தகாத விருப்பமும் வேதவெளிப்பாடும்.

20 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 13

 

 

(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ”அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,…                                                                                                              (குர்அன் 33:37)

கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.

சொந்த மகனைப் போலவே ஸைதை முஹம்மது நபி அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். வளர்பு மகனை தங்களது சொந்த மகன்களாகவே காண்பதும் அவர்களுக்கு அதற்குரிய எல்லா உரிமைகளையும் வழங்குவதும்  அன்றைய அரபியர்களின் வழக்கம்முஹம்மது நபி அவர்களும் அவ்வாறே ஸைது அவர்களை தன்னுடைய சொந்த மகனாகவே அறிவித்திருந்தார்

அடிமைத்தளையிலிருந்து தன் மகனை மீட்க வந்த ஸைத்தின் தந்தை ஹாரிஸாவிடம், ”ஸைத் இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்” என்று முஹம்மது நபி அவர்கள் அறிவித்தார்கள். முஹம்மது நபி அவர்களுக்கும் ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது  அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல் இஸாபா) அன்றிலிருந்து முஹம்மது நபி அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை (ஸைத் இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.

 

புகாரி ஹதீஸ்- 4782

இப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்” (அல்குர்ஆன் 33:5) வசனம் அருளப்படும் வரை இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதைல செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை ”முஹம்மதின் மகன் ஸைத்” என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்

அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் முஹம்மது நபி  அவர்களையே சார்ந்திருந்தார்கள். முஹம்மது நபி  அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி ‘உஸைமா’ என்பாரின் மகள் ஜைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத் திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத் ஆளானார்.  விவாகரத்திற்கு பின்னர்,  முஹம்மது நபி, ஜைனப் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

…பிறகு ஜைத் அவளிடமிருந்து (தலாக்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட பொழுது, அவளை உமக்கு நாம் திருமணம் செய்து வைத்தோம். முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாக உள்ளன.

(குர்அன்33:37)

ஜைனப் – ஜைத் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டிற்கு,  குர்ஆனின்    33:37 வசனத்திற்கு அல் தபரி, அல் குர்தூபி, இப்ன் ஸாத் தரும் விளக்கவுரைகள் இவ் விவாகரத்திற்கு வேறொரு தோற்றத்தை தருகிறது.

திருக்குர்ஆன் வசனம் 33:37 ற்கு அல் தபரி  தரும் விளக்கவுரை,

Narrated by Yunis  narrated by Ibn Wahab, narrated by Ibn Zaid who said, “The prophet -pbuh- had married Zaid son of Haritha to his cousin Zainab daughter of Jahsh. One day the prophet -pbuh- went seeking Zaid in his house, whose door had a curtain made of hair. The wind blew the curtain and the prophet saw Zainab in her room unclothed and he admired her in his heart. When Zainab realized that the prophet desired her SHE BEGAN TO HATE ZAID. English translation of al-Tabari’s Arabic Commentary on Sura 33:37

(ஒரு நாள் ஜைதை காண்பதற்காக (அவரது வீட்டிற்கு) சென்றார். அப்பொழுது அங்கு நுழைவாயில் ஒரு துணி திரையாக மூடியிருந்தது. காற்று திரையை விலக்கியது. வீட்டினுள் ஜைனப் (ஏறக்குறைய) உடையின்றி இருந்தார், அவரைப் (ஜைனப்) பற்றிய எண்ணம் நபியின் மனதில் நுழைந்தது. நபி அவரை (ஜைனப்) விரும்புவதை உணர்ந்த பொழுது அவர் (ஜைனப்) ஜைதை வெறுக்க துவங்கினார்.)

The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, “Where is Zayd?” He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd’s wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: “He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!” The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told “the Messenger of God is at the door.” She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: “Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!”

நபி ஜைத் பின் ஹாரிஸ்ன் வீட்டிற்கு வந்தார். (ஜைத் எப்பொழுதும் ஜைத் பின் முஹம்மது என்றே அழைக்கப்பட்டு வந்தார்) அங்கு அவரை காணாவில்லை என்ற காரணத்தால், ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நபியால் அவரை(ஜைத்) காண முடியவில்லை. அங்கிருந்த ஜைனப் நபியை காண எழுந்தார். நபி, அவரி(ஜைனப்)டமிருந்து திரும்பிக்கொண்டார் காரணம் அவர் (ஜைப்)  குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார். அவர் (ஜைனப்)  கூறினார், அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். அல்லாஹ்வின் தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். “அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறார்” என்றவாறு ஆடையை சரிசெய்ய விரைவாக(படுக்கையிலிருந்து) குதித்து (எழுந்து) அல்லாஹ்வின் தூதரின் வியப்பான எண்ணத்தில் கிளர்ச்சியை உண்டாக்கினார். ஆதலால் அங்கிருந்து அல்லாஹ்வை புகழ்ந்து, தொடர்ந்து முணுமுணுத்தபடி விலகி சென்றார். (Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!)

When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, “Why didn’t you ask him to come in?” He replied, “I asked him, but he refused.” “Did you hear him say anything?” he asked. She replied, “As he turned away, I heard him say: ‘Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!’”

ஜைத் வீட்டிற்கு வந்தவுடன், ஜைனப் அல்லாஹ்வின் தூதர் வீட்டிற்கு வந்த செய்தியை தெரிவிக்கிறார். ஜைத்கூறினார், “நீ ஏன் அவரை வீட்டிற்குள் அழைக்கவில்லை?”, “நான் கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என்று பதிலுரைத்தார் “அவர் ஏதாவது கூறினாரா?” அவர் “திரும்பிச் செல்லும் போது அவர் கூறியதைக்கேட்டேன்; அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என் இதயத்தை (மனதை) திருப்பிய காரணத்திற்காக அல்லாஹ்விற்கே புகழனைத்தும்” என்றார்.

So Zayd left, and having come to the Messenger of God, he said: “Messenger of God, I have heard that you came to my house. Why didn’t you go in, you who are as dear to me as my father and mother? Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her.” Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, “Keep your wife.” Zayd separated from her and left her, and she became free.

ஜைத் சென்று அல்லாஹ்வின் தூதரை சந்தித்து,  “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்தேதன், நீங்கள் ஏன் வீட்டிற்குள் செல்லவில்லை நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் அல்வா? அல்லாஹ்வின் தூதரே, ஒருவேளை ஜைனப், உங்கள் மனதில் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் அதனால் நான் அவளிடமிருந்து நான் பிரிந்து விடுகிறேன்.” அதன் பிறகு அவரை (ஜைனப்)  அடையும் சரியான வழியை ஜைத்தால் காணமுடியவில்லை. அவர்(ஜைத்)  அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவ்வாறாக கூறினார் ஆனால் மனைவியை அவரிடமே (ஜைத்)  வைத்துக் கொள்ள கூறினார். ஜைத்  அவரை (ஜைனப்)  விட்டு விலகினார்  (தலாக் கூறி) அவரை விடுவித்தார்.

While the Messenger of God was talking with ‘A’isha, a fainting overcame him When he was released from it, he smiled and said, “Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?” Then the Messenger of God recited: “And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, ‘Keep your wife to yourself.’”- And the entire passage.

அல்லாஹ்வின் தூதர், ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது சூழ்ந்திருந்த குழப்பத்திலிருந்து தெளிவடைந்து புன்னகைத்தவாறு, “ அல்லாஹ்,  அவளை (ஜைனப்)  எனக்கு திருமணம்  செய்து தரும் இந்த நல்ல செய்தியை அவரி(ஜைனப்பி) டம் கூறுபவர் யார்?” என்றார்

According to ‘A’isha, who said: “I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters – what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us.” (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours)

(ஆயிஷா அறிவிக்கிறார், என் மனஅமைதி குலைந்தது காரணம் நான் கேள்விப்பட்ட அவரது அழகைப்பற்றியும் மேலும் உயர்வான குணங்களைப்பற்றியுமே – அவரது (ஜைனப்)   திருமணத்திற்கு அல்லாஹ் (உதவி) செய்தவற்றின் மீது அவருக்கு (ஜைனப்)   தற்பெருமை இருந்தது.)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7420

அனஸ்(ரலி) அறிவித்தார்.

….ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘ உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.

திருக்குர்ஆன் வசனம் 33:37 அல் குர்தூபி தரும் விளக்கவுரை,

Here, also, are the comments of renowned Muslim commentator, al-Qurtubi, on surah 33:37, translated directly from the Arabic:

Muqatil narrated that the prophet married Zainab daughter of Jahsh to Zaid and she stayed with him for a while. Then one day the prophet –pbuh– came seeking Zaid but he saw Zainab standing; she was white skinned with a beautiful figure and one of the most perfect women in Quraish. So HE DESIRED HER and said, “Wondrous is Allah who changes the heart.” When Zaynab heard the prophet’s exaltation of her, she relayed it to Zaid who then understood (what he had to do). Zaid said to the prophet, “O prophet of Allah, allow me to divorce her, for she has become arrogant; seeing herself superior to me and she insults me with her tongue.”

(முகாதில் அறிவிப்பது, ஜைனப்பிற்கும் ஜைதிற்கும் திருமணம் செய்துவைத்தார் அவர்(ஜைனப்) அவருடன்(ஜைத்) இருந்தார். பிறகு ஒருநாள் நபி ஜைத்தை தேடி சென்றார் ஆனால் அங்கு ஜைனப் நின்று கொண்டிருந்தார். அவரின் வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண். ஆதனால் அவரை விரும்பினார் மேலும் மனதை மாற்றியது அல்லாஹ்வின் அற்புதம் என்றார். அவர் தன்னைப்பற்றி ஆச்சரியப்பட்டதை ஜைனப் உணர்ந்து ஜைத்திடம் கூறியபொழுது அவர் அதை உணர்ந்து கொண்டார். நபியிடம் ஜைத் கூறினார், “அல்லாஹ்வின் தூதரே அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும், அவள் பிடிவாதமாகவும், என்னை விட தன்னை உயர்வாக நினைக்கிறாள், மேலும் என்னை சொல்லால் அவமதிக்கிறாள்” என்றார்)

அல்லாஹ்வின் தூதர், “அல்லாவிற்கு அஞ்சி மனைவியை தடுத்து வைத்துக்கொள்” என்று கூறினார்.

…அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர் …

(குர்அன் 33:37)

என்ற வசனத்தின் பொருள், அதாவது  ஜைனப் மீதிருந்த விருப்பத்தை மனிதர்களுக்கு பயந்து மனதில் மறைத்து, ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ”தலாக் கூற வேண்டாம்” என்று வெறும் வாயளவில் கூறி விட்டு மனதுக்குள் ”அவர் தலாக் கூற வேண்டும்” அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்கள். இதைத்தான் இந்த வசனத்தில் (குர்அன் 33:37) அல்லாஹ் குறிப்பிடுகிறான் என கடுமையான குற்றச்சாட்டு முஹம்மது நபி அவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

முறை தவறிய தனது திருமணத்திற்காக, தன்னால் கைவிடப்பட்ட அந்த வளர்ப்பு மகனையே தூது அனுப்பினார்.

முஸ்லீம் ஹதீஸ் : பாகம் 8, எண் : 3330

அனஸ்   (ரலி) அவர்கள் கூறியதாவது.

ஸைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜைத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போது ஜைத் அங்கு சென்றார். அவர் கூறினார் நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன் அதனால் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல் வேறு திசையில் திரும்பிக் கொண்டு பேசினேன். நான் கூறினேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்”. இதற்கு பதிலாகஅவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ளும் வரை எதையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். இதைச் சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போதுதான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்…

ஜைனப், அல்லாஹ்வின் முடிவை அறிய வேண்டுமென்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி முஹமத் – ஜைனப் திருமணத்திற்கான அனுமதி வஹீயாக வெளிப்பட்டது.

முஹமத் ஜைனப் திருமணமும் அதன் பின்னணியும் மாற்று மதத்தினரின் கற்பனையல்ல. இதற்கு ஆதாரம்  சில குர்ஆன் விரிவுரை நூல்களில் காணப்படுகிறது. தங்களுக்கு பாதகமான தகவல்களை வழக்கம்போல அதற்கு சரியான ஆதார வரிசையில்லை என்று  மார்க்க அறிஞர்கள் மறுக்கின்றனர். நம்முடைய மார்க்க அறிஞர்கள் தர்கரீதியான வாதங்களால் மட்டுமே அவர்களுக்கு பதில் அளிக்கின்றனர் தகுந்த ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை.

இதற்குஇஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  மறுப்புகளும் வருமாறு:-

விளக்கம் : 1

முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து விடுகிறார்கள். ஆனால் ஸைனப்  முஹம்மது நபி  அவர்களை திருமணம் விரும்புகிறார்கள்.  அவரது குடும்பத்தினரின் விருப்பமும் அதுவே.  வேறுவழியில்லாததால்    பின் வரும் இறை வசனம் உடனே இறங்கியது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(குர்ஆன் 33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்  அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள்.

(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்  அவர்களை மணந்து கொள்ள ஸைனப்  விரும்பவில்லை என்பதும், முஹம்மது நபி  அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது.

மறுப்பு :

முஹம்மது நபி-ஸைனப் திருமணமே, ஸைனப் மற்றும் அவரது  குடும்பத்தினரின் விருப்பமும்  எனில், கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபிக்கு ஸைனபை மறுமணம் செய்து வைத்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! முஹம்மது நபி நான்கு திருமணங்களை முடிக்கும்வரையிலும்  காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜைத்-ஜைனப் தம்பதியினரிடையே சுமூக உறவின்றி பிரிந்தனர் என ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், விவாகரத்திற்குப் பின் ஜைனப்பை முஹம்மது நபி திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே! விவாகரத்திற்குப் பின்னர் ஜைனபின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நபியிடம் வழங்கப்படவில்லை.   ஸைனபின் பேரழகில் மயங்கி விட வில்லையெனில், ஸைனப்பை வேறு யாருக்காவது திருமணம் செய்துவைக்க இயலுமே. ஏனெனில் முஹம்மது நபி  வார்தைக்கு முற்றிலும்  கீழ்படிந்தவர்கள் பலர் இருந்தனர். அவருக்கு இது எளிதானதும் கூட.

“தலாக்” (விவாகரத்து) என்ற சொல் உச்சரிக்கப்படும் பொழுது அல்லாஹ்வின் அரியாசனமே (அர்ஷ்) நடுங்குகிறது என்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களிலேயே மிகவும் வெறுப்பிற்குரிய செயல் விவாகரத்து என்கிறது அபூதாவூத்.  குர்ஆன் 33:36 வசனத்தைக்கூறி திருமணம் செய்துவைத்த முஹம்மது நபி மேற்கண்ட குர்ஆன் 33:36 வசனத்தை மேற்கோள் காண்பித்து அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பிற்குரிய விவாகரத்தை ஏன் தடுக்கவில்லை?

விளக்கம் : 2

முஹம்மது நபி  அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்கள் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் முஹம்மது நபி  அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக முஹம்மது நபி அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் முஹம்மது நபி  அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

  முஹம்மது நபி அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது.

