கிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2

25 ஆக

இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள், 

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

(லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

(மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity)  ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மிகச் சாதாரண மனிதர்களே மரணத்தை மிகத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சதாம் ஹூஸைன் சிறிதும் அச்சமின்றி அமெரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவாறே தூக்குக் கையிற்றை நெருங்கியதை  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அனைத்தையும் அறிந்த கடவுள்  இப்படி பயந்து நடுங்கி புலம்பிக் கொண்டே மரணமடைவானா? மேலும், மரணமடைபவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று இஸ்லாம் கேட்கும் கேள்விகளில் எந்த தவறுமில்லை. இயேசு கடவுளாக இருக்க முடியாது  என்ற முஸ்லீம்களின் வாதமும் சரியாகவே தோன்றுகிறது. 

ஆள்மாறாட்டம் செய்தால் மட்டுமே  ஈஸா நபியைக் காப்பாற்ற முடியுமென்ற நிலைமை  அல்லாஹ் இல்லையே? ஆள் மாறாட்டத்தின் விளைவுகளைப் பார்க்கையில், ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  செயல் மாபெரும் குழப்பமாக உள்ளது என்ற கிருஸ்துவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும்  மறுக்க முடியாது. இயேசு சர்வவல்லமையுடைய கடவுள் என்பதும், அல்லாஹ் என்ற சர்வ வல்லமையுடைய இறைவன் தனது தூதரை ஆள்மாறாட்டம் செய்து காப்பாற்றினான் என்ற இந்த இருவாதங்களுமே  முட்டாள்த்தனமானவைகள் என்பது தெளிவாகிறது.

  சிலுவையில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை மட்டுமே, கிருத்துவமும்,  இஸ்லாமும் கூறும் செய்திகளிலிருந்து நாம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆள்மாறாட்டக் கதையை மேலும் சிறிது ஆய்வு செய்வோம். ஈஸா நபியின் உருவ அமைப்பிற்கு யூதாஸ் மாற்றப்பட்டான் என்ற பர்பனபாஸ் சுவிசேஷத்தின்  கருத்தை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதாஸ் என்ன தவறு செய்தான்? முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்தான். அவனது துரோகச் செயலுக்கு  தண்டனையாகவே ஆள்மாறாட்டத்தில் அவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான்.

யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு, ஈஸா நபி மறைந்திருந்து “கொரில்லா” முறைத் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத புரட்சிப்படை தளபதி இல்லையே! ஈஸா நபி யூத மக்களுக்கும், யூத அதிகரிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரிடம் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவார்கள். தனது போதனைகளை எவ்வித ரகசியமுமின்றி வெளிப்படையாகவே செய்தார். அவர் தினமும் யூத கோவிலில், யூதமத குருமார்களுடனும், யூதமதச் சட்ட எழுத்தர்களுடனும், அங்கிருந்த மதவியாபாரிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். ஈஸா நபியின் அற்புதங்கள் மூலமாகவும் அவரை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். ஈஸா நபியை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது, “நான் தினமும் இந்த கோவிலில் இருந்தவாறே உங்களுக்கு போதனை செய்தேன் அப்பொழுது என்னைக் கைது செய்ய உங்களது கரங்களை நீங்கள் உயர்த்தவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு திருடனைக்கைது செய்வதைப் போல இந்த நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறீர்கள் “ என்றார்.

எனவே யூதாஸ்  முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு,  முத்தம் செய்து காட்டிக் கொடுத்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வாதத்தற்காக அவன் ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்ததாகவும் அவனது துரோகத்திற்குப் பலனாக அவன் ஆள்மாறாட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதாவது, ஆள்மாறாட்டத்திற்குப் பிறகு, மறு வினாடியிலிருந்து யூதாஸ் என்றொருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அதாவது யூதாஸின் உருவமும், குரலும் ஈஸா நபியைப்போல மாற்றப்பட்ட பிறகு யூதாஸின் உருவ அமைப்பில் ஒருவரும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு யூதாஸ் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டதாக பல ஆதாரங்கள் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

சிலுவையில் மரணமடைந்த இயேசு நாதரின் உடல் அதாவது, குர்ஆனின் மொழியில் சொல்வதென்றால் ஈஸா நபியைப்போன்ற தோற்றமுடைய(யூதாஸ் என்ற)வரின் உடல் என்ன ஆனது? அது எப்படி எழுந்து சென்றது?

