Tag Archives: மதவாதம்

பரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்?

22 ஜூன்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 4

 darwin

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?

 

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ‘ஜல்லியடிப்புகள்’ எனும் சொல்லை ஏன் பாவித்திருக்கிறேன்? ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக்? பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன? புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக? அப்போது தான் தங்கள் மதவாத புரட்டுகளை உண்மைபோல திணிக்கமுடியும் அதற்காக.

 

தலைப்பை அடுத்து ஒரு மீப்பெரும் பொய்யுடன் தன் கட்டுரையை தொடங்குகிறார் ஆஷிக். படைப்புவாதிகளின் வாதங்களுக்கு பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் தகுந்த பதிலளிக்கவில்லையாம். அறிவியலாளர்களை விட்டுவிடுங்கள்,மதவாதிகளுக்கு பதில் கூறும் சுமையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பொறுப்பை பொருள்முதல்வாதிகள் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அதாவது பொருள்முதல்வாதிகள் பதிலளிக்காத மதவியாதிகளின் கேள்விகள் ஏதேனும் மிச்சம் இருந்தால் .. .. .. அப்படி எந்த வாதமேனும் இருக்கிறதா?பொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமா?வரலாற்றில் தேடிப்பாருங்கள், பக்கங்கள் போதாது. இப்படி ஒரு அறுவெறுக்கத்தக்க பக்கத்தை தாங்கி நிற்கும் மதவாதிகளா தங்களின் வாதங்களுக்கு பதிலில்லை என்று பேசுவது?

 

அடுத்து, அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதால் பரிணாமத்தை நிராகரிக்க முடியுமா? பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது? இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் ஏன் பெருவெடிப்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறேன் எனும் கேள்வி எழக் கூடும். ஏனென்றால் நண்பர் ஆஷிக் போன்ற மதவாதிகள் பெருவெடிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாலும், பரிணாமத்திற்கான காரண கரியங்கள் பெருவெடிப்புக்கும் பொருந்தும் என்பதாலும், மதவாதிகளின் அறிவியல் பார்வை அவர்களின் வேதத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது மட்டும் தானேயன்றி அறிவியல் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தவும் தான்.

 

ஒரு ஆய்வில் கருத்து வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு அந்த ஆய்வின் தன்மைகள் ஒரு போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. அது நடைமுறையோடு பொருந்துகிறதா? மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதா?சரியாய் இருக்கிறதா? என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஆனால் பரிணாமத்தை நிராகரிக்கக் கோரும் மதவாதிகள் கூறும் காரணங்கள் இந்த எல்லைக்குள் இருப்பதே இல்லை. அறிவியல் செய்யும் அனைத்து ஆய்வுகள் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கருத்து வேறுபாடுகள் அந்த ஆய்வை மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் பரிணாமத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமன்றி பரிணாமத்தை எதிர்க்கும் அறிவியலாளர்களும் கூட பரிணாமவியல் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிற கோட்பாடுகளின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட பரிணாமத்தின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். இதற்கான காரணம் என்ன?

 

அறிவியல் உண்மைகளின் மீது கருத்து வேறுபாடுகள் எதுவும் எழுவதில்லை. கோட்பாடுகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் எழும். அறிவியல் கோட்பாடுகளின் மீதான கருத்து வேறுபாடுகள் எதில் குறைவாக இருக்கிறது எதில் அதிகமாக இருக்கிறது என்பதை பகுத்துப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கி விடும். அந்த வகையில் கடவுளை மதங்களை நேரடியாகத் தாக்கும் எந்தக் கோட்பாடுகளின் மீதும் கருத்து வேறுபாடுகள் கடுமையாக எழுந்திருக்கின்றன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மீது எழாத கருத்து வேறுபாடுகளா? புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா? கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா? (கம்யூனிசம் என்பது அரசியல் கட்சிக் கோட்பாடு அல்ல, இயங்கியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக அறிவியல் என்பதை அறிக) இந்த அடிப்படையில் தான் பரிணாமத்தின் மீதும் கருத்து வேறுபாடுகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது பன்னெடுங்காலமாக தாங்கள் நம்பிவரும் நம்பிக்கையின் மீதான பற்றுறுதியின் விளைவே பரிணாமத்தின் மீதான இவ்வளவு கருத்து வேறுபாடுகளுக்குமான காரணம். அறிவியலாளர்களிலும் அனேகர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

 

அறிவியலாளர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்களோ அதில் மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள். அறிவியலாளர்களுக்கும் மூடநம்பிக்கைகள் உண்டு. எடுத்துக்காட்டு ஒவ்வொரு முறை ஏவூர்தியை(ராக்கெட்) ஏவும்போதும் பூஜை செய்து ஏவுவது ஸ்ரீஹரிகோட்டாவில் வாடிக்கை, அவ்வளவு ஏன் சந்திராயன்1ஏவூர்தி மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து விட்டு பின்னர் ஏவியிருக்கிறார்கள். இதைச் செய்தது அறிவியலாளர்கள் என்பதால் அவர்களின் செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா? அல்லது பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா? பாலாஜியின் காலில் வைத்த அடிப்படை என்றால் அதை புறந்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.

 

அடுத்து நண்பர் ஆஷிக் மேற்கோள் காட்டும் கட்டுரையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அம்சங்களும் அந்த கட்டுரையில் இருக்கிறது. நண்பர் ஆஷிக்கின் மொழிபெயர்ப்பு வாயிலாகவே பார்ப்போம். \\\ஆச்சர்யமளிக்கும் வகையில்,தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் படைப்பு கோட்பாடை நம்புகின்றனர்/// \\\இந்த அறிவியலாளர்கள் அனைவரும், கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார், இவைகள் தற்செயலாக வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள்/// இந்த இரண்டு கூற்றுகளையும் பாருங்கள். நிச்சயமாக இவை அறிவியலாளர்களின் கூற்றுகளாய் இருந்திருக்க முடியாது. படைப்புக் கோட்பாட்டை நம்புபவர்கள் அதை அறிவியல் அடிப்படையில் நம்ப முடியுமா?பாலாஜியின் காலில் வைத்த அடிப்படையில் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்பினால் அது அறிவியலின் வழியில் வந்த முடிவாக இருக்க முடியாது. அறிவியலின் வழி பார்த்தால் நிச்சயம் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்ப வாய்ப்பில்லை.தற்செயலாக இவ்வுலகம் வந்தது என்பது மதவாதிகள் பாவிக்கும் சொல். இச்சொல் ஒரு அறிவியலாளனின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது. ஏனென்றால் அறிவியலாளர்கள் எல்லாம் ஒரு சிங்குலாரிடியிலிருந்து வந்தது அதற்கு முன் அதற்கு முன் என்னவென்றி இன்னும் அறியப்படவில்லை என்று தான் கூறுவார்களேயன்றி பேரண்டம் தற்செயலாக வந்தது என்று கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவது அறிவியலே அல்ல. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் எளிமையாக விளக்கலாம்.இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுச் சட்டை அணிந்திருக்கிறார், மற்றொருவரோ நைந்து கிழிந்து இற்றுப் போயிருக்கும் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்போது இன்னொருவர் வந்து கையில் உருப் பெருக்கியுடன் புதுச் சட்டையை உற்றுப் பார்த்து இந்த இடத்தில் ஒரு நூல் அருந்திருக்கிறது, அந்த இடத்தில் ஒரு நூல் வண்ணம் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது, இன்னொரு இடத்தில் ஒரு நூலின் முறுக்கு குறைவாக இருக்கிறது. பிறிதொரு இடத்திலோ ஒரு நூல் எதிர்முறுக்காக இருக்கிறது. எனவே, நான் நைந்து போன சட்டையை ஏற்கிறேன் என்று அவர் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இப்போது கூறுங்கள் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

 

இன்னொரு அம்சத்தையும் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல் ஆய்வு என்பவை, அறிவியலாளர்கள் என்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு ஒப்பவே அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நலன் காக்காத, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த ஒரு ஆய்வையும் எந்த ஒரு அறிவியலாளனும் நிகழ்த்திவிட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம்.ஏகாதிபத்தியங்களுக்கு கடவுள் நம்பிக்கை உதவி செய்ய வல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

 

அடுத்து, ஒரு முக்கியமான இடத்துக்கு வருவோம். குறிப்பிட்ட அந்த டெலிகிராப் நாளிதழில் வெளியிட்ப்பட்ட அறிக்கை டார்வினின் சொந்த வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தினை முன்வைத்து எழுதப்பட்டது என்பதை நண்பர் ஆஷிக் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் அது ஓர் அறிவியல் கட்டுரை போன்ற தோற்றத்துக்கு உதவாது என நண்பர் நினைத்திருக்கலாம். பரவாயில்லை அதை விட்டு விடுவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் தவிர்க்க முடியாத அம்சம் பரிணாமத்தை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் கூறப்படும் ஐந்து காரணங்கள். இவைகளை நண்பர் ஆஷிக் லேசாக தொட்டு விட்டு கடந்து சென்று விட்டார். அந்த காரணங்களைப் பார்க்கலாம்.