மறுப்பு :

ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின்னரும்,  ஜைத் முஹம்மது நபியிடம், ஜைத், முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

முஹம்மது நபி  அவர்கள் மீது, ஜைத் ஆத்திரப்பட வாய்ப்பில்லை ஏனெனில், ஜைத் அல்லாஹ்வின் தூதருக்காக தாமாகவே முன்வந்து ஜைனப்பை விட்டுக் கொடுத்தார். நாம் முன்பு ஹதீஸில் (முஸ்லீம்: பாகம் 87, எண் : 3330)  முஹம்மது நபிக்காக தூது செல்கிறார், முஹம்மது நபி, வியந்து பாராட்டிய பெண் என்று ஆச்சரியமடைகிறார்.

 

இமாம் குர்தூபி பட்டியலிடும் முஹம்மதுநபி க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளிலிருந்து

முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.    

 

முஹம்மது நபி  அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி  அவர்களும் சொல்லவில்லை. ஆனால் மனிதர்களுக்கு ஏளனத்திற்கு அஞ்சி வெளியே கூற இயலாத ஒரு செய்தி முஹம்மது நபியின் மனதில் மறைந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே! ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின் நடந்த சகிக்க முடியாத நிகழ்வுகள், முஹம்மது நபியின் மனதில் மறைத்திருந்ததை  வெளியாக்கி விட்டதே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி  அவர்களைத் திருமணம் செய்யும் ஸைனப்ன் வயது முப்பத்து ஆறு. முஹம்மது நபி  அவர்களின் வயது 56.  56 வது வயதில் நாடுவதை விட அதிகம் பெண்களை அதிகம் நாடக்கூடிய இளம் வயதில் வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்  அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை முஹம்மது நபி  அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு முஹம்மது நபி  அவர்களுக்கு வாய்த்திருந்தது.

முஹம்மது நபி  அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத முஹம்மது நபி அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?

மறுப்பு :

இப்ன் ஜரீர் அல் தபரி இஸ்லாமிய ஆராய்சியாளர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். குர்தூபியும் சிறந்த மார்க்க அறிஞராவர். இவர்கள்  தங்களுடைய ஆன்மீகத் தலைவர் முஹம்மது நபி  அவர்களின் மீது வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைக் கூற வேண்டியத் தேவை என்ன?

இந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஜைனப்பின் மீது முதலிலிருந்தே காதல் இருந்ததாக கூறவில்லை குறிப்பிட்ட ‘அந்த ஆடையற்ற’ சம்பவத்திற்கு பிறகே முஹம்மது நபி, தன்னை விரும்புவதை ஜைனப் அறிந்து கொண்டார் என்றே  குறிப்பிடுகின்றனர். ஸைனப்பின் பேரழகில் மயங்கி, சொக்கி விடவில்லையெனில்  இழிவான புதிய வரைமுறைகளை ஏற்படுத்தி, அவரை தனது படுக்கைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லையே!

 

விளக்கம்  :3

முஹம்மது நபி அவர்களின் 50வயது வரை அவர்களுக்கு கதீஜா  மனைவியாக இருந்தார்கள். கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபி அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே!

மறுப்பு :

முஹம்மது நபி, ஜைனபின் பேரழகில் மயங்கி விடவில்லையெனில் ஜைத் விவாகரத்து கூறிய, ஒரு சில நாட்களில், அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் எனக்கூறி ஜைனப்புடனான  திருமண ஆலோசனையை முதலில் துவக்கியது ஏன்?

முஹம்மது நபிக்கு, ஜைனப்பின் மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லையெனில், வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லயே?

ஜைனப்பை திருமணம் செய்தால், மருமகளையே அதாவது தன் (வளர்ப்பு) மகனின் மனைவியை தன்னுடைய படுக்கையில் வீழ்த்தியவர் என்று நாகரீமற்ற(?) பண்டைய அரபியர்கள் இழிவாக பேசுவார்களே என தயங்கினார். அவரது இந்த மனப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு அல்லாஹ்வால் பொறுமையாய்  இருக்க முடியவில்லை. உடனே ஜிப்ரீல் மூலம் வஹியை இறக்கி விட்டான்.

…முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; …

(குர்அன்33:37)

 

நபியின் மீது அல்லாஹ் அவருக்கு ஆகுமாக்கியவற்றில் (அவற்றை நிறைவேற்றுவதில்) எவ்வித குற்றமும் இல்லை…

(குர்அன்33:38)

“எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக” என்ற வார்த்தைகளின் நேரடிப் பொருள், முஹம்மது நபி, ஜைனப் மீது  கொண்டிருந்த (தகாத) விருப்பம், குற்றம் கூறும் வகையிலேயே இருந்திருக்கிறது என்பது தான். அதை சரி செய்யவே இத்தகைய புதிய சட்டம் இயற்றப்பட்டதாக  குர்ஆன் தரும் இந்த விளக்கத்தை எப்படி மறுக்க முடியும்?

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்”.. 

                (குர்ஆன்33:5)

அதாவது உங்களுடைய வளர்ப்பு மகன்களை ஒருநாளும் சொந்த மகன்களாக கருதக்கூடாது என்று புதிய சட்டத்தை இயற்றி, முஹம்மது நபி அவர்களுக்கும் ஜைனப்  அவர்களுக்கும் திருமணம் நடக்க வழிவகை செய்துவிட்டான் (திருக் குர்ஆன் அறக்கட்டளையின் மொழி பெயர்பின் 33 ம் அத்தியாயத்தின் Foot Note 5 & 6 காண்க) 

அல் பாக்கவி.com–ன் “பலதார மணம் புரிந்தது ஏன்?“என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான்.

குழந்தைகளைத் தத்தெடுக்கும் மனிதாபிமான செயல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் சமூகத்திலிருக்கும் மானக்கேடான அருவருக்கத்தக்க, ஊறிப்போன அறியாமைக் கால வழக்கமாகத் தெரிந்தது எனவே அதை அல்லாஹ் தடைசெய்ய விரும்பினானாம்.

அநாதைகளை குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது சொந்த குழந்தைகளாகக் கருதி அதற்குரிய சகல உரிமைகளையும் வழங்குவதுஅநாதைகளை ஆதரிக்கும் மனிதாபிமான செயலின் உச்சகட்டம். மனிதாபிமான மிகுந்த தத்தெடுக்கும் முறை ஏன் தடைசெய்ய வேண்டும்? அதொன்றும் அவ்வளவு கொடூரமான செயல் இல்லையே !      

                வாதத்திற்காக கூறினாலும், முஹம்மது நபியும் ஜைத்தும் அதிபயங்கர விரோதிகளாகவும் இருக்கவில்லை.  தத்தெடுக்கும் முறையைத் தடை செய்வதென்றால் அல்லாஹ்வினால் நேரடியாகவே கூறியிருக்க முடியும்.

                குழந்தைகளைத் தத்தெடுப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம் எனவே இந்த காடுமிராண்டித்தனத்தை தடைசெய்து எங்களைக் காப்பற்ற வேண்டும் என்று யாராவது அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் முறையிட்டார்களா?

அப்படி எதுவுமில்லை

நமக்குத் தெரிந்தவரையில் இப்படியொரு தடையின் தேவை ஏற்பட்டது முஹம்மது நபியின் அடங்காத இச்சைக்குக்கு மட்டுமே! அது அல்லாஹ்விடமிருந்து வேதவாக்கையும் வரவழைத்தது.

“முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை….”

                (குர் ஆன் 33.53)

இந்த வசனம் “ஆண்களில்” என குறிப்பிடுவதால் இது ஸைனப்ஐ திருமணம் செய்வதற்காக, ஸைத் அவர்களையே இலக்காக கொண்டுள்ளதை காணலாம்.

