பலதாரமணம் ஏன்? 2

21 அக்

 

 

 

 

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 9

 

 

Dr.ஜாகீர் நாயக்தொடர்கிறார்

 மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

நாடு ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பஹ்ரைன் 1.03
ட்ஜிபௌடி 1.07
ஜோர்டான் 1.1
குவைத் 1.5
ஓமன்    1.31
கத்தார்  1.93
ஐக்கிய எமிரேட்                1.51

 

 

சவுதிஅரேபியா ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயது ஆண்/பெண்

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது 1.05
 15 வயதிற்குள் 1.04
15-64 வயது வரைs 1.33
65 வயதிற்கு மேல்r 1.13
மொத்த மக்கள் தொகையில் 1.2

 

எனவே சவுதிஅரேபியா மற்றுமுள்ள இஸ்லாமிய நாடுகளில்,  ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் என்ற முறையை நடைமுறைப்படுத்துவது அல்லது Dr.ஜாகீர் நாயக் கூறுவது போல ஆண்களை  ‘பொதுச் சொத்தாக மாறுவது’ சரியான தீர்வாக அமையும்.

Dr.ஜாகீர் நாயக்  தொடர்கிறார்,

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அடிப்படை நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.

மறுப்பு :

ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது. மகிழ்ச்சியான குடும்பங்கள் இணைந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவல் காரணமாக வெளியே சென்று திரும்பும் கணவன் புதிதாக ஒரு பெண்ணை தனது துணைவியாக வீட்டிற்கு அழைத்துவந்தால் முன்பே இருக்கும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும்?

முஹம்மது நபியின் அலுவல் போர்க்களத்திற்குச் செல்வது ஒவ்வொரு முறையும் அவர் விதவிதமான பல பெண்களுடனே தனது இல்லத்திற்கு திரும்பினார். அவரது மனைவியர்களால் எதுவும் பேசமுடியவில்லை. அவருடைய மனைவி(யர்கள்) அறிய பிற பெண்களுடன் கூடி மகிழ்ந்தார் அம்மனைவியர்களால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை காரணம் அல்லாஹ்வின் அனுமதி.

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.…

(குர்ஆன்2:223)

இக்குர்ஆன்வசனத்தின்படி, பெண்கள், ஆண்களைத் திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்களின் நிலை கீழ்தரமானதே.

ஒரு பெண்  பல ஆண்களுடன் ஏன் வாழ முடியாது?

ஹதீஸ்களில் பெண்களின் நிலை

புகாரி ஹதீஸ் : 5219           பாடம் : 108

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது :

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா நான் சஅத்தை விட ரோஷக்காரன் அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன்” என்று சொன்னார்கள்.

அதாவது ஒருவரது மனைவியுடன் அந்நிய ஆண்  அவ்வாறு இருப்பதாக கண்டவுடன் ரோஷம் கொண்டு அந்த ஆணை வெட்டலாம். அந்த பெண்ணை அந்நிய ஆணுடன் உறவு கொண்ட குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

                ஆனால் ஒரு பெண் தன் கணவன் விதவிதமாக மனைவிகளுடனும், அடிமைப் பெண்களுடனும் உறவு கொள்வதை அறிந்தும் அவள் ரோஷம் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் அது அல்லாஹ் ஆணுக்கு வழங்கிய உரிமை.

பெண்கள் ரோஷம் கொள்ளக் கூடாத ஒரு உயிரினம் !

 

நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இஸ்லாமியக் கொள்கைகளின் இழிநிலை  இதுதான்.

 

 ஆண் உயர்வானவன் என்பதே அல்லாஹ்வின் நிலை. அல்லாஹ்விற்கு, அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத்,  என்ற பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களது பரிந்துரைகள் அல்லாஹ்வால் ஏற்கப்படுகிறது என்றும்  குரைஷிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு, அல்லாஹ்வின் பதில்,

 

ஆண் மக்களை விட பெண் மக்களையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?

(குர்ஆன் 37:153)

ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)?

(குர்ஆன் 43:18)

உங்களுக்கு ஆண் குழந்தைகளும், அவனுக்குப்  பெண் குழந்தைகளுமா?

அவ்வாறாயின் அது அநீதியான பங்கீடாகும்.