 

பரிணாம ஆதரவு வாதங்கள்:

  1. உயிரினப் பரவலை பரிணாமக் கோட்பாடுபோல் வேறெதுவும் விளக்கவில்லை.
  1. பரிணாமக் கோட்பாடு விளக்கமாகவும் பொருள் சார்ந்தும் இருக்கிறது.
  1. பெரும்பாலான அறிவியல் சமூகமும் கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுவங்களும் பரிணாம கோட்பாட்டை ஆதரிக்கிறது.
  1. பேரண்டம் தோன்றிய காலம் குறித்து வேதங்கள் கொடுக்கும் கணக்கு ஏற்புடையதாக இல்லை.
  1. நோவாவின் கப்பலைக் காட்டுங்கள்.

 

பரிணாம எதிர்ப்பு வாதங்கள்:

  1. பரிணாமக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை. இருந்திருந்தால் நமக்கு இன்னும் அதிகம் உயிரினப் படிவங்கள் கிடைத்திருக்கும்.
  1. பரிணாமவாதிகளின் கூற்றுப்படி உலகம் பழையது என்றால் கிடைத்திருப்பதை விட இன்னும் அதிகம் எலும்புக் கூடுகளும், குகை ஓவியங்களும் கிடைத்திருக்க வேண்டும். கடலில் இன்னும் அதிகம் சோடியம் குளோரைடும், அதிக வண்டலும் சேர்ந்திருக்க வேண்டும்.
  1. இருட்டில் பார்ப்பதற்கு சில உயிரினங்கள் செயல்படுத்தும் கூட்டுக் கண் குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
  1. வேதத்தில் பூமியின் படைப்பில் வரும் நாட்கள் என்பதை காலங்கள் என்று கொள்ள வேண்டும்.
  1. என்ன நோக்கத்திற்காக இவைகளெல்லாம் ஏற்பட வேண்டும்?

 

இந்தக் காரணங்களை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இவை கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களாக இருக்கிறது என்று. பரிணாமத்தை முதன்மைப்படுத்தி கேட்கப்பட்ட கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களை அந்தக் கட்டுரை பரிணாமத்திற்கான காரணங்களாக குறுக்க வேண்டிய அவசியமென்ன? எளிமையான காரணம் தான். பரிணாமத்தை திரித்துப் புரட்டி ஆஷிக் பாய் தமிழில் எழுதும் கட்டுரைகள் போலவே ஆங்கிலத்தில் யாரோ ஒரு மஹானுபாவர் கட்டுரை எழுத அதை டெலிகிராப் பத்திரிக்கை பிரசுரிக்க அதைப் பார்த்த ஆஷிக் புளகமடைந்து போய் கொஞ்சம் கூட்டிக் குறைத்து தமிழ்க் கட்டுரையாக்கி விட்டார். அவ்வளவு தான்.

 

இந்தக் கட்டுரையில் நண்பர் ஆஷிக் பிம்பமாக்கல் ஒன்றையும் செய்திருக்கிறார். பரிணாமத்தை எதிர்க்கிறேன் என்று எந்த ஆய்வாளரும் கருத்து தெரிவித்து விட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவாராம் அதனால் பரிணாம எதிர்ப்பை வெளிப்படையாக கூற தயங்குகிறார்களாம். இதற்கு பின்னூட்டத்திலும் விளக்கங்கள் அளித்திருக்கிறார். படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.யார் எதை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குவார்கள் என்பதற்கு நிகழ் காலத்திலும் வரலாறுகளிலும் அனேக சான்றுகள் உண்டு, எனவே அவைகளை விட்டு விட்டு ஆஷிக்கின் பின்னூட்ட பதில்களிலிருந்து பார்ப்போம். பரிணாமவியலை எதிர்த்து கருத்து கூறினால் என்ன நடக்கும்? அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார்? NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையிழப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும்?ஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலா? நண்பர் ஆஷிக்கிற்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஆத்திகர்களின் கைகளில் சிக்கி நாத்திகர்கள் அனுபவித்த ரத்தக்கரை படிந்த நீண்ட நெடிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். அது ஏன் என்பதற்கான பதிலை தேடிப் பாருங்கள். புரியாமல் நீங்கள் மதவாதியாக இருந்தால் அது உங்களுக்கு புரிதலைத் தரும். தரவேண்டும்.

ஆஷிக் உட்பட அத்தனை மதவாதிகளும் பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத, பதிலளிக்க முடியாத நம்முடைய ஆதாரக் கேள்வி – பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். எங்கே உங்களின் படைப்புக் கொள்கை சரி என்பதற்கான ஆதாரங்கள்?

 

இதற்கு மேலும் இந்தக் கட்டுரையை நீட்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை நண்பர் ஆஷிக் மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கும் விளக்கம் வேண்டும் எனக் கோரினால் அப்போது இந்தக் கட்டுரையின் பின் இணைப்பாக அவைகளை விளக்கி அடுத்த கட்டுரையாக எழுதிக் கொல்ளலாம்.

இத்தொடரின் முந்திய கட்டுரைகள்:

1. எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

2. புரிதலை மறுக்கும் புதிர்கள்

3. டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 4

16 ஆக

 
 
நண்பர்களே.சென்ற பதிவுகளில் அறிவார்ந்த வடிவமைப்பின் விளக்கம் அதன் வரலாறு குறித்து அறிந்தோம்.அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கம்[ID] பிற பரிணாம எதிர்ப்புகளை விட அறிவியல்(?) ரீதியான விமர்சனங்களை பரிணாமத்தின் மேல் தொடுப்பதும் அதற்கு பரிணாம ஆய்வாளர்கள் பதிலளிப்பதும் இந்த 15+ ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப் பட்ட ஒன்று.
இந்த இயக்கமும் பல்கலைகழகம் , ஆய்வுக் கூடம்,கல்வி,விளம்பர பிரச்சாரம் என மும்முரமாக இயங்குகிறார்கள்.இதன் முக்கியமான் நாயகர்கள் குறித்து அறிவோம்.ஒவ்வொருவர் பற்றி சுருக்கமான விவரங்களும் அவர்களின் ஒரு சிறிய உரையும் இப்பதிவில் அளிக்கிறேன்.காணொளியில் அவர்கள் முன் வைக்கும் பரிணாம கொள்கையின் மீதான விமர்சனங்கள் வரும் பதிவுகளில் விவாதிக்கப்படும்.இப்போது அறிமுகம் மட்டுமே!!!!!!!!!!
 
1.Phillip E. Johnson
 
 
 
 
Phillip E. Johnson (d.o.b: 18 June 1940) அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.இவர் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் மட்டுமல்லாது பெர்க்லி பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசியராகவும் [emeritus professor of law at Boalt School of Law at the University of California, Berkeley] 1967 to 2000 ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கிறித்தவ[Presbyterian Church (USA] மத நம்பிக்கையாளர். மைக்கேல் டென்டன் எழுதிய Michael Denton‘s Evolution: A Theory in Crisis. [1985] புத்தகம் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Blind Watchmaker[1986] புதகம் ஆகியவற்றின் மீதான ஆய்வில் பரிணாம விமர்சகராக மாறியதாக குறிப்பிடுகிறார். Discovery Institute‘s Center for Science and Culture (CSC) நிறுவனர்களுள் ஒருவர்.
 