…‘‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் ” என்று (நபியவர்களிடம்) சொன்னேன் (புகாரி ஹதீஸ் -4788)  (முஸ்லீம் ஹதீஸிலும் இது இடம் பெற்றுள்ளது.)

வெவ்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிஷா கூறிய இந்த கருத்து மிகச்சரியானதே!

அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் நடைமுறையை  மீறி முஹம்மது நபி – ஜைனப்   இடையே நிகழ்ந்த திருமணம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது.  இத்திருமணத்திற்கு முன்பு வரை தன் வளர்புமகனாக கருதியவரை  இத்திருமணத்திற்கு தடையான உறவு என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் வஹி என்ற பெயரில் வளர்ப்பு மகன் என்ற உறவை தூக்கி எறிந்தார். மற்றவர்களும், இனி உலகம் உள்ளவரையிலும், தத்து எடுக்கக் கூடாது எனக்கூறி மனிதாபிமனமிக்க நடைமுறையை முற்றிலும் தடை செய்தார்.

இச்சம்பவத்தை காணும் பொழுது, வாலை இழந்த நரியின் கதை நினைவிற்குவருகிறது. ஒரு முறை விவசாயி ஒருவரின் வீட்டில் கோழியைத் திருடச் சென்ற நரி, தாக்குதலுக்கு உள்ளாகி வாலை இழந்தது. காட்டிற்கு திரும்பிய நரி, வால் இல்லாத காரணத்தால் தன் இனத்தார் ஏளனம் செய்வார்கள் என்று அஞ்சிய ஒரு தந்திரம் செய்தது. நம் இனத்திற்கே வால் மிகவும் அசிங்கமாக உள்ளது எனவே அனைவரும் வாலை வெட்டி எறிய வேண்டும் என்று கூறியதாம்.

 

ஜைனப்பின் பேரழகில் மயங்கவில்லையெனில், முறை தவறிய உறவை ஆதரித்தும் அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் மனிதாபிமானமுள்ள  தத்தெடுக்கும் நடைமுறையை தடைசெய்து அல்லாஹ்வின் வசனம் ஏன் இறங்கவேணடும்?  தத்தெடுக்கும்  முறையை தடை செய்வதைப் பற்றி முன்பே வேறு சந்தர்பங்களில் கூறியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி போயிருக்கும்.

நேர்மையையும், நியாயத்தையும், ஒழுக்கத்தையும், அன்பையும் மனிதாபிமானத்தையும் போதிக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் கொள்கைகளின் ஏதார்த்த நிலை இதுதான். நபி   அவர்களின் பலதார மணமும் அற்கான பின்னணியும், ஸைனப்  இடையே நிகழ்ந்த இத்திருமணம் முறை தவறியிருப்பதை உறுதி செய்கிறது

முஹம்மது நபிக்கு பெண்கள் விஷயத்தில் எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் சலுகை அறிவிப்பு

 

“நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய புதல்வியரையும் உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும் உம் தாய்மாமனின் புதல்வியரையும் உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (இப் பெண்களை மஹர் கொடுத்து மணமுடிப்பதை) உமக்கு நிச்சயமாக நாம் ஆகுமாக்கியுள்ளோம். இன்னும் மஹரின்றியே தன்னை நபிக்காக அர்பணித்துக்கொள்ளும் முஃமினான பெண்ணையும் நபியும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் (ஆகுமாக்கி வைத்துள்ளோம். இதுமற்ற) முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும். (மற்ற முஃமின்களாகிய) அவர்கள் மீது, அவர்களுடைய மனைவியரின் விஷயத்திலும் நாம் விதியாக்கியுள்ளதைத் திட்டமாக நாம் அறிவோம் (உமக்கு விலக்களித்ததெல்லாம்) உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான் – அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.”

(குர்ஆன் 33:50)

முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும்.”, “உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்”  விதவிதமான அனுமதிகளின் அவசியம் என்ன? பெண்கள் விஷயத்தில்  முஹம்மது நபிக்கு என்ன கஷ்டங்கள் இருக்க முடியும்? இந்த சிறப்பு அனுமதி வசனங்கள் நமக்கு கூறும் செய்தியை சற்று சிந்தித்தது பாருங்கள்.  வஹியின் முழுப் பின்னணியையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

ஆதரவற்ற ஒரு அநாதையை மகனாக தத்தெடுத்து வாழ்வளிப்பதில் உள்ள தவறு என்ன? தனக்கு பிறந்த மகன்களுக்கு இணையாக வாரிசுரிமையை வழங்குவது தவறான முடிவா? உடல் வேட்கைக்காக, வளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்வது உலகின் சிறந்த முன்உதாரணமா? இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ், மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன?

ஒருவேளை முறைதவறிய முஹம்மதுஸைனப்  திருமணம் நிகழவில்லை எனில், மேற்கண்ட இழிவான குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரம் இன்றி தானே வீழ்ந்திருக்கும். இதைப் போன்ற  எதிர்கருத்துக்களுக்கும் இடமின்றி போயிருக்கும்.

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

 

11 பதில்கள் to “தகாத விருப்பமும் வேதவெளிப்பாடும்.”