(குர்ஆன் 53:21-22)

அல்லாஹ், தனக்கு மனைவிகளோ, குழந்தைகளோ இல்லையென்று கூறுவதற்காக பெண்களை எதற்காக இழிவாக கூறவேண்டும்? பெண்களின் மீது இவ்வளவு இழிவாக கருத்து கொண்ட அல்லாஹ், எதற்காக அவர்களைப் படைக்க வேண்டும்? மேற்கண்ட குர்ஆன் வசனங்களைக் காணும்போது, பெண் இனத்தை அல்லாஹ் படைக்கவில்லை என்றே என் மனதில் தோன்றுகிறது.

இது  உண்மையாகவே, அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனின் வார்த்தைகள் தானா?

 பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறும் சில உயர்ந்த கருத்துக்களையும் காண்போம்.

புகாரி ஹதீஸ் :5094

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

 

Tirmidhi

        Women are your prisoners, treat them well, if necessary beat them but not           severely…104

        (பெண்கள் உங்களின் கைதிகள் அவர்களை நல்ல முறையில்      நடத்துங்கள்,       தேவைப்பட்டால் அடியுங்கள் ஆனால் கடுமையாக              அல்ல)

        A woman must immediately respond to her husband’s demand for sex even       when she is in the midst of baking bread in an oven…109

(தன் கணவன் உறவுக்கு அழைத்தால் ஒரு பெண் கட்டாயமாக உடனே செல்ல வேண்டும். அவள் அடுப்பில் ரொட்டி சமைப்பது           பாதியிலிருந்தாலும் சரி.)

        If a woman wears perfume and attends a party, she is an adulteress…330

        (ஒரு பெண், வாசனை திரவியங்கள் பூசி விழாக்களில் கலந்து     கொண்டால், அவள் விபச்சாரியே)

        If a woman annoys her husband Allah does not accept her prayer; ditto for a     runaway slave and a leader disliked by his people…344, 347

        Virgins have the sweetest mouths, the most prolific wombs and are easily             satisfied with very little; so marry them…920

        If a religious person (that is, a Mullah, a Maulana or a Maulovi) asks your           daughter for marriage, you must accede to his request…919

 

Ibn Majah

        A black dog is a Satan; a black dog or a donkey or a woman cancels a                 prayer…                2.952

        (கருப்பு நாய் ஒரு சைத்தானாக இருக்கிறது. ஒரு கருப்பு நாய் அல்லது   ஒரு       கழுதை அல்லது ஒரு பெண்ணால் தொழுகையை தடுக்க   முடியும்)

        Beat your wives if they commit sinful acts…3.185

        (உங்கள் மனைவியர்களைஅடிக்கலாம் அவர்கள் பாவமானசெயலை        செய்திருந்தால்)

        A husband is worth worshipping by his wives…3.1852

        A woman is a property; a righteous woman is the best property…3.1855

        பெண் ஒரு உடைமைப் பொருளாக இருக்கிறாள். நல்ல பெண்     மிகச்சிறந்த         உடைமையாவாள்.

        If a woman contracts her own marriage, she is an adulteress…3.1882

        தனது திருமண ஒப்பந்தத்தை ஒரு பெண் தானே முடிவுசெய்தால், அவள்               விபச்சாரியே

(முஹம்மது நபியின் முதல் மனைவி கதீஜா, முஹம்மது நபியுடனான தனது திருமணத்தை தானே முடிவு செய்து கொண்டார் அப்படியானால் அவரும் ஒரு விபச்சாரியா?)

        You can marry a woman with just a pair of sandals…3.1888

        Muhammad’s final sermon is:—beat women…4.3074

        Raise three daughters, miss hell…5.3669      

        Raise two daughters, enter paradise…5.3670

        A naked woman tears down the curtain of Allah…5.3750

        Women are extremely harmful for men…5.3998

        ஆண்களுக்கு மிக ஆபத்தானவர்கள் பெண்களே

        Fear women…5.4000

        பெண்களை அஞ்சுங்கள்

        Women are stupid…5.4003

        பெண்கள் முட்டாள்களே

 

Imam Ghazali

“(Prophet said – if husband would be covered with pus from head to toe, and       wife would lick it, even then wife’s gratitude to husband wouldn’t be fulfilled”.