 
 
 

2.Michel Behe

Michael J. Behe (born 1952) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்தவர். உயிர்வேதியலில்[Biochemistry] முனைவர் பட்டம் பெற்ற சிறந்த ஆய்வாளர். sickle-cell disease என்னும் இரத்த குறைபாடு பற்றியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் [1978 to 1982] பெற்றார். உன்னத முனைவர் பட்டம் எனப்படும் postdoctoral work [1982 to 1985] ஆய்வில் டி என் ஏ [DNA] அமைப்பு குறித்து ஆய்வு செய்தார் .பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்விதழ்களில் பதிவிட்டார். நியூ யார்க்கில் உள்ள Queens College  கல்லூரியில் உயிர் வேதியியல் துறை பேராசியராக பணியாற்றியவர். இப்போது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள  Lehigh University ல் பணி புரிந்து வருகிறார். Discovery Institute’s Center for Science and Culture அமைப்பிலும் பெருந் தொண்டு ஆற்றி வருகிறார்.
 
முதலில் பரிணாம் கொள்கையை ஏற்புடையதாக கருதினார்.ஆனால் மைக்கேல் டென்டன் எழுதிய Evolution: A Theory In Crisis புத்தகம் படித்த பின் பரிணாம கொள்கையை விமர்சிக்க தொடங்கினார். பரிணாம் கொள்கை உண்மையாக இருக்க முடியாது என்பதற்கு உயிர்வேதியியல் ரீதியான ஆதாரம் கண்டு பிடித்ததாக கூறினார் பெஹே. சில உயிர்களின் அடிப்படை வடிவமைப்புகள் எளிமைப் படுத்த முடியாத சிக்கலாக இருப்பதாகவும் இவை எந்த ஒரு எளிமையான அமைப்புகளில் இருந்து பரிணமிக்க முடியாது என்ற விமர்சனத்தை வெளியிட்டார்.இதுவே Irreducible complexity     என அழைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையின் சாரம் ஆகும். இவை பரிணாம செயல்முறைகளான் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தின் மூலமாக விளகக முடியாது என்பதால் இவை ஒரு அறிவு கொண்ட சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டு இருக்க முடியும்.இம்மாதிரி விளக்கங்கள் நிறைய கேட்டு இருக்க்லாம்.”கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத‌தால் கடவுள் உண்டு”.இந்த விள்க்கம் எல்லாம் மைக்கேல் பெஹேவின் Irreducible complexity  கொள்கை போட்ட குட்டிகள்தான். இவர் 1996ல் எழுதிய. Darwin’s Black Box  புத்தகம் பிரபலமானது.
 
 
இக்கொள்கை முன்னெடுப்பதில் இவர்&கொள்கைகள் பற்றி இன்னும் அதிகம் வரும் பதிவுகளில் பார்ப்போம்..
 
மைக்கேல் பெஹே கீழ்க்கண்ட வாதங்களை காணொளியில் முன் வைக்கிறார்
முதல் காரணி வாதம்[First cause argument]
 
ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்[Fine tuning argument]
 
இயற்கையாக ப்ரோட்டின் அமையும் நிகழ்தகவு[Probability of protein formation]
 
பிரபஞ்சத்தில் முதல் உயிரின் தோற்றம்.[Abiogenesis]

.Michel Behe

3.William Albert “Bill” Dembski

William Albert “Bill” Dembski (born July 18, 1960) இவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை  William J. Dembski பரிணாம் உயிரியல் பேராசியர் [University of Erlangen-Nuremberg] என்பது வியப்பான உண்மை. William Dembski கணிதம் [University of Chicago], தத்துவம் [Princeton Theological Seminary] என இரு முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறுவயது முதலே பரிணாம் கொள்கை மீது சந்தேகம் கொண்ட டெம்ஸ்கி 1991ல் சீரற்ற தன்மையை வடிவமைத்தல்[Randomness by design] என்னும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.
 
[பரிணாமத்தின் படி வடிவமைப்பு என்பது சீரற்ற தன்மையால் [Design by randomness] இவர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார். ஹா ஹா ஹா சரியான போட்டி!!!!!!!!!! சில பரிணாம கொள்கையாளர்கள் சீரற்ற சிறுமாற்றம் மட்டும்தான் ஒழுங்கற்றது இயற்கை தேர்வு அப்படியல்ல என்று கூறுவது சரியே என்றாலும் இங்கு இப்பதிவு ஒரு  ID கொள்கையாளரின் கண்ணோட்டதிலேயே எழுதப்படுகிறது. விமர்சனங்கள்,விவாதங்கள் பிறகு ]
 
பரிணாம செயல்முறைகள் மூலம் சிக்க்லான வடிவமைப்பு நிகழ முடியாது என்பதற்கு கணித ரீதியாக சில விமர்சனங்களை வைக்கிறார். பரிணாமத்தின் மாதிரியான Evolutionary Algorithms      பல கணித சிக்கல்களை தீர்ப்பது பரிணத்தின் நிரூபணம் என்பதை உடைக்க முயல்கிறார். இதற்கு No free lunch theorem மற்றும் Complexity theory அடிப்படையில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.இவர் Discovery Institute‘s Center for Science and Culture (CSC)  ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனக்கு பிடித்தவர் இவர்தான் . இவர் நம்ம specialization  ஆள் அதனால் வரும் பதிவுகளில் இவர் கட்டுரைகள் நுணுக்கமாக் அலசப்படும்

4.Stephen C Meyer

Stephen C. Meyer.Director of the Center for Science and Culture at the Discovery Institute and Vice President and Senior Fellow at the Discovery Institute
Stephen C. Meyer புவியியலில் பட்டமும்,வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் எழுதிய   signature in the cell     என்ற புத்தகமும் பிரபல்மானது.செல்லில் உள்ள டி என் ஏ ல் உள்ள சிக்கலான வடிவமைப்பு,தகவல்கள் பரிணாமத்தை தவறு என்று நிருபிப்பதாக வாதிடுகிறார்.
 
 
இது இல்லாமல் இன்னும் சிலரும் உண்டு என்றாலும் இந்த நால்வரை பற்றி சில குறிப்புகள் கொடுத்தது ஏன் எனில் இவர்களில் விமர்சன முறைகள் வேறுபட்டது.திரு ஜான்சன் சட்டாரீதியாக‌வே பரிணாம கொள்கை கல்வி எதிர்ப்பு குறித்து மேற்கொண்டார்.
 

திரு மைக்கேல் பெஹே உயிர் வெதியியல் சார்ந்தும்,திரு டெம்ஸ்கி கணிதம் சார்ந்தும் ஸ்டீஃபன் மெயர் செல் ஆய்வு சார்ந்தும் விமர்சனம் வைப்பதால் இந்த விமர்சகர்களை  அறிவது அவசியம் ஆகிறது.இனி நேரடியாக  கொள்கை  மற்றும் அதன் பரிணாம் விமர்சனம் குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.நன்றி

 

முந்திய பதிவுகள்

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 3

9 ஜூலை
நண்பர்களே பரிணாமத்திற்கு மாற்றாக அதன் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[ID] என்னும் கொள்கையை குறித்த தொடர் பதிவுகளை எழுதி வருகிறோம்.முந்தைய இரு பதிவுகளில் அதன் வரையறுப்பு ,முக்கியமான் கொள்கையாக்கங்களை பார்த்தோம். ID கொள்கையாளர்களின் கருத்துகளை அப்படியே வெளியிடுவதில் மிக கவனமாகவும் வெளிப்படையாகவும் இருந்து வருகிறோம்.இப்பதிவில் அதன் தோற்றம், வரலாறாக அவர்களின் தளத்தில் இருந்தே மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறோம். இதில் பல தேவையான் விவரங்கள் இருக்கலாம். வழக்கம் போல் மொழி மாற்ற சிக்கல்களை தவிர்க்க ஆங்கில மூலத்தையும் அளித்து விடுகிறோம்.

 History of intelligent design and the creation – evolution controversy

1611: அரசன் ஜேம்ஸ் ஆங்கில பைபிள் பிரதி வெளியீடு
1654: கிறித்தவ‌ பேராயர் உஷைர் உலகம் தோன்றிய நாளை பைபிளில் இருந்து 4004B.C.E என கணக்கிடுகிறார்
1802: இயற்கை இறையியல் என்பது அறிவியல்,தத்துவம் உட்பட்ட காரணிகளை கொண்டு  கடவுளின் இருப்பை நிறுவும் முயற்சியாகும்.
William Paley (July 1743 – 25 May 1805) இயற்கை இறையியல் துறை சார்ந்த முக்கியமான புத்தகம் வெளியிடுகிறார். இது Teleological argument என்னும் இயற்கையின் படைப்புகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு இருப்பது கடவுளை நிறுவுகிறது எனும் கொள்கையை தெளிவாக முதலில் முன் வைத்தது எனலாம்.
 