  1. S.Ibrahim நவம்பர் 28, 2011 இல் 10:22 முப #

    திராட்சை தோட்டத்தில் பிறந்த நரி,தனது பக்கத்தில் இருந்த உரமிடாத திராட்சையை தின்னதோ இல்லையோ ,சீ ,சீ இந்த பழம் புளிக்குமஎன்று ஓடிய நரி ஒரு புளியந்தோப்புக்குள் நுழைந்தது.அங்கு புளியம் பழத்தை நக்கியதும் ஆகா என்ன இனிப்பு! என்று ஆட்டம் போட்டதுடன் நில்லாது ,தனது பழைய தோட்டத்திலுள்ள திராட்சை புளிப்பதாக கூறி பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்தது.செங்கொடி தாங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
    செங்கொடி, The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours செங்கொடி,இவ்வாறு அமெரிக்கர் எழுதிய நூலிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன்னர் தாங்கள் சிந்தனை பேரொளி என்று சொல்லிக் கொண்டு சிந்தனை இல்லாமல் எழுதுவதற்கு இஸ்லாம் மட்டும் தான் கிடைத்ததா?ஏன் கம்யுனிஸ்ட்கள் பற்றியும் அமெரிக்க நூல்கள் சொல்லுவது அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா?
    வாகிதி என்பவர் பொய்யர் என்றும் தபரி அறிவித்திருந்தும் அந்த கதை உங்களுக்கு இனித்தது /அதோடு நில்லாது இமாம் குர்துபி இலிருந்தும் தவறான தகவலை தந்துள்ளீர்கள்.
    ا وَقَالَ: (سُبْحَانَ اللَّهِ مُقَلِّبِ الْقُلُوبِ)! فَسَمِعَتْ زَيْنَبُ بِالتَّسْبِيحَةِ فَذَكَرَتْهَا لِزَيْدٍ، فَفَطِنَ زَيْدٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي طَلَاقِهَا، فَإِنَّ فِيهَا كِبْرًا، تَعْظُمُ عَلَيَّ وَتُؤْذِينِي بِلِسَانِهَا، فَقَالَ عَلَيْهِ السَّلَامُ: (أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ). وَقِيلَ: إِنَّ اللَّهَ بَعَثَ رِيحًا فَرَفَعَتِ السِّتْرَ وَزَيْنَبُ مُتَفَضِّلَةً «1» فِي مَنْزِلِهَا، فَرَأَى زَيْنَبَ فَوَقَعَتْ فِي نَفْسِهِ، وَوَقَعَ فِي نَفْسِ زَيْنَبَ أَنَّهَا وَقَعَتْ فِي نَفْسِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ لَمَّا جَاءَ يَطْلُبُ زَيْدًا، فَأَخْبَرَتْهُ بِذَلِكَ، فَوَقَعَ فِي نَفْسِ زَيْدٍ أَنْ يُطَلِّقَهَا ///
    . وَقَالَ ابْنُ عَبَّاسٍ:” وَتُخْفِي فِي نَفْسِكَ” الْحُبَّ لَهَا.” وَتَخْشَى النَّاسَ” أَيْ تَسْتَحْيِيهِمْ وَقِيلَ: تَخَافُ وَتَكْرَهُ لَائِمَةَ الْمُسْلِمِينَ لَوْ قُلْتَ طَلِّقْهَ\، \\وَيَقُولُونَ أَمَرَ رَجُلًا بِطَلَاقِ امْرَأَتِهِ ثُمَّ نَكَحَهَا حِينَ طَلَّقَهَا.” وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشاهُ” فِي كُلِّ الْأَحْوَالِ. وَقِيلَ: وَاللَّهُ أَحَقُّ أَنْ تَسْتَحِيَ مِنْهُ، وَلَا تَأْمُرَزَيْدًا بِإِمْسَاكِ زَوْجَتِهِ بَعْدَ أَنْ أَعْلَمَكَ اللَّهُ أَنَّهَا سَتَكُونُ زَوْجَتَكَ، فَعَاتَبَهُ اللَّهُ عَلَى جَمِيعِ هَذَا\\\\
    وَرُوِيَ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ قَدْ أَوْحَى اللَّهُ تَعَالَى إِلَيْهِ أَنَّ زَيْدًا يُطَلِّقُ زَيْنَبَ، وَأَنَّهُ يَتَزَوَّجُهَا بِتَزْوِيجِ اللَّهِ إِيَّاهَا، فَلَمَّا تَشَكَّى زَيْدٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلُقَ زَيْنَبَ، وَأَنَّهَا لَا تُطِيعُهُ، وَأَعْلَمَهُ أَنَّهُ يُرِيدُ طَلَاقَهَا، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ على جِهَةِ الْأَدَبِ وَالْوَصِيَّةِ: (اتَّقِ اللَّهَ فِي قَوْلِكَ وأَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ) وَهُوَ يَعْلَمُ أَنَّهُ سَيُفَارِقُهَا وَيَتَزَوَّجُهَا، وَهَذَا هُوَ الَّذِي أَخْفَى فِي نَفْسِهِ، وَلَمْ يُرِدْ أَنْ يَأْمُرَهُ بِالطَّلَاقِ لِمَا عَلِمَ أَنَّهُ سَيَتَزَوَّجُهَا، وَخَشِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْحَقَهُ قَوْلٌ مِنَ النَّاسِ فِي أَنْ يَتَزَوَّجَ زَيْنَبَ بَعْدَ زَيْدٍ، وَهُوَ مَوْلَاهُ، وَقَدْ أَمَرَهُ بِطَلَاقِهَا، فَعَاتَبَهُ اللَّهُ تَعَالَى عَلَى هَذَا الْقَدْرِ مِنْ أَنْ خَشِيَ النَّاسَ في شي قَدْ أَبَاحَهُ اللَّهُ لَهُ، بِأَنْ قَالَ:” أَمْسِكْ” مَعَ عِلْمِهِ بِأَنَّهُ يُطَلِّقُ. وَأَعْلَمَهُ أَنَّ اللَّهَ أَحَقُّ بِالْخَشْيَةِ، أَيْ فِي كُلِّ حَالٍ. قَالَ عُلَمَاؤُنَا رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ: وَهَذَا الْقَوْلُ أَحْسَنُ مَا قِيلَ فِي تَأْوِيلِ هَذِهِ الْآيَةِ، وَهُوَ الذي عَلَيْهِ أَهْلُ التَّحْقِيقِ مِنَ الْمُفَسِّرِينَ وَالْعُلَمَاءِ الرَّاسِخِينَ، كَالزُّهْرِيِّ وَالْقَاضِي بَكْرِ بْنِ الْعَلَاءِ «1» الْقُشَيْرِيِّ، وَالْقَاضِي أبي بكر بن الْعَرَبِيِّ وَغَيْرِهِمْ.
    முகாதில் என்பவர் கூறியதாக மேற்கண்ட கருத்தை குர்துபி எழுதியுள்ளார். முகாதில் என்பவர் நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். நபித்தோழர்களில் யாரையும் சந்திக்காத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் நபிகள் நாயகம் குறித்து கூறுவது ஆதாரமாக ஆகாது.
    மேலும் முகாதில் கூற்றைத் தொடர்ந்து இப்னு அப்பாஸ் கூற்றையும் குர்துபி எழுதி விட்டு
    சைனபை அல்லாஹ் மணமுடித்து தந்தால் மக்கள் தவறாக எண்ணுவார்களே என்று கருதி அவர்கள் சைதிடம் உன் மனைவியை தலாக் சொல்ல் வேண்டாம் எனக் கூறினார்கள். மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சினார்கள் என்ற கருத்தே சரியானதாகும் இதைத்தான் இமாம் சுஹ்ரீ, காழீ பக்ர்பின் அலா, அபூபக்ர் பின் அரபி மற்றும் தேர்ந்த கல்வியாளர்களும் அறிஞரகளும் கூறியுள்ளனர். இதுவே ந்மது உலமாக்களின் கருத்தாகும் என்று குர்துபி கூறுகிறார்.
    இதை இருட்ட்டிப்பு செய்து விட்டு விமர்சனம் செய்துள்ளார்கள்
    இதில் முதலாவது கூறப்பட்டுள்ளது முகாதில் கூறுவதை சொல்கிறது. இது முகாதிலின் சொந்தக்க்கூற்றாகவே கூறப்படுகிறது.
    இரண்டாவது உள்ளவை இப்னு அப்பாஸ் கூற்றாகும்,.
    மூன்றாவது உள்ளவை தான் குர்துபி ஆதரிக்கும்கருத்தாகும்,
    நன்றிகள் ;அரபு மூலம் ஆன்லைன் பீஜே
    இமாம் குர்துபி அவர்கள் இந்த வசனம் பற்றி நிலவும் கதைகளை எழுதிவிட்டு ,அவைகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கிவிட்டு,தனது கருத்தைகூறியுள்ளதை மறைத்துவிட்டு அமெரிக்கன் சொன்ன தவறான தகவலை தந்துள்ளீர்கள்.சைனபை அல்லாஹ் மணமுடித்து தந்தால் மக்கள் தவறாக எண்ணுவார்களோ என்று கருதி அவர்கள் சைதிடம் உன் மனைவியை தலாக் சொல்லவேண்டாம் எனக் கூறினார்கள் .மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சினார்கள் என்றே கருத்தே சரியானதாகும் .இதைத்தான் இமாம் சுஹ்றி [முதன் முதலாக ஹதீதை எழுதியவர் ]காலி பகர் பின் அலா ,அபூபகர் இப்ன் அரபி மற்றும் தேர்ந்த கல்வியாளர்களும் அறிஞர்களும் கூறியுள்ளனர்.இதுவே நமது உலமாக்களின் கருத்தாகும் என்றுதான் இமாம் குர்துபி கூறியுள்ளார். நபிகள் நாயகம் மனதில் என்ன நினைத்தார்கள் என்பதை அவர்கள் வாயால் சொன்னால் தான் மற்றவர்கள் அறியமுடியும். நபி இப்படி நினைத்தார்கள் என்று எவ்வித ஆதரமும் இன்றி முகாதில் என்பவர் எப்படி கூற முடியும்? என்பதையும் கவனிக்கவும்.அதாவது செங்கொடி பைத்தியம் பிடித்தவர் என்று ஹைதரலி என்பவர் கூறுகிறார்.செங்கொடிக்கு மூளை கோளாறு உண்டு அதனால்தான் அவர் இஸ்லாத்தை பற்றி விமர்சித்து வருகிறார் என்று குலாம் என்பவர் கூறுகிறார்..செங்கொடி கம்யுநிசவாதி அதனால் அவர் மதங்களை எதிர்க்கிறார் என்று சாகித் கூறுவதாகவும் ஒரு செய்தி வருகிறது.இதில் ஹைதரலிக்கும் குலாமுக்கும் செங்கொடி யாரென்று தெரியாது.ஆனால் சாகிதுக்கு செங்கொடியை நன்றாக தெரியும் என்ற நிலையில் இங்கே அனைவரும் சாகித் கருத்தைதான் ஏற்றுகொள்வார்கள் . ஆனால் நான் எனது பிளாக்கரில் செங்கொடி என்பவருக்கு பைத்தியம் என்று ஹைதரலி என்பவரும் குலாமும் கூறியுள்ளனர் அதனால் செங்கோடிக்கு பைத்தியம் தான் என்று நான் எழுதினால் எப்படி இருக்குமோ அதே போன்றே இமாம் குர்துபி அந்த வசனத்திற்கு எழுதியுள்ளதாக நீங்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்து கூறியுள்ளீர்கள்.ஒரு ஆதாரமும் இல்லாத கூற்றை வைத்துக் கொண்டு ஒரு சமய தலைவரை மாபெரும் சீர்திருத்தவாதியை எவ்வித ஒலி,மறைவு இல்லாமல் நடந்த நிகழ்வுகளை அந்த மத்தத்தின் ஆதரவாளர்களே எடுத்து வைக்கிறார்கள் என்றால் அதன் நேர்மையை பாராட்டி கண்ணியமாக விமர்சிக்க வாருங்கள்.நாமஎன்னதான் செங்கொடி என்ற பெயரில் எவ்வளவோ எழுதியும் முஸ்லிம்கள் மத்தியில் செல்லாகாசாகிவிட்டதே என்று இப்போது உள்ளூர் தளத்தில் உசுப்பேத்த வந்துள்ளீர்கள்.முழுக்க அந்த விமர்சனத்தில் ஆன்லைன் பீஜெவில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டு ,பொல்லாங்குகளை நியூயார்க் யுனிவர்சிட்டியில் காப்பி எடுத்திருப்பது எங்ஙனம் சரியாகும்?