Your sexual intercourse with your wife is an act of charity. If you throw your      semen in lawful things (inside a vagina), you will get rewards. (p.1.236)

Muhammad said: A prison in the corner of a house is better than a        childless woman. (p.2.24)

மலடியை விட  வீட்டின் மூலையில் சிறையிருப்பது மேல்

An ugly woman with children is better than a beautiful woman without                 children (p.2.24)

அழகற்ற பெண் , அழகான மலடியைவிட மேலானவள்

If you see a woman in front, she is a devil. After seeing such a woman, hurry to your         wife for immediate sex because your wife also becomes a devil if you do  not do (immediate sex). (p.2.26)

Devil runs through your vein like the circulation of blood; so do not go to a woman            without the presence of her husband. Only Muhammad had been saved from the                machinations of devils.(p.2.26)

      A wife’s duty is to do household chores and to satisfy her husband’s sexual         appetite. (p.2.27)

வீட்டு வேலைகளைச் செய்வதும், கணவணின் உடல்ப்பசியைத் தீர்ப்பதுமே ஒரு மனைவியின் கடமை

The best woman is she who is beautiful and whose dower is little.(p.2.31)

Miserliness, pride and cowardice are bad for men but good for women.(p.2.31)

கஞ்சத்தனமும், தற்பெருமையும், கோழைத்தனமும் ஆண்குக்கு அழகல்ல             ஆனால் இவை  பெண்களுக்கு சிறந்ததாகும்

When marrying a girl, look for her beauty, as this will save you from      fornication (p.2.31)

அழகான பெண்களை திருணம் செய்வதால், அவள் உங்களை    கள்ளத்தொடர்பிலிருந்து பாதுகாப்பாள்

If it be known that a woman is barren, do not marry her marry lovely and            child bearing women.(p.2.32)

A good woman is one who is married early at her age, who gives birth to a child without delay and who demands a small dower.(p.2.32)

Choose a woman for your semen as a vein is like an arrow (p.2.32)

 

மேற்கண்ட விளக்கங்கள், கேள்விக்கான பதிலை தருகிறது. பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதே இஸ்லாமின் முடிவு. முஹம்மது நபி  ஏன் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அல் தபரி  யில் இருந்து ஹதீஸைக் காண்போம்:

 

… Layla bt. al-Khatim b. ‘Adi b. ‘Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, “I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me.” He replied, “I accept.” She went back to her people and said that the Messenger of God had married her. They said, “What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him.” She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139)

(லைலா பின்த காதிம் என்ற பெண்மணி நபியவர்களை சந்தித்து, அவர் கூறினார், …என் பெயர் லைலா பின்த காதிம். திருமணத்தின் மூலம் என்னை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் என்று கூறினாள். எனவே என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி சரி என்றார். தன்னுடைய ஆட்களிடம் திரும்பிச் சென்ற அப்பெண் நபியுடன் தனக்கு நடந்த திருமணத்தை பற்றி கூறினாள். அவர்கள் (அப்பெணின் ஆட்கள்) என்ன மோசமான காரியத்தை செய்திருக்கிறாய்! நீ ஒரு தன்மானம் கொண்டபெண், ஆனால் நபி ஒரு பெண்பித்தர். அவரிடம் தலாக் பெற்றிடு என்றனர். நபியிடம் திரும்பிச்சென்ற அப்பெண்,  தன்னை தலாக் செய்துவிட கோரினார், நபி அதற்கு உடன்பட்டார். )

 

மணப்பெண்ணின் பொறுப்புதாரியிடம் சம்மதம் பெறாமலே இத்திருமணம் நிகழ்ந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முஹம்மது நபி   அவர்களின் மீது சுமத்தப்படும் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஹதீஸ்களிலிருந்து கிடைக்கும் ஆதாரம்.

 

ஒரு பெண்களைக் கண்டு அலைபாய்ந்த முஹம்மது நபி அவர்களின்  நிலையைப் பற்றிய ஹதீஸ் இது.

 

Sahih Muslim Book 008, Number 3240:

Jabir reported that Allah’s Messenger (may peace be upon him) saw a woman, and so he came to his wife, Zainab, as she was tanning a leather and had sexual intercourse with her. He then went to his Companions and told them: The woman advances and retires in the shape of a devil, so when one of you sees a woman, he should come to his wife, for that will repel what he feels in his heart.