1830: டார்வினின் பரிணாம் கொள்கைக்கு மூல ஆதாரங்களில் ஒன்றான புவியியலின் முக்கியமான புத்தக்மான Principles of Geology        ஐ Charles Lyell          வெளியிடுகிறார்.
 
1859: டார்வினின் உற்ற நண்பரும்,தீவிர ஆதரவாளரான          T.H. Huxley பரிணாம கொள்கைக்கும்,மதவாதிகளுக்கும் கருத்து மோதல் வரலாம் என எதிர் நோக்குகிறார்.  Origin of Species     புத்தகம் வெளிவருவதற்கு முன் டார்வினுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த மோதலுக்காக என் ஆயுதங்களை தயாராக் வைத்துள்ளேன் என்று எழுதி இருந்தார்.
 
1859: அறிவியலாளர் டார்வின் (12 February 1809 – 19 April 1882)  பரிணாம கொள்கையின் மிக முக்கியமான புத்தகமாகிய  “Orgin of Spicies” வெளியிடுகிறார். உயிர்கள் அனைத்தும் ஓர் செல் உயிர்களில் இருந்து இயற்கைத் தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றங்களின் காரணமாக பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகின என்பதுதான் இக்கொள்கையாகும்.
 
1860: T.H. Huxley ம் Samuel Wilberforce ம் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக்த்தில் பரிணாமம் குறித்து விவாதிக்கின்றனர்.
 
1860~1900: டார்வினின் கொள்கைக்கு முதலில் பிற அறிவியலாளர்க‌ளிடம் இருந்தே எதிர்ப்பு’ வந்தது. பலர் டார்வினின் கொள்கையை நிரூபிக்க முடியாது,உயிர்களின் தோற்றம் ,பல் வகை பிரிவுகளாதல் ஆகியவற்றை விளக்க முடியாது என்றே கருத்து தெரிவித்தனர்.இந்த அறிவியல் ரீதியான எதிர்ப்பு  சுமார் 50_80 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.இது மட்டுமல்லாமல் மத ரீதியாகவும் எதிர்ப்பு வந்தது.
 
1874: John William Draper என்ற எழுத்தாளர் History of the Conflict Between Religion and Science என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.அதில் மதம்,அறிவியல் இவற்றின் முரண்பாடுகள் மோதல் போக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறார்.இந்த டார்வினின் பரிணாம கொள்கை மீண்டும் ஒரு மத கொடுந் தண்டனைகளை தோற்றுவிக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.அது என்ன மத கொடுந் தண்டனை [Inquisition] என்று அப்பாவியாக கேட்கும் நண்பர்கள் இங்கே பாருங்கள்.
1896: Andrew Dickson White என்ற எழுத்தாளர் A History of The Warfare of Science With Theology என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் . இது கிறித்தவ மதத்தின் கொள்கைகளை ,வரலாற்றை விமர்சித்தது.
 
1905-1915: இதற்கு எதிர்வினையாக கிறித்தவ ப்ராஸ்டன்டன்ட் சபையை சேர்ந்த Bible Institute of Los Angeles (Biola) அமைப்பு The Fundamentals என்ற புத்தக்த்தை வெளியிடுகிறார்கள்.  இது இந்த இரு புத்தகங்களையும் கடுமையாக விமர்சித்தது.பரிணாமம் குறித்த  ஆவணப்படுத்தப்பட்ட முதல் விமர்சனம் இது ஆகும்
1912: நாளிதழ் தலைப்பு செய்தியாக டார்வினின் பரிணாம கொள்கை நிரூபணம் கிடைத்ததாக செய்தி வெளியிடுகிறது.மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான[Missing link] முன்னோர் உயிரினத்தின் படிமம் கிடைத்ததாகவும் இது மதவாதிகளின் தாக்குதலில் இருந்து அறிவியலை வளர்க்க உதவியதாக ஆர்தர் கெய்த் குறிபிட்டார். ஆனால் பொ.ஆ 1953ல் இது ஒரு பொய்யான் படிமாம், ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்டது. இது இன்றும் பரிணாம எதிர்ப்பாளர்களால் பரிணாம(ஆய்வாளர்களின்)த்தின் நேர்மையற்ற சான்றாக  விமர்சிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Piltdown_Man

1925: இக்கால கட்டத்தில் (பெரும்பாலான)உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாம கொள்கையை ஏற்கின்றனர். பள்ளி,கல்லூரிகளில் பரிணாம் பாடத்திட்டம் ஆக்கப்படுகிறது.இப்போது பரிணாமத்திற்கு இருவகைகளில் எதிர்ப்பு வருகிறது.

1. பரிணாம்த்தை முற்று முழுதாக எதிர்க்கும்,பைபிள் ரீதியான படைப்பியல்வாதிகள்.[Young and Old earth creationists]
2.பரிணாம்த்தின் சீரற்ற,ஒழுங்கற்ற தனமையை மட்டும் ஏற்காமல் ,இது ஒரு வழி நடத்தப்பட்ட செயல் என்னும் கொள்கையாளர்கள். [Guided and directed Evolution]
 
1925: ஸ்கோப்ஸ் வழக்கு விசாரணை:பரிணாமத்தை பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டமாக்க அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் எதிர்ப்பு வலுக்கிறது ஜான் ஸ்கோப்ஸ் என்னும் உயிரியல் ஆசிரியர் மீது டென்னீஸ் மாநிலத்தின் பட்லர் சட்டத்தை மீறியதாக் வழக்கு போடப்பட்டது.பட்லர் சட்டம் எனில் பைபிளின் படைப்புக் கொள்கையை தவிர வேறு கல்வி அளித்தல் தவறு.,இது நீதி மன்றத்தில் வழக்காகிறது. இதில் ஸ்கோப்ஸ் சட்டத்தை மீறியதாக நிரூபணம் ஆனாலும்,தீர்ப்பு மாற்றப்பட்டு விடுவிக்கப் பட்டார்.இது மதம் பரிணாமம் மோதலை மிகவும் பரபரப்பு ஆக்கியது. [இது குறித்தே ஒரு சிறப்பு பதிவு இடுவோம்]
 
1959: டார்வினின் புத்தகம் வந்து நூறாண்டு கடந்தும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் ஓயவில்லை.
1968: படைப்பியல் கொள்கையும் பள்ளிகளில் கற்பிக்கப் பட வேண்டும் என்ற‌ இன்னொரு வழக்கில் Edwards v. Arkansas அமெரிக்க ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் பரிணாம் கல்விக்கு எதிரான சட்டம் நீகப்படுகிறது.எந்த மதத்தின் படைப்புக் கொள்கையும் பாடத் திட்டத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக கூறுகிறது.:

1971: பரிணம்த்தை விமர்சித்து சிறந்த வழக்கறிஞர் Norman Macbeth என்பவர் Darwin Retried: An Appeal to Reason. என்ற புத்தத்தை வெளியிடுகிறார்.இதில் அக்கால கட்டத்தின் பரிணாம் விமர்சனங்களை முன் வைத்தது. 

 
1972: Institute for Creation Research ஆரம்பிக்கப் படுகிறது.இதில் 1980 வரை இளைய பூமி[Young earth] கொள்கையே முன் வைக்கப் பட்டது..

1973: அமெரிக்க டென்னீஸ் மாநில சட்டசபையில் மீண்டும் பட்லர் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன்படி மனிதனின் தோற்றமாக் பள்ளிகளில் எந்த கொள்கையும் பாட புத்தகங்களில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படி செய்வதென்றால் அது ஒரு கோட்பாடு[theory] மட்டுமே மற்றும் அறிவியல் ரீதியாக் நிரூபிக்கபடாத உண்மை என்றும் கூறப்பட வேண்டும். பைபிள் உட்பட்ட அனைத்து மத புத்தகங்களும் பாடபுத்தகங்கள் அல்ல என்பதும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

1982: McLean v. Arkansas: வழக்கில்  Arkansas மாநிலத்தில் அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism”] என்பது அறிவியல் அல்ல என தீர்ப்பு வருகிறது.
 
1983. அறிவியல் படைப்புக் கொள்கை[“scientific creationism” ]  எதிர்த்து சில அமைப்புகள் உருவாக்கப் படுகிறது. 1982 வழக்கு விசாரணைகளுக்கு பிறகு இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேசிய அறிவியல் கல்வி அமைப்பு[National Center for Science Education (NCSE),] ஆக உருவெடுக்கிறது.
 