  2. dajjal திசெம்பர் 3, 2011 இல் 4:58 பிப #

    இப்ராஹிம் அவர்களுக்கு,
    1400 ஆண்டுகளுக்கு முன்பாக, எங்கோ வழ்ந்ததாக கூறப்படும் முஹம்மது என்பவரை, நீங்களோ அல்லது உங்களது தலைமுறையைச் சேர்ந்தவர்களோ, அல்லது உங்களது பகுதியைச் சார்ந்தவர்களோ கனவிலும்கூட கண்டிராத அந்த நபரை, யார் யாரோ கூறுவதைக்கேட்டு, முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்று அரிதியிட்டு, உறுதியாக சாட்சி கூறுவீர்கள். அதை மற்றவர்களும் ஆமோதிக்க வேண்டும். ஆனால் ////முகாதில் என்பவர் நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். நபித்தோழர்களில் யாரையும் சந்திக்காத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் நபிகள் நாயகம் குறித்து கூறுவது ஆதாரமாக ஆகாது/// என்று கூறுகிறீகள். வேடிக்கையாக இல்லையா?
    மீண்டும் மீண்டும் ஹதீத் விதிமுறைப்படி ஏற்புடையதல்ல என்ற அதே ஒப்பாரி. இஸ்லாமில் முடிவெடுக்கும்/வழிகாட்டும் அதிகாரம் பெற்ற நபர்கள் முஹம்மது என்ற அல்லாஹ்வும், முஹம்மதுவும் மட்டும்தான். மற்றவைகள் அனைத்தும் புறந்தள்ள வேண்டியவைகளே. ஹதீஸ்களைப் பற்றி முஹம்மதின் தீர்ப்பை முதலில் முன்வைத்துவிட்டு அதன் பிறகு உங்களது சப்பைக்கட்டுளை அவிழ்த்து விடுங்கள். எந்தக் கையில் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்ச வேண்டுமென்றால்லாம் கூறியுள்ளார் என்றெல்லாம் புளகிதம் அடைபவர்கள், எந்த ஹதீஸை ஏற்க்கவேண்டும், எந்த ஹதீஸை புறக்கணிக்க வேண்டுமென்ற முஹம்மதுவின் வழிகட்டலை முன்வக்க வேண்டும். முடியுமா உங்களால்? குறைந்தபட்சம் நேர்வழி நின்ற கலீபாக்களின் வழிகாட்டலையாவது வைத்திருக்கிறீர்களா?

    • S.Ibrahim திசெம்பர் 8, 2011 இல் 9:06 பிப #

      தச்ச ஆளே ,பல பொய்யான ஹதிகளையும் இட்டுகட்டப்பட்ட ஹதித் களையும் தூக்கி கொண்டு இஸ்லாம் பற்றி நிறைய கதைக்கலாம் என்று நினைக்கும் உமது செங்கொடியோனுக்கு இது போன்ற செய்திகள் இடிகளாக இருக்கலாம்..உங்களது மண்டைக்கு ஹதித் கலை பற்றி பலமுறை சொல்லியும் புரியவில்லை என்பதற்க்காகத்தான் செங்கொடி உதாரணம் சொன்னேன் .அதுவும் உமக்கு புரிந்தாலும் விரகத்தில் உளறி கொட்டியுள்ளீர்கள்.
      ////முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்று அரிதியிட்டு, உறுதியாக சாட்சி கூறுவீர்கள். அதை மற்றவர்களும் ஆமோதிக்க வேண்டும். ////
      அதை நம்பியவர்கள் முஸ்லிம்கள் .நீங்கள் நம்பவில்லைஎன்றால் நீங்கள் எதை நம்ப வேண்டுமோ அதை நம்பி விட்டு போங்கள்.நம்பித்தான் தீரவேண்டும் என்று உம்மை கட்டாயப் படுத்தியது யார்?
      ///மீண்டும் மீண்டும் ஹதீத் விதிமுறைப்படி ஏற்புடையதல்ல என்ற அதே ஒப்பாரி.///
      பொய்யானா ஹதித்களை மீண்டும் மீண்டும் வைப்பது உங்களது செங்கொடியின் ஒப்பாரி அல்லவா?
      அது பொய் என்று ஆதாரம் கொடுத்ததும் நீங்கள் இப்படி புலம்புவதும் ஒப்பாரி அல்லவா?
      ///எந்த ஹதீஸை ஏற்க்கவேண்டும், எந்த ஹதீஸை புறக்கணிக்க வேண்டுமென்ற முஹம்மதுவின் வழிகட்டலை முன்வக்க வேண்டும். முடியுமா உங்களால்? குறைந்தபட்சம் நேர்வழி நின்ற கலீபாக்களின் வழிகாட்டலையாவது வைத்திருக்கிறீர்களா?////
      இது உங்களின் உளறலின் உச்ச கட்டம், நபி[ஸல்]அவர்களின் மரணத்திற்கு பிறகு கலிபாக்களின் ,மரணத்திற்கு பிறகு மக்களிடம் ஹதித்களுக்கு இருக்கும் மரியாதையை வைத்து ,நபி[ஸல்] காலத்தில் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு தோல்வியடைந்து பெயரளவில் இஸ்லாத்தை ஏற்ற முனாபிக்குகள் ,தங்களது சொந்த கருத்துகளை நபி[ஸல்] அவர்கள் சொன்னதாகவும் அதை இன்ன நபிதோழர் மூலம் கேட்டதாகவும் ஹதித்களை இட்டுகடினார்கள்.அது போன்ற ஹதித்கள் ஒன்றுகொன்று முரண்படுவதை கண்ட இமாம்கள் அறிவிப்பாளர்களை ஆராயத் தொடங்கினார்கள்.
      நான் கேட்பது உமது செங்கொடி அமெரிக்காவிலுள்ள யூதர்களின் மொழியாக்கங்களை படித்துக் கொண்டு இஸ்லாத்தினை விமர்சிக்க முனைவது ஏற்புடைய செயலா?
      இரும்புக் கோட்டைக்குள் இருளடைந்த நூல்களிலிருந்து ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?என்று எழுதும் செங்கொடி அமேரிக்கா விலுள்ள அத்தனை எழுத்தாளர்களின் ஸ்டாலின் பற்றிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வாரா? ஸ்டாலின் புதிய ஜனநாயாகத்தில் ஸ்டாலின் பற்றி கடுகு அளவு கூட விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால் அவன் உயிர் வாழ முடியுமா?நபி [ஸல்] அவர்கள் அதை செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்று நீங்கள் சொல்லுவதை எல்லாம் நாங்கள் விளக்கம் கொடுக்கிறோம் ஆனால் ஸ்டாலின் அந்த விசயத்திலும் மகா பயங்கரமான ஆள் என்று ஆதாரம் கொடுத்தால் அதை மறைத்துவிடுகிறீர்கள்.