இயேசு நாதர் கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்ததாகவும் சீடர்களுக்கு காட்சி தந்ததாகவும் கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தது யூதஸா? யூதாஸிற்கு அத்தகைய அற்புத சக்தி வழங்கப்பட்டிருந்ததா?

 இதைப் போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எந்த பதிலும் இல்லை…!

பர்னபாஸ் சுவிசேஷம் இதற்கு பதிலைச் சொல்லுகிறது. சிலுவையில் மரணமடைந்த ஈஸா நபியைப் போன்ற தோற்றமுடைய( யூதாஸ் என்ற)வரின் அடக்கம் செய்யப்பட்ட உடலை, கடவுளுக்கு அதாவது அல்லாஹ்விற்குப் பயப்படாத ஈஸா நபியின் சீடர்களில் சிலர்,   கல்லறையிலிருந்து திருடி, மறைத்து, இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறி அனைவரையும் குழப்பத்திலாழ்த்தி நம்பவைத்ததாகக் குற்றம்சாட்டுகிறது.

Those disciples who did not fear God went by night [and] stole the body of Judas and hid it, spreading a report that Jesus was risen again; whence great confusion arose.

 (Gospel of Barnabas 218:1)

ஈஸா நபியை ஏற்றுக் கொண்ட மக்களை, “ஈஸா நபி மரணத்திற்குப் பின்னும் உயிர்த்தெழுந்தார்” என்ற பொய்ச் செய்தியின் மூலம் திசை திருப்பி அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறி, கிருஸ்துவம் என்ற பொய்யான மதத்தை உருவாக்கிய ஈஸா நபியின் சீடர்களைப் பற்றி அல்லாஹ்விற்கு எதுவுமே தெரியவில்லை. பிணத்தை மறைத்து, பொய்யை இட்டுக் கட்டி பெரும் பாவத்தை நிகழ்த்திய, ஈஸா நபியின் சீடர்களைக் கண்ணியமானவர்கள் வெற்றியாளர்கள் என்று குர்ஆனில் கூறுகிறான். பர்னபாஸ் சுவிசேஷத்தை எழுதியவருக்குத் தெரிந்த செய்தி கூட அல்லாஹ்விற்குத் தெரியவில்லை. குர்ஆன் ஒரு முழுமையற்ற, தெளிவற்ற புத்தகம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குழப்பம் இத்துடன் நிறைவடையவில்லை. ஈஸா நபியைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்ட அந்த ஒருவர் யார்? அவர் ஏன் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கேள்விகளுக்கு, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எந்தவிதமான  விளக்கமும் இல்லை. ஆனால் குர்ஆன் விரிவுரைகளில்  விளக்கம் காணப்படுகிறது.

 துரோகத்திற்கு தண்டனையாக யூதாஸின் குரலும் உருவமும் ஈஸா நபியைப் போல மற்றப்பட்டது என்ற விளக்கங்களை நம் இதுவரை பார்த்தோம்.  இனி வேறு விதமான செய்திகளையும் வாதங்களையும் பார்ப்போம்.

குர் ஆனின்4 :157-ம் வசனத்திற்கு இப்ன் அப்பாஸ் கூறும் விரிவுரை

(And because of their saying: We slew the Messiah Jesus son of Mary, Allah’s messenger) Allah destroyed their man Tatianos. (They slew him not nor crucified, but it appeared so unto them) Allah made Tatianos look like Jesus and so they killed him instead of him; (and lo! those who disagree concerning it) concerning his killing (are in doubt thereof) in doubt about his killing; (they have no knowledge thereof save pursuit of a conjecture) not even conjecture; (they slew him not for certain) i.e. certainly they did not kill him.

(ஈஸா நபியை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. டேஸியானோஸ் என்பவர் ஈஸா நபியின் உருவத்திற்கு ஒப்பாக்கப்பட்டார். அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். )

தனது இதே கருத்தை இப்ன் அப்பாஸ் மற்றொரு விளக்கவுரையிலும் உறுதி செய்கிறார்.