1986: ஹியூக் ராஸ்[Hugh Ross] “நம்பிக்கையின் காரணங்கள்” [“Reasons to Believe,” ] என்னும் பழைய பூமி[Old earth] கொள்கை அமைப்பை ஏற்படுத்துகிறார்.
 
1986: மைக்கேல் டென்டன் [Michael Denton] என்பவர்          Evolution: A Theory in Crisis.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
1987: Edwards v. Aguillard: வழக்கில் மூன்று நிபந்தனைகள் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு விதிக்கிறது.
1) பாட திட்டத்தில் மதம், அல்லது சார்ந்த கொள்கைகள் இருக்க கூடாது.
 2) மத பிரச்சாரம் தவிர்த்தல்
 3) அரசு மற்றும் மதத்தின் தொடர்பு பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
1991: Phillip Johnson என்பவர்          Evolution: Darwin on Trial.
 என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார்.  
1993: பரிணாம எதிர்ப்பு வரலாற்றில் முக்கியமான கூட்டம்            Pajaro Dunes, California. ல் நடக்கிறது. இதில் அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தை[intelligent design movement] தொடங்க போகும்    Phillip Johnson, Michael Behe, உட்ப‌ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ID Starts
1996: Michael Behe எழுதிய புத்தகம்  Darwin’s Black Box, அறிவார்ந்த வடிவமைப்பு[intelligent design] என்னும் சொல்லை முதன் முதலில் பிரபலப் படுத்துகிறது. இப்புத்தக்த்தில்தான் எளிமைப்படுத்தப் படாத சிக்கல்[“irreducible complexity] என்னும் கொள்கையும் விவாதிக்கப்படுகிறது
 
1996: “Mere Creation” ஆய்வரங்கம் Biola University ல் நடக்கிறது.இதில் அறிவார்ந்த வடிவமைப்பின் நாயகர்கள் Michael Behe, David Berlinsky, Walter Bradley, William Dembski, Sigrid Hartwig-Scherer, Phillip Johnson, Robert Kaita, Steven Meyer, J. P. Moreland, Paul Nelson, Nancy Pearcey, Del Ratzsch, John Mark Reynolds, Hugh Ross, மற்றும் Jonathan Wells கலந்து கொள்கின்றனர்..

1998: William Dembski எழுதிய புத்தகம் The Design Inference அறிவார்ந்த வடிவமைப்பின் பல கொள்கைகளை கணித ரீதியாக அளிக்கிறார். .

1999: அமெரிக்க கான்சாஸ் மாநிலத்தில் பெரும் பரிணாமம் [macroevolution] குறித்த பாடத்திட்டங்களை கல்வியில் இருந்து நீக்குகிறது.

 
2000: Jonathan Wells எழுதிய புத்தகம் Icons of Evolution வெளியிடப் படுகிறது.
2000: David K. DeWolf, Stephen C. Meyer, and Mark Edward எழுதிய புத்தகம்  “Teaching the Origins Controversy: Science, Or Religion, Or Speech”  வெளியிடப் படுகிறது. இது பாட திட்டத்தில் அறிவார்ந்த வடிவமைப்பு சார்ந்த பரிணாம விமர்சனம் சேர்க்கப் பட வேண்டும் என வலியுறுத்தியது.

2001: PBS ன் பரிணாமம் குறித்த ஆவணப் படம் ஒளிபரப் பட்டது.

2001ல் இருந்து இன்றுவரை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் பரிணாமம் vs ID , மோதல் நீதி மன்றங்களில் மற்றும் பல தளங்களில் தொடர்கிறது……………… தொடர்கிறது!!!!!!!!!!!!!!.

(நாமும் தொடர்வோம்)
References:

1. Summer for the Gods by Edward J. Larson.
2. Bones of Contention by Marvin L. Lubenow.
3. Darwinism and the Law: Can Non-Naturalistic Scientific Survive Constitutional Challenge by H Wayne House (see http://www-acs.ucsd.edu/~idea/house.rtf).
4. Cretinism or Evilution? No. 2 Edited by E.T. Babinski. See http://www.talkorigins.org/faqs/ce/2/part12.html
5. Timeline for Origins Class at http://jmlynch.dhs.org/classes/origins/timeline.php
6. Religion and Science: History, Method, Dialogue in “Dispelling Some Myths About The Split Between Theology and Science in the Nineteenth Century” an essay by Claude Welch.
7. See PBS Evolution‘s re-interpretation of this famous exchange.
8. William Jennings Bryan & The Scopes Trial by R.M. Cornelius at http://www.bryan.edu/historical/wjbryan_trial/ from Bryan College Historical Resources (a Christian college in Dayton Tennessee, home of the Scopes Trial).

முந்திய பதிவுகள்

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 2

29 ஜன

 

சென்ற பதிவில் இத்தொடர்பதிவை ஏன் எழுதுகிறோம் என்பதை மட்டும் பார்த்தோம்.

 

.இந்த பரிணாமம்/அறிவார்ந்த படைப்பு என்பதன் விவாதங்களை தமிழில் ஆவணப்படுத்தும் ஒரு ,சார்பற்ற முயற்சியாகவே இப்பதிவு எழுதப் படுகிறது. ஆகவே இத்தொடர் பதிவில் இக்கொள்கையாளர்களின் விளக்கங்களின் எளிமையான தமிழாக்கம் தருவது மட்டுமே நம் நோக்கம்.அறிவார்ந்த வடிவமைப்பு சரியா? இல்லையா? என்பதை இப்பதிவில் விவாதிக்கப் போவது இல்லை. இது ஏன் எனில் முதலில் தமிழில் முடிந்தவரை இக்கொள்கை சார்ந்த விவரங்களை ஆவணப்படுத்தி விட்டால் இரு கொள்கைகளையும் விவாதிப்பதை அறிவார்ந்த தமிழ் சான்றோர்  சமூகம் பார்த்துக் கொள்ளும். இதனை அடுத்த படியில் செய்யலாம் என நினைக்கிறேன்.  

இப்பதிவில் இன்னும் இதன் வரையறுப்பை அக்கொள்கையாளர்கள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை கேள்வி பதிலாக  வெளியிடுகிறோம். மொழி பெயர்ப்போடு ஆங்கில மூலமும் கொடுப்பது அவசியம் என்றே கருதுகிறோம். மொழி பெயர்ப்பை மேம்படுத்தும்  கருத்துகளை நன்றியோடு வரவேற்கிறோம்.
இப்பதிவில் அதன் தெளிவான‌ வரையறுப்பை பார்ப்போம். இந்த கேள்வி பதில் அக்கொள்கையாளர்களின் முக்கியமான தளத்தில் இருந்து எடுக்கபட்டது.
1.முதலில் நுண்ணறிவு [Intelligence] என்றால் என்ன? என்பதை அறிவோம்.
இது பல பரிமாணம் உள்ள சொல் ஆகும்.இதற்கு பல விளக்கங்கள் உண்டு.எளிமையாக இப்படி சொல்லலாம்.
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், தகவல் பரிமாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், கோர்வையாக சிந்தித்தல்,  கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் கூட குறிப்பிட்ட அளவு பெற்றுள்ளதாகவே கருதப் படுகிறது.  
2.அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை [Intelligent Design] என்றால் என்ன?
இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பை தேடும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு ஆகும்.இதில் பலதுறை அறிவியலாளர்கள், தத்துவ மேதைகள் ஆகியோர் பங்களிப்பு ஆற்றுகின்றனர்.
இக்கொள்கையின்படி “பிரபஞ்சம், உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  நுண்ணறிவு சார்ந்த காரணி மூலமே சரியாக‌[நன்றாக] விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
ஒவ்வொரு இயற்கையின் நிகழ்வையும் அந்த காரணிகள் ஊடாக ஆய்வு செய்து அவை வடிவமைக்கப்பட்டே இருக்கின்றனவா இல்லை இந்நிகழ்வுகள் தானாக‌ நடைபெற வாய்ப்பு உண்டா அல்லது இரண்டும் சேர்ந்தா  என்பதின் மீதே ஆய்வு நடைபெறுகிறது. இந்த காரணிகளில் சில நுண்ணறிவு உரியவையாக உள்ளன் என்பதுதான் இக்கொள்கையின் மிக முக்கியமான‌ அம்சமாகும். இக்காரணிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துவதாக் இக்கொள்கையாக்கம் முன்வைக்கிறது.எடுத்துக்காட்டாக உயிரினங்களின் உடல் செல்களில் உள்ள டி என் ஏ மூலக்கூறுகளில் உள்ள தகவல்கள்,பிரபஞ்சத்தில் (இபோதைய கருத்தின்படி) பூமியில் மட்டும் உயிர் வாழும் சூழ்நிலை ஏற்படும் விதமான் அமைப்பு,530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த வளர்ச்சி பெற்ற கேம்பிரியன் படிமங்கள் ….போன்றவற்றை அறிவார்ந்த மூலக் காரணி என்பதற்கு சான்றாக முன் வைக்கின்றனர்.
What is intelligent design?