      • தஜ்ஜால் திசெம்பர் 13, 2011 இல் 4:09 பிப #

        இப்ராஹிம் அவர்களுக்கு,
        …அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்? என்ற முஹம்மதின் கேள்வி (கு 45:6) நினைவிருக்கிறதா?
        ஹதீஸ்கள் மட்டுமல்ல, குர் ஆனைத்தவிர வேறு எதுவும் தேவையில்லை என்பதுதான் இதன் பொருள். நீங்களோ ஹஸன், லயீப், மவ்லூஉ என்று கதையளந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த விதிமுறைகள் அவரவர் வசதிகேற்ப உருவாக்கப்பட்டவைகள். ///ஹதீஸ்களின் நம்பகத்தன்மையின் அளவுகோல் என்ன? விடை : அவரவர்களுக்குத் தோன்றியதுதான்./// ஹதீத் விதிமுறைகளுடன் அதன் அறிஞர்கள் செய்யும் வேடிக்கைகளை அறிய ஸஹீஹ் முஸ்லீமின் துவக்க பகுதிகளைப் பார்த்தால் போதுமானது. கட்சி அடிப்படையில் நடைபெற்ற/(இன்றும்)பெறும் குத்துவெட்டுகளை கேட்கவே வேண்டாம். இந்நிலையில் ஹதீஸ்களைத் தோராயமானது என்றுதான் கூறமுடியும்./// என்று ”முகம்மதின் குழந்தைத் திருமணம்” பதிவில் கூறியுள்ளதையே மீண்டும் கூறுகிறேன். எனவே உங்களது முடிவிற்கு முஹம்மதின் எவ்விதமான அங்கீகாரமுமில்லை.
        அடிமைப்பெண்கள் விஷயத்திலும், ஆறுவயது குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்யும் பொழுது மட்டும், அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த முறைகளைப் பின்பற்றியவர், வளர்ப்பு மகனின் மனைவி ஜைனப்பின் விஷயத்தில் வழமையை மீறுகிறார். முஹம்மது, தனது காமவெறியைத் தீர்த்துக்கொள்ள எதையும் செய்யக் கூடியவர் என்பதையே இது காட்டுகிறது. நாரீகத்தின் வளர்ச்சி நமக்கு முஹம்மதின் செய்கைகளைத் தவறாகக் காட்டுகிறது என்றால், முஹம்மதின் குர்ஆனும், சுன்னாவும் அன்றைய அறியாமைக் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானது என்றுதான் பொருள் விளங்க முடியும். அதனால்தான் பஹாயுல்லாஹ், ரஷாது கலீஃபா, மிர்ஜா குலாம் போன்ற ’லேட்டஸ்ட்’ நபிகளை அல்லாஹ் அனுப்பினான்.

        ஸ்டாலின் குறித்த கேள்விகளை அதற்குரிய இடத்தில் முன்வைக்கவும். இந்த இடுகை முஹம்மதுவைப் பற்றியது என்பது தெரியுமா?
        தஜ்ஜால்

  3. S.Ibrahim திசெம்பர் 15, 2011 இல் 8:21 முப #

    தச்ச ஆள் அவர்கட்கு,///அடிமைப்பெண்கள் விஷயத்திலும், ஆறுவயது குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்யும் பொழுது மட்டும், அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த முறைகளைப் பின்பற்றியவர், வளர்ப்பு மகனின் மனைவி ஜைனப்பின் விஷயத்தில் வழமையை மீறுகிறார். ///
    அடிமை பெண்கள் விசயத்திலும் பாலியவிவாகத்திலும் நடைமுறைகளுக்கு உட்படுத்திக் க்கொண்டு அந்த மக்களிடையே வேரூன்றி இருந்த வழக்கத்தை மெல்ல,மெல்ல மாற்றுகிறார்.அது போன்றே ஜைனப் விசயத்திலும் மாற்றத்தை கொண்டுவருகிறார்.
    ///முஹம்மது, தனது காமவெறியைத் தீர்த்துக்கொள்ள எதையும் செய்யக் கூடியவர் என்பதையே இது காட்டுகிறது. ///
    பனுஜாவுன் இன தலைவர் இஸ்லாத்தில் இணைந்தவுடன் தனது மகள் அரேபிய தீப்கற்பத்திலே அழகானவள் அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு நபி[ஸல்] வற்புறுத்தும் நிகழ்வை அறிவீர்கள்.இது போன்று அவரை திருமணம் செய்ய பெண்கள அநேகர் ஆவற்பட்டிருந்தனர்.இது போன்று பல காரணங்கள் கூறப்பட்டு நபி[ஸல்]அவர்கள் காமுகர் அல்லர் என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.
    ///நாரீகத்தின் வளர்ச்சி நமக்கு முஹம்மதின் செய்கைகளைத் தவறாகக் காட்டுகிறது என்றால், ///
    நபி[ஸல்] அவர்களின் பால்ய விவாக தடை ,அடிமைகள் விடுதலை ,பெண்களின் சொத்துரிமைகள் போன்றவைகள் நபி[ஸல் ]அவர்கள் காட்டிய நாகரிகத்தின் வளர்ச்சி.ஆதாலால நாகரிகத்தின் வளர்சிக்கேற்றவாறே முஹம்மது நபி அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரங்கள் உள்ளதால் அதை எக்காலத்திலும் பின்பற்ற முடியும்.
    தச்ச ஆளே ,ஏதாவது பதிலுக்கு எழுத வேண்டும் என்பதற்காக எழுதி வருவதை அறிய முடிகிறது.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் குர்ரான் ஹதித்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள் .ஹதித் என்றால் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் சொன்னது மட்டுமே .முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பெயரால் சொல்லப்பட்டவைகள் அல்ல.
    ///இந்த விதிமுறைகள் அவரவர் வசதிகேற்ப உருவாக்கப்பட்டவைகள். ///
    நபி வழியை தூய்மையாக பின்பற்றுபவர்கள் அதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவைகள் .அதற்கு மாற்றமாக் நீங்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் ஹதித்கள் தான் அவரவர் வசதிக்கேற்றவாறு உருவாக்கப்பட்டவை என்பது கடினமான ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளன.உலகில் மற்ற மனிதர்களின் வரலாறுகள் ,அதை எழுதுபவர் கூறியுள்ளதையே அப்படியே ஏற்று வருகிறார்கள் .ஆனால் நபி[ஸல்]அவர்களின் வரலாறு அதை ஒட்டிய பலரின் வரலாறுகளை ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.

