிய அளவில் நபி[ஸல்] அவர்களின் செயல்பாடுகளில்,அவர்களது பண்புகளில் அவர்களது மனைவிக்கு நம்பிக்கை இருந்தது..துணிவு இருந்தது.அதுபோன்று உமது மனைவிடம் இருக்கிறதா என்று பாருங்கள் .அப்புறம் ஊருக்கு மேற்குதொடர்ச்சி மலையில் பதுங்கிக்கொண்டு சவால் விடலாம்.

  3. S.Ibrahim திசெம்பர் 18, 2011 இல் 7:26 பிப #

    ////தீவிரமாக இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகும் ஒருவராயிருந்து பின்னர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஒரு முன்னாள் இஸ்லாமியரின் பயணம் தான் இந்த நூல்////

    இவர் தீவிரமாக என்றால் ,பெரிய ஜிப்பா அணிந்து ,பெரிய தாடி வயிறுவரை வளர்த்து ,அரை அடி உயரத்தில் தலைக்கு தொப்பியணிந்து ,டூத் பிரஸ் [மிஸ்வாக்] ,தஸ்பிஹ் மணி சகிதமாக வலம் வருவதை தான் தீவிரமாக பின்பபற்றுவதாக சொல்ல வருகிறீர்களா? ஆனால் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுதல் என்றால் ,இரவில் குறைந்தது எட்டு ரக்காத்கலாவது தஹஜ்ஜத் தொழுதிருக்க வேண்டும்.சக்காத் மிக சரியாக கொடுத்திருக்க வேண்டும்.அண்டை வீட்டார் பொருளாதார நிலையறிந்து உதவியிருக்க வேண்டும். தெருக்களில் மக்களுக்கு இடையூறாக இருப்பவைகளை அகற்றிருக்க வேண்டும்.மேலும் அவர் இருபது லட்ச ரூபாய்க்கு சொத்து வாங்குவதாக வைத்துக் கொண்டால் அந்த தொகைக்கு அப்படியே பத்திர பதிவு பண்ண வேண்டும்.விருந்துகளில் மிக சிறந்த விருந்து ஏழைகளை அழைத்து விருந்து வைப்பதுதான் என்று முஹம்மது நபி[ஸல்] அவர்கள் வலியுறுத்துவதால் அது போன்று தச்சஆள் விருந்து வைத்திருக்க வேண்டும்.இவர் வயது தெரியவில்லை .அவர் பெரியவராக இருந்தால் அவரது மகனுக்கு மிக எளிமையாக திருமணம் நடத்தியிருக்க வேண்டும்.இதெல்லாம் வைத்துத்தான் அவர் தீரமாக பின்பற்றினாரா என்பதை அறிய முடியும் .மற்றபடி அவர் தீவிரமாக பின்பற்றியதாக கூறுவதெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக தனது வாதத்தை நிலை நாட்டுவதற்காகவே