(And they schemed) they, i.e. the Jews, planned to kill Jesus, (and Allah schemed (against them)) Allah wished to kill their man Tatianos: (and Allah is the best of schemers) the strongest of those who have a will; it is also said this means: the best of Makers. [Sura 3 aya 54 ; ibn Abbas]

கிருஸ்த்துவம் உருவானதைப்பற்றி கூறும் 61:14 ம் குர்ஆன் வசனத்திற்கு இப்ன் கதீர் கூறும் விரிவுரை

Imam Abu Ja`far bin Jarir Al-Tabari reported that Ibn `Abbas said, “When Allah decided to raise `Isa to heaven, `Isa went to his companions while drops of water were dripping from his head. At that time, there were twelve men at the house. `Isa said to them, `Some of you will disbelieve in me twelve times after having believed in me.’ He then asked, `Who among you volunteers that he be made to resemble me and be killed instead of me; he will be with me in my place (in Paradise).’ One of the youngest men present volunteered, but `Isa commanded him to sit down. `Isa repeated his statement and the young man again stood up and volunteered, and `Isa again told him to sit down. `Isa repeated the same statement and the young man volunteered. This time, `Isa said, `Then it will be you.’ The appearance of `Isa was cast upon that young man, while `Isa, peace be on him, was raised to heaven through an opening in the roof of the house. The Jews came looking for `Isa and arrested the one that appeared as him, killing him by crucifixion. Some of them disbelieved in `Isa twelve times, after they had believed in him.

They divided into three groups. One group, Al-Ya`qubiyyah (the Jacobites), said, `Allah remained with us as much as He willed and then ascended to heaven.’ Another group, An-Nasturiyyah (the Nestorians), said, `Allah’s son remained with us as much as Allah willed and He then rasied him up to heaven.’ A third group said, `Allah’s servant and Messenger remained with us as much as Allah willed and then Allah raised him up to Him.’ The last group was the Muslim group. The two disbelieving groups collaborated against the Muslim group and annihilate it. Islam remained unjustly concealed until Allah sent Muhammad,..

(இமாம் அபு ஜாஃபர் இபின் ஜரீர் அல்-தபரி அறிவிப்பதாக இப்ன் அப்பாஸ் கூறுவது, ஈஸாவை சொர்க்கத்திற்கு உயர்த்த முடிவு செய்த பொழுது, ஈஸா தன் தலையிலிருந்து (வியர்வை) நீர் துளிகள் சொட்டிய நிலையில் தனது சீடர்களிடம் சென்றார். அவ்வேளையில், பன்னிரண்டு பேர் அந்த வீட்டிலிருந்தனர். ஈஸா அவர்களிடம் கூறினார், பன்னிரண்டு முறை என்மீது விசுவாசம் கொண்ட பின்னரும் உங்களில் சிலருக்கு என் மீது விசுவாசமின்றிப் போகும் என்றார். பிறகு அவர் கேட்டார், என் உருவ அமைப்பிற்கு ஒப்பாக்கப்பட்டு எனக்கு பதிலாக (சிலுவையில்) கொல்லப்பட்டு; (மறுமையில்) என்னுடன், என்னுடைய இடத்தில் சொர்க்கத்திலிருப்பதற்கும் உங்களில் தன்னையே அர்பணிப்பதற்கு யார் இருக்கிறார் ? என்று கேட்டார். அவர்களில் இளைஞர் ஒருவர் தன்னை அர்பணிக்க முன்வந்தார். ஆனால் ஈஸா அவரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா தனது கோரிக்கையை மறுபடியும் கூற அதே இளைஞர் எழுந்து நின்றார். ஈஸா மறுபடியும் அந்த இளைஞரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா  மறுபடியும் கூற, மறுபடியும் அதே இளைஞர் எழுந்து நின்றார். இம்முறை ஈஸா, “அப்படியானால் அது நீர்தான்” என்றார். அந்த இளைஞரின் உருவ அமைப்பு ஈஸாவைப் போல மாற்றப்பட்டது. அந்த வீட்டின் கூரையிலிருந்த திறப்பு வழியாக ஈஸா வானுக்கு உயர்த்தப்பட்டார். ஈஸாவைத் தேடி வந்த யூதர்கள் அவரைப் போன்ற உருவ அமைப்பிற்கு மாற்றப்பட்ட அந்த இளைஞரை சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு முறை ஈஸாவின் மீது விசுவாசம் கொண்ட பின்னரும் அவர்களில் சிலருக்கு  விசுவாசமின்றிப் போனது.

அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவான, அல்-யாக்கூபிய்யாவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ் எங்களுடனே இருக்கிறான் என்றனர். மற்றொரு குழுவான, அந்-நஸ்தூரிய்யவினர் கூறினர் அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் மகன் தங்களுடனே இருப்பதாகக் கூறினர். மூன்றம் பிரிவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் அல்லாஹ்விடம் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் சேவகரும், தூதரும் தங்களுடனே இருப்பதாக கூறினர். இறுதியான குழுவினர் முஸ்லீம்கள். நம்பிக்கையற்ற இரு குழுக்களும் முஸ்லீம் குழுவை அழிப்பதற்காகக்கு எதிராக ஒன்றினைந்தனர். அல்லாஹ் முஹம்மதுவை அனுப்பும் வரை இஸ்லாம் அநியாயமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்தது…)

இப்ன் கதீர் கூறும் இந்தக் காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

ஈஸா நபி தன் சீடர்களின் முன் நின்று கொண்டு கூறுகிறார், சொர்க்கத்திற்குவரும்படி எனக்கு அழைப்பு வந்திருக்கிறது, நான் அங்கு சென்று இன்பங்களில் திளைக்கப் போகிறேன். யூதர்கள் என்னைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே எனக்கு பதிலாக  அடிகளையும், உதைகளையும், சவுக்கடிகளையும், கொடுமைகளையும், அவமானங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கொடூரமான முறையில் சிலுவையில் மரணமடைய விரும்புபவர் உங்களில் யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பாரா? இதுதான் தெய்வீகத் தன்மையா?

வேறொருவர் ஒப்பாக்கப்பட்டாமல் ஈஸா நபியை சொர்க்கத்திற்கு உயர்த்த முடியாதா? ஈஸாவிற்குப் பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப்பட்டால் மட்டுமே, அல்லாஹ்வால் அவரை(ஈஸா) சொர்க்கத்திற்கு உயர்த்த முடியும் என்று கூறுவது  சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

இப்ன் கதீர் கூறும் இந்த முட்டாள்தனத்தை,  வாதத்திற்காக உண்மையென்று வைத்துக் கொள்வோம். சிலுவையில் கொல்லப்பட்ட ஒருவரைத் தவிர மீதம் உள்ள பதினொரு சீடர்களுக்கும், ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டதும், சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பதையும் மிக நன்றாக எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அபாண்டமான  பொய்ச் செய்திகளான இயேசு நாதரின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கூறி அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்காக அவரது சீடர்கள் உறவுகளையும், உடைமைகளையும் துறந்து பரதேசிகளாக சுற்றித் திரிந்தனர். பலர் கடுமையான அவமானங்களுக்கும்,  துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி கொடுமையான தண்டனைகளால் உயிரை விட்டனர் என்பது வரலாற்று செய்திகள்.

தெரிந்தே ஒரு பொய்யைத் திட்டமிட்டு பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

 சிலுவை மரணத்திற்குப்பின் ஈஸா/இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுவது பகுத்தறிவிற்கு  ஏற்புடையது அல்ல! இயேசு உயிர்த்தெழுந்த கதை பர்னபாஸ் சவிசேஷம் கூறுவதைப் போல உண்டாக்கப்பட்டிருக்கலாம். குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதை அர்த்தமற்றது. அது அல்லாஹ்வை கையாலாகதவனாக சித்தரிக்கிறது.

பர்னபாஸ் சுவிசேஷத்துடனும் குர்ஆன் முரண்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  இயேசு நாதர் உயிர்தெழுந்த கதையும், குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதையும் அர்த்தமற்றது. இப்படியொரு நம்பிக்கை ஏன் உருவானது?