    • தஜ்ஜால் திசெம்பர் 22, 2011 இல் 4:13 பிப #

      இப்ராஹிம் அவர்களுக்கு,
      ////அடிமை பெண்கள் விசயத்திலும் பாலியவிவாகத்திலும் நடைமுறைகளுக்கு உட்படுத்திக் கொண்டு அந்த மக்களிடையே வேரூன்றி இருந்த வழக்கத்தை மெல்ல, மெல்ல மாற்றுகிறார்./// பொய், நயவஞ்சகம், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, போதை, விபச்சாரம், கொலை, கற்பழிப்பு போன்ற செயல்களை நீக்க விரும்புபவர், அந்த நடைமுறைகளுக்கு தன்னையும் உட்படுத்திக் கொண்டால் மட்டுமே இயலும் என்பது வடிகட்டிய மடத்தனமாக இல்லையா?

      முஹம்மது அடிமைப்பெண்களை என்ன செய்தார் என்பதை அறிய இத்தொடரின் “இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக்கேட்டையா?” என்ற பகுதியைப் படியுங்கள். அதன் பிறகு ///நபி [ஸல்] அவர்களின் பால்ய விவாக தடை, அடிமைகள் விடுதலை, பெண்களின் சொத்துரிமைகள் போன்றவைகள் நபி [ஸல்] அவர்கள் காட்டிய நாகரிகத்தின் வளர்ச்சி. ஆதாலால நாகரிகத்தின் வளர்சிக்கேற்றவாறே முஹம்மது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்கள் உள்ளதால் அதை எக்காலத்திலும் பின்பற்ற முடியும்./// என்ற உங்களின் கூற்று எத்தனை அபத்தமானது என்பது உங்களுக்கே புரியும்.

      ///பதிலுக்கு எழுத வேண்டும் என்பதற்காக எழுதி வருவதை அறிய முடிகிறது.///உங்களது அபத்தங்களுக்கு, பதில் எழுதாமல் இருக்கச் சொல்கிறீர்களா? உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டாமா? ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து, உரிமைகளைக் கொடுத்து தனது வாரிசாக கருதுவதில் அல்லாஹ்விற்கு என்ன குமைச்சல் இருக்க முடியும்? தனது தீராத உடல் வேட்கைக்காக, வளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்ள ஏதுவாக முஹம்மது கூறிய உளறலை நம்பி, நல்லதொரு மனிதாபிமான செயலை தடைசெய்து கொண்டிருக்கும் உங்களை என்னவென்று சொல்வது?

      தஜ்ஜால்

      • S.Ibrahim திசெம்பர் 26, 2011 இல் 5:31 முப #

        ////, நயவஞ்சகம், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, போதை, விபச்சாரம், கொலை, கற்பழிப்பு போன்ற செயல்களை நீக்க விரும்புபவர், அந்த நடைமுறைகளுக்கு தன்னையும் உட்படுத்திக் கொண்டால் மட்டுமே இயலும் என்பது வடிகட்டிய மடத்தனமாக இல்லையா?////
        இவற்றில் போதை தவிர மற்றவற்றை தீது என்றே கருதியே வந்தனர்.அவர்கள் பாவமில்லை என்று நம்பிய காரியங்கள் ,மதுவும் மற்றும் அடிமை முறைகள் ,பால்ய விவாகம் போன்றவைகளே .ஆகவே அவற்றின் முல்லை முள்ளாலே எடுக்கவேண்டும் என்னும் உத்தியில் செயல்பட்டார்கள்.
        ///முஹம்மது அடிமைப்பெண்களை என்ன செய்தார் என்பதை அறிய இத்தொடரின் “இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக்கேட்டையா?” என்ற பகுதியைப் படியுங்கள். ////
        பலவீனமான ,ஆதாரபூர்வமற்ற செய்திகளை அதில் உள்ளன.
        ///தனது தீராத உடல் வேட்கைக்காக, வளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்ள ஏதுவாக முஹம்மது கூறிய உளறலை நம்பி, நல்லதொரு மனிதாபிமான செயலை தடைசெய்து கொண்டிருக்கும் உங்களை என்னவென்று சொல்வது?///
        இந்த அறிவிப்பு ஆதாரபூர்வமற்றது.அதன் அறிவிப்பாளர் இந்த வசனத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தனது கற்பனையில் உள்ளதை எழுதி உள்ளார். மேலும் ஜைனப் அவர்கள் செய்தே முதலில் திருமணம் செய்ய மறுத்ததும் இறை வசனத்திற்கு பிறகே திருமணம் செய்ததை அறிவோம்.அவர்கள் வாழ்வில் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதை யும் ,சையித் அதற்கு முன்பும் பின்னும் திருமணம் செய்தவர்களை விவாக ரத்து செய்துள்ளார் என்பதும் மூலம் அவரது குணநலன்களை அறிய முடியும் .ஆகவே அறிவுபூர்வமாக ,இறைவனை சோதித்து சைத்தானியத்திர்க்குள் நுழைந்த தாங்கள் இங்கே மதியை இழந்து ஆதாரமற்ற செய்திகளை பிடித்து தொங்க வேண்டாம்

      • தஜ்ஜால் திசெம்பர் 30, 2011 இல் 4:04 பிப #

        @ இப்ராஹிம்,
        முஹம்மதின் ‘ஜல்ஸா’ விஷயங்களுக்கு “மற்ற முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்யோகமாக”, “உம்மீது எவ்விதமான கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்” என்று சிறப்பு வழிமுறைகள் உருவாவாதன் மர்மம் என்னவோ? அல்லாஹ், முஹம்மதின் இறைவனா இல்லை, அவரது லீலைகளுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் கீழ்த்தரமான “புரோக்கர் மாமா”வா?
        தஜ்ஜால்

  4. S.Ibrahim திசெம்பர் 31, 2011 இல் 9:43 முப #

    தச்ச ஆளே,ஹதித்களுடன் எழுத எழுத ஆரம்பித்த நீங்கள் இப்போது நாலாந்தர நடைக்கு வந்துவிட்டீர்கள் .உங்களது ஆதாரங்கள் பொயபிக்கப்படுவதால் ஆத்திரம் தலைக்கு ஏறி மூத்திரமாக வடிவதை பார்க்க முடிகிறது. நீங்கள் முன்பு கூறியது போல ஒருவேளை நீங்கள் தீவிரமாக இஸ்லாத்தினை பின்பற்றி இருந்தால் ஆதாரங்களுடன் தான் விமர்சிப்பீர்கள். இவ்வாறு நாலாந்தர நடைக்கு வந்திருக்க மாட்டீர்கள் .ஆக அத்தனையும் பொய்.

    • தஜ்ஜால் ஜனவரி 9, 2012 இல் 4:15 பிப #

      @இப்ராஹிம்,
      நரகல் எழுத்து நடையையே வாடிக்கையாகக் கொண்ட நீங்களா எனது எழுத்துநடையை விமர்சிப்பது? கேள்விகளுக்கு, நேரடியாக பதில் கூறமுயற்சி செய்யுங்கள் நண்பரே!
      தஜ்ஜால்.

Trackbacks/Pingbacks

  1. சஹாபாக்கள் மீது சந்தேகமும் வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின « - நவம்பர் 29, 2011

    […] தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும் இவைகளில் பகிருங்கள்:மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌TwitterFacebookLinkedInEmailPrintDiggRedditStumbleUponLike this:LikeBe the first to like this . […]

பின்னூட்டமொன்றை இடுக