Intelligent design refers to a scientific research program as well as a community of scientists, philosophers and other scholars who seek evidence of design in nature. The theory of intelligent design holds that certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not an undirected process such as natural selection. Through the study and analysis of a system’s components, a design theorist is able to determine whether various natural structures are the product of chance, natural law, intelligent design, or some combination thereof. Such research is conducted by observing the types of information produced when intelligent agents act. Scientists then seek to find objects which have those same types of informational properties which we commonly know come from intelligence. Intelligent design has applied these scientific methods to detect design in irreducibly complex biological structures, the complex and specified information content in DNA, the life-sustaining physical architecture of the universe, and the geologically rapid origin of biological diversity in the fossil record during the Cambrian explosion approximately 530 million years ago.

3. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையும் (மதங்களின்) இறை படைப்பியல் கொள்கையும் ஒன்றா?
இல்லை!!!!!!!!!!!!!!!.இரண்டும் ஒன்றல்ல.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கான வடிவமைப்பு உள்ளதா இல்லை இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றம் மேலான விள்க்கம் மட்டும் போதுமா என்பதை  தேடும், வரையறுக்கும் ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு முயற்சி மட்டுமே!!!. ஆனால் இறை படைப்புக் கொள்கை என்பது மத புத்தக்த்தில் உள்ள படைப்பு தகவல்களை இப்போதைய அறிவியலோடு பொருத்துவதே ஆகும்.
அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை இயற்கையின் ஒழுங்கான வடிவங்களை சான்றாக முன் வைத்து அதில் இருந்து என்ன அனுமானம் கொள்ள முடியும் என்பதையே வலியுறுத்துகிறது. இக்கொள்கையின் படி  ஒழுங்கான வடிவமைப்பின் அறிவார்ந்த காரணியாக வரையறுக்கப்படுவது இயற்கைக்கு மேம்பட்டதுதான் [Supernatural] என்று கண்டறிய முடியுமா என வலியுறுத்துவது இல்லை!!!!!!!!!!!!!!!!.
பாரபட்சமற்ற உண்மையான ஆய்வாளர்கள் இவ்விரு கொள்கைகளின் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்வது இயல்பு.(I like this!!!!!!!!!!!!!)
அறிவார்ந்த கொள்கையை முறியடிக்க பல பரிணாம ஆய்வாளர்கள் இதுவும் இறை படைப்பியல் கொள்கை ஒன்றே என்று தவறாக கூறுவது வழக்கம்.இதன் மூலம் இக்கொள்கையின் மேன்மைகளை, உண்மைகளை  விவாதிக்காமல் ஒதுக்கி விடலாம் என்பதே இதன் நோக்கமாகும்.ஆகவே இயற்கையின் நிகழ்வுகளில் வடிவமைப்பு உள்ளதா என்ற தேடலை மட்டுமே இக்கொள்கை முன் வைக்கிறது,அதன் சான்றுகளின் மேல் மட்டுமே வாதங்களை வைக்கிறது.

Is intelligent design the same as creationism?

 No. The theory of intelligent design is simply an effort to empirically detect whether the “apparent design” in nature acknowledged by virtually all biologists is genuine design (the product of an intelligent cause) or is simply the product of an undirected process such as natural selection acting on random variations. Creationism typically starts with a religious text and tries to see how the findings of science can be reconciled to it. Intelligent design starts with the empirical evidence of nature and seeks to ascertain what inferences can be drawn from that evidence. Unlike creationism, the scientific theory of intelligent design does not claim that modern biology can identify whether the intelligent cause detected through science is supernatural.

Honest critics of intelligent design acknowledge the difference between intelligent design and creationism. University of Wisconsin historian of science Ronald Numbers is critical of intelligent design, yet according to the Associated Press, he “agrees the creationist label is inaccurate when it comes to the ID [intelligent design] movement.” Why, then, do some Darwinists keep trying to conflate intelligent design with creationism? According to Dr. Numbers, it is because they think such claims are “the easiest way to discredit intelligent design.” In other words, the charge that intelligent design is “creationism” is a rhetorical strategy on the part of Darwinists who wish to delegitimize design theory without actually addressing the merits of its case.
4. அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை ஒரு அறிவியல் கொள்கையா?
ஆம்!!!!!!!!!!!!.பிற அறிவியல் கொள்கைகள் கோட்பாடுகள் போல் இயற்கை மீதான  கணிப்புகள் + கோட்பாடு உருவாக்கம் + ஆய்வு மூலம் சோதித்தல்+கோட்பாடு வரையறுப்பு முடிவாக்கம் என்ற நான்கு நிலைகளையும் உள்ளடக்கியது.
“அறிவார்ந்த காரணிகள் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகின்றன” என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு இயற்கையின் செயலும்,படைப்பும இவ்வியல்பை கொண்டிருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் இச்சிக்கலான வடிவமைப்பை உறுதி செய்ய முயல்கின்றனர்.இதில் முக்கியமான் ஆய்வுக் கரு எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] என்பதாகும். இவை கண்டறியப்ப்டும் போது இவை வடிவமைக்கப் பட்டு மட்டுமே இருக்க முடியும் என்றா கோட்பாட்டு முடிவாக்கத்திற்கு வருகின்றனர்.

நண்பர்களே இத்தொடரில் எந்த கருத்தையும் உருவாக்க விரும்பவில்லை.அனைவரும் இக்கொள்கை குறித்து பாரபட்சமற்ற தகவல்கள் தமிழில் அளிக்க‌ வேண்டும் என்பதே நம் ஆசை.கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகிறது என்றாலும் அது தகவல் பரிமாற்றமாக் மட்டும் இருந்தால் நலமாக இருக்கும் என ஒரு வேண்டுகோள்.அறிந்த தகவல்களை பகிருங்கள்.

Is intelligent design a scientific theory?

Yes. The scientific method is commonly described as a four-step process involving observations, hypothesis, experiments, and conclusion. Intelligent design begins with the observation that intelligent agents produce complex and specified information (CSI). Design theorists hypothesize that if a natural object was designed, it will contain high levels of CSI. Scientists then perform experimental tests upon natural objects to determine if they contain complex and specified information. One easily testable form of CSI is irreducible complexity, which can be discovered by experimentally reverse-engineering biological structures to see if they require all of their parts to function. When ID researchers find irreducible complexity in biology, they conclude that such structures were designed.
முந்திய பதிவு

 

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 1

18 ஜன

பரிணாமம். அறிந்த அனைவரையும் உலுக்கிப் போட்ட ஓர் அறிவியல் தேற்றம். ஆதரவாகவும் எதிராகவும் உலகை இருகூறாக பிரித்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு. தொடக்கம் முதல் இன்றுவரை மதவாதிகள் இதற்கு எதிராக சளைக்காமல் சமர் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் குறித்து அக்கரை இல்லை. அறிந்தாலும் அறியாவிட்டாலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறிவியலின் அணுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களின் மத வரம்புகளைக் கடந்து பேசுவதால் முனை மழுங்கியவை என்றாலும் கூட தங்களின் வேத வசனங்களை பரிணாமத்திற்கு எதிரான வாளாக தாங்கி நிற்கிறார்கள். ஆனால் மதங்களின் மழுங்கிய தன்மையை உணர்ந்து கொண்டவர்கள் பரிணாமத்தை எதிர்க்க வேதங்களும் மதப்பிடிப்பும் போதுமானதல்ல எனக் கண்டதால் அவர்கள் கண்டடைந்த ஆயுதம் தான் அறிவார்ந்த வடிவமைப்பு(Intelligent Design) எனும் கொள்கை. பரிணாமக் கொள்கைக்கு எதிரான இந்தக் கொள்கை பரிணமித்ததை விளக்குவது தான் இந்தத்தொடர். தமிழில் வெகுவான கவனம் பெறாத இதனை நண்பர் சார்வாகன் தொடராக எழுதுகிறார். இத்துறையின் அறிஞர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் விளக்கங்கள் விவாதங்களினூடாக விரியப்போகும் இத்தொடரை இனி சார்வாகன் மொழிதலிலேயே தொடர்வோம்.