    • தஜ்ஜால் திசெம்பர் 22, 2011 இல் 3:59 பிப #

      இப்ராஹிம் அவர்களுக்கு,
      சுயபுராணம் பாட விருப்பமில்லாமல்தான் எனது மனப்போராட்டங்களை விவரிக்கவில்லை. //இரவில் குறைந்தது எட்டு ரக்காத்கலாவது தஹஜ்ஜத் தொழுதிருக்க வேண்டும்.சக்காத் மிக சரியாக கொடுத்திருக்க வேண்டும்.அண்டை வீட்டார் பொருளாதார நிலையறிந்து உதவியிருக்க வேண்டும்…/// என்று நீங்கள் இலக்கணம் கூறுவதால், ஒரேயொரு செய்தியை மட்டும் கூறிவிடுகிறேன். நான் உண்மை இஸ்லாமியனாக, இறுதியாக செய்த தொழுகை, தஹஜ்ஜத்தும் அதைத் தொடர்ந்த ஃபஜ்ரும்தான். அதில் மனமுருகி கேட்ட ஒரே துஆ, என்ன தெரியுமா? “இறைவா…! நான் மிகுந்த குழப்பமான மனநிலையிலிருக்கிறேன். நீ எனக்கு உதவவில்லையென்றால் நான் இஸ்லாத்திலிருந்து விலகிவிடுவேனோ என்று அஞ்சுறேன். நீ…! எனக்கு உண்மையை காண்பித்து உதவவேண்டும்!” என்பதுதான். என்னுடைய இருபதாம் வயதிலிருந்து வார இறுதி நாட்களில் தஹஜ்ஜத், இரவு 1-2 மணிக்குத் துவங்கினால் ஃபஜ்ரு வரை நீடிக்கும் வகையில் என்னுடன் இருந்தது. எனது தாயின் விருப்பத்திற்காக சக்காத் இஸ்லாம் பரிந்துரைக்கும் அளவைவிட அதிகமாகவே இன்றும் தொடர்கிறது. எனது மாற்றம் எளிதில் நிகழவில்லை. இன்று சுதந்திரமாக உண்ர்கிறேன் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
      தஜ்ஜால்

      • S.Ibrahim திசெம்பர் 24, 2011 இல் 7:59 முப #

        ///தஹஜ்ஜத்தும் அதைத் தொடர்ந்த ஃபஜ்ரும்தான். அதில் மனமுருகி கேட்ட ஒரே துஆ, என்ன தெரியுமா? “இறைவா…! நான் மிகுந்த குழப்பமான மனநிலையிலிருக்கிறேன். நீ எனக்கு உதவவில்லையென்றால் நான் இஸ்லாத்திலிருந்து விலகிவிடுவேனோ என்று அஞ்சுறேன். நீ…! எனக்கு உண்மையை காண்பித்து உதவவேண்டும்!////
        ஒரு உண்மையான முஸ்லிம் ,இப்படி இறைவனை சோதிக்க முடியாதே !அவ்வாறெனின் நீங்கள் உண்மையான முஸ்லிம் என்பது பொய் அல்லவா?
        மேலும் பல கேள்விகள் பதில் இல்லாமல் நிற்கின்றனவே !

  4. தஜ்ஜால் திசெம்பர் 27, 2011 இல் 4:14 பிப #

    நம்பினால் நம்புங்கள் கட்டயமொன்றுமில்லை. ஏனெனில்அதை மீண்டும் பேசுவதால் எனக்கு எந்த பயனுமில்லை

    • S.Ibrahim திசெம்பர் 28, 2011 இல் 5:40 பிப #

      இறைவனை நம்பாதவரை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? கட்டாயமில்லை என்றால் அதன் பொருள் /துண்டைக் காணோம் துணியை காணோம் என்பதா?

      • தஜ்ஜால் திசெம்பர் 30, 2011 இல் 4:06 பிப #

        @ இப்ராஹிம்,
        இதுவரை உங்களது வாதத்திற்கு எந்த ஒரு குர் ஆன், ஹதீஸ் ஆதரங்களையும் உங்களால் தரமுடியவில்லை. குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டு கண்முடித்தனமாக மறுத்த்தைத் தவிர. இஸ்லாமைப் பொறுத்தவரையில் யூகங்களுக்கு இடமில்லை. தெளிவான ஆதரங்கள் இருந்தால் தொடருங்கள்.

  5. S.Ibrahim திசெம்பர் 31, 2011 இல் 9:45 முப #

    அல்ஹம்துலில்லாஹ் .வாதம் என்று துவங்கிய உங்களை இன்று உளரும் நிலைக்கு இறைவன் கொண்டு வந்துவிட்டான்.

Trackbacks/Pingbacks

  1. 72 கூட்டத்தினர் யார்? « நல்லூர் முழக்கம் - ஜூன் 24, 2011

    […] துவங்கும் முன் […]

பின்னூட்டமொன்றை இடுக