(ஒரு பெண்ணைக் கண்டு கிளர்ச்சியடைந்த நபி, விரைவாக தன் மனைவியிடம் வந்தார். தோல் விரிப்பை உலர்த்திக் கொண்டிருந்த மனைவி ஜைனப்புடன் கலவியில் ஈடுபடுகிறார். பிறகு தன் தோழர்களிடம் சென்று, ஒரு பெண்ணைக் கண்டு ஒரு உங்களது மனம் கிள்ச்சியடையும் போது, அவர் “மனதிலுள்ளதை” தணிக்க, அவர் தன் மனைவியிடம் விரைவாக வரவேண்டும் என்று கூறினார்)

 

பெண்களைக் கண்டு கிளர்ச்சியடைந்து மனைவிகளை  தேடி ஓடியதோடு நிற்கவில்லை. தன்னுடைய அற்பத் தேவைகளுக்காக அந்த பெண்களையே அணுகிய நிகழ்ச்சி இது.

 

புகாரி ஹதீஸ் 52551

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி  (ரலி) அவர்கள் கூறியதாவது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்து பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அப்பெண்(ணின் பெயர்) உமைம பின்த் நுஅமான பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அந்த பெண், “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் “உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்)அவரை நோக்கி “கண்ணியான (இறவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரி இருக்கிறாய்” என்று சொல்லி விட்டுஅங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் மேலும் அபூஉசைதே இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து , அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே தேவைக்கும் அதிகமான மனைவிகள் இருக்கும் பொழுது மீண்டும் ஏன் பெண்களைத் தேடி ஓடவேண்டும்? அழகிய பெண்களைக் கண்டால் வேலையைக் காட்ட வேண்டுமா? அந்த பெண் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறியதால் முஹம்மது நபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் “கதை” கந்தலாக போயிருக்கும். தெளிந்த மனநிலை கொண்ட மனிதனின் செயலா இது?

                 “ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?” என்ற அப்பெண்ணின் துடுக்குத்தனமான பதிலிலிருந்தும், அவளுடன் அவளைப் பராமரிக்கும் செவிலித் தாயும் உடனிருப்பதைக் கொண்டும் அவள் வயதை நாம் யூகிக்க முடியும். முஹம்மது நபியைப் பற்றி தெரிந்தும் வயது முதிர்ந்த பெண்ணால் இவ்வாறு தைரியமாக பேச முடியாது. அப்படியானால் அவள் வயது குறைந்த சிறுமியாகவே இருக்க முடியும்.  

                இன்றுவரை, மார்க அறிஞர்கள் ஆயிரம்  விளக்கங்கள், கூறினாலும் முஹம்மது நபி  அவர்களுடைய விஷயத்தில் எதுவும் எடுபடவில்லை. மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரண்படுவதால் புதிது புதிதாக பல கேள்விகளையே அவைகள் உருவாக்குகின்றன.

                ஷஃபியா, ரைஹானா போன்றவர்கள் தங்களது கணவர்களைக் கொலை செய்த முஹம்மது நபியுடன்  மிக மிழ்கச்சியாகவே தம்பத்திய வாழ்கை நடத்தினர் என்ற வாதமும், ஒரே இரவில் பல மனைவிகளிடமும் அடிமைப் பெண்களிடமும் தம்பத்திய உறவு கொண்டு தங்களிடமும் வரும் முஹம்மது நபியின் செயல்களை அவரது மற்ற மனைவியர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் மிக மகிழ்சசியுடன் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் வாதமும் அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லது சல்மான் ருஸ்டி கூறுவது சரியாக இருக்க வேண்டும்.

                வாழ்க்கைத் துணையில்லாததால் செய்யப்படும் மறுமணங்களைப் பற்றி நான் விவாதிக்கவில்லை என்பதை நினைவில் வைக்கவும். ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வதை முதிர்ச்சியடையாத வாதங்களால் நியாயப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்.

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

 

ஒரு பதில் to “பலதாரமணம் ஏன்? 2”

Trackbacks/Pingbacks

  1. முகம்மதின் குழந்தைத் திருமணம் « - ஒக்ரோபர் 29, 2011

    […] பலதாரமணம் ஏன்?2 இவைகளில் பகிருங்கள்:மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌TwitterFacebookLinkedInEmailPrintDiggRedditStumbleUponLike this:LikeBe the first to like this . […]

பின்னூட்டமொன்றை இடுக