நித்தியானந்த சாமியாரின் லீலைகள் வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. அப்பொழும் அவர் மீது நம்பிக்கை கொண்ட சிலர், தங்களது குரு நேர்மையானவர், கண்ணியம் நிறைந்தவர் என்று கூறி, குற்றம் சுமத்திய  லெனின் கருப்பனைக்  குற்றவாளி என வாதிட்டவர்களையும் நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. இதை ஆள் மாறட்டம் என்று உறுதிபடக் கூறும் அவர்களது ஆரவாளர்களையும், அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும்  நீங்கள்  இன்றும் பார்க்கலாம்.

இப்படியொரு (நஸ்தூரிய்யா – நெஸ்ட்ரோனிய) கிருஸ்துவர்களின் கூட்டம், முஹம்மது நபியின் காலத்தில் அன்று பாரசீகம், டமாஸ்கஸ் மற்றும் வட அரேபிய பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இவர்கள் ஈஸா/இயேசு மனித பண்புகளும் தெய்வீகத்தன்மையும் தனித்தனயே கொண்ட ஒரு மனிதரே என்றும் கடவுளால் மகனான தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவர் என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை கிபி 428-431-ளில் நெஸ்டோரஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள், கடவுளின் மகனைக் கொல்லவே முடியாது கடவுள் ஏதேனும் யூதரின் முகத்தை இயேசுவிற்கு ஒப்பாக மாற்றி அவனை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு சூழ்ச்சி செய்து தனது மகனைக் காப்பாற்றி விட்டார் என்று நம்பிவந்தனர். இந்தக்  கதை குர்ஆனையும் விட்டுவைக்கவில்லை.

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார்பொறுப்பு?

        குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே ! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்

முஹம்மது நபியின் கூற்றுப்படி,  ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட)  சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின்  போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவதுசம்பாதித்துஇருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்குமாற்றவில்லை.

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை.  தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.

        ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

 இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.

இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்.  யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?

 (குர்ஆன் 3:144)

முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

        ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்,  மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

 

தஜ்ஜால்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் குழப்பங்கள்

விதியா மதியா என்னதான் கூறுகிறது குர் ஆன்?

கிருஸ்துவத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 1

3 பதில்கள் to “கிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2”

  1. iniyavan செப்ரெம்பர் 1, 2012 இல் 9:55 முப #

    நண்பர் செங்கொடி,

    வெறும் தலைப்புக்கு பின்னூட்டமிடுவது ரொம்ப சிரமமுங்கோ!!

    இனியவன்…

    *************************

    நண்பர் இனியவன்,

    இணைய இணைப்பில் ஏதோ தடங்கல், அதனால் ஏற்பட்ட கோளாறு.

  2. iniyavan செப்ரெம்பர் 3, 2012 இல் 10:50 முப #

    சகோ.தஜ்ஜால்,

    குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் இப்ப உள்ளவர்களோ மீண்டும் குழப்பி குழப்பி குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் குட்டை தெளிவில்லாமல் இருக்கிறது.
    //ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
    (குர்ஆன் 4:158)//

    உண்மையிலேயே அல்லா வ‌ல்ல‌மை மிக்கோனாக‌ இருந்திருந்தால் தெளிந்த‌ ஞான‌முடைய‌வ‌னாக‌ இருந்திருந்தால், ஈசா ந‌பியை த‌ன்ன‌ள‌வில் உய‌ர்த்தும் போது அனைவ‌ரும் காணும்ப‌டிச் செய்திருக்க‌ வேண்டும். அந்த‌ அள‌வில் அவ‌னுக்கு வ‌ல்ல‌மை இல்லை என்ப‌து உறுதியாகிவிட்ட‌து.
    ந‌ன்றி!!!

    இனிய‌வ‌ன்….

    • Robin செப்ரெம்பர் 6, 2012 இல் 7:01 பிப #

      அல்லா செய்த ஒரே நல்ல விஷயம் இதுதான் 🙂

பின்னூட்டமொன்றை இடுக