************************************************************

மகாகவி பாரதிக்கு “கவிதை எமக்கு தொழில்” என்றது போல் நமக்கு “தேடல் ஒரு தொழில்” என்பதால் தேடுவதை உண்மையின் அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்தே தமிழ் சொந்தங்களுடன் பகிர்ந்து வருகிறோம். நம் தேடல: பெரும்பாலும் அறிவியலை எளிமைப்படுத்துவது, இயற்கை சார்ந்த வாழ்வு என்ற எல்லைகளுக்குல் இருந்தாலும் பிற விஷயங்களை பிறரிடம் இருந்தும் கற்று வருகிறோம்.

பரிணாம கொள்கை என்பதுதான் என்ன?
மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து இயற்கை தேர்வு[natural selection],சீரற்ற சிறு மாற்றங்கள்[mutations] ஆகியவற்றால் மாற்றம் அடைந்து தோன்றின‌.
பரிணாமம் இபோதைய அறிவியலின் உயிர் தோற்ற, பரவலாக‌ ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை என்ற அளவில் அதனை கற்று வருகிறோம். அது குறித்து சில பகிர்தலும் முயற்சித்தோம். பரிணாமத்திற்கும் பிற அறிவியல் கொள்கைகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவெனில்
“இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்”
மக்கள் எந்தக் காலத்தில் எதை புரிந்து கொண்டார்கள்? பல கொள்கைகள் இப்படித்தான் மக்கள் ஆட்டு மந்தை போல் தினசரி வாழ்வின் தேவைகளை சந்திப்பதிலேயே அவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது என்று கூறலாம் என்றாலும், பரிணாம கொள்கை பல மதவாதிகளிடம் இருந்து மிகுந்த எதிர்ப்பை பெற்ற கொள்கையாகும்.
எடுத்துக்காட்டாக இபோதைய பிரபஞ்ச தோற்ற கொள்கையான பெரு விரிவாக்க கொளகை கூட பரிணாமம் போன்றதே.அதாவது
“ஓரணுவில் இருந்து விரிவடைந்து அனைத்து பிரபஞ்சமும் தோன்றியது.” (Big Bang Theory)
“ஓர் செல் உயிர்களில் இருந்து மாற்றம் அடைந்து அனைத்து உயிர்களும் தோன்றியது”. (Evolution theory).
அனைத்து  மதவாதிகளும் பெரு விரிவாக்க கொள்கையை எதிர்ப்பது இல்லை.இது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.வேண்டுமெனில் விளக்குவோம்!.
மதங்கள் கூறும் படைப்புக் கொள்கையையே பரிணாம கொள்கை முன் உயிர்களின் தோற்றமாக ஏற்கப்பட்டு வந்தது. அதனை பரிணாமத்தின் மாற்றாக மதவாதிகள் வைப்பது உண்டும்
1.இளைய பூமி கொள்கை [Young earth creationism]
2.பழைய பூமி கொள்கை [Old earth creationism]
இவற்றின் படி மத புத்தகங்கள் கூறும் படைப்பு செயல்களை இப்போதைய அறிவியலின் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளோடு ஒட்டியோ, வெட்டியோ விளக்குவதாகும். இவற்றில் பல சிக்கல்கள் இருப்பதால் பரிணாம்த்திற்கு மாற்று ஒன்று இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அது அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்று அழைக்கப்படுகிறது.
அதனை என்ப்படி வரையறுப்பது?
பிரபஞ்சம்,உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  அறிவு சார்ந்த காரணி மூலமே நன்றாக விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
“certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not a possibly undirected process such as natural selection.”
இது குறித்த பல தகவல்களை இத்தொடர் பதிவில் பார்ப்போம்.

பின்லேடன் கொல்லப்பட்டதை முன்வைத்து சில புரிதல்கள்

2 மே

சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்கா  வை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல்  நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்…

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

**********************************************

அல் கைய்தாவுக்கும் அமெரிக்காவிற்கும் மதத்திற்கும் இடையிலான தொடர்புகளை புரிந்து கொள்ளாதவரை பின் லாடனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது. அப்படியான முழுமையான புரிதலை விளக்கமாகவும் தெளிவாகம் தருகிறது இந்தக் கட்டுரை. அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கப்படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார் ஒபாமா அறிவிப்பு

அல் கைய்தா என்ற அமைப்பே இல்லை எல்லாம் அமெரிக்காவின் வேலைதான் என்று கூறுகிறது இந்த ஆவணப்படம்

பகுதி ஒன்று பகுதி இரண்டு


எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

7 பிப்

“ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அடுப்படிக்கு போங்கள்!”

துனிசியா எழுச்சியில் கலந்து கொண்ட பெண் பதிவர் Destin கு நேர்ந்த அனுபவம்.
(அவரது வலைப்பூ முகவரி: http://massir.blogtraffic.com)

துனிசியா ஆர்ப்பாட்டங்களில் அரச கைக்கூலிகளும் கலந்து கொண்டு அவ்வாறான கருத்துகளைப் பரப்பினார்கள். மேற்கத்திய நாகரீகத்தைக் கொண்ட துனிசிய மக்கள் அரபுலகில் மதச்சார்பின்மைக்கு பேர் போனவர்கள். கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் குடும்பத்திற்குள்ளேயே அடக்கமாக இருக்க வேண்டியிருந்தது. அப்படியான சமூகத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுப்பது கவலை தரும் அம்சமாகும். சர்வாதிகாரி பென் அலி ஆட்சியை விட்டு ஓடும் காலத்தில் இது போன்ற வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டன. “பென் அலி இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை எதிர்த்து நின்று மக்களை பாதுகாத்தார். தற்போது அந்த பாதுகாப்பு அரண் இல்லாத நிலையில் இஸ்லாமியவாதிகள் மக்களை அடக்கி ஆளப் போகிறார்கள்.” இது போன்ற பல கதைகளை கேட்பவர்கள் உண்மை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அதே போன்ற வதந்திகள் எகிப்தில் பரப்பப்படுகின்றன. எகிப்தில் “முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி” பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருப்பதால், எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின்றன.

முதலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறித்து சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். காலனித்துவ காலத்தில் மேற்குலகிற்கு எதிராக தோன்றிய அரசியல் இயக்கம் தான் “முஸ்லிம் சகோதரத்துவம்”. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்காவை பிரிட்டனும், பிரான்சும் காலனியாக்கின. மு.ச.கட்சியானது முஸ்லிம்கள் இழந்த இஸ்லாமிய ராஜ்யத்திற்காக போராடுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. இது ஒரு வகை தேசியவாதம். மு.ச. கட்சியின் சித்தாந்தம் ஐரோப்பாவின் பாசிசக் கொள்கைகளுக்கு நெருக்கமானது. நாசரின் சோஷலிச ஜெனரல்கள் திடீர் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியமை, மு.ச.கட்சிக்கு நேரிட்ட மிகப்பெரும் பின்னடைவு. பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டு, தலைவரும் கொல்லப்பட்டதால், கட்சி பலவீனப்பட்டது. அன்றிலிருந்து கட்சி ஜனநாயக வழிமுறைகளின் கீழ் செயற்பட முடிவெடுத்தது. அதிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிறிய குழு தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுத்தது. பத்து வருடங்களுக்கு முன்னர், லுக்சொர் நகரில் சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த தீவிரவாதக் குழுவின் வெளிப்பாடாகும்.

நாசரின் காலத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுக்க முடியாமைக்கு சோஷலிசப் பொருளாதாரமும் ஒரு காரணம். நிறுவனங்கள் யாவும் தேசியமயப் படுத்தப்பட்டிருந்ததால், சுதந்திரமான முதலீட்டுக்கு இடமிருக்கவில்லை. நாசருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்த சதாத் சோவியத் யூனியனுடனான உறவை முறித்துக் கொண்டு, அமெரிக்கா பக்கம் சாய்ந்தார். இஸ்ரேலுடன் நட்புறவு ஒப்பந்தம் போட்டார். இதனால் இராணுவத்திற்குள்ளேயே அதிருப்தி நிலவியது. கனிஷ்ட தரத்திலான இராணுவ அதிகாரிகள் பலர் முஸ்லிம் சகோதரத்துவ அனுதாபிகள். ஒரு இராணுவ அணிவகுப்பில் சதாத் கொலை செய்யப்பட, சிம்மாசனம் முபாரக் வசம் சென்றது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முபாரக் காலத்தில் நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் முனைப்புடன் செயற்படுத்தப்பட்டன. நாடு ஐ.எம்.எப். ஆலோசனைப்படி ஆளப்பட்டது. முபாரக் காலத்தில் எகிப்து முற்றுமுழுதான முதலாளித்துவ நாடாகியது.

முபாரக் கால பொருளாதார சீர்திருத்தங்கள் பல எகிப்தியர்களுக்கு உவப்பானதாக இருந்துள்ளது. முபாரக் காலத்தில், கீழ் மத்தியதர, அல்லது உழைக்கும் வர்க்க எகிப்தியர்கள் கணிசமான அளவில் வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றனர். இதே காலகட்டத்தில் இலங்கையிலும் அது போன்ற சமூக மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வளைகுடா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா, கனடா என்று எங்கெல்லாம் மூலதனம் வரவேற்கின்றதோ, அங்கெல்லாம் எகிப்தியர்கள் சென்று பணம் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். புலம்பெயர்ந்த எகிப்தியர்கள் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். முதலில் வயிற்றுக்காக போராட்டம். அது பூர்த்தி செய்யப்பட்டு விட்டால், இனவுரிமைப் போராட்டம். சாமானியர்களின் பிழைப்புவாத அரசியலை, முஸ்லிம் சகோதரத்துவம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. புலம்பெயர்ந்த மக்களின் நிதியில், எகிப்தில் இஸ்லாமிய வங்கிகள், இஸ்லாமிய பாடசாலைகள், இஸ்லாமிய மருத்துவமனை எல்லாம் தோன்றின. முதலாளித்துவ பொருளாதாரத்தில் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம் சகோதரத்துவம் அத்தகைய முதலீடுகள் மூலம் ஆதரவை பெருக்கிக் கொண்டது.

சிறு வியாபாரத்தில் ஈடுபடுபவர் கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுவதால், முஸ்லிம் சகோதரத்துவத்தின் முதலாளித்துவ அவதாரம் அமெரிக்காவுக்கோ, அன்றில் முபாரக்கிற்கோ ஆட்சேபிக்க வேண்டிய ஒன்றாக தெரியவில்லை. அதே நேரம், அவர்களின் அரசியல் பிரவேசம் மட்டும் தடுக்கப்பட்டது. முபாரக் தனது அதிகாரத்தை எவருடனும் பங்குபோட விரும்பாமை ஒரு காரணம். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இயல்பான இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு அரசியல் இன்னொரு காரணம். சில வாரங்களுக்கு முன்னர், முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழும் வரையில், மு.ச.கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் அரச படைகளால் அடக்கப் பட்டனர். இன்று வரை சுதந்திரமான பொதுத்தேர்தல் நடைபெறாததால், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எவ்வளவு பேர் வாக்களிப்பார்கள் என்று அனுமானிப்பது கடினம். குறைந்த பட்சம் இருபது வீத மக்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று கருதப்படுகின்றது. பிற எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டும் சக்தியற்று இருப்பதாலும், பலவீனப்பட்டிருப்பதாலும் முஸ்லிம் சகோதரத்துவம் பெரிய கட்சி போலத் தோன்றுகிறது.

முபாரக்கின் அரசு மொத்த அரபுலகிலும் கொடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்தியது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியையே மக்கள் எதிர்க்கத் துணிந்து விட்டனர் எனில், முபாரக் எத்தனை தூரம் பலவீனமடைந்து விட்டார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எகிப்தில் ஆட்சிமாற்றம் என்பது அமெரிக்காவுக்கு தலையிடி கொடுக்கும் விஷயம். எகிப்து இஸ்ரேலுடன் பொதுவான எல்லையைக் கொண்டுள்ள, இஸ்ரேலுடன் இரண்டு யுத்தங்களில் ஈடுபட்ட, அரபு மக்கட்தொகை அதிகமாக கொண்ட நாடாகும். அத்தகைய நாடு இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதால், அமெரிக்க அரசு எகிப்துக்கு தாராளமாக இராணுவ தளபாடங்களை வழங்கி வந்தது. எகிப்து, இஸ்ரேலுக்கு அடுத்ததாக அதிகளவு அமெரிக்க இராணுவ உதவி பெரும் நாடாகும். முதலில் கடனுதவி, பின்னர் அந்தக் கடனைக் கொண்டு அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும். இதனால் வறிய நாடான எகிப்து அமெரிக்காவின் பெரிய இராணுவ சந்தையாக இருந்து வந்துள்ளது.

எகிப்தின் கேந்திர முக்கியத்துவம் கருதி, அங்கு நடக்கும் மக்கள் பேரெழுச்சிக்கு மேற்குலகம் ஆதரவு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. எகிப்தில் புரட்சி ஏற்பட்டு, அங்கே ஒரு மேற்குலக விரோத அரசு வருவதற்கிடையில், காய் நகர்த்த விரைகின்றன. அதற்காக எந்தப் பிசாசுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளன. “எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும். அங்கே (மத அடிப்படைவாத) முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆட்சி வந்து விடும்.” என்று மேற்குலக ஊடகங்கள் ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. மறு பக்கம் அவர்களின் அரசுகள் அதே “இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன்” பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இது ஒருவகையில் பின்லாடனை ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா உதவுவதைப் போன்றது. ஏனெனில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிப் பிரமுகர் தான் பின்லாடனின் அரசியல் ஆலோசகர் சவாஹிரி.

இதையெல்லாம் கவனிப்பதற்கு தற்போது யாருக்கும் நேரமில்லை. மக்கள் போராட்டம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால், அது கம்யூனிசப் பேய், சோஷலிசப் பூதம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு வந்து விடும். ஏனெனில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் மட்டுமே மாற்று உண்டு. அதை விட, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆட்சியில் அமர்த்தினால், குறைந்த பட்சம் முதலாளித்துவத்தையாவது காப்பாற்றி விடலாம். துருக்கியில் உள்ளது போல, பாராளுமன்றத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி அரசாங்கம் நடத்தினால் என்ன குறைந்து விடும்? அப்படி திருப்திப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து விட்டார்கள்.

மக்கள் வீதிக்கு வந்து போராடிய ஆரம்ப நாட்களில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கவுமில்லை, ஆதரவு தெரிவிக்கவுமில்லை. ஆனால் மக்கள் சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பின்னர் அவர்களே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள். முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் அவர்களது பங்களிப்பு அவசியமாகப் பட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்து போராட்டத்தை நெறிப்படுத்திய இடதுசாரி அமைப்புகளைப் பற்றி வெளியுலகம் அறியவில்லை. இன்று வரை செய்தி ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன. பாரம்பரிய இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகள், ட்ராஸ்கிச புரட்சிகர சோஷலிஸ்டுகள், ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

இவர்களை விட “ஏப்ரல் 6 இயக்கம்” அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றது. இளைய தலைமுறை இடதுசாரி ஆர்வலர்களைக் கொண்ட அந்த அமைப்பு சுதந்திரமான தனிநபர்களைக் கொண்டது. அமைப்பிற்கு கட்சிக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் உணவுக் கலவரங்களும், தன்னெழுச்சியான தொழிலாளர் போராட்டங்களும் இடம்பெற்றன. ஏப்ரல் 6 அன்று,El-Mahalla El-Kubra என்ற நகரில் இடம்பெற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அரசு இயந்திரத்தை ஆட்டம் காண வைத்தது. தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டால் புரட்சியும் சாத்தியம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. இரு வருடங்களுக்கு முன்னர் அரசால் ஒடுக்கப்பட்டாலும், ஏப்ரல் 6 மூட்டிய புரட்சிக்கனல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் தோன்றிய ஆலைத் தொழிலாளர் போராட்டம், நாடளாவிய மக்கள் எழுச்சிக்கு வித்திடும் என்று நேற்று வரை யாரும் நினைக்கவில்லை.

நன்றி: தோழர், கலையரசன்